Tuesday, November 7, 2017



தமிழகத்தில் 8ம் தேதி முதல் மழை குறையத் துவங்கும்'
'தமிழகம் முழுவதும், வரும், ௮ம் தேதி முதல், மழை குறையத் துவங்கும்' என, வானிலை ஆர்வலர், பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



குறையத் துவங்கும்

'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற, 'பேஸ்புக்' பக்கத்தில், அவர் நேற்று கூறியுள்ளதாவது:வங்க கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால், தமிழகத்தின் மேற்கு மற்றும் உட்புற மாவட்டங்களை நோக்கி மழை திரும்பும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில், மழை

பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில், தற்போது, ஓரளவு மழை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும், வரும், 8ம் தேதி முதல், மழை குறையத்துவங்கும்.

அதேநேரத்தில், தாய்லாந்து வளைகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம், தற்போது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. அது, வங்கக்கடலை நோக்கி நகரலாம். இல்லையெனில், மேலை காற்று என்ற வில்லன், திசை மாற்றி, தமிழக கடல் பகுதிக்கு வரவிடாமலும் தடுக்கலாம்.
எதையும், இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது. எது, எப்படி உருமாறுகிறது என்பதை வரும் நாட்களில் கூர்ந்து கவனிக்க வேண்டும். யாரும் வதந்திகளை நம்பவேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐந்து நாட்கள் ஓய்வு

இதற்கிடையில், நேற்று காலை, வானிலை தகவலை பதிவிட்ட, பிரதீப் ஜான் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து, இதுவே என் கடைசி பதிவு. ஒரு வாரமாக, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து, பல்வேறு வானிலை மாடல்களையும், ரேடாரையும் தொடர்ந்து கண்காணித்துள்ளேன். அதனால், எனக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. எனினும், தாய்லாந்தில் இருந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை குறித்த தகவலை, உரிய நேரத்தில் நிச்சயம் தருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...