Showing posts with label news clippings 3. Show all posts
Showing posts with label news clippings 3. Show all posts

Tuesday, August 8, 2017

ஆகஸ்ட் 22 ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு



ஆகஸ்ட் 22 -ஆம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஆகஸ்ட் 07, 2017, 09:28 PM

சென்னை,


பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். நாடு தழுவிய அளவில் வங்கிகள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால், வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடு, கிடு உயர்வு



கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 08, 2017, 04:15 AM


சென்னை,

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 14–ந் தேதியும் (திங்கட்கிழமை), சுதந்திர தின விழா 15–ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன், மேலும் 2 அரசு விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று வர முடிவு செய்துள்ளனர்.

இதனால் 11–ந் தேதி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டு காணப்படுகிறது.இதையடுத்து ஆம்னி பஸ் மூலம் பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. ஆம்னி பஸ்களின் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் கட்டண உயர்வு தெள்ளத்தெளிவாக இடம் பெற்றுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வியாழக்கிழமை வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.780 (ஏ.சி.) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர் விடுமுறை எதிரொலியால் 11–ந் தேதி முதல் 17–ந் தேதி வரையிலான தேதிகளில் பயணிக்க ரூ.1,600 கட்டணம் என்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, ‘தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ் கட்டணத்தை கண்காணிப்பது போன்று தற்போதும் கண்காணிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.ஆம்னி பஸ்கள் விவரம் இன்றைய பயண கட்டணம் 11–ந் தேதி பயண கட்டணம்

ஏ.சி. வசதி– ரூ.780 – ரூ.1,600

படுக்கை ஏ.சி.வசதி – ரூ.920 – ரூ.1,600

அதிவேக சொகுசு ஏ.சி. வசதி– ரூ.900 – ரூ.1,900

பென்ஸ் படுக்கை ஏ.சி.வசதி– ரூ.1,100 – ரூ.1,900

(இந்த கட்டணம் விவரம் குறிப்பிட்ட தனியார் ஆம்னி பஸ் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது)

Sunday, August 6, 2017


Two-hour spell of heavy rain in city
By Express News Service | Published: 06th August 2017 01:26 AM |
M |



People taking cover near Chennai Central, as heavy rains lashed across the city on Saturday | Ashwin Prasath

CHENNAI: Heavy rain battered Chennai on Saturday with the Meteorological department recording a significant amount of 3.5 cm during a two-hour spell. Several roads were flooded and motorists had to seek refuge as it rained heavily. The department has forecast isolated instances of rain or thundershowers in the city, especially in the evening, for the next two days.

The rain began at around 2.30 pm and picked up intensity very soon. Strong winds, which peaked around 14 kmph, accompanied the rain.

Asked about the reason, S Balachandran, Director, Regional Meteorological Centre, said the rainfall was due to a typical convectional activity.

“Favourable factors like winds and moisture in atmosphere enabled the precipitation,” he said.
Convectional rainfall involves warm air, which rises up, being cooled and then condensed.
This process eventually leads to rainfall.

The latest spell of rain adds to 172 mm for the southwest monsoon season (from June 1), which had been realised until Saturday morning.

The day also saw a considerable drop in maximum temperature (recorded at 34.8 degree Celsius), largely due to the presence of rain-bearing clouds.

The forecast for Chennai on Sunday is that the sky condition is likely to be cloudy, with maximum temperature expected to be around 37 degree Celsius.

Meanwhile, there were overnight showers in a few areas in Coimbatore district with Chinnakalar (6 cm) and Valparai (5 cm) receiving the highest amount.

Devala (Nilgiris district), Naduvattam (Nilgiris), Kadaladi (Ramanathapuram) and Periyar (Theni) all got 2 cm rain each. The State has received 120.5 mm, instead of the normal 126 mm rain.

இறப்பை பதிவு செய்ய ஆதார் தேவையில்லை - மத்திய அரசு




இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்று நேற்று செய்திகள் வெளியானதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்றும் கூறியுள்ளது.

கருப்பு பணம் , பினாமி பரிமாற்றத்தைத் தடுக்கும் வகையில், சொத்துக்கள் வாங்கும்போதும், விற்கும் போதும், பவர் ஆப் அட்டர்னி கொடுக்கும் போதும், ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

மேலும், மின்னணு அடிப்படையில், ஆதாரை அடையாளமாகக் கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதை கட்டாயமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

இதன் மூலம், பினாமி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதும், கருப்பு பணம் மூலம் ஏராளமான சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதும் தடுக்கப்படும்.

விரைவில் இது தொடர்பான வரைவு சட்டத்திருத்த மசோதாக்கள் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இதைதொடர்ந்து, தற்போது, இனிமேல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு இறப்பை பதிவு செய்யும்போது ஆதார் எண் அளிக்க வேண்டும் என்று நேற்று செய்திகள் வெளியானது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையேயும் சமூக ஊடகங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த  நிலையில், இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Dailyhunt

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை!!




10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீதும், அது குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தவறான தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. 10 ரூபாய் நாணயங்கள் கடந்த 2010 மற்றும் 2015 ஆண்டுகளில் அச்சிடப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் பணத்தட்டுப்பாடு காரணமாக இந்த இரண்டு விதான 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன. இதில் 2010 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் போலியானது என்ற தகவல் பரவியது.

இதனால் பேருந்துகள், டீக்கடைகள், வியாபார ஸ்தலங்களில் இந்த நாணயங்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுத்து வந்தனர்.

10 ரூபாய் நாணயங்கள் குறித்து சிலர் பரப்பிய வதந்திகளால் பொதுமக்கள், வணிகர்கள், சிறு வியபாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதேபோல், போலி 10 ரூபாய் நாணயங்கள் தயாரித்த 3 தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

ஆனாலும், 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லுமா என்ற அச்சம், மக்களைவிட்டு அகலவில்லை என்றே தெரிகிறது. தென் தமிழகத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்காத பேருந்து நடத்துனர்களும், வியாபார ஸ்தலங்களும் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் 10 ரூபாய் நாணயங்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வங்கி, வியாபார நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் 10 ரூபாய் நாணயங்கள் பெறப்படும் என்ற அறிவிப்பும் ஒட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான புகார் அளிக்க 0424 2260211, 1077, 7806977007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் பிரபாகர் கூறியுள்ளார்.

சிறை கைதிகளுக்கும் ஆதார் எண்.


பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள சிறைக் கைதிகளின் ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. சிறையில் முகாம் நடத்தி ஆதார் இல்லாத நபர்களுக்கும் வழங்கப்பட்டும், ஏற்கனவே இருந்தால், அவர்களின் ஆதார் எண்ணும் பெறப்பட்டு வருகிறது.

