Wednesday, November 8, 2017

நாகையில் தொடரும் அடைமழை சம்பா பயிர்கள் அழுகும் அபாயம்

நாகப்பட்டினம், நாகை மாவட்டத்தில், 10 நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் ஓய்வெடுத்த மழை, இரவில் மீண்டும் துவங்கி, நேற்றும் தொடர்ந்தது.
சம்பா விளைநிலங்களில் விதை தெளித்த சில நாட்களில், தண்ணீர் தேங்கியதால், கந்து வட்டிக்கு கடன் வாங்கி, சம்பா பயிர்களை காப்பாற்ற முயன்ற விவசாயிகள், தொடர் மழையால் சோர்வடைந்துள்ளனர். 3 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன.
கடல் சீற்றம் காரணமாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், வீடுகளில் முடங்கியுள்ளனர். வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்களும் முடங்கி உள்ளனர். சீர்காழி அருகேயுள்ள கிராமங்களில், ஒன்பது நாட்களாக பெய்து வரும் கனமழையால், 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியுள்ளது.
வெள்ள பாதிப்பை பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்தும், வாய்க்கால்களை துார் வாரக் கோரியும், பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஐந்து கிராம விவசாயிகள், அரசூர் புறவழி சாலையில் நேற்று, மறியலில் ஈடுபட்டனர். இதனால், சீர்காழி- - சிதம்பரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.
பாதிப்பே இல்லை
தஞ்சை மாவட்டத்தில் வயல்களில் 
தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் நெற்பயிர் மூழ்கியது தொடர்பாக அந்த மாவட்ட அமைச்சர் மணியன் ஆய்வு செய்து வருகிறார். அங்கும் மழைநீர் வடிந்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையால் காவிரி டெல்டாவில் சம்பா நெற்பயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. குடிமராமத்து பணியில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. இந்த பணிகள் முறையாக நடைபெற்றதால் தான் 
தற்போது மழைநீர் வாய்க்கால்களில் வடிந்து வருகிறது.
துரைக்கண்ணு, வேளாண் அமைச்சர்

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024