Monday, October 5, 2015

Four years into international services, Trichy airport still looks wistfully at Gulf..TOI

TRICHY: As Trichy International Airport enters the fourth year of its international operations from Sunday, the non-inclusion of the airport in the BASA (Bilateral Air Services Agreement) continues to prevent foreign carriers from starting operations from the city to the Gulf countries.

While passenger traffic is increasing year on year with more services towards south east Asian countries, people from southern states still demand direct carriers to the Gulf. The overseas passenger traffic is set to cross 13 lakh this year.

BASA is an agreement between two countries which allows international commercial air transport between their territories. A senior official of the aviation department at the airport said every year, the agreement is revised based on capacity addition and the requirement of carriers. Several prominent Gulf carriers asked for seat allocation for Trichy, but it was never awarded.

According to data obtained from the Trichy International Airport and the directorate general of civil aviation, passengers have been increasing over the years and overseas passengers contribute majorly to this growth. The airport receives at least 1,000 passengers every day.

Trichy Airport, which has a 70-year-old history, handles about five major international flights, most of them flying to south east Asian countries and only one of them flying to gulf countries directly. Though Indians have been travelling to Gulf countries for work in huge numbers for several decades, Trichy still has just one Indian carrier flying to Dubai with a full capacity load.

"A large chunk of the population in the southern districts migrate to the Gulf to work as labourers. Trichy remains one of their connecting points and on a daily basis, at least 350 of them travel to and from Trichy to several places in the Gulf," said Khaleel Bhaqvi, secretary of the Kuwait- Tamil Islamic Community in Kuwait.

He added that prior to the awarding of 'international' status to the Trichy airport, Indian Airlines used to operate flights to Kuwait and Sharjah. But this was later dropped citing several reasons. Several representations have been sent to the ministry of civil aviation to revive the services.

A senior official from the airport said, "The runway needs to be at least 10,000 feet long to allow wide-bodies aircraft to land at the airport. For now, the airport only takes in narrow-bodies aircraft. Concerns about the danger of short runways have increased after the Mangalore air crash of 2010," they said.

இயற்கை வளங்களைக் காப்போம்!


