Wednesday, August 24, 2016

இன்டர்நெட் பற்றி உங்களுக்கு இதுவெல்லாம் தெரியுமா?


 மொத்த உலகத்தையும், தற்போது கட்டிபோட்டிருக்கும் இணையத்திற்கு(World Wide Web) இன்றுதான் 25-வது பிறந்தநாள் மக்களே! 25 வருடத்திற்கு முன்னாள், ஆகஸ்ட் 23, 1991 அன்றுதான் முதல்முறையாக இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. அதைத்தான் உலகம் இன்று, Internaut Day எனக் கொண்டாடி வருகிறது. World wide Web எனப்படும் இணையத்தை உருவாக்கிய, டிம் பெர்னர்ஸ் லீ, 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, முதல் web page-ஐ உருவாக்கினார். இணையம் என்றால் என்ன என்பதை விளக்கும் விதமாக சிம்பிளாக அதனை அமைத்திருந்தார். பிறகு ஆகஸ்ட் 23-ம் தேதி பொதுமக்களும் அதில் இணையலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த தினமே இணையதளத்தின் பிறந்தநாளாக கருதப்படுகிறது. 

கமல்ஹாசன் மீது ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம்!



நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ' கமல் நடிகர் மட்டுமல்ல. சமூகப் பற்றுள்ள மாபெரும் கலைஞன். அவருக்கு வாழ்த்து சொல்வதற்குக்கூட முதல்வருக்கு நேரமில்லையா?' எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். ஆனால், ஜெயலலிதாவுக்கும் கமலுக்கும் இடையே கடந்த 2015 டிசம்பர் மாதத்தில் பனிப்போர் ஆரம்பமானது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், தொடர்ந்து மந்தமான நிவாரண பணிகள் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்த அந்த பேட்டியில், அரசு செயல் இழந்துவிட்டது, நாங்கள் கட்டிய வரிப்பணமெல்லாம் எங்கே.? என்றெல்லாம் கூறியிருந்தார். கமலின் இந்த பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பன்னீர் செல்வம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ''எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல, குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்'' என்று கடுமையாக சாடியிருந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத கமல்ஹாசன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதில் அளித்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்... அதில், ''மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கை நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியைப் பற்றிய புலம்பலே. இது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டுப்போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.

மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர்காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன்'' என்று சொல்லியிருந்தார்.

கமல் திடீரென பல்டி அடித்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. ஆனாலும், அவரின் பதில் அறிக்கையை ஜெயலலிதா ரசிக்கவில்லை என்பதுதான் நிஜம். அதன் வெளிப்பாடே தற்போது செவாலியர் விருது பெற்ற கமலுக்கு வாழ்த்துச் சொல்லாமல் புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

கீழே கிடப்பது குழந்தை அல்ல; என் இதயம்!

vikatan.com

பணிக்குச் செல்லும் பெண்களின் இரட்டைச் சுமை பற்றி எவ்வளவு பேசினாலும், தீர்வுகள் தென்படுவதில்லை.அவர்கள் சந்திக்கும் பல அசௌகரியங்களில் ஒன்று, குழந்தை சம்பந்தப்பட்ட பொறுப்பும் முக்கிய அலுவலும் ஒரே நாள் நேர்கோட்டில் வந்து நிற்பது. அப்படித்தான் அன்று ஸ்வாதி சிதால்கரும் ஸ்தம்பித்தார்.

