Monday, January 2, 2017

ஒரே நாளில் ரூ.180 கோடி மது விற்பனை – புத்தாண்டில் குடிமகன்கள் கும்மாளம்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.180 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது. கடும் பணத்தட்டுப்பாட்டை மீறியும் கடந்த ஆண்டு விற்பனையை மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மொத்தம் 6,323 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் ரூ.65 கோடிவரை வருவாய் கிடைக்கிறது. விடுமுறை நாட்களில், ஒருநாளைக்கு சுமார் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரை விற்பனையாகிறது. பண்டிகை காலங்களில் ஒரு நாளைக்கு ரூ.150 முதல் ரூ.180 கோடிவரை விற்பனையாகிறது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள் மூலம் நேற்று முன்தினம் மட்டும் சுமார் ரூ.180 கோடிக்கு சரக்குகள் விற்று, சாதனை படைத்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு புத்தாண்டை ஒட்டி ஒரே நாளில் சுமார் ரூ.170 கோடிக்கு மேல் விற்பனையானது. இந்த ஆண்டு கடும் பணத் தட்டுப்பாட்டையும் மீறி ரூ.10 கோடிக்கு மேல் சரக்குகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு - சென்னை சிறப்பு ரயில் ஜன.29 வரை நீட்டிப்பு

By சேலம்,  |   Published on : 02nd January 2017 09:48 AM |
ஈரோடு - சென்னை பகல் நேர சிறப்பு ரயில் சேவை வரும் ஜனவரி 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம், விருத்தாசலம் மார்க்கத்தில் சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, வண்டி எண் 06028, 06027 ஆகியவை வாரத்துக்கு 5 நாள்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், போதிய பயணிகள் இல்லாதது போன்ற காரணங்களால் ரயில் சேவை நிறுத்த வேண்டியது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என சேலம் ரயில்வே கோட்டம் கேட்டுக் கொண்டது.
அதைத்தொடர்ந்து, இந்த ரயில் டிசம்பர் இறுதி வரை இயக்குவதாக நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜனவரி 29 ஆம் தேதி வரை இயக்கப்படும் என நீட்டிப்பு செய்து சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1, 7, 8, 14, 15, 21, 22, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு மார்க்கத்திலும் ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

முதல்வருக்கு எதிராக தம்பிதுரை காண்டானதற்கு காரணம் இதுவா?

By DIN  |   Published on : 02nd January 2017 01:19 PM  |

சென்னை: அதிமுக பொதுச் செயலர் சசிகலா, தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஏறக்குறைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான குரல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கட்சியின் தலைமையும், ஆட்சியின் தலைமையும் ஒருவராக இருந்தால்தான் ஒருமித்து செயல்பட முடியும் என்றும் அவர் சசிகலாவுக்குக் கூறியுள்ளார்.

இது கட்சி அடிப்படையில் அவர் கூறியுள்ள கருத்தாக எடுத்துக் கொண்டாலும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்னவென்று தகவல் அறிந்த வட்டாரங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறார்கள்.

அதாவது, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் போது, ஓ. பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரையின் பெயரும் அலசப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போதே தம்பிதுரைக்கு பன்னீர்செல்வத்தின் மீது சற்று வருத்தம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், அந்த வருத்தம் காண்டாக மாறும் வகையில் புது தில்லியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புது தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். அப்போது, பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரையும் சென்றார். இருவரும் ஒன்றாகத்தான் மோடியை சந்தித்துப் பேசினர்.

ஆனால், இடையே தம்பிதுரையை வெளியே செல்லுமாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தம்பிதுரையை வெளியே அனுப்பிவிட்டு, சுமார் 20 நிமிடங்கள் மோடியுடன் அவர் தனியாக பேசியுள்ளார். அப்போது அவர் என்ன கூறினார்? என்பது இன்னமும் சிதம்பரம் ரகசியமாகவே உள்ளது.

புது தில்லியில் கட்சி அளவில் செல்வாக்கு மிக்க தன்னையே வெளியே அனுப்பிவிட்டாரே பன்னீர்செல்வம் என்று அப்போதுதான் தம்பிதுரைக்கு அதிருப்தி ஏற்பட்டு, அது காண்டாக மாறி, சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்கும் அளவுக்கு மாறிவிட்டதாக தகவல் அறிந்த பட்சிகள் கதறுகின்றன.


