Sunday, November 10, 2019

அறிந்ததும் அறியாததும்: மவுனம் பேசியதே!




ஆங்கிலத்தில் மட்டுமல்ல பிரெஞ்சு, ஜெர்மன் மொழி, இந்தோனேசிய மொழி, இத்தாலி மொழி, ஸ்பானிஷ், டர்கிஷ் உள்ளிட்ட பல மொழிகளில் மவுன எழுத்துக்கள் உள்ளன. “அதுதான் உச்சரிக்கத் தேவை இல்லையே, அப்புறம் எதற்கு அநாவசியமாக இந்த எழுத்துக்களைச் சொற்களுக்கு இடையில் எழுத வேண்டும்?” என்று தோன்றலாம்.

ஆங்கில மொழி என்பது பிற மொழிகளின் கலப்பால்தோன்றிய மொழியாகும். 85 சதவீத ஆங்கிலச் சொற்கள்ஜெர்மன் மொழி, பிரெஞ்சு, லத்தின் ஆகிய மூன்று மொழிகளில் இருந்து பெறப்பட்டவை. 12 சதவீத ஆங்கிலச் சொற்கள் கிரேக்கம், சீனம், ஜப்பானிய மொழிகளில்இருந்து உயிர்பெற்றவை. இப்படி பிற மொழிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால்தான் மவுன எழுத்துகள்கொண்ட மொழியாக ஆங்கிலம் விளங்குகிறது.


ஆனால், திகைத்துப்போக வேண்டியதில்லை. மவுனசொற்களுக்கான வரையறையைப் புரிந்துகொண்டுவிட்டால் அதை தவிர்த்துவிட்டு ஆங்கிலச் சொற்களைச்சரியாக உச்சரிக்கக் கற்றுக்கொண்டுவிடலாம்.

இதோ சில உதாரணங்கள்

1. மவுனமான H

Hour, Honest, Heir, Honour உள்ளிட்டவை பிரெஞ்சுமொழியில் இருந்து பெறப்பட்ட ஆங்கிலச் சொற்கள்.

இவற்றில் முதல் எழுத்தாக H இடம்பெறும்போது அங்கு H மவுன எழுதாகிவிடும்.

அதுவே, Hotel, House போன்ற அசலான ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்தாக இடம்பெறும்போது H அதற்கான ஒலியுடன் உச்சரிக்கப்படும்.

2. மவுனமான K

N என்ற எழுத்துக்கு முன்னால் K இடம்பெறும்போதெல்லாம் K மவுன எழுத்தாகிவிடும். அப்போது அந்தச் சொல்லை N-ல் இருந்துதான் உச்சரிக்கத் தொடங்க வேண்டும்.

Knowledge, Knight

3. மவுனமான L

D, F, M, K, ஆகிய எழுத்துக்களுக்கு முன்னால்இடம்பெறும்போது L மவுனமாகிவிடும். உதாரணத்துக்கு, would, half, palm, yolk. (ஆனால், scold (ஸ்கோல்ட்) என்று சொல்லும்போது L கேட்குதே என்று ‘திட்டாதீர்கள்’. விதிவிலக்கு உண்டு!)

4. மவுனமான M

N-க்கு முன்னால் M இடம்பெற்றால் அது மவுன எழுத்தாகிவிடும். உதாரணத்துக்கு, mnemonic.

5. மவுனமான N

M-க்குப் பின்னால் N வந்து, அதுவே சொல்லின்கடைசி எழுத்தாக இருக்கும்போது N மவுனமாகிவிடும். உதாரணத்துக்கு, Column, Hymn, Solemn.

தொடர்ந்து மவுன எழுத்துக்களைப் பற்றிப் பேசுவோம்!

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...