இதற்கான நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் பேகூர் சிறையில் நேற்று இதை தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் கூறுகையில், “ பேகூர் சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை வழங்கியுள்ளனர். மேலும், ஆதார் இல்லாத மற்ற 500 பேருக்கு ஆதார் எண் வழங்க இந்த முகாம் பயன்படும். இந்த இலக்கு அடுத்த 10 நாட்களில் முடிக்கப்படும். அதன்பின் படிப்படியாக மற்ற சிறைகளுக்கும் விரிவு படுத்தப்படும். ஆதார் மூலம், ஒரு குற்றவாளியின் அடையாளத்தை தெரிந்து கொண்டு, முந்தைய காலத்தில் செய்த குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை போலீசார் எளிதாக கண்டுபிடிக்க முடியும்’’ எனத் தெரிவித்தார்.
Dailyhunt

vikatan.com

மௌனம் சாதிக்கும் அரசு... மீண்டும் வங்கி வாசலில் நிற்க வேண்டுமா மக்கள்?

சோ.கார்த்திகேயன்


`2,000 ரூபாய் நோட்டில் GPS சிப் இருக்கிறது. அந்த சிப்பை வைத்து மோடி Satellite வழியாகப் பார்ப்பார். கறுப்புப் பணத்தைக் கண்டுபிடித்து ஒழிப்பார். புதிய இந்தியா பிறக்கும்' என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், கடைசியில் கடுகு டப்பாவில் இருந்த பணத்தைக் காலி செய்ததுதான் மோடி அரசின் சாதனையாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் வங்கி வாசலில் மக்களை நிற்கவைக்க அரசு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.



2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெற, மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது. `2,000 ரூபாய் நோட்டை அச்சிட வேண்டாம்' என்று ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் `புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டை வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதா?' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அருண் ஜெட்லி அவையில் இருந்தும், மௌனத்தை மட்டுமே பதிலாக அளித்தார். இதனால் மீண்டும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை வரலாம், 2,000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறலாம் எனத் தகவல்கள் உலவுகின்றன.

பிரதமர் மோடியின் கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில், `வேலைவாய்ப்பு குறைந்துள்ளது; விலைவாசி உயர்ந்துள்ளது, உற்பத்தி தேய்ந்துவிட்டது, வியாபாரம் முடங்கிவிட்டது, விலைவாசி விண்ணை முட்டுகிறது, கார்ப்பரேட்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், கல்விக் கடனுக்கான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கின்றனர். ஏன், விவசாயிகள் கடனைக்கூட தள்ளுபடி செய்ய மறுக்கப்படுகிறது என ஏராளமான பிரச்னைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதே நேரத்தில் விஜய்மல்லையா மற்றும் லலித்மோடி போன்ற பெரும் ஊழல் பேர்வழிகள் தப்பித்துவிடுகின்றனர். ஆனால், வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்சத்தொகை இருப்பு இல்லையெனில் கட்டணம்; ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் கட்டணம், பணமதிப்பு நீக்கம்... என சாமான்ய மக்கள் தவிக்கின்றனர்.

பணமதிப்பு நீக்கத்தால் கறுப்புப் பண முதலைகளைவிட, ஏழை எளிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். `2,000 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிக அளவில் உள்ளன. கள்ளநோட்டுகளை அச்சடிக்க முடியாது' என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், பெரும் முதலீடு செய்து கள்ளநோட்டுகள் எல்லாம் அச்சடிக்காமல், குறைந்த செலவிலேயே ஜெராக்ஸ் காப்பிகளாக மாற்றி புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் 2,000 ரூபாயைத் தடைசெய்யப்போவதாக அச்சுறுத்தல் வேறு.

2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதுகுறித்து ஆடிட்டர் கே.ஆர்.சத்தியநாராயணனிடம் கேட்டதற்கு...

``கறுப்புப் பணம், கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழித்திட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தனர். இந்த பணமதிப்பு நீக்கம் முயற்சியில் வெற்றியடையும் என நினைத்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் தாராளமாகப் பரிமாற்றம் நடைபெற்றுவிட்டது. எல்லா பணமுமே 2,000 ரூபாய் நோட்டுகளாக மாறிவிட்டது. பணமதிப்பு நீக்கம் நடைபெற்றபோதே 2,000 ரூபாய் நோட்டு குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு மட்டுமே புழக்கத்தில் விடப்படுகிறது எனச் சொல்லப்பட்டது. அதன் பிறகு இந்த 2,000 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், இந்த அரசைப் பொறுத்தவரை எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால் திடீரென 2,000 ரூபாய் நோட்டைக்கூட செல்லாது என அறிவிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த அறிவிப்பு அடுத்த ஓரிரு மாதங்களில்கூட வரலாம். ஆனால், இந்த அறிவிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஏனெனில், பணமதிப்பு நீக்கத்தின்போது கடுமையாகப் பாதிப்படைந்தது ஏழை மக்கள் மட்டுமே" என்றார்.

இதையடுத்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம்.

``2000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுவார்களா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், செய்தால் முற்றிலும் முட்டாள்தனமான நடவடிக்கையாகத்தான் அது இருக்கும். முதன்முதலில் 500, 1,000 ரூபாய் நோட்டை பணமதிப்பு நீக்கம் செய்ததற்குக் காரணம், கறுப்புப் பணம் இந்த ரூபாய் நோட்டுகளில் அதிகம் இருப்பதாகச் சொன்னதுதான். அதன் பிறகு 2,000 ரூபாய் நோட்டை வெளியிட்டனர். ஆனால், 2,000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியதே மிகப்பெரிய தவறான நடவடிக்கை. பணமதிப்பு நீக்கத்தை அடுத்து இதுவரை என்ன நடைபெற்றுள்ளது என்பதை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. பணமதிப்பு நீக்கம் ஒரு மிகப்பெரிய தோல்வி என்பதற்கு இதுவே உதாரணம். என்ன நோக்கத்துக்காக நிறைவேற்றப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. 2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் வாய்ப்பு குறைவு. அப்படி மீண்டும் செய்தால் அரசின் மீது இருந்த நம்பிக்கை குறைந்துவிடும். பொதுமக்களின் கடும் கோபத்துக்கு ஆளாக நேரிடும்" என்றார் அவர்.

இது குறித்து ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் பேசினோம்.

``500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த சமயத்தில், 2,000 ரூபாய் நோட்டு தற்காலிகம்தான் எனச் சொல்லியிருந்தனர். பணமதிப்பு நீக்கத்தின் மூலம் நினைத்த வெற்றி கிடைக்கவில்லை. இப்போது ஜி.எஸ்.டி வணிகர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் மத்தியில் குழப்பமான ஒரு மனநிலையே நிலவிவருகிறது. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் 2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறுவது என்பது நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தும். ஆனால், 2,000 ரூபாய் நோட்டைத் திருப்பப் பெறுவதற்கு அதிக அளவிலான வாய்ப்புகள் இருக்கின்றன. துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புகள் வரலாம். ஆனால், இந்த அறிவிப்பு எப்படி வரப்போகிறது, எப்படிச் செயல்படுத்த உள்ளனர் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று முடித்தார்.