A typographical error in legal notice proves costly for petitioner

By Siva Sekaran  |  Express News Service  |   Published: 02nd January 2017 03:21 AM  |   


Last Updated: 02nd January 2017 03:21 AM 
  

CHENNAI: A simple typographical error in mentioning the cheque number in a legal notice issued under the Negotiable Instruments Act has heavily cost a litigant, as his case was dismissed by a lower court and the High Court, as well.

Instead of the correct cheque No. 361868, it was mentioned as 361838 in the notice dated April 17, 2013 issued  by Velukannan to Mohamad Irfan in Alandur.


There is no mist or cloud or shroud or any manner of simmering doubt in regard to the language employed in Sec. 138 of the NI Act, Justice M Venugopal observed. Admittedly, the legal notice will have to be read in its entirety. In the present case, no correction notice was issued on behalf of the complainant to the accused. Certainly, the incorrect mentioning of the cheque in the notice did not fulfill the requirement under Sec. 138(b) of the NI Act. In as much as the notice was not in conformity with the cheque, as a legal corollary, the complaint filed by the appellant is per se not maintainable in law, the judge said and dismissed the appeal from Irfan, recently.


According to appellant, he had lent Rs 8 lakh to Velukannan, who returned Rs 2 lakh. For remaining Rs 6 lakh, he issued a cheque dated March 22, 2013, which bounced. Appellant issued a legal notice in which the cheque number was wrongly mentioned as 361838. He also lodged a complaint before JM-II in Alandur, mentioning the correct cheque No. However, the JM dismissed the complaint after saying that there was a technical defect and that the provisions of the NI Act were not followed. Hence, the present appeal.

“In view of the aforesaid qualitative and quantitative discussions, this court comes to a consequent conclusion that the appellant had not established his case beyond all reasonable doubt,” Justice Venugopal said and dismissed the appeal.
 ‘IMA against disbanding of Medical Council’
By AREEBA FALAK |

 Dr K.K. Aggarwal took oath as Indian Medical Association’s (IMA) 88th president earlier this week at its 77th central council meeting. Dr Aggarwal has been a member of the IMA for over 25 years and has received multiple national awards, including the Padma Shri, Vishwa Hindi Sammaan, National Science Communication Award and the Dr B.C. Roy National Award. In an interview with The Sunday Guardian, Dr Aggarwal spoke on key issues concerning current medical education and professional scenario in the country. Excerpts:
Q. The IMA has been against disbanding of the Medical Council of India (MCI). How strongly will IMA oppose the move in your presidency?
A. We firmly stand against MCI’s disbanding and the IMA will do whatever it takes to convince the stakeholders that the proposal that is being made is against the democratic spirit of the MCI. However, the present IMC Act needs amendments to make it functionally more viable. The autonomy of the regulatory body has to be upheld. It cannot be trampled upon. It should not be subverted so as to reduce it as a subservient department to the government. It has to have its representative character. It cannot be a body of handpicked people nominated by the government so as to ensure that the dictates of the government reign supreme.
Q. The Foreign Medical Graduates Examination (FMGE) has been criticised for its “unrealistic” difficulty level. Do you have plans to recommend reform in the system?
A. We do not support removal of screening for doctors who have studied abroad and want to practice in India. We strongly recommend initiation of a month-long internship followed by posting in rural areas. We cannot allow half-baked doctors to start their practice without supervision. Screening is important to ensure that the doctor who is practising here is well aware of the native circumstances. But there should not be multiple screening tests as there are now.
Q. Critics have raised concern about the increasing number of Indian surgeons travelling to Gulf countries to conduct surgeries. Do you share this concern as well?
A. The argument that doctors are neglecting their patients by leaving their patients and not staying behind for post-surgery care is not valid in this case because the local teams of those hospitals are well skilled and equipped to take care of the patient after the surgery is done. These surgeons are called often for second opinions or to assist on a surgery. It also adds to their fame. It is a good thing if more Indian surgeons earn name internationally. As long as the local administration of these countries has no problems with our doctors leaving after surgeries, there should be no trouble.
Q. IMA is also planning to don the patriotic garb and sing the national anthem in their meetings. Your comment.
A. Every time an IMA meeting takes place, the members present will sing the national anthem after the meeting ends. Until now, it was optional, but we are trying to make it mandatory. We are aligning ourselves with the Supreme Court’s order. The national anthem is pivotal and centripetal to the basic conception of sovereignty and integrity of India. Every IMA branch should start its meeting with IMA prayer and end it with the national anthem. The national anthem has been made mandatory in movie theatres now. If it can be done there, why can’t we do it? If doctors cannot set an example, how can we inspire other people?
Q. Speaking about movie theatres, you have talked earlier about erroneous depiction of doctors and medical treatments in movies and dramas. Will you take any action against such depictions?
A. I strongly recommend that writers, directors and producers of movies and dramas be more responsible while making such scenes. Our profession is not one where we can allow room for misconceptions. At times, movies may depict a treatment that does not even exist or show doctors in bad light like in the movie Gabbar is Back. We understand it is all for entertainment, but it would be better to be more factually responsible.

