Showing posts with label useful info. Show all posts
Showing posts with label useful info. Show all posts

Tuesday, January 14, 2020

A Hindu family grieves demise of Oman Sultan

14/01/2020 , Special Correspondent , MAYILADUTHURAI


The announcement by the Home Ministry about the Central government’s declaration of one-day State mourning on Monday in view of the demise of the Sultan of Oman has evoked condolences from a Hindu family in Mayiladuthurai town in Nagapattinam district in the form of a banner with a touching obituary.

‘Beacon of peace’

The late Sultan Qaboos bin Said Al Said has been described, in the bilingual hoarding, as a beacon of peace by Ashokan, his wife Malathi, and their children Swetha and Perunselvan.

A retired schoolteacher, Mr. Ashokan had worked in Oman for 11 years, before returning to his hometown in 2008 after securing a government job.

Mr. Ashokan who retired from service six months ago said that he placed the order for the banner on January 10, the very day the Sultan died.

“I spent 11 years in Oman with my family. My children underwent their school education there,” Mr. Ashokan said, reminiscing his days in Oman under the rule of the lovable leader.

Saturday, January 4, 2020

ஒளி நகல் ஜெராக்ஸ் ஆனது ஏன்? இந்த விஷயம் அமெரிக்காவுக்கு தெரியுமா? #MyVikatan

விகடன் வாசகர்


இந்தியாவில் இது, ஜெராக்ஸ் (Xerox) இயந்திரம் என அழைக்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சிந்தனைகளை பல தலைமுறைக்கு கடத்தும் வாகனமாக இருப்பது எழுத்துகள். மனிதன் கல்லில் எழுதினான். துணியில் எழுதினான். பனை ஓலையில் எழுதினான். இவை நம்மில் எல்லோருக்கும் தெரிந்தவையே. தமிழர்கள் தாமரை மடலில் எழுதியது தொடர்பான குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் இருப்பதாக ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதன் மூலம் அறிந்தேன்.

காகிதத்தில் எழுதும் பழக்கம் வரும் வரை, எழுத்து என்பது குறிப்பிட்ட சிலருக்கானதாகவே இருந்தது. காகிதத்தில் பென்சில் மற்றும் பேனா வைத்து எழுதும் முறை, எழுத்தறிவை பலருக்கு புகட்டியது. காகிதத்தில் ஒருவர் எழுதுவது மூலப்பிரதி. அதன் நகல் வேண்டுமென்றால், மூலப்பிரதியைப் பார்த்து மீண்டும் எழுத வேண்டும்.

கார்பன் காகிதங்கள் நகல் எடுப்பதில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு காகிதத்தின் கீழே ஒரு கார்பன் காகிதத்தை வைத்து இன்னொரு காகிதத்தை அதன் கீழே வைத்து எழுதினால், ஒரே நேரத்தில் மூலமும் அதன் நகலும் கிடைக்கும்.

இந்த முறையில் அழுத்தி எழுதி இரண்டு மூன்று நகல்கள் கூட எடுக்க முடியும். வழக்கம்போல, நகல் எடுக்கும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஒரு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு. அதுதான் ஒளி நகல் இயந்திரம் (Photo Copier Machine). ஒரு காகிதத்தில் எழுதியவற்றை ஒளி நகல் இயந்திரத்தைப் பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான நகல்கள் எடுக்க முடியும். இந்த நகலை எடுப்பதற்கு ஒளியை பயன்படுத்துவதால், இது ஒளி நகல் இயந்திரம் என்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இது, ஜெராக்ஸ் (Xerox) இயந்திரம் என அழைக்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? ஒளி நகல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தது அமெரிக்காவில் உள்ள ஜெராக்ஸ் (Xerox) என்ற நிறுவனம். அவர்கள் கண்டுபிடித்த ஒளி நகல் இயந்திரத்தை `ஜெராக்ஸ்' என்று அழைப்பது விநோதமானதே.

உதாரணமாக, மோட்டோரோலா (Motorola) நிறுவனம் கண்டுபிடித்த செல்போனை (Cellphone), செல்போனை எடுத்து வா என்று சொல்கிறோம். மோட்டோரோலாவை எடுத்து வா என்று சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் விநோதமாக இருக்குமில்லையா? ஆனால், ஒளி நகல் எடுத்து வா என்று சொல்வதற்குப் பதிலாக, ஜெராக்ஸ் எடுத்து வா என்று சொல்கிறோம். இது விநோதமானது மட்டுமல்ல, தவறும் கூட.

எனவே, இனிமேல் ஒளி நகல் எடுத்து வாருங்கள் என்றோ ஒளி நகல் எடுக்கச் செல்கிறேன் என்றோ சொல்லிப் பழகுவோம்.

Tuesday, December 17, 2019



  • டிச., 17 (செ) மார்கழி பூஜை ஆரம்பம்
  • டிச.,22 (ஞா) கணித தினம்
  • டிச., 25 (பு) கிறிஸ்துமஸ்
  • டிச.,25 (பு) அனுமன் ஜெயந்தி
  • ஜன.,1 (பு) ஆங்கிலப் புத்தாண்டு
  • ஜன.,06 (தி) வைகுண்ட ஏகாதசி

