Saturday, May 28, 2016

ஆண்களை விட ஊதியத்தில் பெண்கள் திருப்தியாக உள்ளனர்



ஊதியத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் மிக திருப்திகரமாக இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் சமீபத்தில் `இ ஒய் ரிவார்ட்ஸ் 2016’ என்ற ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில் ஊதியத்தை பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் அதிக நன்மைகளை அடைகிறார்கள் என தெரியவந்துள்ளது. மேலும் நான்கில் ஒரு ஊழியர் நிறுவனங் கள் வழங்கும் வெகுமதிகள் குறித்து அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த ஆய்வில் தெரியவந்திருப்பது: ஊதியத்தை பொறுத்தவரை 66 சதவீத பெண்கள் திருப்திகரமாக உள்ளனர். தங்கள் ஊதியம் குறித்து 50 சதவீதம் ஆண்களே திருப்திகரமாக இருக்கின்றனர்.

ஆண்கள் தங்கள் ஊதியத் திலேயே கவனம் செலுத்துவ தாகவும் ஆனால் பெண்கள் ஊதியத்தோடு மற்ற சலுகை களிலும் கவனம் செலுத்து வதாகவும் தெரிவிக்கிறது.

24 சதவீத ஊழியர்கள் தங்கள் நிறுவனங்கள் வழங்கும் வெகுமதி குறித்து அதிருப்தி தெரிவிக்கின்றனர். 20 சதவீத ஊழியர்கள் வெகுமதி குறித்து உறுதியற்ற நிலையில் உள்ளனர். 65 சதவீத ஊழியர்கள் தங்கள் நிறுவனம் வழங்கும் வெகுமதி குறித்து திருப்திகரமாக இருக்கின் றனர். அதிலும் குறிப்பாக 2000ம் ஆண்டுக்கு பிறகான ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு குறைவாக இருக்கிறது, 30-35 வயதுடைய ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு சிறிது அதிகரிக்கிறது.

35-45 வயதுடைய ஊழியர்கள் பொறுத்தவரை திருப்தியின் அளவு குறைகிறது மேலும் வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வருமானம், மேனேஜர்களின் தரம் மற்றும் தலைமை பண்பு, நிறுவனத்தின் மதிப்பு, எளிதான நடைமுறைகள் ஆகிய காரணிகள்தான் வேலை செய்வதற்குரிய சிறந்த சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது என்று ஊழியர்கள் அந்த ஆய்வில் கூறியிருக்கின்றனர். மேலும் ஊழியர்கள் வளர்ச்சி வாய்ப்புகளுக்கும் வேலையில் முன்னேற்றத்திற்கும் முக்கியத் துவம் கொடுப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் உள்ள 12 நிறுவனங்களில் உள்ள 452 ஊழியர்கள், 128 நிறுவனர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...