புனேயில் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஸ்வாதியின் மகனுக்கு அன்று கடுமையான காய்ச்சல். யாருடனும் இருக்காமல் தாயைத் தேடிய தன் மகனுக்காக அன்று விடுப்பு எடுக்க முடியாத அளவுக்கு, ஸ்வாதிக்கு அன்று வங்கியில் முடிக்கப்பட வேண்டிய முக்கிய வேலை ஒன்று இருந்தது. காய்ச்சலில் கொதித்த மேனியுடன் இருந்த தன் மகனை அலுவலகம் வரச்செய்து, தன் இருக்கைக்கு அருகே கீழே படுக்கவைத்து, மூளை வேலையிலும்,இதயம் மகனிடமுமாக இருந்து தன் பணியைச் செய்தார். தன்னுடைய அந்தத் தவிப்பை புகைப்படத்துடன்,

‘‘தரையில் படுத்திருப்பது குழந்தை அல்ல; என் இதயம் தரையில் கிடக்கிறது. அவனுக்குக் கடுமையான காய்ச்சல். யாருடனும் இருக்க மறுத்த அவனுக்கு அம்மாவாக இன்றைய தேவையாக இருக்கிறேன். பாதி நாள் முடிந்துவிட்ட நிலையில், ஒரு லோன் சம்பந்தப்பட்ட அலுவலால் என்னால் விடுப்பு எடுக்க முடியாத சூழலில்,கண் முன்னே இருக்கும் என் இரு பொறுப்புகளிலும் கவனத்தை செலுத்தி சூழலை கையாண்டுவிட்டேன். இந்தத் தகவலை, அசெம்பிளியில் தூங்கும் அமைச்சர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன்’’

என தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்வாதி பதிய, பணிக்குச் செல்லும் பெண்களின் பொறுப்பையும் தவிப்பையும் சொல்லுவிதமாக அமைந்த அந்த போஸ்ட் வைரலானது. தொடர்ந்து கவனம் பெற்றுவருகிறது.

ஸ்வாதியைத் தொடர்புகொண்டோம்.

‘‘அந்தப் பதிவு பற்றி..?’’

“அன்று என் மகனுக்கு அதிக காய்ச்சல். அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று அழுதுகொண்டே இருப்பதாக,என் கணவர் போனில் சொன்னார். என்னால் வீட்டுக்குச் செல்ல முடியாத நிலையில், அவனை அலுவலகத்தில் கொண்டுவந்து விடுமாறு கூறினேன். மகன் என்னைப் பார்த்ததும் சாமாதானமானான். அவனுக்குப் புட்டியில் பால்கொடுத்து, என் இருக்கைக்குப் பின்னால் இருந்த இடத்தில், தரையில் படுக்க வைத்தேன். என் பணியையும் முடித்தேன். அந்தச் சூழலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். சொல்லப்போனால், அலுவலக இருக்கைக்கு அருகில் குழந்தையைப் படுக்கவைக்கும் இந்தச் சூழல்கூட கிடைக்காத பெண்கள் பலர்.





என் பதிவைப் பார்த்துவிட்டுதான், ‘பெண்களுக்கு இப்படியெல்லாம் பிரச்னை இருக்கிறதா?’ என்று பலரும் அறிந்துகொள்கிறார்கள் என்பது கிடையாது. மனைவி, தங்கை, அக்கா, தோழி, சக ஊழியர்கள் என நம்மைச் சூழ்ந்திருக்கும் தாய்மார்கள் சந்திக்கும் இந்தச் சிக்கலை, கவனித்தும் கவனிக்காமல் கடக்கிறோம். என் பதிவு,ஒரு நொடி நிறுத்தி அவர்களை அதுபற்றிச் சிந்திக்கவைத்திருக்கலாம்.’’

‘‘இந்தப் பதிவுக்கு உங்கள் அலுவலகத்தின் வினை என்ன?’’

‘‘எந்த எதிர்மறை விளைவும் இல்லை. என் பணியில் நான் நேர்மையாக இருக்கிறேன். வேலையை சரியான நேரத்தில் முடிகிறேன். இது அலுவலகத்தில் அனைவருக்கும் தெரியும். மேலும், இதில் நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. என் நிலையைத்தான் பதிவு செய்தேன்.’’

‘‘அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?’’

