Saturday, February 28, 2015

மெட்ராஸ்... நம்ம மெட்ராஸ்!

சென்னைவாசிகள் சென்னை மாநகரத்தின் மீது வைத்திருக்கும் காதலை பேஸ்புக்கில் சென்னைக்காக ஆரம்பத்திருக்கும் பக்கங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். சென்னையின் பல வண்ண முகங்களை இந்தப் பக்கங்கள் பதிவுசெய்கின்றன. அப்படி ஒரு பக்கம்தான் ஐ அம் மெட்ராஸ் (I am Madras). இந்தப் பக்கத்தை நடத்துபவர் ரவுனக் என்னும் 24 வயது இளைஞர். “ஹுயூமன்ஸ் ஆஃப் நியூ யார்க்’ (Humans of New York) என்னும் பேஸ்புக் பக்கத்தின் தாக்கத்தால்தான் ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தை உருவாக்கினேன். சிறுவயதில் இருந்தே நான் ஒரு இன்ட்ரோவெர்ட்’. அவ்வளவு எளிதில் யாரிடமும் பேசமாட்டேன். ஆனால், சென்னையின் மீது எனக்கிருக்கும் அன்பை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் இந்த ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கம்” என்கிறார் ரவுனக்.

நியூயார்க் நகரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பதிவுகளை ‘ஹுயூமன்ஸ் ஆஃப் நியூயார்க்’ பேஸ்புக் பக்கத்தில் காணலாம். அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு, ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கம், சற்று விரிவாகச் சென்னையின் மக்களைப் பற்றிப் பேசுகிறது.

சென்னையின் வண்ணங்கள்

சென்னையின் பன்முகத்தன்மையை ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தில் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, எளிய மனிதர்களின் கதைகளை நிறையக் காண முடிகிறது. “அப்போதுதான் சென்னையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்துக்காக நானும் அவர்களுடைய பேச்சில் கலந்துகொண்டேன். பேசிமுடித்துச் செல்லும்போது, அவர்கள் டீ, வடை எல்லாம் கொடுத்து உபசரித்து அனுப்பினார்கள். அவர்களுடைய அன்பை மறக்கவே முடியாது” என்கிறார் ரவுனக்.

சென்னையின் டிரெண்டில் இருக்கும் விஷயங்களைத் தவறாமல் ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்தில் பதிவு செய்துவிடுகிறார் இவர். அது மெட்ராஸ் தினக் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, ஐபிஎல் ஃபீவராக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிராக இருக்கும் மனநிலை குறித்த விமர்சனமாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் இவருடைய பக்கத்தில் பார்க்கலாம். பெரும்பாலும் இவர் கடந்து செல்லும் சாமானியர்களைப் பற்றித்தான் பதிவிடுகிறார். “ஒரு முறை, ஒரு கேஸ் சிலிண்டர் எடுத்துச் செல்லும் நபரிடம் பேசினேன். அவரை நான் படம் எடுத்துக் காட்டியவுடன் அவருடைய முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. அதைப் பார்த்ததும் நான் செய்துகொண்டிருக்கும் இந்த வேலையைப் பெருமையாக உணர்ந்தேன்” என்கிறார் ரவுனக்.

அர்த்தமுள்ள வீக்எண்ட்

ரவுனக் தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அதனால் தன் வீக்எண்டை ‘ஐ அம் மெட்ராஸ்’ பக்கத்துக்காகச் செலவிடுகிறார். “வீக்எண்ட்டில் மட்டும் பதிவிடுவது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், பணிச்சூழல் காரணமாக அதிக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கிறேன். என் நண்பர்களும் நிறைய ஆலோசனைகள் வழங்கி தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்” என்கிறார் ரவுனக்.

தற்கொலை தீர்வல்ல...



பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன.

இவ்வாறு மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொள்வதற்குப் பள்ளிகளில் தரப்படும் அழுத்தம் ஒரு காரணமென்றால், தங்கள் பிள்ளைகள் பொறியியல் படிப்புப் படித்து வெளிநாட்டுக்குப் போய் டாலர்களில் சம்பாதிக்க வேண்டுமென்ற பெற்றோரின் பேராசையும் ஒரு காரணம்.

தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கும், உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளிக்கும், மேல்நிலைப் பள்ளியில் இருந்து கல்லூரிக்கும், கல்லூரியில் இருந்து உயர் கல்வி கற்கச் செல்லும் மாணவர் எண்ணிக்கை ஒவ்வொரு நிலையிலும் கணிசமாகக் குறைகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள்.

பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் நம் கல்வி முறையில் மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் ஆற்றலைக் கொண்டு வருவதற்கு எந்த முயற்சியாவது உண்டா என்றால் சுத்தமாக இல்லை.

இந்த மாணவருக்கு இந்தப் பருவத்தில் இதைத்தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று யாரோ ஒருவர் முடிவு செய்ததைத்தான் இப்போதும் கற்றுத் தருகிறோம்.

மாணவர்களின் புரிதல் தொடர்பாக யாருக்கும் கவலையில்லை. இப்போதைய தேர்வு முறையில் மனப்பாடம் செய்யும் திறன்தான் முக்கியம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய மாணவி ஒருவர், தான் படித்த பள்ளியின் கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட இடங்களிலும் கேள்விகளை ஒட்டிவிடுவார்கள் என்று கூறி வருத்தப்பட்டார்.

மதிப்பெண் பெறுவதுதான் வாழ்க்கை என்று நினைத்து, பல பள்ளிகள் பறக்கும் படை வந்தால் கூடக் கதவைத் திறக்கக் கால தாமதம் செய்கின்றன. உடனே யாராவது வந்துவிட்டால் உள்ளே நடப்பது தெரிந்து விடும் அல்லவா?

இப்படிப்பட்ட பள்ளியில் நம் பிள்ளைகள் படிக்க வேண்டுமா என்பதை பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும்.

பெற்றோரின் ஆசைதான் முதலில் பள்ளிகளில் சேர்ப்பதற்கும் பின் பணம் கொடுத்துக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கும் காரணமாகிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே என்று புரிந்தால் யாருக்கும் பிரச்னையில்லை. அதைவிடுத்துப் பெற்றோரின் ஆசைக்குப் பலியாகும் குழந்தைகள், மேல் வகுப்புக்குச் செல்லச் செல்ல ஆசிரியர்களின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர்.

இதற்கு ஓர் உதாரணம், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ஒரு மாணவியின் பரிதாபத் தற்கொலை. அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கே இந்த நிலையென்றால், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் நிலை எப்படியிருக்கும்?

சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒரே மகன், மருத்துவத் துறையில் உயர் படிப்புப் படித்தபோது பேராசிரியர் திட்டினார் என்பதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்.

நாட்டிலுள்ள எத்தனையோ பேருக்குக் கிடைக்காத உயர் கல்வி வாய்ப்பு தனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அந்த மாணவர் புரிந்து கொள்ளவில்லை. குடும்பத்தினரும் அந்த மாணவருக்கு உணர்த்தவில்லை.

இதற்குத்தானா 20 ஆண்டுகள் பாராட்டிச் சீராட்டிப் பெற்றோர் அவரை வளர்த்தனர்?

தனியார் பள்ளி நிர்வாகங்களின் பேராசைக்கு பல பிஞ்சுகள் உதிர்வதை நினைத்தால்தான் தாங்க முடியவில்லை. தங்கள் மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற வேண்டும் என்பதற்காக அவர்களுடைய மனநிலை சரிவரப் புரிந்து கொள்ளாமல் படிப்பொன்றே குறியாக இருக்குமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது.

பிளஸ் 2-வில் கணிதப் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த பலர் அண்ணா பல்கலைக்கழக கணிதத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெறக் கூட முடியவில்லை. இதற்கு யார் காரணம்?

தமிழகத்தின் சமச்சீர் கல்வி படித்த எத்தனை மாணவ, மாணவியர் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலச் சென்றுள்ளனர்?

தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் எல்லாமே தங்கள் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்றவற்றுக்கான கட்-ஆப் மதிப்பெண்களை வெளியிடுகின்றனரே தவிர, பிரபல உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தது தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடுவதில்லையே?

இந்த உலகில் பிறந்த மனிதர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை புதைந்துள்ளது. ஆனால், அந்தத் திறமையைக் கண்டறிந்து, அதற்கேற்றவாறு அந்த மாணவரை உருவாக்குவதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதைவிடுத்து சாதாரணப் பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடத் தைரியமில்லாமல் தற்கொலைதான் தீர்வென்றால், இந்த உலகில் யாரும் உயிருடன் இருக்க முடியாது.

