Sunday, March 8, 2015

அன்னமிடும் கை



சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் அந்த சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைகிறவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார் தாயம்மாள். 73 வயதாகும் தாயம்மாள், ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வூதியம் மூலம் வரும் வருமானத்தில் ஓய்வெடுக்க விரும்பாத இவர், மகளிர் சுய உதவி குழு மூலம் சிற்றுண்டி உணவகம் நடத்தி வருகிறார். ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் கிராம மக்கள், அவ்வப்போது வரும் அலுவலக ஊழியர்களுக்கு மலிவு விலையில் அன்னம் வழங்குவதாலேயே இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

வழிகாட்டிய கல்வி

எப்போதும் இன்முகத்துடன் இருக்கும் இவர் கடந்து வந்த இன்னல்கள் ஏராளம். பசியின் கொடுமையை அறிந்ததால்தான் இப்படியொரு உணவகத்தை நடத்தி வருகிறார். திருநெல்வேலி அருகே இருக்கும் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த இவருக்கு 18 வயதில் திருமணம் நடந்தது. அந்த மண வாழ்க்கை எட்டு ஆண்டுகள் மட்டுமே

நீடித்தது. 1968-ல் எதிர்பாராத விதமாக அவருடைய கணவர் ராமசாமி இறந்துவிட, நான்கு பிள்ளைகளைக் கரை சேர்ப்பதொன்றே தாயம்மாளின் வைராக்கியமாக இருந்தது. காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பாடம் படித்து தங்கப் பதக்கம் பெற்றார். ஆசிரியப் பயிற்சி முடித்துவிட்டு, சிவகங்கையில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியப் பணியில் தனி முத்திரை பதித்த தாயம்மாள், ஓய்வுக்குப் பிறகும் தனக்கு தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஓய்வுக்குப் பிறகும் வேலை

சத்தும் சுவையும் நிறைந்த உணவுப் பொருட்கள், இவரது சிற்றுண்டிச் சாலையின் அடையாள.

“என்ன வேணும்னு கேட்டு எடுத்துவைம்மா” என உட்கார்ந்த இடத்திலிருந்து உபசரிக்கிறார் தாயம்மாள். கையில் காசில்லை என்றாலும் கடன் சொல்லியாவது சாப்பிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் காலடி எடுத்து வைக்கும் கிராமத்தினர் இவரது கடைக்கு வைத்திருக்கும் பெயர் ‘ஆத்தா மெஸ்’.

“ஓய்வுங்கற பேர்ல வீட்ல் உட்காராம ஏதாவது செய்யணும்னுதான் இந்தக் கடையை நடத்துறேன்.எனக்கு உதவியா இருக்கற ரேவதி, மையலுக்கு உதவி செய்யும் பெண்கள்னு கூட்டா சேர்ந்து இந்தக் கடையை நடத்திட்டு இருக்கோம்” என்று சொல்லும் தாயம்மாள், எதையும் சாதிக்க வயது தடையல்ல என்பதை நிரூபிக்கிறார்.

படம்: சுப. ஜனநாயகசெல்வம்

180-வது ஆண்டுவிழா கொண்டாடும் சென்னை மருத்துவக் கல்லூரி

சென்னை மருத்துவக் கல்லூரி (கோப்புப் படம்)

சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்குவது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் (எம்எம்சி) எனப்படும் சென்னை மருத்துவக் கல்லூரி. நாட்டின் பாரம்பரிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான இக்கல்லூரி தற்போது 180-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது.

புனித ஜார்ஜ் கோட்டையில் 1664-ம் ஆண்டு மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிட்டல் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு இடங்களில் மாறி மாறி செயல்பட்ட அந்த மருத்துவமனை, 1772 முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே செயல்படத் தொடங்கியது. 1835 பிப்ரவரி 2-ம் தேதி மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூலை அப்போதைய கவர்னர் சர் பிரெடரிக் ஆடம் தொடங்கிவைத்தார். 1852-ல் இது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் ஆக உயர்த்தப்பட்டது. 1857-ல் சென்னை பல்கலை.யுடனும், 1988-ல் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை.யுடனும் இணைக்கப்பட்டது.

‘மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூல்’ தொடங்கப்பட்டு 180 ஆண்டுகள் ஆகின்றன. 180-வது ஆண்டு விழாவை கல்லூரி நிர்வாகத்தினரும், முன்னாள் மாணவர்களும் இணைந்து 20 நாட்கள் கொண்டாடுகின்றனர்.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறை இயக்குநர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:

மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிட்டல் தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. 1835-ல் மெட்ராஸ் மெடிக்கல் ஸ்கூல் தொடங்கப்பட்டபோது 4 துறைகள் மட்டுமே இருந்தன. 21 மாணவர்கள் படித்தனர். தற்போது 50-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இக்கல்லூரியின் 180 ஆண்டு பாரம்பரியம், சிறப்புகளை இப்போதுள்ள மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் 180-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள், வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. நிறைவு விழாவில் முன்னாள் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு சுதா சேஷய்யன் கூறினார்.

