Tuesday, May 3, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா?


மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா?

மா.திருநாவுக்கரசு

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நல்ல, சிறந்த ஆரம்பம். இந்த சந்தர்ப்பத்தை ஆக்கப்பூர்வமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும்.


இந்த வருடம் உடனடியாகப் படித்து நுழைவுத் தேர்வு எழுத முடியுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி, நியாயமானதும்கூட.

அதேநேரம், நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உடனடியாக இந்த ஆண்டு செய்ய வேண்டியவை என்ன?

1 . நமது மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களையும் நமக்கே ஒதுக்க வேண்டும்.

2. நமது மாநிலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் 15 சதவீதத்தை தனியார் கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு வழங்கிவிட வேண்டும்.

3. மீதமுள்ள 85 சதவீதத்தை ஒரே நுழைவுத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

4. தமிழக பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நுழைவுத்தேர்வு நடத்தப்படவேண்டும்.

5. இடஒதுக்கீடு, மற்ற ஒதுக்கீடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் .

6. கவுன்சலிங் முறையில், ஒற்றை சாளரம் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படவேண்டும்.

7. தர வரிசையில் ஒதுக்கீடு செய்யும்போது அரசு மற்றும் தனியார் கல்லூரி ஆகிய அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே தரவரிசையை வெளியிட வேண்டும். அதன்படியே மாணவர்கள் சேர விரும்புவார்கள்.

8. தனியார் கல்லூரி கட்டணம் கட்டுப்படியானவர்கள், கட்டணம் செலுத்த விரும்புவர்கள் அங்கே சேரலாம். வேண்டாம் என்பவர்கள் அரசுக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.

9. அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்திலும் தற்போதுள்ள இட எண்ணிக்கையையே பராமரிக்கலாம்.

10. இந்த முறைகள் கடைப்பிடிக்கப்பட்டால், வெளிப்படைத் தன்மை நிலை நாட்டப்படும். இந்த அடிப்படைகளில் நுழைவுத்தேர்வை ஏற்கலாம்.

அடுத்து வரும் ஆண்டுகளில் செய்ய வேண்டியவை:

1. அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும்.

2. மிக முக்கியமாக தேர்வைத் தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்.

3. அனைத்து வட்டங்களிலும் நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.

4. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் அவ்வப்போது ஏற்படும் எண்ணிக்கை மாற்றத்துக்கு ஏற்ப, அந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். இம்முறையில் நமது மாநிலத்தின் உரிமை பாதுகாக்கப்படும்.

5. இப்படி செய்தால் சமூக நீதி பாதுகாக்கப்படுவது உறுதியாகும்

நுழைவுத் தேர்வினால் ஏற்படும் நன்மைகள் என்ன?.

1. வெளிப்படைத் தன்மை மாணவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும்

2. இப்படிச் செய்தால் தேசிய அளவில் நாம் இழந்த பெருமையை மீட்கலாம்.

3. இந்திய அளவில் தமிழக மாணவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியும்

4. தமிழக மாணவர்களைக் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை.

5. பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறுவதற்காக மாணவர்கள் காலம்காலமாக சிரமப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வால் அது தவிர்க்கப்படும்.

6. சரி பாதி மாணவர்கள் குறைந்தது ஆறிலிருந்து பத்து நுழைவுத் தேர்வுகளை எழுதுகிறார்கள். அந்த சிரமம் நிச்சயமாக தவிர்க்கப்படும்.

7. அவற்றுக்காகப் பெற்றோர்கள் படும் அவஸ்தையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

8. சில கல்லூரிகள் பிரபலமானது எப்படி? நுழைவுத் தேர்வை வைத்தே இந்தக் கல்லூரிகள் இன்றும் பிரபலமடைகின்றன. அதுவும் தவிர்க்கப்படும்.

9. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் நுழைவுத் தேர்வு சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும்.

10. நுழைவுத் தேர்வால் மாணவர்கள் மத்தியில் நிச்சயத்தன்மையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படும்.

