Showing posts with label useful info. Show all posts
Showing posts with label useful info. Show all posts

Saturday, January 19, 2019


ஆங்கில​ம் அறிவோமே 248: சோதனை மேல் சோதனை முயற்சி!

Published : 15 Jan 2019 10:06 IST

ஜி.எஸ்.எஸ்.




கேட்டாரே ஒரு கேள்வி

“Butter இல்லாத ஒன்றுக்கு buttermilk என்ற பெயர் ஏன்? Sweet எதுவும் வைக்கப்படாத அல்லது இனிக்காத ஒன்றை sweetbread என்று அழைப்பது ஏன்?”.

நன்றாய்க் கேட்டீர்கள் நண்பரே. பதிலுக்கு “வாழை மரம் என்று மரமல்லாத ஒன்றை நாம் குறிப்பிடுவது ஏன்? Dry-cleaning என்பது உண்மையில் உலர் சலவை இல்லையே!” என்று கேட்கத் தோன்றுகிறது.

இந்த இடத்தில் பொருத்தமில்லாத பெயர்கொண்ட வேறொன்றையும் பார்க்கலாம். “Ten-gallon hat-ல் எவ்வளவு தண்ணீர் நிரப்பலாம்?” என்று கேட்டால் “பத்து கேலன்” என்று கூறக் கூடாது. கெளபாய் தொப்பி என்பார்களே ‘ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்’ அணிந்த தொப்பி) அதுபோன்றதுதான் Ten-gallon hat. இந்தப் பெயரின் பின்னணி கொள்ளளவு தொடர்பானது அல்ல. ஸ்பானிஷ் மொழியில் Un sombrero tan galan என்பதற்கான பொருள் ‘என்னவொரு அழகான தொப்பி’ என்பதுதான். இதிலிருந்தே Ten-gallon hat உருவானது.

****************

Poncho என்பதும், Raincoat என்பதும் ஒன்றுதானே எனக் கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

உடலை வெப்பமாக வைத்துக் கொள்வதற்காக வெளியில் அணியப்படும் ஒருவித ஆடையே Poncho. இது பொதுவாக லூசாக இருக்கும். Rain Poncho என்பது மழைக்கோட்டுதான். ஆனால், எளிமையானது. பெரும்பாலும் ஒளி ஊடுருவும் (Transparent) தன்மை கொண்டதாக இது இருக்கும்.



****************

‘Right & left’ என்ற phrase-க்கு என்ன பொருள்?

“இடமும் வலமுமாக” என்பதல்ல. “எல்லாப் பக்கங்களிலும் அல்லது எல்லா இடங்களிலும்” என்றுதான் அதற்குப் பொருள்.

****************

Vendor என்று பல நிறுவனங்களில் குறிப்பிடு கிறார்களே அவர் யார்?

எதையோ விற்பவரை vendor என்பார்கள். Street Vendor, Vegetable Vendor, Fruit Vendor. Vendor என்பவர் தனி நபராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எதையோ விற்கும் ஒரு நிறுவனமாகவும் இருக்கலாம்.

சிப்ஸ்

# குழந்தை அழும்போது அதன் வாயில் nipple போன்ற ரப்பரை வைப்போமே அதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிட வேண்டும்?

Pacifier.

# Stow என்றால்?

பொருட்களை அழகாகவும் சீராகவும் ஓரிடத்தில் அடுக்கி வைப்பதைத்தான் stow செய்வது என்பார்கள். We began stowing our luggage into the boot (காரின் பின்புறம் சாமான்களை வைக்கும் பகுதிகளை டிக்கி என்று சொல்வோமே, அதுதான் boot!).

# Tentative என்றால் தற்காலிகமாக எனலாமா?

சோதனை முயற்சியாக என்பது மேலும் பொருத்தம்.

ஆங்கிலம் அறிவோமே-246-ல் கேட்கப்பட்ட புதிர் போட்டிக்கான சரியான விடைகள்

1. ஆமோதிப்பு – S (Yes)

2. ஜப்பானிய நாணயம் – N (Yen)

3. கட்டுப்பாடுக்கு எடுத்துக்காட்டு – Q (Queue)

4. ஒருவகைப் பூச்சி – B (Bee)

5. நீங்களும், நானும் இணைந்தால் - V (We)

6. ஒரு கேள்விச் சொல் – Y (Why)

7. ஒரு நிரலாக்க மொழி – C (Computer Programming)

8. இந்தத் தானத்தில் இலங்கை முன்னணியில் இருக்கிறது – I (Eye)

9. என்னோடு நீ இருந்தால் உன்னோடு நான் இருப்பேன். – I (ஐ-திரைப்படத்தில் இடம் பெற்ற பாட்டு )

10. முன்னாள் – X (Ex)

11. தமிழக்கு ஐயா. வட இந்தியருக்கு? – G (Ji)

12. உருளை வடிவத்தில் உள்ள பருப்பு வகை – P (Pea)

13. சுனாமியின் தாயகம் - C (Sea)

14. எந்த எழுத்துக்குப் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்? – C (BD (பிடி)-க்கு நடுவே உள்ளது

15. எந்த எழுத்துக்குக் கண்கள் களைப்படைய வாய்ப்பு உண்டு. - U (T,V-க்கு நடுவே உள்ளது).