Sunday, December 8, 2019


காவலன்' செயலிக்கு சபாஷ்! பெண்கள் பயன்படுத்த வேண்டுகோள்

Updated : டிச 08, 2019 02:14 | Added : டிச 08, 2019 00:43



சென்னை : தமிழக காவல் துறை அறிமுகம் செய்துள்ள, 'காவலன்' செயலியால், சென்னையில் முதல் பலன் கிடைத்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், அத்துமீறி நடக்க முயன்ற சம்பவத்தில், 'காவலன்' செயலியில் பெறப்பட்ட புகாரில், ஐந்து நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரை கைது செய்துள்ளனர். 'இந்த செயலியை, அனைத்து பெண்களும் பயன்படுத்த வேண்டும்' என, டி.ஜி.பி., திரிபாதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம், ஷம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த, 26 வயது பெண் மருத்துவரை, லாரி தொழிலாளர்கள் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர். பின், பெண் மருத்துவரை கொலை செய்து, தீ வைத்து எரித்து தப்பினர். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட, லாரி தொழிலாளர்கள் முகமது ஆரீப், 26, ஜொலு நவீன், 20, ஜொலு சிவா, 20, சென்னகேசவலு, 20 ஆகியோரை, சைபராபாத் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

விழிப்புணர்வு


இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, காவல் துறை, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள, 'காவலன்' மொபைல்போன் செயலி குறித்து, பெண்கள், முதியோர், சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, டி.ஜி.பி., திரிபாதி, அனைத்து போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

பாதுகாப்பு

அதன்படி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், நேற்று முன்தினம், பெண்களிடம், 'காவலன்' செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழகம் முழுவதும், மாவட்ட எஸ்.பி.,க்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் பயனாக, 'காவலன்' செயலியை, ஒரு வாரத்தில், 1.10 லட்சம் பேர், புதிதாக பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 'காவலன்' செயலியை, நான்கு லட்சம் பேர் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, ஒரு வாரத்தில் மேலும், 1.10 லட்சம் பேர், பதிவிறக்கம் செய்துள்ளனர்.

Friday, November 22, 2019

Tiruchy man serves fresh, hot food for free to kin of patients at government hospitals
Seeing the service in Tiruchy, Ravindrakumar was approached by people in Pudukkottai.

Published: 21st November 2019 10:57 AM |



VG Ravindrakumar, treasurer, Agasthiyar Annadhanam trust serving food to people.

Express News Service

PUDUKKOTTAI: Last week, a van pulled up early in the morning outside Pudukkottai Government  Hospital. A few volunteers got their vessels ready and started serving piping hot breakfast to visitors and patients’ relatives.

The food was served free of cost by VG Ravindrakumar, treasurer, Agasthiyar Annadhanam trust. The trust has been serving free food outside Tiruchy GH for the past 29 years. They serve breakfast, lunch and dinner. Breakfast is served from 7 am to 8 am, lunch from noon to 1 pm and dinner from 7 pm to 8 pm.

The initiative was started in 1990 by V Govindaraj, Ravindrakumar’s father. “My father always wanted to
do social service. When he visited Tiruchy Government Hospital, he felt bad looking at the poor condition of patients. He started serving hot water and when the response was good, he started serving kanji (porridge),” said Ravindrakumar.

What started with hot water, today feeds almost 1,000 people daily in Tiruchy. Ravindrakumar and his wife prepare the meals at home. His day starts at 3.30 am and he begins making breakfast of kanji or pongal.

For lunch and dinner, it is variety rice, sambar, rasam and curd rice. While Ravindrakumar makes breakfast, his wife cooks lunch and dinner. He has secured permission from the food safety department and has a team of volunteers helping them daily.

Five sacks of rice (each sack consists of 25 kg)and 25 kg of kurnai rice are used daily to make the food. The trust has a couple of regular contributors who sponsor each day’s meals. It costs almost Rs 20,000 daily. They also get funds on people’s birthdays, anniversaries and other special occasions. People eating
there are served on steel plates and the person who eats must wash the plate and keep it back. For people who want to take the food home, they must get their own utensils.

“My husband has been in hospital for a week. The food served by Ravindrakumar is a blessing for us. It is healthy and good to give my husband, too,” said Prema, a patient’s wife.

Seeing the service in Tiruchy, Ravindrakumar was approached by people in Pudukkottai. “My father believed in serving the needy. I am just continuing his path. There is nothing as satisfying as filling someone’s stomach and seeing the happiness on their face. God can be seen in their eyes,” said Ravindrakumar, who took VRS from Railways.

Sunday, November 10, 2019

அறிந்ததும் அறியாததும்: மவுனம் பேசியதே!




ஆங்கிலத்தில் மட்டுமல்ல பிரெஞ்சு, ஜெர்மன் மொழி, இந்தோனேசிய மொழி, இத்தாலி மொழி, ஸ்பானிஷ், டர்கிஷ் உள்ளிட்ட பல மொழிகளில் மவுன எழுத்துக்கள் உள்ளன. “அதுதான் உச்சரிக்கத் தேவை இல்லையே, அப்புறம் எதற்கு அநாவசியமாக இந்த எழுத்துக்களைச் சொற்களுக்கு இடையில் எழுத வேண்டும்?” என்று தோன்றலாம்.

ஆங்கில மொழி என்பது பிற மொழிகளின் கலப்பால்தோன்றிய மொழியாகும். 85 சதவீத ஆங்கிலச் சொற்கள்ஜெர்மன் மொழி, பிரெஞ்சு, லத்தின் ஆகிய மூன்று மொழிகளில் இருந்து பெறப்பட்டவை. 12 சதவீத ஆங்கிலச் சொற்கள் கிரேக்கம், சீனம், ஜப்பானிய மொழிகளில்இருந்து உயிர்பெற்றவை. இப்படி பிற மொழிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால்தான் மவுன எழுத்துகள்கொண்ட மொழியாக ஆங்கிலம் விளங்குகிறது.


ஆனால், திகைத்துப்போக வேண்டியதில்லை. மவுனசொற்களுக்கான வரையறையைப் புரிந்துகொண்டுவிட்டால் அதை தவிர்த்துவிட்டு ஆங்கிலச் சொற்களைச்சரியாக உச்சரிக்கக் கற்றுக்கொண்டுவிடலாம்.

