Monday, February 22, 2016

வெளிநாட்டு மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு: பாக். உட்பட பல நாடுகளில் நடக்கிறது

Return to frontpage

அடுத்த ஆண்டுமுதல் வெளி நாட்டு மாணவர்களை ஐ.ஐ.டி.யில் சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வை பாகிஸ்தான் உட்பட சார்க் நாடுகளில் நடத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

மத்திய மனித ஆற்றல் மேம் பாட்டுத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகள் பங் கேற்ற உயர்நிலைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி அடுத்த ஆண்டு முதல் வெளிநாடுகளிலும் ஐஐடி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகள் மற்றும் சிங்கப்பூர், துபை ஆகிய நாடுகளில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இதற்கு முன்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐஐடி நுழைவுத் தேர்வு மூலம் இந்திய குடியுரிமை பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.

முதல்முறையாக வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி வரும் 2017-ம் ஆண்டில் வெளிநாடுகளில் ஜேஇஇ/கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தற்போது 18 ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வெளிநாட்டு மாணவர்கள் எத்தனை பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிப்பெண்கள் நியமனம்

பிடிஐ

விமானப் பணிப்பெண் போன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிப் பெண்களை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

டெல்லி-ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் ‘கேட்டிமேன் எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. விமானங்களைப் போன்று அந்த எக்ஸ்பிரஸில், ரயில் பணிப்பெண்கள் நியமிக்கப் பட உள்ளனர்.

மெல்லிய இசைப் பின்னணியில் கையில் ரோஜா மலருடன் ரயில் பயணிகளை அந்த பணிப்பெண்கள் வரவேற்பார்கள். மேலும் ரயிலில் தொலைக்காட்சி வசதி மற்றும் அறுசுவை உணவு வகைகள் பரிமாறப்படும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட கேட்டிமேன் எக்ஸ்பிரஸ் கட்டணம் 25 சதவீதம் கூடுதலாக இருக்கும்.

டெல்லி-ஆக்ராவை தொடர்ந்து சென்னை-ஹைதராபாத், டெல்லி-கான்பூர், டெல்லி-சண்டிகர், நாக்பூர்-பிலாஸ்பூர், கோவா- மும்பை, நாக்பூர்-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களில் கேட்டி மேன் எக்ஸ்பிரஸை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் தவறான தகவல்கள்: 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் - போலீஸார் கடும் எச்சரிக்கை

ஆர்.சிவா
Return to frontpage
சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

பழநி - உடுமலை சாலையில் சண்முகநதி பாலம் அருகே கடந்த 17-ம் தேதி பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் பைக்கில் வந்த 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்த நேரத்தில், பழநியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு காரில் வந்துகொண்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விபத்தைப் பார்த்ததும் காரில் இருந்து இறங்கி, பலி யானவர்களின் உடல்களைப் பார்த்து கண்ணீர்விட்டார்.

இந்த காட்சியை அங்கிருந்த யாரோ படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் போட்டுள்ளனர். அதை வைத்து, ‘வைகோவின் கார் மோதி 2 பேர் பலியாகிவிட்டனர்’ என்று கடந்த 3 நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வைகோ, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

பெண்களின் புகைப்படங்கள்

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு, பெண் போலீஸ் ஒருவருடன் காவல் உதவி ஆணையர் செல் போனில் பேசும் உரையாடல் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் உதவி ஆணையரின் படம் வெளியே வந்துவிட்டது. ஆனால், அவருடன் பேசிய பெண் போலீஸின் படம் வெளிவரவில்லை. இதை சாதக மாக பயன்படுத்திக்கொண்ட சிலர், தங்களுக்கு வேண்டாத பெண் களின் படங்களை போட்டு, ‘இதுதான் அந்த பெண் போலீஸ்’ என்று சமூக வலைதளங்களில் பரப்பினர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்ப பெண்ணின் புகைப்படம், பிரபல கொள்ளைக் காரி என்ற தலைப்பில் சென்னை யில் வெளிவந்து பரபரப்பை ஏற் படுத்தியது. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் அந்தப் பெண் புகார் கொடுக்க, அதன்பிறகே உண்மை வெளிவந்தது.

இப்படி பல விஷயங்களில் சம்பந்தமில்லாதவர்களின் படங்கள் தவறான முறையில் சமூக வலை தளங்கள் மூலம் பரப்பப்படுகின்றன. நல்ல தகவல்களை விட, தவறான தகவல்களே சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவுகின்றன. இதனால், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘வாட்ஸ்-அப்’ வந்தபிறகுதான் இதுபோன்ற தகவல்கள் வேகமாக பரவுகின்றன

செல்போன்களில் எளிதில் பயன்படுத்தும் வகையில் இது இருப்பதால், தங்களுக்கு வரும் தகவல் உண்மையா என்றுகூட ஆராய்ந்து பார்க்காமல் உடனே மற்றவர்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். இதை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தவறான தகவல்கள் பரவுவதற்கு இதுவே முதல் காரணமாக இருக்கிறது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69-வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 7 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கும். பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி தவறு செய்தால் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலாக தண்டனை கிடைக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின்கீழ், குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும்’’ என்றார்.

