Monday, October 1, 2018

School study tour: Collector spells out dos and don’ts 

Special Correspondent 

 
Tiruchi, October 01, 2018 00:00 IST

Guidelines issued by School Education Department

Collector K. Rajamani has directed all schools functioning under the School Education Department to get permission from District Education Officers or Chief Education Officers before taking children on study tours.

Issuing guidelines for study tours, Mr. Rajamani said headmasters or principals of institutions who failed to adhere to the rules would be liable to disciplinary action. The consent of parents should be taken, with the tour plan given in writing and their signatures obtained.

Unsafe tours, which led to untoward incidents, reflected badly not only on the school but also on the entire department, he said in a press release here.

Taking students to water courses was a strict ‘no’ and the duration of the tours should not exceed four days, he said.

Schools must plan trips well ahead, at least two months in advance. Permission should be sought from department officials at least a month in advance. The schedule should be drawn up through consensus by convening a parent-teachers meeting. The tour should be planned taking into account the weather predictions.

The group should have a student-teacher ratio of 10:1. Students being taken on tour should be sensitised to safety and precautionary measures.

While travelling by bus, night travel should be avoided, he added.
Eight of family from Chennai die in accident near Tiruchi 

Special Correspondent 

 
TIRUCHI, October 01, 2018 00:00 IST



The mangled remains of the SUV which rammed a stationary lorry near the Samayapuram toll plaza on Sunday.M. Srinath
Driver of SUV dozes off; vehicle rams stationary lorry carrying iron rods

Eight persons of a family from Chennai, including an 11-year-old boy and a 12-year-old girl, died after the sport utility vehicle (SUV) they were travelling in rammed a stationary goods carrier from behind near the Samayapuram toll plaza on the Chennai - Tiruchi national highway in the early hours of Sunday.

The fatal accident occurred when the SUV packed with 13 persons heading to Pettavaithalai near Tiruchi crashed against the stationary heavy goods carrier, bearing an Andhra Pradesh registration number, parked on the left side of the highway, at around 4.30 a.m.

The impact of the collision was such that eight persons on board the SUV died on the spot, while five others, including two girls aged three years and two years, sustained injuries. The police suspect that the SUV driver Balamurugan had dozed off for a moment and lost control. All the victims were from Pallikaranai in Chennai.

The police gave the names of the deceased as M. Subramani, 65; his wife S. Jayalakshmi, 58; sons S. Balamurugan, 42; and S. Vijay alias Vijayaraghavan, 36; son-in-law Manjunathan, 40; Gomathi, 30, wife of Vijayaraghavan; M. Kandasamy, 11; and Nivedha, 12, daughter of Manjunathan.

The injured — Bhackiyalakshmi alias Preetha, 35, wife of Manjunathan; M. Ramya, 3; M. Kavitha, 38; V. Kandhalakshmi, 12; and V. Jayashree, 2 — are undergoing treatment at the Mahatma Gandhi Government Hospital here as in-patients.

In ‘no parking’ area

The family was proceeding to Pettavaithalai for a short stay in a new house which was purchased in that place, said the police. The stationary truck was transporting iron rods from Andhra Pradesh for a private company at Nagamangalam near Tiruchi. The driver of the goods carrier had alighted after parking the vehicle on the left side of the highway near the toll plaza to have a cup of tea in a nearby stall when the accident happened.

Teams of police personnel and fire fighters rushed to the spot to rescue the injured and retrieve the bodies from the badly mangled SUV in an operation that took over two hours as the front portion of the car had gone under the goods carrier.

The police said the truck driver had stationed the vehicle on a ‘no-parking’ area. The truck driver S. Venkatesh, 30, of Srikalahasthi in Andhra Pradesh, who escaped from the spot, was later held by the police.

The Samayapuram police have registered a case under IPC sections including 304-A (causing death by negligence) and 337(causing hurt by act endangering life or personal safety of others). The truck driver has been named as the accused. The investigation would be carried out by the Deputy Superintendent of Police, Lalgudi, since the fatal accident had led to multiple casualties, said Ziaul Haque, Superintendent of Police, Tiruchi, after inspecting the spot.

The completely damaged SUV was later shifted from the spot using a crane. The place where the accident took place was cordoned off by the police. It may be recalled that three years ago, nine passengers on board a State express transport corporation bus died in a collision with a trailer lorry carrying protruding iron sheets on the highway near Samayapuram.