மாணவர்கள் நடைபயணம்

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி யின் 180-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று, பாரம்பரியம் போற்றும் நடைபயணத்தை (ஹெரிடேஜ் வாக்) கல்லூரி முதல்வர் டாக்டர் விமலா நேற்று காலை 8.15 மணிக்கு தொடங்கிவைத்தார். சுதா சேஷய்யன், மருத்துவ துணை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதில் 50 மருத்துவ மாணவர்கள், 15-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் களான டாக்டர்கள் டி.குணசாகரம், விட்டல், ராஜன் சந்தோஷம் ஆகியோர் நடைபயணத்தை வழி நடத்திச் சென்றனர். கல்லூரியின் பழைய கட்டிடங்களைப் பார்வையிட்ட படியும், அவற்றின் பாரம்பரியத்தை விளக்கியபடியும் நடைபயணம் சென்றது. கல்லூரி, மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றிய பிறகு, பகல் 12 மணி அளவில் நடைபயணம் நிறைவடைந்தது.

பழைய கட்டிடங்கள்

சென்னை மருத்துவக் கல்லூரி யில் பிராட்ஃபீல்ட் அறுவை சிகிச்சை பிளாக் 1934-ல் கட்டப் பட்டது. இதய சிகிச்சை பிளாக், ஹேலன் டாஸ்ஸிக் அம்மையாரால் 1972-ல் திறக்கப்பட்டது. நாட்டின் முதல் நீரிழிவு நோய் சிகிச்சை மையம் டாக்டர் சாம் இ பி மோஸஸ் என்பவரால் 1953-ல் இங்கு தொடங்கப்பட்டது.

பிரபல முன்னாள் மாணவர்கள்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - இந்தியாவின் முதல் பெண் டாக்டர்.

டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் - சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தராக 27 ஆண்டுகள் இருந்தவர். எம்எம்சி-யின் முதல் இந்திய முதல்வர்.

டாக்டர் கே.எஸ்.சஞ்சீவி - விஎச்எஸ் மருத்துவமனை நிறுவனர்.

டாக்டர் எம்.சி.நஞ்சுண்ட ராவ் - சுவாமி விவேகானந்தருடன் பழகியவர். அந்த காலத்தில் மயிலாப்பூர் பகுதியில் மருத்துவம் பார்த்தவர்.

டாக்டர் நடேசன், டாக்டர் டி.என்.நாயர் - இருவரும் நீதிக் கட்சியை சேர்ந்தவர்கள்.

முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 மகளிர் தின சிறப்பு விமானங்கள்

முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 மகளிர் தின சிறப்பு விமானங்கள்

சர்வதேச மகளிர் தினமான இன்று முழுக்க முழுக்க பெண் விமானிகள் மற்றும் சிப்பந்திகள் கொண்ட 4 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கியுள்ளது. இதில் 2 விமானங்கள் உள்நாட்டு வழித்தடத்திலும் மேலும் இரு விமானங்கள் சர்வதேச வழித்தடத்திலும் இயக்கப்பட்டன.

உலகிலேயே முதன்முறையாக முழுக்க முழுக்க பெண்கள் இயக்கிய விமானச் சேவையை 1985-ம் ஆண்டு ஏர் இந்தியா அறிமுகப்படுத்தியது. இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு சரியாக 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மீண்டும் இந்த சிறப்பு விமானச் சேவை இயக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சேவையாக மும்பை-டெல்லி வழித்தடத்திலும், டெல்லி-ஜோத்பூர்-மும்பை வழித்தடத்திலும் 2 விமானங்கள் இயக்கப்பட்டன. சர்வதேச வழித்தடத்தில் டெல்லி-மெல்போர்ன் மற்றும் மும்பை-மஸ்கட்-மும்பை இடையில் இரு விமானங்கள் இயக்கப்பட்டன.

கடந்த 1985-ம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து சில்ச்சார் வழித்தடத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஓட்டிச் சென்று சாதனை படைத்த அதே இரு பெண் விமானிகள் இன்று டெல்லி-மெல்போர்ன் இடையிலான விமானத்தை ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மகளிர் தினம்: இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெண் விமானி என்ன சொல்கிறார்!



