Monday, May 23, 2016

தமிழகத்தில் முதல்வராக மீண்டும் ஜெ., பதவிப்பிரமாணம் செய்தார் கவர்னர்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் தொடர்ந்து ஜெ., முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை முன்னாள் மேயரும்,எம்எல்.ஏ.,வுமான மா.சுப்பிரமணியம் , சேகர்பாபு, ஏ.வ வேலு, வாகை சந்திரசேகர், இந்திய கம்யூ., சார்பில் தா.பாண்டியன், பா.ஜ.,தரப்பில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பகல் 12 மணியளவில் சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த விழா சென்னையில் எல்ஈடி மூலம் லைவ் வீடியோ காண்பிக்கப்பட்டது. பதவியேற்பு முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் அதிமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...