‘பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பினால் அவர்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து விடுவோம். வாட்ஸ்-அப் மூலம் பரப்புபவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமே தவிர, நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம்’’ என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் எனும் பகடைக்காய்: அரசியல் கட்சிகளின் கவனத்துக்கு...

Return to frontpage

பா.ஜீவசுந்தரி


ஜனநாயகத் திருவிழா களை கட்டுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. கூட்டணிகள் சேர ஆரம்பித்துவிட்டன. இனி இட ஒதுக்கீடுகளும் பங்கீடுகளும் வெகு ஜோராய் ஆரம்பித்துவிடும். தேர்தல் வாக்குறுதிகள், அறிக்கைகள் பவனிவரும். தேர்தல் கூட்டங்களில் பிரச்சார பீரங்கிகள் முழங்க ஆரம்பிக்கும். ஒலிவாங்கியைக் கையில் பிடித்தவுடன் முதலில் எழும் சொல், “தாய்மார்களே…….”

ஆம் ! தாய்க்குலத்தைத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் முதலில் அழைப்பார்கள். தாய்மார்களின் பங்கு வாக்களிப்பதுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. இம்முறை பெண் வாக்காளர்கள்தான் அதிகம் என்று அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெண்களுக்கு என்ன வேண்டும் என்பது பற்றி கட்சிகளுக்குச் சில விஷயங்களை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.

பெண் என்பவள் திருமணச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டிய பண்டமாகவே இங்கு முன்னிறுத்தப்படுவதால், திருமணத்தை முன் வைத்து அவளைச் சுமங்கலியாக்குவதற்காகவே தொடங்கப்பட்டதுதான் சுமங்கலி வேலை வாய்ப்புகள். திருமணச் சந்தையில் பெண் விலைபோக வேண்டுமென்றால் அதற்கேற்ற சீர் செனத்தி, நகை நட்டுகள், பண்ட பாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை இன்னமும் குறைந்தபாடாய் இல்லை. பாத்திர பண்டங்கள், கட்டில், மெத்தை, பீரோ இத்யாதிகளுடன் விற்பனைக்குப் புதிது புதிதாக வந்திறங்கும் டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் இன்னும் பல பல பொருட்களையும் சீராகக் கேட்டுப் பெறும் வக்கிரமான, மலிவான உத்திகள் வெளிப்படத் தொடங்கிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

பெற்றோர் சம்பாதிப்பது போதாமல், சம்பந்தப்பட்ட பெண்களும் தங்கள் திருமணத்துக்குத் தாங்களே பொருள் சேர்க்க வேண்டிய அவல நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெற்று, வளர்த்து, கல்வி கற்பிப்பதுடன் திருமணமும், அவை சார்ந்த செலவுகளும் பெரும் சுமையாகத் தோள்களில் அழுத்தத் துவங்கியிருப்பது கண்கூடு.

மங்களகரமான சுமங்கலித் திட்டங்கள்

சில மாவட்டங்களில் ‘சுமங்கலி’ திட்டம் என்ற பெயரில் பெண்களின் வாழ்க்கையும் உழைப்பும் சுரண்டப்படுகின்றன. ஏறக்குறைய கொத்தடிமைகளாகவே இளம் பெண்கள் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மிகக் குறைந்த ஊதியத்துக்கு அதிக நேரம் உழைக்கிறார்கள். ஐந்தாண்டுகள் உழைப் பதற்காகப் போடப்படும் ஒப்பந்தங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதன் பின் அவர்கள் பணம் முழுமையாகக் கையில் வந்து சேருமா என்பதும் கேள்விக்குறிதான்.

சுமங்கலித் திட்டம் போன்ற பெண்களின் உழைப்பைச் சுரண்டும் நடைமுறைகளை முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டும். குறிப்பிட்ட மணி நேரத்துக்கு வேலை, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பதைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். இத்தனை ஆண்டுக் காலம் எங்களிடம் அடிமையாக இருந்து, நாங்கள் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் உழைப்பைச் சுரண்டும் மிகப் பெரிய ஏமாற்று வேலை.

பெண்கள் உழைப்பு மலிவானதா?