‘‘இந்த விசயத்தில் நான் அரசாங்கத்தை குறை சொல்ல மாட்டேன். 6 மாதங்களாக இருந்த பேறுகால விடுப்பை 9மாதங்களாக மாற்றிய அரசுக்கு நாம் நன்றிதான் சொல்ல வேண்டும். இன்னும் பல சலுகைகளையும் கொடுத்திருக்கிறது. பெண் ஊழியர்களின் சிக்கலைப் புரிந்துகொண்டு உதவ சக ஊழியர்கள், மேல் அதிகாரிகள்தான் முன்வர வேண்டும்.’’

‘‘அசெம்பிளியில் தூங்கும் அமைச்சர்களைக் குறிப்பிட்டது ஏன்?’’

‘‘ஒரு வங்கி ஊழியரான நான், தவிக்கும் தாய்மைக்கும் இடையிலும் என் பொறுப்பை குறித்த நேரத்தில் முடிக்கவேண்டும் என்ற அக்கறையுடன் இயங்குகிறேன். ஆனால், பெரிய பெரிய பொறுப்புகளும் பதவிகளும் அமைச்சர்களின் வசமிருக்க, அவர்கள் அசெம்பிளியில் தூங்குவது என்பது எவ்வளவு கொடுமையானது?நம்மைப்போல, மக்கள் பணிகளுக்கான உயர் பொறுப்புகளிலும் அரசியல் அவைகளிலும் உள்ளவர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து முடித்தால், நம் நாடு எவ்வளவு பயனடையும்? காரில் நான் என் குழந்தையுடன் செல்லும்போது, காரின் வெளியே சாலை ஓரத்தில் வசிக்கும் குழந்தைகளை கடந்தபடி போகும்போதெல்லாம் என் இதயம் நொறுங்கும். அவர்களுக்கான நல்லதை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள்தானே செய்ய முடியும்? டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா போன்ற திட்டங்களை நானும் வரவேற்கிறேன். ஆனால், குழந்தை பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியாவை... “பெக்கர்ஸ் ஃபீரி இந்தியாவை (Beggars free india)” மோடியால் கொடுக்க முடியுமா? இதுப்போன்ற திட்டங்கள் தான் நாட்டின் பிரதான தேவையாக இருக்கிறது.இதுப் போன்ற திட்டத்துக்கு ஏன் முன்னுரிமை கொடுக்க கூடாது?! அதுவே, அவர்களை நான் குறிப்பிடக் காரணம். ’’

‘‘இந்தப் பதிவுக்குக் கிடைந்த வரவேற்பு பற்றி?’’

‘‘பின்னூட்டங்களிலே ஒருவர், ‘என் மனைவியும் இதுபோல்தான் கஷ்டப்படுக்கிறாள்’ என்று சொல்லி வேதனைப்பட்டிருந்தார். அவர் மனதில் ஏதோ ஒரு மாற்றம் வந்திருந்தது புரிந்தது. அது எனக்கு நிறைவாக இருந்தது. இது ஓர் ஆரம்பம்தான். இதனால் மாற்றம் வந்துவிடுமா என்றால், நிச்சயம் இல்லை. இதுபோல மற்ற பெண் ஊழியர்களும் பணியிடத்தில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை பொதுவெளியில் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே வரும்போது, நிச்சயம் ஒருநாள் ஆண்கள் மனதிலும், அரசியல் அமைப்பிலும் மாற்றம் வரும் என்பது என் நம்பிக்கை.’’

சபாஷ்!

முகப்பு » தமிழ்நாடு » ஒன்இந்தியா வாழ்த்துகள் கமல்.. அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ஜெயலலிதா!


வாழ்த்துகள் கமல்.. அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ஜெயலலிதா!


