Thursday, March 17, 2016

High Court ruling on compassionate employment


17.3.2016

HINDU

The Madras High Court Bench here has directed Tamil Nadu Water Supply and Drainage (TWAD) Board to appoint on compassionate ground a person who was a minor at the time of his father’s death in harness in 2007 but still made an application for a job through his mother in order to comply with the condition of staking a claim for the benefit within three years of death.

Allowing a writ petition filed by M. Sugadev of Dindigul district, Justice Pushpa Sathyanarayana held that TWAD Board should not have “mechanically” rejected a second application made by the writ petitioner in 2014, after attaining majority, on the ground that compassionate employment could not be granted to a person below the age of 18 years as per a Government Order issued in 2010.

The judge quashed an order passed by the Managing Director of TWAD Board on June 15, 2015 rejecting the petitioner’s plea for compassionate employment and directed the official to consider the application within four weeks and “provide an appropriate appointment” because already eight years had passed since the demise of his father A. Muthusamy who served as an Assistant Executive Engineer.

She agreed with the petitioner’s counsel, R. Karunanithi, that the TWAD Board Managing Director ought not to have cited the petitioner’s age in 2007 as a reason for rejecting the second application made in 2014.

Stating that the petitioner was born in March 1993, the counsel said that the claimant was 15 years old at the time of his father’s death and 21 years old while making the second application.

Clarity sought on UGC notification

HINDU
Clarity sought on UGC notification

A recent notification by the University Grants Commission to vice chancellors of all universities has confused professors, including administrative authorities.

In a notification to Vice- Chancellors dated March 1, the UGC said that “the period of active service spent on pursuing research degree, i.e. for acquiring Ph.D degree simultaneously without taking any kind of leave may be counted as teaching experience for the purpose of direct recruitment/promotion to the post of associate professor and above.”

On the face of it, the notification seems to address an issue involving candidates pursuing Ph.D degree.

But, the Association of University Teachers members point out that it would not apply to the State as the government had already issued an order, recognising a Ph.D scholar’s effort with several incentives and a few years’ remission in service at the entry level itself.

UGC’s Vice Chairman H. Devaraj said the notification was for those who entered service with NET/SET scores but take extraordinary periods of leave during research.

Private firms, individuals can't use jammers: Government ECONOMIC TIMES

Private firms, individuals can't use jammers: Government
ECONOMIC TIMES
PTI Jul 17, 2015, 04.51PM IST

NEW DELHI: Private firms and individuals cannot buy or use jammers in the country whereas security agencies have to give details of threat perception to a VIP being secured by them and get prior permission of authorities before using the equipment, according to fresh norms set out by the government.
Under the new policy, the jammers can be procured only by defence forces, state police departments, jail authorities and central government security agencies.
Prior permission of Secretary (Security) in Cabinet Secretariat must be obtained before procurement of jammers, it said.
The new norms bar examination conducting bodies to procure jammers. They will have to go through an authorised PSU vendor if they require jammers.
The statutory examination conducting bodies are allowed to deploy low-powered jammers to prevent unfair means during examinations. "They would be given permission only to take it on lease or rent basis from authorised PSU and would therefore have to pay for using jammers as per the contractual obligation with the PSU vendor," it said.
These norms take into account the need to guard against random proliferation of jammers as well as to ensure that jammers installed do not unduly interfere with the existing mobile phone networks and with the equipment being used by security agencies, the Cabinet Secretariat said.
The new policy bars import of jammers without requiring a license from Directorate General of Foreign Trade (DGFT).
Jammer models manufactured by M/s ECIL and M/s BEL, which are evaluated by concerned security agencies, can be procured.
However, central or state PSUs, wanting to manufacture jammers, can apply to the Secretariat giving details of the model, the source of technology and other relevant information, it said.
"Inviting open tender from unauthorised manufacturers is a violation of the policy of Government of India in matters of procurement of jammers," the Secretariat said.
For seeking prior permission for installation of jammers in jails, the total number of jammers required for installation in prisons need to be assessed by jail authorities in consultation with the local office of the wireless adviser, Department of Telecommunications, before the proposal is submitted for seeking approval, it said.
Any central or state government undertaking, with requisite manufacturing capability and necessary technology can request for registration as a jammer manufacturer after getting mandatory clearances.

Wednesday, March 16, 2016

Private firms, individuals can't use jammers: Government

Private firms, individuals can't use jammers: Government
ECONOMIC TIMES
PTI Jul 17, 2015, 04.51PM IST
 NEW DELHI: Private firms and individuals cannot buy or use jammers in the country whereas security agencies have to give details of threat perception to a VIP being secured by them and get prior permission of authorities before using the equipment, according to fresh norms set out by the government.
Under the new policy, the jammers can be procured only by defence forces, state police departments, jail authorities and central government security agencies.
Prior permission of Secretary (Security) in Cabinet Secretariat must be obtained before procurement of jammers, it said.
The new norms bar examination conducting bodies to procure jammers. They will have to go through an authorised PSU vendor if they require jammers.
The statutory examination conducting bodies are allowed to deploy low-powered jammers to prevent unfair means during examinations. "They would be given permission only to take it on lease or rent basis from authorised PSU and would therefore have to pay for using jammers as per the contractual obligation with the PSU vendor," it said.
These norms take into account the need to guard against random proliferation of jammers as well as to ensure that jammers installed do not unduly interfere with the existing mobile phone networks and with the equipment being used by security agencies, the Cabinet Secretariat said.
The new policy bars import of jammers without requiring a license from Directorate General of Foreign Trade (DGFT).
Jammer models manufactured by M/s ECIL and M/s BEL, which are evaluated by concerned security agencies, can be procured.
However, central or state PSUs, wanting to manufacture jammers, can apply to the Secretariat giving details of the model, the source of technology and other relevant information, it said.
"Inviting open tender from unauthorised manufacturers is a violation of the policy of Government of India in matters of procurement of jammers," the Secretariat said.
For seeking prior permission for installation of jammers in jails, the total number of jammers required for installation in prisons need to be assessed by jail authorities in consultation with the local office of the wireless adviser, Department of Telecommunications, before the proposal is submitted for seeking approval, it said.
Any central or state government undertaking, with requisite manufacturing capability and necessary technology can request for registration as a jammer manufacturer after getting mandatory clearances.

