Wednesday, November 8, 2017


அந்தமான் அருகே புயல் சின்னம்; தமிழக கடலோரத்தில் அச்சம்


அந்தமான்,புயல் சின்னம்,தமிழக,கடலோரத்தில்,அச்சம்,Storm,Weather,புயல்,மழை,வானிலை
வங்க கடலில் அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கூடுதல் மழையை தரும் என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த வட கிழக்கு பருவ மழை சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் அந்தமான் தீவுகள் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது, மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுப்பெறும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அது புயலாக மாறினால் சென்னை, நெல்லுார், கோல்கட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள புரி என, எந்த திசையிலும் கரையை கடக்கும். தற்போதைய நிலவரப்படி இது புயலாக மாறாது; காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழலும் என, கணிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழன்றால் புதுச்சேரி முதல் சென்னை வரையிலும் ஆந்திர தெற்கு கடற்பகுதியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 10ம் தேதி இதன் இறுதி நிலை தெரிய வரும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024