ஏனென்றால், உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்னை உள்ளது. படிக்க வேண்டிய வயதில் தற்கொலை என்பதைவிடக் கொடிய விஷயம் வேறெதுவும் இல்லை.

மாணவப் பருவத்தில் தற்கொலைதான் தீர்வு என்பது கல்வி முறையில் கோளாறு இருப்பதையே காட்டுகிறது. அப்படியென்றால், அந்தக் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தேர்வு முடிவுகள் வரும்போதும் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுப்பதற்காக பல இடங்களில் மன நல மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

அதைப்போல, ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவ - மாணவியருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

அப்போதுதான் தற்கொலைகள் நிரந்தரமாக முடிவுக்கு வரும்.

Friday, February 27, 2015

பெண்கள் சிகரெட் பிடிக்கத் தடை: ரஷ்யாவில் அதிரடி!



ரஷ்யாவில் பிறக்கும் குழந்தைகள் உடல்நலக் கோளாறு காரணமாக எடை குறைவாகவும் நோய்வாய்ப்பட்டும் பிறப்பதைத் தடுக்க, அந்நாட்டு அரசு ஓர் அதிரடி முடிவை எடுக்கலாம் என்று தெரிகிறது. ரஷ்யாவில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். எனவே, பெண்கள் சிகரெட் புகை பிடிப்பதைத் தடுத்து நிறுத்தினால், இதுபோன்ற சிக்கல்கள் வராது என்று முடிவெடுத்த ரஷ்ய அரசு, ‘இனிமேல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் புகை பிடிப்பதோ, புகையிலை சம்பந்தமான பொருட்கள் வாங்குவதோ கூடாது. மீறினால் 50 டாலர் அபராதமும் சிறைத் தண்டனை’ என்று ஓர் அறிவிப்பு விரைவில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் இருந்து வெளிவரும் என்கிறார்கள்.

இது மட்டுமில்லை, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் புகை பிடிக்க விரும்பினால், அவர்கள் வயதை நிரூபிக்க தங்கள் பாஸ்போர்ட்டைக் காண்பிக்க வேண்டும். மேலும், அதையும் மீறி பெண்களுக்குப் புகையிலை சம்பந்தமான பொருட்களை விற்கும் கடைகளுக்கு 5000 டாலர் வரை கடுமையான அபராதமும், தனி நபர் என்றால் 50 டாலர் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிக்கை சொல்கிறது.

‘‘பெண்களின் கருப்பை சிதைவதற்கும், குழந்தைகள் சத்து இன்றி ஊனமாகப் பிறப்பதற்கும் நிகோட்டின் நச்சுப்பொருள்தான் பெரும் காரணமாய் இருக்கிறது. புகை பிடிக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் 15 வயதிலேயே சர்க்கரை, தைராய்டு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே நிகோட்டின் நச்சுப் பொருள் கொண்ட புகையிலை மற்றும் சிகரெட்டுகளை பெண்களுக்கு விற்பதற்கு அரசு தடை செய்ய வேண்டும்’’ என்று ரஷ்ய மருத்துவ ஆய்விதழ் ஒன்று செய்தியை வெளியிட்டதன் தொடர்ச்சியாக, விளாடிமிர் புதின் அரசு மேற்படி அறிக்கையை வெளியிட இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

‘இதற்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்’ என்று எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யப் பெண்கள், இந்தத் தடை ஆண்களுக்குக் கிடையாது என்பதால் செம கடுப்புடனும் இருக்கின்றனராம்.

- தமிழ்

குளக்கரை

வைரமுத்து (Vairamuthu)

முப்பத்தேழாண்டுகள் முடிந்தோடின
இந்தக் குளக்கரையில் நான் நடந்து

இன்றுதான் மீண்டும்
நடைபயில்கிறேன்

காலில் பரவசம்
நெஞ்சில் வலி

அன்று கூவிய பறவைகளில்
ஒன்றையும் காணோம்!

எந்த மழையில்
எந்தக் கோடையில்
மாண்டிருக்குமோ?

அன்று குடைபிடித்த மரங்களில்
ஏதுமில்லை இப்போது
கதவாய் - சாம்பலாய்
எவ்வடிவம் பூண்டனவோ?

