Monday, December 19, 2016

No Indian test for students with foreign MBBS degrees

DECCAN CHRONICLE. | KANIZA GARARIPublishedDec 14, 2016, 3:00 am IST
Dr G. Srinivas, president of Telangana Junior Doctors’ Association thinks the new measure is unfair. (Representational image)
Hyderabad: Indian medical students who are getting their MBBS degrees from foreign universities will now have an opportunity to work in India without giving their exams here according to a proposal sent by the Union health ministry to the Medical Council of India.

The government says that this is to overcome the shortage of six lakh doctors in the country. Doctors who graduate from China, Russia, Nepal, South East Asian and Eastern European countries have to write the Foreign Medical Graduates Examination, and if they pass they can register and practise in India.

Data from the Medical Council of India shows that since 2002, 29,968 students have appeared for the foreign medical examination and only 3,610 have passed.
Dr G. Srinivas, president of Telangana Junior Doctors’ Association thinks the new measure is unfair.

“The medical education and bedside experience of foreign doctors are minimal. The teaching standards are different and they are not on par with Indian standards. On one side the government wants us to write exams after passing our MBBS and on the other side they want to recruit foreign doctors without exams, which is not fair. We are going to strongly protest against it,” he said.

It’s the ridiculous division of seats in private medical colleges that forces many students to study abroad. A junior doctor on condition of anonymity explained, “In private medical colleges, 50 per cent of seats are reserved for the government, 20 per cent is in the management quota and the remaining are paid seats which are very expensive. These seats cost allegedly Rs 1.5 core. That is one of the major reasons that many students opt for seats outside India.”

Telangana Medical Council chairman Dr Ravinder Reddy says, “As of today, writing a medical exam for the foreign medical graduate is as per the MCI act and it is being followed.”

But when there is a shortage of doctors, why are trained doctors not being allowed to practise in India? Why must people in rural areas go to RMPs?

A senior doctor on condition of anonymity explained, “The problem is that none of the Indian doctors who are trained in India or abroad want to practise in rural areas. Hence, there will be a growing competition in urban and semi-urban areas only. A foreign doctor will come with a different set of expertise. Also, the name that he is foreign-returned will attract a lot of patients and this is what many are scared about.”

At present, several Indian doctors who got their degrees abroad and were rejected in India are practising in the countries they passed out from. According to sources in the Medical Council of India, many of them have got employment in the Middle East and South East Asian countries where the patient load is manageable.

ஜெயலலிதாவின் தருணங்கள்: அவர் கடந்து வந்த பாதை

பவித்ரா

தமிழகத்தின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்தவர் ஜெ.ஜெயலலிதா. அவர் மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் தாக்கம் செலுத்தும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். பலவிதமான ஏற்ற, இறக்கங்கள் மற்றும் போராட்டங்களைச் சந்தித்த அவரது வாழ்க்கைப் பயணத்தின் திருப்புமுனைகள் இங்கே காலவரிசைப்படி வழங்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் பிறந்தார்

கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டை என்னும் ஊரில் ஜெயராம், வேதவல்லி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். அவரது அப்பாவழித் தாத்தா இட்ட பெயர் கோமளவல்லி. அவருக்கு ஒரு வயதானபோது ஜெயலலிதா என்ற பெயரைப் பெற்றோர்கள் வைத்தனர். ஜெயலலிதாவுக்கு ஜெயகுமார் என்ற மூத்த சகோதரர். 1950-ல் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம் மரணமடைந்தார். ஜெயலலிதாவின் தாய் வேத வல்லி, ஜெயலலிதாவையும் அவர் அண்ணன் ஜெயகுமாரையும் பெங்களூருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

சென்னைக்கு வந்தார்

ஜெயலலிதாவும் அவரது அண்ணனும் பெங்களூருவில் அத்தையுடன் தங்கியிருக்க அவரது அம்மா வேதவல்லி, சென்னைக்கு வந்தார். ஜெயலலிதா பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் படித்தார். வேதவல்லி நாடகங் களிலும் சினிமாக்களிலும் சந்தியா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். 1958-ல் ஜெயலலிதாவின் அத்தைக்குத் திருமணமான நிலையில், அவர் சென்னை வந்தார். சென்னையின் புகழ்பெற்ற சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கப்பட்டார். கர்நாடக இசை, பரத நாட்டியம் மற்றும் கதக் நடனப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. படிப்பைப் பொறுத்தவரை முன்னணி மாணவியாகத் திகழ்ந்தார்.