சரியான விடை அளித்தவர்களின் பெயர்கள் அடுத்த வாரம்

தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி
வரவிருக்கும் விசேஷங்கள்
ஜனவரி 21 (தி) தைப்பூசம்

ஜனவரி 26 (ச) இந்திய குடியரசு தினம்

ஜனவரி 30 (பு) மகாத்மா காந்தி நினைவு தினம்

பிப்ரவரி 04 (தி) தை அமாவாசை

பிப்ரவரி 10 (ஞா) வசந்த பஞ்சமி

பிப்ரவரி 12 (செ) ரத சப்தமி

Monday, January 14, 2019

அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்: மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு

By சென்னை,  |   Published on : 14th January 2019 02:18 AM  |
indiapost
இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில், அஞ்சல்துறையில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டர்நெட் பேங்கிங் முறைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை மொத்தம் 21- நாளில் 10,000-க்கும் அதிகமானவர்கள் இன்டர்நெட் பேங்கிங்-இல் இணைந்துள்ளதாக அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், அஞ்சல் துறை சார்பில், இன்டர்நெட் பேங்கிங் முறை கடந்த மாதம் 13-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள எல்லா அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்காக இணையவழி வங்கி சேவைகளை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு அஞ்சல் வாடிக்கையாளர், மற்றொரு அஞ்சல் வாடிக்கையாளருக்கு செல்லிடப்பேசி வாயிலாக பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும்.
இது குறித்து அஞ்சல்துறையின் சென்னை மண்டலத் தலைவர் ஆர்.ஆனந்த் கூறியது:

இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில், அஞ்சல்துறையில் இன்டர்நெட் பேங்கிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இளைய தலைமுறையினர் வீட்டில் இருந்தபடியே தொடர்வைப்பு, வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் பணத்தை செலுத்த முடியும். சிறு அறிக்கை பெற முடியும்.
தனது சொந்த சேமிப்புக் கணக்கில் இருந்து தொடர் வைப்பு கணக்கில் வைப்பு செய்ய முடியும். சேமிப்பு கணக்கில் இருந்து தொடர் வைப்பு கடன் கணக்கில் வைப்பு செய்ய முடியும். புதிய வைப்பு கணக்கு தொடங்க முடியும். பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுத்தல், அதில் வைப்பு செய்தல் உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும்.

இன்டர்நெட் பேங்கிங்-இல் இணைவது எப்படி? அஞ்சல்துறை வாடிக்கையாளர் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளாரோ அந்த வங்கிக்குச் சென்று, அங்கு இன்டர்நெட் பேங்கிங் வசதிக்காக விண்ணப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கொடுப்பார்கள். அதை நிரப்பி கொடுத்தால், வாடிக்கையாளரின் செல்லிடப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வரும். அதில், " உங்களுக்கு இன்டர்நெட் பேங்கிங் செயல்பாட்டுக்கு வந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். இதையடுத்து, ebanking.indiapost. gov.in என்ற இணையதளத்தில் சென்று, உங்கள் விவரம், ரகசிய எண் அமைத்து, இன்டர்நெட் பேங்கிங் வசதியை ஏற்படுத்தலாம்.

நாடுமுழுவதும் அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்-இல் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை 10,000-க்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளனர். குறிப்பாக, எங்கள் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் அஞ்சல்துறை இன்டர்நெட் பேங்கிங் முறையில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார் அவர்.

Tuesday, December 18, 2018

  • டிசம்பர் 18 (செ) வைகுண்ட ஏகாதசி
  • டிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்
  • டிசம்பர் 25 (செ) கிறிஸ்துமஸ்
  • ஜனவரி 01 (செ) ஆங்கில புத்தாண்டு
  • ஜனவரி 02 (பு) காஞ்சி பெரியவர் நினைவு தினம்
  • ஜனவரி 05 (ச) அனுமன் ஜெயந்தி

Saturday, December 1, 2018

HDFC unveils next-gen mobile banking app 

Posted on November 30, 2018 by NT Bureau

 


Chennai: HDFC Bank unveiled its next-gen mobile banking app that it claims offers users effortless access to their bank account on the go.

HDFC says the app has simple, intuitive navigation and incorporates features such as biometric log in for enhanced security and access. It also eliminates all financial and technical jargon for users by grouping transactions into three easy to understand categories – pay, save, and invest, the bank says.

The over 120 transactions available on the app have been selected based on an intensive study of existing navigation and usage patterns coupled with customer research and feedback, the bank stated in a release.

Country head – Digital Banking, HDFC Bank, Nitin Chugh, said, “The next-gen mobile banking app is effortless and intuitive, allowing you to #BankTheWayYouLive. Today, the way that people use the mobile is constantly evolving and our next-gen app reflects this evolution. The next gen app is one more step by the bank in its on-going journey to become a constant part of customers’ life, understand their needs and give products and services that offer a real time experience.”

Wednesday, November 7, 2018

வரவிருக்கும் விசேஷங்கள்
  • நவம்பர் 13 (செ) கந்தசஷ்டி விழா ஆரம்பம்
  • நவம்பர் 21 (பு) மிலாடிநபி
  • நவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை
  • நவம்பர் 23 (வெ) ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம்
  • டிசம்பர் 18 (செ) வைகுண்ட ஏகாதசி
  • டிசம்பர் 23 (ஞா) ஆருத்ரா தரிசனம்

Thursday, October 25, 2018

Steady rise in Speed Post traffic

CHENNAI, OCTOBER 25, 2018 00:00 IST

The increase has brought in a revenue of Rs. 122 cr. in Chennai

With more corporates and government departments turning to Speed Post services, the Department of Posts has witnessed a steady increase in traffic and revenue in Chennai over the past two years.

