Showing posts with label Rain 2017. Show all posts
Showing posts with label Rain 2017. Show all posts

Tuesday, November 14, 2017

நாளை முதல் மழை படிப்படியாக குறையும்


By  சென்னை,  |   Published on : 14th November 2017 02:55 AM  |
todayrain

தமிழகத்தில் புதன்கிழமை ( நவ. 15) முதல் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியது:
 கடந்த 10-ஆம் தேதி முதல் 4 நாள்களாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று வலுப்பெற்று, திங்கள்கிழமை தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழைப் பெய்துள்ளது. இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்து வரும் இரு தினங்களில் வடதிசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில முறை லேசான மழையும், சில நேரங்களில் சற்று பலத்த மழையும் இருக்கும். புதன்கிழமை முதல் மழை படிப்படியாக குறையும் என்றார் பாலச்சந்திரன்.
 எண்ணூரில் 110 மி.மீ. மழை: திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் 110 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
 பிற இடங்களில் மழை அளவு (மி.மீ.ல்): திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சென்னை மாதவரம் தலா 70, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், அண்ணா பல்கலைக் கழகம், அரண்மனைப்புதூர், தாமரைப்பாக்கம் தலா 40, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்குன்றம், தரமணி தலா 30, திருவள்ளூர் 20.

சென்னைக்கு மித மழையா? கனமழையா?- தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

Published : 13 Nov 2017 20:31 IST

சென்னை

 மேகக்கூட்டங்கள் போக்கு காட்டுவதால் காற்றின் திசையை வைத்து தான் சென்னைக்கு மித மழையா? கனமழையா? என்பதை அறிய முடியும். இது குறித்து தற்போதைய நிலவரத்தை தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது முக நூல் பதிவு:
“வடகிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பு
கனமழையா? அல்லது நின்று ‘விளையாடும்’ மழையா?
சென்னை நகர்புறப்பகுதி முழுவதையும் மேகக்கூட்டங்கள் பரவி நிதானமான மழையை பெய்ய இருக்கிறது. மிகவும் அடர்த்தியான, பெரிய மேகக்கூட்டம் சென்னைக்கு அருகே வருகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்பது அவசியம். ஒருவேளை வராவிட்டால், இந்த மிதமான மழை மட்டும் நமக்கு கிடைக்கும்.
சென்னைக்கு அருகே மிகவும் அடர்த்தியான, தீவிரமான மேகக்கூட்டங்கள் வந்துவிட்டன. காற்று இல்லாத, மிதமாகப் பெய்யும் மழை பெய்யும். இதற்கிடையே மழைக்கு சாதகமான வெப்பநிலை சென்னைக்கு அருகே உருவானால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிக்குள் சுழன்று கொண்டு இருந்த மேகக்கூட்டங்கள் சென்னைக்கு மேலே பரவி கனமழையை கொடுக்கும்.
ஒருவேளை அந்த மேகக்கூட்டம் சென்னையைவிட்டு விலகினால், நமக்கு மிதமான, மிதமான மழை மட்டுமே கிடைக்கும். என்னுடைய அடுத்த பதிவு என்பது மழை எப்படி பெய்யும்? என்பதைக் குறிப்பிட்டு இருக்கும்.
அதாவது, நமக்கு மிதமான மழை கிடைக்குமா?அல்லது, கனமழை இருக்குமா? என்பதை அடுத்த பதிவில் உறுதியாகக் கூறிவிடுவேன்”.
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சற்றுமுன் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் பெரும் அவதி



சென்னையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சாலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன.

நவம்பர் 14, 2017, 03:30 AM

சென்னை,


சென்னையில் மழை என்றாலே அடுத்தடுத்து வரக்கூடிய 2 முக்கிய பிரச்சினைகளில் ஒன்று பள்ளி விடுமுறை. மற்றொன்று போக்குவரத்து நெரிசல். சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்யலாம் என்பதால் சென்னையில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

அதேபோல் நேற்றும் வானில் கரும் மேகங்கள் சூழ்ந்து காலை முதல் பரவலாக மழை பெய்ததால் மாநகர் முழுவதுமே இதமான சூழ்நிலை நிலவியது. மாலை நேரத்தில் குளிரும் அதிகரித்தது.

