Friday, May 27, 2016

ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் .... என்.மகேஷ்குமார்

கோடை விடுமுறை, தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் திருப்பதியில் இன்று முதல் தெலுங்கு தேச கட்சி மாநாடு தொடங்க உள்ளதால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து இக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திருப்பதிக்கு வந் துள்ளனர். இவர்களில் பலர் நேற்று சுவாமி தரிசனத்துக்கு சென்றனர். இதனால் நேற்று திருமலையில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணத்தினால், சர்வ தரிசனம் செய்ய 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 கம்பார்ட்மெண்ட்களும் நிறைந்து வெளியிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க நேரிட்டது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், தங்கும் அறைகள் கிடைக்காமல் பலர் அவதிக்குள்ளாயினர். இரவில் பிளாட்பாரங்களில் படுத்து உறங்கினர். லட்டு பிரசாதம் வாங்கவும், தலைமுடி காணிக்கை செலுத்தவும் பல மணி நேரம் க்யூவில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதேபோன்று அன்னதான சத்திரங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...