`கள்ள ரூபாய் நோட்டை ஒழிக்க, மோடியின் சூப்பர் ஐடியா இது. 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2,000 ரூபாய் நோட்டை வெளியிட்டு 500, 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளை ஒழித்தார். இப்போது 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை ஒழிக்க 2,000 ரூபாய் நோட்டை வாபஸ் பெற்று, 200 ரூபாய் நோட்டை வெளியிடுகிறார். `பதுக்கினவனுக்கு அடுத்த ஆப்பு' எனச் சொன்னாலும் சொல்வார்கள். அடுத்தபடியாக விரைவில் 300 ரூபாய் நோட்டு, 400 ரூபாய் நோட்டு வெளியிட்டாலும் வெளியிடுவார்கள்.



200 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டு ஏன், 1 லட்சம் ரூபாய் நோட்டுகூட அரசு அச்சடிக்கட்டும். ஆனால், ஏழை மக்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா? `மீண்டும் ஏ.டி.எம் வாசலில் துண்டு போட்டு இடம் பிடித்து வைக்கவேண்டுமா?' என மக்களை அச்சமடையவைத்திருப்பது சரியா? பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு பெரும்பாலான பொதுமக்கள் நொந்து நூடுல்ஸ் ஆனார்கள். இப்போது மீண்டும் 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து மக்களைத் தெருவில் அலையவிட்டால், என்ன நியாயம்? மக்களை நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்கள்போல.


`சுவிஸ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் கறுப்புப் பணத்தைக் கொண்டுவந்து ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம்' என்றார். ஆனால், கடைசியில் கடுகு டப்பாவில் இருந்த பலரின் பணத்தையும் காலி செய்துவிட்டார். இப்போது அதற்குள் இந்தியாவில் கறுப்புப் பணம் சேர்ந்துவிட்டதா? மீண்டும் ஒரு பணமதிப்பு நீக்கத்துக்கு அரசு தயாராகி வருவது நியாயமா?

Students need to be taught values, ethics: academicians

Children’s Garden Higher Secondary School correspondent Shakuntala Sharma, left, presenting a memento to former director of IIT Madras M.S. Ananth.K.V. Srinivasan  

Ethics is to society what grammar is to language: former IIT Director

Education offered today has many gaps and that requires soul-searching, feel teachers.
At a two-day conference that began on Friday here, teachers who had spent their lifetime with students felt reforms were needed to enrich the process of education.
Students needed to be taught values and ethics, said M.S. Ananth, former director of the Indian Institute of Technology-Madras, speaking at a conference organised by The Children’s Garden School Society, to commemorate its 80th founder’s day.
An alumnus of the school, Mr. Ananth said, “Ethics is to society what grammar is to language. Grammar enriches language, just as ethics enriches society.” The examination system has ruined the education system, he said.
In India, values were taught through religion and the age-old tradition of grandparents teaching children values through stories had slowly disappeared, he said.
“Students think that life is a 100m dash but it is a marathon. In the race, the teacher bears the brunt. Let the teachers relax. The students will learn anyway,” he said, adding that the government should ensure teachers received respect in the society.
His views were in concurrence with A. Kalanidhi, former vice-chancellor of Anna University, who said there was a big difference in the way education was imparted in schools and in higher education institutions.
“About 80% of the learning happens in school, parents and surroundings contribute 20%. But it is the reverse in college, where the syllabus contributes 20% and 80% of the learning happens outside,” he explained.
Lack of research
As for the structure of education, he pointed out that some of the best insights for life came from poets like Avvaiyar, Tiruvalluvar and Tirumoolar, who did not have any formal education. He regretted that while the West had taken to research in to Vedas and Sanskrit literature, little was being done in India.
இலவச கேஸ் திட்டம்: ஆதாரை இணைக்க செப்.30 வரை நீட்டிப்பு


பதிவு செய்த நாள்06ஆக
2017
05:02




புதுடில்லி:இலவச சமையல் கேஸ் திட்டத்தில் ஆதாரை இணைக்க காலக்கெடுவை செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் வகையில் 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 5 கோடி ஏழை பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் இலவச கியாஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்த திட்ட பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயம் என கடந்த மார்ச் மாதம் அறிவித்த மத்திய அரசு, இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் தங்கள் விண்ணப்பத்துடன் ஆதாரை இணைக்க வேண்டும் அல்லது மே 31ந் தேதிக்குள் ஆதாருக்கு விண்ணப்பித்து அதற்கான பதிவு அட்டை அல்லது விண்ணப்ப நகலை கேஸ் இணைப்பு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என அறிவித்தது.

இந்த காலக்கெடுவை தற்போது அடுத்த மாதம் (செப்டம்பர்) 30ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி இலவச கேஸ் இணைப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், தங்களிடம் ஆதார் அட்டை இல்லாதபட்சத்தில் அடுத்த மாதம் 30ந் தேதிக்குள் அதற்காக விண்ணப்பித்து அதன் நகலை இணைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?


பதிவு செய்த நாள்
ஆக 05,2017 16:10



வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?

புதுடில்லி : 2016 -17 ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதி என நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் அது ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, நள்ளிரவு 12 மணி வரை வருமான வரி அலுவலகங்கள் திறந்திருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஒருவேளை, இன்றைக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. அரசு நிர்ணயித்த தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு, தாமதிக்கப்பட்ட வரி தாக்கல் என கூறுகின்றனர். வருமான வரித்தாக்கல் சட்டப் பிரிவு 139(4) ன்படி, அரசு நிர்ணயித்த காலக் கெடுவிற்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாதவர்கள், நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம்.

அதாவது, 2018 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் திருத்தப்பட்ட தாமதமான வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம். இதற்குள் வருமான வரியை தாக்கல் செலுத்துவோருக்கு அபராதமும் விதிக்கப்படாது. 2018 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி அல்லது அதற்கு பிறகு வருமான வரியை செலுத்துவோருக்கு ரூ.10000 முதல் அபராதம் வசூலிக்கப்படும்.

அனைவரையும் வருமான வரி செலுத்த வைப்பதற்காக மத்திய அரசு தற்போது இந்த திருத்த்தப்பட்ட தாமத வரி முறையை கொண்டு வந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோருக்கு இத்தகைய வசதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, August 5, 2017

சனி மகாபிரதோஷத்தின் 17 பலன்கள்!

மு.ஹரி காமராஜ்

சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..

1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.

2. பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

3. பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

4. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.

5. பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.

6. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

7. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

8. சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.



9. நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.

10. சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம்.

11.பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

12. மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.

13. பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.

14. பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

15. சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

16. அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.


17. ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள். நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வருகிறது. அன்பர்கள் ஆலயம் சென்று ஈசனை தரிசித்து அருள்பெற வேண்டுகிறோம்.
vikatan
அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார்? ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில்

பிரேம் குமார் எஸ்.கே.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது சிறைத் தண்டனையில் உள்ளார்.