மேலும் குளிர் நிலவியதால் பலருக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டு பெரும்பாலானோர் அலுவலகத்தில் இருந்து மாலை 5 மணிக்கே வீடு திரும்பத் தொடங்கினர். பொதுவாக வாரத்தின் முதல் வேலைநாள் என்பதால் திங்கட்கிழமை அன்று சென்னை மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதுமட்டுமல்லாமல் நேற்று மாலையிலும் மழை கொட்டியது. இதனால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

அண்ணா சாலை முதல் ஆலந்தூர் வரையிலான சாலைகள், எல்டாம்ஸ் சாலை, பாரதிதாசன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கிரீம்ஸ் சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து மிக மந்தமாகவே காணப்பட்டது. கோடம்பாக்கம் ஹைரோடு முதல் வடக்கு உஸ்மான் சாலை வரையிலும், மகாலிங்கபுரம் சாலை, எம்.எம் சாலை, நுங்கம்பாக்கம் ஹைரோடு முதல் கோடம்பாக்கம் சாலை வரையிலும் வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து சென்றன.

கதீட்ரல் சாலை, பல்லவன் சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, எழும்பூர் பாந்தியன் சாலை, அசோக் நகர் மெயின் ரோடு, பெசன்ட் நகர் பிரதான சாலை, தியாகராயநகர் உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டதால் வாகனங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

Monday, November 13, 2017


கனமழை - சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை




கனமழை பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவு, 8:00 மணி முதல், ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது.

மழை காரணமாக நகரின் பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரிலும் கனமழை கொட்டியது. இந்நிலையில் விடியவிடிய மழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.மேலும் தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

courtesy: thanks to kalviseithigal

கனமழை தொடருமா? - என்ன சொல்கிறார் பாலசந்திரன்...

கனமழை தொடருமா?  என்ன சொல்கிறார் பாலசந்திரன்...
மிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. பருவமழையின் தொடக்கத்தில் சென்னையில் சில நாள்கள்  தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாயின.  
தாழ்வான பகுதிகளில் இன்னும் கூட தண்ணீர் தேங்கி இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக சென்னையில் மேக மூட்டமாக இருக்கிறது. ஆனால், மழை பெய்யவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை (நவம்பர் 12) திடீரென மழை பெய்தது. சில நிமிடங்கள் மட்டும் பெய்த நிலையில் நின்றுவிட்டது. பின்னர் இரவு 8.45-க்கு மீண்டும் மழை தொடங்கியது. நகரின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக வளசரவாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர், பாலசந்திரனிடம் கேட்டோம். “தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி நகருமா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது. எனினும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது பரந்த அளவில் பரவியிருக்கிறது. இதன் தாக்கத்தால்தான் இப்போது சென்னையில் மழை பெய்கிறது. கடலோர மாவட்டங்களிலும் மழை தொடரும்” என்றார்.

Sunday, November 12, 2017


Monsoon active again, city to get rain until Wednesday

TNN | Nov 11, 2017, 23:56 IST

Chennai: The northeast monsoon is once again active and is expected to bring rain to the city until Wednesday. The met office has predicted about 2cm-6cm of rain on Sunday.

Weather blogger Pradeep John said, "This will be the second spell of the northeast monsoon. Usually one spell brings rainfall for only 3-4 days, but the first spell had brought rainfall for nine days." Rainfall will be concentrated in the coastal districts, particularly in the stretch connecting Chennai and Nagapattinam.

The city will get intermittent showers on Sunday, said area cyclone warning centre director S Balachandran. Most parts of north coastal TN and some parts of south coastal TN will get rainfall on Sunday. Isolated rainfall will occur in the interior districts.

Some spells will bring heavy (7-11cm) or very heavy rainfall (12-20cm) in Chennai, Kanchipuram and Tiruvallur, said Pradeep John.

According to an IMD bulletin, a fresh low pressure area is likely to form over southeast Bay of Bengal around Tuesday.