The traffic of Speed Post articles has increased from 2.67 crore in 2016-17 to 3.28 crore in 2017-18 in Chennai. There was a rise of 23% in the number of Speed Posts booked during the previous fiscal. This bought in a revenue of Rs. 122 crore in Chennai. This service was being used more in city divisions than the semi-urban and rural areas of the Chennai city region. Bulk customers contribute to about 60% of the volume of Speed Posts booked in the city.

Officials of the postal department said banks, government departments, education institutions and large corporate firms are the major customers for this service and discounts are offered for both domestic and international posts.

J.T.Venkateswarulu, Postmaster General (Mails and Business Development) said measures are now being initiated to attract more retail customers. Speed Posts contribute to 15% of the total revenue of the postal department. “The counters in 19 post offices are being operated for additional hours. Moreover, people can book Speed Posts round-the-clock in National sorting hub, St.Thomas Mount and Anna Road Head Post Office,” he said.

The department is also focussing on imparting training to marketing executives to provide better services. Postmen have also been instructed to pick up articles from customers’ doorsteps. As of now, complaints on tracking facility is only marginal, he added.

Citing performance audit report of Comptroller and Auditor General of India, R.Anand, Postmaster General, Chennai City Region, said the delivery performance of Speed Post was better than those of private couriers. Nearly 91% of the Speed Posts are delivered on the same day when the delivery post office receives the articles. The report said 99% of the Speed Post articles booked were delivered in cities compared to 92% of letters delivered by private couriers, he said. “We have instructed branch post offices in rural areas to start booking Speed Posts. Some post offices like Park Town and Chennai GPO work till 9 p.m. during weekdays,” he said.

Saturday, October 20, 2018


வரவிருக்கும் விசேஷங்கள்


அக்டோபர் 24 (பு) சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

நவம்பர் 02 (வெ) கல்லறை திருநாள்

நவம்பர் 06 (செ) தீபாவளி பண்டிகை

நவம்பர் 13 (செ) கந்தசஷ்டி விழா ஆரம்பம்

நவம்பர் 21 (பு) மிலாடிநபி

நவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை

Thursday, October 11, 2018


கண்ணின் மணியே... கண்ணின் மணியே! - இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

Updated : அக் 11, 2018 01:14 | Added : அக் 10, 2018 22:26




'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' 

என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப பெண்கள் பல்வேறு துறைகளில் சிகரங்களை தொடுகின்றனர். சில கிரிமினல்களால், பெண் குழந்தைகள் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். பெண் குழந்தைகளை சிசுவிலேயே அழிக்கும் செயலும்வேதனை தருகிறது.

பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், உரிமைகளை காத்தல் மற்றும், சாதனைகளை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 11ல், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 'அறிவார்ந்த பெண் படைகளுடன்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், இந்த சமூகம் முன்னேறும். இன்றும் சில நாடுகளில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும்.

பாலின விகிதம் :

இந்தியாவில் 2011 சென்சஸ் படி, 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் உள்ளனர். ஆனால் 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 914 என மிக குறைவாக உள்ளது. இது 2001ல் 927 ஆக இருந்தது. அதே போல தமிழகத்தில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்களாக உள்ளது. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாலின விகிதம் 946 ஆக உள்ளது. இதிலிருந்து பெண் குழந்தைகள் காக்கப்பட வேண்டிய அவசியம் புரிகிறது. 'மருமகள் தேவைப்படும் போது, மகள் வேண்டாமா?' என்பதை சிந்திக்க வேண்டும்.

வானிலை மாறுகிறது:

பெண் சிசுக்கொலைகளுக்கு, 'வரதட்சணையே' முக்கிய காரணம். திருமணத்துக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதால் பெண் குழந்தைகளை சுமையாக கருதினர். தற்போது இதில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. வரதட்சணை கேட்காமல் திருமணம் செய்யும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இது பரவலாக வேண்டும். அப்போது பெண் குழந்தை சுமையல்ல, வரம் என்பது அனைவருக்கும் புரியும்.

என்ன செய்யலாம்:

* பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருதல்.
* பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்.
* பெண் குழந்தைகள் மீதான உடல், மனம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை முற்றிலும் தடுத்தல்.
* படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு, சுயதொழில் அல்லது வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.

* பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது குடும்பங்களில் மகன்களுக்கு சமமாக மகள்களையும் நடத்த வேண்டும்.

Saturday, October 6, 2018

வரவிருக்கும் விசேஷங்கள் :

அக்டோபர் மாதம் விசேஷங்கள்

அக்டோபர் 6 (ச) மகா சனிப்பிரதோஷம்
அக்டோபர் 8 (தி) மகாளய அமாவாசை
அக்டோபர் 10 (பு) நவராத்திரி ஆரம்பம்
அக்டோபர் 18 (வி) சரஸ்வதி பூஜை
அக்டோபர் 19 (வெ) விஜயதசமி
அக்டோபர் 19 (வெ) ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
அக்டோபர் 24 (பு) சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

நவம்பர் மாதம் விசேஷங்கள்

நவம்பர் 02 (வெ) கல்லறை திருநாள்
நவம்பர் 06 (செ) தீபாவளி பண்டிகை
நவம்பர் 13 (செ) கந்தசஷ்டி விழா ஆரம்பம்
நவம்பர் 21 (பு) மிலாடிநபி
நவம்பர் 23 (வெ) திருக்கார்த்திகை
நவம்பர் 23 (வெ) ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த தினம்

Friday, October 5, 2018

Jail என்றாலும், Prison என்றாலும் ஒன்றுதானா?

