Saturday, December 31, 2016

Elders frown on Aadhaar verification for ticket concession

By Express News Service | Published: 31st December 2016 01:43 AM |

Last Updated: 31st December 2016 04:35 AM

CHENNAI: From January 1, 2017, an additional task awaits passengers attempting to book railway tickets under the senior citizen quota. Aimed at preventing the misuse of the fare concession facility, passengers will have their Aadhaar card details authenticated before they are able to book the tickets. However, the measure announced earlier this month has not gone down well with senior citizens who feel it is unnecessary. Besides, by making them part with Aadhar card details, the elderly claim the move violates a Supreme Court’s order which makes the usage of Aadhaar strictly voluntarily.

According to the relevant document available on the railway ministry website, “From 1st January to 31st March 2017, Aadhaar verification for getting concessional tickets for senior citizens shall be on voluntary basis. With effect from 1st April 2017, Aadhaar verification shall be mandatory.”

As a result, those availing concession on the IRCTC portal will have to first authenticate Aadhaar details by feeding them in the Master List section under ‘My Profile’ and then select verified passengers from the Master List which will pop up during booking. This measure is also applicable for tickets booked over the counter through Passenger Reservation System (PRS) counters. In doing so, officials say they aim to prevent misuse of the concession most commonly done by the ticketing agents.

Speaking to Express, an IRCTC official explained that by linking the ticket reservation with Aadhaar details, it will be a proof audit. “There is an endeavour by the railway board to prevent revenue leakage, starting with monitoring the concessionary tickets. There have been several fraudulent instances of agents booking tickets under this facility,” the official said.

The existing method is that no age supporting documents are required while booking, as they are only inspected by the TTE during the journey. Stating it as a complicating move, D Murugan, 65, a native of Salem, said the extra verification step is not needed. “As it is, I am producing a valid ID proof during my journey. What prevents the TTEs from throwing out those who misuse the facility,” he posed.

Others such as T Sadagoppan, president of TN Progressive Consumer Centre, wondered how it can be implemented when the Supreme Court citing privacy issues had clarified that Aadhaar scheme can’t be linked with governmental schemes except for a select few. “The railways can’t force this measure. The court has said it is purely voluntarily,” Sadagoppan said.

I-T sleuths grill son of former Chief Secretary

By Express News Service  |   Published: 31st December 2016 01:43 AM

CHENNAI: Vivek Pappisetti, son of former Tamil Nadu Chief Secretary P Rama Mohana Rao, was interrogated by the income-tax officials on Friday.
Vivek was summoned a week ago by the department after it conducted raids at his, as well as his father’s, premises on December 21.

Vivek, who looked calm, alighted from his car and entered the Directorate-General, Income Tax (Investigation) building around 3.45pm.
Dressed in a white shirt and carrying a black bag, Vivek evaded queries from waiting media personnel as he entered the office. Income tax sources alleged that earlier he had been evading the department summons after his house in Tiruvanmiyur was raided.

Initially, he evaded the summons on Friday and sought a day or two as his wife was pregnant. He was prompt in messaging the department. But since Monday, he had been evasive. This resulted in the department planning to initiate action against him. To a query whether he will be arrested, the sources said they did not have powers to arrest him.
Vivek is being interrogated for his alleged links with sand mining baron Shekar Reddy, who is currently in judicial custody.
அ.தி.மு.க., நிகழ்ச்சியில் லட்டு வாங்க கூட ஆள் இல்லீங்க!

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை, கட்சியினர் வாங்காமல் புறக்கணித்தனர்; லட்டுவை வாங்க கூட ஆட்கள் இல்லாத, பரிதாப நிலை காணப்பட்டது. 

சென்னை, செங்குன்றம் நகரம் மற்றும் புழல் ஒன்றியம், அ.தி.மு.க., சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதால், இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், நகர செயலர், ஒன்றிய செயலர் உட்பட, சிலர் மட்டுமே பங்கேற்றனர்; பெண் தொண்டர்கள் ஒருவர் கூட வரவில்லை. விழாவில் பங்கேற்க சென்ற, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலர் அலெக்சாண்டர், கூட்டம் இல்லாமல் இருப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்தார். எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, நிர்வாகிகளுக்கு மட்டும் இனிப்பு வழங்கி விட்டு புறப்பட்டார். மீதமுள்ள லட்டுகளை வாங்க யாரும் இல்லாததால், அவற்றை, நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கி, போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்தார். அப்போது ஒருவர், 'வருங்கால முதல்வர் சின்னம்மா வாழ்க' என கோஷமிட்டார். இதையடுத்து, கட்சியினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

