Tuesday, September 29, 2020
Monday, September 28, 2020
மெல்போர்னில் குறையும் கொரோனா தொற்று: ஊரடங்கில் தளர்வு அளிக்க ஆஸி., முடிவு
'மக்கள் ஒத்துழைப்பு தராவிட்டால் கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு'
எஸ்.பி.பி மரணமும் மருத்துவக் கட்டண சர்ச்சையும்!' உண்மை என்ன?
எம்.புண்ணியமூர்த்திஆ.சாந்தி
கணேஷ்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ( Photo: Vikatan )
எஸ்.பி.பி குறித்தும், அவரது
இறுதி நிமிடங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவருகின்றன. அது
தொடர்பான விளக்கம்...
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின்
மரணம் இந்திய இசை ரசிகர்களைத் தீரா துயர்கொள்ளச் செய்திருக்கிறது. பலரும்
கண்ணீருடன் சமூக வலைதளங்களில் எஸ்.பி.பி-யின் பாடல்களைப் பகிர்ந்து அவருக்கு
அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்க, ஒருசிலர் எஸ்.பி.பி-யின் மருத்துவக் கட்டணம் குறித்து சர்ச்சையான
விஷயங்களைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆகஸ்ட்
மாதம் 5-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என்ற
நம்பிக்கையில் 50 நாள்களுக்கு மேலாக எல்லோரும் காத்துக்கொண்டிருந்தனர் ரசிகர்கள்.
இதற்கிடையில் அவருக்கு கொரோனா குணமாகிவிட்டதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவித்தது.
மெல்ல மெல்ல நலமடைந்து வருகிறார் என்று அவரின் மகன் சரணும் நமபிக்கை
தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், செப்டம்பர் 24-ம் தேதி
மாலை எஸ்.பி.பி-யின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை
நிர்வாகம். அதைத்தொடர்ந்து எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக
மருத்துவமனைக்கு நேரில் விரைந்த கமல்ஹாசன் திரும்பிச் செல்லும்போது, `அவர்
நலமாக இருக்கிறார் எனச் சொல்ல முடியாது’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அந்தக் கணமே அனைவரின் இதயங்களும் கனத்துப்
போயின. அடுத்த சில மணி நேரத்தில், எஸ்.பி.பி இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. ஆனால்,
அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. அதைத் தொடர்ந்து
இறந்துவிட்டார் என்பது பொய்யான தகவல் எனப் பதிவுகள் பதிவிடப்பட்டன. என்ன நடந்தது
எனப் புரியாமல் ரசிகர்கள் திண்டாடினர். இந்நிலையில், அடுத்த
நாள் அதாவது செப்டம்பர் 25-ம் தேதி (நேற்று) மதியம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்துவிட்டார்
என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை மையப்படுத்தித்தான் சர்ச்சைப்
பதிவுகள் முளைத்துள்ளன.
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
சிகிச்சைக்கான முழுக் கட்டணத்தையும்
செலுத்தாததால் எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் எஸ்.பி.பி இறந்த செய்தியை வெளியிட
மறுத்தது என்றும் எஸ்.பி.பி-யின் மகள் துணை ஜனாதிபதியை அணுகிய பிறகே, மருத்துவமனை
நிர்வாகம் எஸ்.பி.பி-யின் உடலை விடுவித்தது என்றும் சமூகவலைதளங்களில் பதிவுகள்
பரவியுள்ளன. ஒரு மகத்தான கலைஞனை, மாண்புமிகு மனிதரை இழந்து அவரின் குடும்பத்தினரும் ரசிகர்களும்
துயரத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படி
வெளியான செய்தி, மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இசையுலகின் ஜாம்பவானுக்கா
இப்படியொரு நிலை என்றும் கேள்வியை எழுப்பியது. சமூகவலைதளங்களில் உலவும் இந்தச்
செய்தி எந்தளவுக்கு உண்மையானது?
எஸ்.பி.பி.சரண் தரப்பில் பேச முயன்றோம்...
அவரின் உதவியாளர் பிரகாஷ் நம்மிடம், ``மருத்துவக் கட்டணம் தொடர்பாக வெளிவரும்
தகவல்கள் அனைத்தும் பொய்” என்பதுடன் முடித்துக்கொண்டார்.
திருவடிசூலத்தில் தொடங்கியது சக்தி விகடன் நடத்தும் தன்வந்த்ரி மகாஹோமம்!