Dinamani

By சா. ஷேக் அப்துல் காதர்

First Published : 05 October 2015 01:23 AM IST


இன்றைய சூழலில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை. சுத்தமான நீரைப் பருக முடியாத நிலை உள்ளது. நீர், நிலம் இவ்விரண்டுமே தனது தன்மையை இழந்து வருகிறது. நீர் நிலைகள் அழிந்தும், வன வளங்கள் அருகியும் வருவதால் நாம் இதுபோன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
÷25 ஆண்டுகளில் நாம் அனுபவித்து வந்த இயற்கை வளங்கள், இன்று அருகி வருவதைக் காண்கிறோம். நீர், மணல், வனங்கள், வன உயிர்கள், புல்வெளிகள், தாதுக்கள் என எண்ணற்ற இயற்கை வளங்களை நாம் பெற்றுள்ளோம். மனித இனத்தின் பெருங்கொடை இயற்கை வளங்கள்தான். மனிதன் இயற்கையை சார்ந்தே வாழ்ந்து வருகிறான். எனவேதான், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம் முன்னோர்கள் அவற்றை தெய்வமாக வழிபட்டனர்.
÷இயற்கைக்கு மாறாக அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல், மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர் நிலைகள், வறண்ட நீர் நிலைகள் என இயற்கை வளங்கள் அருகி வருகின்றன.
÷தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உற்பத்தியாகும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரவருணி போன்ற நதிகள் நாட்டின் உணவு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகப் பகுதிகளில் பாய்ந்து கடலில் கலக்கும் தாமிரவருணி நதி, ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளால் மாசுபட்டு வருகிறது. பெருமளவில் மணல் அள்ளப்பட்டதால், தாமிரவருணி நதியில் பாறைகள் மட்டுமே மிஞ்சி
இருக்கின்றன. மணல் வளம் குறைந்ததால் நீரின் சுவையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது.
÷தாமிரவருணி நதியின் போக்கு மாறியதால் பல இடங்களில் ஓடையாக காட்சியளிக்கிறது. நீர் நிலைகளில் மணல் எடுத்தல், வனங்களில் மரங்களை வெட்டுதல், காடுகளை விளைநிலங்களாக ஆக்கிரமித்தல் போன்ற மனிதனின் நடவடிக்கையினால் இயற்கை வளங்களின் பரப்பளவு குறைந்து வருவது உண்மை.
÷மனித உயிரினம் மட்டும் பெருகி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பிற விலங்கினங்கள், தாவர வகைகள் குறைந்தும், அரிதாகியும் வருகின்றன. பல உயிரினங்கள் அவை இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியும் முன்பே அழிந்துவிடும் அபாய நிலையில் இருப்பதை உணர முடிகிறது.
÷சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மொத்த வனங்களின் பரப்பளவு 70,000 லட்சம் ஹெக்டேர். இந்தியாவில் ஆண்டுதோறும் 15 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி குறைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். அதாவது 30 சதவீதம் இருக்க வேண்டிய வனங்கள், தற்போது 19 சதவீதமாக உள்ளன. தமிழகத்தில் 13 சதவீதக் காடுகள்தான் இருக்கின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தி, சீதோஷ்ண நிலையைச் சமன் செய்கின்றன.
÷பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்து வருவதற்கு தட்பவெப்ப நிலை மாற்றம்தான் காரணம். அதிகரித்து வரும் வெப்பத்தால் உயிர்த் தாவரங்கள் அழியும் அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
÷அதிகரித்து விட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, இயற்கைப் பாசன முறையிலிருந்து விலகிச் சென்றதன் விளைவு, நிலப் பயன்பாட்டின் மாற்றம், காற்றை மாசுபடுத்தும் எரிபொருள்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கலந்த புகை, பெருமளவில் வெளியேற்றப்படும் கழிவு நீர் போன்றவை புவி மண்டலத்தை வெப்பமடையச் செய்கின்றன.
புவி வெப்பம் அதிகரிப்பதால் அதிக வெள்ளப் பெருக்கு, அதேநிலையில் கடும் வறட்சியையும் தருகிறது. தட்பவெப்ப நிலையில் உருவான மாற்றத்தால், போதிய நீர்வளம் இன்றி நீர்வரத்து குறைந்து மிகவும் பாதிப்பைத் தருகிறது. மழை வளம் குறைந்து விட்டது.
நதிகள் இன்றைய சூழலில் கழிவுகளைத் தாங்கும் பள்ளமாக மாறி வருவதுதான் வேதனையானது. பெருநகரங்களில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளில்
இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நீர் நிலைகளில் கலப்பதால், பிராணவாயு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழியும் சூழல் உள்ளது.
÷நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் அந்நகரங்களை அடுத்துள்ள கிராமங்களில் பெருமளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், மரங்களில் கூடுகட்டி வாழும் பறவையினங்கள், நிழலில் ஒதுங்கும் விலங்கினங்கள் தங்க இடமின்றி அழிந்துபோகின்றன.
÷மரங்கள் குறைந்ததால் வெப்பம் அதிகரித்து உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதால் இன்று அளவுக்கு அதிகமான வெப்பத்தை உணருகிறோம்.
÷இயற்கை வளங்கள், மனிதன் உயிர் வாழ பல அற்புதங்களை நமக்கு அளித்து வருகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்களையும் இயற்கை தருகிறது.
இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று.
÷எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை அழிவதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, October 4, 2015

ஃபேஸ்புக்கை முந்தியது வாட்ஸ் அப்

nanayam.vikatan.com

இளைஞர்களின் இப்போதைய மிக அவசரமான வேலை என்று பார்த்தால் ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். லைவ் சாட்டிங்கில் இவை இரண்டும் தான் இந்தியாவைப் பொறுத்தவரை முதன்மையானவை.


