Monday, February 9, 2015

சான்றோர்களை உருவாக்கிய சென்னை சட்டக் கல்லூரி



சென்னை சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டு விரைவில் 125 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன.

கடந்த 1891-ம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரி உருவானது. இந்தோ-சார்சனிக் கட்டிடக் கலையின் சிறப்பை பறைசாற்றும் இன்றைய சட்டக் கல்லூரி கட்டிடம் 1899-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. பாரம்பரியம் மிக்க இந்த சட்டக் கல்லூரியில் பயின்ற ஏராளமானோர் பின்னாளில் இந்தியாவின் மிகச் சிறந்த சான்றோர்களாக ஜொலித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட் ராமன் இந்த சட்டக் கல்லூரி யில்தான் பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற மாணவர்களில் மூன்று பேர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி எம்.பதஞ்சலி சாஸ்திரி, மற்றொரு தலைமை நீதிபதி கொகா சுப்பா ராவ், உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்று, தற்போது கேரள மாநில ஆளுநராக உள்ள பி.சதாசிவம் ஆகியோர்தான் அந்த சிறப்புக்குரியவர்கள்.

அதேபோல் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், இந்திய நீதி பரிபாலனத்தின் பிதாமகன் எனப் போற்றப்படும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் ஆகி யோரும் சென்னை சட்டக் கல்லூரியின் மாணவர்களே ஆவர்.

திருவாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யர், நீதிக்கட்சி தலைவர் ஆற்காடு ராமசாமி முதலியார், தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவச்சலம், பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் சி.சுப்ரமணியம், ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்த கே.சந்தானம், கல்வியாளரும், பிரபல வழக்கறிஞருமான பி.எஸ்.சிவசாமி அய்யர், சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தீரர் சத்தியமூர்த்தி, கல்வியாளர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், காங்கிரஸ் அமைச் சரவையில் பல ஆண்டுகள் நிதிய மைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம் போன்றவர்களும் சென்னை சட்டக் கல்லூரியில்தான் பயின்றனர். இந்தியாவின் முன் னாள் பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி ஆகியோரும் இங்கு பயின்றுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், தற்போதைய நீதிபதிகள், உயர் நீதிமன்றங்க ளின் முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகள் பலர், மிக மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் தலை வர்கள் என நூற்றுக்கணக்கான அறிவுசார் பெரியோரை உருவாக்கிய பெருமை இந்த சட்டக் கல்லூரிக்கு உண்டு.அத்தகைய பெருமைக்குரிய இந்தக் கல்லூரிதான் தற்போது இட மாற்றப் பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது.

வருமுன் தயாராவோம்... வருமான வரி சலுகை பெறுவோம்!



மார்ச் மாதம் நெருங்கி வரும்போதுதான் நமக்கு வருமான வரி குறித்த சிந்தனை வந்து சேர்கிறது. அதுவரையில் அது குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருப்போம். கடைசியில் மார்ச் மாதம் சம்பளத்தில் மொத்தமான வரிப் பிடித்தம் செய்யப்படுகிறபோது மட்டும் வருத்தப்படுவோம்.

ஆனால் ஆண்டில் ஆரம்பத்திலேயே இதற்கு திட்டமிட்டால் வருமான வரி குறித்த கவலையில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். சம்பாதித்த பணத்தை இப்படி வரியாக செலுத்துகிறோமே என்கிற வருத்தமும் வேண்டாம்.

இப்படி முன் கூட்டியே திட்டமிடுவதன் மூலம் அரசு அனுமதிக்கும் பல்வேறு வரிச் சேமிப்பு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.

ஆனால் இதற்கு நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே திட்டமிடுதல் அவசியம். முன்னேற்பாடு இல்லாமல் கடைசி நேரத்தில் கண்ட வகைகளிலும் முதலீடு செய்வது பலன் தராது.

தவிர இந்த முதலீட்டுத் திட்டங்களை அவசரத்தில் தேர்வு செய்வதன் மூலம் அதன் பாதுகாப்பு, அதிலிருந்து கிடைக்கும் வருமானம், அதை எளிதில் பணமாக்கும் வாய்ப்பு மற்றும் அதற்கான செலவுகள் குறித்தெல்லாம் யோசிப்பதில்லை.

வரிச் சேமிப்புக்கு என்று நமது வருமானத்தை வளர்ச்சி இல்லாமல் முடக்குவதும் சரியான செயல்பாடு அல்ல.