சோழவரம் ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், செங்குன்றம், திருவள்ளூர் கூட்டுச்சாலையில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டும் நிர்வாகிகள் இருந்தனர். அங்கும், லட்டு வாங்க ஆட்கள் இல்லாததால், அவற்றை, திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, 'பாதுகாப்பாக' எடுத்துச் சென்றனர். மாதவரம் மண்டலத்தில், இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி எதையும் நடத்தாத, அ.தி.மு.க., நிர்வாகிகள், சில பத்திரிகையாளர்களிடம், '100க்கும் மேற்பட்டோருக்கு, லட்டு வழங்கினோம்' என, செய்தி போடுமாறு கூறியிருக்கின்றனர். கட்சி பதவிகளில் உள்ள சிலரைத் தவிர, மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள், சசிகலா பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டதை விரும்பவில்லை என்பதையே, மேற்கண்ட நிகழ்வுகள் வெளிப்படுத்தின.
- நமது நிருபர் -
KARNATAKA

Colleges differ on common counselling for NEET PG

After the chaos surrounding the undergraduate National Eligibility cum Entrance Test (NEET), with students having to apply for several colleges and universities owing to lack of common counselling, postgraduate medical and dental seat aspirants could face a similar situation.
The Ministry of Health and Family Welfare, earlier this month, sent a circular to principal secretaries of medical education of all States asking them to hold combined counselling through the designated authority for admission to PG medical and dental courses. Medical and dental college managements differ on common counselling. The State government convened a meeting with the representatives of medical and dental college management associations on Wednesday.
While deemed universities are opposed to the idea, minority medical colleges are willing to participate in the common counselling if the State government agrees for a over 100 per cent hike in fees.
“Following common counselling will take away the autonomy of deemed universities and all deemed universities fall under the University Grants Commission ... we have so far not received any instructions from them except stating that all admissions will be made using NEET scores,” a representative of one of the deemed universities in the State said.
Medical Education Minister Sharanprakash Patil told The Hindu that it was only a preliminary meeting called by the State government to push for common counselling for the benefit of students. He added that no concrete decision was taken at the meeting. “College managements too told us it was too early to comment on the issue,” he said. NEET MDS and NEET PG were held in November and December and the results are expected on January 15.
×

எல்லாரும் அப்படியல்ல!