ஆங்கிலம் அறிவோமே 224: மிகச் சரியாகப் பேசுறீங்க!

Jail என்றாலும், Prison என்றாலும் ஒன்றுதானா?
ஒன்று போலத்தான் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.
எனினும், நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு முன் குற்றவாளி என்று கருதப்படுபவரை அடைத்துவைப்பது Jail. சட்டப்படி சிறைத்தண்டனை அளிக்கப்பட்டவர்களை அடைத்துவைப்பது Prison. இப்படித்தான் நெடுங்காலமாகக் கருதப்பட்டுவந்தது.
வீட்டில் ஏ.சி விபத்தை தவிர்க்க சில வழிமுறைகள்

Published : 03 Oct 2018 08:12 IST

இ.ராமகிருஷ்ணன்சென்னை





கோயம்பேட்டில் வீட்டிலுள்ள ஏ.சி இயந்திரத்தில் காஸ் கசிவு ஏற்பட்டு கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகள் நிகழா மல் இருக்க ஏசி இயந்திரத்தை முறையாக பராமரிக்க வேண் டும், தரமான உதிரிபாகங் களை வாங்கி பொருத்த வேண்டும் என இத்துறையின் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வீட்டில் ஏ.சி விபத்து ஏற்படாத வண்ணம் அதைப் பராமரிக்கும் முறை குறித்து மயிலாப்பூரைச் சேர்ந்த கண்ணன் என்ற ஏ.சி.மெக்கானிக் கூறியதாவது:

வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி இயல்பான நிலையில்தான் இருக்கிறதா எனப் பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை. பழுதா கிப் பயன்படுத்த முடியாமல் போனால் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பழுதடையா மலே கூட ஏ.சி உயிர் இழப்பை ஏற்படுத்தும்.

ஏ.சி வாங்குபவர்கள், வீட்டில் அது பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். 1.5 டன், 2 டன், 3 டன் என்ற விகிதத்தில் ஏ.சி. இயந்திரங்கள் உள்ளன. 150 சதுர அடி அறைகளுக்கு 1.5 டன் அளவுள்ள ஏ.சியே போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.

உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்கக்கூடாது. நல்ல விலையில் தரமான உதிரி பாகங்களை வாங்க வேண்டும். ஏ.சி வாங்கியதும் அதற்கேற்ற தரமான ப்யூஸ் ஒயர், ‘டிரிப்பர்’ போன்றவற்றை பொருத்த வேண்டும். ஏ.சி. 1.5 டன் கொண்டதெனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ப்யூஸை பொருத்த வேண்டும். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சியைக் காப்பாற் றும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்க வேண்டும்.

ஏ.சி.யை எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சிக்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனால் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரிக்கு ஏ.சி-யை கொண்டு போகக்கூடாது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்ய வேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்ட வேண்டும். ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்பிரே அடிப்பது தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, விரைவில் ஏ.சி இயந்திரத்தை பழுதாக்கி விடும். நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்கொண்டிருக்கும்போதே மின் விசிறியை போடக்கூடாது. ஏசியை ஆஃப் செய்யும்போது ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்ய கூடாது. சுவிட்சிலும் ஆஃப் செய்ய வேண்டும். சிறுவர்கள் கையில் ஏசிக்கான ரிமோட்டை கொடுக்க கூடாது. அவர்கள் அடிக்கடி அதை இயக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ஆனந்த் பிரதாப் கூறும்போது, “வெளியில் இருக்கும்போது ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும். அறைக்குள் செல்லும்போது ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். அதனால், அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துவிட்டு தூங்குவது நல்லது. ஏ.சி போட்டு தூங்கும்போது அதை இரவு முழுவதும் இயங்க வைக்காமல், 3 மணிநேரம் வரை ஏசியை ஆன் செய்து விடலாம். ஆட்டோமேடிக் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஏசியை சரியான கால அளவில் சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் வெளியில் இருக்கும் நச்சு வாயு ஏசியின் குளிர்ந்த காற்றுடன் கலந்து விடும். அந்த காற்றை சுவாசிக்கும்போது மயக்கம், தலை சுற்றல் ஏற்படும். சில நேரம் உயிர் இழப்பைக் கூட ஏற்படுத்தும்" என்றார்.

Emergency Phone Numbers


Saturday, September 29, 2018


தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?


ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு  அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.*

*ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.*

*இப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை அனுப்பிவிட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..?*

*அந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் முக்கியமானவை.*

இந்தக் கேள்விகளுக்கான பதிலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை மேலாளர் (ஓய்வு) ஷியாம் மனோகர் ஸ்ரீவத்சவாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும்.

பணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுன்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும்.

குறிப்பிட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் தவறான கணக்குக்குப் பணம் செலுத்தப்பட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்துவிடும்.

எனவே, இத்தகைய தவறுகளால் எந்தச் சிக்கலும் ஏற்படாது.

ஒருவேளை அந்த எண்ணில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது.

இப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுன்டிற்குப் பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால், செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஈடுபடும்.

அதன்படி, எந்த வங்கி அக்கவுன்டிற்குத் தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக்கு, நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்துப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணப் பரிமாற்றச் சிக்கலில் வங்கியானது, பணத்தை இழந்தவருக்கு, பணத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியான பக்கபலமாக மட்டுமே செயல்படும்.