சென்னை: ரஜினி முதல் ஆளாக வாழ்த்தி விட்டார்.. அதுவும் எங்களின் நடிகர் திலகம் என்று டிக்ளேரே செய்து விட்டார். கருணாநிதி வாழ்த்தி விட்டார். அன்புமணி வாழ்த்தி விட்டார்... இன்னும் யார் யாரோவெல்லாம் வாழ்த்தி விட்டனர்.. ஆனால் இந்த மாநிலத்தின் முதல்வர், இந்த மாநிலத்தின் முன்னணி நடிகரான கமல்ஹாசனுக்கு, செவாலியர் விருது பெற்றதற்காக சின்னதாக கூட வாழ்த்தவில்லை.

ஒருவரை வாழ்த்துவதும், வாழ்த்தாமல் போவதும் அவரவர் விருப்பம். யாரும் அதை கேள்வி கேட்க முடியாது. வாஸ்தவம்தான்.. ஆனால் கமல்ஹாசனால் தமிழகத்திற்குத்தான் பெருமை கிடைத்துள்ளது, தமிழுக்குத்தான் பெருமை கிடைத்துள்ளது, தமிழ் சினிமாவுக்குத்தான் பெருமை கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட பெருமையைத் தேடிக் கொடுத்தவருக்கு வாழ்த்து சொல்லாமல் அமைதி காப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக் போன்ற அரும் பெரும் தங்கங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்த்தபோது பேதம் பாராமல் இந்திய உணர்வோடு ஜெயலலிதா முதல் அனைவரும் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தோம். அதேபோல நமது மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு செவாலியர் விருது கிடைத்திருப்பதையும் அதே மாநில உணர்வோடு பாராட்டியிருக்கலாம் இல்லையா?

அட, நரேந்திர மோடி கூட பாராட்டவில்லையே!.. சின்னதாக ஒரு வாழ்த்து.. வாழ்த்துகள் கமல்.. என்று சொல்லியிருந்தால் கூட அந்த நடிகனுக்கு சின்னதாக ஒரு மகிழ்ச்சி கிடைத்திருக்கும்.

உண்மையில் ஜெயலலிதாவுக்குப் பிடித்த நடிகராக இருந்தவர் கமல்ஹாசன்தான். கமலும் கூட ஜெயலலிதா பக்கம்தான் எப்போதும் சாயந்திருப்பார். ஆனால் இந்த உள்ளார்ந்த நட்பில் விரிசல் விழுந்தது விஸ்வரூபம் படம் சமயத்தில்தான். அந்தப் படத்தை ரிலீஸ் செய்வதில் பல விதமான தடங்கல்கள், தடைகள், இடையூறுகள். படத்திற்குத் தடை வர, கமல்ஹாசன் கொந்தளிக்க, நாட்டை விட்டுப் போவேன் என்று மிரட்ட பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அந்த சமயத்தில்தான் ஜெயலலிதாவுக்கு, கமல் மீது கடும் கோபம் வந்ததாக கூறப்படுகிறது.

அது பின்னர் கடந்த ஆண்டு வெள்ளம் சென்னையை மூழ்கடித்தபோது மேலும் விஸ்வரூபம் எடுத்தது... கமல்ஹாசன் அரசின் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் அரசை கடுமையாக கோபப்பட வைத்து விட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கமல்ஹாசனை மிகக் கடுமையாக தாக்கி அறிக்கை விட, அரசுக்கும், கமலுக்கான மோதலாக அது மாறியது. பின்னர் கமல் விளக்கம் அளித்தார்.

அந்த விளக்கத்தில், 'மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிக்கை நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது. என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியைப் பற்றிய புலம்பலே. இது ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல்வேறு கட்சிகளுக்கும் ஓட்டுப்போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.

மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர்காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட, மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன். வாத பிரதிவாதங்களை புறந்தள்ளி ஆக்க வேலையில் முன்போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன் என்று கூறியிருந்தார்.