'இந்த சமுதாயம் உங்களை என்னவாகவும் நினைத்து விட்டு போகட்டும்... ஆனால் உங்கள் கனவுகளை இந்த சமுதாயத்தால் அழிந்து விட மட்டும் அனுமதித்து விடாதீர்கள் '' என்கிறார் இந்தியாவின் ஒரே முஸ்லிம் விமானியான ஷாரா ஹமீத் அகமது.

''என்னை சந்திப்பவர்களிடம், நான் எனது பெயரை சொன்னால், உங்கள் பெயரை திருப்பி ஒருமுறை சொல்லுங்கள் என்பார்கள். பிறகு அந்த பெயரை கூர்ந்து கேட்பார்கள். நீங்கள் எப்படி விமானியாக என்று எதிர்முனையில் இருப்பவரின் புருவம் விரியும். ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு இவர் எப்படி இந்த துறைக்கு வந்தார் என்பதுதான் அவர்களது ஆச்சரியத்துக்கு காரணம். சாரா என்றால் கிறிஸ்தவப் பெண் என்று பலரும் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அக்மார்க் இஸ்லாமிய பெண்ணான நான்தான் 600 பெண் விமானிகள் பணிபுரியும் இந்திய விமானத்துறையில் உள்ள ஒரே இஸ்லாமிய பெண்'' என சிலாகிக்கிறார்.

ஆனால் விமானியாக சாரா பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் குடும்பத்தினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு. பெண் என்பவள் திருமணம் புரிந்து கொண்டு குழந்தைகளை பெற்றுத்தள்ள வேண்டிய எந்திரம் என்பதுதான் அவரது குடும்பத்தாரின் பார்வை. முதலில் தந்தை ஹமீத் அகமதுவிடம் இருந்துதான் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் சாராவின் மனஉறுதியை பார்த்து,சாரா மீது தந்தைக்கு இரக்கம் வந்திருக்கிறது.

தொடர்ந்து சாராவின் தந்தை, அமெரிக்காவில் வசிக்கும் தனது விமானி நண்பர் ஒருவரிடம் தனது மகளின் ஆசை குறித்து பேசியிருக்கிறார். அந்த நண்பர், ''டேய் நீ கொடுத்து வைத்தவன்டா... உன் மகள் விமானியாக ஆசைப்படுகிறாளா? எந்த தடையும் போடாதே... அவளை முதலில் விமானியாக்கி விட்டு மறுவேலை பார்'' என்று உத்தரவே போட்டிருக்கிறார். அதற்கு பின்னரே, சாராவுக்கு தந்தையிடம் இருந்து பச்சை சிக்னல் கிடைத்திருக்கிறது. அப்படிதான் சாராவின் விமானிக் கனவு பறக்கத் தொடங்கியது.

கடந்த 2007ஆம் ஆண்டுவாக்கில் இரட்டைகோபுரம் தகர்ப்பு காரணமாக அமெரிக்காவில் இஸ்லாமிய மாணவ- மாணவிகளுக்கு படிக்க விசா கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் சாராவுக்கு அந்த பிரச்னையெல்லாம் எழவே இல்லையாம். எளிதாகவே விசா கிடைத்ததாம். படிப்பு முடிந்ததும் தாய்நாட்டில் விமானியாக வேலை பார்க்க வேண்டும் என்ற லட்சியத்துடனே சாரா இந்தியா திரும்பினார்.

தற்போது ஸ்பைஸ்ஜெட்டில் பணிபுரிந்து வரும் 25 வயது சாராவை நிறைய பேர் திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார்கள். ஆனால், அவர்கள் முன் வைக்கும் ஒரே நிபந்தனை, சாரா வேலையை விட்டு விட வேண்டும் என்பதுதான். இப்படி கேட்பவர்களிடம் உங்கள் மகன் வேலையை விட்டு விட்டு எனது மகளுடன் செட்டிலாகி விடுவாரா? என்று திருப்பி கேட்கிறார் எனது தந்தை என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் சாரா.

முஸ்லிம் பெண்களுக்கு என்ன அறிவுரை சொல்ல நினைக்கிறீர்கள் என்றால், ''இந்த சமுதாயம் உங்கள் கனவுகளை கொலை செய்ய அனுமதித்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் சாராவைப் போல'' என்கிறார்.

எம்.எச்-370: யாருக்கும் இப்போது அக்கறை இல்லை!

Residents want CBI to probe ‘honest’ engineer’s death

TIRUNELVELI: It is like any small town colony in Tamil Nadu. But, Thirumal Nagar, on the outskirts of Palayamkottai in Tirunelveli district, is now shrouded in gloom. What catch the eyes are the posters that have appeared on whitewashed concrete houses and street walls. Put up by residents, the posters demand a CBI probe into the suicide of 58-year-old S Muthukumarasamy. The executive engineer of the state agriculture department had jumped in front of a train near Thatchanallur, 5km from Palayamkottai, on February 20.

