Thursday, November 3, 2016

தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் 11 மாடி அடுக்குமாடி கட்டடம்


சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி அடுக்குமாடி கட்டடம் வெடி மருந்து மூலம் நேற்று மாலை 6.52 மணிக்கு தகர்க்கப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் இருந்த இரண்டு 11 மாடி அடுக்குமாடி கட்டத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அருகில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அடுக்குமாடி கட்டடம் இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று கட்டடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, தரைதளம், 5வது தளம் உள்ளிட்டவற்றில் உள்ள தூண்களில் துளையிடப்பட்டு வெடிமருந்துகள் வைக்கப்பட்டன. இதற்காக திருப்பூரில் இருந்து மேக்லிங்க் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டடத்தை இடிப்பதற்கான அனைத்துப் பணிகளையும் அதிகாரிகள் முன்னிலையில் செய்தனர். இடிப்பதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியவுடன் 5வது தளத்தில் உள்ள வெடிமருந்துகள் வெடித்தன. அடுத்த சில நொடிகளிலேயே முதல்தளத்தில் உள்ள வெடிமருந்துகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து அந்த பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சி அளித்து.

கட்டடம் இடிக்கும் பணி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, சிஎம்டிஏ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இது குறித்து கட்டடம் இடிப்பு பணியில் ஈடுபட்ட நிபுணர்கள் கூறுகையில், "இந்த கட்டடத்தின் வரைபடம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சில நாட்களாக ஆய்வு செய்தோம். எந்த தூண்களின் பிடிமானத்தில் கட்டடத்தை தாங்கும் சக்தியை கண்டறிந்தோம். அடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடத்தை அப்படியே சீட்டுக்கட்டு சரிவது போல இடிக்க ஏற்பாடு செய்தோம். இதனால் அருகில் உள்ள எந்த கட்டடங்களுக்கும் எந்தவித பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டோம். கண்மூடி கண்திறக்கும் நொடிக்குள் 11 மாடி கட்டடமும் இடித்துத் தள்ளப்பட்டது" என்றார்.

3 நொடிகளுக்குள் 11 மாடி அடுக்குமாடி கட்டடமும் இடிக்கப்பட்டது. கட்டடம் தகர்க்கப்பட்டு 30 நிமிடங்களுக்கு மேலாக, அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் காணப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கு மத்தியில், அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருந்த மக்கள், கட்டடம் தகர்க்கப்பட்டதற்குப் பின்னர் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அதிகாரிகள், மற்றும் போலீசார் இரவு முழுவது, அந்தப் பகுதியிலேயே முகாம் இட்டிருந்தனர்.


எஸ்.மகேஷ், ந.பா.சேதுராமன்
வீடியோ/படம்: ஆ.முத்துக்குமார், தி.குமரகுருபரன்

Wednesday, November 2, 2016

மாணவர்களுக்கு ''வாட்ஸ் அப்'' வரமா.... சாபமா

DINAMALAR

அலைபேசியில் அனுப்பும் குறுந்தகவலுக்குப் பதில் காணொலி, கேட்பொலி மற்றும் உருப்படிமங்களை எளிமையாகத் தடையின்றி அனுப்புவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது 'வாட்ஸ் ஆப்' செயலி. அமெரிக்காவைச் சார்ந்த ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரின் முயற்சியால் 2009 பிப்., 24ம் தேதி சிலிகான் பள்ளத்தாக்கில் 55 பணியாளர்களைக் கொண்டு 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் மூலம் 'வாட்ஸ் ஆப்' செயலி
உருவாக்கப்பட்டது.
ஜான், பிரைன் இருபதாண்டுகளாக 2007 செப்., வரை யாஹூ நிறுவனத்தில் கணினி சார்ந்த வேலைகளைச் செய்தனர். பின் 'பேஸ்புக்' நிறுவனத்தில் வேலையில் சேர முயற்சித்தனர். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மனம் தளராத இருவரும், வரும் காலங்களில் மக்கள் 'ஸ்மார்ட் போன்' உபயோகிப்பர் என கணித்து, 'வாட்ஸ் ஆப்' செயலியை உருவாக்கியதுதான் இன்றைய அவர்களின் இமாலய வெற்றிக்குக் காரணம். 'வாட்ஸ் ஆப்' நிறுவனர்களான ஜான் மற்றும் பிரைன் ஆகியோரை வேலைக்கு எடுக்காத 'பேஸ்புக்' நிறுவனம், ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு 2014 பிப்., 19 'வாட்ஸ் ஆப்' நிறுவனத்தைத் 1600 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

