Thursday, May 26, 2016

வரி செலுத்தாத கோடீஸ்வரர்கள் பெயர்கள் வெளியிடப்படும்: வருமான வரித் துறை தகவல்

ஒரு கோடிக்கு மேல் வரி நிலுவை களை செலுத்தாமல் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றிய விவரங் களை வெளியிட வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. ஒரு கோடி மற்றும் அதற்கும் அதிகமாக வரு மான வரி செலுத்தாமல் உள்ளவர் கள் குறித்த விவரங்களை அறி விக்க நடப்பாண்டு தொடக்கத்தி லேயே வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.
வரி செலுத்த தவறியவர்கள் குறித்த விவரங்களை தேசிய அளவில் நாளிதழ்களில் வெளியிடும் நடைமுறையை கடந்த ஆண்டிலிலேயே வருமான வரித்துறை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டில் வரி நிலுவை வைத்திருந்த 67 நபர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் நிலுவை வைத்துள்ளவர்களின் முகவரி, பான் எண், நிறுவனங்கள் என்றால் பங்குதாரர்கள் விவரம் போன்ற விவரங்கள் வெளியிடப்படும்.
இதற்கு முன்னதாக வரி நிலுவை செலுத்த தவறியவர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் இருந்தன. ரூ.20 கோடி முதல் ரூ. 30 கோடி வரி நிலுவை வைத்துள்ளவர்கள் விவரம் மட்டுமே வெளிவரும். ஆனால் புதிய விதிமுறைகள்படி ரூ.1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.1 கோடி நிலுவை வைத்துள்ள வர்களது பெயர்களும் வெளியிடப்பட உள்ளது.
இது `நேம் அண்ட் ஷேம்’ என்கிற திட்டத்தின் கீழ் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2016-17 நிதியாண்டின் மார்ச் 31 தேதி வரை 1 கோடிக்கும் அதிகமாக வரி நிலுவை செலுத்தத் தவறியவர்கள் பெயர் கள் வெளியிடப்படும். குறிப்பாக அடுத்த ஆண்டு ஜூலை 31க்கு முன்னதாக வெளியிடப்படும் என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...