அதன் பின்னர் அந்த கட்சி உடைந்து தற்போது மூன்று அணியாக உள்ளது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரை சேர்ந்த சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டிருந்தார். அதில், தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் யார்? துணை பொதுச்செயலாளர் யார் என்று கேள்விகள் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், ''அ.தி.மு.க கட்சியில் உட்கட்சி விவகாரங்கள் நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் இன்னும் நிலுவையில் தான் உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

நீங்க கல்யாணம் ஆனவரா? பல மனைவிகள் இருக்கா? வில்லங்கமாக கேள்வி கேட்கும் கல்லூரி!
சோ.கார்த்திகேயன்


எந்த ஒரு விண்ணப்பப் படிவத்திலும், திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா போன்ற கேள்விகள் மட்டுமே கேட்கப்படுவது வழக்கம். ஆனால், பீகார் மருத்துவக் கல்லூரியில் வில்லங்கமாகக் கேட்கப்பட்ட கேள்விகள், பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.




பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரி, தனது ஊழியர்களை நியமிக்கும் பொருட்டு, அவர்களிடம் நீங்கள் கல்யாணம் ஆகாதவரா (virgin), உங்களுக்குப் பல மனைவிகள் உண்டா? போன்ற வில்லங்கமான கேள்விகளைக் கேட்டிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த மருத்துவக் கல்லூரியில், புதிய ஊழியர்களை நியமிக்கும் பொருட்டு விண்ணப்பப் படிவத்தில் திருமணம்குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்விகள் மருத்துவமனை ஊழியர்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்தப் படிவத்தில், ஆண் ஊழியர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், அந்த விவரங்களை வழங்குமாறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில், பெண் ஊழியர்களுக்கு அவர்களது கன்னித்தன்மை பற்றிக் குறிப்பிடுமாறும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது மட்டுமன்றி ,பெண் ஊழியர்களாக இருந்தால், அவர்களுடைய கணவருக்கு ஏற்கெனவே மனைவி இருக்கிறதா, அவருடைய மனைவி உயிருடன் இருக்கிறாரா எனப் பல வில்லங்கமான கேள்விகள் கேட்கப்பட்டு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
Posted Date : 09:50 (01/08/2017)

மன்னார்குடி திவ்யாவை கொன்ற இளவரசி உறவினர்களின் வாக்குமூலம்!

சே.த.இளங்கோவன்

VIKATAN



உலகமெங்கும் சராசரியாக ஒருநாளைக்கு 5,500 கோடி 'வாட்ஸ்அப்' மெசேஜ்கள் அனுப்பப்படுவதாக அந்த நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோன்றதொரு மெசேஜ் உதவியால், தற்கொலை என ஜோடிக்கப்பட்ட திவ்யா என்ற பெண்ணின் மரணம், கொலை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இக்கொலைக்குக் காரணமானவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்ததில், பல திகில் பின்னணிகள் வெளியாகி உள்ளன.

"திருவாரூர் மாவட்டம் சேரன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ கார்த்திகேயன் மகள் திவ்யா. இவரை, மன்னார்குடியைச் சேர்ந்த முத்தழகன்-ராணி தம்பதியின் மகனான திருச்சி அப்போலோவில் மருத்துவராகப் பணியாற்றும் இளஞ்சேரனுக்கு, கடந்த 2011-ம் ஆண்டில் திருமணம் செய்துவைத்தனர். முத்தழகன் யார் என்றால், மன்னார்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.பாலகிருஷ்ணனின் மகனாவார். மேலும், முத்தழகனின் சகோதரி வளர்மதியை, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளஇளவரசியின் அண்ணன் வடுகநாதன் திருமணம் முடித்துள்ளார். இப்படி அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தில் 100 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுத்து, அந்தக் குடும்பத்தில் வாக்கப்பட்டார் திவ்யா. பல்வேறு வண்ணக் கனவுகளோடு புகுந்தவீடு சென்ற திவ்யாவின் கனவுகள் சில வருடங்களிலேயே நிர்மூலமாக்கப்பட்டது. ஆம், புது மலராகச் சென்ற திவ்யாவை பிணமாகத்தான் திருப்பி அனுப்பியது முத்தழகன் குடும்பம். 'சந்தேக மரணம்' என்று வழக்குப்பதிவுசெய்து முத்தழகன், ராணி, இளஞ்சேரன் மூவரையும் கைதுசெய்து சிறையிலடைத்தது மன்னார்குடி காவல்துறை. இந்நிலையில், இந்த வழக்கில் திடீர்த் திருப்பமாக, சந்தேக மரணமாக இருந்த திவ்யா வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட திவ்யாவின் கணவர் உள்ளிட்ட மூவரையும், ஜூலை 27 முதல் 29-ம் தேதிவரை மூன்று நாள்கள், மன்னார்குடி போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரித்துள்ளனர். விசாரணையின்போது கிடைத்தத் தகவல்கள், இந்த வழக்கில் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர், விசாரணையை அறிந்த போலீஸ் உயரதிகாரிகள்.

"போலீஸ் விசாரணையில் கிடைத்த உண்மைகள் என்ன?" என முக்கிய அதிகாரிகள் சிலரிடம் கேட்டோம். "போலீஸ் விசாரணையின்போது, ஒரு இருகிய மனநிலையில்தான் முத்தழகன் இருந்தார். 'எனக்கு வயசாகிடுச்சு. உடல் பலகீனமா இருக்கு. மன உளைச்சல ஏற்படுத்துற கேள்வி ஏதும் கேட்காதீங்க' என்றார் எடுத்தவுடனே. 'உங்க மெடிக்கல் ரிப்போர்ட்ல இருந்து, எல்லாமே பார்த்துவிட்டுத்தான், நாங்க விசாரணை நடத்த வந்திருக்கோம். சட்டப்படிதான் எங்கள் விசாரணை இருக்கும். பயப்படாதீங்க' என்று கூறி விசாரணை டீம் கேள்விகளைக் கேட்டது. பல கேள்விகளுக்கு 'ஆம்', 'இல்லை' என்று ஒரு வார்த்தையில் மட்டுமே அனைவரும் பதிலளித்தனர். திவ்யா மரணம் குறித்து துருவித் துருவி போலீஸார் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். 'திவ்யா தற்கொலைதான் செய்துகொண்டார்' என்று சாதித்தவர்களிடம், 'சம்பவத்தன்று ஏழு மணியளவில் தன்னோட பெரியம்மா பொண்ணுக்கு திவ்யா கால் செய்து பேசியிருக்கிறார். அதேநேரத்தில் வாட்ஸ்அப்பில், நட்பு வட்டங்களுக்கு இயல்பாக மெசேஜ் அனுப்பியுள்ளார். கணவர் இளஞ்சேரனுக்கும் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அந்த மெசேஜ் எல்லாம், இயல்பாகவே உள்ளது' என்று கேட்டபோது, 'இல்லை' என்று மறுத்துள்ளனர் முத்தழகன் குடும்பத்தினர். திவ்யா அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில் உள்ள தகவல்களை விசாரணை அதிகாரிகள் காட்டவே, கப்சிப் ஆகினர். திவ்யாவின் வாட்ஸ்அப், இரவு ஏழரை மணி வரையிலுமே ஆன்லைன் காட்டியுள்ளது. எனவே, அவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே, இனியும் நீங்கள் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்று கேட்டுள்ளனர்.