ஆனால் வீடியோ வசதிகளில் ஃபேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி வாட்ஸ் அப் முன்னிலை வகிக்கிறது. 2004இல் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் இளைஞர்களின் இந்திரபுரியாக இருந்து வந்தது. இதன் மூலம் தொலைந்தவர்களைக் கூட கண்டுபிடிக்கலாம் என்ற அளவில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனாலும் வீடியோக்களுக்கு அவ்வளவு எளிதான வாய்ப்புகள் இதில் இல்லை.


அதற்குப் பின் சமீபத்தில் சந்தைக்கு வந்த வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தனிநபர் சாட்டிங்கில் ஆரம்பித்து, இன்று குழு சாட்டிங் வரை வளர்ந்துள்ள வாட்ஸ் அப், வேகமான வீடியோ மற்றும் புகைப்பட பகிர்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இந்த வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ பகர்தலில் ஃபேஸ்புக்கை முந்தியது வாட்ஸ் அப்.

பெண் எனும் பகடைக்காய்: மகள்கள் என்றும் மகள்களே!



மகள்களுக்கான தினம் என்று கடந்த வாரம் ஒரு தினம் வந்து போனது. எனக்கு மகள்கள் யாருமில்லை என்று சொல்ல மாட்டேன். அன்புடன் அம்மா என்றழைக்கும் பல அருமை மகள்கள் ஊரெங்கும் உண்டு. அவர்களில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்ற செய்தி என் காதுக்கு வந்தாலே பதறித் துடித்து விடுவேன். என்னாலான உதவிகளையோ, தொலைவில் இருக்கிறார்கள் என்றால் அன்பு மொழிகளையோ ஆறுதல் வார்த்தைகளையோ ஆலோசனைகளையோ வழங்குவதுண்டு. பெரும்பாலானவர்களின் இயல்பும் இதுவாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

கடந்த சில ஆண்டுகளில் பிரியா, கோகிலா, காவேரி, நந்தினி, ரோஸி, விமலா, வைதேகி, தற்போது ரமணி தேவி இவர்கள் அனைவரும் தங்கள் ரத்த உறவுகளாலேயே ரத்த விளாறாக்கப்பட்டுக் காணாமல் போக்கடிக்கப்பட்டவர்கள். இந்த மகள்கள் அனைவரும் அவர்களின் பெற்றோருக்கு ஏன் எதிரியாகிப் போனார்கள்? அல்லது அப்படி அவர்களை குரூரத் தன்மையுடன் அந்நியமாக்கியது எது? சாதி என்ற கண்ணுக்குத் தெரியாத சனியன்தானே? பெற்று வளர்த்த குழந்தைகளைவிட அது மேலானதா?

“நாலு பேருக்கு மத்தியில் வாழும்போது மற்றவர்களை அனுசரித்துத்தான் வாழணும்; அதுவும் சுத்தி வர சாதி சனமா இருக்கும்போது அவங்களுக்கு மத்தியில மானம் மரியாதையோட வாழணும்” இப்படி ஒரு பெண் கூறுகிறார்.

தங்கள் பிள்ளைகளின் ஆசை, விருப்பு, கனவு, எதிர்காலம் அனைத்தையும்விட இவர்கள் சொல்லும் ‘மானமும் மரியாதை’யும் அதிக மதிப்புடையவையா? சரி, பிள்ளைகளைக் கொன்று புதைத்தாயிற்று. விஷயமும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. கைது, தண்டனை, சிறைவாசம் இவையெல்லாம் மிக மிக மரியாதைக்குரியவையா என்று நமக்குள் எழும் கேள்வி, அவர்களுக்குள் எழாதா? இல்லை, அவர்களே குறிப்பிட்டதுபோல அந்த சாதி சனம் வந்து காப்பாற்றுவார்களா?

சமீப காலமாகப் பெற்றவர்களா லேயே பெண் பிள்ளைகள் கொல்லப்படும் குரூரம் மனதைப் பதற வைக்கிறது. சாதித் தூய்மை தங்கள் பெண் பிள்ளைகளின் வழியாகத்தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பது என்ன மாதிரியான சிந்தனை? தங்கள் வழியாக வந்தவர்கள் என்பதைத் தாண்டி, தங்களின் உடைமைப் பொருளாகப் பிள்ளைகளைப் பார்ப்பதுதானே இங்கு பிரச்சினை. தங்கள் விருப்பம் எதுவோ அதை அவர்களின் மீது திணிக்க முயல்வதும் அவர்கள் மீறும்போது அவர்களை இல்லாமலே ஆக்குவதும் இப்போது தொடர்கதையாகிவருவது மிகுந்த கவலைக்குரியது.

