Monday, October 30, 2017

வாட்ஸ் ஆப் வாசிகளே.. இதை படிங்கப்பா முதல்ல!

 Posted By: Lakshmi Priya Published: Sunday, October 29, 2017, 9:25 

சென்னை: சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்டவை உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக் கொள்ள உதவி வருகிறது. இதில் வீடியோ, ஆடியோ, புகைப்படம், டெக்ஸ்ட் உள்ளிட்டவைகள் பதிவிடப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தாதவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பர் என்ற அளவுக்கு இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 

டுவிட்டரில் எழுத்துகள் அதிகம் பதிவு அந்தந்த நிறுவனங்கள் இதற்கென கூடுதல் வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் டுவிட்டரில் 140 எழுத்துகள் மட்டுமே டைப் செய்ய முடிந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் அதை இரட்டிப்பாக்கியது. 

மொபைலிலிருந்து அழிக்கலாம் அதுபோல் வாட்ஸ் ஆப்பிலும் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பிய செய்திகளை நமது மொபைல்களில் இருந்து மட்டுமே அழிக்க முடியும். ஆனால் தற்போது மற்றவர்களுக்கு நாம் அனுப்பிய தேவையில்லாத செய்தி, தவறுதலாக அனுப்பப்பட்ட செய்திகளையும் அனுப்புவர்களால் அழிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீக்கப்பட்டதும் காண்பிக்கும் அதற்கு நாம் எந்த செய்தியை அழிக்க விரும்புகிறோமோ அதை தேர்வு செய்து டெலிட் ஃபார் எவ்ரிஒன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். நாம் அனுப்பிய செய்தி மற்றவர்கள் மொபைலிலிருந்தும் டெலிட் ஆகிவிடும். மேலும் குறிப்பிட்ட செய்தி நீக்கப்பட்டுவிட்டதாக பெறுபவர்களுக்கு காண்பிக்கும். அப்டேடட் வெர்சன் ஆனால் செய்தியை அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் மட்டுமே அதை நம்மால் டெலிட் செய்ய முடியும். இந்த வசதியை பெற வாட்ஸ் ஆப்பின் புதிய வெர்சனுக்கேற்ப அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/new-facility-whats-app-is-being-introduced/articlecontent-pf270069-299934.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.121.156.45&utm_campaign=client-rss

அஞ்சு வயசுதாய்யா பள்ளிப் படிப்பை தொடங்க பொருத்தமான காலம்.. புரிஞ்சுக்கங்க!

Posted By: Sutha

Published: Sunday, October 29, 2017, 10:08 [IST]

சார்லட், அமெரிக்கா: பள்ளிப் படிப்பில் நாம் நமது பிள்ளைகளை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறோம் என்று தெரிந்துமே கூட அந்தக் கொடுமையை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மேலை நாடுகளில் இந்த பள்ளிப்படிப்பு என்பது எந்த அளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
மேலை நாட்டு கல்வி முறையும் நம்ம நாடு பள்ளிக்கு கல்வி முறை பற்றியும் ஒரு சின்ன அலசல் இது. நம்ம நாட்டு கல்வி சிறந்ததா அல்லது மேலை நாட்டு கல்வியின் தரம் சிறந்ததா என்று பார்ப்பதை விட எந்த கல்வி நம் குழந்தைகளுக்கு சரியானது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஒரு காலத்தில் நம்முடைய ஊர்களில் ஐந்து அல்லது ஆறு வயதில்தான் பிள்ளைகள் பள்ளி பக்கம் போவார்கள். பிறகு இது 4 வயதாக குறைந்தது. அதுவும் பின்னர் 3 ஆகி இப்போது இரண்டரை வயதிலேயே ப்ரீகேஜி என்று வந்து நிற்கிறோம். ஆனால் மேலை நாடுகளில் பள்ளிக் கல்வி எப்போது ஆரம்பிக்கிறது தெரியுமா?.
 5 வயதில்தான் கேஜியே ஆரம்பிக்கிறது

5 வயதில்தான் கேஜியே ஆரம்பிக்கிறது

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஐந்து வயது முடிந்த பிறகே பள்ளிப் படிப்பு (கே.ஜி என்கிற கிண்டர் கார்டன்) ஆரம்பிக்கிறது. இது நம்ம கல்வி முறையில் (எல்.கே.ஜி.+யு.கே.ஜிக்கு) சமம் என வைத்து கொள்ளலாம். இந்த கே.ஜி இலிருந்து எல்லா குழந்தைகளுக்கும் நம் ஊர் தனியார் பள்ளிகளின் தரத்தோடு அந்த ஊர் அரசு பள்ளிகளில் இலவச கல்வி பயில்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் என்றைக்கு அரசு இலவச கல்வி அதுவும் தரமான கட்டமைப்பு கொண்ட தரமான சூழ்நிலையில் தர போகிறது என்பது இன்னும் பதில்லில்லாத கேள்விகளாகவே நீடிக்கிறது .
 ஆடி ஓடுங்கள் மழலைகளே

ஆடி ஓடுங்கள் மழலைகளே

நம் ஊரை போல இரண்டரை வயதிலேயே குழந்தையை கொண்டு போய் ப்ரீகே.ஜி வகுப்பில் முழு நேரமும் உட்கார் என்று அவர்கள் அனுப்புவதில்லை. அது நாள் வரை ஓடி ஆடி கொண்டிருந்த குட்டீஸ்களை இரண்டரை வயது ஆனதும் நீ வளந்தாச்சு தங்கம் என்று பள்ளியில் சேர்த்து அங்கே அவர்களை ஒரு பெஞ்சிலோ நாற்காலியிலோ நாள் முழுக்க உட்கார வைத்து ஒவ்வொரு ஆசிரியராக வந்து கரும்பலகையில் கை வலிக்க வலிக்க எழுதி குழந்தைகளும் கை வலிக்க வலிக்க நோட்டை நிரப்பும் பழக்கம் அங்கு அறவே இல்லை. அறிந்தோ அறியாமலோ அவ்வளவு சிறு வயதில் குழந்தைகளை நாம் இங்கே இப்படி செய்வது ஒரு வகையில் அவர்கள் மழலைத்தனத்துக்க்கு எதிராக நாம் செய்யும் வன்முறை தான்.
 பள்ளிக்குச் செல்வது ஜாலியாகத்தான்

பள்ளிக்குச் செல்வது ஜாலியாகத்தான்

அப்பயிடானால் அந்த நாடுகளில் அதுவரை பள்ளி செல்வதில்லயா என கேட்கலாம் நீங்கள். நிச்சயம் அனுப்புகிறார்கள் பெற்றோர்கள். போகிறார்கள் அக்குழந்தைகளும், ஆனால் ஆசை ஆசையாக. நம்மை போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அல்ல. 9 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே. அதனால் குழந்தைகளுக்கு தேவையான மதிய ஓய்வுக்கு தடை இல்லை. அங்கு நான்கு வயதில் தான் ப்ரீ.கே.ஜி (ப்ரீ கே எனப்படும் ப்ரீ கிண்டர்கார்டன்) போகிறார்கள். அதுவும் கே.ஜி போவதற்கு ஒரு முன்னேற்பாடாக குழந்தை பள்ளிக்கு செல்ல பழகும் தருணமாக ஒரு சமூக சூழ்நிலைக்குள் அவர்களை நுழைக்கும் வருடமாக தான் இது பார்க்கப்படுகிறது.
 3 வயசு ஜாலி வயசு பாஸ்

