Thursday, May 19, 2016

23ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்கிறார்

ChennaiOnline

சென்னை,மே 19 (டி.என்.எஸ்) தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொறு தொகுதிக்கான இறுதி முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதில் அதிமுக அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதோடு, அதிக தொகுதிகளில் வெற்றியும் பெற்று வருகிறது.

இதையடுத்து, மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ள ஜெயலலிதா, தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருவதோடு, தான் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், வரும் மே 23ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறு உள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...