இந்தியா முழுவதுமே காதல் திருமணங்கள் அல்லது சாதி மறுப்புத் திருமணங்கள் ஐந்து சதவீதம்கூட நடைபெறுவதில்லை. வடக்கே மிகுந்த கட்டுப்பாடுகளும் கட்டுப்பெட்டித்தனமும் நிறைந்திருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிட்டத்தட்ட 98 சதவீதத் திருமணங்கள் ஏற்பாட்டுத் திருமணங்கள்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில்கூட சாதி மறுப்புத் திருமணங்கள் ஐந்து சதவீதத்தைத் தாண்டவில்லை.

பிற்போக்காளர்களால் இதைக்கூடத் தாங்க முடியவில்லை. வட மாநிலங் களில் கிராமத்துக்குக் கிராமம் ‘காப்’ பஞ்சாயத்துகள் முளைத்தன. சாதி மீறும் பெண்களைத் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து கொலை செய்கிறார்கள். இதற்கு ‘கவுரவக் கொலை’ என்று பெயர் வேறு. இதில் முதலிடம் பிடிக்க உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்கள் போட்டி போடுகின்றன. இப்போது தமிழகமும் இதில் சேரத் துடிக்கிறது போலும்!

கிராமங்களிலிருந்து கல்வியின் பொருட்டு வெளியேறும் மிகக் குறைந்த என்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே உடன் படிப்பவர்களுடனோ அல்லது பணியாற்றுபவர்களுடனோ காதல் வசப்படும் நிலை. கல்வி, நவீன சிந்தனைகள் உருவானதன் விளைவாகவே பெண் தனது இணையைத் தானே தேடும் முயற்சியில் இறங்கினாள். அவர்களிலும் திருமணம் என்ற பந்தத்தை நோக்கி நகர்பவர்கள் மிக மிகக் குறைவு. அதிலும் மாற்று சாதி நபர்களைக் காதலிப்பவர்கள் எண்ணிக்கை இன்னும் குறைவு. இந்தக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களாலேயே தங்கள் சாதித்தூய்மை கெட்டுப்போய் விட்டதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.

தடியெடுத்தவன் தண்டல்காரனா?

இது காலங்காலமாக நீடிப்பதுதான். நமது நாட்டார் தெய்வங்களில் பலர் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள். சாதித் தூய்மையைக் காப்பாற்றுவதற்காகக் கொன்றுவிட்டு பின் அவர்களைத் தெய்வமாக்கிவிடுகிறார்கள். இப்போதும், தங்கள் வீம்புக்கும் வெறுப்புக்கும் கொல்வதும் பின் தெய்வமாக்குவதும் தொடரலாமா? தமது ஆணவத்துக்காகக் கொன்றுவிட்டு அவளைத் தெய்வமாக்கினால், அவள் தெய்வமாகி தங்கள் சந்ததிகளைக் காப்பாற்றுவாள் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

தற்போது சம்பந்தப்பட்ட ஆண் தாழ்த்தப்பட்ட சாதி என்றால், அவனைக் கொன்று போடுவதும் நடைமுறையாக உள்ளது. தங்கள் மகள்களையே கொன்று புதைக்கும் கூட்டம், அன்னியர் வீட்டுப் பிள்ளைகளைக் கொல்வதற்கு யாரைக் கேட்க வேண்டும்?