3 வயசு ஜாலி வயசு பாஸ்

அப்போ 3 வயசில ஸ்கூல் போக மாட்டார்களா என்று நீங்க ஆச்சரியப்பட்டால் அது தான் உண்மை. பெரும்பாலானோர் போவதில்லை வீட்டிலே தான் கல்வி வீட்டுக் கல்வி எனப்படும் ஹோம் ஸ்கூலிங் தான். பள்ளி செல்ல நினைக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் 3 முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் என்றால் வாரத்தில் மூன்று அல்லது நாலு நாட்கள் என வகுப்பு முறை இருக்கிறது . அதுவும் 2 முதல் 3 வயது என்றால் மொத்தமே வாரத்தில் இரு நாட்கள் தான் வகுப்புக்கு போகிறார்கள். எல்லாம் மதியம் ஒரு மணி வரை தான் அப்புறம் வீடுதான் ஜாலிதான். மம்மியுடன் விளையாட்டுதான்.
 விளையாட்டு முக்கியம்

விளையாட்டு முக்கியம்

குறைந்த கால நேரமே கல்வி பள்ளி சிறு குழந்தைகளுக்கு என்று அழகான வரையறையை பின்பற்றுகிறார்கள்.அதுவும் எளிய (play ஸ்கூல்) முறையில் விளையாட்டோடு இயைந்த கல்வி தான். அழுத்தமில்லாத கல்வி முறைகளோடு அழகான கல்வி முறை. நோ நோட்ஸ் நோ புக்ஸ். ஒரு பைலை கொண்டு போகும் சிறுவர்கள் என அவர்கள் கொடுத்து வைத்த குழந்தைகளே. ஒரு எழுத்தை எழுதுவதை விட அது தொடர்பான சிப்ட்ஸ் செய்கிறார்கள். கத்திரி கோல் கொண்டு வெட்டுவது, வண்ணங்கள் தீட்டுவது என்று அவர்களின் வகுப்பறையே வண்ண வானவில் தான். போதாத குறைக்கு இவர்கள் வகுப்பறையில் பொம்மை, வாகனங்கள் என்று விளையாட்டு பொருட்கள் கூட உண்டு.
 கிளாஸே டாப்பாக இருக்கும்

கிளாஸே டாப்பாக இருக்கும்

அந்த வகுப்பறைகளை பார்த்தால் அதிசயமாக இருக்கும். உள்ளே முழுவதும் படங்கள். நிறைய டப்பாக்கள் எல்லாம் குழந்தைகளின் கைதொட்டு மனம் தொடும் கல்வி முறைக்கான டப்பாக்கள். நம்ம ஊரைப் போல எல்லோர் நாற்காலியும் ஆசிரியரை பார்த்து போடப்படுவதில்லை இங்கே. நான்கு நான்கு நாற்காலிகள் ஒவ்வொரு குழுக்கள் எது செய்தாலும் குழுக்களாக செய்து அறியும் குதூகலம் அவர்களுக்கு உண்டு. முக்கியமாக சொல்ல வேண்டியது இங்கு வீட்டுப் பாடம் ஐந்து வயது வரை கொடுக்கப்படுவதில்லை (No homework ), படித்து விளையாடி விட்டு பட்டாம்பூச்சியாக வீடு திரும்பி வருகிறார்கள். முக்கியமாக அவர்கள் சொல்லி தருவது தேங்க்ஸ், சாரி, ப்ளீஸ் போன்ற நல்ல வார்த்தைகள் தான் முதல் பாடங்கள் அங்கு. தோழமையோடு பழகும் விதத்தையும் குழந்தைகள் பின்பற்ற வேண்டிய ஓழுங்கையும் (obedience) தான் முக்கியமாக சொல்லித் தருகிறார்கள்.
 நேரத்துக்கு சாப்பிடுவது அவசியம்

நேரத்துக்கு சாப்பிடுவது அவசியம்

இந்த 9 முதல் 1 மணி வரையிலான கல்வி நேரத்தில் ஒரு சிற்றுண்டி நேரம் (ஸ்னாக்ஸ் டைம்) இருக்கிறது. மதியம் 12 மணிக்கு உணவு இடைவேளை இருக்கிறது. அது மட்டுமா சாப்பிட்டு முடித்து விட்டு அரை மணி நேரம் வெளியில் விளையாடவும் விளையாட்டு நேரம் (playground டைம்) இருக்கிறது , நம்ம ஊர்லயும் விளையாட்டு நேரம் இருக்கிறது வாரத்தில் ஒரு மணி நேரம் எவ்வளவு பெரிய வித்தியாசம் பாருங்க. நம்ம ஊர்ல மாதிரி ஓன்று இரண்டு அல்ல வகை வகையான சறுக்குகள், ஊஞ்சல்கள், ஏறு கம்பிகள், தொங்கு கம்பிகள், மிதிவண்டி, டிரக் வண்டி என பல வாகனங்கள் என அவர்களின் விளையாட்டு திடலில் அவர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்த அதிகப்படியான பொருட்கள் இருக்கிறது.
 தடி கொண்டு அடித்தால் கனியுமா

தடி கொண்டு அடித்தால் கனியுமா

நம் ஊர்களில் எல்கேஜி, யுகேஜி என்பது ப்ரீகேஜியாக மாற காரணம் பெற்றோர் இருவருமே வேலைக்கு போகும் கலாச்சாரம் அதிகரித்ததும்தான். அது பேஷன் அல்லது கட்டாயம் என்ற நிலை வந்து விட்டது. பிள்ளைக்கு இரண்டு வயசு ஆனதும் இனி ஸ்கூல் தான என்கிற பேச்சு சர்வ சாதாரணமாகி விட்டது. இன்னொரு காரணம் நம் பிள்ளையை சீக்கிரம் ஸ்கூலில் போட்டு வளர்த்து பெரிய அறிவாளியாக்கி விட வேண்டும் என்கிற பெற்றோரின் ஆசையும் ஒரு காரணம் தான். அனால் தானாக பருவத்தில் கனிய விடாமல் அவ்வளவு சீக்கிரமாக நாம் பழத்தை பழுக்க வைக்க செயற்கையாக செய்கிற முயற்சி தான் இந்த ப்ரீ.கே.ஜி. ஒரு இரண்டரை வயதுக்குரிய குழந்தையின் மன நிலையிலிருந்து இதை அணுகிப் பார்த்தால் தான் அந்த பிரச்சனை தெரியும் நமக்கு.. காலையில் பத்து மணிக்கு எழும்பி கொண்டிருந்த குழந்தை அதுவும் இரண்டரை வயது மழலை குறைந்தது காலை 7.30க்கு எழும்ப வேண்டி இருக்கிறது. அதுவும் ஒரு மணி நேரத்தில் பல் துலக்கி ஒரு கப் காபி ஒரு இட்டிலி தோசை என திணித்து அதுவும் குழந்தை தூக்கத்தை களைத்த எரிச்சல் ஒரு பக்கம். விளையாட விடாமல் கிளம்பு கிளம்பு என்று நாம் விரட்டும் எரிச்சல் ஒரு பக்கம் என குழந்தை திக்கு முக்கடிப் போகிறது காலை பொழுதில்.
 தூங்கிக் கொண்டு செல்லும் பிள்ளைகள்