அந்த வகையில் ஒரு தனிநபர் எந்த எந்த வகைகளில் வரிச் சலுகை பலன்களை அனுபவிக்க முடியும் என்று பல வருமான வரி தணிக்கையாளர்களிடம் (ஆடிட்டர்) பேசியதிலிருந்து பொதுவாக ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருப்பவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.

மேலும் மூத்தக் குடிமக்கள் சிறப்புச் சலுகையாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ரூ.3 லட்சம் வரையிலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் ரூ.5 லட்சம் வரையிலும் வருமான வரி கட்டத் தேவை இல்லை.

ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேற்படுகிறபோது வரி கட்ட வேண்டியிருக்கும். ஆனால் குறிப்பிட்ட முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படுகிறது.

இதன்படி ரூ.2.50 லட்சத்துக்கும் மேற்படும் ஆண்டு வருமானத்தி லிருந்து ரூ.1.5 லட்சம் வரை வருமானத்துக்கு வரிச்சலுகை பெறலாம். அதை எந்தெந்த வகை களில் பெற முடியும் என்பதைப் பார்க்கலாம். பொதுவாக பிஎஃப் முதலீடு, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு பிரீமியம் செலுத்துவது வீட்டுக்கடனுக்கு செலுத்தும் வட்டி போன்றவற்றுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கும்.

மருத்துவக் காப்பீடு பிரீமியம்

மருத்துவக் காப்பீட்டுக்கு செலுத்தும் ஆண்டு பிரீமிய கட்டணத்துக்கு வரி சலுகை பெறலாம். ஒரு ஆண்டில் மருத்துவக் காப்பீடு பிரீமியத்துக்கு ரூ.15,000 வரை வரிச்சலுகை கிடைக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000 வரையிலான பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெறலாம். ப்ளோட்டர் பாலிசியில் மூத்தக் குடிமக்களை இணைந்திருந்தால் இதற்கு ரூ.20,000 வரை வரி சலுகை பெறலாம்.

வீட்டுக் கடனுக்கான வட்டி

வீட்டுக் கடன் வாங்கி திரும்பச் செலுத்தும் வட்டியில் ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரி சலுகை உள்ளது. (அந்த வீட்டில் குடியிருந்தால் மட்டும்) ஆனால் வீட்டை வாடகைக்கு விட்டு, அதை வருமானமாகக் காட்டினால், திரும்ப செலுத்தும் முழு வட்டிக்கும் வரி சலுகை கிடைக்கும்.

கணவன் மனைவி இருவரும் வருமானம் ஈட்டும்பட்சத்தில் கூட்டாக வீட்டுக்கடன் வாங்கினால், இருவரது ஆண்டு வருமானத்திலிருந்தும் தனித்தனியே அசல் மற்றும் வட்டி வரி சலுகை பெற முடியும்.

வரிச்சலுகை முதலீடுகள்

சிலவகை முதலீடுகளை மேற் கொள்வதன் மூலமும் வரிச்சலுகை கிடைக்கும்.

குறிப்பாக நமது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் பிஎப் தொகைகூட ஒரு வகை முதலீடுதான். இதற்கு வரிச்சலுகை உண்டு. இந்த கணக்கில் கூடுதலாக பணத்தை செலுத்த வசதியும் உள்ளது.

நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே பணியாற்றும் நிறுவனத்தில் இது குறித்து சொல்லிவிட வேண்டும். இடையில் சேரவோ வெளியேறவோ முடியாது.

சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் அதிகமாக எதிர்பார்ப்பவர்கள் மற்றும் சம்பளத்தில் பிஎஃப் பிடித்தம் செய்யப்படாத பிரிவினர் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் வங்கி வைப்பு நிதி போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கும் வரி சலுகை உள்ளது.

இதர முதலீடுகள்

அஞ்சலகங்களில் செய்யப்படும் தேசிய சேமிப்புப் பத்திரம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். தேசிய ஓய்வூதிய திட்டம். வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் (இஎல்எஸ்எஸ்)

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம்

பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதன்முறையாக முதலீடு செய்பவர்களுக்கு முதலீட்டுத் தொகையிலிருந்து 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 வரை வரிச்சலுகை கிடைக்கும். 80சி முதலீடு தவிர, கூடுதலாக இந்தச் சலுகை தரப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வரிச்சலுகை பெற ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

வீட்டு வாடகை

தற்போது குடியிருந்துவரும் வாடகை வீட்டுக்குத் தருகிற வாடகை தொகைக்கும் வரிவிலக்கு சலுகை உள்ளது.