தொடர்ந்து, மௌனத்தைக் கடைபிடித்த முத்தழகன் குடும்பத்தினரிடம் கேள்வியெழுப்பிய டீம், 'திவ்யாவை நீங்களே அடித்துக் கொன்றுவிட்டு, நாடகமாடியுள்ளீர்கள். அதிலும், உச்சகட்டமாக அரசு மருத்துவமனைக்கு திவ்யாவை கொண்டு வந்தபோது, 'அம்மாவை திருடன் வந்து கொன்னுட்டுப் போய்ட்டான்' என இரண்டு வயசுப் பையனைப் பேசவைத்து, அதை ரெக்கார்டு செய்து, திவ்யா குடும்பத்தினரிடம் போட்டுக் காட்டியுள்ளீர்கள். ஒருவர் இறந்த துக்கத்தில் இருப்பவர்கள், இப்படியெல்லாம் ரெக்கார்டு செய்யணும் என்று யோசிக்க முடியுமா? அப்படியென்றால் தவறுசெய்த நீங்கள், தப்பிக்க பச்சை குழந்தையையும் பகடைக்காயாக மாற்ற முயற்சித்துள்ளீர்கள்' என்று விசாரணை அதிகாரிகள் தங்கள் குரலில் கடுமையைக் கூட்டினர். அதன்பின்னரே கடைசியில் திவ்யாவை தாங்கள் கொலைசெய்ததை முழுமையாக ஒப்புக்கொண்டனர்" என்றனர் அதிகாரிகள்.



முத்தழகன் குடும்பத்தினரின் வாக்குமூலம் என்ன?

"திவ்யாவிடம் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு 17.7.17 அன்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்து, திருவாரூரில் உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவில் எஸ்.எஸ்.ஐ-யாக இருக்கும் ராணியின் அண்ணன் சிவக்குமாரை வரவழைத்துள்ளனர். அவர், கரூரைச் சேர்ந்த லாரி டிரைவர் செந்திலைக் கூட்டி வந்துள்ளார். அவர்களும் சேர்ந்து திவ்யாவை மிரட்ட, ஒரு கட்டத்தில் சண்டை உச்சம் அடைந்து, திவ்யாவைத் தாக்கியுள்ளார் முத்தழகன். அதன்பிறகு அங்கிருந்த சிவகுமார், கரூர் செந்தில் ஆகியோர் சேர்ந்து, திவ்யாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுள்ளனர். வீட்டுக்கு வெளியே பேரனுக்கு சோறூட்டிக்கொண்டிருந்த ராணி, அவரைக் காரில் வைத்து பூட்டிவிட்டு, வீட்டிற்குள் வந்தவர் தடயங்களை எல்லாம் அழித்துள்ளார். இந்தக் கொலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பேசப்பட்டு, ஒரு லட்சம் ரூபாயை சிவகுமாருக்கு முத்தழகன் முன்பணமாகக் கொடுத்துள்ளார். இதன்பிறகே, இந்தக் கொலை அரங்கேறியுள்ளது" என்றனர் போலீஸ் அதிகாரிகள் விரிவாக.

தற்போது சிவகுமார், செந்தில் ஆகியோரைத் தனிப்படை போலீஸார் கைதுசெய்து திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். அதேநேரம் திவ்யாவின் குடும்பத்தினரோ, "இளஞ்சேரனுக்கு திருச்சியில் வேறொரு பெண்ணுடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொள்ள இருந்தார். இந்தத் தகவல் தெரிந்து, திவ்யா அதைக் கண்டித்தார். அதன்காரணமாகவே, திவ்யாவை அவர்கள் அடித்துக்கொன்றுவிட்டனர். முத்தழகனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்காமல், எளிய தண்டனை கிடைக்க மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு முக்கியக் கல்வி நிலைய வேந்தர், முத்தழகன் குடும்பத்துக்கு சப்போர்ட் செய்கிறார். எந்தவகையிலும் முத்தழகன் குடும்பம் தப்பிக்கக்கூடாது" என்கின்றனர் அழுத்தமாக.


திவ்யா வழக்கை விசாரித்து வரும் மன்னார்குடி டி.எஸ்.பி அசோகனிடம் இதுபற்றி நாம் கேட்டோம். "வழக்கை முறையாக விசாரித்து வருகிறோம். கஸ்டடி எடுத்து விசாரித்ததில் கிடைத்த தகவல்களை, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். மேற்கொண்டு இந்த வழக்கின் தன்மையை, திவ்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே சொல்ல முடியும்" என்றார் சுருக்கமாக.

திவ்யாவின் மரணம் ஏற்படுத்திய வலி, இன்னும் சில நாள்களுக்கு மன்னார்குடி மக்கள் நெஞ்சில் இருந்து அகலாது.
''தடுப்பூசி போடுற வரைக்கும் சிரிச்சுட்டே இருந்தா என் பொண்ணு''! - அரசு மருத்துவமனை அலட்சியத்தால் கதறும் தாய்

வீ கே.ரமேஷ்




ஏழ்மையான மக்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு வருவதாலோ என்னவோ, அங்கே எப்போதும் அலட்சியமும் கவனக்குறைவும் மருந்து வாசனைகளை மீறி வியாபித்திருக்கும்.

அப்படித்தான், சேலம் மாவட்டம், கருப்பூரில் மருத்துவர்களின் கவனக்குறைவால் நான்கு மாத பெண் குழந்தை, இந்த மண்ணைவிட்டு சென்றுவிட்டது. ஶ்ரீநிதி என்ற அந்தக் குழந்தைக்குப் போடப்பட்ட தடுப்பூசியே மரணத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மருத்துவமனை தரப்பில் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது மற்றொரு கொடுமை. குழந்தையின் தந்தை நம்மிடம் பேசினார்.





''என் பேரு மணி. கொத்தனார் வேலை செஞ்சுட்டிருக்கேன். ஒருநாளைக்கு 400 ரூபாய் கிடைக்கும். என் தாய்மாமன் மகள் கெளசல்யாவோடு எட்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு. ஓமலூர் பக்கத்துல கருப்பூரில் அருந்ததியர் தெருவில் குடியிருக்கிறோம். கல்யாணமாகி மூணு வருஷமா குழந்தை இல்லை. பல கோவில்களுக்குப் போய் சாமிகளைக் கும்பிட்டு பிறந்தவன் முகேஷ். அவனுக்கு அஞ்சு வயதுசாகுது. இப்போ, நாலு மாசத்துக்கு முன்னாடி சேலம் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைப் பிறந்துச்சு. ரொம்ப சந்தோஷப்பட்டோம். அஞ்சு நாளைக்கு முன்னாடிதான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன்.