Sunday, January 1, 2017

2016-சில முக்கிய திருப்பங்கள்!

 ஏ.டி.எம் வாசல் காத்திருப்பு, வர்தா புயல் தாண்டி ‘கடந்த ஆண்டு’ நடந்த முக்கியத் திருப்பங்களின் தொகுப்பு இதோ


இந்த ஆண்டின் இறுதியில் வந்து நின்றுக்கொண்டு, 2016-ம் ஆண்டு எப்படி இருந்தது என ஒவ்வொருவரும் திரும்பி பார்க்கும் போது, சந்தோஷமான நிகழ்வுகளையே மனது நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்! நமது இந்த இயல்பில் இருந்து சற்று விலகி, இந்த ஆண்டு நம் வாழ்வாதாரத்தை புரட்டி போட்ட சில நிகழ்வுகள், திருப்பங்கள், நம் கவனம் ஈர்த்த விஷயங்கள் குறித்த தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்...


1) சென்ற ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மீண்ட சென்னை மக்களுக்கு, சோதனை தரம் விதமாகவே, இந்த ஆண்டு ‘வர்தா’ புயல்' வந்தது. முதலில் வந்த தானே புயல் வலுவிழந்ததைக் கண்டு, இனி தொந்தரவு எதுவும் இல்லை என்று பெருமூச்சு விட்ட சென்னை வாசிகளுக்கு, வர்தா கொடுத்த பதில் மிகவும் மோசமானது. ஆம், சென்னை முழுவதும் வர்தாவின் காற்றில் சிக்கி சின்னாபின்னமானது. இந்த 'வர்தா' சென்னை மக்களின் வாழ்வியலை மட்டுமன்றி அவர்கள் ஒவ்வொருவர் வீட்டு மரங்களின் வேர்களையும் அசைத்து விட்டுச் சென்றுள்ளது. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 40,000 மரங்கள் விழுந்துள்ளது என தகவல் வந்துள்ளது. தற்போது ஓரளவிற்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவருகின்றனர்.

2) வர்தாவின் காற்றை விடவும் முதல்வரின் இறப்பு பலருக்கும் அதிர்ச்சி அலையை தந்தது. ஒரு ஞாயிற்றுகிழமை இரவில் 'முதல்வர் நிலை மிக மோசம்' என்று வெளிவந்த மருத்துவமனை அறிக்கையின் போதே பல விதமான சர்ச்சைகளும், சிக்கல்களுமாய் நகர்ந்தது தமிழகம். அதன் பின் முதல்வரின் இறப்பு குறித்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியளிக்க, அதற்குப்பின்னே இருக்கும் மருத்துவமனை ரகசியங்களை வெளியிட வலியுறுத்தி பல தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இவை மட்டுமில்லாமல், எதிர்கட்சி தலைவரின் உடல்நல குறைவு, ஆளுங்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் என இந்த டிசம்பர் தமிழக அரசியலை ஒரு புரட்டு புரட்டி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.



3) மோடியின் கறுப்பு பண ஒழிப்பு குறித்த நடவடிக்கையான 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு, தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அறிவிக்கப்பட்டபோது வரவேற்கப்பட்டாலும், அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்ட பண முடக்கத்தால் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. தினமும் ஏ.டி.எம்.மில் நின்று நின்று கடைசியில் 'பணம் தீர்ந்துவிட்டது' என்ற அறிவிப்பை மட்டுமே பார்த்தவர்கள் இங்கு உண்டு. மோடியின் 50 நாள் கெடு இன்றோடு முடிகிறது என்ற போதிலும் கூட, எங்காவது ஒரு மூலையில் இருக்கும் ஏ.டி.எம்.மில் பணம் இருக்கிறது என எங்கிருந்தோ வரும் தகவலை நம்பி, அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு எடுத்து செல்லும் பலரை இங்கு இன்றுவரை காணமுடிகிறது.