பெண் தொழிலாளர்களின் உழைப்பு எப்போதுமே கண்ணுக்குத் தெரியாத சுரண்டல்தான். அம்மா உணவகங்களில் மிக மலிவான விலையில் உணவு வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழு பெண்கள்தான் வேலை செய்கிறார்கள் என்றாலும் அவர்கள் உழைப்பும் மதிக்கப்பட வேண்டியதே. இங்கே நாள் முழுதும் உழைக்கும் பெண்களின் உழைப்பு முறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் போதுமான அளவு வழங்கப்படுகிறதா? அவர்கள் முறைசார் தொழிலாளர்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்களா? தொழிலாளர் நல வாரியங்களில் இணைக்கப்பட்டிருக்கிறார்களா? அரசு சார்ந்து இயங்குவதாலேயே, அவர்கள் அரசு ஊழியர்களா அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களா? இவை எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கான சலுகைகள் எப்படிக் கிடைக்கும்? அவை முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

மீனவப் பெண்கள் தொழிலாளர்கள் இல்லையா?

கடல் சார்ந்து இயங்கும், பிழைக்கும் மீனவர்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை நித்திய கண்டம் பூரண ஆயுசு கதைதான். மாறி மாறி வரும் ஆட்சிகள் மீனவப் பெண்களைத் தொழிலாளர்களாக ஒருபோதும் ஒப்புக் கொண்டதேயில்லை. கடலிலிருந்து படகையும் மீன்களையும் கரையேற்றும் மீனவர்களுக்குப் பின்னால் இருக்கும் பெண்களின் உழைப்பு கடல் நீரில் கரைந்துபோய்விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. மீன்களை ரகம் வாரியாகப் பிரிப்பதிலிருந்து, மீன்களைப் பாதுகாக்கும் ஐஸ் கட்டிகளை உடைத்துத் தூளாக்குவது, மீன் விற்பனையில் முதன்மையான பங்கு, விற்காமல் மீதமாகிப் போன மீன்களை உப்பிட்டு உலர வைத்துக் கருவாடாகப் பதப்படுத்திப் பாதுகாப்பது என அனைத்துமே பெண்கள் கையில்தான் உள்ளன. மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளத்திட்டுகள், சிப்பிகள் சேகரித்தல் போன்றவையும் அவர்களுடைய பணிகளே. மீனவப் பெண்களின் உழைப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களையும் தொழிலாளர்களாக அங்கீகரித்து, நலத்திட்ட வாரியங்களின் வழியாக அவர்களுக்கும் வேண்டிய பணிக்கொடைகளை வழங்கி முதன்மைப்படுத்த வேண்டும்.

சாதியக் கொலைகளைத் தடுக்க சட்டம்

சாதிய கவுரவத்தின் பேரால் இன்று கொலைக்கு ஆளாகும் இளம் பெண்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. காதல் திருமணங்களை அங்கீகரிக்க மறுத்து, தங்கள் சாதித் தூய்மை, தங்கள் வீட்டுப் பெண்களின் நடவடிக்கைகளில்தான் அடங்கியிருக்கிறது என்பதான பாவனையை மேற்கொண்டு, பெண்களைக் கொன்று புதைக்கும் வழக்கம் நாளுக்கு நாள் மலிந்துவருகிறது. பெண்கள் கொல்லப்படாமல் அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையல்லவா? காட்டுமிராண்டித்தனமாகச் செயல்படும் சாதிய வன்முறையாளர்களை ஒடுக்க வேண்டும் என்றால், அதற்கெனச் சட்டம் இயற்றினால்தான் ஓரளவுக்காவது கட்டுக்குள் கொண்டு வர முடியும். அரசியல் கட்சிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது என்றாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் இதை வலியுறுத்தக் காரணம்.

பாலியல் வல்லுறவு தடைக்கான 10 அம்சத் திட்டம் !

நிர்பயா பாலியல் வல்லுறவுப் படுகொலைக்குப் பின் ஒரு பெரும் வெளிச்சமாக நம் முன் உருவாக்கப்பட்டதுதான் ஓய்வு பெற்ற நீதியரசர் வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன். அந்தக் குழுவின் பரிந்துரைகள் வெளியானதை அடுத்து, தமிழகத்திலும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளைத் தடுக்கும் முகமாக, முதல்வர் ஜெயலலிதா, 10 அம்சத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாகச் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், அத்திட்டம் பற்றிய பேச்சே இல்லாமல் போனதுடன், அது நினைவிலும் இல்லாமல் போயிற்று. மாநிலப் பெண்கள் ஆணையமும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண்களின் நலன் குறித்துப் பேச மறந்து, மௌனியாகிவிட்டது. பாலியல் வல்லுறவு, வயது பேதமில்லாமல் ஒரு அன்றாட நடைமுறையாக மாறிப்போயிருக்கும் சூழலில், மீண்டும் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவை தவிர, பெண் கல்வி பாதியில் நிறுத்தப்படுதல், உரிய வயதுக்கு முன்பாகவே பெண்களுக்குச் செய்துவைக்கப்படும் திருமணங்கள் ஆகியவற்றை முற்றிலும் இல்லாமல் தடுக்க, பெண்கள் கண்காணிப்புக் குழுக்களை கிராமங்கள்தோறும் ஏற்படுத்தலாம்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: asixjeeko@gmail.com

