Wednesday, May 11, 2016

தேர்தல் கமிஷன் அதிரடி: ரூ.92 கோடி பறிமுதல்


DINAMALAR 

சென்னை:தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில், 92 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:ஒவ்வொரு தொகுதியிலும், 20 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்கள், 12ம் தேதி முதல், பறக்கும் படையாக செயல்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது,

ஒருநாள் முன்னதாக, 11ம் தேதியேகளமிறங்க உள்ளனர்.
ஓட்டுச்சீட்டுஒவ்வொரு தொகுதியிலும், மூன்று, 'ஷிப்ட்'களாக, 24 மணி நேரமும், 25 பறக்கும் படையினர், ரோந்து வந்தபடி இருப்பர். பாதுகாப்புக்கு, 300 கம்பெனி
துணை ராணுவ வீரர்கள்வந்துள்ளனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
வேலுார் மாவட்டத்தில், ஒரு தொகுதியில், வேட்பாளர் புகைப்படத்தை மாற்றி அச்சிட்டதால், அங்கு புது ஓட்டுச்சீட்டு அச்சிடப்படுகிறது. தமிழகம் முழுவதும், 190 இடங்களில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், 26 கோடி ரூபாய் சிக்கியது.

பறக்கும் படை,நிலை கண்காணிப்புக்குழு, வருமானவரித் துறை நடத்திய சோதனையில் இதுவரை, 92 கோடி ரூபாய் சிக்கி உள்ளது. தொடர்ந்து முக்கிய தலைவர்கள் வீடுகளிலும், சோதனை நடந்து வருகிறது.2 பெண்கள் கைதுசென்னை நந்தனத்தில், எஸ்.என்.ஜே.,


டிஸ்ட்லரீஸ் நிறுவனத்தில், 3.52 கோடி ரூபாய்; புழுதிவாக்கம், அ.தி.மு.க., கவுன்சிலர் வீட்டில், 42 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.முதன்முறையாக, சென்னை அண்ணா நகரில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த, இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...