உள்ளிருந்த அல்லிகள்
பூண்டற்று அழிந்தன

அன்று
சேலையைக் கல்லிலும்
மார்பால் மனசையும்
துவைத்துப் பிழிந்த பெண்கள்
மூத்து முதிர்ந்தாரோ
செத்தழிந்து போனாரோ?

அன்று
தத்தியெறிந்த தவளைக்கல்
தூர்வாரக் குளத்தாழத்தில்
கிடக்குமோ? கிடக்காதோ?

இப்போதென் நுரையீரல் நிறைப்பது
சேற்றுமணம் சுமந்த பழைய காற்றோ?
புழுதிசுமந்த புதிய காற்றோ?

அதோ
ஆங்கிலத்தின் கடைசி எழுத்தைப்போல்
வளைந்து நாற்றுநடும் மூதாட்டிகள்
நான் அன்றுகண்ட மங்கையரோ
இல்லை
முப்பது வயதில் முதுமைக்கு வந்தவரோ?

அன்று
குளத்தில் தொலைந்த மஞ்சள் ஓரணா
இன்று முக்குளித்தால்
கிட்டுமோ? கிட்டாதோ?

பூமியின் முகத்தில்
காலத்தின் கீறல்கள்
எல்லாம் எல்லாம்
மாறித் தேய்ந்தன

ஆனாலும்
நம்பிக்கையோடு தேடுகிறேன்
குளக்கரையில் பதிந்த என்
பிஞ்சுக்கால் தடங்களை

கணினி வேலை செய்கிறீர்களா, ஜாக்கிரதை!



கணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவுகரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறு, கணினிப் பார்வைக் கோளாறு (Computer Vision Syndrome) எனப்படுகிறது.

நம்முடைய கண்கள் மின்னணுக் கருவிகளைத் தொடர்ந்து பார்க்கும் வகையில் அமையவில்லை என்பதாலேயே, இது போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்காக நவீனத் தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளிவிட்டுச் செயல்படும் காலகட்டத்திலும் நாம் வாழவில்லை. ஆனால், கண்கள் பாதிக்கப்படாமல் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது?

கணினித் தொழில் சார்ந்தவராக நீங்கள் இருந்தா லும், உங்கள் கண்களுக்கு அடிக்கடி புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்ளுங்கள். இதற்கு முதல் வழி, விழியின் நண்பனாக மாறுவதுதான். அலுவலகச் சூழலும் பார்வையைப் பாதுகாக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும்.

பார்க்கும் விதம்

பொதுவாகக் கணினியில் வேலை செய்யும்போது, நம்மை அறியாமல் மணிக்கணக்கில் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். “இப்படிச் செய்வதால் சுருங்கி விரிய வேண்டிய கண் தசை இறுகிப் போகிறது” என்கிறார் அபினவா மருத்துவமனையின் தலைமை கண் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஜி. ரமேஷ்.

20-20-20

இதற்குத் தீர்வு என்ன? 20-20-20 கொள்கையைப் பின்பற்ற வேண்டும். கணினியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கண் பார்வையைக் கணினியிலிருந்து விலக்கி 20 அடி தொலைவில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும். "இதன் மூலம் கணினியுடன் கட்டி போடப்பட்டிருந்த கண் தசைகளுக்குச் சிறிது நேரம் ஆசுவாசம் கிடைக்கும்" என்கிறார் டாக்டர் ஏ.ஜி. ரமேஷ்.

சாதாரண மனிதர் ஒருவர் கண்களைச் சிமிட்டும் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்குதான் கணினியில் வேலை பார்ப்பவர் சிமிட்டுகிறார் என்கின்றன இது தொடர்பான ஆய்வுகள். இதனால் கண்கள் வறண்டு போகின்றன.

ஏசி பற்றி யோசி

இது மட்டுமில்லாமல், இன்று பெரும்பாலான அலுவலகங்கள் செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட ஏசி அறைகளில் இயங்குவதால் சுற்றுப்புறக் காற்றைக் காட்டிலும் ஏசி அறையிலிருக்கும் காற்று வறண்ட தன்மையுடன் இருக்கும். இதனாலும் கண்கள் வறண்டுபோகும். "இப்படி இருக்கையில், நீங்கள் கண்களை அடிக்கடி சிமிட்டுவது ரொம்பவும் அவசியம்.