Tuesday, March 15, 2016

எம்ஜிஆர் 100 | 14 - எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Return to frontpage
M.G.R. மீது மிகவும் மதிப்பு கொண்டவர் என்.டி.ராமராவ். இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டு பேரும் தங்கள் மொழி படவுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கியவர்கள். இருவரும் அரசியலில் ஈடுபட்டு தனிக் கட்சி தொடங்கி முதல் அமைச்சரானவர்கள். எம்.ஜி.ஆர் - என்.டி.ஆர் என்று அழைக்கும்போது ஒலி கூட ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும்.
எம்.ஜி.ஆர் மீது என்.டி.ராமராவ் வைத்திருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உதாரணமாக ஒரு சம்பவம். எம்.ஜி.ஆரை வைத்து ‘குமரிக் கோட்டம்’, ‘உழைக்கும் கரங்கள்’ படங்களை எடுத்தவர் கோவை செழியன். அதிமுகவில் இருந்தவர். அவரை முதலாளி என்று செல்லமாக அழைப்பார் எம்.ஜி.ஆர்.
கோவை செழியன் தெலுங்கிலும் படங்கள் தயாரித்துள்ளார். தெலுங்கில் என்.டி.ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். ராமராவ் அப்போது மிகவும் பிஸியாக இருந்த நேரம். அவருடன் கோவை செழியனுக்கு நெருக்கமும் கிடையாது. தான் தயாரிக்க இருக்கும் படத்துக்கு திடீரென்று கேட்டால் ராமராவ் ‘கால்ஷீட்’ கொடுப்பாரா என்று கோவை செழியனுக்கு சந்தேகம்.
எம்.ஜி.ஆரை சந்தித்தார். என்.டி.ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்பும் தனது எண் ணத்தையும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உடனே, ராமராவுடன் தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர். பேசினார். படத் தயாரிப்பு சம்பந்தமாக ராமராவைச் சென்று சந்திக்கும்படி செழியனிடம் கூறினார்.
அதன்படி, ஐதராபாத் சென்று ராம ராவை சந்தித்தார் செழியன். ‘எம்.ஜி.ஆர். சொல்லி வந்திருக்கிறேன். உங்களை வைத்து படமெடுக்க...’ என்று செழியன் சொல்லி முடிக்கும் முன்பே, சிரித்துக் கொண்டே அவரை கையமர்த்திவிட்டு என்.டி.ராமராவ் கேட்ட கேள்வி, ‘‘ஷூட்டிங்கை எப்ப வெச்சுக்கலாம்?’’
எம்.ஜி.ஆருக்கு என்.டி.ராமராவ் கொடுத்த மதிப்புக்கும் மரியாதைக்கும் இது சான்று.
என்.டி.ராமராவ் தனிக் கட்சி தொடங்கி முதல்வராகும் முன்பே தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்து முதல்வ ராகிவிட்டார். அவரது பாணியில் தானும் தனிக் கட்சி தொடங்க முடிவு செய்தார் ராமராவ். தனக்கு முன்னோடியாக விளங்கும் எம்.ஜி.ஆரிடம் ஆலோசனையும் ஆசியும் கேட்பதற் காக சென்னை வந்து எம்.ஜி.ஆரை சந்தித்தார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்த எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி ‘‘கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க?’’
‘‘தெலுங்கு ராஜ்யம்’’... ராமராவின் பதில்.
எம்.ஜி.ஆர். சொன்னார். ‘‘தெலுங்கு தேசம் என்று பெயர் சூட்டுங்கள். பொருத்தமாக இருக்கும்.’’
அதை ராமராவ் ஏற்றுக்கொண்டார்.
‘‘எம்.ஜி.ஆர் எனக்கு வழிகாட்டி. அண்ணனைப் போன்றவர் அவரைப் பின்பற்றியே அரசியலுக்கு வந்தேன்’’ என்று அறிவித்த ராமராவ், தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் தேர் தல் பிரசாரங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்யும் பாணியை முதலில் ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரைப் போலவே ஆந்திரா விலும் திறந்த வேனில் சென்று சூறாவளி பிரசாரம் செய்த ராமராவ், மகத்தான வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தார்.
எம்.ஜி.ஆரிடம் ஆசி பெறுவதற்காக மீண்டும் சென்னை வந்து அவரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார். எம்.ஜி.ஆரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ராமராவுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் தனது வீட்டில் தடபுடல் விருந்தளித்தார்.
எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர். விருந்தின்போதே சென்னை நகரின் தண்ணீர் பிரச்சினையையும் ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட் டால் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்றும் ராம ராவிடம் கூறினார். எம்.ஜி.ஆர். சொன்னால் ராமராவிடம் மறுப்பேது? அதன் தொடர்ச்சி யாக உருவானதுதான் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டம். 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்வராக ராமராவ் பதவியேற்றார். அடுத்த 4 மாதங் களில் தெலுங்கு கங்கை திட்டம் தொடக்க விழா நடந்தது.
1983-ம் ஆண்டு மே 25-ம் தேதி சென்னையில் நடந்த பிரம்மாண்டமான தெலுங்கு கங்கை திட்ட தொடக்க விழாவில் பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டார். திட்டத்தை செயல் படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர்.
1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தபோது என்.டி.ராமராவ் சென்னை வந்து கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்...
‘எம்.ஜி.ஆர். மறைவின் மூலம் எனது குருநாதரை இழந்துவிட்டேன்’.
எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர்.
தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த பல ரீமேக் படங்கள் தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்தவை. ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ படம்தான் தமிழில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனது. 7 சென்டர்களில் வெள்ளி விழா கொண்டாடி புதிய சாதனை படைத்தது. எம்.ஜி.ஆர். திரையுலகை விட்டு விலகும் வரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் சாதனை முறியடிக்கப்படவில்லை.
படம் உதவி: ஞானம்

எம்ஜிஆர் 100 | 16 - அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!

Return to frontpage

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.

எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.

படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்

‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’

பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்

‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’

பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும்.

இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.

பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.

பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.

சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’

பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.

இந்தியாவின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி எழுதிய நூலிலிருந்து…


இந்தியாவின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி எழுதிய நூலிலிருந்து…


இந்தியாவின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி எழுதிய நூலிலிருந்து…

லால் பகதூர் சாஸ்திரி நாட்டின் தலைமை அமைச்சராகப் (பிரதமராக) பொறுப்பேற்ற வரை அவரிடம் சொந்தமாக மகிழ்வுந்து இருந்ததில்லை. குழந்தைகளாகிய எனக்கும் எனது தம்பி தங்கைகளுக்கும் குடும்பத்திற்கென்று சொந்தமாக மகிழ்வுந்து ஒன்று வேண்டுமென்கிற ஆவல் எப்பொழுதும் இருந்துவந்தது. ஆனால், சாஸ்திரி அதற்கு ஏற்பளிக்கவில்லை. ஆகவே, அவர் தலைமை அமைச்சர் பொறுப் பேற்ற பின்னர் மகிழ்வுந்து சொந்தமாக வாங்கும் வேண்டுகோளை அவரிடம் முன்வைத்தேன்.

ஒரு நாள் மாலையில் அவர் என்னை அழைத்து மகிழ்வுந்து வாங்குவதென்று தீர்மானித்துவிட்டதாகத் தெரிவித்தார். நாங்கள் மெய்சிலிர்த்துப்போனோம். தனது பணியாளர் ஒருவரை அழைத்து தனது வங்கிக் கணக்கின் இருப்புத் தொகை குறித்தும் மகிழ்வுந்து ஒன்றின் விலை குறித்தும் அறிந்துவரச் சொன்னார். அவருடைய வங்கிக் கணக்கில் ரூ. 7000 இருந்தது. ஃபியட் நிறுவன வண்டி ஒன்றின் விலை ரூ. 12000.

இந்தியத் தலைமை அமைச்சருடைய வங்கி இருப்பு ரூ. 7000 மட்டுமே என்பதை அறிந்து திகைத்துப் போனோம். இருப்பினும் அவர் எங்களை ஏமாற்றவில்லை. இந்தியத் தலைமை அமைச்சரான அவர் பஞ்சாப் தேசிய வங்கியில் கடனுதவி பெறுவதற்கு மனுச்செய்தார். எங்களுக்காக ஒரு மகிழ்வுந்து வாங்கினார். ஓராண்டிற்குப் பின்னர் அவர் மரணமடைந்தார். வங்கிக் கடன் திரும்பச் செலுத்தப்படாமல் இருந்தது.

அரசு கடனைத் தள்ளுபடி செய்ய முன்வந்தபோதிலும் எனது தாயார் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மாதந்தோறும் பெற்ற ஓய்வூதியத் தொகையிலிருந்து கடனை சாஸ்திரிஜி இறந்து மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டார். அந்த மகிழ்வுந்து வெறுமனே பயணிக்கும் வண்டி என்பதற்கும் மேலாக எனக்குப் பொருள் பொதிந்த ஒன்றாகத் தோன்றியதால் அதனைப் பயன்படுத்தியதில் பெருமை கொள்கிறேன். நான் என்றென்றைக்கும் எண்ணித் திளைக்கக் கூடிய மதிப்பீடுகளும் நினைவுகளும் அந்த வண்டியில் பொதிந்துள்ளன.

CBSE class XII students in tears after math exam

CBSE class XII students in tears after math exam

Even teachers admit the paper was bit tough, social media abuzz with complaints

Anxious discussions dominated scenes outside many exam centres in the city as students in tears complained that the Standard XII CBSE Mathematics Board Examination paper was extremely tough.

“Concepts such as Linear Programming and Matrices which have generally got easy questions over the years had tough questions this time. Every question was tricky, as a result of which many of us found it tough to finish the paper on time and many students, including the top scorers in schools, were crying after the exam,” said Shreya, a student.