தூங்கிக் கொண்டு செல்லும் பிள்ளைகள்

குழந்தைகளுக்கு பள்ளி பக்கத்தில் அமைந்து விட்டால் பரவாயில்லை அதுவும் குழந்தைகளுக்கு பள்ளி தூரத்தில் அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம் 7 மணிக்கோ அதற்கு முன்போ எழும்பி காலை நாடகங்கள் ஆரம்பம் . பள்ளி வாகனம் எட்டு மணிக்கு எட்டரைக்கு என்றால் அந்த குழந்தையின் நிலை தான் என்ன. இதுவும் நம்ம பெற்றோர்களின் பேராசை தான் காரணம். பக்கத்துல பள்ளி இருந்தாலும் ரொம்ப நல்ல பள்ளி பார்த்து சேர்ப்பதாக நினைத்து தூரமாக கொண்டு சேர்ப்பார்கள் என்ன செய்வது எப்படியாவது பிள்ளைகளை அறிவாளி ஆகி விட வேண்டுமே ங்கிற ஆசை தான். இந்த பள்ளி வேனில் காலையில் மாலையிலும் தூங்கி கொண்டே போகிற பிள்ளைகளை பார்த்தல் பரிதாபமாக தான் இருக்கிறது. அதுவும் அந்த வயசுக்குரிய மத்திய தூக்கமும் கிடைக்காமல் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைக்குரிய உற்சாகம் தொலைத்து மாலையில் வீடு திரும்பும் அந்த மழலையின் முகங்களே இதற்க்கு சாட்சி. இப்படியான சூழ்நிலைகள் அவர்களின் கல்வி உள்வாங்க வேண்டிய உள்ளங்களுக்கும் மூளைக்கும் உற்சாகம் தர வாய்ப்பில்லை கட்டாயம் தடையாக தான் இருக்கும்
 மாண்டிசோரி முறை

மாண்டிசோரி முறை

நம்ம ஊரில் மாண்டிசோரி முறையில் கல்வி பயிலும் சில மாணவர்களுக்கு இத்தகைய கல்வி முறையின் அருமையின் ஒரு பகுதி கிடைக்கிறது என்றாலும் முழுமையாக கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.பொருட்களோடு அந்த கல்வி முறை இயைந்தாலும் குழந்தைகளின் விளையாட்டு தனத்தோடு இணையவில்லை. குழந்தைகளின் குழந்தைத்தனத்தை இயல்பாய் இருக்க விடுவோம் இறுக்க வேண்டாம் என்பது தான் என் கருத்து. ஒரு ஐந்து வயது அல்லது எல்.கே.ஜி நான்கரை வயது வரையாவது முழு நேர பள்ளி கல்வி எல்லாம் குறைத்து அரை நாளாவது ஆக்கி குழந்தைகளை குழந்தைகளாய் இருக்க விடுவோமே. குழந்தைகள் மனதுக்குள் அமர்ந்து குழந்தைகளாய் அமர்ந்து யோசித்தால் மட்டுமே இந்த மாற்றங்கள் நம் ஊர் பள்ளிகளிலும் சாத்தியம். அடித்து பிடித்து காலை பரபரப்பில் குழந்தைகளை பையோடு பையாக ஒரு சுருட்டு சுருட்டி பள்ளி அனுப்பி ஒரு அறையில் அடைத்து தான் அறிவை அதி சீக்கிரமாக இரண்டரை வயதிலே புகட்ட வேண்டும் என்று இல்லை.
 அம்மாவிடம் கற்கலாமே

அம்மாவிடம் கற்கலாமே

அம்மாவின் அன்பு கைகள் கூட குழந்தைக்கு ஆஅ எழுத சொல்லித் தரலாம். அம்மா குடத்தில் தண்ணி எடுத்து வரும் எண்ணிக்கையில் கூட ஏன் அம்மாவின் அன்பு முத்தத்தின் எண்ணிக்கையில் கூட குழந்தை ஓன்று இரண்டு மூன்று படிக்கலாம். குழந்தையின் ஆடையின் வண்ணங்கள் அல்லது அம்மாவின் சேலையின் வண்ணங்கள் கூட அந்த சிறு குழந்தைக்கு நிறம் சொல்லித் தரலாம். வீட்டின் நாற்காலியும் மேசையும் காலை சூரியனும் சாப்பிடும் முட்டையும் கூட வடிவங்கள் சொல்லித் தரலாம். இதை தான் ப்ரீ.கே.ஜி என்ற வகுப்பு முறை சொல்லித் தருகிறது. அம்மாவின் சமையலறை கூட குழந்தைக்கு பாடசாலையாகலாம். அம்மாவின் பாடல் குழந்தையின் ரைம்ஸ் ஆகலாம். தூரத்து நிலவும் நம் வீட்டு தோட்டத்தில் பூக்கும் ரோஜாவில் நம்மை கடந்து செல்லும் பட்டாம்பூச்சியிலும் என நம் மழலைகக்கு சொல்லித் தர ஆயிரம் விஷயங்கள் இருக்க ஏன் இந்த அவசரக் கல்வி?
- Inkpena சஹாயா
oneindia

மோடியா மன்மோகன் சிங்கா?? கன்ஃப்யூஸ் ஆன திண்டுக்கல் சீனிவாசன்!

மோடியா மன்மோகன் சிங்கா?? கன்ஃப்யூஸ் ஆன திண்டுக்கல் சீனிவாசன்!
நாட்டின் பிரதமர் பெயரையே தவறாக குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் எடப்பாடி பழனிசாமி அரசின் டெங்குவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த திண்டுக்கல் சீனிவாசன் ‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து டெங்கு தொடர்பாக ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தார்’ என்று உளரிக் கொட்டினார். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்வதற்கு பதில் மன்மோகன் சிங் என்று சொன்னதைக் கூட அறியாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இந்த வீடியோப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் சீனிவாசனை நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 
தான் அமைச்சராக இருக்கும் தன்னுடைய நாட்டின் பிரதமரே யாருன்னு தெரியலை இவங்கல்லாம் ஆண்டு நாசமாப் போச்சு அமைச்சர் சீனிவாசன்
pic.twitter.com/PxQQE09Elh

மொபைல்போன் அதீத பயன்பாட்டால் குழந்தைகளுக்கு கண் புற்றுநோய் அபாயம்: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