Since October, Tamil Nadu has received 25cm, against the normal of 26cm. Chennai however has recorded excess rainfall, receiving 68cm against the normal of 41cm.

The combined level of the four drinking water reservoirs at Chembarambakkam, Poondi, Redhills and Cholavaram is currently 37% of the total capacity.

The met office has forecast a maximum and minimum temperature of 29°C and 24°C on Sunday.

சென்னை, கடலோர மாவட்டங்களில் 2-வது சுற்று பருவமழை இன்றிரவு தொடங்குகிறது; கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்

Published : 11 Nov 2017 16:17 IST



வடக்கு கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று இன்றிரவு முதல் தொடங்குகிறது என வானிலை ஆர்வலரும் பதிவருமான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் (https://www.facebook.com/tamilnaduweatherman/) கூறியிருப்பதாவது:

வடக்கு கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் இரண்டாவது சுற்று இன்றிரவு முதல் தொடங்குகிறது. வழக்கமாகவே, வடகிழக்கு பருவமழையானது காற்றழுத்த தாழ்வு நிலைகள் சார்ந்தது. ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும்போது 3 முதல் 4 நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்யும். ஆனால், கடந்த முறை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து 9 நாட்களுக்கு மழை தந்தது. அதன்பின்னர், கடந்த மூன்று நாட்களுக்கு நமக்கு பெரிய அளவில் மழை இல்லை. தற்போது, 2-வது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன்மூலம், நாகப்பட்டினம் முதல் சென்னைவரையிலான வடக்கு கடலோர மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

எங்கே நிலைகொண்டுள்ளது? எப்படி இருக்கிறது?

இந்த 2-வது காற்றழுத்த தாழ்வுநிலையானது வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதேவேளையில் இது ஒரு பரந்த தாழ்வுநிலையாக இருக்கிறது. அதாவது, மிகப் பெரிய பரப்பளவில் மேகக்கூட்டங்கள் உள்ளன. மேகக்கூட்டங்கள் நெருக்கமாக இல்லை. தென்மேற்கு பகுதியில் எப்போதெல்லாம் காற்றழுத்த தாழ்வு, நிலை கொள்கிறதோ அப்போதெல்லாம் வடக்கு கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நல்ல மழை பெயும். மற்ற பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யும்.

இந்த காற்றழுத்த தாழ்வானது ஆந்திரா நோக்கி நகரும் என பிபிசி கணித்தூள்ளது. ஆனால், சென்னைக்கு மழை வாய்ப்பு குறித்து எதுவும் கூறவில்லை. சென்னையில் எப்படி மழை வெளுத்துவாங்கப்போகிறது என்பதை நீங்கள் பாருங்கள்.

இன்று இரவு முதல் மழை..

சென்னையில் இன்றிரவு மழை தொடங்கும். புதன்கிழமை வரை விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் கனமழையும், சில நேரங்களில் மிககனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

வேலூர், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.

Saturday, November 11, 2017

Another action-packed wet spell to begin in Chennai on Sunday


By Express News Service  |   Published: 10th November 2017 08:29 AM  |  

CHENNAI: The second bout of heavy downpour this monsoon is round the corner as weather models predict an action-packed week starting this Sunday night. The Regional Meteorological Centre (RMC), Chennai, in its five-day outlook, has already put out a heavy rainfall warning for coastal Tamil Nadu.
The new low pressure formed in the Bay of Bengal, which is seen as a remnant of past typhoon Damrey, is on course to the Andamans and the Tamil Nadu coast. Currently, the system is over the Southeast Bay of Bengal with associated cyclonic circulation extending upto 4.5 km above mean sea level.
S Balachandran, director, Area Cyclone Warning Centre, told Express that clouds were seen travelling to the Tamil Nadu coast. “We are tracking this system closely. We have to wait and monitor. There are a lot of factors like how far the low pressure is travelling and reorganising and how close it is coming towards us. In another day or two, there will be clarity. Light to moderate rain is expected over the next two days,” he said.
Weather expert Pradeep John said it was a broad low pressure and that means it is very elongated. “The active spell for most of north Tamil Nadu will start from Sunday and some bands over the coastal regions will arrive by Saturday itself. Again, Chennai will face most of the action with its location perfectly placed.”
To a query, John said the IMD models were not predicting that the low pressure would intensify into a cyclone, but some of the American models were forecasting a cyclone formation.