எந்த வங்கிக்குப் பணம் மாற்றப் பட்டுள்ளது, அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சியெடுக்கும்.பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப் பெற்றுத் தரவும் வங்கி உதவும்.

அதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுன்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தவும் இயலும்.

அதன்பின் பணப்பரிமாற்றத் தவறு குறித்து எடுத்துச்சொல்லி, உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்டபின் தடை நீக்கப்படலாம்.

சிலநேரம் தனது அக்கவுன்டில் கூடுதலாகப் பணம் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவசரத் தேவைக்காக அந்தப் பணத்தைச் செலவழிக்கவும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.

அப்படி நடக்கும்பட்சத்தில் திரும்பவும் அந்தத் தொகையை, அந்த அக்கவுன்டில் நிரப்பும் வரை சற்றுப் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.

உடனே பணத்தைத் திரும்பத் தரவேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்த இயலாது.

அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, காலதாமதம் ஆகலாம்.
உதாரணமாக, ஒருவரின் அக்கவுன்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை தவறுதலாக வந்து சேர்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அந்த அக்கவுன்டுக்கு உரியவருக்குப் பண நெருக்கடி இருந்து, அந்தத் தொகையை எடுத்துச் செலவழித்திருப்பாராயின், மீண்டும் அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் திரும்பச் செலுத்தும்வரை காத்திருக்க வேண்டும்.

இன்னும் இரண்டு நாளில் பணத்தைப் போட வேண்டுமென்று கெடுவெல்லாம் விதிக்க முடியாது.

அதேபோல, அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்க மறுப்புத் தெரிவித்தால், அவர்மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது.

ஏனெனில் முதல் தவறு, பணப் பரிமாற்றம் செய்தவருடையது. எனவே, கடுமை காட்டாமல் பக்குவமாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி எடுக்க வேண்டும்.

இதில், பணத்தைப் பெற்றவர், அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும், சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இதேபோல, உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேறு யாருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ பணம் மாறி வந்திருப்பதாகத் தெரிந்தால், உடனே அதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது வங்கிக் கிளையையோ அணுகி, விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

அப்படித் தவறுதலாகப் பணம் வந்திருப்பது உறுதியானால், உரியவருக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வங்கியிடம் தெரிவிக்க வேண்டும்.

நேர்மையான அணுகுமுறை இரு தரப்பிலும் இருக்குமென்றால், இத்தகைய பணப் பரிமாற்றத் தவறுகளைத் தீர்ப்பது எளிது.
பணம் தவறுதலாக இன்னொரு அக்கவுன்டுக்குச் செல்லாமல் பணப் பரிமாற்றம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

முதலில் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்யும்முன்பு, எந்த அக்கவுன்டிற்கு பரிமாற்றம் செய்கிறோமோ, அந்த அக்கவுன்ட் விவரங்களை ஆன்லைனில் ஏற்றி சேமித்துவிட வேண்டும்.

இப்படிச் சேமித்துவிடுவதால், தவறான எண்ணுக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்படாது.

அதேபோல, இணைய மையங்களிலிருக்கும் கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கணினிகளில் வைரஸ் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியிருந்தால்தான் ஹேக்கர்கள் சிக்கல் இருக்காது” என்றார் அவர்.

ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்பது இன்றைக்கு எல்லோரும் பின்பற்றும் வழிமுறையாக மாறிவிட்டது.

பணத்தை மிக வேகமாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப இதுதான் மிகச் சிறந்த வழி

. எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இதைச் செய்தால், பாதுகாப்பாகப் பணத்தை அனுப்பி, நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்

Posted by SSTA

Tuesday, September 25, 2018

Chennai: App on snake bites and treatment to be launched 

DECCAN CHRONICLE. | R LENIN


Published Sep 25, 2018, 4:48 am IST


Sources said that snake bite cases are often reported particularly in rural areas.

Since most people, bitten by such venomous snakes, are getting panic and they often approach ‘native doctors’, who treat them with herbal medicines and such treatment many a time leads to fatalities.

Chennai: In order to create awareness about snake bite treatment and management, the Chennai Snake Park, located inside the Guindy National Park, is all set to develop an ‘app’ system, which has elaborate details on snake bites.

Sources said that snake bite cases are often reported particularly in rural areas. Since most people, bitten by such venomous snakes, are getting panic and they often approach ‘native doctors’, who treat them with herbal medicines and such treatment many a time leads to fatalities.

“Taking stock of the situation, we have planned to create app-based system, in which all the photos of venomous snakes will be updated. Further, the app will also have details like first aid after snake bite. Most importantly, the app will have Global Position System (GPS), through which the patients can identify nearby government health institutions like Primary Health Centres (PHCs) and even private hospitals,” said G. Kannan, Education Officer, Chennai Snake Park.

The application would have facilities to upload photos so that people, who notice snakes every nook and corner, can film them and upload in the app, as it will be helpful to survey the snakes every year, he noted.

“The snake park has been associated with a non-government organisation, which will provide funds for such initiative. Further, we will start geo-coding process across the state for providing GPS connection,” said another official. They were preparing detailed blue-print, after which the public would come to know about this application, the staff added.

Herpetologists have welcomed the move. “It is a good initiative, however, the staff should create strong awareness on this before they launched such system. Since snake bites are often reported in the rural areas, I am at a loss to understand the fact that how such system will work,” said Subramanian, a city based herpetologist.