A maths teacher from a school in Chennai admitted that it was a standard paper where the difficulty levels were high. “Class 10 exams are usually easy. For Class 12, students will have to really prepare well. This year, the question paper was a bit difficult. Compared to last year when only two questions were difficult, this year’s question paper had more complicated sums which were unfamiliar,” she said.

N. Divya said her son, who expected to score a centum, would find it hard to get above 90 marks. “For science students like him who want to pursue engineering, the cut-off marks will automatically come down now and we will be in no position to compete with State board students who score centums, making it impossible for us to secure seats on merit,” she said. Questioning why not many sums from the NCERT syllabus found a place in the paper, a student said, “For many of us who just went by the prescribed textbook and did not prepare with other guides, it was a difficult paper to crack. Online Forums Complaint Board and Indian Consumer Complaints Forum exploded with posts from students who demanded leniency in correction and lashed out against the Board for a tough paper. Many students took to sharing their grievances on Facebook and urged other students to post on the forums for the CBSE to take note. Parents and students from the city sent tweets to Union Minister Smriti Irani about the “tough” paper.

Chemistry paper also tough

State Board students taking the Plus II students Chemistry exam also said the difficulty level was much beyond their expectations. “A few of the questions were tricky for us and it was overall a challenging paper,” said K. Bhavani, a student.
(With inputs from S.P. Saravanan in Salem).

குவியும் மின்னணுக் கழிவுகள்

குவியும் மின்னணுக் கழிவுகள்
By எஸ். சந்திரசேகர்
First Published : 15 March 2016 01:27 AM IST
சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம் எடுத்துள்ள கணக்கெடுப்பில், மக்கிப் போகாத கழிவுகளில் பாலிதீன் பைகளுக்கு அடுத்த இடத்தில் மின்னணு மற்றும் மின்பொருள் கழிவுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது, தயாரிப்பு நிறுவனங்களே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்
துள்ளது.
திறன்மிகு தொழிலாளர்கள் இல்லாததும், பயன்படுத்தி வீசியெறியும் கலாசாரமும் (யூஸ் அண்டு த்ரோ)தான் இதற்கு முக்கிய காரணம்.
உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்விசிறிகள் பழுது என்றால் அவற்றில் "பேரிங்', "கண்டன்சர்', "வைண்டிங்' அல்லது இணைப்புகளில் தான் பழுது ஏற்பட்டிருக்கும். பழுதை நீக்கி மீண்டும் செயல்பட வைத்துவிடுவார்கள்.
ஆனால், இப்போது சிறு பழுது என்றால் கூட மின்விசிறியையே தூக்கியெறிந்துவிட்டு, புதிதாக மாற்றும்படி தொழிலாளர்கள் கூறத் தொடங்கிவிட்டனர். அதற்குக் காரணம், அதில் பழுது நீக்கும் திறன் இல்லாதது மற்றும் அதற்கான நேரம் இல்லாதது.
மின்விசிறி உள்ளிட்ட பொருள்களில் "ரீவைண்டிங்' செய்து மீண்டும் ஓட வைக்கும் வழக்கம் வழக்கொழிந்து வருகிறது. "ரீவைண்டிங்' செய்தால் அதிக நாள் உழைக்காது என்று கூறி புதியதை வாங்க வைத்து விடுகின்றனர். அதற்கேற்ப முன்புபோல் ரீவைண்டிங்குகளை தரமாக செய்வதற்கான தொழிலாளர்கள் இல்லை. மேலும், கட்டணமும் அதிகரித்துவிட்டது.
பழுதை நீக்குவதற்கு, செலவழிப்பதற்குப் பதில் புதியதை வாங்கிவிடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது. இதன் விளைவாக, கழிவுகள் அதிகரித்து வருகின்றன. மின்விசிறிகள், "மிக்ஸிகள்', "கிரைண்டர்கள்', தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள் என மின் பொருள் கழிவுகள் அனைத்து பழைய இரும்புக் கடைகளிலும் காணப்படுகின்றன. வீடுகளிலும் இடத்தை அடைக்காமல் கிடைத்த விலைக்கு தள்ளிவிடுவோம் என எடைக்குப் போட்டுவிடுகின்றனர்.
மின் பொருள்களுக்குத்தான் இந்த நிலை என்றில்லை. அதைவிட அதிகமாக மின்னணு கழிவுகள் தொல்லை தருகின்றன. ஆரம்பகாலத்தில் வந்த சலவை இயந்திரங்கள் அனைத்தும் இயந்திரவியலை அடிப்படையாகக் கொண்டவை. "ஸ்ப்ரிங்' கடிகாரத்தை அடிப்படையாக் கொண்ட "டைமர்' என்ற கருவியின் மூலம் அவை இயங்கின. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்ததும், அவை மின்னணு முறைக்கு மாற்றம் பெற்றன.
இயந்திரத்தின் செயல்பாடு முற்றிலும் மின்னணு பலகைகளால் ("போர்டு') கட்டுப்படுத்தப்படுகிறது. லேசான மின்சார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் கூட இந்த பலகைகள் பழுதடைகின்றன. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தப் பலகைகளையும் பழுது பார்க்க முடிந்தது.
ஒவ்வொரு ஊரிலும் இதற்கான திறன்மிக்க ஓரிரு தொழிலாளர்கள் இருந்தனர். இயந்திர தயாரிப்பு நிறுவன பழுதுநீக்கும் மையத்திலும் பழுது நீக்கிக் கொடுத்தனர்.
ஆனால், தற்போதுள்ள பலகைகளில் எதுவும் செய்ய முடியாது. பலகை பழுதானால் அதை மாற்றிவிட்டு, புதியதைத்தான் பொருத்த வேண்டும். தயாரிப்பு நிறுவனங்களின் பழுதுநீக்கும் மையங்களும் அதைத்தான் செய்கின்றன. அப்படியானால் அந்த பழைய பலகை... அது வீசியெறியப்படுகிறது.
பண்டிகைக் காலங்களில் அனைத்து நிறுவனங்களும் உபயோகித்த பொருள்களை "எக்சேஞ்ச்' என பெற்றுக்கொள்ளும். அவற்றில் பெரும்பாலானவை அந்த நிறுவனங்களால் பெறப்படுபவை அல்ல. அந்தந்த ஊர்களில் உள்ள பழம்பொருள் விற்பனையாளர்கள் தான் விலை வைத்து பெற்றுக்கொள்வார்கள்.
பயன்படுத்திய பொருள்கள் சந்தை மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வந்தது. 10 ஆயிரம் ரூபாய்க்கு புது குளிர்சாதனப்பெட்டி விற்கும்போது, பயன்படுத்திய பெட்டியை 3 ஆயிரத்துக்கு இவர்கள் விற்பார்கள். நடுத்தர வர்க்கத்துக்கு அது பயன்பட்டு வந்தது.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பொருள்களில் இருந்த தரம் இப்போதுள்ள பொருள்களில் இல்லை. இதனால் பயன்படுத்திய பொருள்களை வாங்குவோர் அவற்றுடன் போராடவேண்டிய நிலை உருவானது.
பல வீடுகளில் அந்தக் காலத்தில் பாடல் கேட்கும், விடியோ பார்க்கும் மின்காந்த நாடாக்களை (கேசட்கள்) என்ன செய்வது எனத் தெரியாமல் சேர்த்து வைத்துள்ளனர். இப்போது அவற்றுடன் குறுந்தகடுகளும் சேர்ந்து கொண்டுவிட்டன.
இந்தக் கழிவுகளே குவிந்து வரும் நிலையில் "மிக்ஸி', "கிரைண்டர்', மின்விசிறி போன்றவையும் கழிவுகளாகக் குவியும் போது அவற்றை அழிப்பதே சவாலான விஷயமாகிறது. இந்த நிலையில் மின்னணு கழிவுகளும் குவியும்போது எப்படி அழிக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.
மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கு மருத்துவமனைகள் உதவியுடன் தனி அமைப்பு செயல்பட்டு வருவது போன்று, மின்சாதன, மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கு எந்த அமைப்பும் இல்லை.
குறுந்தகடுகளை சாலைகளில் வீசுகின்றனர். அதில் உள்ள பிளாஸ்டிக், ரசாயனப்பூச்சு என அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை. அவற்றை மொத்தமாகக் குவித்து தீ வைத்து விடும்போக்கே உள்ளது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் நச்சுக்காற்று பரவுகிறது.
இந்தக் கழிவுகளை மேலாண்மை செய்ய தயாரிப்பு நிறுவனங்களே ஏற்பாடு செய்யலாம். "எக்சேஞ்சில்' பெறப்படும் பொருள்களை பழுதுநீக்க திறன் மிக்க தொழிலாளர்களை நிறுவனங்கள் உருவாக்க
வேண்டும்.
பழுதுநீக்கி தரப்படுத்தி அவற்றை பழுது நீக்கப்பட்ட பொருள் என்றே விலையைக் குறைத்து உத்தரவாதம் வழங்கி விற்கலாம். இதன்மூலம் கழிவுகள் பெருமளவு குறைக்கப்படும்.
மின்னணு பலகை உள்ளிட்ட பொருள்களையும் பழுதுநீக்கி பயன்படுத்தும் விதத்தில் தயாரித்தால், அந்தக் கழிவுகளையும் தவிர்க்கலாம். குறுகிய லாப நோக்கங்களை விடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தயாரிப்பு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே இது சாத்தியம்... நடக்குமா?