Thursday, November 9, 2017


Back to school, but via flooded streets

TNN | Nov 8, 2017, 07:46 IST


An overloaded autorickshaw ferries schoolchildren home near Egmore in the afternoon on Tuesday, when schools r... Read More

A week after re maining shut, city schools reo pened to reduced optimism among students who were forced to wade through stagnant water and brave rain to reach their schools. Some school campuses and playgrounds were inundated on Tuesday. On Angalam man Koil Streetin Choolai, students wad ed through sewage-mixed rainwater to reach home after school. S Dharshini, a Class VIII student, said she was late for school in the morning due to rainfall."I don't like walking in this water because it stinks.I hate it when vehicles splash water on my uniform. But there is no space to walk on the side of the road," she said, pointing to a broken footpath.

J Salim, a parent of two primary school students, said roads being damaged after rainfall made his commute difficult. "The roads are in poor shape. I took my children on a two-wheeler avoiding the potholes. It was also raining heavily early in the morning," said Salim, who had dropped off his children to the school they attend near Meenambakkam.

R Narmada, whose child goes to at a private school in Adyar, said the institution had suspended physical training classed because its grounds were waterlogged.

"Waterlogging was minimal on streets in Adyar, so I didn't have a problem taking my son to school," she said.

MODERATE RAIN TODAY

The city and its suburbs are likely to receive moderate showers on Wednesday, the Met office said. Area Cyclone Warning Centre director S Balachandran said, "There are likely to be a few spells of rain or thundershowers on Wednesday." The sky over the city is likely to be overcast on Wednesday.The maximum and minimum temperatures are likely to be around 28°C and 23°C.

தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

By DIN  |   Published on : 09th November 2017 05:25 AM  
தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை (நவ.9) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கையால் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில் வரும் சனிக்கிழமை (நவ. 11)பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.12 வரை கனமழை இல்லைவானிலை மையம் அறிவிப்பு

சென்னை: 'தமிழகத்திற்கு வரும் 12 வரை, கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை; வெப்பச்சலனத்தால் மழை உண்டு' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை முன் எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:அரபிக்கடலில், கேரள பகுதியில் உருவாகியுள்ள மேல் அடுக்கு சுழற்சியால் கேரள எல்லையில் உள்ள, தமிழக பகுதிகளில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில், பல இடங்களில் மிதமான மழை இருக்கும்.

சென்னையில் வானம் மேக கூட்டத்துடன் காணப்படும். வங்கக்கடலில் அந்தமானுக்கு கிழக்கே மலேசியா அருகில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை கண்காணித்து வருகிறோம். அதனால், தற்போது, தமிழகத் திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.இவ்வாறு அவர்கூறினார்.இந்திய வானிலை மையம் நேற்று மாலை வெளியிட்ட கணிப்பு அறிக்கையில், 'அந்தமான் தீவுகளில் இன்று


கனமழை பெய்யும். மற்ற இடங்களுக்கு வரும் 12ல், கனமழை எச்சரிக்கை இல்லை' என கூறப்பட்டுள்ளது.



நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, திருத் துறைப் பூண்டியில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மற்ற இடங்களில் மழை நிலவரம்:நாகப்பட்டினம்,7; இரணியல், செங்குன்றம், எண்ணுார், மாமல்லபுரம், 6;வேதாரண்யம், திருவாரூர், மயிலாடி, அம்பா சமுத்திரம் சோழவரம், 5; கோவில்பட்டி, சங்கரன்கோவில், பாபநாசம், புழல், பூண்டி, பள்ளிப் பட்டு மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில், 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.ஓட்டப்பிடாரம் முத்துப்பேட்டை,

சிவகிரி, மணியாச்சி, கோவில்பட்டி, ஸ்ரீவில்லி., செங்கோட்டையில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