மகளும் மனிதப் பிறவியே

பெண் சக்தி, தெய்வம் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் அப்படியெல்லாம் சொல்ல வரவில்லை. அவள் ரத்தமும் சதையும் உள்ள ஓர் உயிர். ஆண்களுக்குப் படைக்கப்பட்ட மூளைதான் அவளுக்கும் படைக்கப்பட்டுள்ளது. அதனால் சிந்திக்கும் திறனும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனும் அவளுக்கும் உண்டு என்பதைப் பெற்றோர் புரிந்துகொண்டாலே போதும். மகள் இல்லாமல் வாழும் வாழ்க்கையை, மகள்களின் மனம் நிறைந்த சிரிப்பைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அத்துடன் சக மனிதர்களும் அவ்வாறானவர்களே என்று எண்ணினால் கோழியைப் போல அவர்களின் கழுத்தை அறுக்கும் எண்ணம் தோன்றாது.

கொசுறு: காட்டுமன்னார்கோயிலை அடுத்த கிராமம் ஒன்றில், காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருந்தாள் என்பதற்காக, அரிவாளை எடுத்து தன் பேத்தி ரமணி தேவியின் கழுத்தை வெட்டித் தள்ளி விட்டார் அவளின் ‘பாசக்கார தாத்தா’.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com


http://tamil.thehindu.com/society/women/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/article7720956.ece

ரூ.20 லட்சம் மோசடி: 'ஃப்லிப்கார்ட்' நிறுவனத்தை விழி பிதுங்க வைத்த வீராச்சாமி!

ரூ.20 லட்சம் மோசடி: 'ஃப்லிப்கார்ட்' நிறுவனத்தை விழி பிதுங்க வைத்த வீராச்சாமி!

ஹை
தராபாத்திலுள்ள வனஸ்தலிபுரம்  காவல்துறையினர் விசாரித்து வரும் புகார் சற்று நூதனமானது. இந்த வழக்கு இணையவழி வர்த்தகம் செய்யும் நிறுவனமான ’ஃப்லிப்கார்ட்’, தனது வாடிக்கையாளர் ஒருவரின் மீது  அளித்ததாகும். ஹைதராபத்தைச் சேர்ந்த, 32 வயது மதிக்கத்தக்க, வீராச்சாமி ரெட்டி என்பவரே இந்தப் புகாரில் குற்றம் சாட்டபட்டவர்.
இவர் ‘ஃப்லிப்கார்ட்’ இணையதளத்தின் மூலமாகப் பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார். வாங்கிய பொருட்கள் பிடிக்கவில்லை என்றால் அவற்றைத் திருப்பி அளித்துவிட்டு அதற்கான  தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி ‘ஃப்லிப்கார்ட்’டில் உள்ளது. இந்த வசதியின் மூலம் தான் வாங்கிய பொருட்களை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, தொகையைத் திருப்பிச் செலுத்திவிடுமாறு ‘ஃப்லிப்கார்ட்’ டிடிம் விண்ணப்பித்திருக்கிறார்   வீராச்சாமி. நிறுவனமும் அவ்வாறேசெய்தது.

அப்படி திருப்பி அளிக்கப்பட்ட பொருட்களைச் சோதித்த போது தான் புரிந்தது, அவை எல்லாம் போலியானவை என்று. இதையே வழக்கமாக வைத்திருந்திருந்த வீராச்சாமி, ஒரு பொருளை இணையதளத்தில் ‘ஆர்டர்’ செய்வது. அது வீட்டிற்கு வந்தவுடன் அதைப் பிரித்து, அதற்கு பதிலாகப் போலியான ஒரு பொருளை உள்ளே வைத்து அட்டைப்பெட்டியை மூடி விடுவது. மீண்டும் ‘ஃப்லிப்கார்ட்’ டைத் தொடர்பு கொண்டு பொருளைத் திரும்பப் பெற்றுக் கொண்டுத் தொகையைச் செலுத்த விண்ணப்பிப்பது என வீராச்சாமி செம பிசியாக இருந்தார். 

இப்படி போலி மெயில்  கணக்குகள்,  போலி விலாசங்கள், போலி வங்கிக் கணக்குகள் என, 200 க்கும் மேற்பட்ட இத்தகைய பரிவர்த்தனைகளில், சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கு மேல் வீராச்சாமி பிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றியிருக்கிறார். நாளடைவில், இந்தப் பின்னணியை கண்டறிந்த அந்த நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்தது.

