Monday, May 16, 2016

நாளை பிளஸ் 2 'ரிசல்ட்' 19ம் தேதி தற்காலிக சான்றிதழ்

பதிவு செய்த நாள்: மே 16,2016 05:09

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. 19ம் தேதி முதல் இணையதளத்திலும், 21ம் தேதி முதல் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அதிகாரிகள் மேலும் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. lதேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்பள்ளிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்தேர்வர்கள் மே, 19ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம் மே, 21ம் தேதி முதல், தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு பள்ளிகள் மூலம், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மே 23ல் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்:மத்திய இடைநிலை கல்வி

வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 23ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில், பிளஸ் 2 தேர்வுகள்

நடத்தப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் மே, 23ல் வெளியாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், 55 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 15 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...