4) இந்த வருடத்தின் மிக முக்கியமான மற்றொரு நிகழ்வு, மூன்று பெண்களின் கொடூரமான மரணம். 'மூன்று பெண்கள், மூன்று மரணங்கள்' நமக்கு கற்றுக்கொடுத்த பாடம் ஒன்று தான். ‘பெண்ணாய் பிறப்பது சுலபம், ஆனால் இச்சமூகத்தில் வாழ்வது ரொம்பவே கஷ்டம்’ என்பது தான் அது. ஐ.டி. ஊழியர் ஸ்வாதி, போலீஸ் அதிகாரி விஷ்னுப்பிரியா, கல்லூரி மாணவி வினுப்பிரியா இவர்கள் தான் அந்த மூவர். இவர்களோடு சேர்த்து, கிறிஸ்துவ ஆலயத்திற்குள் கொலை செய்யப்பட்ட ஆசிரியர், கல்லூரி மாணவி ஒருத்தி வகுப்பறைக்குள் கொலை என இந்த பட்டியல் நீள்கிறது. ‘பெண்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை’, ‘கல்லூரிக்கு செல்ல முடியவில்லை’ என ஏனைய பெண்களையும், அவரவர்களது பெற்றோரையும் கதர வைத்தது சம்பவங்கள் இவைகள்.

5) இவர்கள் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் மிகவும் விரைவாக செயல்பட துவங்கினர். அத்துனை அழுத்தம் அவர்களுக்கு தரப்பட்டதும் உண்மைதான். ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் வெகுவிரைவாக கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். அதே வேகத்தில், ராம்குமாரின் மரணமும் நிகழ்ந்தது. 'சிறையில் தற்கொலை செய்து கொண்டார் ராம்குமார்' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படடது. அது கொலையா, தற்கொலையா என பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்ப, இன்னமும் அந்த மரணம் மர்மமாகவே உள்ளது.



6) காவிரி பிரச்னை, டெல்டா மாவட்ட விவசாயிகளை மிகவும் பாதித்தது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் இந்த பாதிப்புகள், ஆண்டுதோறும் தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி போட்டு விடும். இந்த ஆண்டு, நிலைமையே வேறு. ஒரு கட்டத்தில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறவே, தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுகூட துவங்கினர். மற்றொரு புறம், கர்நாடக மக்கள் போராட்டம் நடத்த துவங்கினர். இருவேறு புறமும் அரசு தீர்மானங்களைத் தாண்டி, இரு மாநில மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.

7) தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க, அதை எதிர்த்து மக்கள் போராட தொடங்கினர். விலங்குகள் நல ஆர்வலர்கள் காளைகள் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்த இந்த வழக்கின் முடிவே ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம். “ஜல்லிக்கட்டு எங்கள் பாரம்பர்ய விளையாட்டு, அதனை தடை செய்யக் கூடாது” என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துக்கொண்டே உள்ளனர். ஹிப்-ஆப் தமிழாவின் ‘டக்கரு டக்கரு’ ஜல்லிகட்டின் முக்கியத்துவத்தை அடிப்படையாய் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்களின் பலம் பொருந்திய ஆதரவில் ஜல்லிக்கட்டு தொடர்பான விமர்சனங்கள் வைரலாக பரவிவருகிறது.

8) இந்திய ராணுவத்தின் ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ மக்களுக்கு ரொம்பவே ஆச்சர்ய நிகழ்வாய் இருந்தது. இதுவரை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்றால் என்ன என்று கூட அறிந்திராதவர்களுக்கு கூட இந்த நிகழ்விற்கு பிறகு ராணுவத்தின் சில சீக்ரெட் விஷயங்கள் தெரிய வந்தது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்திய இச்சம்பவம், நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நமது ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது என மோடியின் மத்திய அரசு பெருமைப்பட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.




9) இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் ரொம்பவே கவனிகத்தக்கது. பாரா ஒலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு நடந்த விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் பட்டியல் கொஞ்சம் நீளமானது. பி.வி.சிந்து, ‘தங்கமகன்’ மாரியப்பன், சாக்‌ஷி மாலிக், தீபா கர்மகர், தேவேந்திர ஜஜாரியா என நீளுகிறது நம் பட்டியல். தன் குடும்பத்தில் ஒருவர் வாங்கினால் எப்படி பெருமைபடுவரோ அப்படி தான் இவர்களது வெற்றிக்கும் பூரித்தனர் நம் மக்கள். தீபா மாலிக், சாக்‌ஷி தன்வார், பி.வி.சிந்து போன்ற பெண்ணகளின் வெற்றிகள், வீட்டுக்குள்ளே பெண்ணை முடக்க நினைத்த ஒவ்வொருவருக்கும் சரியான பதிலடியாக இருந்தது.

10) ஒலிம்பிக்கை தாண்டி கிரிக்கெட், கபடி, ஹாக்கி முதலியவையும் நம் கவனம் ஈர்த்தது. 15 ஆண்டுகளுக்கு பின் ஜூனியர் உலக கோப்பையை ஹாக்கி அணி வென்றது. கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது முதலிய சில நிகழ்வுகள் விளையாட்டு துறையின் மீது நமக்கு சில பாசிட்டிவ் வைப்ரேஷனை அளித்தது. அஷ்வின் சிறந்த டெஸ்ட் வீரராக செலக்ட் ஆனது, கருண் நாயர் முச்சதம் என விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் எல்லா விளையாட்டுகளும் நேரடியாகவே ரீச் ஆனது. இந்த ஆண்டு விளையாட்டு துறை இந்திய மக்களுக்கு பற்பல ஆச்சர்யங்களையும் சந்தோஷங்களையும் தந்த வருடமாகவே இருந்துள்ளது இன்னும் கூடுதல் சிறப்பு.



தொகுப்பு: ஜெ.நிவேதா,
(மாணவப் பத்திரிகையாளர்)


தித்திப்பான தெய்வமகள் முதல்...திகிலான நாகினி வரை...2016ன் ஹிட் லிஸ்ட் சீரியல்கள்! #2016Rewind

2014...2015...2016னு வருடங்கள் நிற்காம ஓடி 2017ம் ஆண்டும் பிறந்துவிட்டது. ஆனால், ’சின்னத்திரை’ எனப்படும் டிவி உலகின் சீரியல்களுக்கு வருஷக் கணக்கெல்லாம் இல்லவே இல்லை. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டில் சீரியல் ரசிகர்களின் மத்தியில் சக்கை போடு போட்ட சில ஹிட் சீரியல்களின் ஒரு சிறு பார்வை இங்கே உங்களுக்காக!

தெய்வமகள்:



’சத்யா - பிரகாஷ்’ ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அளவிற்கு சன் டி.வியின் இந்த சீரியலின் ரீல் ஜோடிக்கு பட்டிதொட்டியெங்கும் ஃபேன்ஸ் அதிகம். அதைவிட முக்கியமாக ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் வில்லியான காயத்ரிக்கோ அதிரிபுதிரி எதிரிகள் எக்கச்சக்கம். ‘எனக்கு பெண் குழந்தை பிறந்தா பேர் சத்யாதான்’ என ரசிகர்கள் உறுதியெடுக்கும் அளவிற்கு அன்பே உருவான சத்யப்பிரியா, பட்டென்று கோபப்பட்டாலும் புத்திசாலியான பிரகாஷ், அமைச்சரையே மிரட்டி அட்ராசிட்டி செய்யும் காயத்ரி என 1000 எபிசோட்களைத் தாண்டி சீரியல் உலகில் வெற்றிகரமாக டிராவல் செய்து கொண்டிருக்கிறது ‘தெய்வமகள்’.

ப்ரியமானவள்:



அம்மாக்களே அன்பானவர்கள்தான். அதிலும், மாமியாரும் அம்மாவுக்கு மேல் அன்பானவராக அமைந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அப்படி ஒரு மாமியார்தான் சன் டி.வி-யின் ’ப்ரியமானவள்’ உமா. ஆரம்பித்த நாளில் இருந்து சற்றுகூட தொய்வில்லாமல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் தொடர் இது. உமாவாக மலையாள நடிகை ப்ரவீணா, தமிழ் சீரியல் ரசிகர்கள் மனதினைக் கொள்ளைக் கொண்டுள்ளார். 2016ம் ஆண்டின் சிறந்த சீரியல்களில் இதுவும் ஒன்று.