அதிலும் 20 நிமிடத்துக்கு ஒரு முறை மெதுவாக 10 தடவை சிமிட்ட வேண்டும். இதனால் கண்களில் ஈரப்பதம் கூடும், கண் தசையின் அழுத்தம் குறையும்" என்பது டாக்டர் எஸ்.காயத்ரியின் அறிவுரை. கண்கள் உலர்ந்து போவதாக உணர்ந்தால், ஒரு நாளில் இரண்டு முறை கண்கள் மீது தண்ணீரை அடித்துக் கழுவுவது நல்லது.

விழியின் நண்பனாக

கணினியில் ஒரு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்த பிறகு ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் சருமம், கண்களின் ஈரப்பதம் அதிகரிக்கும். நீங்கள் மூக்குக் கண்ணாடி அணிபவர் என்றால் ஒளியைப் பிரதிபலிக்காத லென்ஸைப் பயன்படுத்துங்கள். அதேபோல, காண்டாக்ட் லென்ஸை விடவும் மூக்குக் கண்ணாடி நல்லது. ஏனென்றால், கண்ணில் ஈரப்பதம் குறைந்துபோனால் காண்டாக்ட் லென்ஸ் மேலும் பல அசவுகரியங்களை ஏற்படுத்தும்.

வேலை சூழல்

நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தின் ஒளி அமைப்பு மிகவும் முக்கியம். ஒழுங்கற்ற ஒளி அமைப்பு கண்களைப் பாதிக்கும். கோத்ரெஜ் உட்புறப் பணிச்சூழல் மையம் (Godrej Interio Ergonomics Cell) நடத்திய ஆய்வின் முடிவுகள் கூறுவதாவது: 68 சதவீதம் அலுவலகங்கள் சீரற்ற ஒளி அமைப்புடன் இயங்குகின்றன.

அவற்றில் 58 சதவீதம் போதுமான வெளிச்சம் இல்லாமலும், 42 சதவீதம் அதிகப்படியான ஒளியுடனும் இருக்கின்றன. "240 முதல் 400 லக்ஸ் அளவிலான ஒளி அமைப்புதான் கணினி அலுவலகத்துக்குச் சரியான ஒளி அமைப்பு" என்கிறார் கோத்ரெஜ் உட்புறப் பணிச்சூழல் மையத்தின் தலைவரான சாஸ்த்ரி.

எங்கே உட்கார வேண்டும்

நாற்காலி அமைப்பும் மிகவும் முக்கியம் என்கிறார் டாக்டர் ஏ.ஜி. ரமேஷ். கணினி வைக்கப்பட்டிருக்கும் மேஜையும், நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலியும் சவுகரியத்துக்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொள்ளும் வகையில் இருப்பது நல்லது. கணினித் திரையின் மேல்புறம் உங்கள் பார்வை மட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும் அல்லது பார்வையிலிருந்து 10 முதல் 15 டிகிரி வரை கீழே இருத்தல் நல்லது. நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து 20 முதல் 24 அங்குலம் தொலைவில் மானிட்டரை வைப்பதும் முக்கியம்.

எல்.சி.டி. நல்லது

அதிக ரெசல்யூஷன் கொண்ட, ஒளியைப் பிரதிபலிக்காத எல்.சி.டி. (L.C.D.) திரைகளைப் பயன்படுத்துவது அவசியம். திரையின் அளவு குறைந்தபட்சம் 19 அங்குலம்வரை இருப்பதும், காண்ட்ராஸ்ட் கூடுதலாகவோ, குறைவாகவோ இல்லாமல் பார்வைக்குச் சவுகரியமாக இருப்பதும் முக்கியம்.

கணினித் திரையின் பின்புறத்தில் ஜன்னல் இல்லாமல் பக்கவாட்டில் இருப்பதும் நல்லது. சுவரின் நிறம் முதற்கொண்டு கண்களைக் கூசச் செய்யும் ஒளிவீச்சை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வருடா வருடம் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதிப்பது அவசியம். "ஒருவருக்கு நல்ல பார்வைத் திறன் இருந்தாலும், கணினியை நோக்கிப் பார்வையைக் குவிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். அப்படி இருந்தால் கண் மருத்துவர்கள் சரியான கண்ணாடியைப் பரிந்துரைத்துக் கண்களைப் பாதுகாப்பார்கள்" என்கிறார் டாக்டர் ரமேஷ். வாழ்க்கை முழுக்க நமக்கு ஒளியைத் தரும் கண்களை அலட்சியம் செய்யலாமா?