By என். முருகன்  |   Published on : 31st December 2016 01:41 AM  |   
தமிழ்நாட்டில்  தலைமைச் செயலர் பதவியில் இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையை நடத்தி கட்டுக்கட்டாக 30 லட்சம் ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகளும், 5 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
இவரது மகன், சம்பந்தி மற்றும் சிலரிடம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள், சொத்துகள் பற்றிய விவரங்கள் ஒருபுறமிருக்க, ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஊழல் ஏற்படுத்திய தாக்கம் எப்படிப்பட்டது என்ற விவரம் விவாதத்திற்குரியது. மற்ற மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஊழல்கள் எந்த அளவிலானது என்பதை நாம் பார்க்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது.
பிகார் மாநிலத்தில் கெளதம் கோஸ்வாமி எனும் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி, பாட்னாவில் ஆட்சியராக இருந்தார். 2004-ஆம் ஆண்டு அங்கே நடந்த பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அந்த வேளையில், சந்தோஷ் ஜா எனும் ஒப்பந்தக்காரருடன் கோஸ்வாமி ஐ.ஏ.எஸ். சேர்ந்துகொண்டு, 18 கோடி ரூபாயை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இவர், 2006-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்க பாட்னா உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டதற்கான காரணம் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதுதான் என்பது பரிதாபமான செய்தி.
2004-ஆம் ஆண்டில் பா.ஜ.க. நடத்திய ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அன்றைய துணை பிரதமர் எல்.கே. அத்வானியை மேடையிலிருந்து பேச்சை நிறுத்திவிட்டு இறங்குமாறு செய்தவர் இந்த கோஸ்வாமி. அதாவது தேர்தல் விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள் நடைபெற முடியாது என்ற விதி மீறப்பட்டதுதான் இதற்குக் காரணம்.
இதுபோன்ற நிகழ்வினால் அந்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற "டைம்ஸ்' பத்திரிகை, இவரை ஆசியாவின் கதாநாயகர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்து, "பாட்னாவின் மாவட்ட அதிகாரியாக கோஸ்வாமி மிகப்பெரிய அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை செய்துள்ளார். தினமும் காலை 4.30 மணிக்கு பாட்னா நகரின் விமான நிலையத்திற்கு சென்று ஹெலிகாப்டரில் உணவு, குடிநீர், மருந்துகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்படுவதை மேற்பார்வையிட்டார்' என எழுதியது. ஜாமீனில் வெளியே வந்த இந்த 41 வயது ஐ.ஏ.எஸ். அதிகாரி புற்றுநோய் முற்றிய நிலையில் மரணமடைந்தார்!
2010-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநில அரசின் சிறைத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகார செயலராகப் பணியாற்றிய அரவிந்த் ஜோஷி ஐ.ஏ.எஸ்., அவரது மனைவி டினு ஜோஷி ஐ.ஏ.எஸ். ஆகிய இருவரின் வீட்டில் வருமான வரித் துறை திடீர் சோதனையை மேற்கொண்டது. டினு ஜோஷி ஐ.ஏ.எஸ். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலராகப் பணி செய்து வந்தார்.
இந்த திடீர் சோதனையில் மூன்று கோடி ரூபாய் ரொக்கம், 7 லட்சம் ரூபாய் அந்நிய செலவாணி பணம், 66 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகைகள், மூன்று கோடி ரூபாய் முதலீட்டு ஆவணங்கள் ஆகியனவும் வேறு பல பண பரிமாற்று பினாமி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இவை தவிர ஐந்து வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டக சாவிகளும் கைப்பற்றப்பட்டன. இந்த பெட்டிகளைத் திறந்து பார்த்து அவற்றிலுள்ள பொருள்களையும் ஆவணங்களையும் கைப்பற்றினால்தான் முழு சொத்து விவரங்களும் தெரிய வரும் என அறிக்கைகள் வெளியாகின.
டினு ஜோஷி ஐ.ஏ.எஸ்., 2008-ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலராக பணியேற்று முதல் ஆண்டிலேயே அந்த துறைக்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்ய 100 கோடி ரூபாயை செலவிட்டார்.
ஆனால் அந்த ஆண்டிலேயே மத்தியப் பிரதேசத்தில் மாநிலமெங்கும் உணவு குறைபாட்டினால் 20 குழந்தைகள் அரசு காப்பகங்களில் உயரிழந்தன. இதனால் துறையில் நடந்த ஊழல் வெளிப்பட்டு, உணவுப் பொருள்கள் வாங்காமல் போலியான ஆவணங்களை தயார் செய்து பணம் கையாடல் செய்தது வெளியானது. இவரது கணவர் அரவிந்த் ஜோஷி ஐ.ஏ.எஸ். நிதிநிலை மோசடிக்காக அதே ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் நீராதாரத் துறையின் செயலர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.
