Sunday, October 1, 2017

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: தினகரன் வழங்கினார்
By DIN | Published on : 30th September 2017 03:03 PM |



அரியலூர்: மருத்துவர் கனவு நனவாகாததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குடும்பத்துக்கு அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், ரூ.15 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் உடன் சென்றார். இரு தலைவர்களும் அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆசி கூறினர். பிறகு, அனிதாவின் குடும்பத்தாரிடம் ரூ.15 லட்சத்தை அளித்தார் டிடிவி தினகரன்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அனிதா விவகாரத்தில் அரசியல் ஆதாயத்துக்காக எதையும் செய்யவில்லை. அனிதா வீட்டிற்கு திருமாவளவன் என்னுடன் ஆறுதல் கூற வந்ததில் அரசியல் எதுவும் இல்லை. நாங்கள் அழைத்ததால் அவர் வந்துள்ளார் என்று கூறினார்.
Banwarilal Purohit appointed Tamil Nadu Governor

PTI | Updated: Sep 30, 2017, 12:10 IST



NEW DELHI: Banwarilal Purohit was on Saturday appointed as the governor of Tamil Nadu while Satyapal Malik would be the new governor of Bihar.

Banwarilal Purohit is a former BJP parliamentarian and owns Nagpur city's largest circulated English daily 'The Hitwad'.

Jagdish Mukhi will take the place of Purohit as the Assam governor. The appointments of five governors, including for Arunachal Pradesh and Meghalaya, and Lt Governor of Andaman and Nicobar Islands by President Ram Nath Kovind were announced today.

Maharashtra Governor Ch Vidyasagar Rao was holding the additional charge of governor of Tamil Nadu and there had been demands of appointment of a full-time governor in view of the political situation in the southern state.

Satya Pal Malik, former MP and BJP's national vice president, has been appointed the governor of Bihar. The post had fallen vacant after Kovind was nominated as the BJP's presidential candidate.

Admiral (Retd) Devendra Kumar Joshi will be the Lieutenant Governor of Andaman and Nicobar Islands in place of Mukhi, a press release issued by the president's office said.

TOP COMMENTPoliticians should be banned as governor... For administrative position judges and armed officers are right choice... BJP is proving they are nothing par congress.Murugadas Kannan

Former member of Bihar Legislative Council Ganga Prasad has been appointed as the Governor of Meghalaya.

Brig (Retd) B D Mishra will be the governor of Arunachal Pradesh, the release said.
சிவகாசியில் பட்டாசு விற்பனை ஜோர் ஆயுத பூஜை விடு முறையையொட்டி குவிந்தனர்
பதிவு செய்த நாள்30செப்
2017
23:03

சிவகாசி, ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சிவகாசிக்கு தீபாவளிக்கு பட்டாசு வாங்க வெளி மாவட்ட மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தீபாவளிக்கு தேவையான பட்டாசு தயாரிப்பு சிவகாசியில் ஆண்டு முழுவதும் நடக்கிறது. இங்கு உள்ள 800 ஆலைகளில் உற்பத்தியாகும் பட்டாசுகளை விற்பனை செய்ய சாத்துார், சிவகாசி,
விருதுநகர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரம் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 

ஆண்டுதோறும் டிரேடிங் ஏஜென்டுகள் ஏப்ரலில் வெளி மாநிலங்களுக்கு சென்று ஆர்டர்கள் பெறுகின்றனர். ஆகஸ்ட், செப்டம்பர் வரை வெளி மாநிலங்களுக்கு சரக்குகள் அனுப்புகின்றனர். பின்னர் தென் மாநிலங்களுக்கு பட்டாசு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இந்தாண்டு அனைத்தும் நேர் எதிர்மாறாக நடந்தது. ஜனவரி முதல் ஜூலை வரை நடக்கும் வெளி மாநில ஆப்-சீசன் விற்பனை சுத்தமாக இல்லை. வியாபாரிகள் ஆர்டர் கொடுப்பதை தவிர்த்து வந்தனர்.

தற்போது தீபாவளி நெருங்குவதால் வெளி மாநில வியாபாரிகள் நகருக்குள் பட்டாசு வாங்க வந்த வண்ணம் உள்ளனர். பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று ஆர்டர் கொடுத்து வருகின்றனர். 