திரைவாழ்வு தொடங்கியது

1964-ல் சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் வகுப்பில் நல்லமுறையில் தேறினார். புதுமுக வகுப்பில் படிப்பதற்கு தயாரான சூழலில், குடும்பத்தை அழுத்திய கடன் சுமையை நீக்கும் வகையில் சினிமா நடிகையானார். அவரது முதல் திரைப்படம் ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னடப் படம். சிறு வயதில் அவருக்கு வழக்கறிஞராகும் லட்சியம் இருந்தது. ஜெயலலிதாவின் முதல் தமிழ்த் திரைப்படம் ‘வெண்ணிற ஆடை’. 1965-ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீதர்.

அதே ஆண்டு தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்பு என்று இன்றும் நினைவுகூரப்படும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உடன் முதல் முறையாகக் கதாநாயகியானர்.

1965 முதல் 1980 வரை ஜெயலலிதா நட்சத்திரமாக ஜொலித்த ஆண்டுகள். அக்காலத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் திரைக்கலைஞராக விளங்கினார். புகழ் மிக்க பிராண்டுகளின் விளம்பர மாடலாகவும் இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 140 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் 120 திரைப்படங்கள் வெற்றிப்படங்கள். அவர் தமிழில் நடித்த கடைசித் திரைப்படம் 1980-ல் வெளியான ‘நதியைத் தேடி வந்த கடல்’.

அரசியல் வாழ்வின் தொடக்கம்

1982, ஜூன் 5-ம் தேதி, அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் ஜெயலலிதா இணைந்தார். ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் முதல் மேடைப் பேச்சை நிகழ்த்தினார். அரசியலில் நுழைவதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். தான் என்றும் அவர் கூறினார். அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்தை மேற்பார்வையிடும் உயர் மட்டக் கமிட்டியின் உறுப்பினராகப் பின்னர் நியமிக்கப்பட்டார். 1983-ல் ஜெயலலிதா அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார்.

1984, மார்ச் மாதம் 12-ம் தேதி, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பி னராக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை, அப்போதைய சட்டசபை சபாநாயகர் கே. ராஜாராம் முன்மொழிந்தார். 1984-ம் ஆண்டு முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆர் மரணம்

அ.தி.மு.க. வின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். 1987, டிசம்பர் 24 அன்று மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான இரண்டு அணிகள் ஏற்பட்டன. 1988, ஜனவரி 1-ம் தேதி அ.தி.மு.க. (ஜெ) அணிக்கு பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர்

1989, ஜனவரி 24-ம் தேதி, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜி னாமா செய்தார். போடி நாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் நின்று சட்டசபை உறுப்பினர் ஆனார் ஜெயலலிதா. அவர் தலைமையிலான அணி 27 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி ஆனது.

1989, பிப்ரவரி 9-ம் தேதி தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்டார். அதே ஆண்டு நவம்பர் மாதம் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அ.தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் 39 இடங்களை வென்றது. இதன் மூலம் ஜெயலலிதா தேசிய அரசியலில் நுழைந்தார்.

முதலமைச்சர் ஆனார்

1991-ல் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, 234 தொகுதிகளில் 224-ஐ வென்றது. 39 நாடாளுமன்றத் தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது. அதிகபட்ச பெரும்பான்மையுடன் ஜெயலலிதா, தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். அதிகபட்ச பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் (25) இடம்பெற்ற சட்டசபையாகவும் அது அமைந்தது.

தொட்டில் குழந்தைத் திட்டம்

1992-ம் ஆண்டு பெண் சிசுக்கொலையைத் தவிர்க்கும் வகையில் ‘தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2011-ம் ஆண்டுவரை அறிமுகம் செய்யப்பட்டது. பெண்கள் சார்ந்த குற்றங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள் முதல் முறையாக அமைக்கப்பட்டன. போலீஸ் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழகத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வியில் 69 சதவீதம் இடஒதுக்கீடு தொடர வழிவகை செய்யப்பட்டது.