இதே 2010-ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில், விவசாயத் துறை செயலாளராக பணியாற்றிய பி.எல். அகர்வால் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை செய்து, ரொக்கப் பணம் ரூபாய் 52 லட்சம் மற்றும் 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளையும் கைப்பற்றினார்கள்.
எல்லோருமே அதிர்ந்து போகும் வகையில் 220 பினாமி வங்கி கணக்குப் புத்தகங்களும் இருந்தன. அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை ஆராய்ந்தால் இவர்களது வீட்டில் வேலை செய்யும் ஆண், பெண் ஊழியர்களின் பெயர்கள் இருந்தன. இந்த வங்கி புத்தகங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்த மொத்த பணத்தின் மதிப்பு ரூபாய் 40 கோடி.
2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற அகண்ட் பிரதாப் சிங் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை சி.பி.ஐ. போலீஸார் கைது செய்து ஊழல் விசாரணையை தொடங்கினர்.
அப்போது இவருக்கு 84 அசையா சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் பினாமியாக பல சொத்துகள் வாங்கப்பட்டன. 84 அசையா சொத்துகளில் 10 பிளாட்கள், மற்ற 74-ம் பங்களாக்கள். தில்லி, நொய்டா, காசியாபாத், கிரேட்டர் நொய்டா, லக்னெள, பஹ்ரைச், நைனிடால் ஆகிய இடங்களில் இந்த சொத்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லஞ்சமாக கிடைத்த கருப்புப் பணத்தை இதுபோல் அசையா சொத்துகளாக வாங்கினால் அவை விலை ஏற்றம் என்ற லாபத்தை தரும் என இவர் நம்பினார்.
மேலே கூறப்பட்ட ஊழல் ஐ.ஏ.எஸ்.களின் நடவடிக்கைகள் ஒரு சில மாதிரிதான். இதுபோல நூற்றுக்கணக்கானவர்கள் நம் நாட்டில் தொடர்கிறார்கள். இவர்களை மட்டும் முன் நிறுத்தி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்றாலே அவர்கள் ஊழல்வாதிகள்தான் என்ற தவறான முடிவிற்கு மக்கள் வந்துவிடக் கூடாது.
அன்றும் இன்றும் நல்ல நாணயமான, தரமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உண்டு. ஐ.சி.எஸ். அதிகாரிகள் விட்டுச் சென்ற பணிகளை அவர்களுக்கு இணையாக செய்து, அவர்களைப் போலவே தரமான, ஒழுக்கமான அதிகாரிகளாக நேர்மையுடன் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு.
தமிழ்நாட்டில் டி. லக்ஷ்மி நாராயணன் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனது இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகத்திற்கு வந்து பணி செய்தார். இவரது சகாக்கள் பலர் தங்களுக்கு கீழே வேலை செய்யும் பல நிர்வாகத் துறைகளின் கார்களை வரவழைத்து, காலையில் தலைமைச் செயலகத்திற்கு வருவதும் மாலையில் வீட்டிற்கு திரும்பிச் செல்வதும் வழக்கம்.
இவரது ஒழுக்கத்தையும் நிர்வாகத் திறனையும் தெரிந்து கொண்டு, தமிழ்நாட்டின் முதல் கவர்னர் ஆட்சியில் தலைமை ஆலோசகராக இருந்த தவே எனும் உயரதிகாரி, இவரை தனது தனிச் செயலராக நியமித்துக் கொண்டு நிர்வாகம் செய்தார்.
அடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், "ஊழலை ஒழிப்பேன்' என்ற சபதத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய எம்.ஜி.ஆர். தனக்கு தனிச் செயலராக நாணயமான, திறமையான ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்துக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சிலர் சொன்ன தகவலின் அடிப்படையில் இதே லக்ஷ்மி நாராயணனை நியமித்துக் கொண்டார்.
சில மாதங்கள் சென்ற பின், நிலைமை தனக்கு சரி வராததால் அந்த வேலையிலிருந்து வேறு வேலைக்குச் செல்ல விரும்பிய லக்ஷ்மி நாராயணன் விடுப்பில் சென்றுவிட்டார். அவரை மறுபடியும் முதல்வரின் தனிச் செயலர் பணியில் சேரச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசுத் தோட்டத்தில் குடியிருந்த அவரது வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து முதல்வர் எம்.ஜி.ஆர். வேண்டிக் கொண்டார்.
அவருக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்த பின் அவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவிக்கு அமர்த்தினார் எம்.ஜி.ஆர். அங்கே அவர் செய்த தலையாய பணியின் பலன்கள் இன்றளவும் தமிழகத்திற்கு நன்மைகளை விளைவிக்கின்றன. நமது மாநிலத் தேர்வாணையத்தின் வேலைகளை வேறு பல மாநிலங்களும் பின்பற்றியுள்ளன.
இவரைப் போலவே பி. சங்கர், ஏ.எஸ். பத்மநாபன் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேர்மையுடனும் தெளிவாகவும் பணி செய்து, ஓய்வு பெற்று சாதாரண அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர்.
இவர்களுக்கு பல பங்களாக்களும், கார்களும் இல்லை. லக்ஷ்மி நாராயணன் புதுச்சேரியில் மகிழ்ச்சியுடன் ஒரு முதியோர் குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்.
இவர்களைப் போன்ற நாணயமானவர்களின் வாழ்க்கை முறையை இன்றைய இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பின்பற்றினாலே வருங்கால தமிழகம் மேன்மை பெறும் என்பது திண்ணம்!
கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