கட்டுரையாளர், மன நல மருத்துவர்

தொடர்புக்கு: mananalamclinic@gmail.com

NEET 2016: SC asks for MCI’s response on holding state-wise exams for medical admission


New Delhi, May 3: Supreme Court on Tuesday sought response of Medical Council of India(MCI) to respond to state Governments’ plea to hold separate exams this year. MCI will submit its reply on Thursday. The Supreme Court was hearing petitions by some states and private medical colleges seeking permission to continue with separate tests for admissions in the MBBS and BDS courses.
The apex court on Monday had appointed to set up a three-member panel to oversee the working of the Medical Council of India (MCI).The panel will be head by former chief justice of India R M Lodha, in regard to the National Eligibility Entrance Test (NEET).
As per Supreme Court’s decision, the first round of NEET was held on May 1. Over six lakh students appeared for it and not those not applied for AIPMT will be given opportunity to appear in the second round on July 24. The combined result will be declared on August 17 and the admission process will be declared by September 30. (ALSO READ: Over six lakh students appear for NEET-I)
Various states, including the associations of private medical colleges were aggrieved by the top court’s Friday order reiterating that admission to undergraduate medical courses will be only through National Eligibility Entrance Test (NEET) to be conducted by the Central Board of School Education (CBSE). The first phase of NEET was conducted on Sunday. (ALSO READ- NEET 2016: MCI and CBSE to conduct 1st phase on May 1 after SC approves NEET schedule for admission to MBBS, BDS)
Those who have not applied for AIPMT will be given opportunity to appear in round two on July 24. The combined result will be declared on August 17, in order to complete the admission process by September 30 – the deadline set by the apex court in its previous orders.
Modified Date: May 3, 2016 3:00 PM

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

DINAKARAN 

பதிவு செய்த நேரம்: 2016-05-03 14:43:32
டெல்லி : மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களின் மனுக்கள் மீது பதிலளிக்க மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. AIMPT தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பது இல்லை என்றும் 25000 மாணவர்கள் மட்டும் விண்ணப்பித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் நுழைவுத் தேர்வுக்கு சிபிஎஸ்இ மாணவர்களே அதிகம் விண்ணப்பிப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.

Monday, May 2, 2016

பொது நுழைவுத் தேர்வு மறுபரிசீலனை தேவை

THE HINDU TAMIL
மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது அரசியல் சாசனத்துக்கு மாறானது என்றும் கிராமப்புறத்து மாணவர்களைவிட, நகரத்து மாணவர்கள் சலுகையடைவார்கள் என்றும் கூறி 2013-ல் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பு ‘அவசரகதியாக’ வழங்கப்பட்டுவிட்டதாக கடந்த ஏப்ரல் 28 அன்று உயர் நீதிமன்றமே திரும்பப்பெற்றுள்ளது. அதன்விளைவாக, ஞாயிறு அன்று தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டிருக்கிறது. பொது நுழைவுத் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று கோரித் தமிழகம் தாக்கல் செய்த மனுவை வியாழன் அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆந்திரம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களும், கர்நாடகா மருத்துவக் கல்லூரிகள் சங்கம், சி.எம்.சி. வேலூர் ஆகியவையும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

டாக்டர் அனந்தகிருஷ்ணன் கமிட்டியின் அறிக்கையை ஏற்று, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் 2007-ல் இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதற்கான சட்டம் இயற்றப்பட்டதுடன், குடியரசுத் தலைவரின் அனுமதியும் கிடைத்தது. தமிழகத்தின் இந்தச் சட்டம் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது. அப்போது முதல் தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது அடிப்படையில், மாநில அரசு தனக்குள்ள உரிமைகளின் பேரில் எடுத்துக்கொண்ட நடவடிக்கை.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர ஆண்டுதோறும் ஏறத்தாழ 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ் படிப்புக்கான 2,655 இடங்கள் இருக்கின்றன. இதில் 398 இடங்கள் (15%) அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும். எஞ்சிய 2,257 இடங்கள், தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்குக் கிடைக்கும்.