ஆனால் மொத்த சம்பளத்திலிருந்து 10 சதவீத தொகை வாடகையாகத் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நகரம், நிறுவனத்திலிருந்து பெறும் வீட்டு வாடகை படியை பொறுத்துக் இதற்கான சலுகை கிடைக்கும்.

கல்விக் கடன்

மகன் அல்லது மகளுக்காக வாங்கிய உயர் கல்வி கடனுக்கான திரும்ப செலுத்தும் வட்டிக்கு வரிச் சலுகை உண்டு. மேலும் கடனைக் கட்டத் தொடங்கி, எட்டு ஆண்டு களுக்கு மட்டுமே இந்த வரி சலுகை கிடைக்கும்.

மருத்துவச் செலவுகள்

வருமான வரி செலுத்துபவர்களைச் சார்ந்துள்ள செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கான மருத்துவச் செலவில் ரூ.50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ.1 லட்சம்) வரை வருமான வரி சலுகை கிடைக்கும். அதுபோல எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவுகளுக்கு அதிக பட்சமாக ரூ.40,000 வரை வரிச் சலுகை கிடைக்கும். மூத்த குடி மக்களுக்கு ரூ.60,000 வரை சலுகை கிடைக்கும்.

80சி முதலீட்டு வாய்ப்புகள்

இஎல்எஸ்எஸ் (ELSS Equity Linked Savings Schemes) அல்லது டாக்ஸ் சேவர் மியூச்சுவல் ஃபண்டுகள்.

மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் ரிட்டையர்மென்ட் பெனிஃபிட் பென்ஷன் திட்டங்கள்

என்பிஎஸ் (NPS National Pension System)

இபிஎஃப் (EPF Employee Provident Fund)

பிபிஎஃப் (PPF Public Provident Fund)

வங்கி மற்றும் என்ஹெச்பி (NHB National Housing Bank) டெபாசிட்டுகள்

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்

a. யூலிப் திட்டங்கள்

b. எண்டோவ்மென்ட் திட்டங்கள்

c. பென்ஷன் திட்டங்கள்

அஞ்சலகச் சேமிப்புகள்

a. 5 வருட டைம் டெபாசிட்

b. சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்

c. என்எஸ்சி (NSC National Savings Certificate)

நீரை மகேந்திரன்

maheswaran.p@thehindutamil.co.in

WINNER LIST 1975-201

Cricket World Cup 2015 Match Schedule – World Cup 2015 POOL

ICC Cricket World Cup 2015 Schedule in IST: Time Table, Fixture & Venue Details of all WC 2015 Matches


WC-2015-Schedule-in-IST-Time-Table-&-Venue-Details1



இந்தியா-பாக். போட்டி: விமான நிறுவனங்கள் கட்டண கொள்ளை!



உலகக் கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளின் மோதலுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. விற்பனையான 50 ஆயிரம் டிக்கெட்டுகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை இந்தியர்கள் வாங்கியுள்ளனர். இதில் பெரும்பாலான ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் பிற நகரங்களான சிட்னி, மெல்பர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களை சேர்ந்தவர்கள்

இந்த போட்டியையொட்டி அடிலெய்ட் நகரத்தில் ஆயிரக்கணக்கான ஹோட்டல் அறைகள் நிறைந்து விட்டன. ஞாயிற்றுக்கிழமை வேறு இந்த ஆட்டம் நடைபெறுவதால், வார விடுமுறையை கழிப்பவர்களும் ஹோட்டல் அறைகளை புக் செய்துள்ளனர். இதனால் போட்டியை காண டிக்கெட் வாங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அடிலெய்டில் நகரில் ஹோட்டல் அறைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

அடிலெய்ட் அருகில் உள்ள குட்டி குட்டி நகரங்களிலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹோட்டல்கள் அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றன. சாதாரணமாக 100 ஆஸ்திரேலிய டாலருக்கு கிடைக்கும் அறைகள் இப்போது 250 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு புக் செய்யப்படுகிறதாம்.

