Tuesday, May 24, 2016

ஜெ., பதவியேற்பு:'மாஜி'க்கள் ஏமாற்றம்

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு கிடைக்காததால், தே.மு.தி.க., 'மாஜி'க்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்கள் சுந்தர்ராஜன், பாண்டியராஜன், நடிகர் அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சாந்தி, சுரேஷ்குமார், அருண் சுப்பிரமணியன். இவர்கள், கடந்த ஆட்சி காலத்தில், அ.தி.மு.க., ஆதரவாளராக செயல்பட்டனர். ஆட்சி காலத்தின் இறுதியில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்;
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். இதில், பாண்டியராஜனுக்கு மட்டுமே, தேர்தலில்
போட்டியிட அ.தி.மு.க., தலைமை வாய்ப்பு வழங்கியது. அவர் ஆவடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மற்றவர்கள், 'சீட்' கிடைக்காததாலும், அ.தி.மு.க.,வினர் தங்களை ஓரம் கட்டியதாலும், கடும் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு கிடைக்கும் என, இவர்கள் எதிர்பார்த்தனர். இதற்காக சிலர், இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்டு அழைப்பிதழை பெற, அ.தி.மு.க., தலைமை
அலுவலகத்தில் முயற்சித்தனர். ஆனால், கடைசி வரை அழைப்பு கடிதம் கிடைக்கவில்லை. இதனால், ஏழு பேரும் கடும் ஏமாற்றம் அடைந்தனர்;
விரக்தியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.- நமது நிருபர்- -

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...