தமிழில்: ம.சுசித்ரா

©தி இந்து (ஆங்கிலம்)

நிறுத்தங்களில் நிற்காத ரயில்

அதிவேக ரயில் பயணங்களை வழங்குவதில் சீன ரயில்வே துறையை மிஞ்ச முடியாது. தற்போது ரயில்களின் பயண நேரத்தை குறைப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.

ரயில் எந்த ஸ்டேசனிலும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் போதே பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வழி கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு ஸ்டேசனில் ரயில் நின்று செல்ல ஐந்து நிமிடம் ஆகிறது என்றால், வழியில் 30 ஸ்டேசன்கள் இருக்கும்பட்சத்தில் 150 நிமிடங்கள் ஆகும்.

அதாவது சுமார் இரண்டரை மணி நேரம் இதன் மூலம் செலவாகும். இதை மிச்சப்படுத்தலாம் என்கிறது சீன ரயில்வே.

இந்த தொழில் நுட்பத்தின்படி ரயில் எந்த ஸ்டேசனிலும் நிற்கத் தேவையில்லை. ரயில் பெட்டியின் மேல்பாகத்தில் தனியாக ஒரு இணைப்பு பெட்டி உள்ளது. ஒரு ஸ்டேசனில் இறங்க வேண்டிய பயணிகள் அந்த பெட்டிக்கு சென்றுவிட வேண்டும்.

ஸ்டேசன் வந்ததும் மேலே உள்ள அந்த பெட்டி மட்டும் தனியாக கழன்று ஸ்டேசனில் நின்றுவிடும். அது போல ஏற வேண்டிய பயணிகள் ஸ்டேசனில் தயாராக இருக்கும் பெட்டிக்கு சென்றுவிட வேண்டும்.

ரயில் அந்த ஸ்டேசனை கடக்கிற போது ரயிலில் மேல்பகுதியில் இந்த பெட்டி இணைந்துகொள்ளும். இதற்கென சிறப்பு வடிவமைப்பை மேற்கொண்டு வருகிறது.

MCI team revisits med college to oversee progress

TRICHY: Members of the Medical Council of India (MCI) made a surprise visit to KAP Viswanatham Government Medical College (KAPVGMC) attached to Mahatma Gandhi Memorial Government Hospital (MGMGH) here on Thursday, to decide whether the college should continue having 50 additional MBBS seats.

The team, comprising Dr T S Renganath, Dr K Sivasankara Rao and Dr Thathiri Parmar, inspected the wards in MGMGH and the hostels, canteen and classrooms in KAPVGMC. The whole visit was videographed and photographed.

The state government had raised MBBS seats in KAPVGMC from 100 to 150 in 2013-14, but since then, it has been struggling to meet the MCI requirements for conducting MBBS course with 150 seats. The latest visit follows two earlier visits in May and November, 2014. In November, the MCI team had made adverse remarks about the facilities and manpower available at the college for conducting MBBS classes with 150 seats, hospital sources said. The recognition for additional seats had been pending ever since and Thursday's visit is considered crucial.

The team checked whether some of the discrepancies pointed out to the hospital authorities by the council during the last visit had been rectified.

Shortage of doctors remains one of the serious problems faced by the college and the hospital, a situation that has remained unchanged for several years now. The teams from MCI reportedly pointed out the shortage and advised the government to increase the number of faculty. In the wake of pending approvals for many medical colleges across the state, the ministry of health family welfare of Tamil Nadu had announced the appointment of new doctors. KAPVGMC was sanctioned 57 doctors, besides 27 associate professors, 17 assistant professors and 19 tutors on a permanent basis, at an approximate cost of Rs 2.98 crore per annum. However, only a few of these posts have been filled so far. Hospital staff said many qualified doctors were not interested to join government hospitals due to the workload.

At the time of the earlier visit by MCI members, TOI had reported about doctors being allegedly hired temporarily from primary health centres and government hospitals to show that the college had enough manpower.

Dr M K Muralitharan, newly-appointed dean of the college, was out of town at the time of the visit. Dr Parmar told TOI that the visit was a routine procedure for approval and accreditation of courses. However, when asked if the college satisfied the required norms, including number of faculty, she refused to comment.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...