ஆனால் உற்பத்தி இறுதிக் காலம் என்பதால், ஆர்டர் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பட்டாசு தேவையும் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க ஆலைகளில் உற்பத்தி தீவிரமாக நடக்கிறது.
பட்டாசு விற்பனை பல்வேறு கோணங்களில் நடப்பதால் கடந்த வாரம் வரை பட்டாசு கடைகளில் கூட்டமே இல்லை. இந்நிலை ஆயுத பூஜை தொடர் விடுமுறை நாட்களில் மாறியுள்ளது. சிறு வியாபாரிகள், சொந்த பயன்பாட்டிற்காக பட்டாசு வாங்க வருவோர் சிவகாசியில் குவிந்து
வருகின்றனர்.

மேலும், பட்டாசு கடைகளில் சில்லரை விற்பனை சூடுபிடித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்தோடும், நண்பர்களோடும் தினமும் வருகின்றனர். 

காலை 9:00 மணிக்கு துவங்கும் வியாபாரம் நள்ளிரவு 12 :00 மணி வரையிலும் நடக்கிறது. இதனால் சில்லரை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.

சரக்குகளை சேர்ப்பதில் தாமதம்

பட்டாசு கடைகளுக்கு தடை, புதிய விதிமுறை போன்ற காரணங்களால் வெளி மாநில வியாபாரம் மந்தமாக இருந்தது. 

இதனால் கடைகளில் சரக்கு தேங்கியது. ஆயுத பூஜை விடுமுறை நாட்களில்தான் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. வெளி மாவட்டங்களில் லைசென்ஸ் வழங்குவதில் தாமதமாகிறது. இதனால் வியாபாரிகள் கொள்முதல் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. சரக்குகள் உரிய நேரத்திற்குள் கொண்டு சேர்க்கமுடியாத நிலை உள்ளது.
பட்டாசு உயர் ரக வெடி பொருள் அல்ல. குறைந்தளவு
அபாயம் உள்ள வெடி பொருள். முறையாக கையாண்டால் விபத்து ஏற்படாது. இதை அறிந்து அரசுத்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
கணேசன்,

லட்சுமி ஏஜென்சீஸ் உரிமையாளர், சிவகாசி.

50 சதவீதம் வரை சலுகை

பட்டாசு வாங்க ஆண்டுதோறும் சிவகாசி வருகிறேன். இந்தாண்டு குடும்பத்துடன் வந்திருக்கிறேன். நேரடியாக வருவதால் புது,புது ரகங்களை தேர்வு செய்கிறேன். வெளி மாவட்டங்களை விட இங்கு
50 சதவீதம் வரை சலுகை கிடைக்கிறது. 

புது துணி, சுவீட் என விரும்பியதை வாங்குவதுபோல் குடும்பத்தையே மகிழ்விக்கும் புதிய ரக பட்டாசு வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ரூ.15 ஆயிரத்திற்கு பட்டாசுகள் வாங்கி உள்ளேன்.

பரமசிவன்,
மதுரை.
திருச்சி - பாங்காங் விமானம் துவக்கம்

பதிவு செய்த நாள்30செப்
2017
20:00

திருச்சி, திருச்சியில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு, நேரடி முதல் விமானம், 181 பயணியருடன் நேற்று புறப்பட்டுச் சென்றது.
மலேஷியாவின் ஏர் ஏசியா விமான நிறுவனம், தாய்லாந்து நாட்டு விமான நிறுவனத்துடன் இணைந்து, தாய் - ஏர் ஏசியா என்ற புதிய சர்வதேச விமான போக்குவரத்தை துவங்கியுள்ளது.

நேற்று அதிகாலை, 12.05 மணிக்கு, தாய் - ஏர் ஏசியா விமானம், 58 பயணியருடன், திருச்சி வந்தது.திருச்சி விமான நிலையத்தில், தண்ணீர் பீய்ச்சியடித்து, 'வாட்டர் சல்யூட்' அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு புறப்பட்ட விமானத்தில், 181 பயணியர் பாங்காக் புறப்பட்டுச் சென்றனர். இந்த விமானம் தினமும் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
முடி வெட்ட கட்டணம் ரூ.35: பாளை சிறையில் அசத்தல்
பதிவு செய்த நாள்30செப்
2017
19:27



திருநெல்வேலி, பாளை மத்திய சிறையில் திறக்கப்பட்ட முடி திருத்தும் நிலையத்தில், பெரியவர்களுக்கு முடி வெட்ட, 35 ரூபாயும், சிறுவர்களுக்கு, 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன.தமிழகத்தில், ஒன்பது மத்திய சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில், பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணை கைதிகள் என, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். 