Sunday, February 21, 2016

OCI, PIO students can now apply for CET

Return to frontpage


Students belonging to Overseas Citizens of India (OCI) or Persons of Indian Origin (PIO) can now apply for CET. Following a High Court of Karnataka direction, the Karnataka Examinations Authority has introduced a change in the online application format. The KEA Administrative Officer S.N. Gangadharaiah said that earlier, the application would allow a student to go further only if the answer to the question “Are you an Indian citizen?” was in the affirmative. “Now, if they say no, there is another option of choosing OCI/PIO. They will then be allowed to fill the rest of the form,” he said. The KEA has also extended the last date for submission of online applications till February 25. The last date to pay the fee is February 26.

Saturday, February 20, 2016

Doc conducts gender tests, his licence is taken away


Ritwika Mitra, Feb 20, 2016, NEW DELHI: DHNS:

The Delhi Medical Council suspended a doctor from practising medicine after he was found involved in illegal sex determination during a decoy operation conducted by the Delhi Health Department.

Dr A S Chauhan, a radiologist at MGS Super speciality Hospital in Punjabi Bagh, was found to be in connivance with a tout in and disclosing the sex of an unborn child to a 12-week pregnant woman. The health department had also recovered ultrasound machine from the doctor’s residence during an earlier raid. The doctor was later released on bail.

“The licence of Dr Chauhan has been suspended with immediate effect given the sensitive nature of the case. This means the doctor is barred from practising till further notice. The Delhi government had forwarded the report of the operation to us. The doctor was found guilty in an earlier case too. An FIR has already been registered against the doctor. Further investigation is pending now,” said Dr Girish Tyagi, Registrar, Delhi Medical Council (DMC).

The Health Department has also suspended the Pre-Natal Diagnostic Techniques registration of the private hospital and issued show cause notice seeking response on why its registration should not be cancelled. The hospital will not be able to conduct any ultrasonography tests now. The department has also sealed six machines at the hospital.

“Recovery of ultrasound machine from his house in the earlier case meant the machine was unregistered. This is an offence under the Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (PC & PNDT) Act,” said Dr Shalley Kamra, State Programme Officer, PC & PNDT Act, state health department. An unregistered machine hints at illegal sex determination.

Deccan Herald had reported last week on Dr Chauhan being caught red-handed when a raiding team conducted a decoy operation at the private hospital. The pregnant woman was charged Rs 11,000 for an ultrasonography at hospital. Another doctor involved in the case had drawn circles on the woman’s hand before she went to the hospital so that she could be “easily identified”. The radiologist then told the woman there is “positive news” as she would have a baby boy, according to the raiding team. Dr Chauhan was handed over to the police on the basis of evidence gathered at the spot.

UGC allows varsities to use jammers in exam halls

Return to frontpage
It will prevent students from using mobile phones, other gadgets for copying

The University Grants Commission has decided to allow universities to deploy low-powered jammers in examination halls to prevent students using mobile phones, bluetooth and other gadgets for copying.

In a notice to all universities, UGC secretary Jaspal S. Sandhu said the government has a policy to provide the jammers on lease in order to prevent unfair means used through radio frequency based devices by the examinees.

However, the universities can’t procure jammers on their own due to security reasons.

The Cabinet Secretariat has informed the UGC that prior permission from it is necessary to prevent security threat.

Only from ECIL and BEL

And that the jammers could be procured only from two companies – ECIL and BEL.

“The examination conducting bodies must provide all the details such as the centres (and colleges) and the number of jammers required to the officials. Universities cannot individually invite tenders from other unauthorised manufacturers,” said Arti Bhatnagar, Joint Secretary (Security), Cabinet Secretariat, in the letter to UGC Chairman Ved Prakash.

Complaint

UGC Vice Chairman H. Devaraj told The Hindu that the decision to permit universities to use jammers followed complaint from a medical university that students had carried mobile phones into the exam hall and had used it for copying.

In 2012, a case had come up in the Madras High Court stating that two students of Government Stanley Medical College had copied using a mobile phone.

The college had sought the help of cyber crime officials to prove that the students had indeed used bluetooth to copy in the exams. One student was barred from taking the exam for three subsequent sessions.

‘Mobile phones

not allowed’

According to S. Thirumagan, controller of examination, University of Madras, the directive on the use of jammers should come from the Syndicate, the statutory body.

“We don’t allow mobile phones inside the examination hall. Invigilators and the chief superintendent have the authority to physically verify the students. It is one of the 10 instructions for the invigilators that mobile phones cannot be carried into the examination halls,” he said.

The universities can’t procure jammers on their own due to
security reasons

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...