இந்தப் பின்னணியில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கும், தேசியத் தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது மாணவர்களிடம் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும். இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம்.

பல்வேறு மொழிகள், பாடத்திட்டங்கள், பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில், பொதுப்பள்ளி முறை இல்லாத ஒரு சூழலில், மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி இடங்களுக்கும் அகில இந்திய அளவில் தகுதிகாண் - நுழைவுத் தேர்வைத் திணிப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல. இந்திய மருத்துவம் படிக்க சம்ஸ்கிருதம் கட்டாயம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. நுழைவுத் தேர்வுகளே இல்லாத காலமும் இருந்தது. அத்தகைய நிலையைத் தாண்டி முன்னேறிச் செல்வதற்காகச் செய்யப்படும் எந்தவொரு நடவடிக்கையும் அனைத்துப் பிரிவு மக்களும் மருத்துவப் படிப்பில் நுழைவதைத் தடுத்துவிடாத அளவுக்கு அக்கறையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

இந்திய அரசியல் சாசனம் வெளிப்படுத்துகிற ஜனநாயகத்தின் ஆன்மாவே சமூக நீதிதான். அப்படிப்பட்ட சூழலில், சமநிலையில் இல்லாத மாணவர்களுக்கு இடையே ஒரே விதமான போட்டியை வைப்பது சரியல்ல. சமூக நீதிக்கு எதிரான எதுவும் ஜனநாயகத்தை முடக்குவதாகவே முடியும். கடைக்கோடி இந்தியனுக்கு எது பயனுள்ளது என்பதைக் கூர்மையான முறையில் மனதில்கொண்டே தனது அடுத்த காலடிகளை இந்திய ஜனநாயகம் எடுத்துவைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதல் கட்ட நுழைவுத் தேர்வை 8 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை


தமிழகத்தில் நடந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை 8 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நேற்று நடந்தது. நாடுமுழுவதும் 52 நகரங் களில் 1,040 மையங்களில் நடைபெற்ற தேர்வை சுமார் 6.60 லட்சம் மாணவர் கள் எழுதினர். தமிழகத்தில் சென்னை யில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை யில் 39 மையங்களில் நடந்த தேர்வை எழுத சுமார் 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 2-ம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடக்கிறது. தேர்வு முடிவுகள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப் பட உள்ளது. இதுபற்றி தமிழகத்தில் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் கேட்ட போது, “நாடு முழுவதும் எவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டும் தேர்வுக்கு விண்ணப்பித்த சுமார் 26 ஆயிரம் மாணவர்களில் 8 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை” என்றனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “நாடுமுழுவதும் பல்வேறு விதமான கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த நேரத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சிபிஎஸ்இ கல்வி முறையில் நுழைவுத் தேர்வு நடத்தப் படுவதால், கிராமப்புற மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகிவிடும்.

இந்த நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்களை வடமாநில மாணவர்கள் பிடித்துவிடுவார்கள். அதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரி யான கல்வி முறையை கொண்டு வந்த பிறகு, நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும். தற்போது உள்ள முறையில் பிளஸ் 2 கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. புதிய நுழைவுத் தேர்வால் பிளஸ்2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்றனர்.