காஸ் மானியத்தை விட்டுக்கொடுக்காத பணக்காரர்கள்'

[06:57, 15/3/2016 காஸ் மானியத்தை விட்டுக்கொடுக்காத பணக்காரர்கள்'


புதுடில்லி: ''சமையல் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்தவர்களில், 3 சதவீதத்தினர் மட்டுமே பணக்காரர்கள்,'' என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது:சமையல் காஸ் மானியம் வேண்டாம் என, நாடு முழுவதும், 85 லட்சம் பேர், தாமாக முன்வந்து அறிவித்தனர். இவ்வாறு தெரிவித்தவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் மற்றும் பணக்காரர்கள், இதில், 3 சதவீதமே உள்ளனர். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட மானியங்களை, பணக்காரர்களே அனுபவிக்கின்றனர். மக்களுக்கு நலத் திட்டங்கள் சென்றடைய, அதிக சம்பளம் வாங்குபவர்கள், பணக்காரர்கள், மானியங்களை விட்டுத் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
[07:02, 15/3/2016] Appa: கொதிக்குது மதுரை


மதுரை, சேலம், ஈரோடு நகரங்களில் நேற்று 38.8 டிகிரி 'செல்சியஸ்' வெப்பம் பதிவானது.
வெப்பம் கடுமையாக இருப்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில் 'கடலோர மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் காற்று வீசுவது மிகக்
குறைவாக உள்ளது. அத்துடன் காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளதே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்க காரணம்' என்றனர்.- நமது சிறப்பு நிருபர் -

மருத்துவ கல்வி முறையில் உள்ள பிரச்னைகளுக்கு... தேசிய அளவில் நுழைவுத்தேர்வு, திறனறி தேர்வு நடத்த திட்டம்

சிகிச்சை! மருத்துவ கல்வி முறையில் உள்ள பிரச்னைகளுக்கு... தேசிய அளவில் நுழைவுத்தேர்வு, திறனறி தேர்வு நடத்த திட்டம்

DINAMALAR
புதுடில்லி: மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும், மருத்துவ, 'சீட்'டை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதை தடுக்கவும், நாடு முழுவதுக்கும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தவும்; மருத்துவ பட்டப்படிப்பை முடிப்பவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தவும்மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மருத்துவக் கல்வி வியாபாரமாவதைத் தடுக்கவும், பல்வேறு தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நன்கொடை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வாங்குவதை தடுக்கவும், மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும் ஆலோசனைகளை வழங்க, பார்லிமென்ட் குழு ஆய்வு செய்தது.இந்த குழுவினர், தமிழகத்தின் ஊட்டி, கோயம்புத்துார் உட்பட நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவ பல்கலைகளில் ஆய்வு செய்தனர்.
அறிக்கை தாக்கல்:

பல்வேறு மருத்துவ நிபுணர் கள், கல்வி நிபுணர்கள், அரசுஉயரதிகாரிகள், பெற்றோர், மாணவர்கள், கல்லுாரிகளின் பிரதிநிதி கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.அதன்படி, 126 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, இந்த பார்லிமென்ட் குழு தாக்கல் செய்தது.இந்த பரிந்துரைகள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்காக, தேசிய அளவில் ஒரே ஒரு நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந்துரையை செயல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.அதேபோல் சிலர், பணம் கொடுத்து மருத்துவக் கல்லுாரி யில் சேர்ந்து விடுகின்றனர். இவர்களுக்கு, மருத்துவ தொழிலை மேற்கொள்ளும் தகுதி இருப்பதில்லை. இவர்கள், மருத்துவ தொழில் செய்வதை தடுக்கும் வகையில், மருத்துவப் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்துவதை அமல்படுத்த வும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மத்திய அரசு தீவிரம்:

இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதை விரைவுபடுத்தி இந்தபரிந்துரைகளை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முழு முனைப்புடன் உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆண்டுக்கு55 ஆயிரம் பேர்:

உலகிலேயே அதிக அளவிலான மருத்துவ பட்டதாரிகள், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தயாராகின்றனர். சராசரியாக, 400 மருத்துவக் கல்லுாரிகளில், ஆண்டுக்கு, 55 ஆயிரம் பேர், எம்.பி.பி.எஸ்., முடித்து வெளியேறுகின்றனர். அதேபோல், 25 ஆயிரம் பேர் முதுகலை பட்டத்தை முடிக்கின்றனர்.
கோர்ட்டில்வழக்கு:

இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையின் படி, தேசிய அளவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்த, சுகாதார துறை முயற்சியை மேற்கொண்டது.இது தொடர்பாக, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் தொடர்ந்த வழக்கில், அரசின் இந்த முயற்சிக்கு சுப்ரீம் கோர்ட், 2013ல் தடை விதித்தது.மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில், நீதிபதிகள் அல்தமாஸ் கபீர், விக்ரம்ஜித் சென் ஆகியோர் தடை விதித்த அதே நேரத்தில், மற்றொரு நீதிபதியான அனில் தவே, அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால்,இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது.

ரொம்ப மோசம்:
பார்லிமென்ட் குழு மேற்கொண்ட ஆய்வில், பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பார்லிமென்ட் குழு, அறிக்கையில் கூறியுள்ளதாவது:

*மருத்துவக் கல்வியில், பயிற்சியே மிகவும் முக்கியம். ஆனால் தற்போதைய கல்வி முறையில், இதற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. மருத்துவ பட்டப் படிப்பை முடிக்கும் பலருக்கும், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை வெளியே எடுப்பது, காயங்களுக்கு தையல் போடுவது போன்ற அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் கூட தெரியவில்லை.
*பட்டப்படிப்பை முடித்தவுடன், 'இன்டர்ன்ஷிப்' எனப்படும், நேரடி தொழில் பயிற்சி பெற வேண்டும். ஆனால் பெரும்பாலானோர், மேற்படிப்பு படிப்பதற்கு தயார் செய்வதற்கு, அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
*தனியார் கல்லுாரிகளில், 50 லட்சம் ரூபாய் வரை, டொனேஷனாக பெறப்படுகிறது. கல்லுாரியின் தரத்துக்கு ஏற்ப, இது சில இடங்களில் அதிகமாக வும் உள்ளது.
*இதனால் பணம் இல்லாத, உண்மையில் நல்ல திறமையுள்ள, ஆர்வமுள்ள மாணவர்கள், மருத்துவ துறைக்கு வர முடிவதில்லை.
*தமிழகத்தின் ஊட்டி, கோவை, கர்நாடகத்தின் பெங்களூரு போன்ற நகரங்களில் சோதனை செய்தோம். பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில், பல்கலைகளில் தனித்தனியாக தேர்வுகள் நடைபெறுவதால், மருத்துவர்களுக்கு என பொதுவான தகுதிகள் இல்லை என்ற கருத்து வலியுறுத்தப் பட்டது.
*'மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், திறமை வாய்ந்தவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கவும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்' என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

பணத்தைக் கொண்டு போகவே முடியவில்லையே?