அதன் பிறகு ஆட்சியாளர்களின் பிளாக் லிஸ்ட் பட்டியலில் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டதாக பேசிக் கொண்டனர். இதனால்தான், இந்த நிகழ்வுகளை மனதில் வைத்துத்தான் கமல்ஹாசனுக்குக் கிடைத்துள்ள இந்த விருதுக்காக அரசுத் தரப்பும் மகிழவில்லை, ஜெயலலிதாவும் உற்சாகம் அடையவில்லை என்கிறார்கள். இதனால்தான் வாழ்த்தும் சொல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. "அம்மா" என்றால் பெருந்தன்மை.. "அம்மா" என்றால் அன்பு.. "அம்மா" என்றால் மன்னிப்பு என்பார்கள்.. கமலுக்கு வாழ்த்துச் சொல்லி இதை நிரூபித்து விடலாமே முதல்வர் ஜெயலலிதா?

Friday, August 19, 2016

சவுதியில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

BBC TAMIL  -THE HINDU

சவுதியில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறினால் அபராதம் கட்ட நேரிடும் அல்லது நாடு கடத்தப்படலாம்.

வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள், சவுதி அரேபியாவில், எந்த எந்த நிறுவனத்தின் மூலம் பணிக்குச் சேருகிறார்களோ (கஃபீல்) அந்த நிறுவனத்திலிருந்து விதிமுறைகளுக்கு எதிராக வெளியேறினால், இனிமேல் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அல்லது நாடு கடத்தப்படவும், நாட்டுக்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடையையும் சந்திக்க நேரிடும்.

ஓடிப்போகும் வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டாம் என சவுதி பிரஜைகளை, பாஸ்போர்ட் முகமை அறிவுறுத்தியுள்ளது.

அதை அவர்கள் கடைபிடிக்காவிட்டால், அவர்களும் அபராதம் கட்டவும், சிறை தண்டனையை அனுபவிக்கவும் நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஸ்பான்ஸர்ஷிப் எனப்படும் முகமை அடிப்படையில் பணிக்கு அமர்த்தும் முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், அது ஒருவித அடிமைத்தனம் என்றும் மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?- இந்தியாவின் 120 வயதுடைய முதியவர் விளக்கம்



மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வைச் சேர்ந்த சிவானந்தா என்ற துறவி தனக்கு 120 வயதாகிறது எனத் தெரிவித்துள்ளார். யோகா, பிரம்மச்சரியம் ஆகியவைதான் தனது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்து துறவியான அவர் 1896 ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்தவர் என அவரது பாஸ்போர்ட் தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்த பிறந்ததேதி, கோயில் பதிவேடு கள் மூலம் பாஸ்போர்ட் அலுவல கத்தால் சரிபார்க்கப்பட்டுள்ளன.

இதுவரை பூமியில் வாழ்ந்த வர்களில் அதிக காலம் வாழ்ந்தவராக ஜப்பானைச் சேர்ந்த ஜிரோமாந் கிமுரா கருதப்படுகிறார். கடந்த 2013 ஜூன் மாதம் உயிரிழந்த அவர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார்.

சிவானந்தாவின் வயது 120 என உறுதி செய்யப்பட்டால், அவர்தான் இந்தியா மற்றும் உலகிலேயே மிக வயதானவர் என்ற பெருமையைப் பெறுவார். மேலும் மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்தவர் என்ற பெருமையும் கிடைக்கும்.

தனக்கு 120 வயதானதை சாதனை யாகப் பதிவு செய்ய சிவானந்தா கின்னஸ் சாதனைக்கு விண்ணப் பித்துள்ளார்.

“எனக்கு விளம்பரத்தில் பிரியம் இல்லை. எனவே இதுதொடர்பாக வெளியில் தெரிவிக்காமல் இருந் தேன். ஆனால் எனது அன்பர்கள் கேட்டுக்கொண்டதால் கின்னஸுக்கு விண்ணப்பித்துள்ளேன்” என சிவானந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் இவரைப் பற்றிய செய்தியை வெளியிட் டுள்ளன. 120 ஆண்டுகள் எனக் கூறி வரும் சிவானந்தா மிக நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தனியாகவே தனது பணிகளைச் செய்து கொள்கிறார். ரயிலிலும் தனியாகவே பயணிக்கிறார். ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் உடைய சிவானந்தா, தரையில் துணியை விரித்து, தலைக்கு மரக்கட்டை வைத்துப் படுக்கிறார். தினமும் யோகாசனம் செய்கிறார்.