விஐபிகள் பயணம்: ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி எவ்வளவு தெரியுமா?


By PTI | Pblished on : 30th September 2018 10:29 PM | 



புதுதில்லி: குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்ட விஐபிகளின் விமான பயணத்துக்காக ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146.86 கோடி நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

முன்னாள் ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு ஏர்இந்தியா பதிலளித்துள்ளது.

அதில், குடியரசுத்தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விஐபிகளுக்கு பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள். அந்த வகையில் பயணத்துக்கு ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146.86 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டும் என்று தெரியவந்துள்ளது.



பாதுகாப்பு அமைச்சகம் ரூ.211.17 கோடி, மத்திய அமைச்சரவை செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகமும் ரூ.543.18 கோடி, வெளியுறவுத்துறை அமைச்சகம் ரூ.392.33 கோடி பாக்கி வைத்துள்ளதாக பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பல ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி நஷ்டத்தில் இயங்கு வரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாதம் வரை ரூ.325 கோடி கட்டண பாக்கி வைத்துள்ள மத்திய அரசு, தற்போது ரூ.1,146.86 கோடி பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமை ரூ.50,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டு சிஏஜி அறிக்கையிலும் மத்திய அரசு விமான பயண கட்டண பாக்கி வைத்துள்ள பிரச்னை குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.

விஐபிகளின் விமானத்திற்கான கட்டணத்தை பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரதமரின் அலுவலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகின்றன.
அரசியலில் குதித்தார் விஜயகாந்தின் மூத்த மகன்

Added : செப் 30, 2018 23:46 | 



தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்தின் மூத்த மகன், விஜய் பிரபாகரன் அரசியலில் குதித்துள்ளார்.தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்திற்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் விஜய் பிரபாகரன், சென்னை பேட்மிட்டன் அணியின் உரிமையாளராக உள்ளார். சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும், நாய்களையும் வளர்த்து வருகிறார். இரண்டாவது மகன், சண்முக பாண்டியன், சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.விஜயகாந்திற்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், அவரது மூத்த மகன், விஜய் பிரபாகரன் கட்சியை வழிநடத்த வேண்டும் என, தே.மு.தி.க.,வினர் வலியுறுத்தினர். இதை ஏற்று, தன் மகனை, அரசியலில் விஜயகாந்த் ஈடுபடுத்தியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், அனகாபுத்துாரில், வரும், 6ல், தே.மு.தி.க., பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கி, தன் அரசியல் பயணத்தை, விஜய் பிரபாகரன் துவக்கவுள்ளார்.

103 வயது முதியவருக்கு பூர்ணாபிஷேக விழா

Added : அக் 01, 2018 00:00 |



புதுக்கோட்டை அருகே, 103 வயது முதியவருக்கு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சார்பாக, பூர்ணாபிஷேக விழா கொண்டாடப்பட்டது.புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே, மட்டங்கால் பகுதியைச் சேர்ந்தவர், சண்முக வேளாளர், 103. இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன் வயது முதிர்வு காரணமாக காலமானார்.சண்முக வேளாளரின், 103வது பிறந்த நாளை ஒட்டி பூர்ணாபிஷேக விழா நடந்தது. இதில் அவரது நான்கு மகன்கள், மூன்று மகள்கள் பங்கேற்றனர். மூத்த மகளுக்கு வயது 75, இளைய மகளுக்கு வயது 58. மகன்கள் மற்றும் மகள்கள் வழி பேரன்கள், பேத்திகள், 23 பேர் மற்றும் கொள்ளுப்பேரன், பேத்திகள், 17 பேர் உள்ளனர்.பூர்ணாபிஷேக விழாவில், குடும்பத்தினர்கள், உறவினர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவுக்கு வந்த அனைவரும் சண்முக வேளாளரிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
ஒரு சிலிண்டருக்கு மண்ணெண்ணெய் நிறுத்தம்