ஜெயலலிதா தோழி சசிகலா. சசிகலா தோழி யார் தெரியுமா?

வாழ்ந்த வரை எவ்வளவு மர்மங்களோடு ஜெயலலிதா இருந்தாரோ அதில் துளி கூட குறைவில்லாமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களும் வெளிவராமல் பாதுகாத்து வந்திருக்கிறார் சசிகலா. சிறிய உதாரணம் அவரின் குரலை கேட்க இன்று தமிழகமே காத்திருக்கிறது. சசிகலாவை ஜெயலலிதாவின் தோழியாக மட்டுமே பார்த்துப் பழகிய மக்களுக்கு அவரை ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக ஏற்று கொள்ளும் மன நிலைக்கு வரவில்லை எனலாம். அதற்கு முன்பு அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்குமே உள்ளது. கணவரைப் பிரிந்து, குழந்தை இல்லாமல், தன் வாழ்நாளில் வெளிநாடுகளுக்கு கூட செல்லாமல் ஜெயலலிதாவிற்காக 'தியாக வாழ்கை' வாழ்ந்தவர் என முன்னிறுத்துகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சசிகலாவை பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள்.



உடையும் நிறமும்

கிராமத்து நடுத்தர பெண்ணின் ரசனையிலேயே சசிகலாவின் உடை தேர்வுகள் இருந்துள்ளன என்பது அவரை நன்றாக கவனித்து வந்தவர்களுக்கு தெரியும். அவரின் உடை நிறங்கள் எல்லாமே 'டல்' கலரில் தான் இருக்கும். மர கலரிலும், தேன் கலரிலுமான புடவைகளை மட்டுமே விரும்பி அணிவாரம். இது குறித்து ஜெயலலிதா கூட பல முறை கூறியும் அந்த நிறங்களில் மேல் அவருக்கு அப்படி ஒரு பிரியம். இதற்காக சவுகார்பேட்டையில் உள்ள துணி கடையில் மொத்தமாக ஆர்டர் செய்து சேலைகள் வரவழைக்கபடுமாம். ஜெயா டிவி, சசிகலா கட்டுப்பாட்டில் வந்த பிறகு ஜெயலலிதா அறிக்கைகளைக் காட்டும் கிராபிக்ஸ் கார்டுகள் கூட 'டல்' கலரிலேயே இருக்குமாறு பார்த்து கொண்டார் சசிகலா. ‘பொது இடங்களில் தனியாக தெரியக் கூடாது என்று தனக்குத் தானே போட்டு கொண்ட வைராக்கியத்தின் அடையாளம் தான், நான் இது போன்ற உடைகளை தேர்வு செய்யக் காரணம்’ என்று சசிகலாவே பலமுறை தனது உறவினர்களிடம் கூறியுள்ளாராம்.


'ஆக்ரோஷ சாமிகள்'

ஜெயலலிதாவை விடவும் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர் சசிகலா. வைணவ கடவுள்களை அதிகமாக வழிபடும் ஜெயலலிதாவில் இருந்து சசிகலாவின் வழிபட்டு முறை முற்றிலும் மாறுபட்டது. பெண் தெய்வங்களான காளி, துர்க்கை வழிபாடுகளில் அதிக விருப்பம் கொண்டவர் சசிகலா. ஆரம்ப காலங்களில் கல்கி, சாய்பாபா பக்தராகவும் இருந்துள்ளார். பில்லி, சூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சசிகலா குரல்!?

திராவிட இயக்கங்களில் பேச்சும், குரலுமே ஒருவருக்கு முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சி தலைவருக்கு குரல் மிகவும் முக்கியம். அரசியலில் ஒருவரின் ஆளுமையை நிறுவிப்பதில் குரலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அண்ணாவின் குரலும், கருணாநிதி குரலும் தனித்தன்மை உடையது, எம்.ஜி.ஆருக்கு தொண்டையில் குண்டடிபட்டபிறகு அவர் குரல் மாற, அவரது தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியை எதிர்கொண்டாலும், அதுவும் அவரது ‘சிக்னேச்சர்’ ஆனது. ஜெயலலிதாவின் கணீர் குரல் எல்லோரையும் கட்டிப் போட்டது, அதன்படி இன்றைக்கு தமிழகமே எதிர்பார்ப்பது சசிகலாவின் குரலைத்தான். எப்படி இருக்கும் அவரின் குரல்!? தஞ்சாவூரில் ஒரு கிராமத்து நடுத்தர குடும்பத்து பெண்ணின் பேச்சு மொழியாக இருக்கும். கொஞ்சம் கட்டை குரலாகவும் இருக்கும் என்கின்றனர். ஆனால் அவர் கார்டனில் இருந்தால் பயத்துடனே பணியாளர்களும் கட்சி நிர்வாகிகளும் இருப்பார்கள். தவறு செய்பவர்களை அவர் திட்டும் போது எதிரே நிற்பவர் நிலை குலைந்து விடுவாராம். குரல் எப்படி இருந்தாலும் அது ஒலிக்குமிடம் அதிகாரமிக்கதாக இருப்பதால் அதற்கு வலிமை அதிகமாகத் தானே இருக்கும்.

