Monday, May 23, 2016

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றை அடுத்த ஆண்டு முதல் தரவரிசைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் தேசிய அளவில் தரவரிசைப் படுத்தப்பட்டன. அந்தப் பட்டியல் கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் பெறப்பட்டன. அதுதொடர்பாக, இம்மாத தொடக்கத்தில் அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் உயர் கல்விக்கான செயலர் வி.எஸ்.ஓபராயும் பங்கேற்றார். இக்கூட்டத்தில், தரவரிசைப் பட்டியலில் மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றையும் சேர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...