Friday, March 10, 2017

பிள்ளையார்பட்டியில் மே1ல் கும்பாபிஷேகம்

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மே1ல் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று யாகசாலைக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இக்கோயிலில் 13 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் திருப்பணிகள் கடந்த ஆண்டு துவங்கியது. தற்போது பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை அமைக்கும் பணி நேற்று துவங்குவதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக மூலவர் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சன்னதி முன் முகூர்த்தக்கால் புண்ணியாகவாசனம் செய்யப்பட்டது. பின் முகூர்த்தக்கால் ராஜகோபுரத்தின் கிழக்குப் பகுதியில் யாகசாலை அமைக்கப்படும் பகுதிக்கு வந்தது. அங்கு ஈசான்ய மூலையில் முகூர்த்தக்கால் கொண்டு வரப்பட்டது.கோவில் அறங்காவலர்கள் ஏஎல்.பெரியகருப்பன், என்.மாணிக்கவாசகன் தலைமையில் தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தரகுருக்கள் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது. காலை 10:30 மணிக்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. 101 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு, எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. 200 சிவாச்சாரியர்கள் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேகம் மே1ல் காலை 9:00-- 10:00 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுவாசல் போராட்டம் வாபஸ்

புதுக்கோட்டை: நெடுவாசலில், 22 நாட்களாக நடந்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் எடுக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கோவில் உட்பட, 60 கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று, 22வது நாளாக போராட்டம் நீடித்தது. நேற்று, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கிராம மக்களை சந்தித்து, பேச்சு நடத்தினார். அப்போது, 15 அல்லது 16ம் தேதி, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

மும்பை : வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு, அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அறிவிப்பு:

வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை, எஸ்.பி.ஐ., 2012ல் ரத்து செய்தது. இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்தை, ஏப்., 1 முதல் அமல்படுத்த உள்ளதாக, எஸ்.பி.ஐ., கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி, பெருநகரங்கள், நகரங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கியின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சமாக, முறையே, 5,000, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய் இருப்பை, தங்கள் சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டும். 

அபராதம்:

பெருநகரை பொறுத்தவரை, இந்த மாதாந்திர இருப்பில், 75 மற்றும் 50 சதவீதம் குறைந்தால், முறையே, 100 மற்றும் 50 ரூபாய் அபராதத்துடன், சேவை வரியும் வசூலிக்கப்படும். இத்தொகை, பிற இடங்களுக்கு மாறுபடும் என, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, அபராதம் விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெறுமாறு, எஸ்.பி.ஐ.,க்கு, மத்திய அரசு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

மறுபரிசீலனை:

இதை மறுத்துள்ள, எஸ்.பி.ஐ., தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, 'மத்திய அரசிடம் இருந்து, அதிகார பூர்வ தகவல் ஏதும் வரவில்லை; அப்படி வந்தால், அது குறித்து வங்கி பரிசீலிக்கும்' என, தெரிவித்துள்ளார்.அதனால், வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு குறைந்தால் அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார்.

மார்ச் 10, 04:15 AM

புதுடெல்லி,

தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2–ந் தேதி லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவர் நாடு திரும்பி, தன் மீதுள்ள வழக்குகளை சந்திப்பதற்கு மறுத்து விட்டார்.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். ‘‘விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, சுப்ரீம் கோர்ட்டிடம் தனக்கு உள்ள சொத்துகளின் உண்மையான பட்டியலை அவர் தாக்கல் செய்துள்ளாரா?, சொத்துக்களை தனது ஒப்புதல் இன்றி குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றக்கூடாது என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை விஜய் மல்லையா மீறி உள்ளாரா?’’ என நீதிபதிகள் வினவினர்.

அதற்கு பதில் அளித்த அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, ‘‘விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது’’ என குறிப்பிட்டார்.
இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961–ன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது.