இதோ சில உதாரணங்கள்

1. மவுனமான H

Hour, Honest, Heir, Honour உள்ளிட்டவை பிரெஞ்சுமொழியில் இருந்து பெறப்பட்ட ஆங்கிலச் சொற்கள்.

இவற்றில் முதல் எழுத்தாக H இடம்பெறும்போது அங்கு H மவுன எழுதாகிவிடும்.

அதுவே, Hotel, House போன்ற அசலான ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்தாக இடம்பெறும்போது H அதற்கான ஒலியுடன் உச்சரிக்கப்படும்.

2. மவுனமான K

N என்ற எழுத்துக்கு முன்னால் K இடம்பெறும்போதெல்லாம் K மவுன எழுத்தாகிவிடும். அப்போது அந்தச் சொல்லை N-ல் இருந்துதான் உச்சரிக்கத் தொடங்க வேண்டும்.

Knowledge, Knight

3. மவுனமான L

D, F, M, K, ஆகிய எழுத்துக்களுக்கு முன்னால்இடம்பெறும்போது L மவுனமாகிவிடும். உதாரணத்துக்கு, would, half, palm, yolk. (ஆனால், scold (ஸ்கோல்ட்) என்று சொல்லும்போது L கேட்குதே என்று ‘திட்டாதீர்கள்’. விதிவிலக்கு உண்டு!)

4. மவுனமான M

N-க்கு முன்னால் M இடம்பெற்றால் அது மவுன எழுத்தாகிவிடும். உதாரணத்துக்கு, mnemonic.

5. மவுனமான N

M-க்குப் பின்னால் N வந்து, அதுவே சொல்லின்கடைசி எழுத்தாக இருக்கும்போது N மவுனமாகிவிடும். உதாரணத்துக்கு, Column, Hymn, Solemn.

தொடர்ந்து மவுன எழுத்துக்களைப் பற்றிப் பேசுவோம்!

Thursday, October 3, 2019


கல்வியைப் பரவலாக்கிய பெருந்தகை




கோபால்

காமராஜர் நினைவு நாள்: அக்டோபர் 2

தமிழ்நாட்டு முதல்வர்களில் பலர் பல சாதனைகளைப் புரிந்திருக்கி றார்கள். தமிழகம் இன்று பல அளவுகோல்களில் முதல் இடத்தில் இருப்பதற்குப் பங்களித்திருக்கிறார்கள். அவர்களில் கல்வித் துறையில் தனிக் கவனம் செலுத்தியவர்; வறுமையாலும் பிறப்பாலும் யாருக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதற்காகப் பல நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் காமராஜர். இதற்காக லட்சக்கணக்கான குடும்பங்களால் தலைமுறை தலைமுறையாக நன்றியோடு அவர் நினைவுகூரப்படுகிறார். அவருடைய ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இன்று தமிழகம் பல துறைகளில் அடைந்திருக்கும் முன்னேற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.

அனைவருக்கும் கல்வி

குலக் கல்வித் திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பால், தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி பதவி விலகியதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் 1954இல் காமராஜர் முதல்வரானார். 1963வரை அப்பதவியில் இருந்தார். ஆறாம் வகுப்புக்கு மேல் கல்விக்கூடக் கல்வியைத் தொடராதவர் காமராஜர். பின்னர் சொந்த முயற்சியில் பல நூல்களைப் படித்தும் அறிவைப் பெருக்கிக்கொண்டார். இருந்தாலும், முறையான கல்வி பெறாததால் பொது வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள், முறைசார் கல்வியின் முக்கியத்துவத்தை அவருக்கு உணர்த்தியிருந்தன.

எல்லோருக்கும் கல்வி இன்றியமையாதது என்பதை உணர்ந்திருந்த அவர், முதல்வரான பிறகு அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்வதில் தனிக் கவனம் செலுத்தினார். அவர் தொடங்கிய திட்டங்கள் வறுமையில் வாடியவர்களை மட்டுமல்லாமல் அதுவரை கல்வி மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் கல்வி பெற வழிவகுத்தன.

கல்வித் துறைச் சாதனைகள்

காமராஜர் முதல்வரானபின் நிதிநிலையைக் காரணம் காட்டி கல்விக்கு நிதி மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே ஒரே நபரை (சி.சுப்பிரமணியம்) கல்வி அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் ஆக்கினார். மாநில பட்ஜெட்டில் 30% கல்விக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டார்.

காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது தமிழகத்தின் 15,000 கிராமங்களில், 6,000 கிராமங்களில் மட்டுமே ஏதேனும் ஒரு பள்ளியாவது இருந்தது. பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் இருந்த சிறார்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். வறுமையில் உழன்ற பெற்றோர் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்ததே இதற்குக் காரணம். இதனால் 1960-ல் அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி இலவசமாக்கப்பட்டது.

1964-ல் 11-ம் வகுப்புவரை கல்வி இலவச மாக்கப்பட்டதற்கும் அவரது ஆட்சியில் போடப்பட்ட அடித்தளங்களே காரணம். 1957இல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962 இல் 29,000 ஆக உயர்ந்தது. 1957-ல் 814 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962-ல் 1995 ஆனது. பள்ளியில் பயின்றுகொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் 19 லட்சத்திலி ருந்து 36 லட்சமாக அதிகரித்தது.

இவை தவிர காமராஜரின் ஆட்சிக் காலத்தில்தான் ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடம் தேடி ஆசிரியரே சென்று கல்வி கற்பிக்கவே இந்த ஓராசிரியர் பள்ளிகள். அதேபோல் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் நடைமுறையும் தொடங்கப்பட்டது.