பிரதீப்ஜான் கணிப்பு:

'சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் துவங்கி உள்ளது. இது மழைக்கான இடைவெளி காலம். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்' என, சமூக வலைதளத்தில், 'தமிழ்நாடு வெதர்மேன்' பக்கத்தில், வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 8, 2017

நாகையில் தொடரும் அடைமழை சம்பா பயிர்கள் அழுகும் அபாயம்

நாகப்பட்டினம், நாகை மாவட்டத்தில், 10 நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் ஓய்வெடுத்த மழை, இரவில் மீண்டும் துவங்கி, நேற்றும் தொடர்ந்தது.
சம்பா விளைநிலங்களில் விதை தெளித்த சில நாட்களில், தண்ணீர் தேங்கியதால், கந்து வட்டிக்கு கடன் வாங்கி, சம்பா பயிர்களை காப்பாற்ற முயன்ற விவசாயிகள், தொடர் மழையால் சோர்வடைந்துள்ளனர். 3 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன.
கடல் சீற்றம் காரணமாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், வீடுகளில் முடங்கியுள்ளனர். வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்களும் முடங்கி உள்ளனர். சீர்காழி அருகேயுள்ள கிராமங்களில், ஒன்பது நாட்களாக பெய்து வரும் கனமழையால், 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியுள்ளது.
வெள்ள பாதிப்பை பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்தும், வாய்க்கால்களை துார் வாரக் கோரியும், பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஐந்து கிராம விவசாயிகள், அரசூர் புறவழி சாலையில் நேற்று, மறியலில் ஈடுபட்டனர். இதனால், சீர்காழி- - சிதம்பரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.
பாதிப்பே இல்லை
தஞ்சை மாவட்டத்தில் வயல்களில் 
தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் நெற்பயிர் மூழ்கியது தொடர்பாக அந்த மாவட்ட அமைச்சர் மணியன் ஆய்வு செய்து வருகிறார். அங்கும் மழைநீர் வடிந்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையால் காவிரி டெல்டாவில் சம்பா நெற்பயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. குடிமராமத்து பணியில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. இந்த பணிகள் முறையாக நடைபெற்றதால் தான் 
தற்போது மழைநீர் வாய்க்கால்களில் வடிந்து வருகிறது.
துரைக்கண்ணு, வேளாண் அமைச்சர்
மழை,விடுமுறை,முடிவெடுக்க,தலைமை ஆசிரியர்களுக்கு,அதிகாரம்

மழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த மாவட்ட நிலவரத்தையும் அறிந்து, விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிக்க தேவையில்லை. பாதிப்புக்கு ஏற்ப, பள்ளி தலைமையே முடிவு செய்து கொள்ள, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, மழை நேரத்தில் பள்ளி உண்டா, இல்லையா என்ற, மாணவர்கள், பெற்றோர் குழப்பத்திற்கு விடிவு பிறந்துள்ளது.



தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கிய முதல் வாரத்திலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில், பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால், பள்ளிகளுக்கு, அக்., 30 முதல், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை, சட்ட பல்கலை, சென்னை பல்கலையில், நவ., 3ம் தேதி மட்டும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், சென்னையை மிரட்டிய கன மழை முடிவுக்கு வந்து, மிதமான மழையாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து, மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட, சில பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை தொடர்கிறது. அங்கு, சீரமைப்பு பணி முடிந்ததும், பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி திறப்பை முடிவு செய்யும் அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மழை மற்றும் இயற்கை சீற்ற பிரச்னைகளின் போது, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். பள்ளியை திறப்பதா, விடுமுறை விடுவதா என்பது குறித்து, உரிய காரணங்களுடன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தால் போதும். அவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன்பின், எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை என்பதை, மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பாக வெளியிடுவர். அதற்கு முன், பள்ளிகள் உண்டா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, மாணவர்களும், பெற்றோரும், 'டிவி' செய்தியை எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர்க்க, தலைமை ஆசிரியர்களே, குறுஞ்செய்தி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் குழப்பத்துக்கு, விடிவு கிடைத்துள்ளது.