மைனர்களுக்கு தடை

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துபவர்கள், தங்கள் சொந்தத் தகவல்களை வெளியிடுவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். பதினாறு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அதைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்துவது தெரிந்தால் உடனடியாக 'வாட்ஸ் ஆப்' குழுவிலிருந்து நீக்கப் படுவர் என்பதை 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் விதிமுறையாக குறிப்பிட்டது. ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறை எவ்வளவுதுாரம் காப்பாற்றப்பட்டுள்ளது என தெரியவில்லை.
80 கோடி பேர்

உலகில் 80 கோடி நுகர்வோர் 'வாட்ஸ் ஆப்' செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். மாதம் லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனாளர்கள் உருவாகின்றனர். 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்துபவர்களில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
'ஸ்மார்ட் போனுடன் 'வாட்ஸ் ஆப்' வைத்திருப்போரை, இன்றைய நாகரிகக் குறியீடாக உருவாக்கி, அவர்களைத் தங்கள் மாய வலைக்குள் சிக்கவைக்கும் வேலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்த கவர்ச்சி வலையில் சிக்கிய மாணவர்கள், 'வாட்ஸ் ஆப்'க்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் மாணவர்கள் சுயமாகச் சிந்திக்கும் நேரத்தையும் கல்வி கற்கும் நேரத்தையும் இழக்க நேரிடுகிறது. இதைப் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் உணர்ந்து, அதைப் பயன்படுத்த முறையாக வரையறை செய்ய வேண்டும்.
அரட்டைக்காக பயன்படும் அவலம்

'ஸ்மார்ட் போனுடன் வாட்ஸ் ஆப் பயன்படுத்தக் கூடிய மாணவர்களிடம், அவர்கள் கல்வி முறையில் ஏற்படக்கூடிய நன்மை மற்றும் தீமைகளை அறிய, தென்மாவட்ட தகவல் தொழில் நுட்ப இளைஞர்களை ஒருங்கிணைத்து வரும் 'மதுரை ஐடியன்ஸ்' அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
மதுரை மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளிடம் ஆய்வு நடந்தது. அவர்களிடம் கலந்துரையாடல், அலைபேசி, மின்னஞ்சல், முகநுால், மற்றும் டுவிட்டர் வழியாகக் கேள்விகளை கேட்ட போது கல்வி, பொதுத் தகவல், அரட்டை, குடும்பம் போன்ற நான்கு நியாயமான காரணங்களுக்காக இதைப் பயன்படுத்துவதாகப் பெரும்பாலோர் தெரிவித்தனர்.
அவர்களிடம் பெற்ற தகவல்களைப் பகுப்பாய்வு செய்ததில், மாணவர்கள் அரட்டைக்காகவும், பொதுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், “வாட்ஸ்ஆப்'” பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
மாணவிகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த தகவல்களை நண்பர்களிடம் தெரிவிக்கவும் அரட்டைக்காகவும் பயன் படுத்துவதாகத் தெரிவித்தனர்.
கல்விக்கான பயன்பாடு குறைவு

மிக குறைந்த எண்ணிக்கையினரே கல்விக்காக பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.கல்விக்காக -8, பொதுத் தகவலுக்காக -11, அரட்டைக்காக -72, குடும்பத்திற்காக -9 சதவீதம் பயன்படுத்தியுள்ளனர். 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்தியவர்கள் 72 சதவீதம் பேர் நடந்து முடிந்த தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுத்ததையும்
ஒப்புக்கொண்டனர்.
நுாறு பேர் கொண்ட குழுவாக இருப்பதால், அரட்டையடிப்பதிலேயே மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதனால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த நேரத்தை ஒதுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைப் பார்க்கும் போது வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும், வலிமை இழந்து போய்க் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் பொன்னான நேரம் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் ஏற்படுத்தித் தர வேண்டியது
அவசியம் என்பது தெரிகிறது. 'வாட்ஸ்ஆப்' செயலியில் மாணவ மாணவியர் ஆங்கிலத்தில் மிகச் சுருக்கமாகவும், வேகமாகவும் எழுதிப் பழகுவதால் மொழிப் பயன்பாட்டில் நிறைய குழப்பங்களும் இலக்கணப் பிழைகளும் ஏற்படுகின்றன. இது தேர்வுகளிலும் அவர்களை அறியாமல், எழுத்துப் பிழை ஏற்படுத்த வைப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்படும்