சொந்தக்காரங்க, அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் வந்து பார்த்தாங்க. எல்லோருக்கும் சாக்லெட் வாங்கிக் கொடுத்தோம். ரொம்ப அழகா இருக்கான்னு சொன்னாங்க. குழந்தை ஆரோக்கியமாகவும் இருந்துச்சு. ஶ்ரீநிதின்னு பேரு வெச்சோம். நான் கூலி வேலை செஞ்சாலும் மனைவிக்கோ, குழந்தைக்கோ எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கிட்டிருக்கேன். வசதி இல்லாமல்தான் கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போறோம்'' என்ற குழந்தையின் தந்தை, சற்றே அமைதியாகித் தொடர்கிறார்.



''கருப்பூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடறதுக்காக, ஜூலை 26-ம் தேதி காலையில் ஒன்பது மணிக்கு என் மனைவியும் தாத்தாவும் குழந்தையோடு போனாங்க. குழந்தை நல்லா சிரிச்சுக்கிட்டே போனதைப் பார்த்தேன். ஆஸ்பத்திரியில் டாக்டர் யாருமில்லை. நர்ஸூங்க ரெண்டு பேரு குழந்தைக்கு ரெண்டு ஊசிகளைப் போட்டாங்க. 'தடுப்பூசி போட்டிருக்கோம், காய்ச்சல் வரும். இந்த ஒரு மாத்திரையை நான்காக உடைச்சு ஒவ்வொரு வேளையும் கொடுங்க'னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் குழந்தைக்குக் காய்ச்சல் வந்துடுச்சு. சொன்ன மாதிரி அந்த மாத்திரையை உடைச்சு பாலில் கலந்து கொடுத்தும், காய்ச்சல் குறையலை. தலையெல்லாம் சூடாகி, குழந்தை கதறி இருக்கு. என் மனைவி குழந்தையை மடியில்போட்டு தாலாட்டிட்டே இருந்திருக்கா. சாயந்திரம் நாலு மணிக்கு குழந்தை அழுதுட்டே உயிரை விட்டுருச்சு'' என்று கண்ணீரை அடக்க முடியாமல் குலுங்கினார் மணி.



அழுது அழுது சோர்ந்திருந்த குழந்தையின் தாய் கெளசல்யா, ''என் குழந்தை இல்லாத வீட்டில் இருக்கவே பிடிக்கலை. பக்கத்துல எந்தக் குழந்தை அழுதாலும் என் குழந்தை அழுது கூப்பிடற மாதிரியே இருக்கு. என் பையன், 'பாப்பா எங்கே? எப்போ வரும்?'னு கேட்கும்போது மனசு துடியா துடிக்குது. எங்களை மாதிரி வறுமையில் இருக்கிறவங்கதான் கவர்மென்ட் ஆஸ்பத்திருக்குப் போறாங்க. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சரியா பார்க்க மாட்டோம்னு சொல்லியிருந்தால், கடனை வாங்கியாவது வேற ஆஸ்பத்திரிக்குப் போயிருப்போம். அநியாயமாக என் குழந்தையை ஊசி போட்டு கொன்னுட்டாங்க. ஊர்ல எல்லோரும் சேர்ந்துபோய், போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தோம். இதுக்கு நடுவுல அந்த ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு நர்ஸ் வீட்டுக்கு வந்து குழந்தைக்குப் போட்ட தடுப்பூசி அட்டையை வாங்கிட்டு போயிடுச்சு. போலீஸ்காரங்க, 'கேஸ் வந்தால், உன் குழந்தையை அறுத்து போஸ்ட் மார்டம் பண்ணித்தான் கொடுப்போம். பிஞ்சு குழந்தையை அறுக்க சம்மதிக்கிறியா?னு கேட்டாங்க. வேணாம்னு கேஸை வாபஸ் வாங்கிட்டோம்'' என்கிறார் வேதனையுடன்.

ஶ்ரீநிதி பிறந்ததும், இரண்டு குழந்தை போதும் என்று குடும்பக் கட்டுப்பாடும் செய்துகொண்டிருக்கிறார் கெளசல்யா. ''டாக்டரும் நர்ஸூங்களும் வீட்டுக்கு வந்து 'குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷனை நீக்கிடறோம்'னு சொல்லி இருக்காங்க. ஆனா, செத்த குழந்தை விஷயத்தில் எந்த நியாயமும் கிடைக்கலை. என் குழந்தையை என்கிட்டே இருந்து பிரிச்சுட்டாங்க. ஆஸ்பத்திக்குப் போகும்போதுகூட சிரிச்சுட்டே இருந்த குழந்தை இப்போ எங்களைவிட்டுப் போயிடுச்சு.'' என்று தேம்பி தேம்பி அழுகிறார் கெளசல்யா.

கருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டதற்கு, ''இது விஷயமா நாங்க எந்தத் தகவலையும் பத்திரிகைகளுக்கு சொல்லக் கூடாது. எதுவாக இருந்தாலும், ஹெல்த் அதிகாரி பூங்கொடி மேடமிடம் கேட்டுக்கங்க'' என்றார்கள். ஆனால், மாவட்ட ஹெல்த் அதிகாரியான பூங்கொடி எண்ணுக்குப் பலமுறை தொடர்புகொண்டும் பதில் இல்லை.

மருத்துவம் என்ற உன்னத பணியில் இருப்பவர்கள், கூடுதல் கவனம் மற்றும் அக்கறையுடன் செயல்பட வேண்டும்!