முன் அரையாண்டு தேர்வு ரத்து

நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த, முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை, பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற வைக்கும் முயற்சியாக, அரையாண்டு தேர்வுக்கு முன், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இத்தேர்வு, வரும், 13ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

கன மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது. முன் அரையாண்டு தேர்வில்,காலாண்டு தேர்வுக்கான பாடங்கள் மற்றும் அதற்கு பின் நடத்திய பாடங்களையும், படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தொடர் விடுமுறையால், நவம்பர் வரை நடத்த வேண்டிய பாடங்கள் நடத்தப்படாமல்,
பற்றாக்குறையாக இருந்ததால், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவான செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, சென்னை மாவட்ட தேர்வு குழு நிர்வாகிகள் கூடி, நேற்று ஆலோசனை நடத்தினர். முடிவில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்வதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மனோகரன் அறிவித்துள்ளார்.'மழையால் ஏற்பட்ட விடுமுறையாலும், ஆசிரியர்கள் பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழல் உள்ளதாலும், சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த முன் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது' என, அவர்
தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு எப்படி?

பள்ளி விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட, ஒவ்வொரு நாளும் தாமதமாகிறது. எனவே, கலெக்டர் ஒப்புதல் வழங்கியதும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, பெற்றோரின் மொபைல் போன் எண்களுக்கு, நேரடியாக, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பப்படும். அதேபோல், வகுப்பு ஆசிரியர்களின் மொபைல் போனுக்கும், தகவல் அனுப்பப்படும். அவர்கள், தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். இதன் வாயிலாக, மாணவர்களுக்கு, பள்ளி விடுமுறை குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

இதற்காக, மாணவர் விபரங்கள் அடங்கிய, 'எமிஸ்' தகவல் தொகுப்பில் இருந்து, பெற்றோர் மொபைல் போன் எண்களை பெறும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அந்தமான் அருகே புயல் சின்னம்; தமிழக கடலோரத்தில் அச்சம்


அந்தமான்,புயல் சின்னம்,தமிழக,கடலோரத்தில்,அச்சம்,Storm,Weather,புயல்,மழை,வானிலை
வங்க கடலில் அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கூடுதல் மழையை தரும் என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த வட கிழக்கு பருவ மழை சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் அந்தமான் தீவுகள் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது, மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுப்பெறும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அது புயலாக மாறினால் சென்னை, நெல்லுார், கோல்கட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள புரி என, எந்த திசையிலும் கரையை கடக்கும். தற்போதைய நிலவரப்படி இது புயலாக மாறாது; காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழலும் என, கணிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழன்றால் புதுச்சேரி முதல் சென்னை வரையிலும் ஆந்திர தெற்கு கடற்பகுதியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 10ம் தேதி இதன் இறுதி நிலை தெரிய வரும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -
சென்னை மாவட்டத்தில் மழை 10, 11, 12 வகுப்புகளுக்கு அரையாண்டு மாதிரி தேர்வு ரத்து


சென்னை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மாதிரி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 08, 2017, 03:45 AM
சென்னை,

சென்னை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுக்கு முன்பாக, மாதிரி அரையாண்டு தேர்வுகளை வருகிற 11-ந் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 10, 11 மற்றும் 12-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த மாதிரி அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அரையாண்டு தேர்வுதான் நடக்கும்.

இந்த தகவலை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.எம்.மனோகரன் தெரிவித்தார்.
சென்னை-புறநகர் பகுதிகளை மீண்டும் மிரட்டும் மழை தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை மழை மீண்டும் மிரட்ட தொடங்கி இருக்கிறது. நேற்று பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