கல்வியின் தரம்

'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, ஆம் என 76, பாதிப்பு இல்லை என 24 சதவீதத்தினரும் பதில் அளித்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி மட்டும் பாதிக்கப்படாமல், ஒருவர் பொழுதுபோக்காகக் காணொலி, கேட்பொலி ஆகியவற்றை 'வாட்ஸ்ஆப்' பில் தடையின்றி அனுப்புவதால் அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அவை செல்கின்றன.
அவற்றை விருப்பம் இல்லாமலும் பார்க்க வேண்டிய சூழல் அக்குழுவிலுள்ள அனைவருக்கும் ஏற்படுகிறது. ஒருவகையில் அதுவே அவர்களின் நேரத்தைச் சூறையாடத் தொடங்குகிறது.

'வாட்ஸ் ஆப்' போதை

உண்மையான தேவைக்குப் பயன்படவேண்டிய மின்சாரம் மற்றும் இணைய சேவையும் திசைமாறி வீணாகிறது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இதுவே தொடர்ந்து, கணவன் மனைவியாகிற நிலையில், அவர்களுக்குள் பேசி பகிர்ந்து கொள்ளுதல் என்ற பரஸ்பர உறவு நிலை மாறி 'வாட்ஸ்ஆப்' மூலம் பகிர்ந்து கொள்ளுதல் என்கிற நிலை மேலோங்கி, அவர்களின் நெருங்கிய உறவிற்கு தடையாகவும் அமைந்து விடும்.
'டிவி' மூலம் கால் நூற்றாண்டு களாக மாணவர் கிரிக்கெட் நோய்க்கு ஆட்கொள்ளப்பட்டார்களோ, அதைப்போல 'ஸ்மார்ட்போன்' உதவியுடன் 'வாட்ஸ்ஆப்' என்ற நோயால் இப்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வரு கின்றனர் என ஆய்வு முடிவு மூலம் அறிய முடிந்தது.
எனவே இளம் தலைமுறையினர் வாழ்வை செம்மைப்படுத்தும் விதம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எல்லா நல்லதற்குள்ளும் கெட்டதும் இருக்கிறது. எல்லாக் கெட்டதற்குள்ளும் நல்லதும் இருக்கிறது என்பது 'வாட்ஸ் ஆப்' செயல்பாடு தெரியப்படுத்துகிறது.-பெரி.கபிலன்
கணினி அறிவியல் பேராசிரியர்மதுரை. 98944 06111.

அதிகாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மட்டும் தான் ரெயில் சேவையா? ரெயில்வே நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு கண்டனம்

மதுரை

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெட்டிகளை அகற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மட்டும் தான் ரெயில் சேவையா என்று கூறி, ரெயில்வே நிர்வாகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

2 பெட்டிகள் அகற்றம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வி.பூதிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசெல்வன், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மதுரைக்கும் தினசரி பாண்டியன் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இதில் 3 பெட்டிகள் முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளாகவும், ஒரு பெட்டி முன்பதிவில்லாத பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டியாகவும் இருந்தன.

இந்தநிலையில் கடந்த 15.8.2016 முதல் நவீன ரக பெட்டிகள் பொருத்தப்பட்டு இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இதனால் பெட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பதிவில்லாத பெண்கள் பெட்டி, முன்பதிவில்லாத ஒரு பொதுப்பெட்டி ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.

இணைக்க உத்தரவிட வேண்டும்

ரெயில்வே விதிப்படி ஒவ்வொரு ரெயிலிலும் குறைந்தபட்சம் ஒரு ரெயில் பெட்டி பெண்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு ரெயிலிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக கழிப்பிட வசதி, 4 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி பெட்டி ஒதுக்கப்பட வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

பாண்டியன் விரைவு ரெயிலில், ரெயில்வே விதி மற்றும் சுற்றறிக்கைப்படி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கவில்லை. எனவே, அந்த ரெயிலில் அகற்றப்பட்ட முன்பதிவில்லாத பொதுப் பெட்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தனித்தனி பெட்டிகள் ஆகியவற்றை இணைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பதில் மனு தாக்கல்