மொபைல்போன் அதீத பயன்பாட்டால் குழந்தைகளுக்கு கண் புற்றுநோய் அபாயம்: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
குழந்தைகள் செல்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால், அவர்களுக்கு கண் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில், இந்திய கண் சீரமைப்புச் சங்கத்தின் 28-வது தேசிய மாநாடு, கடந்த 27-ம் தேதி தொடங்கி நடக்கிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் மாநாட்டில் அமெரிக்கா, மலேசியா, ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த 360-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டில் அரவிந்த் கண்காப்பு மைய மனிதவளத் துறை கவுரவத் தலைவர் டாக்டர் ஜி. நாச்சியார், அரவிந்த் கண் சீரமைப்புத் துறை தலைவரும், கண் சீரமைப்பு சங்கச் செயலாளருமான டாக்டர் உஷாகீம், மருத்துவர்கள் லட்சுமி மகேஷ், முகேஷ் ஷர்மா, வெங்கடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உஷாகிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த மாநாட்டில் கண் பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. கண் மருத்துவ விரிவுரைகள், விவாதங்கள், ஆய்வறிக்கைகள், அனுபவங்கள், யோசனைகள் பகிரப்பட்டன. இந்திய கண் சீரமைப்பு சங்கம் 1987-ம் ஆண்டு இந்திய கண் குழிவுச் சங்கமாக தொடங்கப்பட்டது.
தற்போது கண் குழி, கண் சீரமைப்பு, செயற்கை கண் ஆகிய துறைகளில், சர்வதேச அளவில் மருத்துவர்களை இந்த சங்கம் ஒருங்கிணைக்கிறது.
மதுரையில் இலவச சிகிச்சை
அதனால், சர்வதேச தரத்திலான அறுவை சிகிச்சைகளை மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக செய்ய முடிகிறது. கண் பார்வையில் தொந்தரவு ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவதில் மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. நெஞ்சுவலி ஏற்பட்டால் உயிர் அச்சத்தில் உடனே மருத்துவமனைக்கு செல்கிறோம். அதுபோலத்தான், பார்வையும் முக்கியம். கண் சிகிச்சைகளுக்கு செலவினம் அதிகமாக இருப்பதால், மக்களுக்கு கண் அறுவை சிகிச்சைகளை செய்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது. அதனால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முடிந்தளவு அரவிந்த் கண் மருத்துவமனை இலவசமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது.
கண்புற்று நோய் பாதிப்பு
குழந்தைகளுக்கு தற்போது அதிகளவு பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகள் செல்போன்களை வைத்து நீண்டநேரம் வீடியோ கேம்களை விளையாடுவதால் கண் புற்று நோய் ஏற்படுகிறது. இந்த கண் புற்றுநோய் சமீப காலமாக அதிகளவு கண்டுபிடிக்கப்படுகிறது. முன்பும் இந்த நோய் பாதிப்பு அதிகளவு இருந்திருக்கலாம்.
தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அதிகம் பேர் பாதிக்கப்படுவது தெரிய வருகிறது. நூறு நோயாளிகளை பார்த்தால், அதில் 10 சதவீதம் பேருக்கு கண் புற்றுநோய் அறிகுறி காணப்படுகிறது. அதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வையே பறிபோகும் அபாயம் ஏற்படுகிறது.
சரியான காரணம் கண்டறியப்படவில்லை
செல்போன், கணினி, ஐபேடு பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு, மரபணுக்கள் உள்ளிட்ட பல காரணங்களால் கண் புற்றுநோய் ஏற்படலாம். எதனால் இந்த கண் புற்றுநோய் வருகிறது என்பதை, இன்னும் தெளிவாகக் கூற முடியவில்லை.
கண் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் அளிக்கும் சிகிச்சை, தற்போது அரவிந்த் கண் மருத்துவமனையிலும் அளிக்கப்படுகிறது. கண் குறைபாடுகளை உடனே கண்டுபிடிக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு விழிப்புணர்வு பதாகைகளையும், விளம்பரங்களையும் செய்ய முன்வந்தால் பொதுமக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம்: வேலையின்மையின் உச்சம் என கருத்து

உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார பணியாளர் பணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர் என்பது வேலையின்மையின் உச்சம் என்ற கருத்து எழுந்துள்ளது.

 சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் 68 துப்புரவு பணியாளர் மற்றும் 59 சுகாதார பணியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி ஆகிய வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 35-ம், இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயதாக 30-ம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 45-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.உயர் நீதிமன்ற வளாகத்தை தினமும் கூட்டித்தள்ளி, கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் துப்புரவு மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 3 ஆயிரத்து 612 பேரில் 2 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர் களுக்கு எழுத்துத்தேர்வு கடந்த அக்டோபர் 8-ம் தேதிசென்னையில் நடத்தப்பட்டது. இப் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் மற்றும் முதுகலை மற்றும் எம்ஃபில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் 75 மதிப்பெண் களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் 23 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், எந்த தொலைபேசி எண்ணில் இருந்து போலீஸை அழைப்பாய்? எந்த ஆண்டு நாம் விடுதலை பெற்றோம்? கப்பலோட்டிய தமிழன் யார்? நம்முடைய சுதந்திர தினம் எது? தேசிய சின்னம், பறவை, மரம் எது? என 8-ம் வகுப்பு தரத்திற்கேற்ப எளிமையான கேள்விகள் கேட்கப்பட்டதால், எழுத்துத்தேர்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உயர் நீதிமன்ற அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘அதிகமான கல்வித்தகுதி உடையவர்களை இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கக் கூடாது என தடுக்க முடியாது.ஏனெனில் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம் துப்புரவு அல்லது சுகாதார பணியாளர் பணியிடம் கிடைத்துவிட்டால், ஒரு பட்டதாரி தனது கல்வித் தகுதியை வைத்தே குறைந்த ஆண்டுகளில் ரீடர், உதவியாளர், உதவி செக்க்ஷன் அலுவலர், செக்க்ஷன் அலுவலர், உதவிப்பதிவாளர் என பதவி உயர்வில் இணைப்பதிவாளர் அந்தஸ்துக்கு செல்ல வாய்ப்புள்ளது.இப்பணியிடங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. வேலையின்மை காரணமாக பொறியியல் பட்டதாரிகள் வெளியிடங்களில் இதைவிடக் குறைவான ஊதியத்துக்கு வேலை பார்ப்பதால், துணிந்து விண்ணப்பித்துள்ளனர். மேலும் ஒரு துப்புரவுபணியாளராக பணியில் சேருபவர், தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்து சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றால் அவர் நீதிபதி யின் நேர்முக உதவியாளராக செல்ல முடியும். இதனால் இந்த பணியிடங்கள் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்’’ என்றனர்.

இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதா கிருஷ்ணன் கூறும்போது, ‘‘இது வேலையின்மையின் உச்சம். இதை சமீபத்தில் கூட நீதியரசர் என்.கிருபாகரன் இந்தியா முழுவதும் எத்தனை பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர்? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இணையதளத்துக்குச் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள் எனக் கூறுவது விளம்பரமே ஆகாது. அது வெறும் தகவல்.எனவே உயர் நீதிமன்ற துப்புரவு மற்றும் சுகாதார பணிக்கு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை அனைத்து விவரங்களுடன் தமிழிலும் வெளியிட்டு அதன்பிறகு தான் தேர்வு நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது வழக்கின் சாரம்சம்.இந்த பணிநியமனம் எங்களது வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும் என ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருவேளை எங்களுக்கு சாதகமாக இந்த விளம்பரம் செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், இவர்களின் பணிநியமனமும் செல்லாததாகி விடும். ஆனால் உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணியாளராக உள்ளே வந்து விட்டால் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவிஉயர்வு எளிதாக கிடைக்கும் என்பதால் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் இப்பணிக்கு தைரியமாக விண்ணப்பித்து அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்’’ என்றார்.

ஆந்திர தலைநகருக்கான கனவு நனவாகுமா? - 'அமராவதி' உருவாவதில் தொடரும் சிக்கல்

Published : 29 Oct 2017 17:08 IST

வி. ராகவேந்திரா | தமிழில்: பால்நிலவன்

இறுதி வடிவத்தை எதிர்நோக்கியுள்ள அமராவதி நகரின் எழில்மிகு தோற்றம்
ஆந்திராவின் புதிய தலைநகரம் உருவாக நிர்ணயிக்கப்பட்ட நாட்களைக் கடந்துவிட்டது. அங்கு அமைக்கவேண்டிய கட்டிடங்களுக்கான வடிவமைப்புகளை முடிவெடுப்பதில் காலதாமம் ஆகஆக எதிர்பார்ப்புகள் அதிகமாவதை நம்மால் தவிர்க்கமுடியவில்லை.
அமராவதியைப் பொறுத்தவரை உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக அமைக்கவேண்டும் என்பதுதான் முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவின் எண்ணம். அவரது பரந்து விரிந்த  கண்ணோட்டம் பரவலாக பலராலும் மதிக்கப்படுகிறது, ஆனால் இதில் பெரிய கேள்வியே வடிவமைப்பாளர்கள் விரைவில் முடித்துத் தருவார்களா என்பதுதான்.
ஹபீஸ் ஒப்பந்ததாரர்கள்
இதற்கான உருவாக்குதலும் பராமரித்தலும் மேற்கொள்ளும் பொறுப்பேற்றுள்ள ஹபீஸ் கட்டடக் கலை ஒப்பந்ததாரர்கள் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசியபடி இறுதி வடிவமைப்பை ஏப்ரல் 2017ல் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
ஆனால் இப்பணியில் பின்னர் சற்றே தொய்வு ஏற்படத் தொடங்கியது. அதிகாரப் பூர்வமாக, இறுதி வடிவம் பெற மேலும் 40 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்னும் முடியவில்லை.
நகர உருவாக்கத்தையும் அதற்கான பாராமரிப்பையும் ஏற்றுக்கொண்ட ஹபீஸ் கட்டடக் கலை ஒப்பந்த பங்குதாரருடன் முதலமைச்சரின் சமீபத்திய பேச்சு வார்த்தைகளின் முடிவில், லண்டன் நகரத்தை அடிப்படையாகக்கொண்ட அந்த வடிவமைப்பில் சில மாற்றங்களைச் சேர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான முடிவுகளும் ஏற்படவில்லை.
முதல்வருக்கு திருப்தியில்லை
ஒப்பந்ததாரரின் தலைமைக் கலைஞர்கள் மார்ச் 2017ல் தனித்தன்மைமிக்க அமராவதி நகரம் வடிவ மாதிரியின் கருத்தாக்கங்கள் மற்றும் நடைபெற உள்ள பணிகளின் இறுதிகட்ட வேலைகள் குறித்தும் திட்டமாதிரிகளை சமர்ப்பித்தனர்.
உலகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்கள் அதை உருவாக்கியபோதும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதில் திருப்தியடையவில்லை. ஏற்கெனவே சமீப காலக்கட்டங்களின் கருத்தியல் சாயல்கள் அதில் இருந்ததுதான் அவர் திருப்தியடையாததற்கான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
கோஹினூர் வைரவடிவில் சட்டப்பேரவை வளாகம்
ஒப்பந்ததாரர்களின் குழு, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தை ஆந்திராவின் கொள்ளூர் பகுதியில் வெட்டியெடுக்கப்பட்ட விலைமிகு கோஹினூர் வைரத்தைப் போன்ற ஒரு வைர வடிவிலும் உருவாக்கியுள்ளனர். உயர் நீதிமன்றக் கட்டிடத்தை ஒரு பௌத்த நினைவுச்சின்னமாகவும் அமைத்து இவற்றைக் காட்சிப்படுத்தினர்.
நாயுடு, அந்த வடிவமைப்புகளில் சில மாற்றங்கள் செய்யவிரும்பி ஆலோசனை வழங்கினார். மற்ற அரசுக் கட்டிடங்கள் எப்படி இருக்கலாம் என்பது குறித்தும் சில ஆலோசனைகளை வழங்கினார். அதனோடு ஒப்பந்ததாரர்களின் கட்டிடக் கலைக்குழுவினருடன் சில மதிப்புமிக்க ஆலோசனை வழங்க திரைப்பட இயக்குநர்கள் எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் பயாப்தி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இருவருமே தங்கள் திரைப்படங்களில் அழகுமிக்க பழமைவாய்ந்த கட்டிடக் கலை வடிவங்களுக்கு முக்கியத்துவம் தந்தவர்கள்.
குவிந்த பல திட்டங்கள்
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட நடைமுறைகள் பல குவிந்தன. அவற்றில் மூன்று மட்டும்  சட்டமன்றத்தில் முன்மொழியப்பட வேண்டுமென்று மக்கள் விரும்பியுள்ளனர். அதேநேரத்தில் முதல்வர் வடிவமைப்புகளின் நிறைவுப் பணிவரை மொத்த திட்டத்தையும் கட்டிடக் கலைகளின் அழகியல் சார்ந்த பார்வையிலிருந்து மட்டுமல்ல இயற்கைச் சூழலோடு இயைந்த ஒரு நகர கட்டமைப்பாக அமையவேண்டுமென்றும் அவர் விரும்பினார்.
நகரக் கட்டுமானப் பணிகள் தொடக்கநிலையிலேயே அப்படியே நின்று ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில், ஆந்திர முதல்வர் கடந்த வெள்ளியன்று ஒப்பந்ததாரர்களை அழைத்தார். நவீனத்தன்மையோடும் நாட்டின் கலாச்சாரக்கூறுகளையும் உள்ளடக்கியும் அவர்கள் தயாரித்து வைத்திருந்த அக்குறிப்பிட்ட திட்டத்தை மூடிவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
முக்கிய நகரங்கள், களஞ்சியங்களைத் தேடி...
நகரக் கட்டுமான பணிகளின் ஒப்பந்ததாரர்கள் இன்னொரு முக்கியமான பணியிலும் ஈடுபட்டார்கள். ஆந்திரப் பிரதேச தலைநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம், அரசு ஆலோசகர் (தொடர்புகள்) பரகலா பிரபாகர் தலைமையில் ஒரு குழுவை ஏற்பாடு செய்துகொண்டு, புதுடெல்லி, சென்னை, திருப்பதி ஆகியநகரங்களின் தேசிய, அரசு, ஆலய அருங்காட்சியகங்களை பார்வையிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி பிரமாண்ட தானியக் களஞ்சியங்களையும் தேடிச்சென்று பார்வையிட்டுள்ளனர். ஏற்கெனவே உள்ள அமராவதி கோயில் நகரத்திற்குச் சென்று அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆய்வு மேற்கொள்ளுதல், ஸ்ரீ அமரலிங்கேஸ்வர ஸ்வாமி ஆலயத்தைச் சார்ந்த தொன்மையை பிரதிபலிக்கும் சத்திரங்கள் போன்றவற்றை பார்வையிட்டுள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக அங்கு இருந்த பண்டைய கட்டிடக்கலைகளை நினைவுகூறும் ஒரு நவீன தலைநகரமாக அமராவதியை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்கான கலாச்சார கண்ணோட்டத்திலிருந்து அவர்கள் தங்களின் சொந்த பரிந்துரைகளை செய்தனர்.
இது வாஷிங்டன் டி.சி., புத்ராஜெயா, அஸ்தானா, லண்டன், பிரேசிலியா மற்றும் புது தில்லி ஆகியவை அவற்றின் தனித்துவமான அடையாளங்களை உள்ளடக்கியது ஆகும்.
முதல்வரின் ஆர்வமிக்க பயணங்கள்...
ஆந்திராவில் இருந்து உயர் மட்ட பிரதிநிதிகள் குறிப்பிட்ட அந்த நகரங்களுக்கும் நயா ராய்ப்பூர், காந்திநகர், சண்டிகர் மற்றும் இந்தியாவில் சிறந்ததாகக் கருதப்படும் பல்வேறு நகரங்களுக்கும் செனறு பார்வையிட்டனர்.
முதலமைச்சர் சில நகரங்களைச் சுற்றியும், மற்ற நவீன தலைநகரங்களுடன் ஒப்பிடும்போது அமராவதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி குறிப்புகளை எடுத்துக்கொண்டும் திரும்பி வந்தார்.
இறுதி வடிவமைப்பை நோக்கி....
ஆரம்பத்தில், சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான ஆலோசனை நிறுவனம் சுர்பானா - ஜுராங் தலைநகர பிராந்தியத்திற்கான மாஸ்டர் பிளான்கள், மற்றும் தலைநகரமாக வளர்வதற்கான விதை (மூல) வடிவமைப்பு ஆகியவற்றை வரைந்துகொடுக்க சீனாவின் குய்ஷூ இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட்
கார்ப்பரேஷன் (GIIC)நிறுவனம் அதை எளிய தரவுகளாக மாற்றித்தந்தன. அதை அடிப்படையாகக் கொண்டு ஆந்திர அரசும் நகர கட்டுமான ஒப்பந்ததாரர்கள் என இரு தரப்பிலும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன்படி வடிவமைப்புகளும் விரிவு பெற்றன.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக சமர்ப்பித்த திட்டங்கள் லண்டனில் இறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் அதில் விரும்பும் சிற்சில மாற்றங்களை செய்வதற்காக அங்கிருந்து திரும்பியுள்ளனர்.. ஆனால் இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆந்திர அரசு, புதிய அமராவதி நகரில் சுறுசுறுப்பாக செயல்படப்போகும் அந்த இனிய நாளை அரசு யந்திரங்கள், உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மட்டுமல்ல, ஒரு புதிய கனவு நகரத்தைக் காணும் ஆவலில் நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