உணவு, உடை கொடுத்த உத்தமர்

தொடக்கக் கல்வி இலவசமாக்கப் பட்டதன் அடுத்த கட்டமாகப் பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்களின் பசிப் பிணியைப் போக்கும் பணியையும் அரசே ஏற்றது. 1962-ல் அரசுப் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் அறிமுகப்படுத்தினார். சென்னையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக அந்தக் காலகட்டத்தில் மாபெரும் தொகையான ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தவிர வசதிபடைத்த மக்கள் பணமாகவும் உணவுப் பொருட்களாகவும் இந்தத் திட்டத்துக்குக் கொடை அளிக்க ஊக்குவிக்கப்பட்டனர். அப்படிக் கொடை அளித்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சிவாஜி கணேசன்.

இப்படிக் காமராஜரின் மூளையில் உதித்து பலரது பங்களிப்பில் உருப்பெற்ற இந்தத் திட்டம், தேசத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது. அதேபோல் மாணவர்களுக்கிடையே சமத்துவத்தைப் பேண அரசுப் பள்ளிகளில் இலவச சீருடையை காமராஜர் அறிமுகப்படுத்தினார். அரசியலில் செய்த சாதனைகளுக் காகவும் பொதுவாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த நேர்மை, எளிமை ஆகிய மேம்பட்ட குணங்களுக்காகவும் ‘பெருந் தலைவர்’ ‘கிங்மேக்கர்’, ‘கறுப்பு காந்தி’ எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார் காமராஜர். கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக ‘கல்விக் கண் திறந்த காமராஜர்’ என்று இன்றளவும் மக்களால் போற்றப்படுகிறார். அது வெற்று அடைமொழி அல்ல, தமிழக மக்களின் நெஞ்சிலிருந்து நவிலப்படும் நன்றி.
மழைக்காலத்தில் படையெடுக்கும் பாம்புகள்: குடியிருப்புகளுக்குள் புகாமல் தடுக்க என்ன செய்யலாம்?



மதுரை

மதுரையில் மழைக்காலம் தொடங்கியதால் குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுக்கத்தொடங்கியுள்ளன. மதுரை மட்டுமல்ல பொதுவாக எல்லா இடங்களிலுமே இச்சிக்கல் இருக்கத்தான் செய்யும்.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக தொடர் மழை பெய்கிவதனால், அருகில் உள்ள முட் புதர்கள், வயல் வெளிகள், வனப்பகுதியில் இருந்து பாம்புகள், குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகளவு வருகின்றன.

அச்சமடையும் மக்கள், ஆட்களை அழைத்து அந்த பாம்புகளை அடித்துக் கொல்லுகின்றனர். மிக சிலரே, அடிக்காமல் அதை விரட்டிவிடுகின்றனர். தெரியாமல் மிதித்துவிடுவதால் பாம்புகள் கடிப்பதால் உயிரிழப்பும் மதுரையில் அதிகமாகி வருகிறது.

இதுகுறித்து மதுரை ஊர்வனம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வா கூறுகையில், ‘‘மழைக்காலம் தொடங்கியதும் பாம்புகள் போன்ற குளிர் ரத்த உயிரினங்கள் மனிதன் வாழும் பகுதிக்கு படையெடுப்பது இயல்பே. அதற்கு சில காரணங்கள் உண்டு. மழை நீரால் பாம்பின் வாழ்விடமான வலைகள்(பொந்துகள்), வற்றிய நீர்நிலைகள் நீரால் மூழ்கிவிடுகின்றன.

மனிதர்கள் வாழும் வீட்டின் கத கதப்பான சூழல் பாம்பு போன்ற குளிர் ரத்த உயிரினங்களை ஈர்க்கிறது. மழைக் காலத்தில் தவளை, தேரை போன்ற உயிரினங்களை சாப்பிட பாம்புகள் நடமாட்டம் அதிகரிக்கிறது. சில வகை பாம்பு இனங்களுக்கு இது இனப்பெருக்கக் காலம் என்பதாலும் அவை வெளியே நடமாடத்தொடங்குகின்றன.

கதகதப்பான தார் சாலை குளிர் ரத்த விலங்குகளுக்கு உடல் வெப்பத்தை சீராக்க உதவுவதாலும் அவை வாழ்விடத்தை வெளியேறுகின்றன. எல்லா பாம்பும் நஞ்சுள்ள பாம்புகள் அல்ல. நல்லபாம்பு, கட்டுவிரியன், விரியன், சுறுட்டைவிரியன் ஆகிய நான்கு பாம்புகள் மட்டுமே அதிக மனித உயிர் இழப்புக்குக் காரணமாகிறது.

இவற்றிடம் சற்று எச்சரிக்கையாக இருந்தால்போதும். பாம்பு கடித்தவுடன் பதட்டப்படாமல், அழுகை, கத்துதல், ஓட்டம், ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவிக்கு ஒரு நபரையோ அல்லது 108 அவசர ஊர்தி அல்லது இருக்கும் வாகனத்தில் அரசு மருத்துவமன செல்ல வேண்டும்.

இருக்க கயிறு கட்டுதல் வேண்டாம். கத்தியால் வெட்டி, உறிஞ்ச வேண்டாம். தனியார் மருத்துவமனை அல்லது வேறு வகை வைத்தியம் கால தாமதம் ஏற்படும். பாம்பு க்கடிக்கு நஞ்சு முறிவு மருந்து (ANTI SNAKE VENOM) சரியான நேரத்தில் கொடுக்கப்பட உயிர் பிழைத்து கொள்ளலாம்.