எத்தனைத் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மனித மனம் தவறான நோக்குடனேயே அதைக் கையாள்கிறது. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு வீராச்சாமியும் ஒரு உதாரணம்.
- ச.அருண்

http://www.vikatan.com/news/article.php?aid=53246

Saturday, October 3, 2015

புலி'க்கு வரிச்சலுகை மறுப்பு ஏன்?- அதிகாரிகள் கூறும் காரணங்கள்

Return to frontpage

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'புலி' படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு ஏன் என்பதற்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'புலி'. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு வரிச்சலுகை அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். அதற்கான காரணம் என்ன என்பது வெளியாகாமல் இருந்தது.

'புலி' படத்துக்கான வரிச்சலுகைக்கான காட்சியை சி.பழனி, ம.சி.தியாகராஜன், முனைவர் கா.மு.சேகர், டி.ஐ.மகாராஜன், ஏ.ஐ.ராகவன் மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் பார்த்திருக்கிறார்கள். ஏன் வரிச்சலுகை அளிக்கவில்லை என்பதற்காக அவர்கள் கூறியிருக்கும் காரணங்கள்.

* திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் உள்ளன.

* படத்தின் பாடல் காட்சியில் மகளிரின் ஆடைகள் ஆபாச காட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன.

* படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக் காட்சியில் வன்முறை, கொலைக்காட்சிகள் நேரிடையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

* மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை. குழந்தைகளையும், பெண்களையும் வெட்டிக் கொல்லுவது ஏற்புடையதாக இல்லை. அதிகமான வன்முறை காட்சிகள் உள்ளது.

* திரைப்படம் முழுக்க வன்முறை அதிகரித்துள்ளது. ஆரம்பித்திலே இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது குழந்தை கழுத்து வெட்டப்படுவதாக காட்டப்படுகிறது. மேலும், படம் முழுவதும் மூட நம்பிக்கைக்கு உயிர் ஊட்ட முளைத்திருப்பதால் வரி விலக்கிற்கு தகுதியானது அல்ல.

இவ்வாறு வரிச்சலுகை அதிகாரிகள் அனைவருமே ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்சிகளை மேற்கோள்காட்டி படத்துக்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Passenger lights up on flight from Muscat...times of india

MUMBAI: When seated in economy class, there are many things a passenger does to get a tad comfortable. Some twist and turn in their cramped seats. A passenger onboard a flight from the Middle East to India had a better idea. He coolly fished out a pack of cigarettes and, to the surprise of his co-passengers, out came a lighter. But just after the twain had met, onlookers reported him to the cabin crew and his plans to enjoy a cigarette in the sky went up in smoke.

It is not possible to fly on board a passenger aircraft without encountering a good number of no-smoking signs, apart from literature on the ban in lighting up. All of that seems to have escaped the notice of the passenger on Jet Airways Muscat-Mumbai flight 9W591 on Tuesday. "The said passenger, a Bangladeshi national, was in his seat when he casually took out a cigarette and a lighter and had just lighted it when cabin crew, who were alerted by co-passengers, had it extinguished," said an airline official.

The crew did not have any problems dealing with the passenger. "They warned the passenger, who by then realised that smoking was banned in an aircraft," the official added. But the passenger was not unruly and kept apologising through the flight.

A Jet Airways spokesperson confirmed the incident. "He tried to light a cigarette during the flight. The cabin crew took prompt action in line with Jet Airways safety regulations and prevented the passenger from smoking. On landing in Mumbai the passenger was met by security personnel for further action," said the airline response. It was learnt that the passenger was let off after a warning.

But the question that remains is how did the passenger manage to sneak in a lighter on board the aircraft. "It seems to be a lapse on part of security personnel at Bahrain airport. A lighter is one of the items banned in flights. It should have been confiscated at the airport itself," said an aviation security official.

In India, smoking in aircraft was banned sometime in the 1990s. Before that, there were smoking sections in aircraft flown in India and abroad. Smoking was identified as a flight safety hazard after it contributed to inflight fires and accidents (see box).

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...