“பால், பழங்களைத் தவிர்த்து விடுவேன். சிறு வயதில் நிறைய நாட்கள் பட்டினியாக தூங்கியிருக் கிறேன். யோகா, ஒழுக்கமான வாழ்வு, பிரம்மச்சரியம் இவைதான் என் நீண்ட ஆயுளுக்குக் காரணம். எளிமையான ஒழுக்க வாழ்வை வாழ்கிறேன்.

வேக வைத்த உணவு களை எடுத்துக்கொள்கிறேன். மசாலாப் பொருட்கள், எண்ணெய் வகைகளை சேர்த்துக் கொள்வ தில்லை. அரிசி, வேகவைத்த பருப்பு, ஒன்றிரண்டு பச்சை மிளகாய் இவைதான் என் உணவு” என சிவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் மின்சாரம், கார்கள், தொலைபேசி இல்லாத காலகட்டத்தில் பிறந்த சிவானந்தா, தொழில்நுட்ப வசதி களால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை.

“முன்பு கொஞ்சம் பொருட்களை வைத்துக் கொண்டு மக்கள் மகிழ்ச்சி யாக இருந்தார்கள். தற்போது மகிழ்சியின்றியும், ஆரோக்கிய மின்றியும், நேர்மையற்றும் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக் கியமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என அவர் தெரிவித் துள்ளார்.

Wednesday, August 17, 2016

4ஜி எனும் மாயவலை



கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருக்கிறது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 4ஜி சேவைக்கான மார்க்கெட்டிங் உத்திகள். எந்த நிறுவனம், எந்தத் திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பங்கள் எல்லாம் இல்லை.

அவை எல்லாமே குழப்பமாகத்தான் இருக்கிறது. கடந்த வாரம் இருந்த கட்டணம் இந்த வாரம் இல்லை. இந்த வாரத்தில் இருக்கும் சேவை அடுத்த வாரம் இருக்குமா தெரியவில்லை.

2ஜி சேவையே பலருக்கும் கிடைக் காத இந்தியாவில் 4ஜி-க்கான போட்டி யில் இறங்கிவிட்டன நிறுவனங்கள். இந்த 4 ஜி மாய வலையில் வாடிக்கையாளர்கள் சிக்க வைக்கப்படுகின்றனர். ‘மொபைல் டேட்டா’ மோகத்தால் நுகர்வோரின் கையிலிருக்கும் சொற்ப சில்லரைகளையும் நிறுவனங்கள் சுரண்டி வருகின்றன. நாம் பேச்சு வழக்கிற்காகத்தான் சில்லரைகளைச் சுரண்டுகின்றன என குறிப்பிடுகிறோம். ஆனால் உண்மையிலேயே 4ஜி என்கிற தொழில்நுட்பத்தை வைத்து இந்த நிறுவனங்கள் ஆடுவதோ மிக பெரிய சதுரங்க ஆட்டம்.

சந்தையில் முன்னணி நிறுவனமாக யார் இருப்பது என்பதில் தொடங்கும் ஆட்டத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொரு விதமாக தங்களைத் தாங்களே மீறிக் கொள்கின்றன. ஆனால் எல்லா சுமைகளும் விழுவது என்னவோ வாடிக்கையாளர் தலையில்தான்.