உறவும் தோழியும்

சசிகலாவிற்கு ஜெயலலிதாவைத் தவிர தனியாக தோழிகள் என்று யாரும் கிடையாது. குடும்ப உறவுகளில் இளவரசியிடம் நட்புடன் இருப்பது போல் தெரிந்தாலும் அவரை விட சசிகலா மிகவும் நேசித்தது நடராஜனின் தங்கை மாலாவைத் தான். திருமணம் ஆகி அவர் வீட்டுக்கு வரும் போது மாலா சின்னப் பெண்ணாக இருந்ததால் அப்போது அவருக்கு தோழி, உறவு எல்லாமே மாலா தான். பின்னர் அவருக்கு திருமணம் முடித்து சென்னை வந்த பிறகும் இருவரும் நெருங்கிய நட்புடன் தான் இருந்துள்ளனர். அரசு அலுவலகம்
ஒன்றில் நூலகராக உள்ளார் மாலா. ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை விட்டு சசிகலாவை வெளியேற்றிய போது அவர் முதலில் சென்றது தி.நகரில் உள்ள மாலா வீட்டுக்கு தான். இப்போதும் கஷ்டமான நேரங்களில் மாலாவிடம் பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார் சசிகலா.

கண்டிப்பும் சிக்கனமும்

இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு என்றெல்லாம் அதிமுக வர்ணிக்கப்பட ஜெயலலிதா காரணம் எனக் கூறப்பட்டாலும். அதன் பின்னணியில் இருந்தவர் சசிகலாதான் என்று இப்போது கூறிக்கொண்டிருக்கின்றனர் கட்சியினர். கட்சியினர் கொண்டு வரும் பிரச்னைகளை எல்லாம் ஜெயலலிதாவிடம் கூற முடியாது. முழுவதுமாக கேட்பவர் சசிகலாதான். தீர்ப்பு மட்டுமே ஜெயலலிதா வசம். வெறும் வார்த்தைகளில் இருக்கும் கண்டிப்பை 'வேறு' வகையில் மாற்றுவதும் சசிகலாவின் கோபத்தை பொறுத்ததுதான். தனக்கு எதிரானவர்களை, ஜெயலலிதா கூட மன்னித்து விடுவார். ஆனால் சசிகலாவைப் பொறுத்தவரை அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள். நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி, அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் கார்டன் போன்றவற்றில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை குறைத்ததுடன் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்களை வேலையை விட்டும் நிறுத்தி சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டதிலும் சசிகலாவின் பங்கு உண்டு. ஜெயலலிதாவிடம் இருந்த தாராளத்தை சசிகலாவிடம் எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள்.

Friday, December 30, 2016

ஜெயலலிதா பொதுக்குழு... சசிகலா பொதுக்குழு! என்ன இருந்தது... என்ன இல்லை...?

vikatan.com

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம், ‘தீபாவளி’ திருவிழாபோலக் கொண்டாடப்படும். போயஸ் தோட்டத்தில் இருந்து கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபம் வரை கட்சியினர் வழிநெடுக நின்று வரவேற்பார்கள். முக்கால் மணி நேரத்தில் கடக்க வேண்டிய இந்த 18 கிலோ மீட்டர் தூரத்தை... ஜெயலலிதாவின் கார், கடந்துசெல்ல ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே அவர் செல்வார்.