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, ஜே.நிஷாபானு ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை ரெயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் குகனேசன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாண்டியன் விரைவு ரெயிலில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய எல்.எச்.பி. கோச் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டி ஒன்றின் நீளம் 24 மீட்டர். ஏற்கனவே இருந்த பெட்டியின் நீளத்தை காட்டிலும் 1.7 மீட்டர் அதிகம். எனவே ரெயில்நிலைய பிளாட்பாரத்தை கணக்கிடும்போது இந்த பெட்டிகள் 22 தான் இணைக்க முடியும். கூடுதல் பெட்டிகள் இணைத்தால் ரெயில்நிலைய பிளாட்பாரத்தை நீட்டிக்க வேண்டியது வரும். அதனால் தான் பாண்டியன் விரைவு ரெயிலில் 2 பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது ரெயில்வே விதிப்படி தான் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

ஏற்க மறுப்பு

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

‘‘ரெயில் சேவை என்பது ஏழை மக்களின் நலன் கருதி செய்யப்படுகிறது. அவர்களால் ரூ.2 ஆயிரம் கொடுத்து சொகுசு பஸ்களில் பயணம் செய்ய முடியாததால் தான் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் நெரிசலில் பயணிக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தை புகுத்துகிறோம் என்று அந்த பெட்டிகளை நீக்கிவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? அதிகாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்காகவும் மட்டும் இந்த வண்டி இயக்கப்படுகிறதா?

இந்த ரெயிலில் எலிகள் தொல்லையும் அதிகமாக உள்ளது. அதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிற 7–ந்தேதி கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.“

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tuesday, November 1, 2016

HC dismisses plea by Muslim woman against divorce based on ‘forged’ papers

Making it clear that a court dealing with writ petitions can only decide on questio
ns of law and not questions of facts, the Madras High Court dismissed a plea moved by a Muslim woman seeking to set aside a ‘Khulanama’ (a document expressing consent for divorce) allegedly obtained by her husband in a fraudulent manner.

According to S. Basheria, a mother of three, her husband T.C.A. Mohamed Yusuf had obtained divorce through an authoritative verdict (fatwa) from the Government Chief Kazi, by showing a fake ‘Khulanama’ dated June 9, 2006, allegedly written by her.
He subsequently married another woman.

In 2007, when Ms. Basheria approached the HC seeking to call for records from the Government Chief Kazi in connection with the divorce granted based on the ‘Khulanama’ and to pay a compensation of Rs. 7 lakh, a single judge of the court dismissed the plea pointing out that a case of forgery was pending before a trial court. Hence, the court was not inclined to entertain the writ petition. “The rights of the petitioner are relegated to be renewed after the conclusion of the criminal trial. At this stage, the writ petition is premature and no relief can be given to the petitioner,” the single judge said.

Assailing the order, Ms. Basheria moved the present appeal. The appellant contended that the single judge had failed to take note of the life of the appellants, who had been stranded by the act of her husband.

She argued that the ‘Khulanama’ was a forged document and by virtue of the divorce certificate issued by the Government Chief Kazi, the appellant and her children were deprived of their rights. Denying her allegations, the Special Government Pleader submitted that as per Muslim law, the ‘Khulanama’ was valid if it contained a proposal and acceptance from the wife and the husband respectively.
Validity issues

He added that the Government Chief Kazi was not a competent person to declare Khulanama valid or forged.

Pointing out that allegations made by the appellants were disputed questions of fact, a Division Bench of Justices Huluvadi G. Ramesh and S. Vaidyanathan said: “It is well settled law that the disputed questions of fact cannot be gone into by this court under Article 226 of the Constitution.”

Basheria had argued that the fake Khulanama deprived her and her children of their rights
சென்னை:
 அவர் உலகின் மிக மெதுவான கேஷியர் இல்லை - ஒரு வைரல் வீடியோவின் உண்மை முகம்!
cashier