வாணி ராணி:



இதுவும் சன் டிவிதான். 2016ம் ஆண்டின் ‘டூயல் ரோல்’ வெற்றி சீரியல் என்றால் அது ‘வாணி ராணி’தான். லாயரான வாணி, அப்பாவியான ராணி என்று நடிகை ராதிகா இரட்டை குதிரையில் வெற்றிச்சவாரி செய்யும் சீரியல் இது. அதுவும் அக்கா அடக்கி வாசிக்கும்போது, தங்கை சீறுவதும், தங்கை அமைதியாகும்போது அக்கா டாப் கியர் எடுப்பதும் என்று டெம்போ இறங்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். ராதிகா சீரியல் என்றாலே குடும்ப உறுப்பினர்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த மெகாதொடர் தெரபி இதிலும் மாறவில்லை. அலட்டலில்லாத திரைக்கதை வடிவமைப்பு, அலட்டலான வில்லி நீலிமா ராணி என்று வாணி ராணியும் சீரியல்கள் ஹிட் லிஸ்ட்டில் டாப்.

கல்யாணம் முதல் காதல் வரை:



கேரளாவிலிருந்து தமிழகக் கரையோரம் வீசிய தென்றல் காற்றான ப்ரியா என்னும் பல் மருத்துவருக்கும், ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து, பெண் குழந்தையுடன் தனித்திருக்கும் அர்ஜூன் என்னும் ஆறடி அழகு பிசினஸ் மேனுக்குமான காதலும், சுட்டித்தனமும், புத்திசாலித்தனமும் கொண்ட அர்ஜூனின் குழந்தையான பூஜாவிற்கும், ப்ரியாவிற்கும் இடையிலான ஆழமான அன்பும்தான் இந்த சீரியல். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலுக்கு ரீல் - ரியல் ஹீரோயின் ப்ரியாவிற்காகவே ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம். வருட இறுதியில் ஹீரோயின் மாற்றம் நடைபெற்றிருந்தாலும் இன்னும் கூட ரசிகர்களிடம் தனக்கான இடத்தை விட்டுக் கொடுக்காமல் 2016ம் ஆண்டின் டாப் 10 சீரியல்களில் இடம் பிடித்திருக்கிறது ‘கமுகாவ’..அதாங்க ‘கல்யாணம் முதல் காதல் வரை’.

தலையணைப் பூக்கள்:



எழுத்தாளர் பாலகுமாரனின் நல்லாசியோடு ஜீ தமிழ் சேனலில் தொடங்கப்பட்ட புத்தம்புது சீரியல் இது. 2016ல் டாப் கியரில் பயணிக்க ஆரம்பித்த ஜீ தமிழ் சீரியல்களில் டாப் லிஸ்ட்டில் ஆரம்பித்த குறுகிய காலகட்டத்திலேயே இடம் பிடித்த மெகா தொடர் என்றால் அது ‘தலையணைப் பூக்கள்’தான். பெண்களே இல்லாத வீட்டிற்கு மருமகள்களாக வருகின்ற பெண்களைச் சுற்றி, பிண்ணிப் பிணைந்து இழையோடும் பாசம், பொறாமை, போட்டி, அன்பு, காதல் ஆகிய உணர்வுகளின் கலவை ‘தலையணைப் பூக்கள்’. நிஷா கணேஷ்வெங்கட்ராம், சாண்ட்ரா, ஸ்ரீ என்று இதிலும் இளைஞர்கள் பட்டாளம் அதிகம். டாப் சீரியல் லிஸ்ட்டில் இடம் பிடிப்பதற்கான தகுதிகளோடு ரசிகர்களை கவர்ந்துள்ளது தலையணைப் பூக்கள்.

கைராசிக் குடும்பம்:



முழுக்க, முழுக்க பெண்களே ஆதிக்கம் புரியும் சீரியல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் ‘கைராசிக் குடும்பம்’. தந்தையில்லாத குடும்பத்தின் மகன்களும், அவர்களுக்கு மனைவியாக வருகின்ற பெண்களும், அவர்களுடைய குணங்கள், குடும்பச் சூழல், தலைமகனின் மனைவியாக வரும் பெண்ணின் அன்பு, அரவணைப்பு இவைதான் கைராசிக் குடும்பத்தின் கதை. டி.ஆர்.பியில் தாறுமாறாய் எகிறி அடிக்கும் சீரியல்களுக்கு நடுவில் கைராசிக் குடும்பத்திற்கும் ரசிகர்களின் ராசி ஜாஸ்தி.