மார்ச் 10, 04:30 AM

புதுடெல்லி

இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961–ன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த கால அளவை 26 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு வகை செய்யும் ‘மகப்பேறு உதவி திருத்த மசோதா–2016’, கடந்த ஆண்டு டெல்லி மேல்–சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை தாக்கல் செய்த மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, பெண்களின் பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக (2 குழந்தைகளுக்கு) உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 10 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று கூறிய மந்திரி, இதன் மூலம் சுமார் 18 லட்சம் பெண் பணியாளர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார்.

இந்த மசோதா உறுப்பினர்களின் ஆதரவோடு பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மார்ச் 10, 04:45 AM

புதுடெல்லி

கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இரும்பு சிலிண்டர்கள்

வீடுகள், ஓட்டல்களில் சமையலுக்காக தற்போது பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர்கள் முற்றிலும் இரும்பால் செய்யப்பட்டவை ஆகும். சில வீடுகளில் ஒரே ஒரு சிலிண்டரை மட்டுமே வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு அதில் கியாஸ் எப்போது தீரும்? என்பது தெரியாது.

இதனால் கியாஸ் முற்றிலும் தீர்ந்து போன பிறகே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும். புதிய சிலிண்டர் வரும் வரை அவர்கள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ள வேண்டி உள்ளது.கியாஸ் இருப்பு

இந்த குறையை போக்க எண்ணெய் நிறுவனங்கள் நவீன சிலிண்டர்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளன. நார்வே நாட்டில் தயாரிக்கப்படும் இந்த நவீன சிலிண்டர்கள் அலுமினியம், இரும்பு கலவையால் ஆனது. கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சிலிண்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நவீன கியாஸ் சிலிண்டர்கள் 6 எடைப்பிரிவுகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. மேலும் இதன் எடையும் குறைவு. தற்போது 70–க்கும் மேற்பட்ட நாடுகளில் இவை புழக்கத்தில் உள்ளன.விரைவில் அறிமுகம்

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் இந்த சிலிண்டர்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் இதை வாங்க உள்ளது. இந்த சிலிண்டர்களில் கியாஸ் கசிவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்ற உத்தரவாதத்தை சிலிண்டர் தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் என்று துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.

மார்ச் 10, 03:45 AM

சென்னை,

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது:-

ஆன்லைனில் திருத்தம்

தமிழ்நாட்டில் 38 அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளும், 18 பல் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள் இதுவரை ஆசிரியர்களால் கையால் மதிப்பீடு செய்யப்பட்டது. பரீட்சார்த்த முறையில் ஆன்லைனில் விடைத்தாள்களை திருத்த பல்கலைக்கழகம் முடிவுசெய்தது.

முதலாவதாக பல் மருத்துவ படிப்புக்குரிய விடைத்தாள்களை ஆன்லைனில் மதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலில் பி.டி.எஸ். படிப்புக்குரிய 4 ஆயிரம் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஆசிரியர்கள் விடைகளை மதிப்பீடு செய்து வருகிறார் கள். இந்த பணிகள் 17-ந்தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எளிமையான வழி

விடைத்தாள்களில் சில மாணவர்களின் கையெழுத்து சரியாக தெரியாது. அதுபோன்ற பகுதிகளை கம்ப்யூட்டரில் பெரிதாக்கி பார்க்கும் வசதி உள்ளதால் மதிப்பீடு செய்வது எளிதாகிறது. மேலும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கம்ப்யூட்டரில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு விடையை மதிப்பீடு செய்த பின்னர் தான் அடுத்த பக்கத்திற்கு செல்ல முடியும். மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்படாது.

விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும்போது, முதலில் திருத்திய ஆசிரியர் என்ன மதிப்பெண் வழங்கினார் என்பது ஆன்லைனில் தெரியாது. இந்த முறை வெற்றிகரமாக நடந்தால் அடுத்து முதுநிலை படிப்புக்கும், எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் ஆன்லைனிலேயே விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இவ்வாறு டாக்டர் கீதாலட்சுமி கூறினார்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...