'உலகின் மிக மெதுவான கேஷியர்' என்ற பெயருடன் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஒன்றின் பின் உள்ள நெஞ்சை உருக்கும் நிஜம் வெளிவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் அண்மையில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. அந்த வீடியோவில்  வங்கி பெண் ஊழியர் ஒருவர் மிகவும் மெதுவாக வேலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய இணைய தளத்தில் கருத்து தெரிவித்திருந்த எழுத்தாளர் ஜெயமோகன் மிக கடுமையான வசைச் சொற்களைக்கொண்டு அப்பெண்ணை விமர்சித்திருந்தார். ஜெயமோகனின் இந்த கருத்துக்கு சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து  அந்த கருத்தை தம்முடைய இணையப் பக்கத்தில் இருந்து ஜெயமோகன் நீக்கி விட்டார். மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இதனிடையே அந்த வீடியோவில் இடம் பெற்ற  வங்கி ஊழியரின் உண்மை நிலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவத்சவா தம்முடைய முகநூல்  பக்கத்தில் இது குறித்து எழுதியுள்ளதாவது:
வீடியோவில் மெதுவாக வேலை செய்யும் ஊழியர் பெயர் பிரேம்லதா ஷிண்டே. புனேவில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் காசாளராக பணியாற்றுகிறார். கணவரை இழந்த அவர் 2017-ம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார். அவரது மகன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். பிரேம்லதா ஷிண்டேவுக்கு 2 முறை ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. ஒருமுறை பக்கவாதத்தாலும்  பாதிக்கப்பட்டவர். வீடியோவில் இடம்பெற்று காட்சியானது சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய நாட்களில் எடுக்கப்பட்டது. இத்தனைக்கும் பிரேம்லதா ஷிண்டேவுக்கு பணிக்கு வராமலேயே முழு சம்பளத்தையும் பெரும் அளவுக்கு மருத்துவ விடுப்புகள் அதிகம் இருக்கின்றன. அதாவது வீட்டில் இருந்து கொண்டே அவர் ஊதியத்தைப் பெற முடியும். ஆனால் பிரேம்லதா ஷிண்டேவோ ஆனால் அதை விடுத்து ஓய்வு பெறும்போது கண்ணியத்துடனும் நேர்மையுடனும் ஓய்வு பெற நினைத்ததால் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வேலைக்கு திரும்பியிருக்கிறார்.
தம்முடைய சிகிச்சைக்கான பணத்தை தாமே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட லட்சக்கணக்கான பெண்களில் ஒருவராகத்தான் பிரேம்லதா ஷிண்டே இருக்கிறார். அவரை விமர்சித்து, கேலி செய்யும் பதிவு போட்டதற்கு பதிலாக அவரது உண்மை நிலையை சொல்லி பாராட்டும் வீடியோவை நாம் போட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு குந்தன் ஸ்ரீவத்சவாவின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்மைக்கு இழுக்கு!

By ஆசிரியர் | Last Updated on : 01st November 2016 01:25 AM

இந்தியாவில் ஏதாவது ஒன்றுக்காக நாம் மகிழ்ச்சி அடையும்போது, அதன் மறுபக்கம் சோகத்தை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. கடந்த மாதம் உலக மக்கள்தொகை குறித்த உலக வங்கியின் அறிக்கை ஒன்று, நாம் ஆறுதல் அடையும் செய்தியை வெளியிட்டிருந்தது. கடந்த 40 ஆண்டுகளாக அரசு மேற்கொண்டு வரும் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றியடைந்திருப்பதுதான் அந்த ஆறுதலான செய்தி.
இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்க விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. அவசரநிலைக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு, 1977 முதல் சுகாதார ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மட்டுமே கடந்த 40 ஆண்டுகளாகக் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும்கூட, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் தங்களது குடும்பத்தை அமைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வந்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை.

ஆனால், அது மட்டுமே மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறதே தவிர, குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்வது கணவனா, மனைவியா என்பதைப் பார்க்கும்போது, அந்தத் தகவல் பெருமை சேர்ப்பதாக இல்லை. உலக வங்கியின் அறிக்கையைப் பார்த்த பிறகு, நமது மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்களை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிப்படுகின்றன.