குலதெய்வம்:



அலமேலு என்கிற பழமையான பேருக்கும் மவுசு ஜாஸ்தியானதற்கு முக்கிய காரணம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குலதெய்வம்’ சீரியல். நகைச்சுவைக்கு பேர் போன மெளலி, உணர்வுகளை முகங்களில் காட்டுவதில் திறமைசாலியான வடிவுக்கரசி, மெட்டி ஒலிக்க ஒலிக்க நடனமாடிய சாந்தி என்று குலதெய்வத்தில் நடிகர்கள் பட்டாளமே உண்டு. திருமுருகனின் குலதெய்வம் அருளோ என்னவோ அவருடைய சீரியல்களுக்கு எல்லா வருடங்களிலும் சீரியல் ரசிகர்களிடம் டாப் தொடர் அங்கீகாரம் உண்டு. அது ‘குலதெய்வம்’ சீரியலுக்கு மட்டும் இல்லாமல் போகுமா என்ன?

லட்சுமி வந்தாச்சு:



சின்னத்திரை நடிகை வாணி போஜன் ஒருபக்கம் சத்யப்ரியாவாக கலக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், லட்சுமியாகவும் மறுபக்கம் ஸ்கோர் செய்யும் சீரியல் ஜீ டிவியின் ‘லட்சுமி வந்தாச்சு’. எதிர்பாராதவிதமாக ஒரு அறிமுகமில்லாத குடும்பத்தில் லட்சுமி என்ற பெயரில் மருமகளாகும் ஹீரோயின், நிஜமாகவே லட்சுமியாக மாறிப் போய், அந்தக் குடும்பத்தின் குலவிளக்கு, குத்துவிளக்காக ஜொலிப்பதுதான் கதை. தன்மேல் பொறாமை, கோபம் கொண்ட பெண்ணைக் கூட அக்கா...அக்கா என்று பின்னால் அன்புடன் சுத்த வைக்கும் இந்த லட்சுமிக்கு ரசிகர்களிடையே ஸ்கோர் 100.

நாகினி:



தமிழ் ரசிகர்களுக்கு மற்ற மொழி நாடகங்களும் பிடிக்கும் என்பதை நிரூபித்தது சன் டிவியின் ’நாகினி’ சீரியல். இந்தியிலிருந்து டப் செய்யப்பட்டு, இரவு 10 மணிக்கு ஒலிபரப்பான இந்த சீரியலின் கதாநாயகி ஷிவன்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அப்பப்பா... 2016ல் டி.ஆர்.பி ஸ்பீட் ரைஸ் செய்ய சன் டிவி எடுத்த முயற்சியில் ஜெயித்தது ‘நாகினி’ பாம்புதான்.

மாப்பிள்ளை:



ஆண்டின் கடைசியில் விஜய் டிவியில் சரவணன் - மீனாட்சி புகழ் ‘செந்தில்-ஸ்ரீஜா’ ஜோடியின் செகண்ட் இன்னிங்ஸாக ஆரம்பித்த ‘மாப்பிள்ளை’ சீரியல், டாப் லிஸ்ட்டில், டாப் கியரில் இடம்பிடித்துக் கொண்டது. செந்திலுக்கு ஹேண்டசம் லுக் கூடியிருக்கிறது என்றால், ஜெயாவாக நடிக்கும் ஸ்ரீஜாவுக்கோ அழகு இரட்டிப்பாகியிருக்கிறது. இவர்களது ஆடைகளுக்காகவே ஒரு கூட்டம் மாப்பிள்ளை சீரியலைப் பார்க்கிறதென்றால், நமக்கும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்கமாட்டாரா என்று ரசிகைகள் கூட்டமும் இந்த சீரியலை டாப் சீரியலாக்கிவிட்டனர்.

இதுக்கும் மேல...இன்னும் கூட நிறைய சீரியல்கள் டிவி உலகின் டான் ரசிகர்களிடம் டாப் இடங்களைப் பிடித்துள்ளன. ஆனாலும், இங்கே பட்டியலிடப்பட்டுள்ள இந்த சீரியல்கள் டாப் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்த ஆண்டில் இவற்றில் என்னென்ன சீரியல்கள் டிஆர்பி-யில் பரமபதம் ஆடப்போகிறது என்று பார்க்கலாம்!

NEWS TODAY 2.5.2024