நவம்பர் 08, 2017, 05:15 AM

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கடந்த 2015-ம் ஆண்டை நினைவில் கொண்டு பீதியில் உறைந்து இருக்கின்றனர். அதற்கேற்றாற்போலவே, சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் ஒரு நாள் பெய்த மழையிலேயே குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்ததால் அந்த பகுதி பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. 5 நாட்களுக்கு பிறகு கடந்த 6-ந்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூரியன் தலை காட்டியது. பல இடங்களில் குளம்போல் தேங்கி இருந்த மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியது. தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள ஏரிகள் நிரம்பி வருகிறது. நிரம்பிய ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மீண்டும் மிரட்டிய மழை

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை மிரட்ட தொடங்கியது. சென்னை எழும்பூர், புரசைவாக்கம், மூலக்கடை, மாதவரம், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், ராயபுரம், தரமணி, திருவான்மியூர் உள்பட பல இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியதாலும் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் காலையில் இருந்து மழை பெய்ததால் பல இடங்களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை மழையில் நனைந்துவிடாமல் பாதுகாப்புடன் பள்ளிக்கு அழைத்து சென்றதை பார்க்க முடிந்தது. அதேபோல், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமத்துடன் மழையில் நனைந்தபடி சென்றனர்.

இன்று இடியுடன் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களை இந்த தொடர் மழை மிரட்டுகிறது. அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கினால் அதை அகற்றுவதற்காக தயார் நிலையில் உள்ளது.

Tuesday, November 7, 2017



தமிழகத்தில் 8ம் தேதி முதல் மழை குறையத் துவங்கும்'
'தமிழகம் முழுவதும், வரும், ௮ம் தேதி முதல், மழை குறையத் துவங்கும்' என, வானிலை ஆர்வலர், பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



குறையத் துவங்கும்

'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற, 'பேஸ்புக்' பக்கத்தில், அவர் நேற்று கூறியுள்ளதாவது:வங்க கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால், தமிழகத்தின் மேற்கு மற்றும் உட்புற மாவட்டங்களை நோக்கி மழை திரும்பும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில், மழை

பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில், தற்போது, ஓரளவு மழை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும், வரும், 8ம் தேதி முதல், மழை குறையத்துவங்கும்.

அதேநேரத்தில், தாய்லாந்து வளைகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம், தற்போது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. அது, வங்கக்கடலை நோக்கி நகரலாம். இல்லையெனில், மேலை காற்று என்ற வில்லன், திசை மாற்றி, தமிழக கடல் பகுதிக்கு வரவிடாமலும் தடுக்கலாம்.
எதையும், இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது. எது, எப்படி உருமாறுகிறது என்பதை வரும் நாட்களில் கூர்ந்து கவனிக்க வேண்டும். யாரும் வதந்திகளை நம்பவேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐந்து நாட்கள் ஓய்வு

இதற்கிடையில், நேற்று காலை, வானிலை தகவலை பதிவிட்ட, பிரதீப் ஜான் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து, இதுவே என் கடைசி பதிவு. ஒரு வாரமாக, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து, பல்வேறு வானிலை மாடல்களையும், ரேடாரையும் தொடர்ந்து கண்காணித்துள்ளேன். அதனால், எனக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. எனினும், தாய்லாந்தில் இருந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை குறித்த தகவலை, உரிய நேரத்தில் நிச்சயம் தருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

சென்னை, திருவாரூர், நாகையில் மழை




 சென்னை, திருவாரூர், நாகையில், மழை

சென்னை: னெ்னையில் அண்ணாநகர், அம்பத்துார் , கொளத்துார், கொரட்டூர், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்கிறது. இரவு மழை பெய்வதை பொறுத்து, பள்ளிகள் விடுமுறை குறித்து நாளை (நவ.7)காலை 5மணிக்கு அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம்
சேலம் மாவட்டத்தில், செலம்-ஏற்காடு அடிவாரம், செட்டிச்சாவடி,கோரிமேடு கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி,  அயோத்திபட்டினம்  உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.
நாகை
நாகை மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, கீளவேளூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் சுற்றுனட்டார பகுதிகளில் மழை பெய்தது.