போயஸ் கார்டன் கேட் திறந்து ஜெயலலிதாவின் கார் வெளியே வரும்போது... அஞ்சுலெட்சுமி என்ற அ.தி.மு.க பெண் தொண்டர் ஒருவரின் குரல் விண்ணைத் தொடும் அளவுக்கு, ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று குரல் கொடுப்பார். ஆரத்தி எடுத்து... பூசணிக்காய் உடைத்துத்தான் வழியனுப்புவார். போயஸ் கார்டனில் இருந்து இரட்டை விரலை காட்டிப் புன்னகைத்தவாறு செல்லும் ஜெயலலிதாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சிப் பொங்கி இருக்கும். வழிநெடுக நின்று வரவேற்கும் தொண்டர்கள் முகத்திலும் அத்தகையதொரு சந்தோஷம் விளையாடும். ஃப்ளெக்ஸ் பேனர்கள், கொடி தோரணங்கள், வாழை மரங்கள் என வழிநெடுகிலும் கழகத் தொண்டர்கள் கட்டிவைத்துக் கலக்குவார்கள். இந்த உற்சாகப் பயணம், மண்டபத்தை நெருங்கும்போது அங்கு வேறு விதமான வரவேற்பு ஜெயலலிதாவுக்கு காத்து இருக்கும்.



ஸ்ரீவாரி மண்டபம் அருகே... ஒரு கிலோ மீட்ட தூரத்தில் இருந்தே பேண்டு வாத்தியங்கள், சென்னை மேளம் முழங்க வரவேற்பார்கள். குதிரை மீது அமர்ந்த வீரர்களின் வரவேற்பு, பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் எல்லாம் அல்லோலப்படும். ஸ்பெஷல் மேடை அமைத்து ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிபரப்ப டான்ஸ் தூள் கிளப்புவார்கள். சில இடங்களில் ஸ்பீக்கர் செட் கட்டி பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். மண்டபத்தின் நுழைவாயில் அருகே மகளிர் அணியினர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஜெயலலிதாவுக்கு கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார்கள். கூட்டம் நடக்கும் மண்டப வாசல் அருகே நின்று மூத்த நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவை பவ்யமாக வரவேற்பார்கள்.

அதன் பிறகு, பொதுக்குழு கூடும். ஜெயலலிதாவுக்கு, தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று அடிக்கும் விசில் சத்தங்களும் கைதட்டல்களும் காதை பிளக்கும். நடுநாயகமாக ஜெயலலிதாவுக்கு இருக்கை போடப்பட்டு இருக்கும். அதற்கு இரு பக்கமும் இரண்டு அடி தூரம் விட்டுத்தான் மற்றவர்கள் உட்காரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். தனது சேரில் ஜெயலலிதா உட்கார்ந்தவுடன்... மகளிர் அணியினர் ஜெயலலிதாவுக்கு ஆளுயர மாலை அணிவிப்பார்கள். அதன் பிறகு பொதுக்குழு நடவடிக்கைகள் தொடங்கும். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான நூர்ஜகான், தனது வெண்கலக் குரலால் சிறுசிறு முன்னுரையுடன் நிகழ்ச்சிகளை நகர்த்திக் கொண்டிருப்பார். வரவேற்பு, தீர்மானங்கள், முக்கிய நிர்வாகிகள் சிலரின் பேச்சுகள், இறுதியாக ஜெயலலிதாவின் பேச்சோடு கூட்டம் முடியும். கடந்த ஆண்டு நிகழ்வுகளையும் அடுத்த ஆண்டுக்கான திட்டங்களையும் மேற்கோள் காட்டி ஜெயலலிதா பேசுவார். அது, ஜெயலலிதாவின் அரசியல் நகர்வுகளைத் தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில் இருக்கும். ஜெயலலிதா தனது பேச்சை முடிக்கும்போது, ‘‘ஊருக்கு பத்திரமாகப் போய்ச்சேர வேண்டும்’’ என்று அறிவுரை சொல்லித்தான் தனது பேச்சை முடிப்பார். ‘‘சைவம், அசைவம் என்று இரண்டு பிரிவுகளிலும் உணவு தயாராக உள்ளது. அனைவரும் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொள்வார்.