பாம்பைக் கண்டவுடன் அதை கொல்ல முற்படாமல் வனத்துறைக்கு (0452 2536279) அல்லது உங்கள் அருகில் உள்ள பாம்பு மீட்பாளர் உதவியை நாடலாம்" என்றார்.

பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

வீட்டைச் சுற்றி துய்மையாக வைத்துக் கொள்ளவும். பழைய பொருட்கள் அடசலாக வைக்காமல், குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து வெளி வரும் கழிவு நீர் குழாய்கள் சல்லடை போன்ற வலை கொண்டு மூடி வைக்க வேண்டும். தூங்கும் முன் கட்டில்கள், தலையணை, மெத்தை விரிப்பு, மெத்தை அடியில் சோதனை இட வேண்டும். தூங்கும் அறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாயிற் கதவின் கீழ் அல்லது பக்கவாட்டு இடைவெளி இல்லாமல் நிரந்தரமாக அடைத்து வைக்க வேண்டும். கழிவறை மற்றும் குளியலறை போதிய வெளிச்சம் மற்றும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

காலணிகளை பொதுவாக ஷு (shoe) தரையில் வைக்காமல், உயரமான இடத்தில் வைக்க வேண்டும். நன்கு சோதித்த பின்பு அணிய வேண்டும்.

வாகனத்தை குறிப்பாக கைப்பிடி, முன் பகுதி நன்கு சோதனை செய்து பின் இயக்குவது நல்லது.

குப்பைகள் மற்றும் எலிகளை வீட்டுக்குள்ளும், வீட்டின் சுற்றுப் பகுதியில் இல்லாமல் பார்த்து கொள்வது. இரவில் டார்ச் விளக்கு இல்லாமல் வெளியில் செல்வது கூடாது. தோட்டத்து வேலை செய்பவர்கள் வேலை செய்யும் இடத்தை நன்கு சோதனை இட வேண்டும், சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
நெகிழ வைத்த அருண் ஜேட்லி குடும்பத்தினர்: ஓய்வூதியம் வேண்டாம் என மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம்


மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி : கோப்புப்படம்

புதுடெல்லி

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் ஓய்வூதியத்தைத் தங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக மாநிலங்களவையில் குறைவாக ஊதியம் பெறும் 4-ம் நிலை பணியாளர்களுக்கு வழங்குங்கள் என குடியரசு துணைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை நிலுவையில் இருக்கும் அனைத்து தொகையையும் மாநிலங்களவையில் 4-ம் நிலை பணியாளர்களுக்குப் பிரித்துக் கொடுங்கள் என்று அருண் ஜேட்லியின் மனைவி சங்கீதா ஜேட்லி கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜேட்லி, கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் எம்ய்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏழைகளுக்கும், தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அதிகமாக உதவும் எண்ணம் கொண்டவர். தனது துறையில் பணியாற்றும் குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அவரே செலுத்திவிடுவார். மேலும் பண்டிகை, விழாக் காலங்களில் அவர்களுக்குப் புத்தாடை, இனிப்புகள், பரிசுகள் வழங்கி மகிழ்ச்சிப்படுத்துவார்.



பாஜக தலைமையில் 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்தபோது, தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அமைச்சர் பதவியை அருண் ஜேட்லி தவிர்த்தார். பிரதமர் மோடி வந்து சமாதானம் செய்தபோதிலும் தனது உடல்நலத்தால் ஏற்க முடியாத சூழலில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் கிருஷ்ணா மேனன் மார்க் என்ற அரசுக் குடியிருப்பில் இருந்து காலி செய்து, தெற்கு டெல்லியில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு ஜேட்லி குடிபெயர்ந்தார்.

மத்திய அமைச்சராக ஜேட்லி இருந்தபோதிலும் கூட மிகப்பெரிய அரசு குடியிருப்பில் வாழ அருண் ஜேட்லி விரும்பாமல், சாதாரண வீட்டிலேயேதான் குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜகவில் மனிதநேயம் மிக்க தலைவராகவும், அதிகமான உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் அருண் ஜேட்லியை பெருமையாக மூத்த தலைவர்கள் கூறுவார்கள்.

மறைந்த அருண் ஜேட்லி மாநிலங்களவை எம்.பி.யாக இருந்ததால், அவர் மறைவுக்குப் பின் அவரின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியமாக மாதம் ரூ.20 ஆயிரம், கூடுதல் ஓய்வூதியமாக ரூ.1500 என வழங்கப்படும். இதுதவிர கடந்த 1999-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்ததால், கூடுதல் ஓய்வூதியமாக ரூ.22,500 என மாதம் ரூ.50 ஆயிரமும், ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.3 லட்சம் வரை கிடைக்கும்.

இந்நிலையில், அருண் ஜேட்லிக்கு கிடைக்கும் மாத ஓய்வூதியத் தொகையை மாநிலங்களவையில் 4-ம் நிலையில் பணியாற்றும் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வழங்குங்கள் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு அருண் ஜேட்லி குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, September 27, 2019

2 மாத வாடகை தான் அட்வான்சாக வாங்கணும்! 