பேஸ்புக்கின் இலவச இணையம், ஏர்டெல்லின் முன்னுரிமை இணைய தொடர்பு என இணைய வாய்ப்புக்கு எதிரான போக்குகள் குறித்த விவகாரங்கள் சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை சுற்றி புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் வர்த்தக ரீதியான தொலைத் தொடர்பு சேவையின் தொடக்க நிலை யிலேயே தனது 15 லட்சம் வாடிக்கை யாளர்களுக்கு 3 மாதங்களுக்கான இலவச ‘டேட்டா’, குரல் வழி சேவைகளை அளிக்க உள்ளது. இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன இதர தொலைத் தொடர்பு நிறுவனங்கள். சோதனை அடிப்படையிலான சேவை யில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு இலவச ‘டேட்டா', குரல்வழி சேவைகளை வழங்கக் கூடாது என்கிற தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறையை ஆர் ஜியோ மீறுவதாக செயலகத்துக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஓஏஐ) புகார் அளித்துள்ளது.

ஆர் ஜியோ நிறுவனம் வர்த்தக ரீதி யான சேவையில் விதிமுறை மீறுகிறது என கவலைப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு, தங்களது உறுப்பு நிறுவனங்களின் சேவை தரம் குறித்து கவலைப்பட்டிருக்கிறதா என்றால் கிடையாது. இத்தனைக்கும் ஆர் ஜியோ-வும் இதில் உறுப்பினராகத்தான் உள்ளது.

இந்த சேவையை இலவசமாக வழங்குவதில் ஆர் ஜியோ-வுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. எதிர்ப்பதற்கு இதர நிறுவனங்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் 3ஜி,4ஜி வாடிக்கையாளர்களிடம் கட்டணக் கொள்ளை அடிப்பதில் மட்டும் எல்லா நிறுவனங்களுமே கைகோர்த்துவிடுகின்றன.

சமீபத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (R COM) நிறுவனத் தில் வைஃபை பேட் வாங்கிய நண்பரொருவரின் புலம்பல் இது: ``ரூ.1,500 விலையிலான அந்த கருவியை வாங்கும்போதே 4ஜி சேவை வந்தால், அதை மேம்படுத்திக் கொள்ளலாம் என உறுதி கொடுத்தார்கள்.

இரண்டு மாதங்களாக பயன்படுத்தி வந்த நிலையில் திடுதிப்பென கடந்த வாரத்தில் 3ஜி சேவையை நிறுத்திவிட்டனர். வாடிக்கையாளர் சேவை மையம் சென்று விசாரித்தால் 3ஜி சேவையை நிறுத்திவிட்டோம் 4ஜி சேவைக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்கின்றனராம்.

தற்போது 3ஜி சேவையே போதும், 4ஜி-க்கு தேவைக்கேற்ப மாறிக்கொள்கிறேன் என்ற போதிலும் முன்பு வழங்கிய வைஃபை இணைப்புக் கருவியில் இனிமேல் சேவை கிடைக்காது என்றும், 4ஜி-க்கு என்று தனியாக வைஃபை பேட் வாங்க வேண்டும் அல்லது 4ஜி சிம்கார்டு, 4ஜி போன் வாங்கிக் கொள்ளுங்கள் அப்போதுதான் எங்களது சேவையை தொடர முடியும் என்றனராம். ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் வழக்கு தொடருங்கள், இல்லையெனில் புதிய கருவியை 10 சத விலைக்குறைப்பு செய்து தருகிறோம் அதை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினார்களாம்.

ஒரு தொழில்நுட்பத்தை மேம்படுத்து வது நிறுவனத்தின் தேவையாக இருக்கலாம். ஆனால் அதை ஏன் வாடிக்கையாளர்களின் தலையில் வம்படியாக திணிக்க வேண்டும். பழைய தொழில்நுட்ப சேவைகளையே படிப்படியாக குறைத்து பயன்பாடு இல்லாத போது குறைப்பதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அல்லது ஏற்கெனவே வழங்கப்பட்ட கருவியை திரும்பப் பெற்று புதிதாக மாற்றித் தருவதுதானே சரியானதாக இருக்கும் என எந்த கேள்விக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் பதில் சொல்லவில்லை.