அடுத்த தேர்தலில் தோல்வி

1996 மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோற் கடிக்கப்பட்டார். அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மீண்டும் பெற்ற வெற்றி

2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. மீண்டும் வெற்றிபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். 2002-ம் ஆண்டு, ஜெயலலிதா ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வென்று மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார். பெண் போலீஸ் கமாண்டோக்களைக் கொண்டு இந்தியாவின் முதல் மகளிர் காவல் படையை அமைத்தார்.

வழக்கு, விடுதலை, மீண்டும் தோல்வி

2003, நவம்பர் மாதம் டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெய லலிதாவை விடுதலை செய் தது. 2006-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்றது. ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெய லலிதா வென்றார். பின்னர் எதிர்கட்சித் தலைவர் ஆனார்.

அம்மா பிராண்ட்

2011, மே மாதம் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 13 கட்சிகள் கூட்டணி அமைத்து மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார். அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டன.

2016, மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 134 இடங்களை வென்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரான சில தலைவர்களில் வரிசையில் ஜெயலலிதா இடம்பெற்றார். செப்டம்பர் மாதம், பெண் அரசு ஊழியர்களுக்கு ஒன்பது மாத பிரசவ கால விடுப்பை அறிவித்தார். அதற்கு முன்னர் ஆறு மாத காலமே இருந்தது.

காலம் ஒலித்த மணி

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 5-ம் தேதி, 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவு 11.30 மணிக்குக் காலமானார்.


இது புதுசு: திருமணத்துக்கு முன் எதைப் பேசலாம்?

யாழினி
Return to frontpage

இன்று காலம் ஓரளவு மாறிவிட்டது. திருமணம் முடிந்த பிறகே கணவனை ஏறெடுத்துப் பார்க்கும் நிலை இன்று இல்லை. பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களில்கூட மணமக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் சில மாதங்களாவது நேரம் இருக்கிறது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறுவதற்குள் இருக்கும் இந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே ஒருவரையொருவர் எந்தளவுக்குப் புரிந்துகொள்கின்றனர் என்பது கேள்விக்குறிதான்.

அத்துடன், காதல் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களைவிட ஏற்பாட்டுத் திருமணங்களில் இருக்கும் சிக்கல்கள் இன்றைய சூழலில் அதிகரித்திருக்கின்றன. இந்தச் சிக்கல்களைத் தாண்டி எப்படித் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தேன் என்பது பற்றி நஸ்ரீன் ஃபஸல் என்ற இளம்பெண், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் பகிர்ந்திருந்தார். அவருடைய அனுபவத்தை ஃபேஸ்புக்கில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்திருந்தனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் ‘லைக்’செய்திருக்கின்றனர்.

நஸ்ரீன் ஃபஸல் ஒர் இளம் எழுத்தாளர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்திருக்கிறார். கடந்த நான்கு மாதங்களுக்குமுன் இவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. தற்போது கணவர் அமீனுடன் சவுதி அரேபியாவில் வசித்துவருகிறார். தன்னுடைய ஏற்பாட்டுத் திருமணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு நஸ்ரீன் கூறியிருக்கும் காரணங்கள் பலரையும் ஈர்த்திருக்கின்றன.

என் கணவரை முதல்முறை சந்தித்தபிறகு, என்னைப் பற்றிய அறிமுகத்தை இரண்டு பக்கங்களுக்கு அவருக்கு எழுதி அனுப்பினேன். ஒரு பக்கத்தில், நான் யார் என்பதைத் தெரிவித்திருந்தேன். இன்னொரு பக்கத்தில் என்னுடைய வாழ்க்கைத் துணையிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, அவர் தன்னைப் பற்றிய மூன்று குறிப்புகளையும், எனக்கு நேரடியான மூன்று கேள்விகளையும் அனுப்பியிருந்தார்.