Updated : செப் 27, 2019 04:26 | Added : செப் 27, 2019 04:25 | 

புதுடில்லி: வீடுகளை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகையை மட்டுமே, முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக பெற வேண்டும்' என, மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், வாடகை வீட்டு வசதியை முறைப்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசு துவக்கியுள்ளது.இதில், வாடகை வீட்டு வசதி மாதிரி சட்ட வரைவை, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழகத்தில், 'நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள் உரிமைகள், பொறுப்புகள் சட்டம் - 2017' நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம், பல்வேறு திருத்தங்களுக்கு பின், பிப்ரவரி, 22ல் அமலுக்கு வந்துள்ளது.இதற்காக, 32 மாவட்டங்களிலும் வாடகை வீட்டுவசதி ஆணையம், வாடகை தொடர்பான வழக்குகளுக்காக, 32 நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வாடகை தீர்ப்பாயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதற்குமான மாதிரி வாடகை வீட்டுவசதி சட்டத்தை, மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மீது, பொது மக்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகின்றன.இந்த மாதிரி சட்டத்தில், வாடகைதாரர்களின் உரிமைகளுக்கு இணையாக, நில உரிமையாளர்களின் உரிமைகளுக்கும், பாதுகாப்பு அளிக்கும் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, வீட்டை வாடகைக்கு விடுவோர், இரண்டு மாத வாடகைக்கு இணையான தொகையை மட்டுமே முன்பணம் அல்லது வைப்புத் தொகையாக வசூலிக்க முடியும்.

வாடகையை உயர்த்த வேண்டும் என்றால், அது குறித்து, குடியிருப்போருக்கு, மூன்று மாதங்களுக்கு முன் அறிவிக்க வேண்டும். ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், வாடகைதாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால், அவருக்கு அபராதம் விதிக்க, இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதன்படி, ஒப்பந்த காலத்துக்கு பின், ஒவ்வொரு மாதத்துக்கும், இரு மடங்கு வாடகையை, உரிமையாளர் வசூலிக்க முடியும்.பெருநகரங்களில் வணிக நோக்கில், வாடகை வீட்டுவசதி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தும் வகையில், புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Saturday, September 21, 2019


  • செப் 28 (ச) மகாளய அமாவாசை
  • செப் 29 (ஞா) நவராத்திரி ஆரம்பம்
  • அக்., 02 (பு) காந்தி ஜெயந்தி
  • அக்., 02 (பு) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 111வது பிறந்தநாள்
  • அக்., 07 (தி) சரஸ்வதி பூஜை
  • அக்., 08 (செ) விஜயதசமி

Wednesday, August 21, 2019

‘A training programme is just the beginning, and not the end’

21/08/2019 , Liffy Thomas

Illustration: Sebastian Francis

Training programmes should be outcome-driven. So, a mechanism to assess the impact of a training programme should be built into it.

Jacob Jesuroon, head - People Function, Access Healthcare, points out that the assessment should be taken step-by-step, and he illustrates the idea with one of the training systems followed at his company.

Step one: The immediate response to a training programme.

When a training programme has been completed, feedback is sought from the participating employees about the trainer, training content and training environment.

Step two: The effectiveness of a training programme is gauged from how much it has improved workaday behaviour. “So, after the training is done, we have 30 days of on-the job coaching, which is essentially about observing the extent of behaviour and capability improvement of employees.

Wherever necessary, the trainer works with the participants to ensure that lessons taught during the training are reiterated,” says Jesuroon.

If the trainer had identified any specific need for the employee, 45 days of personalised coaching is provided to them. Following this, they are issued a certificate.

Jesuroon says, “It takes time to exhibit competitiveness, so we measure the overall effectiveness of a training initiative at the 120th day. We are happy seeing any improvement above 20% and a continuous learning attitude,” says Jesuroon.

Outcome metrics of an effective supervisor training programme are: managing their team, providing for a productive work environment, empowering their team, and providing employees with the right career opportunities in the organisation.

Another indicator of effective supervisor programme is the happiness quotient of the team members, measured every day through an internally developed app called “Happiness Meter.”

Jesuroon says that it is the job of line managers to support the career goals of employees.

“Line managers have to ensure their team members are upskilled from time to time and are growing internally,” says Jesuroon, adding that they insist that at least 70% of the members in a team are promoted once in two years.

Sunday, August 18, 2019



  • ஆகஸ்ட் 19 (தி) மகா சங்கடஹர சதுர்த்தி
  • ஆகஸ்ட் 23 (வெ) கிருஷ்ண ஜெயந்தி
  • செப் 02 (தி) விநாயகர் சதுர்த்தி
  • செப் 05 (வி) ஆசிரியர் தினம்
  • செப் 06 (வெ) தினமலர் இதழுக்கு 69 வது பிறந்த நாள்
  • செப் 07 (ச) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்

Sunday, July 28, 2019

  • ஜூலை 31 (பு) ஆடி அமாவாசை
  • ஆகஸ்ட் 03 (ச) ஆடிப்பெருக்கு
  • ஆகஸ்ட் 04 (ஞா) ஆடிப்பூரம்
  • ஆகஸ்ட் 04 (ஞா) நாக சதுர்த்தி
  • ஆகஸ்ட் 05 (தி) கருட பஞ்சமி
  • ஆகஸ்ட் 07 (பு) கருட ஜெயந்தி

Sunday, June 16, 2019

வேண்டாமல் தரும் தெய்வம் நீதானே!

Added : ஜூன் 16, 2019 02:56





தாயின் அன்புக்கு சிறிதும் குறைந்தது இல்லை தந்தையின் தியாகம். பிள்ளைகளை தன் தோளில் சுமந்து, சிறகடித்து பறக்க கற்றுக்கொடுப்பவர் தந்தை. பிள்ளைகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவதற்காக, தன்னலமற்ற தியாகத்துடன் ஆயுள் முழுவதும் உழைப்பவர். தந்தையின் உழைப்புக்கு குழந்தைகள் மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 16) உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எப்படி வந்தது

அமெரிக்காவில் 1909ல் வாஷிங்டனைச் சேர்ந்த 'சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண் தான், முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். இவரது தாய், தனது ஆறாவது பிரசவத்தின் போது மரணம் அடைந்தார். தாயின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு துாண்டியது.