Added : செப் 30, 2018 23:38

சென்னை : ஒரு சிலிண்டர் கார்டுதாரர்களுக்கு, இம்மாதம் முதல் மண்ணெண்ணெய் நிறுத்தப்பட உள்ளது.ரேஷன் கடைகளில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், 13.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீடுகளில் இரண்டு சமையல் காஸ் சிலிண்டர் உள்ளோருக்கு, மண்ணெண்ணெய் வழங்குவதில்லை. ஒரு சிலிண்டர் உள்ளோருக்கு, 2 லி., மண்ணெண்ணெய், சிலிண்டர் இல்லாதோருக்கு, மாநகராட்சியில் 6 லி., நகராட்சியில் 4 லி., கிராமங்களில் 2 லி., மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.மத்திய அரசு அனுமதிப்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தமிழகத்திற்குரிய ஒதுக்கீட்டை வழங்குகின்றன. 10 ஆண்டுக்கு முன், 64 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, படிப்படியாக குறைந்து, தற்போது, 39 சதவீதமாக உள்ளது.இம்மாதம் முதல், ஒரு சிலிண்டர் கார்டுதாரருக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை வழங்கல் துறை ரத்து செய்துள்ளது.ரேஷன்கடை பணியாளர்கள் கூறுகையில், 'ஏற்கனவே அறிவித்தப்படி ஒதுக்கீடு இல்லாததால், பெயரளவில்தான் மண்ணெண்ணெய் வழங்குகிறோம். 'தற்போது முன்னறிவிப்பின்றி ஒரு சிலிண்டர் உள்ளோருக்கும் மண்ணெண்ணெயை நிறுத்திவிட்டனர். இதனால் கார்டுதாரர்கள் எங்களிடம் பிரச்னை செய்வர்' என்றனர்.


ஸ்தம்பிப்பு!எம்.ஜி.ஆர்., விசுவாசிகளால் குலுங்கியது சென்னை


எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவிற்கு வந்த, அவரது விசுவாசிகளால், சென்னைமாநகரம் நேற்று குலுங்கியது. ஏராளமானோர் குவிந்ததால், அ.தி.மு.க.,வினர் உற்சாகம் அடைந்தனர். அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் இருந்து அணிவகுத்து வந்த வாகனங்களால், முக்கிய சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்தது. விழாவில்,
ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
தமிழக அரசு சார்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவும், தமிழ்நாடு, 50ம் ஆண்டு பொன்விழாவும், சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது.

இதற்காக, பிரமாண்டமான பந்தலும், 35 ஆயிரம் பேர் அமரும் வகையில், இருக்கைகளும் போடப்பட்டிருந்தன. அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அமரும் வகையில், மேடையும் பெரிதாக அமைக்கப்பட்டு இருந்தது.

விழாவிற்கு, சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். விழா துவங்கியதும், மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த,எம்.ஜி.ஆர்., - ஜெ., படங்களுக்கு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

திட்டப்பணிகள்

அதன்பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, எம்.ஜி.ஆர்., படத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் நிறைவேற்றப்பட்ட, 18.75 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார்.எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நினைவு தபால் தலையை, முதல்வர் பழனிசாமி வெளியிட, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா சிறப்பு மலர், எம்.ஜி.ஆர்., சட்டசபை உரை தொகுப்பு, எம்.ஜி.ஆர்., எழுச்சி மிகு உரைகள், எம்.ஜி.ஆர்., பொன்மொழிகள் தொகுப்பு, எம்.ஜி.ஆர்., மாண்பை எடுத்துரைக்கும், புகைப்படத் தொகுப்பு ஆகியவற்றையும், முதல்வர் வெளியிட்டார்.விழாவில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்பங்கேற்றனர்.

இந்தவிழாவில் பங்கேற்பதற்காக, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அ.தி.மு.க., தொண்டர்கள்







மற்றும் பொதுமக்கள், பேருந்து உட்பட, பல்வேறு வாகனங்களில் சென்னைக்கு வந்தனர். வெளியூர்களில் இருந்து, நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட வாகனங்கள், நேற்று காலை, சென்னையை நெருங்க துவங்கின.

இதனால், அதிகாலை முதல், சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில், வாகன நெரிசல் அதிகரித்தது. ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு - பரனுார், தொழுப்பேடு, வானகரம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள், பல கி.மீ., துாரத்திற்கு அணிவகுத்து நின்றன.
அ.தி.மு.க., கொடி கட்டிய வாகனங்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படவில்லை.சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக, கோயம்பேட்டில் உள்ள அரசு மற்றும் ஆம்னி பேருந்து நிலையங்களுக்கு, வெளியூர் பேருந்துகள் தாமதமாக வந்து சேர்ந்தன.