புதிதாக 4ஜி சேவையை அளிக்கும் கருவியின் விலையோ ரூ.3,200 என நிர்ணயித்துள்ளனர். புது 4ஜி சிம் கார்டு வாங்கி அதை 4ஜி அலைவரிசையை ஏற்கும் ஸ்மார்ட்போனில் பயன்படுத்த வேண்டும். அதாவது ஏற்கெனவே இருக்கும் ஸ்மார்ட்போன் 4ஜி அலைவரிசையை ஏற்காது என்றால் நீங்கள் புது ஸ்மார்ட்போன்தான் வாங்க வேண்டும். அதாவது 4 ஜி சேவையை பயன்படுத்த கிட்டத்தட்ட புதிதாக சில ஆயிரங்களை செலவு செய்ய வேண்டும்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மட்டும் இப்படி வாடிக் கையாளர்களை ஏமாற்றும் வேலையை செய்யவில்லை கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே இப்படியான நெருக்கடிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றன. ஆறு மாதங்களுக்கு முன்பு சில ஆயிரங்கள் செலவழித்து வாங்கிய ஒரு ஸ்மார்ட்போன் இப்போது பழைய தொழில்நுட்பமாக மாறி விடுகிறது.

பொதுவாக 4ஜி சேவையை வழங்கும் ஏர்டெல், ஐடியா அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுமே குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டுமே தங்களது 4ஜி சேவை கிடைக்கும் என அறிவிக்கின்றன. சந்தையில் ஒரு உத்தியாக ஒவ்வொரு காலகட்டங்களிலும் இது மாதிரியான கூட்டுகளை வைத்துக் கொண்டாலும் 4ஜி சேவையை அளிப்பதில் முன்பை விட அதிகமாக வாடிக்கையாளர்களை சுரண்டி வருகின்றன என்பதுதான் உண்மை.

உதாரணமாக ஐடியா நெட்வொர்க் கில் 4ஜி வேண்டுமென்றால் 6,000 ரூபாய் விலையுள்ள ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும். ஆறு மாதத்துக்கு முன்பு இதே விலையில் 3ஜி போன் வாங்கியவர் மீண்டும் இதே அளவு தொகையை செலவு செய்வது சாத்தியமற்றது. இதனால் கடும் நெருக்கடிகளுக்கு இடையில் புது போன் வாங்க தள்ளப்படும் சூழலை நிறுவனங்கள் உருவாக்குகின்றன.

4ஜி தொழில்நுட்பம் சர்வதேச அளவில் ஏற்கெனவே பல நாடு களில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்தியாவிலும் அந்த தொழில்நுட்பத்துக் கான சந்தை இருக்கிறது என்பது நிறுவனங்களுக்கும் தெரிந்ததுதான். தவிர இந்தியா போன்ற நாடுகளில் ஒவ்வொரு தொழில்நுட்பமும் கடைக்கோடி குடிமகனுக்கும் சென்று சேர சில ஆண்டுகளாவது ஆகிறது. ஏனென்றால் நமது கட்டமைப்பு இன்னும் மேம்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சந்தைப் போட்டியில் இதுவெல்லாம் நிறுவனங்களுக்கு தேவையில்லாத சமாச்சாரங்களாகிவிடுகிறது. முதன்மை யான நோக்கம் பயன்படுத்தும் குறிப்பிட்ட சதவீதத்தினரிடமிருந்து அதிக பட்சமாக கறந்துவிட வேண்டும் என்கிற முனைப்புதான் உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான் என்றாலும் நிறுவனங் களின் லாப உத்திரவாதத்துக்கு பயனாளிகள் ஒவ்வொரு முறையும் இப்படி சில ஆயிரங்களை கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா? அரசும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இந்த வேட்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்குமா?

NEWS TODAY 2.5.2024