As far as state health officials are concerned, they are sure that all the government health institutions have enough stock for providing anti-venom treatment. They also claimed that unlike in the past, people are well aware that they should approach nearby hospitals after snake bites.

Monday, September 24, 2018

108 ஆம்புலன்ஸ் சேவை தெரியும்... `515 கணேசன் கார் சேவை’ தெரியுமா?

ப.பிரியதர்ஷினி

108 ஆம்புலன்ஸ் சேவை நமக்கெல்லாம் தெரிந்திருக்கும்... `515 கணேசன் இலவச கார் சேவை’ தெரியுமா? தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் ஆலங்குடியில் இருந்துகொண்டு மகத்தான மக்கள் சேவை செய்துகொண்டிருக்கிறார் கணேசன். வயது 70-ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும், `உதவி’ என்று யார் கேட்டாலும், காரை எடுத்துக்கொண்டு ஓடுகிறார். பிரசவம், அவசர சிகிச்சை... எனப் பல உதவிகளுக்காக 46 வருடங்களாக ஒரு ஆம்புலன்ஸ் போலவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கணேசனின் அம்பாசிடர் கார்.



புதுக்கோட்டையிலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலங்குடி. ஊரில் இறங்கி, `கணேசன்...’ என்ற பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியவில்லை. `515...’ என்றால் உடனே அடையாளம் தெரிந்துகொள்கிறார்கள். ஒரு டீக்கடைக்காரரிடம் `515 கணேசன்’ குறித்து விசாரித்தோம்... ``நேரம் காலமெல்லாம் பார்க்க மாட்டாரு. உதவினு யார் கேட்டாலும், காரை எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுவாரு. அக்கம்பக்கத்துல இருக்குற புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை ஊருங்க மட்டும் இல்லை... சமயத்துல வெளி மாநிலங்களுக்குக்கூட அவரோட கார் பறக்கும். `கையில் காசு இல்லை’னு சொன்னா, `எனக்குப் பணம் முக்கியம் இல்லை’ம்பாரு. அவர்கிட்ட இருக்குற பணத்தைச் செலவு செஞ்சு உதவி செய்வாரு 515. (அவரை `515’ என்றுதான் ஊர் மக்கள் அழைக்கிறார்கள்). பெத்த புள்ளைக்கு அஞ்சு ரூபா தர்றதுக்கு யோசிக்கிற இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மனுஷர். சாதாரண ஓட்டு வீட்டுலதான் குடியிருக்காரு. `ரேஷன் கடை அரிசியும் பருப்பும் இருந்தாப் போதும்... எங்க வயிறு நிறைஞ்சிடும்’னு சொல்லிட்டு வர்றவங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவி செய்வார். இவரோட நல்ல எண்ணத்துக்கு ஏராளமான பரிசுகள் கிடைச்சிருக்கு. வேற என்ன... ஏகப்பட்ட பட்டங்கள், சான்றிதழ்கள்தான். இவ்வளவு ஏன்... அவர் தெருவுல இருக்குறவங்க, அவங்களோட வீட்டுக்கு வழி சொல்லணும்னா எப்படிச் சொல்வாங்க தெரியுமா... `515 வீட்டுலருந்து நாலு வீடு தள்ளி எங்க வீடு இருக்கு’, `515 வீட்டுக்கு எதிர்ல எங்க வீடு...’ இப்படியெல்லாம்தான் சொல்வாங்க’’ என்று சொல்லி கணேசன் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறார் டீக்கடைக்காரர்.




`பல வருடங்களாக இப்படி ஒரு சேவை செய்ய வேண்டும் என்றால் ஒன்று, அவர் பெரும் பணம் படைத்தவராக இருக்க வேண்டும். அல்லது, ட்ரஸ்ட் ஏதாவது நடத்தி, நிதி திரட்டி, அதைக்கொண்டு உதவி செய்பவராக இருக்க வேண்டும்.’ - இப்படியெல்லாம் யோசித்தபடி வழி விசாரித்துக்கொண்டு `515’ வீட்டுக்குச் சென்றோம். நாம் நினைத்ததுபோல அவர் வீடு பெரிய பங்களா எல்லாம் இல்லை. சாதாரண பிளாஸ்டிக் கூரை வேய்ந்த எளிமையான வீடு. வீட்டுக்கருகில் அழகழகான குட்டிக் குட்டிச் செடிகள்... சிவப்பு நிறத்தில் சாயம் பூசப்பட்ட தரை. மலர்ந்த முகத்தோடு நம்மை வரவேற்றார் கணேசன். நரைத்த தலை, லுங்கி, சாதாரணமான ஒரு சட்டை. `இவரா மக்கள் சேவை செய்பவர்?’ என்று ஆச்சர்யமாக இருந்தது. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதுமே சரளமாகப் பேச ஆரம்பித்தார் கணேசன்...

``ஆலங்குடிதான் எனக்குச் சொந்த ஊர். அப்பா ஒரு மாட்டுத் தரகர். என் சின்ன வயசுலயே அப்பா, அம்மா தவறிட்டாங்க. அப்புறம் நானா ஏதேதோ வேலை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினேன். வாழ்க்கையில முன்னேறிக் காண்பிச்சவங்க எல்லாருக்குமே மனைவிதான் உதவியா இருப்பாங்க. எனக்கும் என் மனைவி தெய்வானைதான் எல்லாமே. எங்களுக்கு அஞ்சு பெண் குழந்தைங்க... எல்லாருக்கும் கல்யாணமாகிடுச்சு...’’ என்றவரிடம், ``அது ஏன் உங்களை `515’-னு எல்லாரும் கூப்பிடுறாங்க?’’ என்று கேட்டோம்.