மத்திய சிறைகளிலும், 'சிறை அங்காடி' என்ற பெயரில், கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.இதன்படி, சிறை வளாகத்தில், காய்கறி தோட்டங்கள், ஹாலோ பிளாக் செங்கல் தயாரிப்பு, தையல் கூடம், முடி திருத்தும் நிலையம், சலவை நிலையம், உணவு விடுதிகள் அமைக்கப்பட்டன. இவற்றை, நன்னடத்தை கைதிகள் பராமரித்து வந்தனர்.

பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிறை அங்காடிகள், சில மாதங்களுக்கு முன், நிர்வாக குளறு படிகளால் மூடப்பட்டன. சிறை துறை, ஏ.டி.ஜி.பி.,யாக சைலேந்திர பாபு பொறுப்பேற்றதும், கடந்த மாதம், மத்திய சிறைகளில், மீண்டும், சிறை அங்காடிகள் திறக்கப்பட்டன.

இதன்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள முடி திருத்தும் நிலையத்தில், முடி வெட்ட, பெரியவர்களுக்கு, 35, ஷேவிங், 20, டை அடிக்க 50, கட்டிங், ஷேவிங், டை அடிக்க சேர்த்து, 100 ரூபாய் மட்டுமே
வசூலிக்கப்படுகிறது. வெளியில் உள்ள முடி திருத்தும் நிலையங்களில், 200 முதல், 250 ரூபாய் வரை கட்டணம் வாங்குகின்றனர். இங்கு, சிறுவர்களுக்கு கட்டிங் செய்ய, 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.இது குறித்து, பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:பாளை மத்திய சிறையில், 30க்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகள் உள்ளனர். இவர்கள் இங்குள்ள காய்கறி தோட்ட பராமரிப்பு, கறவை மாடுகள் பராமரிப்பு, முடி திருத்தும் நிலையம், சலவை நிலையம், தையல் தொழில் பயிற்சி நிலையம், ஹாலோ பிளாக் செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் பாலை தயிராக்கி, 'லஸ்ஸி' விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிறை வளாகத்தில் உள்ள உணவகத்தில் காலையில், இட்லி, பூரி, பொங்கல் கிடைக்கும். மதியம் சிக்கன் பிரியாணி, 80 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், பொதுமக்கள் மிகுந்த பயன் பெறுகின்றனர். 

இங்கு கைதிகளால் தைக்கப்படும் காட்டன் ரெடிமேட் சட்டைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.



தேசிய செய்திகள்

குவைத்தில் 15 இந்தியர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு சுஷ்மா சுவராஜ் நன்றி



குவைத்தில் 15 இந்தியர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நன்றி தெரிவித்து உள்ளார்.

செப்டம்பர் 30, 2017, 06:11 PM
குவைத்,

குவைத் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக 15 இந்தியர்களுக்கு சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குவைத் நாட்டின் அமீர் ஷேக் சபா அல் அகமது அல் ஜாபர் அல் சபா, 15 இந்தியர்களின் மரண தண்டனையை ரத்து செய்து, அதனை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அங்குள்ள 119 இந்திய கைதிகளின் தண்டனை காலத்தையும் அவர் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்காக இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குவைத் அமீருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குவைத் சிறையில் இருந்து விடுதலையாகும் இந்திய கைதிகளுக்கு தாய் நாடு திரும்ப தேவையான வசதிகளை செய்து தருமாறு சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

HH the Emir of Kuwait has been pleased to commute the sentence of 15 Indian nationals from death to life imprisonment. /1— Sushma Swaraj (@SushmaSwaraj) September 30, 2017


HH the Emir has further directed the reduction in sentence of 119 Indian nationals. /2— Sushma Swaraj (@SushmaSwaraj) September 30, 2017


We are grateful to the Emir of Kuwait for this kind gesture./3— Sushma Swaraj (@SushmaSwaraj) September 30, 2017

NEWS TODAY 22.04.2024