பொதுக்குழுவில் பரிமாறப்படும் சைவை உணவுகளை ஒவ்வொன்றாகக் கேட்டுச் சாப்பிட்டுவிட்டுத்தான் ஜெயலலிதா வீட்டுக்குப் புறப்படுவார். காரில் ஜெயலலிதா உட்கார்ந்த பிறகு, அங்கு விருப்பப்படும் தொண்டர்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் பூங்கொத்துகளைப் பெற்றுக் கொள்வார். இப்படித்தான் கலகலப்பாக முழு உற்சாகத்துடன் பொதுக்குழு நடந்து முடியும். ஆனால், கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் அழுது வடிந்தது. போயஸ் தோட்டத்தில் இருந்து வானகரம் ஸ்ரீவாரி மண்டபம் வரை கொடி தோரணங்கள் இல்லாமல்... சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பொதுக்குழு நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜெயலலிதாவைக் பார்ப்பதற்காக காத்து நின்ற தொண்டர்கள் யாரையும் இந்தப் பொதுக்குழுவில் சாலை ஓரங்களில் பார்க்க முடியவில்லை.

‘பொதுக் குழுவுக்கு வாருங்கள்’ என்று கட்சியினருக்கு அனுப்பப்படும் அழைப்பிதழ்கள்கூட இந்த முறை தபால் இலாகா மூலம் அனுப்பாமல் பொதுக்குழு உறுப்பினர்களைச் சென்னைக்கு வரவழைத்து அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் கொடுத்தார்கள். அழைப்பிதழ்களைக் கொடுத்துவிட்டு அவர்களிடம் ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது. மார்கழிப் பனியையும் கண்டுகொள்ளாமல் காலை 7 மணிக்குள் மண்டபத்துக்குள் ஆஜராகிவிட்டார்கள் கழக நிர்வாகிகள். அமைச்சர்கள் அனைவரும் 8 மணிக்கு ஏசி பஸ்களில் அழைத்து வரப்பட்டார்கள். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 9 மணிக்கு கடைசி ஆளாக பொதுக்குழுவுக்கு வந்தார். போயஸ் கார்டனில் இருந்து டவேரா காரில்... ஜெயலலிதாவின் பிரதயேக சேர், அவரின் அதிகாரப்பூர்வ போட்டோ ஆகியவை எடுத்து வரப்பட்டு பொதுக்குழு மேடையின் நடுநாயகமாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

ஜெயலலிதா முன்னிலையில் பொதுக்குழு நடக்கும்போது இரண்டு வரிசைகள் அளவுக்குத்தான் சேர்கள் போடப்பட்டு நிர்வாகிகள் அமரவைக்கப்படுவார்கள். ஆனால், இந்தத் தடவை ஐந்து வரிசைகளில் 45 நிர்வாகிகள் மேடையில் உட்கார வைக்கப்பட்டனர். ஜெயலலிதா மரணத்தையடுத்து அமைச்சராக பதவி ஏற்றபோது கண்ணீர் சிந்தாத ஓ.பன்னீர்செல்வம் கண்ணீரோடுதான் பொதுக்குழுவில் தனது பேச்சைத் தொடங்கினார். அதே பாணியில்தான் தீர்மானங்களை வாசித்த ஒவ்வொரு நிர்வாகியும் கண்ணீர் வடித்தனர். 14 தீர்மானங்களையும் வாசித்து முடித்தபோது பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் அமைதியே குடிகொண்டிருந்தது. பொதுக் குழு தீர்மானங்களை நிறைவேற்றச் சம்பிரதாயங்கள் முடிந்தவுடன்... ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் அந்தத் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு போயஸ் தோட்டத்துக்குப் பறந்தனர். சசிகலாவைச் சந்தித்து, பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தகவலையும், தீர்மானங்களையும் கொடுத்தபோது... சசிகலாவும் ஜெயலலிதாவாகவே மாறி இருந்தார். அவரது உடையில், திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. டி.டி.வி.தினகரன், இளவரசி மகன் விவேக் என்று மன்னார்குடி சொந்தங்கள் புடைசூழ ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி பொதுச்செயலாளர் நியமனப் பதவியை 11.30 மணிக்கு நல்ல நேரத்தில் ஏற்றுக் கொண்டார்.



சசிகலாவைச் சந்திக்க சென்ற ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் பொதுக்குழு கூட்டத்துக்கு வரவே இல்லை. அங்கிருந்தபடியே கூட்டத்தை முடிக்கச் சொன்னார். ‘‘சசிகலா, பொதுக் குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்’’ என்று திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்க, பொதுக் குழு முடிந்தது. மதிய சாப்பாடு தயார் நிலையில் இருந்தாலும்... அந்த உணவு அரங்கம் காலியாகவே கிடந்தது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

NEWS TODAY 20.08.2026