Monday, November 6, 2017

Floodwater keeps Kovilambakkam residents in Chennai indoors


By Samuel Merigala  |  Express News Service  |   Published: 06th November 2017 03:05 AM  |  

Residents wade through floodwater at Sunnambu Kolathur on Sunday | Samuel Merigala
CHENNAI: Sankar’s children are restless. They have been stuck at home for the last three days and want a change of atmosphere. “Let’s go to the supermarket,” says his son who appears to be three-years-old. His six-year-old daughter, who had rubbished claims that there was no water stagnation in Kovilambakkam through a video that went viral on Facebook, is a little better at masking her boredom.
A distraught Sankar looks at his wife who is equally disturbed and makes a phone call.
The lorry driver doesn’t pick up. Without the ‘ferry’, venturing out is a no-go. The children know they would have to wait and their aversion to the rain is palpable.
Residents of Kakithapuram, parts of TNPL Colony and Engineers Avenue in Kovilambakkam have been dependent on the Kovilambakkam panchayat lorries to venture out since Tuesday.
An aerial view of the localities reveals there is no sight of the roads even after two days of considerably less rainfall. “The water is receding only by a few inches each day,” says Sankar who fears the next spell will set in even before the water from the first spell recedes.
In certain places, the water is up to one’s thighs and water snakes are the other deterrent which has kept people indoors.
One of the main reasons why the water has not been receding is the multiple encroachments on the canal, which is supposed to drain rainwater into the Narayanapuram lake along the Pallavaram-Thoraipakkam radial road.
“No de-silting work was done and the encroachments on the canal were ignored even after multiple petitions after the floods of 2015,” said Senthil Gandhi, a resident.
A protest by a conglomeration of local associations in S Kolathur on Tuesday attracted the attention of the government. The PWD brought JCBs to remove the water hyacinths from the canal to facilitate the draining of water.
However, that did not stop the localities around it from flooding. With the 60-foot canal being reduced to 20 or even 10 feet in some areas, the canal began overflowing on Wednesday and was unable to drain water to the Narayanapuram lake.
Further down the Narayanapuram canal, where it empties into the lake, there is no flow of water from the localities. The outlet from the lake to Pallikaranai marshland is dysfunctional and the lake ends up flooding the Narayanapuram canal.
“There is a backflow now, which further hampers the draining of water,” said Sadiq Hussain, a resident of S Kolathur. “The lake comes under the PWD and the portion in between it and the Pallikaranai marshland comes under the Corporation while the localities affected come under the Kovilambakkam town panchayat. Jurisdiction confusion makes a comprehensive solution difficult,” he said.
With Chief Minister Edappadi K Palaniswami visiting the area twice in the last four days, work is going on in full swing to ensure all excess water flows to the Narayanapuram lake which, in turn, will flow to the Pallikaranai marshland but locals are worried of “giant plans and proposals”. “There is talk about a plan of few hundred crores. The problem is that project will take at least 10 years. We can’t stand another nine monsoons like this,” said the residents.
While town panchayat officials were not available for comment, the Perungudi zonal officer, under whose jurisdiction the outlet canal from the Narayanapuram lake comes, told Express that short-term plans were also in the offing.
“We have sent proposals for underground culverts and will be using the cut-and-cover method where culverts will pass under roads and empty at the marshland near Kamakshi Hospital. Work will begin as soon as possible,” he said.
Local also allege that a weir on the northern division of the Narayanapuram lake to impound water is a mistake.“The lake was broken on the southern side to ensure draining of water, which shows the poor planning by the PWD by placing weir on the other side,” said Sajid Hussain.

Rain gods show mercy, Chennai witnesses sunny morning

PTI | Nov 5, 2017, 11:22 IST


Sun came out in Chennai and neighbouring districts, raising hopes of stagnant water receding.

CHENNAI: Sun shone bright in the capital city and its neighbouring districts on Sunday morning, bringing respite to citizens facing the monsoon fury for the past few days.

However, problems of water stagnation continued in some parts of the city and its suburbs such as Pallikaranai.

Sun came out in Chennai and neighbouring districts, raising hopes of stagnant water receding.

Special rescue and relief teams have been formed even as dams and reservoirs were being monitored to prevent anti-social elements from creating problems, the government had said in a statement on Saturday

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...