Monday, May 2, 2016

கேரளாவில் பாழடைந்து வரும் எம்ஜிஆர் வீடு

எம்ஜிஆரின் புகழ்பாடி, அவரின் பிரபலத்தை அதிமுக இன்றும் பயன்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் எம்ஜிஆர் சிறு வயதில் வசித்த வீடு, போதிய பராமரிப்பு இன்றி பாழடைந்து வருகிறது.
இலங்கையின் கண்டியி லிருந்து எம்ஜிஆர் குடும்பத்தினர் கேரளத்துக்கு வந்தபோது, அவரது தாயின் பரம்பரை வீடான இங்குதான் குடிபுகுந்தனர். இந்த சிறிய ஓட்டு வீட்டில்தான் எம்ஜிஆர் தனது சிறு வயதைக் கழித்தார். பிற்காலத்தில் தமிழக முதல்வராக இருந்தபோதும் அவ்வப்போது தனது பழைய வீட்டை அடிக்கடி பார்க்க வருவார் எம்ஜிஆர்.
பாலக்காட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த வடவன்னூர் கிராமம்.
இந்த வீடு எம்ஜிஆரின் தாய் சத்தியபாமாவின் உறவினர்கள் வசம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர்கள்தான் வசித்து வந்தனர். பின்னர் அக்குடும்பத் தினர் பாலக்காடு சென்றுவிட்டனர்.
இந்த வீட்டை அங்கன்வாடிக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். எம்ஜிஆரின் 
Inline image 1
பழைய புகைப்படம் தவிர, தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டி ருக்கின்றன. தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அளித்த அதிமுக காலண்டரும் மாட்டப் பட்டுள்ளது.
“இந்த வீடு பராமரிப்பில்லாத தால் பாழடைந்து வருகிறது. தமிழகத்திலிருந்து அதிமுக பிரமுகர்கள் அவ்வப்போது இங்கு வந்து பார்த்தாலும், இது புறக் கணிக்கப்படும் நிலையில்தான் உள்ளது. இது தனியாருக்குச் சொந்தமானது என்பதால், கேரள அரசும் எம்ஜிஆரின் நினைவிடமாக மாற்றுவதில் தயக்கம் காட்டு கிறது” என அங்கவான்வாடி மையத்தின் பகுதி நேர ஆசிரியை எம்.புஷ்பலதா கூறுகிறார்.
“எம்ஜிஆரின் தந்தை மருதூர் கோபாலமேனன், இங்கு அருகி லுள்ள நல்லெப்பிளி கிராமத்தைச் சேர்ந்தவர். கண்டியில் பணி ஓய்வு பெற்ற பிறகு, இங்கு வடவன்னூ ருக்கு வந்துவிட்டார். இங்குதான் சில காலம் வாழ்ந்தனர். அவரின் இறப்புக்குப் பிறகு, எம்ஜிஆரை யும், அவரது அண்ணன் சக்கர பாணியையும் அவர்களின் தாய் கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். கும்பகோணத் தில் வாழ்ந்தபோதுதான், இரு சகோதரர்களும் திரைத்துறையில் நுழைந்தனர்” என சித்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.மயில்சாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...