ஹலோ சீனியர்ஸ்... கொரோனா காலச் சூழலை எதிர்கொள்ள மூத்தகுடிமக்களுக்கான ஓர் இணைய வழிகாட்டல்!
ஹலோ சீனியர்ஸ்... கொரோனா காலச் சூழலை எதிர்கொள்ள மூத்தகுடிமக்களுக்கான ஓர் இணைய வழிகாட்டல்!
ஹலோ சீனியர்ஸ்
வாழ்வின் பல சவால்களையும் சமாளித்து வெற்றிபெற்ற அவர்களுக்கு இந்த
கொரோனா காலச் சூழலைக் கடக்க அத்தகைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முதுமை என்பது வரம். இதைச் சரியாகப் புரிந்துகொண்டவர்கள் தங்களையும்
பேணித் தங்களின் சுற்றங்களுக்கும் நிழல்தரும் மரமாக வாழ்கிறார்கள். ஆனால் இந்த
மனநிலை அவ்வளவு எளிதில் அனைவருக்கும் வாய்த்துவிடுவதில்லை. இதுவே குடும்பச்சூழலில்
பல சிக்கல்களுக்கும் காரணமாகிவிடுகிறது.
அதற்குச் சுற்றுச்சூழலும் முக்கிய காரணம். கொரோனா காலம் அனைவருக்கும்
ஒரு சவால் என்றால் முதியவர்களுக்கோ அது பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.
அதிகாலை வாக்கிங் முதல் ஆலய தரிசனம்வரை அவர்களின் அனைத்தின் இயல்பும்
பாதிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள்
ஆனால், வாழ்வில் பேரனுபவம் கொண்ட சீனியர்களுக்கு மிக எளிமையாக இந்தச் சூழலை
விளக்கிவிட்டால் அவர்களின் பாதுகாப்பை அவர்களே சிறப்பாகக் கையாண்டு கொள்வார்கள்.
குறிப்பாக அவர்களின் உடல் இயக்கம் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு அளித்து
அவர்களின் ஆரோக்கியம் பற்றிய கவலைகளைப் போக்குவது மிகவும் அவசியம். வாழ்வின் பல
சவால்களையும் சமாளித்து வெற்றிபெற்ற அவர்களுக்கு இந்த கொரோனா காலச் சூழலைக் கடக்க
அத்தகைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வரும் அக்டோபர் 1 ம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி ஆனந்த
விகடன் மூத்த குடிமக்களின் பெருமைகளைப் போற்றவும் அவர்கள் பாதுகாப்பை அவர்களே
உறுதி செய்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும், ‘ஹலோ
சீனியர்ஸ்...’ என்ற ஓர் இணைய நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
இதில் பட்டிமன்றம் ராஜா, காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன்
ஐ.பி.எஸ், டாக்டர் பி. ஹரிசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற
இருக்கிறார்கள். கொரோனா காலச் சூழலில் தங்களின் உடல் ஆரோக்கியம், மன வளம்
மற்றும் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்துகொள்ளும் பல்வேறு ஆலோசனைகளை வழங்க
இருக்கிறார்கள்.
ஹலோ சீனியர்ஸ்
கட்டணமில்லா இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். வாசகர்களே,
உங்கள் வீட்டில் அறுபதுவயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு
இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கலந்துகொள்ள ஊக்குவியுங்கள்.
அவர்கள் சார்பில் நீங்களே முன்பதிவும் செய்யலாம்.
வாருங்கள் அக்டோபர் 1-ம் தேதியின் மாலையை அழகாக்குவோம்.
நாள்: அக்டோபர் - 1
நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணிவரை
சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்கப்படுமா?... தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு
Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this
Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By Shyamu Maurya April 30, 2024 Cash Limi...
-
ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்றும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும், காலம் காலமாக தமிழ்நாட்டில் கூறப்படுகிற...
-
கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி vikatan news ராகினி ஆத்ம வெண்டி மு. படம்: ஸ்ரீநிவாசலு 'அ.த...
-
கொலுசு அணிந்த சரஸ்வதி * நாகப்பட்டினம் மாவட்டம் கடலங்குடியில் உள்ள சிவன் கோவிலில் வளையல், கொலுசு அணிந்தபடி சரஸ்வதிதேவி காட்சியளிக்கிறாள். ச...