ஒருவரையொருவர் புரிந்துகொள்ளத் தொடங்கிய இந்த முதல் வாரத்தில் நாங்கள் 80 மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டோம்! ஆமாம், எண்பது மின்னஞ்சல்கள். இந்த மின்னஞ்சல்களில் அற்பத்தனமான எந்த விஷயங்களையும் நாங்கள் பேசவில்லை. முழுக்க முழுக்க எங்களுடைய வாழ்க்கையின் முன்னுரிமைகள், எதிர்காலம், வாழ்க்கைத் துணையிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் பற்றித் தொடர்ந்து விவாதித்தோம். பெரும்பாலான கேள்விகளை நான்தான் முன்வைத்தேன்.

‘பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’, ‘முறைகேடு’ Abuse பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’, ‘எப்போது குழந்தைகள் வேண்டுமென்று நினைத்திருக்கிறீர்கள்?’… இப்படிப் பல கேள்விகளைக் கேட்டேன். அவர் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்தார். இப்படி இருவரும் திருமணத்தை உறுதிப்படுத்த இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். இந்த முறையான அறிமுகம்தான் எங்கள் உறவின் அடித்தளம்.

நம்முடையது ஒரு வேடிக்கையான கலாசாரம். ஓர் உணவகத்தில் உணவைத் தேர்வு செய்யப் பல மணி நேரம் எடுத்துக்கொள்வோம். ஆனால், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போதுமட்டும், ஓர் ஆணும் பெண்ணும் சில மணிநேரங்களில் (சில சமயங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக) அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இதில் எந்த நியாயமுமில்லை என்று நீள்கிறது நஸ்ரீனின் விவரம்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்திலிருக்கும் பெண்கள் நஸ்ரீன் சொல்லியிருக்கும் விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உணர்வுகள், ஆன்மிகம், பணி வாழ்க்கை, நிதி நிலைமை, உடல் சார்ந்த எதிர்பார்ப்புகள் போன்ற விஷயங்களைத் திருமணத்துக்குமுன் பேசிவிடுவது நல்லது. கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டு, பேச வேண்டிய விஷயங்களை நேரடியாகப் பேசித் தெளிவு பெற்றபின் திருமணத்தை உறுதிசெய்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.

பெற்றோர் முடிவுசெய்துவிட்டார்கள், அவர்கள் நமக்கு நல்லதுதான் செய்வார்கள் என்ற வழக்கமான வரையறைக்குள் சிக்கிக்கொள்ளாமல் உங்கள் பார்வையிலிருந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை குறித்த தெளிவுடன், ஒத்துப்போகும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும்போது, அது மகிழ்ச்சியானதாகவும் வெற்றிகரமானதாகவும் இருக்கிறது என்ற உண்மையை நஸ்ரீன் தன் அனுபவத்தின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார்.

மனமே நலமா?- இழப்புத் துயரத்திலிருந்து மீள வழியில்லையா?

டாக்டர். எம்.எஸ்.தம்பிராஜா



நான் இறந்த பிறகு

எனக்காகக் கொஞ்சம் அழு, கண்ணீர் விடு

நம் இனிமையான தருணங்களை

அவ்வப்போது நினைத்துக்கொள்

ஆனால், கொஞ்ச நேரம் நினைத்தால் போதும்.

பின் அந்த நினைவுகளைத் தாண்டிச் செல்

நீ உயிரோடு இருக்கும்வரை

உன் எண்ணங்கள் உயிருள்ளவர்களுடனேயே இருக்கட்டும்” - யாரோ

மனித வாழ்வில் இழப்புகள், குறிப்பாகக் குடும்பத்தினர் ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்க முடியாதவை. அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை. ஒரு தாய் தன் மகனை இழப்பதாலும், ஒரு கணவன் தன் மனைவியைப் பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். அந்த மரணத்தின் கருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.

“ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அவளைத் தேடுவேன். அவள் இல்லை என்று உணரக் கொஞ்ச நேரம் ஆகும். பின் மனதை ஒரு பாரம் அழுத்தும். முக்கியமான ஏதோ ஒரு பொருளைத் தொலைத்துவிட்டபோது ஏற்படும் படபடப்பு இருக்கிறதே, அது போன்ற ஒரு பதற்றம் என் நெஞ்சில் வியாபிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஆரம்பமாகிறது” - மனைவியை இழந்த ஒருவரின் மனக்குமுறல் இது.