தங்களைக் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திக் கொள்பவர்களில் 98 விழுக்காட்டினர் பெண்களே தவிர ஆண்கள் அல்ல. 2015-16 நிதியாண்டில் இந்தியாவில் 41,41,502 குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. அவற்றில் 40,61,462 அறுவை சிகிச்சைகள் பெண்களுக்கு செய்யப்படும் "டியூபக்டமி' அறுவை சிகிச்சைகளாகும்.
பெண்களுக்கான "டியூபக்டமி'யைவிட, ஆண்களுக்கு செய்யப்படும் "வாசக்டமி' என்கிற கருத்தடை சிகிச்சை எளிமையானது, பக்க விளைவுகள் இல்லாதது, பத்திரமானது. அதனால் ஆணுடைய இயல்பான இல்லற வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவும் செய்யாது. ஆனாலும், "வாசக்டமி' செய்து கொள்வதால் தங்களது ஆண்மைத்தனம் குறைந்துவிடுமோ என்கிற பயத்தில் ஆண்கள், தங்களது மனைவியரை பக்கவிளைவுகளையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடிய "டியூபக்டமி' கருத்தடை சிகிச்சைக்கு உட்படுத்திவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள்.
வழக்கம்போல, இந்திய ஆணாதிக்க சமுதாயத்தில், பெண்கள் இதற்கான விலையைத் தரவேண்டி இருக்கிறது. பல பெண்கள் "டியூபக்டமி' அறுவை சிகிச்சையில் மரணமடைந்திருக்கிறார்கள். 2014-இல் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் அரசு நடத்திய கருத்தடை அறுவை சிகிச்சை முகாமில் 15 பெண்கள் இறந்த சம்பவத்திற்குப் பிறகும்கூட, நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்ட
தாகத் தெரியவில்லை. இதுபோன்ற அறுவை சிகிச்சை முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள்கூட இருப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை.
அதுமட்டுமல்ல, ஆண்களுக்கு செய்யப்படும் "வாசக்டமி' போல, பெண்களுக்கு செய்யப்படும் "டியூபக்டமி' அறுவை சிகிச்சை பாதுகாப்பனதும், வெற்றிகரமானதும் அல்ல. பல நிகழ்வுகளில், "டியூபக்டமி' அறுவை சிகிச்சைக்குப் பிறகும் பெண்கள் கருத்தரித்திருக்கிறார்கள். அவர்கள் கருக்கலைப்புக்குத் தங்களை உட்படுத்திக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். இதன் பக்க விளைவுகளும், அதனால் ஏற்படும் மன உளைச்சலும் பெண்களைக் கடுமையாக பாதிப்பதாகப் பல சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.கருத்தடை அறு
வை சிகிச்சை முகாம் என்பது போன்ற அவமானகரமான நிகழ்வு வேறு எதுவுமே இருக்க முடியாது. இதைவிடக் கேவலமாக மகளிரை அவமானப்படுத்த முடியாது. குறிப்பாக, ஏழை எளிய, படிப்பறிவு இல்லாத பெண்கள், வரிசையில் நிறுத்தப்பட்டு பதிவு செய்து கொள்ளும் அநாகரிகத்தை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. ஏதோ மிருகங்களுக்கு செய்யப்படுவதுபோல அவசர அவசரமாக அவர்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. பல நிகழ்வுகளில் அவர்களது ஒப்புதல் இல்லாமலேகூட அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை மகளிர் அமைப்புகள் தாக்கல் செய்தன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இதுபோன்ற கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்துவதை அரசு முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுபோன்ற வற்புறுத்தல்கள் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் இருத்தல் கூடாது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
மகளிர் உரிமையையும், அவர்களது கெளரவத்தையும் பாதுகாத்து, சுகாதார ஊழியர்கள் மூலம் பெண்களுக்கு கருத்தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறுவை சிகிச்சை இல்லாமலே குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் வழங்குவதுதான் சரியாக இருக்கும். பெண் சுகாதார ஊழியர்களைப் போல, ஆண் சுகாதார ஊழியர்கள் மூலம் ஆண்கள் மத்தியில் "வாசக்டமி' குறித்த தேவையற்ற அச்சத்தை அகற்றி, கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அவர்களை உட்படுத்துவதில் அரசு முனைப்புக் காட்டுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
மக்கள்தொகைப் பெருக்க விகிதம் குறைவது மகிழ்ச்சியை அளித்தாலும், பெண்கள் மட்டுமே இதற்குக் காரணமாக இருப்பதும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதும் அதிர்ச்சி அளிக்கிறது. இதை மாற்றியாக வேண்டும்!