கேரளாவில் பாழடைந்து வரும் எம்ஜிஆர் வீடு

எம்ஜிஆரின் புகழ்பாடி, அவரின் பிரபலத்தை அதிமுக இன்றும் பயன்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் எம்ஜிஆர் சிறு வயதில் வசித்த வீடு, போதிய பராமரிப்பு இன்றி பாழடைந்து வருகிறது.
இலங்கையின் கண்டியி லிருந்து எம்ஜிஆர் குடும்பத்தினர் கேரளத்துக்கு வந்தபோது, அவரது தாயின் பரம்பரை வீடான இங்குதான் குடிபுகுந்தனர். இந்த சிறிய ஓட்டு வீட்டில்தான் எம்ஜிஆர் தனது சிறு வயதைக் கழித்தார். பிற்காலத்தில் தமிழக முதல்வராக இருந்தபோதும் அவ்வப்போது தனது பழைய வீட்டை அடிக்கடி பார்க்க வருவார் எம்ஜிஆர்.
பாலக்காட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த வடவன்னூர் கிராமம்.
இந்த வீடு எம்ஜிஆரின் தாய் சத்தியபாமாவின் உறவினர்கள் வசம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர்கள்தான் வசித்து வந்தனர். பின்னர் அக்குடும்பத் தினர் பாலக்காடு சென்றுவிட்டனர்.
இந்த வீட்டை அங்கன்வாடிக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். எம்ஜிஆரின் 
Inline image 1
பழைய புகைப்படம் தவிர, தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டி ருக்கின்றன. தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அளித்த அதிமுக காலண்டரும் மாட்டப் பட்டுள்ளது.
“இந்த வீடு பராமரிப்பில்லாத தால் பாழடைந்து வருகிறது. தமிழகத்திலிருந்து அதிமுக பிரமுகர்கள் அவ்வப்போது இங்கு வந்து பார்த்தாலும், இது புறக் கணிக்கப்படும் நிலையில்தான் உள்ளது. இது தனியாருக்குச் சொந்தமானது என்பதால், கேரள அரசும் எம்ஜிஆரின் நினைவிடமாக மாற்றுவதில் தயக்கம் காட்டு கிறது” என அங்கவான்வாடி மையத்தின் பகுதி நேர ஆசிரியை எம்.புஷ்பலதா கூறுகிறார்.
“எம்ஜிஆரின் தந்தை மருதூர் கோபாலமேனன், இங்கு அருகி லுள்ள நல்லெப்பிளி கிராமத்தைச் சேர்ந்தவர். கண்டியில் பணி ஓய்வு பெற்ற பிறகு, இங்கு வடவன்னூ ருக்கு வந்துவிட்டார். இங்குதான் சில காலம் வாழ்ந்தனர். அவரின் இறப்புக்குப் பிறகு, எம்ஜிஆரை யும், அவரது அண்ணன் சக்கர பாணியையும் அவர்களின் தாய் கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். கும்பகோணத் தில் வாழ்ந்தபோதுதான், இரு சகோதரர்களும் திரைத்துறையில் நுழைந்தனர்” என சித்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.மயில்சாமி தெரிவித்துள்ளார்.

Sunday, May 1, 2016

18 மாதங்களில் 108 கிலோ அதிரடி எடை குறைப்பு: குண்டு அம்பானி ஸ்லிம் ஆன கதை


சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரே பேச்சாக இருந்தது அம்பானியைப் பற்றித்தான். அதுதான் அம்பானியைப் பத்தி, அடிக்கொருதரம் பேசிக்கொண்டிருக்கிறார்களே, இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? பதினெட்டு மாதங்களுக்கு முன்பு இரட்டைநாடியைவிடவும் பெரிதாக மகாகுண்டாகக் காட்சியளித்த முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, திடீரென ஸ்லிம்மாக நடந்துவந்தால், எப்படி ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?

21 வயது அனந்த், 40 வயதுக்கார குண்டு ஆள்போல உடல் பருமன் பிரச்சினையுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் வலம்வந்து கொண்டிருந்தபோது இதே சமூக வலைதளம் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெறும் 18 மாதங்களில் 108 கிலோ உடல் எடையைக் குறைத்து ‘சிக்‘ ஆகிவிட்டார். உடல் பருமனை எப்படிக் குறைப்பது என்று தீவிர யோசனையில் இருப்பவர்கள், அஞ்சுபவர்களுக்கு மத்தியில் அனந்த் அம்பானியின் எடைக் குறைப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் என்ன?