அது, 1968-ம் வருஷம். ரோட்ல நடந்து போய்க்கிட்டு இருந்தேன். ஒருத்தர், தன்னோட மனைவியை ஒரு தள்ளுவண்டியிலவெச்சு தள்ளிக்கிட்டுப் போய்க்கிட்டிருந்தாரு. ஏன்னு பார்த்தப்போதான் தெரிஞ்சுது... அந்தப் பொண்ணு நிறைமாத கர்ப்பிணினு. என் மனசு உடைஞ்சு போயிடுச்சு. வீட்டுக்கு வந்து, என் மனைவி தெய்வானைகிட்ட விஷயத்தைச் சொன்னேன். `இந்த மாதிரி இருக்கறவங்களுக்கு உதவறதுக்கு ஏதாவது பண்ணணும்’னு என் ஆதங்கத்தையும் சொன்னேன். அவங்க, `இதை உங்களால மாத்த முடியுமா... இப்படி கஷ்டப்படுறவங்களுக்கு உங்களால என்ன பண்ண முடியும்’னு கேட்டாங்க. `முடியும்’னு சொன்னேன். நான்வெச்சிருந்த பழைய இரும்புக்கடையை வித்தேன். 17,500 ரூபா கிடைச்சுது. அந்தப் பணத்துல, செகண்ட் ஹேண்ட்ல ஒரு அம்பாசிடர் கார் வாங்கினேன். அந்த காரோட நம்பர் TNZ-515. நான் முதன்முதல்ல வாங்கின காரோட நம்பரையே `515 இலவச சேவை கார்’னு பேரா வெச்சேன். `உதவி’னு கேட்குறவங்களுக்கு, நேரம் காலம் பார்க்காம காரை எடுத்துட்டுப் போய் என்னால ஆனதைச் செய்றேன்...’’ அடக்கத்தோடு சொல்கிறார் கணேசன்.

கிட்டத்தட்ட 46 வருடங்களாக இந்தச் சேவையைச் செய்துவருகிறார் கணேசன். அதற்காக யாரிடமும் பணம் வாங்குவதில்லை. காருக்கு டீசல் போடுவது, அது ரிப்பேர் சரி பார்ப்பது... என அனைத்துச் செலவுகளையும் அவரே பார்த்துக்கொள்கிறார். கார் சேவைக்கு வேளை வராத நேரத்தில், பழைய இரும்பு, தகரம் போன்ற பொருள்களை வாங்கி விற்கும் கடை நடத்துகிறார். இதுவரை 19 அம்பாசிடர் கார்களை வாங்கியிருக்கிறார் கணேசன். ஒரு கார் பழுதாகிவிட்டது, இனி ஓடும் கண்டிஷனில் இல்லை என்று தெரிந்ததுமே அடுத்த காரை வாங்கிவிடுவார். எல்லாமே செகண்ட் ஹேண்ட் கார்கள்தான். அத்தனைக்கும் `515’தான் பெயர். அவரேதான் முதலாளி, அவரேதான் டிரைவர்!



இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளை பிரசவத்துக்கு ஏற்றிச் சென்றிருக்கிறது, விபத்துக்கு ஆளான நான்காயிரத்துக்கும் மேற்பட்டோரைச் சுமந்து சென்றிருக்கிறது 515 கார். அது மட்டுமல்ல... பணம் இல்லாமல், சடலத்தை ஊருக்குக் கொண்டு போக முடியாமல் தவிப்பவர்களுக்கும் இவரின் கார் உதவிக்கு ஓடி வரும்... இலவசமாக! அப்படி, இது வரை 5,400 சடலங்களை பல ஊர்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. கொச்சின், பெங்களூரு, தூத்துக்குடி... என கணேசன் பயணித்த ஊர்கள் எண்ணற்றவை. நாம் அவரைப் பார்ப்பதற்கு சற்று முன்னர்தான் திருநெல்வேலி வரை ஒரு கர்ப்பிணியை அழைத்துச் சென்று, விட்டுவிட்டு வந்திருந்தார்.

நாம் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே செல்போனில் அவருக்கு அழைப்பு! உள்ளே போனவர், கார் சாவியுடன் வெளியே வந்தார். `நீங்க என் மனைவி தெய்வானைகிட்ட பேசிக்கிட்டு இருங்க. பக்கத்துல ஒரு பொண்ணுக்குப் பிரசவ வலியாம்... ஆஸ்பத்திரியில விட்டுட்டு வந்துடுறேன்.’’ நம் பதிலை எதிர்பாராமல், காரை எடுத்துக்கொண்டு விரைந்தார் கணேசன். `காலம் மாறினாலும், சிலரின் குணங்கள் மாறாது’ என்பார்கள். உலகெங்கும் நாம் அறியாத எத்தனையோ கணேசன்கள், பிரதிபலன் பார்க்காமல் யாருக்கோ உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். 515 கணேசனின் சேவையை மனமார வாழ்த்தலாம், வணங்கலாம்!