நெருங்கிய ஒருவரின் மரணத்துக்குப் பின் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்குகளைப் பட்டியலிடுவது கடினம். ஆனாலும் இழப்புத் துயரத்தை (Grief) அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தவர்கள், அன்பார்ந்த ஒருவரை இழந்த பின் ஏற்படும் உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் விரிவாக விவரித்துள்ளார்கள்.

உணர்ச்சிக் கோலங்கள்

மரணத்தை அறிந்த பின் முதன்முதலில் ஏற்படுவது மனஅதிர்ச்சி. கூடவே மனம் மரத்துப் போகிறது (Shock and Numbness). மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை உள்ளம் நம்ப மறுக்கிறது. ‘இது உண்மை இல்லை’ என்று தோன்றுகிறது. நடப்பது எல்லாம் வேறொரு உலகத்தில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அடுத்ததாக, மெல்ல மெல்ல உண்மை விளங்க ஆரம்பிக்கும்போது, கடும் மனவேதனை ஒருவரை ஆட்கொள்கிறது. நெஞ்சில் வேல் பாய்ந்ததுபோன்று உள்ளம் வலிக்கிறது.

அழுகையை நிறுத்த முடிவதில்லை. கடும் துயரம் மனதை ஆக்கிரமிக்கிறது. ஊன் உறக்கம் கொள்ள முடிவதில்லை. இழந்தவரின் நினைவு மனதை விட்டு நீங்குவதே இல்லை. இதிலிருந்து மீளச் சில வாரங்கள், மாதங்கள் ஆகலாம்.

அதோடு, அவரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்ற உணர்வும் மனதை உறுத்துகிறது. “நான் அவனைப் பள்ளிக்கூடச் சுற்றுலாவுக்கு அனுப்பியிருக்கக் கூடாது” என்று தன்னையே மீண்டும் மீண்டும் கடிந்துகொள்கிறாள், பள்ளிச் சுற்றுலாவின்போது தன் மகனைக் கடலில் பறிகொடுத்த ஒரு தாய். இந்தக் கட்டத்தில் தன்னையே குறைகூறுவதும் (“நான் மட்டும் அன்று அவர் கூடவே இருந்திருந்தால், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்கலாம்”), மற்றவர்களைக் குற்றம்சாட்டுவதும் (“அந்த டாக்டர் சரியாகக் கவனிக்கவில்லை”) சகஜம்.

சில வேளைகளில் இறந்தவர் மீதே கடும் கோபம் கொள்வதும் உண்டு (“இந்த மனுஷன் என்னைத் தனியே விட்டுவிட்டுத் தான் போய்ச் சேர்ந்துவிட்டான்”). ஆனால் இம்மாதிரியான எண்ணங்களால் குற்ற உணர்வு பெரிதாகி, அதை வெளியே சொல்வதற்குத் தயங்கவும் செய்யலாம்.

குரலும் இருப்பும்

இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்று. சில வேளைகளில் இறந்தவர் தன்னுடன் பேசுவதுபோல அவருடைய குரல் கேட்கலாம்; அவர் அருகில் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். ஆனால், இவை நெடுங்காலம் நீடிப்பதில்லை.

இவ்வாறாக ஒரு மரணத்துக்குப் பின் மனஅதிர்ச்சி, மனவலி, கோபம், குற்ற உணர்வு, மன சஞ்சலம் ஆகிய பல தரப்பட்ட மனவெழுச்சிகளுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். இவை குறிப்பிட்ட எந்த ஒழுங்குமின்றி மனதை வியாபிப்பதுதான் இழப்புத் துயரத்தின் தன்மை.

எப்படிக் குறைப்பது?

பொதுவாக, இழப்புத் துயரம் ஓரிரு ஆண்டுகள்வரை நீடிக்கும். பின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும். இறந்தவர் இல்லாமல் வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டி இருக்கும். ஆனாலும் இறந்தவரின் நினைவு, நிழல்போல நெடுங்காலம் தொடரும். ஒருவரது மரணத்துக்குப் பின் நடத்தப்படும் இறப்புச் சடங்குகள் சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபட்டாலும், இவை இழப்புத் துயரத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இழப்புத் துயரம் உடலையும் வெகுவாகப் பாதிக்கிறது. மனைவியை இழந்த ஆண்களில் பலர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மரணமடைகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்துக்கொள்ளும் திறனும் இழப்புத் துயரத்தின்போது குறைகிறது.