எப்படி நிகழ்ந்தது இந்த மாயா ஜாலம்? துரித உணவு, சமச்சீரற்ற உணவு, நொறுக்கு தீனி, உடற்பயிற்சியின்மை போன்ற பல அம்சங்கள் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. ஏதோ ஒரு நோய்க்குத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள்கூட உடல் பருமன் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு. சிறு வயதிலேயே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அனந்த், அதற்காக நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொண்டார். அவரது உடல் பருமனுக்கு மருந்துகள் ஏற்படுத்திய பக்கவிளைவுதான் காரணம் என்று கூறுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க எடைக் குறைப்பு நிபுணர்கள் பலரைப் பார்த்தும் அனந்த் அம்பானியிடம் எந்த மாற்றமும் இல்லை. இறுதியில் செயற்கை, அதிரடி எடைக் குறைப்பு முறைகளின் பின்னால் ஓடுவதை விட்டு இயற்கை வழியில் உடல் எடையைக் குறைக்க முடிவு செய்தார் அனந்த். இப்போது அவர் நினைத்ததைச் செய்து காட்டியிருக்கிறார். அனந்த் அம்பானி உடல் எடையைக் குறைத்தது எப்படி?, என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார்?:

நடையோ நடை

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்ததும் அனந்த் அம்பானி செய்த முதல் காரியம் நடைப்பயிற்சி. தினமும் 21 கிலோமீட்டர் தூரம் நடந்திருக்கிறார். பொதுவாக இந்தத் தூரத்தை மெதுவாக நடந்து கடந்தாலே மூன்றரை மணி நேரம் ஆகும். ஆனால், குண்டான உடலை வைத்துக்கொண்டு இந்தத் தூரத்துக்கு அவர் நடந்திருக்கிறார். 21 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி என்பது அரை மாரத்தானுக்கு சமம்.

யோகா

உடலைச் சீராகப் பராமரிக்க உலகெங்கும் யோகா பின்பற்றப்படுகிறது. உடல் எடைக் குறைப்புக்கு அனந்த் அம்பானி, இதைப் பயன்படுத்திக் கொண்டார். டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டாலும், யோகா மூலம் மனம் ஒருநிலைப்படுத்தப்படும். அவருடைய கவனமும் குறிக்கோளும் ஒன்றை நோக்கி இருக்க உதவும். அதை உணர்ந்து, உடற்பயிற்சியுடன் தினமும் யோகா பயிற்சி யையும் மேற்கொண்டுவந்தார் அனந்த்.

டயட்

உடல் எடைக் குறைப்புக்குக் கார்போஹைட்ரேட் குறைவான உணவை உட்கொண்டதோடு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவை அனந்த் முற்றிலும் தவிர்த்தார். துரித உணவு, அரிசி உணவு, சர்க்கரை அதிகமாகக் கலந்த உணவு, குளிர்பானங்களுக்கு விடை கொடுத்துள்ளார். அதேசமயம் புரதச்சத்து நிறைந்த உணவையும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவையும் உண்டுள்ளார். நார்ச்சத்துமிக்க பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொண்டுள்ளார்.

வெயிட் டிரெய்னிங்

வெயிட் டிரெய்னிங் உலக அளவில் தற்போது பிரபலமாகிவருகிறது. குறிப்பாக, உடல் எடையைக் குறைப்பவர்கள் இதையும் பின்பற்றுகிறார்கள். இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தசைகள் வலிமையடையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.

ஃபங்ஷனல் டிரெய்னிங்

ஃபங்ஷனல் பயிற்சி என்பது ஒட்டுமொத்த உடலையும் பயன்படுத்தித் தொடர்ச்சியாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சி. முறையான பயிற்சியாளர் ஒருவருடைய மேற்பார்வையில் இதைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியையும் அனந்த் செய்திருக்கிறார்.

இப்படியாகத் தீவிர முயற்சியுடன் மாதத்துக்கு ஆறு கிலோ வீதம் உடல் எடையைக் குறைத்துவந்துள்ளார் அனந்த் அம்பானி. உடல் எடையை வேகமாகக் குறைக்க நினைத்தால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. ஆகவே, அனந்த் அம்பானி சரியான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து, இயற்கை வழியைப் பின்பற்றியதால் உடல் எடையைப் பிரச்சினையில்லாமல் குறைக்க முடிந்திருக்கிறது.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை!

NEWS TODAY 2.5.2024