”நாங்க இப்ப யாசகம் கேட்பதில்லை சாமி..” - காணாமல் போகும் பூம் பூம் மாடுகள்

திருஷ்டிகழிக்கும் பொருட்கள் தயாரிப்பில் | பழனியம்மாள்
‘நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது..’ இப்படி நல்லதாய் நாலு வார்த்தை சொல்லும் பூம் பூம் மாட்டுக் காரர்களை இப்போதெல்லாம் பார்ப்பதே அரிதாகிவிட்டது. விசாரித்தால், “தொல்லை தாங்கமுடியல.. தொழிலை மாத்திக்கிட்டோம்” என்கிறார்கள்!
தொட்டி நாயக்கர் சமூகத்தின் ஒரு பிரிவினர்தான் பூம் பூம் மாடுகளை பிடித்தபடி வந்து நமக்கு நல்ல காலம் சொன்னவர்கள். திருச்சி காந்தி நகர் ஆதியன் குடியிருப்பின் அரசு தொகுப்பு வீடுகளில் சுமார் 150 குடும்பங்கள் தொட்டி நாயக்கர் சமூகத்தினர் வசிக்கின்றனர். மாடுகளை வளர்க்க தனி இடம், தீவனத்துக்காக ஆகும் செலவு, பராமரிப்புச் செலவு, மாடுகளை அலங்கரிக்கும் பொருட்களுக்கான செலவு உள்ளிட்ட காரணங்களாலும் தேவையற்ற விசாரணைகளுக்கு ஆளாக முடியாமலும் பூம் பூம் மாடுகளுக்கு குட்பை சொல்லிவிட்டார்கள் இவர்கள். திருஷ்டிகழிக்கும் பொருட்களை விற்பதுதான் இவர்களின் இப்போதைய தொழில்.
“என்ன இருந்தாலும், மாட்டைப் பிடிச்சுட்டுப் போயி நாலு வார்த்தை சொல்லி காசு கேக்குறது யாசகம் கேட்பது மாதிரித்தானே.. ஆனா, இப்ப நாங்க யாருக்கிட்டயும் யாசகம் கேட்கிறதில்ல சாமி.. இந்தப் பொருட்களை விற்று கவுரவமா வாழறோம். கடல் சங்கு, படிகாரம், வில்வக் காய், காடுகளில் விளையும் வெள்ளெருக்கு வேர், கம்பளி திரி இதையெல்லாம் தேடிப் பிடித்து வாங்கிவந்து மஞ்சள் தடவிய நூலில் கோர்த்து திருஷ்டிகழிக்கும் பொருட்களை தயாரிக்கிறோம். அவங்கவங்க வசதிக்கேற்ப எங்கக்கிட்ட 20 -லிருந்து 200 ரூபாய் வரைக்கும் திருஷ்டி பொருட்கள் இருக்கு. லாபம் பெருசா இல்லைன்னாலும் கவுரவமா பொழைக்க முடியுதே” என்று சொல்லும் பொன்னு, திருஷ்டி போக்கும் பொருட்களின் மகத்துவங்களை மளமளவென ஒப்பிக்கிறார்.
அவரைத் தொடர்ந்த பழனியம்மாள், “எங்கள்ல யாரும் சாதி மாறி கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அப்படி செஞ்சுக்கிட்டா அவங்கள நாங்க ஒதுக்கி வைச்சிருவோம். அவங்களோட யாராச்சும் தொடர்பு வெச்சா அவங்களயும் ஒதுக்கிருவோம். சம்பந்தப்பட்ட நபர் தப்பை உணர்ந்து மன்னிப்புக் கேட்டால், அவங்களுக்கு ஆயிரமோ ரெண்டாயிரமோ அபராதம் போடுவார் நாட்டார் (ஊர் தலைவர்). அபராதத் தொகையை கோயில் வரவுல சேர்த்துருவோம்” என்றவர், “முன்பு, யாசகம் கேட்ட நாங்கள் இப்ப, இந்தத் தொழிலைச் செய்யுறோம். எங்கள் பிள்ளைங்களுக்கு இதுவும் வேண்டாம். அவங்களாச்சும் படிச்சு முன்னுக்குவரணும். அதுக்காகத்தான் அவங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறோம்” என்று முடித்தார்.
பழமையில் ஊறிப்போன சம்பிரதாயங்கள்
என்னதான் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்தாலும், இந்த சமூகத்தில் சிறுவயது திருமணங்கள் இன்னமும் நடக்கத்தான் செய்கின்றன. நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் மாப்பிள்ளை வீட்டார் கருகமணி அணிவிக்கிறார்கள். கருகஅனி அணிந்த பெண், திருமணம் முடியும் வரை வேற்று ஆண்களுடன் பேசக்கூடாது. தங்களது இஷ்டதெய்வமான காளியம்மனை சாட்சியாக வைத்து, திருமணத்தை நடத்துகிறார்கள். மணப்பெண்ணுக்கு மணமகன் தங்க மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட பொருட்களை அன்பளிப்பாகக் கொடுத்து மனைவியாக ஏற்றுக் கொள்கிறார். குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் குலதெய்வக் குத்தமாகிவிடும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் இருக்கிறது.