புறநகர் ரயிலில் களைகட்டிய கச்சேரி: வாய்விட்டு பாடினால் நோய்விட்டு போகும்?

Published : 28 Oct 2017 16:18 IST

நெல்லை ஜெனா
புறநகர் ரயில் (கோப்பு படம்)
பல்லாவரம் ரயில் நிலையம்... அலுவலகம் செல்லும் காலை பொழுது... வழக்கம் போல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. அலுவலகம் செல்லும் அவசரத்தில் நானும் ஓடோடி வந்து பல்லாவரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் ஏறினேன். சுமாரான கூட்டம் தான்.
ரயில் புறப்பட்டு திரிசூலம் ரயில் நிலையத்தை நெருங்கியது. அவசர அவசரமாக வந்த பதற்றம் - வேகமாக அலுவலகம் செல்ல வேண்டும் என்ற ஆதங்கம், ஓட்டமும் நடையுமாக வந்ததால் டென்ஷன் குறைய வில்லை.
திடீரென பாட்டுச் சத்தம் கேட்டது. புறநகர் மின்சார ரயில்களில் சிலர் பாட்டு பாடிக் கொண்டே பணம் வசூலிப்பது வாடிக்கை. அதுபோன்று சிலர் பாடுகிறார்களோ என எண்ணினேன்.
ஆனால் அது தவறு என சற்று நேரத்தில் தெரிந்தது. பாட்டு பாடியவர் சக பயணி, அவரது பாட்டிற்கு ரயிலின் சுவர் பகுதியில் தட்டி தாளம் வர வைத்துக் கொண்டிருந்தவரும் சக பயணி.
வழக்கமான கச்சேரி போன்றே சுவாமி பாடலில் துவங்கி, சினிமா பாடல் என களைகட்டியது.
நேரம் செல்ல செல்ல பலரும் அந்த கச்சேரி குழுவினருடன் இணைந்து கொள்ள தனி பாடலில் துவங்கி, குழு பாடல் என கச்சேரி முழு வீச்சில் நடந்தது. அவர்களது பாடலுக்கு மொத்த கூட்டம் தலையாட்டி கை தட்டி வரவேற்றது. பாட்டு பாடிய பலரும், நாற்பது வயதைக் கடந்தவர்கள்.
பலரும் அலுவலகங்களில் பணி செய்பவர்கள். அலுவலக நாட்களில் ஒன்றாக பயணம் செய்வதுடன், வித்தியாசமான முறையில் தங்கள் பயண நேரத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
செய்தித்தாள் படிப்பது, அரட்டை அடிப்பது, அரசியல் விவாதங்களில் ஈடுபடுவது என புறநகர் ரயில்களில் முன்பு பார்த்த காட்சிகள் இப்போது இல்லை. செல்போன் வந்த பின்பு பயண நேரத்தில் அதை பார்ப்பதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ள ரயில் பயணிகள் ஏராளம்.
சக மனிதர்களுடன் மனம் விட்டு பேசுவது கூட குறைந்து விட்டது. இதுபோன்ற மனிதர்கள் மத்தியில், இவர்கள் சற்று வித்தியாசமானவர்கள். மனம் விட்டு பேசுவது மட்டுமின்றி மனம் விட்டு பாடியபடி செல்கின்றனர். தங்கள் கல்லூரி நாட்களில், தங்களை ஈர்த்த சினிமா பாடல்களையும் மனம் விட்டு பாடி, மீண்டும் கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்திக் கொள்கின்றனர். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும், தினந்தோறும் வாய்விட்டு பாட வாய்ப்பு கிடைத்தால், அதை கேட்டு ரசிக்க ரசிகர்கள் கூட்டமும் இருந்து விட்டால் மகிழ்ச்சிக்கு குறைவு ஏது?
தங்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம் சவுந்திரராஜன் என பாவித்துக் கொண்டு உருக்கமாக பாடினர். அவர்கள் குரலும், பாடிய விதமும், தொழில்முறை பாடகர்கள் போன்று இல்லா விட்டாலும், ஆத்மார்த்தமாக அவர்கள் பாடிய விதம் ரசிக்கும் படியாக இருந்தது. ஏறக்குறைய மினி மேடை கச்சேரியாக மாறியது ரயில் பயணம். எனக்கும் இது, புதிய அனுபவமாக இருந்தது.
எனினும் அவரவர் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் இறங்கிக் கொண்டனர். புதியவர்கள் கச்சேரியில் இணைந்து கொண்டனர். ஆட்கள் மாறினாலும் கச்சேரி மட்டும் நிற்கவில்லை.
நான் இறங்க வேண்டிய எழும்பூர் ரயில் நிலையம் வந்தது. கச்சேரி தொடர்ந்தது. நானும் பழைய நினைவுகளை அசைபோட்டபடியே ரயிலில் இருந்து இறங்கி அலுவலகம் செல்லும் பேருந்தை பிடிக்க வேகமாக விரைந்தேன்.