The suicide kicked up a furore as news spread that he had been driven to take the extreme step due to political pressure. Muthukumarasamy, who was to retire at the end of the year, had headed a committee constituted to make some appointments. On February 20, he had left home as usual at 10.30am, telling his wife Saraswathy he would be back for lunch. But, at 2.30pm she received news that her husband's body had been retrieved from the railway tracks. "He was a straightforward person and we never thought he would take such a step," said Samy, a cousin, going on to add that the family wanted to be left alone as uttering anything could lead to unwanted political attention.

Muthukumarasamy's younger son M Sethuraman, 24, denied his father had committed suicide due to family problems. "We come from a good family and there was no problem at all," he said. Shocked residents came to the family's support. Members of the Thirumal Nagar Residents Welfare Association and Alagar Nagar Residents Welfare Association put up posters on the walls of the houses demanding a CBI enquiry into the Muthukumarasamy's death. "This is the first time residents are demanding a CBI probe into the death of a fellow resident. That's because we know he was an honest officer,'' said P Varagunan, secretary of the Thirumal Nagar Residents Welfare Association.

Muthukumarasamy had moved into the area about two-and-a-half years ago. "We used to meet during morning walks. About two weeks before his death, he looked very depressed and when I asked him about it, he said it was nothing," said Varagunan. "He then told me he was under some political pressure regarding appointments, but did not elaborate," he added. Varugunan later learnt that Muthukumarasamy had appointed seven temporary drivers in the agricultural department without giving into pressure from a 'minster' and his associates. "He was being continuously harassed by them and this drove him to suicide,'' said Varugunan.

The Tirunelveli railway police registered a case under Section 174 of the CrPC for unnatural death and are investigating. Police sources said the driver of the Dadar Express (Train No 11021) had said he saw a man walking near the western end and suddenly get on to the tracks after throwing away a mobile phone.

Class 8 dropout becomes engg college professor, lands in jail

CHENNAI: If you can aspire it, you can achieve it with dedication—that's something R Ashok Kumar Choudhary, 35, from Guntur proved to himself. But when he blended dedication with fraud, his medallions were snatched away, he was dumped behind the bars.

The Class 8 dropout's journey from the subalterns of Andhra Pradesh to a professor's seat in an engineering college in Kancheepuram could be a tale of a genius gone the wrong way. He forged three degrees - a PhD, an MBA and an MSc - to get a teaching job, but also made sure that he taught—at least for three years before he was caught on Friday after some colleagues stumbled upon the real profile of the PhD holder on the internet.

Police said Ashok Kumar Choudhary, who officially changed his name to Ravi Kumar Reddy, had been working as a professor at Saveetha Engineering College in Thandalam near Kancheepuram since May 2012. His forged PhD said he was an expert in power systems. He taught the subject to students of electrical and electronics engineering (EEE).

"Not once did anyone doubt his knowledge of the subject," said a faculty member. "Students felt he was a good teacher. How did he manage it?" Police asked Reddy the same question, and he told them how.

Reddy, then called Choudary, worked in a photocopier shop in Guntur after he failed in his Class 8. "He said the failure didn't stop him from educating himself," said an investigating officer. "He wanted to be respected as an educated person. A lot of students would leave their textbooks to be photocopied. Chouhary would make an extra copy of the book and read it at leisure time."

He realized he could amass knowledge, but not an academic qualification. "That's when he decided to forge a certificate," said the police officer. First it was an Industrial Training Institute diploma, with which he got a job in a private company. Then he forged an MSc certificate and moved on to a better job. With his stature, his ambition grew.

He moved to Delhi and joined a preparation class for CAT. His learning skills were such that the institute absorbed him as a part-time teacher soon after he completed the one-year course. Meanwhile, he had forged another PhD certificate claiming to be a scholar in power systems, from the Indian Institute of Sciences Bangalore. With enough 'credentials' in his armour, he changed his name to Ravi Kumar Reddy - the name of a PhD holder from IISc - and got the job at Saveetha Engineering College in 2012. He drew a monthly salary of Rs1.12 lakh.

Choudhary, now Reddy, told his interrogators that he would read up and download content to prepare for the lectures that he delivered. The first trace of suspicion surfaced among his colleagues when Reddy refused to meet a team of academics who wanted to discuss some topics of his interest. Later it turned out that he was evasive because some of the team members were from IISc, from where he claimed he had taken his PhD.

Suspicious colleagues did some research on the internet and came across the profile of an IISc alumnus called B Ravi Kumar. All the 'credentials' Reddy claimed to have matched with this man's but the photograph was different. They called police.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...