Wednesday, May 22, 2019

வரவிருக்கும் விசேஷங்கள்

மே 29 (பு) அக்னி நட்சத்திரம் முடிவு

ஜூன் 05 (பு) ரம்ஜான் பண்டிகை

ஜூன் 15 (ச) காஞ்சி பெரியவர் பிறந்த தினம்

ஜூன் 21 (வெ) சர்வதேச யோகா தினம்

ஜூலை 04 (வி) விவேகானந்தர் நினைவு நாள்

ஜூலை 08 (தி) ஆனி உத்திரம்

Thursday, May 2, 2019



  • மே 04 (ச) அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
  • மே 07 (செ) அட்சய திரிதியை
  • மே 09 (வி) ஆதி சங்கரர் ஜெயந்தி
  • மே 12 (ஞா) அன்னையர் தினம்
  • மே 17 (வெ) நரசிம்ம ஜெயந்தி
  • மே 18 (ச) புத்த பூர்ணிமா

Wednesday, April 10, 2019

விஷ வாயு பாதிப்பை எப்படித் தடுக்கலாம்?

கழிவுநீர்த்தொட்டியைச் சுத்தம் செய்வது, பாழடைந்த கிணற்றைத் தூர் வாரப்போவது, பாதாளச் சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பை நீக்கப்போவது என்று செல்லும் தொழிலாளர்களில் பலரும் விஷவாயுவால் பாதிக்கப்பட்டு இறப்பது என்பது அடிக்கடி நமது நாட்டில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. வருடந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வகையில் இறக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருமாள் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது வீட்டின் கழிவுநீர் தொட்டியின் அடியில் தேங்கிய கழிவை அகற்றுவதற்காக, சுத்தம் செய்ய நினைத்து இறங்கியபோது, அவரை விஷ வாயு தாக்கியது. அவரைக் காப்பாற்ற முயன்ற மகன்கள் இருவரும், உதவவந்த மூவரும் விஷ வாயு தாக்குதலுக்கு ஆளாகினார்கள். இதில் 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒரு தொடர்கதை! வேலூரில், தோல் தொழிற்சாலைக் கழிவுநீர்த் தொட்டியில் விஷ வாயு தாக்கி 3 ஊழியர்கள் பலி. பல்லாவரம்: தனியார் கம்பெனி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் இறப்பு. பெரும்புதூரில் உள்ள ஹோட்டல் ஊழியர்களை விஷவாயு தாக்கியதில் 3 பேர் இறப்பு. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

முக்கிய வாயுக்கள்:
கழிவு நீரிலிருந்து, ஹைட்ரஜன் சல்பைட், அம்மோனியா, மீத்தேன் , ஈஸ்டர்கள் , கார்பன் மோனாக்சைடு, சல்பர் டையாக்ஸைட் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகிய   வாயுக்கள்  வெளிப்படலாம். கழிவுநீர்த் தொட்டிகளில், வடிகால் பணித் தளங்களில் வெளிப்படும் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சல்பைட் ஆகிய வாயுவை மனிதர்களின் நுகர்வு சக்தியைக் கொண்டு கண்டறிய முடியாது.

ஏனென்றால், இந்த வாயு நுகர்வு உணர்வு நரம்புகளை உடனே பாதித்துவிடும். இதனால், மணமில்லை என்று உள்ளே இறங்கக் கூடாது. குறைந்த அளவிலான இந்த வாயுக்களின் வெளிப்பாட்டால்,  தலைவலி, கண் எரிச்சல், சோர்வு, தொண்டைக்கமறல், இருமல், வாந்தி, கிறுகிறுப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். அதிகமான அளவு வெளிப்பட்டால் உயிரை இழக்க நேரிடும்.

பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் காப்பாற்றலாம்?

மேற்கூறியபடி, எல்லா முன்னெச்சரிக்கைகளுடன் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வது, பாழடைந்த கிணற்றைத் தூர் வாரப்போவது, பாதாளச் சாக்கடைகளில் வேலைகள் செய்வது என்பதை மேற்கொண்டால் ஆபத்து ஏற்பட வழியில்லை.

ஒருவேளை, ஏதாவது சிறு கவனக் குறைவால் ஊழியர் பாதிக்கப்பட்டாலும், ஏற்கெனவே செய்த ஏற்பாடுகளால், முதலுதவி செய்து, ஆக்ஸிஜன் கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, தேவைப்பட்டால் செயற்கை சுவாசம் தந்து நோயாளியைக் காப்பாற்றிவிட முடியும்.

ஆனால், பொது மக்களைக் காப்பாற்றப் போகிறேன் என்று இது போன்ற இடங்களில் உள்ளே குதித்தால், அவர்களால் அவர்களையே காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.

எப்படி மின்சாரம் பாதித்தவரைத் தொட்டால், தொட்டவரும் இறக்க வேண்டியது வருமோ, அதேபோன்றே, விஷவாயு பாதித்தவரைக் காப்பாற்றப் போகும் அனைவருமே இறக்க நேரிடும் என்பதற்கு உதாரணம் தான். ஸ்ரீபெரும்புதூரில், ஒரே நேரத்தில் 6 பேரும் இறந்த சம்பவம்..

 பாதிப்பை எப்படித் தடுக்கலாம்?

# வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் தொட்டிக்குள் நுழையக் கூடாது.
# இதற்கெனப் பயிற்சி பெற்றவர்கள்தாம் உள்ளே இறங்க வேண்டும்
# தொட்டிக்குள்ளிருக்கும் காற்றின் தன்மை, வெளிக் காற்றின் தன்மை ஆகியவற்றை முறை யான கருவிகளைக் கொண்டு ஆராய வேண்டும்.
# கற்பூரத்தை, மெழுகுவர்த்தியைக் கொளுத்தித் தொட்டிக்குள் போட்டு தொட்டிக்குள் விஷ வாயு இருக்கிறதா என்று பரிசோதனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
# கழிவு நீர்த்தொட்டிக்குள் முதலில் விஷவாயுக்கள் எந்த அளவில் உள்ளன என்பதை அதற்குரிய விசேஷக் கருவியைக் கொண்டு (Calibrated gas detector) பரிசோதனை செய்து அறிய வேண்டும்.
# Multiple-sensor gas monitor-ஐப் பயன்படுத்த வேண்டும்.
# உள்ளே சென்று டிரில்லிங் மிஷின் மூலம் துளைத்தல் போன்ற வேலைகளைச் செய்யக் கூடாது.
# தொட்டிக்குள் பல்வேறு இடங்களிலிருந்து வரும் கழிவுக் குழாய்களை அடைத்து வைக்க வேண்டும்.
# உள்ளே இறங்குவதற்கு முன்பாக அங்குள்ள திடப் பொருட்கள் மற்றும் கழிவுகளை, (jet cleaning) கருவிகளைக் கொண்டு வெளியேற்ற வேண்டும்.
# கழிவு நீரையும் அகற்றி, உட்புறம் காற்றோட்டமாக இருக்க வெளிக்காற்றை உள்ளே செலுத்தவேண்டும்.
# ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால் பின் முகக் கவசம் கொண்ட சுவாச உபகரணம் (Personal protective equipment) அணிந்து, உள்ளே இறங்க வேண்டும்.
# அதே நேரம் வெளியிலிருந்து அவரைக் கண்காணிக்கவும் தொடர்பு கொள்ளவும் தேவைப்பட்டால் உதவுவதற்கும் குறைந்தபட்சம் ஒரு பணியாளர் இதே போன்ற சுவாச உபகரணங்களுடன் தயாராக இருக்க வேண்டும்.
# முதலுதவிப் பெட்டி ஆக்ஸிஜன் ஆகியவையும் தயாராக வைத்திருப்பது அவசியம்.
# இப்பணியில் ஈடுபடுபவர், வாடை தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மது அருந்திவிட்டுப் பணியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
# ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவர்கள் தயாராக இருப்பது நல்லது.
# விழிப்புடன் இருப்போம்! விஷவாயு பாதிப்பைத் தடுப்போம்!

மீத்தேன்:
கழிவுப் பொருட்களின் மீது பாக்டீரியா வகைக் கிருமிகள் புரியும் வினைகளால் இந்த வாயு உருவாகிறது. இது நிறமற்றது. எளிதில் பற்றி எரியக் கூடியது. கழிவுத் தொட்டிகளுக்குள் இருக்கும் காற்றை வெளியேற்றும், இதன் காரணமாக, இங்கு ஆக்ஸிஜன் சுவாசிப்பதற்குப் போதுமானதாக இருக்காது. மூச்சுத்திணறல், படபடப்பு, பார்வை மங்குதல், தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பிறகு, நினைவை இழந்து உயிரை விட நேரிடும்.

கார்பன் மோனாக்சைடு:

இது, நிறமும் மணமும் இல்லாத வாயு. 1,200 பிபிஎம் செறிவுகளால் உடலுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு விடும். இந்த வாயு, ஹீமோகுளோபினோடு சேர்ந்து, கார்பாக்ஸிஹீமோகுளோபினாக மாறுவதால், தலைவலி ஏற்படும். உடல் செர்ரிப்பழம் போல் சிவந்துவிடும். மூளை பாதிக்கப்படும், சுவாச செயலிழப்பு ஏற்படும். தலைச்சுற்றலும் மயக்கமும் ஏற்பட்டு நினைவிழந்துவிடுவார்கள். இறப்பு சம்பவிக்கும்.

ஹைட்ரஜன் சல்பைட்:

அழுகிய முட்டை மணம் கொண்டது. ஆனால், ஹைட்ரஜன் சல்பைட் (> 100 பிபிஎம்) செறிவால் உடல் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் வாசனையைக் கண்டறிய முடியாது. அதே நேரம் 1000 பிபிஎம்) என்ற உயர்ந்த அளவுக்கு மேல் சென்றால், நோயாளி உடனடியாக மயக்கமடைந்து விழுந்துவிடுவார். இந்த வாயு, செல் சுவாசத்துக்குத் தேவையான சைட்டோ குரோம் ஆக்ஸிடேஸ் என்ற நொதியைத் தடை செய்வதால், செல் சுவாசம் பாதிக்கப்படும். இறப்பு சம்பவிக்கும்.

கட்டுரையாளர்,
மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு:
muthuchellakumar@gmail.com

Saturday, March 30, 2019

வரவிருக்கும் விசேஷங்கள்


ஏப்ரல் 01 (தி) புதுக்கணக்கு துவக்கம்

ஏப்ரல் 06 (ச) தெலுங்கு புத்தாண்டு

ஏப்ரல் 10 (பு) வசந்த பஞ்சமி

ஏப்ரல் 13 (ச) ஸ்ரீராம நவமி

ஏப்ரல் 13 (ச) ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்

ஏப்ரல் 14 (ஞா) தமிழ்ப் புத்தாண்டு

Thursday, February 28, 2019

  • மார்ச் 04 (தி) மகா சிவராத்திரி
  • மார்ச் 15 (வெ) காரடையான் நோம்பு
  • மார்ச் 20 (பு) ஹோலிப் பண்டிகை
  • மார்ச் 21 (வி) பங்குனி உத்திரம்
  • ஏப்ரல் 01 (தி) புதுக்கணக்கு துவக்கம்
  • ஏப்ரல் 06 (ச) தெலுங்கு புத்தாண்டு

NEWS TODAY 22.04.2024