பணத்தைக் கொண்டு போகவே முடியவில்லையே?
தலையங்கம்: தினத்தந்தி

தமிழகத்தில் 15–வது சட்டசபைக்கான தேர்தல் மே மாதம் 16–ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22–ந் தேதி தொடங்குகிறது. ஆனால், இந்த தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் 4–ந் தேதியே வெளியிடப்பட்டுவிட்டது. 4–ந் தேதி முதலே அதாவது, இந்த தேர்தல் தேதியை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததில் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. 70 நாட்களுக்கு முன்பே தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்ததால், பல விதிகளின் அமலில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சில விதிகள் கஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றன. தேர்தலையொட்டி, ஆங்காங்கு சோதனை நடத்த சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாகனங்களில் செல்பவர்களை மடக்கிப் பிடித்து சோதனை நடத்துகிறார்கள். சோதனையில், யாராவது ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை கொண்டுபோனால், இந்த பறக்கும் படையினரும், கண்காணிப்பு படையினரும் அதற்கும் கணக்கு கேட்கிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்தால் ஏ.டி.எம். ரசீதை காட்டுங்கள், இந்த பணம் உங்களுக்கு கிடைத்தற்கான ‘பில்’, அல்லது ‘ரசீதுகள்’, அல்லது ‘ஆதாரங்கள்’ ஏதாவது உள்ளதா?, எதற்காக கொண்டுபோகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். இதுபோல, வங்கிகளோ, நிதிநிறுவனங்களோ பணத்தை எடுத்துக் கொண்டு போனால் கூட, அதற்கும் உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்று சோதனை செய்கிறார்கள்.

சில நேரங்களில் அந்த இடத்தில் உடனே ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யமுடியவில்லை என்றால், அந்த பணத்தைக் கைப்பற்றி மேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். உடனடியாக மாவட்ட வருவாய் அதிகாரியை அணுகி, இதற்கான அத்தாட்சிகளை தாக்கல் செய்தால்தான், பணத்தை திரும்ப பெறமுடியும். சில நேரங்களில் உரிய அத்தாட்சிகளை தாக்கல்செய்ய சற்று தாமதமானால் அரசு கருவூலத்தில் போய் அந்த பணத்தைக் கட்டிவிடுகிறார்கள். அதன்பிறகு உரிய ஆதாரத்தை காட்டினாலும், பணத்தை திரும்பப்பெற பலநாட்கள் ஆகிவிடும். இந்த பறக்கும்படை சோதனைகளால் நியாயமான வகையில் முக்கியமான செலவுகளுக்காகப் பணம்கொண்டு செல்பவர்களுக்கு மிகவும் சிக்கல் ஏற்படுகிறது.

இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் ரூ.50 ஆயிரம் என்பது சாதாரணமாக ஆகும் செலவுகளுக்குத் தேவையான பணம்தான். குடும்பங்களில் திருமணங்களுக்கு 4 பவுன் நகைவாங்கவேண்டுமென்றால் கூட, ரூ.1 லட்சத்துக்குமேல் செலவாகும். இதுபோல, முக்கியமான செலவுகளுக்கு வீட்டிலுள்ள சேமிப்பை எடுத்துக்கொண்டு செல்பவர்களுக்கு உடனடியாக அந்த பணத்துக்கு ஆதாரமாக என்ன ரசீதை காட்டமுடியும்?. மேலும், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், அன்றாடம் விற்பனையாகும் தொகையை வங்கியில் போடுவதில்லை. ஒவ்வொரு நாளும் விற்பனையாகும் தொகையை மொத்தமாக கையில் எடுத்துக்கொண்டுதான், மொத்த வியாபாரிகளிடம் போய் சரக்குளை வாங்குவார்கள். அந்த வகையில், ஒரு சிறிய கடையை எடுத்துக் கொண்டாலும், அன்றாடம் சரக்குகளை வாங்க ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதுபோல, சிறிய தொழில்கள் செய்பவர்களெல்லாம் அவசரமாக பொருட்கள் வாங்க ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டுபோவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. சில தனியார் பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி. மாணவர் சேர்க்கைக்குக்கூட ரூ.50 ஆயிரத்துக்குமேல் நன்கொடை கொடுக்க பணமாகத்தான் எடுத்துச்செல்ல வேண்டியதிருக்கிறது.

பணம் கொடுத்து ஓட்டுவாங்கும் அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த நிச்சயமாக இந்த கட்டுப்பாடு தேவைதான். ஆனால், அரசியல் கட்சிகள் கொண்டுசெல்லும் பணத்துக்கும், பொதுமக்களும், வியாபாரிகளும் கொண்டுசெல்லும் பணத்துக்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. அது அதிகாரிகளுக்கும் நன்றாகத்தெரியும். தேர்தலில் பண நடமாட்டத்தை தடுக்கிறோம் என்ற பெயரில், பொதுமக்களும், வியாபாரிகளும் இன்னல்களுக்கு ஆளாவது என்பது ஏற்புடையதல்ல. எனவே, தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் பணத்தை கொண்டுபோகிற ஆட்கள் யார்?, என்ன காரணங்களுக்காக கொண்டுபோகிறார்கள்? என்று பார்த்து நடவடிக்கை எடுக்கலாம். பொதுமக்களும் கூடுமான வரையில், பணப்பரிமாற்றங்களை வங்கிப்பரிமாற்றங்களாகவே வைத்துக்கொண்டால் எந்த பிரச்சினைக்கும் இடமிருக்காது.

சொல் வேந்தர் சுகி சிவம்

சொல் வேந்தர் சுகி சிவம்


இளைஞர்களிடம் இல்லாத "மை' ! 

இன்றைய இளைய தலைமுறையிடம் இருக்கிற உன்னதமான "மை' திறமை. இல்லாத "மை' பொறுமை. காத்திருப்பது என்பதும் ஒரு கலைதான். நம்முடைய Turn வரும் வரை பொறுமையாக இருப்பது என்பது அவசியம். அதற்கு நம் மீது நமக்கு ஆளுமை வேண்டும். 

ஆறு மாதம் விளையும் அரிசியை மூன்று மாதத்தில் விளைய வைத்தது விஞ்ஞானம். ஆறு வருஷத்தில் காய்க்கும் தென்னையை மூன்று வருஷத்தில் காய்க்க வைத்தது விவசாயம். விளைவு..... இந்தக் குறுவைப் பயிர்களையும் அவசர கால விவசாய விளைவுகளையும் உண்ணும் இளைய தலைமுறை அலாதியான அவசரத்தில் இருக்கிறது. படபடப்பு... பரபரப்பு... பதற்றம்... அவசரம்... ஆத்திரம்... இவை எதையுமே சாதிக்கப் போவதில்லை. கொழுத்த மீன் வரும் வரை காத்திருக்கும் "கொக்கொக்க' என்ற குறள் இளைய தலைமுறைக்கு அவசியம் புரிய வேண்டும். 

பஸ்ஸýக்கோ, ரயிலுக்கோ, சாப்பிடவோ, திருமணத்திற்கோ எதற்குமே காத்திருக்கத் தயாராக இல்லை.. அவசரப்பட்டால் முதுமையும் முந்தி வரும். மரணமும் விரைவில் வரும். அவசரப்படாத, நிதானம் பல ஆபத்துகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். படபடக்காமல் பிரச்னைகளைக் கையாண்டால் புதிய பிரச்னைகள் தவிர்க்கப்படும். இது பழைய தலைமுறையிடமிருந்து புதிய தலைமுறை படிக்க வேண்டிய கட்டாயப் பாடம்! 

இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டமாக இருந்த காலம் அது. இந்திய விடுதலை வீரர்களையும், தலைவர்களையும் துல்லியமாக ஆங்கில அரசு வேவு பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. பால கங்காதரத் திலகர் அப்போது விடுதலைப் போரின் பெருந் தளபதி. ஆறு மாத காலமாக அவர் வீட்டில் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரர் தாம் வேலையில் இருந்து நிற்க விரும்புவதாக அறிவித்தார். திலகர் "ஏன்?' என்றார். ""நீங்கள் தரும் சம்பளம் ஆறு ரூபாய்..... அது போதவில்லை'' என்றார். ""அது சரி... சமைப்பதற்கு நான் தரும் சம்பளம் ஆறு ரூபாய்... ஆனால் என் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதற்கு உனக்கு பிரிட்டிஷ் சர்க்கார் தரும் சம்பளம் இருபத்தி நாலு ரூபாய்... ஆக முப்பது ரூபாய் சம்பாதிக்கிறாய். அப்படி இருந்துமா உனக்குச் சம்பளம் போதவில்லை!'' என்று இடி இடி என்று சிரித்தார் திலகர். உண்மையில் அந்தச் சமையல்காரர் பிரிட்டிஷ் அரசு அனுப்பிய ஒற்றர். ஆறு மாதத்திற்கு முன்பே இது திலகருக்குத் தெரியும். ஆனால் தெரிந்ததாகத் திலகர் காட்டிக் கொள்ளவே இல்லை. பிரிட்டிஷ் அரசு அந்த ஒற்றரை நம்பி ஏமாந்து போனது. அவர் ஒற்றர் என்பதால் திலகர் ஜாக்கிரதையாக இருந்தார். இந்த நிதானம் - பழைய தலைமுறையின் பாராட்டத்தக்க பண்பு. இது இன்றைக்கு இருக்கிறதா?

இணையாநிலை

அளவுக்கு மீறிய பொறுமையை நான் வற்புறுத்தவில்லை. பத்து வயதிலேயே நாற்பது வயதுக்குரிய நாற்காலிகளை அடைய நினைப்பதும், பதினைந்து வயதிலேயே இருபத்தைந்து வயதுக்குரிய கட்டில்களைப் பகிர்ந்து கொள்வதும், முப்பது வயதிலேயே அறுபது வயதுக்குரிய முதுமையில் தளர்வதும் சகிக்கும்படியாக இல்லை. இந்த அவசரம் இளமைக்கு அவசியமா? 

பஞ்ச தந்திரக் கதைகளிலே அருமையான கதை ஒன்று உண்டு. ஒரு குட்டிக் குரங்கு படாத பாடுபட்டு ஒரு தோட்டம் போட்டது. செடிகள் வளர்ந்து மரமாகிப் பூத்துக் குலுங்கி காய்கனிகள் கொட்டும். ஆசை ஆசையாய் அள்ளித் தின்னலாம் என்று கணக்குப் போட்டது. என்ன கொடுமை! எதுவுமே முளைக்கவில்லை. ஆசை நிராசையானது. அது ஒரு நாள் சீனியர் குரங்கிடம் போய் ஆலோசனை கேட்டது. ""எதுவுமே முளைக்கவில்லை'' என்று ஒப்பாரி வைத்தது. சமாதானப்படுத்திய சீனியர் குரங்கு ""விதை போட்டா தண்ணி ஊத்தணும். நீ தண்ணி ஊத்தியிருக்க மாட்டே'' என்றது. ""ஆங்... ஒரு விதைக்கு எட்டு பக்கெட் தண்ணி தினம் தினம் காலையும் மாலையும் ஊற்றுவேன்'' என்று குட்டிக் குரங்கு குற்றச்சாட்டை மறுத்தது. 

""அடடா... எட்டு பக்கெட் தண்ணி விட்டா விதை என்னாகும்... அழுகிப் போயிருக்கும்... அதான் முளைக்கல'' என்று தீர்ப்பு வழங்கியது சீனியர். குட்டிக் குரங்கோ... ""ஒரு விதை கூட அழுகல'' என்று உறுதியாக உறுமியது. ""அதெப்படி உனக்குத் தெரியும்'' என்றது சீனியர். ""நான் தான் விதை முளைச்சிருச்சான்ணு தினம் எடுத்து எடுத்துப் பாக்கறனே'' என்றது குட்டிக் குரங்கு. 

தினம் தினம் விதையை எடுத்து எடுத்துப் பார்த்தால் எப்படி முளைக்கும்? அது அதற்கு என்று ஒரு காலம் இருக்கிறது. அந்தக் காலம் வரை காத்திருக்க வேண்டியது அவர் அவர் கடமை. அதற்குத் தேவை பொறுமை. ""பொறுத்தது போதும் பொங்கி எழு'' என்கிற குட்டித் தலைவர்கள் வெட்டிப் பேச்சை நம்பி, பொங்கிக் கொண்டே இருந்தால் வளர முடியுமா? திறமையோடு கூடப் பொறுமையும் கலந்தால் இளைய தலைமுறைக்கு வெற்றி நிச்சயம்.

Saturday, March 12, 2016

எம்ஜிஆர் 100 | 20 - அசைவ உணவுப் பிரியர்!

Return to frontpage

M.G.R. நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.

எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.

கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 2-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.

அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.

இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.

அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.

இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்.

‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையான அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு போடப் பட்டது. அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட் டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப் பார்த்த தொழி லாளர்கள் ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளை யில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித் தயங்கி தங்கள் குறையை தெரி வித்தனர். விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்கும நிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலாளர்களை அனுப்பி விட்டார்.

மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிட அமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறு பவர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள். ‘‘அண்ணே, உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.

‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்து சாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.

வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிர வேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்து பரிமாறுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்து வரு கிறோம்’’... பரிமாறியவர்களின் பவ்யமான பதில்.

‘‘ஏன்? தொழிலாளர்களுக்கு உள்ளது என்ன ஆச்சு?’’... எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மை ஏறியது.

‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும்தான் போடச் சொல்லியிருக்காங்க’’... இந்த பதிலுக் காக காத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படி சாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழி லாளர்கள்தான் அதிகம் உழைக்கிறார்கள். அவங்க தான் நல்லா சாப்பிடணும். அவங்களுக்கு வெறும் முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியா? அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னா அதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க. சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்.

மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக் கும் எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையான அசைவ சாப்பாடுகள்தான்.

எம்.ஜி.ஆருக்கு 1971-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது கிடைக்கக் காரணமாக இருந்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் ஒரு காட்சி. சக ரிக் ஷா தொழிலாளி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ரிக் ஷா ஓட்ட முடியாத நிலை. அதனால், அன்று அவரது குடும்பத்துக்கு வருமானம் இல்லை. அதனால் சாப்பாடும் இல்லை. மதியம் அங்கு வரும் சாப்பாட்டுக்கார அம்மாவான பத்மினியிடம் இருக்கும் மொத்த சாப்பாட்டையும் எம்.ஜி.ஆர். வாங்கி, தான் கூட சாப்பிடாமல் நோயுற்ற தொழிலாளியின் வீட்டில் எல்லாரும் சாப்பிடக் கொடுத்தனுப்புவார்.

எம்.ஜி.ஆர். சாப்பிடாதது பற்றி ஒரு தொழிலாளி வருத்தப்பட, இன்னொரு தொழிலாளி ‘‘மத்தவங்க வயிறு நிறைஞ்சாத்தான் இவருக்கு (எம்.ஜி.ஆருக்கு) மனசு நிறைஞ்சுடுமே’’ என்பார்.

அதற்கு பதிலளிக்கும் எம்.ஜி.ஆர்., ‘‘மனுஷங்க வாழ்த்தறதை நம்ப முடியறதில்ல. ஆனால், வயிறு வாழ்த்தினால் நம்பலாம்பா’’ என்று கூறுவார்.

எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள். இன்றும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வயிறு கள் எம்.ஜி.ஆரை தினமும் வாழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

அசைவ உணவுகளை எம்.ஜி.ஆர். விரும்பி சாப்பிடுவார். இறால் குழம்பு மிகவும் இஷ்டம். சாப்பாட்டில் தினமும் கட்டாயம் ஏதாவது கீரை இருக்க வேண்டும். இனிப்பு வகைகளில் பாஸந்தி அவருக்கு பிடிக்கும். முந்திரி பகோடா அவரது ‘ஃபேவரைட்’. இதை எல்லாம் சாப்பிட்டாலும் தினமும் தவறாமல் சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்திருந்து நீராகாரம் பருகுவார். கேட்டால், ‘‘உடல் உஷ்ணத்தை இது தணிக்கும் என்பதோடு, நான் பழசை மறக்காமல் இருக்க’’ என்று அடக்கமாக பதிலளிப்பார்.

- தொடரும்...

பதின் பருவம் புதிர் பருவமா? - பழக்கமும் அடிமைத்தனமும்

Return to frontpage

டாக்டர் ஆர்.காட்சன்
போதைப் பொருளான மது எளிதில் கிடைப்பதும், நமது சமூகமே மது அருந்துவதை காபி குடிப்பது போன்ற சாதாரண ஒரு பழக்கமாகப் பார்ப்பதுமே இளம் பருவத்திலேயே குடிபோதையின் அறிமுகம் கிடைப்பதற்கு முக்கியக் காரணம்.

யார் அடிமை?

போதைப் பொருட்களுக்கு அடிமையான பெரும்பாலோர், தாங்கள் அதற்கு அடிமையாகிவிட்டதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் ரொம்பலாம் குடிக்க மாட்டேன்’ என்பது எல்லோரும் சொல்வதுதான். ஒருவர் தினமும் குடிப்பது, குடிக்காமலோ - போதைப் பொருளைப் பயன்படுத்தாமலோ ஒருநாள்கூட இருக்க முடியாத நிலை, நிறுத்தினால் தூக்கமின்மை, கை நடுக்கம் ஏற்படுவது, காலை எழுந்தவுடன் போதைப் பொருளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை போன்ற அறிகுறிகள் எல்லாம், அவர் போதை அடிமையாகிவிட்டார் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.

இன்றைக்குத் தினமும் ஒரு ஃபுல்லோ அல்லது அதற்கு மேலோ குடிப்பவர்கள் எல்லாம் ஒரே நாளில் அந்த நிலையை எட்டிவிடுவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வளரிளம் பருவத்தில் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ சிறிதுசிறிதாகக் குடிக்க ஆரம்பித்தவர்கள்தான். எனவே ‘இன்னைக்கு மட்டும் தானே குடிக்கிறேன், எப்போதாவது தானே எடுத்துக்கொள்கிறேன், நல்லது கெட்டது வரும்போது மட்டும்தானே பயன்படுத்துகிறேன்’ என்று சொல்லித் தப்பிக்க நினைப்பார்கள். கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால், போதைப் பொருட்கள் மூளை நரம்புகளில் மெல்ல மெல்ல ஊடுருவி ஆக்கிரமித்துவிடும் நச்சு என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துக் கல்லூரி முடிக்கும் கட்டத்தில் நிரந்தரக் குடிகாரர்களாகவே பலர் மாறிவிடுவார்கள்.

குடிநோயின் பாதிப்புகள்

முன்பெல்லாம் ஒரு நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் மூத்த மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வி ‘டி.பி. நோய்க்கு டெஸ்ட் எடுத்தாச்சா’ என்பதுதான். ஆனால், இப்போது அதை முந்திக்கொண்டு வரும் கேள்வி குடிநோய்தான். இளம் வயதிலேயே பல வகை நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி, கல்லீரல் மற்றும் கணையப் பாதிப்பு போன்றவை மது அருந்துவதால் ஏற்படுகின்றன.

மேலும் போதையில் நிதானம் இழப்பதால் மாணவப் பருவத்திலேயே ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்கள், விபத்துகளால் மரணம் போன்றவை அதிகரிக்கின்றன. வளரிளம் பருவத்தில் ஆரம்பிக்கும் வலிப்புநோய்க்கும் மதுப்பழக்கம் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

மனதை மாற்ற முடியுமா?

மதுப் பழக்கத்தைப் பொறுத்தவரையில் இளம் பருவத்தினர் மனதில் உள்ள சில தவறான நம்பிக்கைகள் அல்லது காரணங்கள் எளிதில் போதைக்கு அடிமையாக்கிவிடுகின்றன. குடிக்கிற ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை வைத்திருப்பார்கள். வளரிளம் பருவத்தினர் ‘மச்சான், இன்னைக்கு நான் சந்தோசமா இருக்கேன். கண்டிப்பா சரக்கு அடிச்சே ஆகணும்’ என்றோ, ‘மண்டை காயுது, கட்டிங் போட்டாதான் சரியாகும்’ என்றோ காரணம் சொல்லுவார்கள். இப்படிச் சில காரணங்களைச் சொல்லிக் குடிக்க ஆரம்பித்தால், அதுவே பின்னால் குடிப்ப தற்கு ஒரு சாக்குபோக்காக மாறிவிடும். அது மட்டுமல்லாமல் குடிப் பழக்கம், கவலைகளை மறப்பதற்கு நிச்சயமாக மருந்து அல்ல.

புகைப்பழக்கம்

எல்லாப் போதைப் பொருள் பழக்கங்களுக்கும் நுழைவாயில் எதுவாக இருக்கும்? புகைப் பழக்கம்தான். அதை போதைப் பொருள் என்றே பலர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதுவே போதை உலகத்தின் வாசல்.

வளரிளம் பருவத்தில் பலரும் முதன்முதலில் பரிசோதித்துப் பார்க்கும் போதைப் பொருள் சிகரெட் அல்லது பீடிதான். சிலருக்கு அவ்வளவு தைரியம் இல்லாவிட்டாலும் பேப்பரைச் சுருட்டிப் பற்ற வைத்து வாயில் வைத்துக்கொள்வது, நாக்கில் படாமல் ஊதுபத்தியை வாய்க்குள் வைத்துப் புகையை வெளியிடுவது போன்ற செயல்கள் மூலமாகத் தங்கள் ஆசையை வெளிப்படுத்துவார்கள்.

அடிமையாவது எப்படி?

இப்படி ஆரம்பிக்கும் பாதிப் பேர் சில நாட்களில் விட்டுவிடுவார்கள். ஆனால், இயற்கையாகவே பதற்றத் தன்மை உள்ள வளரிளம் பருவத்தினர் இதற்கு அடிமையாக அதிக வாய்ப்பு உண்டு. ஏனென்றால் புகையிலையில் உள்ள ‘நிக்கோடின்’ என்ற வேதிப் பொருள் ஆரம்பத்தில் மனப் பதற்றத்தைத் தணித்து, இப்படிப்பட்டவர்களை கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க வைக்கும். மேலும் கல்லூரிக்குச் சென்ற உடன் இரவில் நீண்ட நேரம் விழித்துப் படிக்கும் வகையில், மூளையைத் தூண்டும் திறனை இது கொண்டிருப்பதால் புகைப்பதைத் தொடர ஆரம்பித்துவிடுவார்கள்.

நிக்கோடின் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களில் மூளை ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால், ஒருவருடைய கவனம் மற்றும் சுறுசுறுப்பைக் கூட்ட உதவும். ஆனால், இது உதவி செய்பவர் போல வந்து பின்பு வில்லனாக மாறிவிடும். எப்படியென்றால், இந்த நிக்கோடின் செயல்படும் நேரம் அதிகபட்சம் இரண்டு மணி நேரம்தான். அதன் பின்பு மூளை நரம்புகள் அதே வேகத்தில் செயல்படக் கூடுதல் நிகோடினை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும். இதனால்தான் நாளடைவில் அதிகபட்சம் இரண்டு மணி நேரம்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் வகுப்புகளின் பாதியிலோ, சினிமா பார்க்கும் போது இடையில் டாய்லெட்டிலோ சென்று தம் அடிக்காமல் பலரால் இருக்க முடிவதில்லை.

என்ன செய்யலாம்?

குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்றாலே சிலருக்கு தம் அடிக்கத் தோன்றும். உதாரணமாக டீ, காபி குடிக்கச் சென்றால் புகைக்காமல் இருக்க முடியாது. எனவே, பழகிப்போன டீக்கடை, பெட்டிக்கடைகளைக் கொஞ்ச நாளுக்குத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை கட்டுப்படுத்த முடியாமல் புகைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால், அதை நிறுத்த நிக்கோட்டின் சூயிங்கம் உதவும். மனநல மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும்.

இது எல்லாவற்றையும் தடுக்க, தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு யார் கட்டாயப்படுத்தினாலும் சிறுவயதிலேயே ‘நோ’ சொல்லிப் பழகவேண்டும். இது புகை, குடிப் பழக்கத்துக்கு மிகவும் பொருந்தும். ‘இதில் என்னதான் இருக்கிறது?’ என்ற ஆவல்தான் முதன்முதலில் போதைப்பொருளை எடுக்கத் தூண்டும் எண்ணமாகும். ‘ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ என்று நினைத்துக்கொண்டு அதை ஆரம்பித்தால், வாழ்க்கையையே அது தலைகீழாக்கும். போதை அடிமையாகும் பட்சத்தில் எந்தக் காரணத்துக்காகக் குடிக்க ஆரம்பித்தார்களோ, அதைவிட மிகப் பெரிய பிரச்சினையாகக் குடிநோய் - போதை மாறிவிடும். முதல் கோணல் முற்றும் கோணலாக முடிந்துவிடும்.

Sairam College asked to submit report UDHAV NAIG

Sairam College asked to submit report


Anna University Registrar S. Ganesan said Sairam Engineering College in West Tambaram had been asked to submit a detailed report on the death of a student on Friday.

“We will also send a committee to the college to get to the bottom of the matter. We will take this up very seriously.”

A. Ilayaperumal, Director, Students Affairs Committee at the university who earlier mediated between the protesting students and the college management said, “As far as Anna University is concerned, we are responsible for the academic aspects of our affiliated colleges such as conducting examinations, ensuring that the affiliated college has adequate facilities and so on. We cannot really force a college to change its ‘social rules’. However, we believe that students must be relaxed and have an amiable atmosphere while pursuing their studies.”

The college authorities ruled out the possibility of the student falling accidentally into the well as it was located in a remote place where students hardly ventured. Enquiries revealed that there were seven wells on the campus that were covered with iron mesh.

The college authorities had decided to replace the mesh with a more secure cover and the process was already complete in a few wells. Since students are not allowed to use mobile phones in the college, it is not clear whether the victim made any calls or sent messages on Friday.

Case registered

Abinath’s parents arrived late on Friday and were taken to the Kundrathur police station, where a case was registered about the boy’s death.

On reports that Abinath had applied for transfer certificate and the management refused to issue the same insisting on payment of fees for four years, CEO, Sairam Group of Institutions.Saiprakash said last year alone TCs were issued to 48 students from the engineering college on request.

“We retain the first year tuition fee only. There is no question of demanding or retaining any other fee when a student seeks TC,” he said.

Meanwhile, a group of students studying in Sairam Engineering College have threatened to launch a strike against the college management.

The Sneha Suicide Prevention Centre helplines are 044-24640050, 24640060, and the government’s helpline is 104.

Degree holders’ details to be made available online..THE HINDU

Degree holders’ details to be made available online

  • R. RAVIKANTH REDDY

It would be hard to cheat the prospective employers with fake degree certificates and credentials in the near future with the Telangana State Council of Higher Education (TSCHE) deciding to consolidate the data base of all degree holders and place it on online for verification.

Data from 2011 will be open to public and prospective employers, including the Government sector, can check the credentials online anytime of any candidate. The data will contain all the details of the candidates including the academic details like marks secured and also personal details such as parents’ names and the college they attended. A meeting of the Registrars and Controller of Examinations of all the universities in Telangana will be held soon to review and take a final decision on the issue.

The TSCHE Chairman, T. Papi Reddy, said that the idea was to plug the increasing complaints on fake credentials being submitted to employers by candidates. Apparently, some candidates are changing their marks sheets totally to gain employment while some are submitting fake documents obtained through touts. The menace is more in IT companies which employs lakhs of people and it is a financial drain to check the credentials of the documents. “There is a need for transparency in the system and this will lead to fairplay in employment. Moreover, fake degrees can be effectively tackled if we make the data open to all,” Prof. Reddy said arguing in favour of it. “We are acquiring servers that can accommodate the huge data keeping in view future need as well.” Companies can check all the details online and reject the fake ones. In fact, it will be a check on candidates who impersonate in the entrance examinations as the data submitted can also be tallied with the available data online by the Convenors.

The fake degrees and credentials have been a big issue ever since the IT market boomed in the US as well as India. A number of students used fake engineering degrees to move to USA in the late 90s.

Convicts did not mean to kill anyone'

TIMES OF INDIA
Three AIADMK men found guilty of burning to death three college girls in Dharmapuri on February 2, 2000 have escaped the noose with the Supreme Court reviewing its own order, and commuting their death penalty into imprisonment for life.
Moments after AIADMK supremo J Jayalalithaa was found guilty in the Pleasant Stay Hotel case and sentenced to one year imprisonment on February 2, 2000, a mob torched at Ilakkiyampatti a Tamil Nadu Agricultural University bus carrying 70 students returning from a field trip. Kokilavani of Namakkal, Hemalatha of Chennai and K Gayathri of Viruddhachalam were burned to death.

On February 15, 2007, a sessions court in Salem sentenced three AIAADMK men -Nedunchezhian, Muniyappan and Ravindran --to death. It also ordered 25 others to undergo seven years of im prisonment. While two others were acquitted of all charges, one accused had died during the pendency of the case. Madras high court up held the death penalty on De cember 6, 2007, and it was con firmed by the Supreme Court on August 30, 2010.

A renewed bid to get their sentences commuted was made when review petitions were filed on their behalf in the Supreme Court. On Fri day , a three judge bench com prising Justice Ranjan Gogoi Justice Arun Mishra and Jus tice Prafulla C Pant commut ed the death sentence into life term by reviewing its order delivered about five and half years ago. Last week witnessed argu ments by top senior counsel, who sought to invoke the doctrine of `diminished responsibility' saying the convicts, who were `victims of mob psychology , had no personal animosity against the victims. Counsel argued that the convicts did not mean to kill anyone but were actually looking to destroy government property .

RGUHS to Revoke Degrees of Five Students

RGUHS to Revoke Degrees of Five Students
BENGALURU: The RGUHS  has decided to revoke the Bachelor of Ayurveda, Medicine and Surgery degrees awarded to five of its students.
The students had got admissions to the Government Ayurveda College in the city and completed the five-year course in three years and got certificates.
The decision was taken at the syndicate meeting on Thursday. The students are Hasib Ahmad, Siddimatam Yasmin, Shaziya Begum, Ramsheena E and Muthyala Venkateshwara Rao. The Department of Medical Education in 2014 had directed the university to inquire into the matter. 

Applications for BE, B.Tech from May 1


Applications for BE, B.Tech from May 1
DECCAN CHRONICLE

CHENNAI: The upcoming Tamil Nadu assembly elections will not affect the engineering admission process as the Tamil Nadu Engineering Admissions (TNEA) committee is set to distribute application forms for the B.E. and B.Tech. courses from May 1. “We are in the process of finalising the dates for engineering admission schedule. Since this is an election year we will mostly stick to last year’s schedule for engineering admission process,” an official from TNEA said.

Elections for the TN assembly will be held on May 16 and counting on May 19. Last year, the applications forms were distributed from May 6 and the last date of issuing the applications were May 27. “Of the 60 application distribution centres in the state, some three or four centres will be counting centres. During the 2011 and 2014 elections, the process of application distributions was largely unaffected. Elections will be over well before the counseling process which will start mid-June,” he said.

“We are planning to print over two lakh application forms this year. Students can also apply online for engineering admissions,” the official said. Each year around two lakh students join the engineering stream through single window counseling and the management quota. TNEA will conduct single window counseling for over two lakh seats available in government, government aided and private engineering colleges. Single window counseling will be held at Anna University’s Guindy campus.

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...