அதோடு இந்த தருணத்தை பயன்படுத்தி விமான நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. சாதாரணமாக சிட்னியில் இருந்து அடிலெய்டுக்கு 300 ஆஸ்திரேலிய டாலர்களில் சென்று விடலாம். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் மோதலை முன்னிட்டு 800 ஆஸ்திரேலிய டாலர்கள் என விமான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் டிக்கெட் வாங்கிய போதே அறைகள் மற்றும் விமான டிக்கெட்டுகளை புக் செய்யத் தவறிய ரசிகர்கள் இப்போது தவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 4 பேர் அடங்கிய இந்திய குடும்பம் இந்த போட்டியை காண வேண்டுமென்றால், குறைந்தது 5 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை செலவு செய்ய வேண்டிய கட்டயாத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த எதிர்பாராத விலைஉயர்வு காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண டிக்கெட்டுகளை வாங்கிய 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள், போட்டியை காண அடிலெய்டுக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

பாடங்களை இனிக்கவைக்கும் கற்பனைச் சுற்றுலா! by கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி



வாழ்க்கையில் மனதுக்குப் பிடித்தமான விஷயங்கள் நடந்துவிட்டால், உள்ளம் கொண்டாடும். விருப்பம் இல்லாத விஷயத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், மனதில் குழப்பங்கள் மூளும். இது அடிப்படை உளவியல். படிப்பை நீங்கள் பிடித்தமான விஷயமாக நினைத்தால் இந்த குழப்பங்கள் இல்லை. இதற்கு ஒரு சுலபமான, எளிமையான தீர்வு உள்ளது.

உங்கள் படிப்பைப் பற்றிய நேர்மறை கற்பனை உலகுக்கு அடிக்கடி ஓர் இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதற்கு பணம் தேவையில்லை. நண்பர்களும் தேவையில்லை. உளவியலில் இதை ‘மென்டல் டூர்’ (Mental Tour) என்பார்கள். அதாவது, நன்றாக படித்து, நிறைய மதிப்பெண்கள் பெற்று, உங்களுக்குப் பிடித்தமான துறையில் பிடித்தமான வேலையில் இருக்கிறீர்கள். அல்லது சுயதொழிலில் பெரிய அளவில் சாதனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட கற்பனை உலகில் அடிக்கடி உலவுங்கள். பின்பு படித்தால், எந்த பாடமும் பனங்கற்கண்டாக இனிக்கும். இது உளவியல் உண்மை!



தேர்வு காலத்தில் காலடி எடுத்து வைத்துள்ள மாணவர்கள் கண் விழித்துப் படித்துவிட்டு, படுக்கைக்குச் சென்றவுடன் ‘உடனே தூக்கம் வராதா’ என ஏங்குவர். ஏனெனில் அல்ஜீப்ராவும் கெமிஸ்ட்ரி பார்முலாக்களும் மூடிய கண்களுக்குள் அவ்வப்போது வந்து மன இறுக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சூத்திரம் மனப்பாடம் செய்வதை, படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பாக நிறுத்திக்கொள்ளவும்.

நல்ல மதிப்பெண் மூலமாகவே தரமான கல்லூரியில், விரும்பிய மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இது உண்மைதான். அதே நேரம், மன அழுத்தத்துக்கான முக்கியக் காரணமும் இதுதான். ‘மதிப்பெண் குறைந்தால் டாப்10 கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ’ என்ற அச்சம் இப்போது தேவையில்லாத ஒன்று. டாப் 10 கல்லூரிகள் என்பதில் வணிகம் உட்பட பல்வேறு சூட்சுமங்கள் இருக்கின்றன. அதற்குள் விரிவாக செல்லத் தேவையில்லை. உண்மையில் இங்கு டாப் 100 கல்லூரிகள் உள்ளன. அதில் சேர்ந்து திறமையை நிரூபிப்போம் என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்ளுங்கள்.

மன அழுத்தத்துடன் தேர்வு எழுதச் செல்பவர்கள், கவனக்குறைவுக்கு ஆட்பட்டு சிறு பிழைகளை செய்து அதிக மதிப்பெண்களை இழக்கின்றனர். இதை ஒவ்வோர் ஆண்டும் கண்கூடாகப் பார்த்துவருகிறேன். குறிப்பாக சிலருக்கு, கடந்த ஓராண்டாக இல்லாத மன அழுத்தம் திடீரென தேர்வுக்கு ஒரு மாதம் முன்பாக தொற்றிக்கொள்ளும். பதற்றம் அதிகரிக்கும். இதயம் வேகமாக துடிக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் வியர்க்கும். உடல் சூடாகி லேசான காய்ச்சல் போல உணர்வார்கள். பார்வையும்கூட லேசாக மங்கும். நாக்கு வறளும். படித்தது மொத்தமும் மறந்துபோகும். ஆண்டுக்கு 10 மாணவர்களை இப்படி சந்திக்கிறேன். தவறு மாணவர்கள் மீது அல்ல. அதிகமான அழுத்தத்தை, எதிர்கால பாரத்தை ஓராண்டாக அவர்கள் மேல் சுமத்தியவர்கள் மீதுதான் தவறு.