சாதாரண இழப்புத் துயரத்தின்போது ஏற்படும் மனவேதனைக்கு மருந்துகள் தேவை இல்லை. காலம்தான் இவர்களுக்கு மருந்து. சிலர் தூக்க மாத்திரையைப் போட்டுக்கொள்வது உண்டு; சிலர் மது அருந்தி மனதை மரத்துப்போகச் செய்வதுண்டு. இவை பயன் தருவதில்லை. சிகிச்சை ஏதும் இல்லாமலேயே ஓரிரு ஆண்டுகளில் சாதாரண இழப்புத் துயரம் தானாகக் குறையும். நெருக்கமானவர்களுடன் தன் மனவேதனையைப் பகிர்ந்து கொள்வது இழப்புத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு உதவும்.

தீராத இழப்புத் துயரம்

சில மரணங்கள் தீவிரமான இழப்புத் துயரத்தை உண்டாக்கலாம். தற்கொலைகள், அகால மரணங்கள் போன்றவை ஏற்படுத்தும் துயரம் கடுமையாகவும் நெடுங்காலம் நீடிப்பவையாகவும் அமையலாம். இது தீராத இழப்புத் துயரம் (Unresolved grief) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் பல ஆண்டுகள் கழிந்த பின்னும் தான் இழந்தவரைப் பற்றி பேசும்போது மிகுதியாக உணர்ச்சிவசப்படுகிறார் என்றால், அவர் இன்னும் அந்தத் துயரத்தில் இருந்து விடுபடவில்லை என்று கூறலாம்.

இறந்தவரின் சடலத்தைக் காணக் கிடைக்காதபோது ஏற்படும் துயரம் இவ்வகையைச் சேர்ந்தது. இறந்தவர் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில், இவர்கள் நாட்களைக் கடத்துகிறார்கள். அவர் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பது அடிமனதில் தெரிந்தால்கூட, அதை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.

உதாரணமாக, படிப்புக்காக வெளிநாடு சென்று விபத்தில் இறந்துவிட்ட ஒரு மாணவனின் தாய் (அவருக்கு மகனின் உடல் காணக் கிடைக்கவில்லை) பத்து ஆண்டுகளுக்கு மேலாக எவரையும் தன் மகனின் அறைக்குள் போக அனுமதிக்காமல், அந்த அறையைப் பழசு போலவே வைத்திருந்தார்! இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 20,000 பேர் ‘காணாமல் போனார்கள்’. இவர்களின் பெற்றோர், உறவினர் படும் இழப்புத் துயரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.

தீராத இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். கடுமையான இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும் வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

பெண் குழந்தை போற்றுவோம்: பெண் குழந்தை பிறந்தால் பரிசு!

என். முருகவேல்

அடுத்தவன் வூட்டுக்குப் போற பொம்பள புள்ளையப் பெத்துட்டு, அதுக்குக் காலம் முழுக்கக் காவலா இருக்க முடியும்? பெத்தோம், கட்டிக் கொடுத்தோம்ன்னு இல்லாம, அதுகளைப் படிக்க வச்சு, நகை நட்டுப் போட்டுக் கட்டிக் கொடுக்க நாங்க எங்கே போறது? அதான் கலைச்சிப்புடறது” என்று சொன்ன தொட்டிக்குப்பத்தைச் சேர்ந்த சின்னாயியும், “பொண்ணுங்க வீட்ல இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. வெளியில் போனாலும் பாதுகாப்பு இல்லை. அதுக்குப் பயந்துகிட்டு எங்க ஊரில் பாதிப் பேரு பொண்ணுன்னு தெரிஞ்சாலே கலைச்சிடறாங்க” என்ற எம்.பட்டியைச் சேர்ந்த வினோதினியும் இன்று தங்கள் கருத்துகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விருத்தாசலம் சுற்றுவட்டாரக் கிராமங்கள் கருக்கலைப்பின் கரும்புள்ளி கிராமங்களாக விளங்கின. மங்கலம்பேட்டை, மங்களூர், முகாசா பரூர், எம்.பட்டி, எறுமனூர், தொட்டிக்குப்பம், மு.அகரம், எடச்சித்தூர், மாத்தூர் உள்ளிட்டக் கிராமங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் சராசரிக்கும் குறைவாக இருந்தது. 1000 ஆண்களுக்கு 983 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை கிராமங்களில் ’மக்கள் கருத்தொளி இயக்கம்’ மூலம் சில ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்தி வந்தது. பெண் குழந்தைகள் பிறப்பைத் தடுக்கும் முக்கியக் காரணிகளைக் கண்டறிந்து, முதல்கட்டமாக 6 ஸ்கேன் மையங்களை மூடியிருக்கிறது. வரதட்சிணை, பெண் மீதான அடக்குமுறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