கார்கள் உள்ளிட்ட வாகனங்களில், சென்னைக்கு வந்தவர்களும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறினர். சென்னைக்கு வரும் வாகனங்களை நிறுத்த, போலீசார்வெவ்வேறு இடங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.எனினும், ஏராளமான வாகனங்கள் குவிந்ததால், மெரினா கடற்கரை சாலை, அண்ணா சாலை என, அனைத்து இடங்களிலும், வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன.விழாவில், பங்கேற்க வந்தவர்கள், மெரினா கடற்கரையில் குவிந்தனர்.மெரினா சர்வீஸ் சாலை, வெலிங்டன் கல்லுாரி என,

அனைத்து இடங்களிலும், வாகனங்கள் நிறுத்தப் பட்டன. மேற்கொண்டு இடமில்லாததால், குறுகிய தெருக்களில் எல்லாம், வாகனங்களை நிறுத்தினர். ஏராளமானோர் சென்னை வருவர் என தெரிந்திருந் தும், மாநகராட்சி நிர்வாகம், போதிய அடிப்படை வசதிகளை செய்யவில்லை.

பேனர்கள்

விழாவையொட்டி, அண்ணா சாலை முழுவதும், நடைபாதைகளை ஆக்கிரமித்து, ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.விழாவிற்கு வருவோர் செல்வதற்காக, பேனர்கள் அருகே, சாலையோரம் தடுப்புகளை அமைத்து, போலீசார் தனி வழிஏற்படுத்தியிருந்தனர்.

விழாவில், தமிழகம் முழுவதுமிருந்து, எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் ஏராளமானோர் குவிந்தனர். இது, கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா என்பதால், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்பது உட்பட, ஏராளமான மக்கள் நலத்திட்டங்களையும், முதல்வர்பழனிசாமி அறிவித்தார்.

'டாஸ்மாக்' கடைகளில்கரை வேட்டிகளால் நெரிசல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க, நேற்று சென்னை வந்த, எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் மற்றும், அ.தி.மு.க., தொண்டர்கள், மெரினா கடற்கரையில் உள்ள, தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட்டனர். மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். ஏராளமானோர், 'டாஸ்மாக்' கடைகளையும் முற்றுகையிட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளில், பொதுவாகவே, ஞாயிற்றுக்கிழமைகளில், 'குடி'மகன்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று விழாவிற்கு வந்தவர்களும், கடைகளை முற்றுகை யிட்டதால், பெரும்பாலான கடைகளில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர்,அ.தி.மு.க., கொடிகளை கைகளில் ஏந்தியபடியே, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கினர்.

அனைத்து கடைகளிலும், சரக்கு விற்பனை அமோகமாக நடந்தது. இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் மட்டுமின்றி, டாஸ்மாக் ஊழியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல, ஓட்டல்கள், சாலையோர கடைகளிலும், நேற்று விற்பனை அமோகமாக இருந்தது.

* விழாவில், திரையுலகில், எம்.ஜி.ஆருடன் பணிபுரிந்த, நடிகையர், லதா, வெண்ணிற ஆடை நிர்மலா, காஞ்சனா, குமாரி சச்சு உட்பட, பலர்கவுரவிக்கப்பட்டனர். நடிகர் பாக்யராஜ்,பின்னணி பாடகியர், சுசிலா, எல்.ஆர்.ஈஸ்வரி,வசனகர்த்தா ஆரூர் தாஸ், பாடலாசிரியர் கள்கவிஞர் முத்துலிங்கம், செங்குட்டுவன், சண்டை பயிற்சியாளர் ராமகிருஷ்ணன், ஒப்பனை கலைஞர் ராமமூர்த்தி ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பொன் விழாவை யொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

* தென் மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள், விமான நிலையம் அருகே, சாலையோரம் வாகனங்களை நிறுத்தினர். வாகனங்கள் மீதேறி, விமான நிலைய ஓடுதளத்தில், விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை, ஆவலோடு பார்த்தனர்.

* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களை சேர்ந்தவர்கள், ஏராளமானோர், 'மெட்ரோ' ரயிலில் பயணித்தனர். பிற மாவட்டங்களில் இருந்து வந்தோரும், மெட்ரோ ரயிலில், 'ஜாலி'யாக பயணம் செய்து ரசித்தனர். இதனால், வழக்கத்தை விட, மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- நமது நிருபர் -

NEWS TODAY 2.5.2024