இதுபோன்ற சூழலில், மாணவர்கள் பயப்படக்கூடாது. பதற்றம் ஏற்பட்டால் எல்லோருக்குமே உடலில் அட்ரீனல், கார்டிசால் ஆகிய ஹார்மோன்கள் சுரப்பது வழக்கம். அவை சுரப்பதால் ஏற்படும் உடலியல் ரீதியான பிரச்சினைகள்தான் உங்களுக்கும் ஏற்படுகின்றன. உங்களுக்குத் தெரிந்த மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் பெறுவதன் மூலம் ஓரிரு நாட்களில் வெகு சுலபமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

எதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு, லட்சியத்தை அடையும் நோக்கத்துடன் நடந்தால் வீண் குழப்பங்கள், பதற்றம், அச்சம் ஆகிய அனைத்தையுமே தவிர்க்கலாம். அவசரமாக படிப்பது, புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்வது, தெரியாத வினா-விடையையே நினைத்துக்கொண்டு இருப்பது, பாடத்திட்டத்தை விட்டு வெளியே இருந்து கேள்வி வருமா என சந்தேகம் கொள்வது ஆகிய வீண் சந்தேகங்கள், குழப்பங்களை தவிர்க்க வேண்டும். இவையும் மன அழுத்தத்துக்கு முக்கியக் காரணிகள்.

அதேபோல, மாணவர்கள் பெரும்பாலும் ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகளில் சிறு தவறு செய்கின்றனர். இவர்கள் என்னிடம் வந்து, ‘நன்றாக தெரிந்த பதில். எப்படி தவறு செய்தேன் என்றே தெரியவில்லை’ என்பார்கள். காரணம், மன அழுத்தம் மட்டுமே. எனவே, தங்கள் பிள்ளையை மன அழுத்தம் வாட்டுகிறதா என்பதைக் கண்டறிவது பெற்றோரின் முக்கியக் கடமை.

மாணவர்கள் பெரும்பாலும் இடத்தை விட்டு நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். அதை தவிர்க்கலாம். வீட்டிலேயே மாடியில் சில மணி நேரம் படிக்கலாம். தோட்டம் இருந்தால் அங்கு சிறிது நேரம் படிக்கலாம். பாதுகாப்பான, கவனத்தை சிதறடிக்காத பூங்காக்கள் அருகில் இருந்தால், அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை எல்லாம் படிப்பு தொடர்பான மன அழுத்தங்களைப் போக்கும் உத்திகள். எங்கு படித்தாலும், அக்கம்பக்கத்தில் வேடிக்கை பார்க்காமல் உங்கள் கவனம் படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்.

ஒரே பணியில் வெகு நேரம் கவனம் செலுத்துவது கடினம் என்பதால் மனதை மாற்றுச் சூழலுக்கு கொண்டு செல்வது மனதை சமநிலைப்படுத்தும். மனச் சமநிலையுடன் படிக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்த்துக்கள்!

இவை எல்லாம் முக்கியம்..

# வினா வங்கி மற்றும் பாடப் புத்தகத்தில் இருந்தே 80 சதவீத கேள்விகள் கேட்கப்படுவதால், அதை நன்றாக படித்து வைத்துக்கொள்ளுங்கள்.

# நன்றாக படித்த பாடங்களை ஒருமுறைக்கு 2 முறை எழுதிப் பாருங்கள். 20 நிமிடம் படித்தால், 10 நிமிடம் அதை எழுதவேண்டும்.

# மாதிரி தேர்வில் செய்த தவறுகளை பட்டியலிட்டு, அதில் செய்யவேண்டிய திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். மாதிரி தேர்வில் சாய்ஸில் விட்ட கேள்விகளை அக்கறை எடுத்துப் படித்து, எழுதிப் பாருங்கள்.

# வகுப்பில் எழாத பாட சந்தேகங்கள், படிக்கும்போது எழலாம். உடனே ஆசிரியரை அணுகி தீர்வு காணுங்கள்.

# எல்லாவற்றையும்விட முக்கியம்.. படிப்பையும் தேர்வையும் தாண்டி மிகப் பெரிய உலகம் ஒன்று இருக்கிறது. அதை மனதில் நிலைநிறுத்துங்கள். வெற்றி உங்களுக்கே!

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறைஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது. சாப்பிடும் முன் மற்றவர்கள...