பெண் குழந்தை வளர்ப்பின் எதிர்காலம் குறித்த கவலைகளைப் போக்கி, பெண் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்!’ என்ற மத்திய அரசின் திட்டம் தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியை, பெண் குழந்தை தினமாகக் கொண்டாடி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு உபகரணங்கள், மத்திய அரசின் ஜனனி சுரக் ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 700 ரூபாயும், தாயின் பங்களிப்புடன் கூடிய செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்கையும் ஆரம்பித்துக் கொடுக்கின்றனர். பெண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழையும் ஒரு மரக்கன்றையும் வழங்குகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது கிராமங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 5 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். பெண்களைக் கொண்டாடும் மாவட்டமாகக் கடலூர் மாறும் காலம் தொலைவில் இல்லை.

சட்ட விரோதமாக ரூபாய் நோட்டு மாற்றிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேர் பெங்களூருவில் கைது: சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை

இரா. வினோத்

சட்ட விரோதமாக‌ செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேரை பெங்களூருவில் கைது செய்து சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக‌ விசாரித்து வருகின்றனர்.

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த வருமான வரித்துறை நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதமாக க‌ர்நாடகாவில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் ரூ. 200 கோடிக்கும் அதிகமான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண ஏழை எளிய மக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருக்கும் நிலையில், வருமான வரித்துறை பண முதலைகளிடம் இருந்து கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவர்களிடம் சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கறுப்புப் பணத்தை புதிய ரூபாய் நோட்டுகளாக‌ மாற்றிக் கொடுத்ததில் அரசு அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகள், இடைத் தரகர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாகவே பெங்களூருவில் கடந்த வாரம் வங்கி அதிகாரிகள் 5 பேர், இடைத் தரகர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு ரிசர்வ் வங்கி அதிகாரி மைக்கேல் சட்ட விரோதமாக ரூ. 6 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் சட்ட விரோதமாக பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த பெங்களூரு ரிசர்வ் வங்கி கிளையின் மூத்த சிறப்பு உதவியாளர் சதானந்த நாயக்கா மற்றும் சிறப்பு உதவியாளர் கவின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு ரூ. 1.99 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய்களை மாற்றிக்கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து சட்ட விரோத செயல்பாடு, ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 2 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. கைதாகியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருவரும் நேற்று பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கைதான ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Is Group Admin Liable For Defamatory Texts Made By A Member? Delhi HC Says No 
The Delhi High Court, while dismissing a civil suit for defamation against an administrator of a social media group, observed that he cannot be made liable for defamatory statements made by any other member of the group. Justice Rajiv Sahai Endlaw said: 

“I am unable to understand as to how the administrator of a group can be held liable for defamation even if any, by the statements made by a member of the group.” The court said that making an administrator of an online platform liable for defamation would be akin to making the manufacturer of the newsprint on which defamatory statements are published liable for defamation. “When an online platform is created, the creator, thereof, cannot expect any of the members thereof to indulge in defamation and defamatory statements made by any member of the group cannot make the administrator liable therefore. 

It is not as if without the administrator’s approval of each of the statements, the statements cannot be posted by any of the members of the group on the said platform,” the court observed. The administrator of Telegram and a Google group, where some defamatory statements were allegedly made by some members, was made defendant to the suit. The court observed that the plaint does not disclose any cause of action against the admin and it deserves to be rejected.

Read more at: http://www.livelaw.in/group-admin-liable-defamatory-texts-made-member-delhi-hc-says-no/

NEWS TODAY 14.06.2026