ஊரே கொண்டாடும் நேர்மையான ரேஷன் கடை அதிகாரி

ரேஷன் அதிகாரி நாகராஜன்.   -  படம்: என்.பாஸ்கரன்
ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் கடை மூடியிருப்பதைப் பார்த்து சீல் வைக்க முயற்சி செய்ய, ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவரைத் தடுத்த சம்பவம் யாருக்காவது தெரியுமா?
அது தெரியும் என்றால் உங்களுக்கு நாகராஜனையும் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கிராமத்தில் நேர்மையாகப் பணிபுரிந்த ரேஷன் அதிகாரி.
பொது விநியோகப் பொருட்கள் கையிருப்பில் இருக்கும்போதே தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்களைத் திருப்பி அனுப்புவது, ரேஷன் பொருட்களைப் பெற வரும்போது ஆதார் கட்டாயம் என்று கூறி, பொருட்களை வழங்க மறுப்பது அல்லது ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்கப் பணம் பெறுவது ஆகியவை பெரும்பாலான ரேஷன் கடைகளில் பழக்கமான ஒன்று.
ஆனால் ரேஷன் கடை மேற்பார்வையாளரான நாகராஜன், அவர்களில் இருந்து வித்தியாசமானவராக இருந்தார். நாகராஜனின் தன்னலமற்ற சேவை குறித்துப் பொதுமக்களே கூறுகின்றனர்
''கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தள்ளி வட்டத்தில் உள்ள கிராமம் தாக்கட்டி. அங்கு பொது விநியோக சேவையின் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தவர்... இல்லை சேவையாற்றியவர் நாகராஜன். 53 வயதான நாகராஜன் அங்கு சம்பாதித்தது கிராம மக்களாகிய எங்களின் அன்பை மட்டுமே.
மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் ஒன்றான தளி வட்டத்தில் இருக்கும் சுமார் 1,350 ஏழைக் குடும்பங்களுக்கு விரைவாகவும், சீராகவும் ரேஷன் பொருட்களைப் பெற்றுத் தந்தவர் நாகராஜன். காலை 7.30 மணிக்கு சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டையில் இருந்து கிளம்பி, 8.45 மணிக்கு எங்கள் ஊரை அடைவார். தினமும் சரியாக காலை 9 மணிக்குக் கடை திறக்கப்படும். மாலை 6 மணி வரை கடை இயங்கும்.
நிறைய இடங்களில், ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் பல முறை பயணிக்க வேண்டும். ஆனால் நாகராஜனின் கடையில் ஒருவர் ஒருமுறை வந்தாலே போதும். அவர் அனைத்துப் பொருட்களையும் வாங்கிச் செல்ல முடியும்.
இதற்காக அனைத்து அட்டைதாரர்களின் தொலைபேசி எண்களையும் வாங்கி வைத்துவிடுவார் நாகராஜன். பொருட்கள் வந்தபிறகு, அனைவருக்கும் தகவல் சொல்லி, அரசு வழங்கிய எல்லாப் பொருட்களையும் ஒரேமுறையில் வழங்கிவிடுவது அவரின் வழக்கம். அத்துடன் கடைசித் தேதி வரை பொருட்கள் வாங்காதவர்களுக்கு நியாபகப்படுத்துவார்'' என்கின்றனர் பொதுமக்கள்.
இதுகுறித்து பேசும் நாகராஜன், ''நிறையப் பேர் சுமார் 5 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டெல்லாம் பொருட்களை வாங்க வருவர். அவர்களை அலைக்கழிப்பது முறையாகாது. அத்துடன் அன்றாடப் பாட்டில் ரேஷன் வாங்க மறந்துவிடுபவர்களும் இருப்பார்கள். அவர்கள் யாரும் பொருட்கள் கிடைக்காமல் பட்டினியாக இருக்கக்கூடாது'' என்கிறார்.
நாகராஜன் வழக்கமான பணியோடு மட்டும் நின்றுவிடவில்லை. அந்தாயோதயா அன்னா யோஜனா அட்டைகளைப் பெறத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு அதைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் ஒரு குடும்பம் 35 கிலோ அரிசியைப் பெறமுடியும். அதைப் பெறும் பழங்குடிகள் தங்களுக்குள் அதைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
இவை அனைத்துக்கும் மேலாக ஒன்று நடந்திருக்கிறது. அதுகுறித்து நினைவு கூர்கிறார் ஊர்க்காரரான சங்கே கெளடு.
''அது 2009-ம் ஆண்டின் ஒரு ஞாயிற்றுக்கிழமை. ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொள்ள வந்தார் மாவட்ட ஆட்சியர். அந்த நேரம் பார்த்து நாகராஜன் தன் நோயாளி மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். கடை மூடியிருப்பதைப் பார்த்து ஆட்சியர், கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
கைவசம் பூட்டு இல்லாததால் உடனே அதிகாரிகள் கிராம மக்களிடம் கடைக்கு சீல் வைக்கப் பூட்டைக் கேட்டனர். ஆனால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பூட்டு வழங்க மறுத்தனர். எங்களுக்கு இந்த ஊரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அதிகாரிகளிடம் வாதிட்டனர். பின்னர் எங்கிருந்தோ ஒரு பூட்டைப் பெற்ற அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்துச் சென்றனர்'' என்கிறார்.
ஆனால் அடுத்த நாள் நாகராஜனைப் பற்றிக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர், நாகராஜனிடம் புன்னகையுடன் சாவியைக் கொடுத்தது அவரின் நேர்மையைப் பறைசாற்றியதாக மகிழ்கின்றனர் ஊர் மக்கள்.
தமிழில்: ரமணி பிரபா தேவி

Colleges, universities seek GST exemption for outsourced services

 | Aug 4, 2017, 10:36 AM IST

Representative imageRepresentative image
CHENNAI: In the wake of the introduction of the goods and services tax, several higher educational institutions in the state are seeking tax exemption on certain educational services, particularly those which are outsourced.


Until 2013-14, educational institutions were exempted from service tax and when the tax was introduced, auxiliary services were exempted. These included transportation of students, faculty and staff, catering, including mid-day meals scheme, security and services relating to admission or conduct of examination among others. Institutions in the state are now urging for the exemption to continue under the new GST regime.


The Vellore Institute of Technology is the latest institute to send a representation to the central government in this regard. The memorandum sent this week states that several construction activities as well as catering services for students and staff are outsourced by institutions. "With GST now chargeable at 18%, it puts enormous strain for us, as we cannot take input credit due to lack of taxable output service. This will enhance financial burden for students and parents," it said. Earlier, Sastra University , Thanjavur, sent a similar representation to the Centre.


Vaidhyasubramaniam, dean, planning and development, Sastra University , said GST on auxiliary educational services would either dilute the focus of institutions from their core academic activities, or increase the unit cost of education and affect the gross enrollment ratio, adding that this was not in sync with the national policy on higher education. Prof Ganesh Subramaniam of SRM University said some universities may be able to handle the cost increase but it would eventually impact students as varsities may make up for the cost expenditure by hiking fee structures. However, Kala Vijayakumar of SSN College for Engineering said, "With the fee committee having fixed a ceiling on the academic fee, many colleges may not have the freedom to hike it.This will mean incurring higher costs for administrations."

சங்கரன்கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்05ஆக
2017
01:25




திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தபசுத் தேரோட்டம் நேற்று நடந்தது.சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோமதி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. இரவில் வீதியுலா நடந்தது. கோயில் மண்டபத்தில் தினமும் இன்னிசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிகள் நடந்தன. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். 9ம் திருநாளான நேற்று வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கோமதி அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஆதிதிராவிட அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் சந்தீப் நந்துாரி தேர் வடம் பிடித்து இழுத்தனர். இரவில் அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். முக்கியத் திருவிழாவான ஆடி தபசுக் காட்சி நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கும், இரவுக் காட்சி நள்ளிரவு 12:00 மணிக்கும் நடக்கிறது.
ரேஷனில் பாமாயில் இல்லை மாத கடைசியில் கிடைக்குமாம்

பதிவு செய்த நாள்05ஆக
2017
00:02




இருப்பு இல்லாததால், இந்த மாதமும், ரேஷனில் பாமாயில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இம்மாதம் வழங்குவதற்கான பாமாயிலை, நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த வாரம் தான் கொள்முதல் செய்ய உள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், 1 லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிச்சந்தையை விட, ரேஷனில் பாமாயில் விலை குறைவாக இருப்பதால், பலரும் வாங்குகின்றனர். ஆனால், நுகர்பொருள் வாணிப கழகம், குறித்த காலத்தில் பாமாயில் வாங்காததால், தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. இம்மாதம், ரேஷனில் வழங்க, 79 கோடி ரூபாய்க்கு பாமாயில் வாங்க, வாணிப கழகம், ஜூலையில், 'டெண்டர்' கோரியது.
டெண்டர் திறப்பு, ௧ம் தேதி, சென்னையில் நடந்தது. இதில், பங்கேற்ற நிறுவனங்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து, விலையை குறிப்பிடாமல் டெண்டர் சமர்ப்பித்திருந்தன. அதை, அதிகாரிகள் ரத்து செய்தனர்.

இது குறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: முந்தைய டெண்டர் முடிவை, உயர் அதிகாரிகள் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். தற்போது, குறுகிய கால அடிப்படையில், 56 கோடி ரூபாய்க்கு பாமாயில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர், ஆக., 9ல் திறக்கப் பட உள்ளது. தற்போது, கிடங்கு களிலும், பாமாயில் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், வழக்கம் போல், இம்மாதமும், ரேஷனில் பாமாயில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது; மாத கடைசியில் தான், பாமாயில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 2.5.2024