பார்வை: பெண் ஏன் அழகாக இருக்க வேண்டும்?


டெங்கு மரணங்கள், கந்துவட்டி உயிர்ப்பலிகள், கருத்துச் சுதந்திரம் இவற்றைத் தாண்டி சமீபத்தில் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாகப் பெண்களின் ‘அழகு’ம் சேர்ந்துவிட்டது. சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் மட்டுமே பேசப்பட்ட விஷயத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையா என்று தோன்றலாம். இதுபோன்ற விவாதங்கள் நடக்குமிடங்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், அவர்களின் கருத்தைப் புறக்கணித்துவிட முடியாது. சமூகத்தின் பிரதிபலிப்பாகவே அவர்கள் இருக்கிறார்கள்.
எது அழகு என்பதில் தொடங்கி, அழகு குறித்த புரிதலின் அடிப்படையிலேயே அழகு அமைகிறது என்பதுவரை பல்வேறு கருத்துக்களை ஆண், பெண் இருதரப்பிலும் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் இரு மாநிலப் பெண்களின் அழகை ஒப்பிட்டு விவாத நிகழ்ச்சி நடத்துவதற்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவிக்க, அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி சார்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட விவாதத்தில் பங்கேற்ற அதன் தயாரிப்பு தரப்பைச் சேர்ந்தவர்களும் (அவர்கள் ஆண்கள்) மற்றொரு ஆணும் தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்தை முன்வைத்த பெண்களை மட்டம்தட்டிப் பேசியதுடன் தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். மாற்று விவாதத்தைத் தூண்டுவதாகக் கருதப்படக்கூடிய நிகழ்ச்சியைச் சேர்ந்தவர்களே பொதுவெளியில் இதுபோன்ற கருத்துகளைப் பகிரங்கமாகச் சொன்னது, அந்த நிகழ்ச்சி தயாரிப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
என்றைக்குமே ஒரு பெண் கேள்வி கேட்பதைச் சமூகத்தால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை. அதுவும் ஆணை நோக்கிக் கேள்வி எழுப்பப் பெண்ணுக்கு எப்போதும் உரிமை மறுக்கப்படுகிறது. சமூகம் எதைச் சொன்னாலும் அதை வார்த்தை மாறாமல் ஏற்றுக்கொள்வதால்தான் பெண்மை இங்கே மகத்துவமானதாகக் கருதப்படுகிறது. ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கும்போது, பெண் தன் ‘பெருமித’த்தை இழந்துவிடுகிறாள்! அதுதான் அந்த நிகழ்ச்சி இயக்குநரின் பார்வையிலும் எதிரொலித்தது.
அழகு குறித்த அலசல்களுக்கு இடையே பெண்ணியவாதிகள் எப்படி இருக்க வேண்டும், இடதுசாரி பெண்ணியவாதிகளாக இருந்தால் அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், அவர்கள் மொட்டையடித்துக்கொண்டு அழகை சப்பையாக்கிக் கொள்கிறார்களா என்பது போன்ற வலியவந்து அறிவுரை சொல்லும் போக்கையும் கருத்துகளை வாரியிறைக்கும் தன்மையையும் பார்க்க முடிகிறது.
மென்மைதான் பெண்மையா?
பெண்கள் இப்படி இருப்பதுதான் அழகு என்று சொல்லப்படும் வரையறை இன்று, நேற்று முடிவானதல்ல. வரலாறு பதிவுசெய்யப்பட்ட நாளில் இருந்தே அந்த வரையறைகளும் இலக்கணங்களும் தொடங்கிவிட்டன. வில் புருவமும் கயல் கண்களும் மெல்லிடையும் செவ்விதழ்களும் சங்குக் கழுத்தும் இன்னபிற லட்சணங்களும் பொருந்திய பெண்களே அழகு என்கிற எல்லைக்குள் கால்வைக்க முடியும். புராண காலமும் சங்க காலமும் முடிந்து அடுத்துவந்த தலைமுறையினர் தங்கள் பங்குக்கு இந்த லட்சணங்களில் சிலவற்றைக் கூட்டவோ குறைக்கவோ செய்ய, பெண்ணுக்கான அழகு விதிகள் காலம்தோறும் மாற்றியமைக்கப்பட்டும் நவீனமயப்படுத்தப்பட்டும் வருகின்றன. ஆனால் எல்லாக் காலங்களிலும் நிறமும் மென்மையும் வாளிப்பான உடலுமே பெண்மையின் முக்கிய அடையாளங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.
எப்படி எல்லாப் பெண்களாலும் எப்போதும் இந்த இலக்கணப்படி வாழ முடியும்? நிறமும் அவய அமைப்புகளும் வழிவழியாக வருபவை. அதில் நாமே விரும்பித் தேர்ந்தெடுக்கவோ மாற்றியமைக்கவோ என்ன இருக்கிறது? எதையும் அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்வதுதானே இயற்கை? ஆனால், பெண்கள் விஷயத்தில் அது நடப்பதேயில்லை. எப்போதும் ஒப்பீடு இருந்தபடியேதான் இருக்கிறது. ஆண்கள் பார்த்து ரசிக்க வேண்டிய, நுகர வேண்டிய ஒரு பண்டமாகவே பெண்கள் பெரும்பாலும் கருதப்படுவதே இதற்கு அடிப்படை.
அலங்காரச் சிறை
பெண், ஆண் யாராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்த உடல்வாகும் தோற்றமும் உண்டு. அவற்றில் இது அழகென்றும் இது அசிங்கம் என்றும் எதையும் வகைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. அதேநேரம், புறத்தோற்றத்துக்காக ஒரு ஆண் கவலைப்படும் தருணங்கள் மிகக் குறைவு. பெண்ணோ எப்போதும் தன் புறத்தோற்றம் குறித்த நினைப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறாள். சிறுவர்களின் அலங்காரம் கால்சட்டை, மேல்சட்டையோடு முடிந்துவிடுகிறது.
