Tuesday, March 15, 2016

காஸ் மானியத்தை விட்டுக்கொடுக்காத பணக்காரர்கள்'

[06:57, 15/3/2016 காஸ் மானியத்தை விட்டுக்கொடுக்காத பணக்காரர்கள்'


புதுடில்லி: ''சமையல் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்தவர்களில், 3 சதவீதத்தினர் மட்டுமே பணக்காரர்கள்,'' என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது:சமையல் காஸ் மானியம் வேண்டாம் என, நாடு முழுவதும், 85 லட்சம் பேர், தாமாக முன்வந்து அறிவித்தனர். இவ்வாறு தெரிவித்தவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் மற்றும் பணக்காரர்கள், இதில், 3 சதவீதமே உள்ளனர். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட மானியங்களை, பணக்காரர்களே அனுபவிக்கின்றனர். மக்களுக்கு நலத் திட்டங்கள் சென்றடைய, அதிக சம்பளம் வாங்குபவர்கள், பணக்காரர்கள், மானியங்களை விட்டுத் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
[07:02, 15/3/2016] Appa: கொதிக்குது மதுரை


மதுரை, சேலம், ஈரோடு நகரங்களில் நேற்று 38.8 டிகிரி 'செல்சியஸ்' வெப்பம் பதிவானது.
வெப்பம் கடுமையாக இருப்பது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில் 'கடலோர மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் காற்று வீசுவது மிகக்
குறைவாக உள்ளது. அத்துடன் காற்றில் ஈரப்பதம் குறைவாக உள்ளதே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்க காரணம்' என்றனர்.- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

Changes in varsities Act opposed

Changes in varsities Act opposed The Hindu Bureau MADURAI 13.09.2026 The members of the Madurai Kamaraj, Manonmaniam Sundaranar, Mother Tere...