Sunday, September 23, 2018

வரவிருக்கும் விசேஷங்கள்
  • செப்டம்பர் 25 (செ) மகாளயபட்சம் ஆரம்பம்
  • அக்டோபர் 2 (செ) காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 2 (செ) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 110 வது பிறந்த நாள்
  • அக்டோபர் 6 (ச) மகா சனிப்பிரதோஷம்
  • அக்டோபர் 8 (தி) மகாளய அமாவாசை
  • அக்டோபர் 10 (பு) நவராத்திரி ஆரம்பம்

Monday, September 10, 2018

Pay via e-wallets for IOC gas cylinders soon

CHENNAI, SEPTEMBER 10, 2018 00:00 IST



The need for cash payments will be eliminated with e-wallet payments. 

IOC to train delivery boys

Soon, you can pay for your Liquefied Petroleum Gas (LPG) refill by transferring cash from your e-wallet.

Indian Oil Corporation Ltd. (IOCL), which has a customer base of 35 lakh in Chennai region alone, is in the process of providing training to gas delivery boys and distributors to use e-wallets.

According to sources in IOCL, every day around 77,000 refill bookings/deliveries are made in the Chennai region, which comprises Chennai, Tiruvallur, Kancheepuram, Tiruvannamalai and Vellore districts. And most customers pay by cash. “Not all customers have the exact change and end up complaining that the gas delivery boy pockets the additional cash. If e-wallets are used, the need for cash is eliminated,” the official explained. However, a distributor, who had tried out payment using a particular e-wallet, said that not many customers were comfortable with the system.

Preference for cash

“They are afraid the app may take more money than necessary. They say it is not a fool-proof system and prefer to pay by cash. But there too, we have issues with gas delivery boys asking for extra money,” he said.

Already, IOCL customers have the option to book and pay for refills online, thus avoiding cash transactions. Just last month, this number rose from 0.6 to 0.8% (462 to 616 bookings), meaning more customers were opting for online transactions, the official said. However, distributors said they were not comfortable with the online system as they had to wait for two or three days for cash to be credited to their account. “But when we place orders, unless we pay cash upfront we will not get the load. We have to appoint someone to track the online transactions that are too small in number. It is not worth the effort,” said a distributor. Another distributor said that in case of holidays, it would take more than 48 hours for the money to be credited to their account.

Sunday, September 9, 2018


2000, 200 ரூபாய் நோட்டு கிழிந்தால், அழுக்கானால் மாற்ற முடியுமா?- புதிய விதிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

Published : 08 Sep 2018 20:31 IST




சேதமடைந்த 2000 ரூபாய் நோட்டு: கோப்புப்படம்


ரூ.2000, ரூ.200 நோட்டுகள் கிழிந்துவிட்டால் அல்லது அழுக்கடைந்தால் மாற்ற முடியுமா, மாற்றினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளில் ஒவ்வொரு வகையான சேதத்துக்கு ஏற்றாற்போல் பணம் கிடைக்கும் என்ற வகையில் விதிமுறைகளை வகுத்துள்ளது.

இப்போது வரை ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ. 50, ரூ.100, ரூ.500 ஆகிய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவது குறித்த விதிமுறைகள் மட்டுமே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆனால், புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளுக்கு எந்தவிதிமுறையும் இல்லை.

இதன் காரணமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் ஏதேனும் மை கறை, அழுத்து, மஞ்சள் , ஏதேனும் ஓரத்தில் கிழிந்துவிடுதல் போன்ற சேதங்கள் ஏற்பட்டால், ஏடிஎம் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்களும் ஏற்பதில்லை. வங்கிகளும் ஏற்கயோசித்து வந்தன.

இந்நிலையில் சிறிய வடிவத்தில் மகாத்மா காந்தி சீரிஸில் கொண்டு வந்த நோட்டுகளை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி புதிய விதிமுறைகள் குறித்து அனுப்பி இருந்தது.. நிதி அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த நிலையில் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


2009-ம் ஆண்டு பணம் திருப்பப்பெறும் விதிமுறைப்படி, சிறிய அளவிலும், வடிவத்திலும் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தி சீரிஸ் வகை ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ரூ.2000 நோட்டின் அளவு 109.56 சதுரசெ.மீ. இதில் 88 சதுரசெ.மீ வரை ரூ.2 ஆயிரம் நோட்டு கிழிந்திருந்து அதை வங்கியில் கொடுத்தால் அதற்கு முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் அல்லது 44 சதுரசெ.மீ வரை சேதமடைந்திருந்தால், பாதி பணம் மட்டுமே அளிக்கப்படும். அதற்கும் குறைவாக சேதமடைந்திருந்தால், பணம் வழங்கப்படாது.

அதேபோல ரூ.200 நோட்டுகள் 78 சதுர செமீ வரை இருந்து அதை வங்கியில் அளித்தால் அதற்கு முழுப்பணம் அளிக்கப்படும், 39 சதுரசெமீ வரை இருந்தால் பாதி பணம் திருப்பி அளிக்கப்படும். அதற்கு அதிகமாகக் கிழிந்திருந்தால் பணம் வாங்கப்படாது. மேலும் ரூ.2000, ரூ.200 நோட்டுகள் சேதம் அடைந்திருக்கும் அளவைப் பொறுத்து பணம் அளிப்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
‘கிரெடிட் கார்டு லிமிட்’... சில விவரங்கள்



கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான்.

பதிவு: செப்டம்பர் 08, 2018 15:09 PM

கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் உள்ள பொதுவான கருத்து, அது செலவழிக்கத் தூண்டக்கூடியது என்பது.

அது ஒருவகையில் உண்மைதான். பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது.

சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன?

ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கான கடன் வரம்பு.

இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும்.

உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்...

முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும்.

உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும்.

ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம்.

கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம்.

கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள்.

பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...