சிறுமிகளுக்கோ உச்சந்தலையில் தொடங்கி உள்ளங்கால்வரை நீள்கிறது. அப்படி அலங்கரித்துக்கொள்வதுதான் லட்சணம் என்று குழந்தைப் பருவம் முதலே பெண்களின் மனதில் திணிக்கப்படுகிறது. எப்போதும் தன்னைக் காட்சிப்பொருளாக்கிக்கொள்ள வேண்டும், பிறர் பார்க்கும்படி நாம் தோன்ற வேண்டும் என்பது போன்ற சிந்தனைகள் பெண்களின் மனதில் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. இந்தப் பின்னணியில் இருந்துதான் அழகு சார்ந்த அனைத்தையும் நாம் அணுக வேண்டும்.
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் தமிழாசிரியை எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீங்கள் எதற்காக பூ வைத்துக்கொள்கிறீர்கள்?” என்கிற அவரது கேள்விக்கு, “வாசனைக்காக” என்று சொன்னோம். “சரி, வாசனையே இல்லாத கனகாம்பரத்தை ஏன் வைத்துக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். நாங்கள், “அழகுக்காக” என்று சொன்னோம். “சரி, உங்கள் தலையில் இருக்கிற பூவை நீங்கள் பார்க்கப் போவதில்லை. பிறகு ஏன் அதை வைத்துக்கொள்கிறீர்கள்?” என்ற ஆசிரியரின் கேள்வி அப்போது எங்களுக்குப் புரியவேயில்லை.
அவரே, “பிறர் பார்க்கத்தானே பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள்?” என்று சிரித்தபடியே கேட்டார். அப்போதுதான் ஆண்கள் ஏன் கூந்தல் வளர்ப்பதில்லை, அதில் ஏன் பூ வைத்துக்கொள்வதில்லை என்ற கேள்வி தோன்றியது. அதுவரை ஆண்கள் முடிவெட்டிக்கொள்வதும் பெண்கள் கூந்தல் வளர்ப்பதும்தான் இயற்கை என்று அறிந்துவைத்திருந்த எங்களுக்கு, வேறொரு பாதையைக் காட்டினார் எங்கள் தமிழாசிரியை.
விமர்சனம் என்னும் வன்றை
பெண்கள் கூந்தல் வளர்ப்பதும் தங்களை அலங்கரித்துக்கொள்வதும் அவர்கள் உரிமை என்று சிலர் சண்டைக்கு வரலாம். ஆனால், அப்படி அழகுக்கு அழகு சேர்ப்பது யாருக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதையும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் சேர்த்தே யோசிக்க வேண்டும். காரணம் அழகு அல்லது அழகுக்காகச் செய்துகொள்ளும் செயல்பாடுகளை மையமாக வைத்துதான் பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள், மட்டம்தட்டப்படுகிறார்கள், அவமானத்துக்கு ஆளாகிறார்கள்.
தங்களைச் செயற்கை அழகுக்கு உட்படுத்த முடியாத பெண்களும் கறுப்பாக இருக்கும் பெண்களும் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள். “கறுப்பே அழகு என்று கம்பீரமாக நில்லுங்கள்” என்கிற சப்பைக்கட்டு இங்கே செல்லுபடியாவதில்லை. எத்தனை கம்பீரமாக நின்றாலும் கறுப்புக்குக் கிடைக்கும் வாய்ப்பும் வரவேற்பும் அனைவரும் அறிந்ததே.
சிவப்பாக இருக்கும் பெண்களுக்குத் திருமணத்தில் தொடங்கி வேலைவாய்ப்புவரை முன்னுரிமை கிடைப்பதால்தான் இங்கே சிவப்பழகு சாதனங்கள் கோடிகளைக் குவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரிப் பாடப் புத்தகத்தில் ‘வரதட்சிணையின் நன்மைகள்’ என்று தரப்பட்டிருக்கும் குறிப்புகளில், ‘கறுப்பாகவும் அழகில்லாமலும் இருக்கும் பெண்ணுக்குத் திருமணம் ஆவதற்கு வரதட்சிணை உதவுகிறது’ என்பதும் அடக்கம். மாணவர்களுக்கு இப்படிக் கற்றுத்தருகிற நிலையில்தான், நம் சமூகப் புரிதலும் அணுகுமுறையும் இருக்கிறது.
அதனால்தான் கொள்கை சார்ந்தும் கருத்து ரீதியாகவும் விமர்சிக்க வேண்டிய பெண்களை அவர்களது புறத்தோற்றம் சார்ந்து ஆண்கள் விமர்சிக்கிறார்கள். அதற்குச் சமீபத்திய உதாரணம் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அவரது நிறத்தையும் தோற்றத்தையும் வைத்துச் சொல்லப்படுகிறவை எல்லாமே கீழ்த்தரமானவை, கண்டிக்கத்தக்கவை.
அழகு அடையாளமல்ல
பெண்களிடம் எப்போதும் புறஅழகை மட்டுமே எதிர்பார்க்கும் ஆண் மனதின் அழுக்குச் சிந்தனைகளை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆனால் எப்படியிருந்தாலும் பெண்களின் இயல்புதான் அவர்களின் அடையாளம் என்பதைப் பெண்கள் நினைத்தால் உணர்த்திவிட முடியும். வயதுக்கு ஏற்ப, உடலியல் மாற்றங்களுக்கு ஏற்ப அனைவரின் உடலமைப்பும் புறத்தோற்றமும் மாறுவதுதான் இயற்கை.
கருநிறமும், குறைவான கூந்தலும், தெற்றுப்பல்லும், பிள்ளைப்பேறால் ஏற்பட்ட தழும்பும், சரிந்த வயிறும், நாற்பதைக் கடப்பதற்கு முன்பே தென்படும் நரைமுடிகளும், கண்ணின் கீழே நிரந்தரமாகிவிடும் கருவளையமும், மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் உடல் பருமனும், தோல் சுருக்கமும் இப்படி இன்னபிறவும் அசிங்கமும் அல்ல அடையாளமும் அல்ல.
அவற்றை மாற்றுவதற்கு மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்து என்ன ஆகப்போகிறது? அவை இயல்பு, இயற்கை, அதுதான் நாம் என்பதைப் பெண்கள் உணர வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற எண்ணம் ஆக்கப்பூர்வமான எந்த மாற்றத்தையும் நிகழ்த்தப் போவதில்லை. எக்காலத்திலும் அழியாத தெளிவான சிந்தனையையும் தீர்க்கமான செயல்பாடுகளையும்விடவா இந்தப் புறத்தோற்றம் முக்கியம்?

news today 23.10.1024