கொண்டாடவா? சிந்திக்கவா?
By கே.எஸ். இராதாகிருஷ்ணன் | Last Updated on : 01st November 2016 01:25 AM +அ

தமிழ்நாடு மாநிலம் அமைந்து இன்று (நவம்பர் 1) 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா துக்கமா என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம்.
சென்னை ராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது.
கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளையொட்டி ஆண்டுதோறும் அந்தந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.
"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்உலகம்' என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லையை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயர் வங்க தேசத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் இச்சூழ்நிலையை கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில், ஐக்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவ கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952 அக்டோபர் 13-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15 அன்று அவருடைய மரணத்தில் முடிந்தது. இது ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இதன் விளைவாக கர்நூலைத் தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்திற்குச் சொந்தமான திருப்பதியை தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், "மெட்ராஸ் மனதே' என்ற கோஷம் எழுப்பி அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.

சென்னை மாகாணம், தமிழகம் உருவானதற்கு பின்னால் பலரின் தியாகங்கள் உள்ளன.
தமிழகத்தின் வட எல்லையான திருத்தணியையும், திருப்பதியையும் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நடத்திய போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன.

வடக்கு எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி., கொ.மோ. ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ. தாமோதரன், கிருஷ்ணமூர்த்தி, அ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி. சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரசார பணியையும் மேற்கொண்டார்.

மங்களங்கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று புகை வண்டி மூலமாக வட எல்லைப் பகுதியான திருப்பதிக்கு பயணப்பட்டார். ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தனர். கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் "வேங்கடத்தை விட மாட்டோம்' என்று ஒரு மணி நேரம் கர்ஜித்தார்.

ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்னை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகளை நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

09.04.1953 முதல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் நடைபெற்றன. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப்பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றினார். இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ம.பொ.சி. 1953 ஜூலை 3-ஆம் தேதி தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத் தண்டனை பெற்றார்.
திருத்தணி எல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக அன்றைய தமிழக - ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.
ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகியவற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்னை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக, தமிழக - ஆந்திர சட்டப்பேரவைகளில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ். மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர்க்குணம் கொண்டோரின் தலைமையில் இக்கோரிக்கை பிறந்தது. மணிக்கு ம.பொ.சி.யின் ஆதரவு கிடைத்தது.
1954 ஜூனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரசாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச்சமயத்தில் திருவிதாங்கூர் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

1950-இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து அன்றைய கொச்சி முதல்-அமைச்சரும் தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசி முடிவு எடுத்தனர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்திற்கும் நாங்கள் தயார் இல்லை எனவும் தெரிவித்தார்.
குஞ்சன் நாடார் போன்ற போராட்டத் தளபதிகள் இப்பிரச்னையில் அணிவகுத்தனர். குமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீஸாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீஸாரால் பிடிக்கப்பட்டு அடித்து உதைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்து போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீஸார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர்.

இதுபோன்று போராட்டங்களை நடத்தி வந்த சட்டநாத கரையாளர் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.

இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் - கொச்சி பகுதிகளை உள்ளடக்கிய கேரள முதல் - அமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனனும் பேசியபின் தேவிக்குளம் - பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது.
அதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கன்னியாகுமரி - செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

1956 நவம்பர் 1-ஆம் தேதி நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் காமராசர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவில் செங்கோட்டையில் சி. சுப்பிரமணியன் பங்கேற்றார்.
நாகர்கோவிலில் நடந்த விழாவிற்கு தியாகி பி.எஸ். மணியை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை பங்கேற்க வைத்து குமரி மாவட்ட இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தினார்.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். ஈ.வெ.ரா. பெரியார், அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தினர்.
தட்சணப்பிரதேசம் என்ற பெயரில் தக்கண பீடபூமி மாநிலங்களை ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கை எடுத்தபொழுது முதல் கண்டனக் குரல் அன்றைய முதல் அமைச்சரான காமராஜரிடம் இருந்து எழுந்தது.
மொழிவாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். பெரியார், அண்ணா ஆகியோரின் குரல்கள் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.

கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகத்திலும் உள்ளன.
கொள்ளேகால், பெங்களூரு, கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் நாம் இழந்து உள்ளோம். 1956-இல் தமிழகத்தின் விருப்பத்திற்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளை கேரளத்தோடு முறைகேடாக சேர்த்துவிட்டனர்.ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி பகுதிகளை இழந்துவிட்டோம்.
இந்த நாள் கொண்டாடவா சிந்திக்கவா என்று புரியவில்லை.

கட்டுரையாளர்: வழக்குரைஞர்.










NEWS TODAY 22.04.2024