Tuesday, March 28, 2017

கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக

By -திருமலை சோமு  |   Published on : 22nd March 2017 12:31 PM
AIADMKoffice
தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு மக்கள் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பலர் வாழ்ந்து காட்டியுள்ளனர். இன்னும் மக்களின் மனதில் நினைவுகளாக வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர்.

அப்படி பட்டியலிட்டு சொல்லப்பட வேண்டிய மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்தான் எம்.ஜி.ஆர் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன். திரை உலகில் மக்கள் திலகம் என்று பட்டம் சூட்டிய அவர் அரசியல் ஏட்டில் சரித்திர நாயகனாகவே உலாவருகிறார். 

ஏழைகளின் இதய தெய்வமாக, விளங்கிய அவர் அறிஞர் அண்ணாவின் அன்பு தம்பியாக இருந்ததோடு அவர் மீது கொண்ட அபிமானத்தின் வெளிப்பாடாக அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

எம்.ஜி.ஆர் தமிழக மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. ஏழைகளின் பங்காளனாய், இரக்கத்தின் திருவுருவமாய் இருந்த எம்.ஜி.ஆர். இன்றும் தமிழக மக்களால் மறக்க முடியாத தன்னிகரற்ற தலைவராய் இதய தெய்வமாய் உள்ளார்.


புரட்சி தலைவர் என்ற புகழுக்கு மிகவும் பொருத்தமான அவர் தோற்றுவித்த அதிமுகவை அவர் வழிவந்த ஜெயலிதாவும் செவ்வனே கொண்டு சென்று புரட்சி தலைவி என்று பட்டமும் பெற்றார். ஆரம்ப கால கட்டத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும் ஜெயலலிதாவுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் ஏகோபித்த ஆதரவு இருந்தது. ஜெயலலிதா கட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் அவர் காலம் வரையிலும் ஆட்சியிலும் கட்சியிலும் பல்வேறு கட்ட வளர்ச்சிப் பணிகளை செய்து தமிழக மக்கள் மனதில் நிலைப் பெற்ற தலைவரானர். எம்.ஜி.ஆரின் திட்டங்கள் போலவே ஜெயலலிதாவின் காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலதிட்டங்கள் அத்தனைக்கும் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு அனைவராலும் அம்மா என்றே அழைக்கப்படலானார்.  


கடந்த 5 ஆண்டுகளில் முதல்வரின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களை நேரிடையாகச் சென்றதால் தான், 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே கட்சி ஆட்சியில் தொடரும் வகையில் தொடர் வெற்றி பெறமுடிந்தது என்பதும் உண்மையே. அதேசமயத்தில் துரதிர்ஷ்ட வசமாக, மக்களால் நான் மக்களுக்காவே நான் என்று சொல்லி கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வந்த ஜெயலலிதா காலமானார். இதையடுத்து தமிழக அரசு மற்றும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுகவிலும் வெகுஜனவிரோதப் போக்கு அதிகரித்து விட்டதாகவே கூறப்படுகிறது. 

மக்கள் விரும்பிய ஒரு தலைவரின் மரணம் குறித்து நீடிக்கும் மர்மம், முன்னுக்கு பின்னான அறிக்கைகள், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கெல்லாம் மீண்டும் பதவி, இதனால் ஏற்பட்ட உட்கட்சி பூசல். கொஞ்சம் கொஞ்சமாக புகைந்து வெடிக்கத் தொடங்கியதால், அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓ. பன்னீர் செல்வம் அணி என இரண்டானது. இதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தான்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு. நான் அதிமுகவை மீட்பேன் என்ற குரலோடு எழுந்து புதுக்கட்சி தொடங்கிய கொஞ்ச நாளிலேயே அவரது கணவருக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழ, தற்போது புதுக் கட்சி தொடங்குவதாக தீபா கணவரும் அறிவித்துள்ளார். 


இதற்கிடையில் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் சந்திரன், அண்ணா எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒரு  புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பெரியமலை வெடித்து சிதறும் போது சிறு சிறு துண்டுகள் ஆங்காகே விழும் இயல்பை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சிதறும் துண்டுகள் எல்லாம் தான்தான் மலை என்று தன்னை பிரகடனப்படுத்துவது என்பது எவ்வளவு நகைப்புக்குரியது. இரண்டாக பிளவுப்பட்டால் எது பெரியமலை என்று யோசிக்கலாம். இப்போது அதிமுகவை பொருத்தவரை விரும்பியோ விரும்பாமலோ பிளவு என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. அதிமுக சசிகலா அணி, அதிமுக பன்னீர் செல்வம் அணி, என்ற இந்த இரண்டு பிளவுகளில் யார் மலை என்றுதான் உறுதி செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. 

அதை நோக்கிதான் இரண்டு அணிகளுமே போராடுகிறது என்பதால் சிதறி விழுந்த சில துண்டுகளின் பிரகடனத்தை நாம் புறந்தள்ளிவிடலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் மேல். அதிமுக என்ற இந்த மாபெரும் மலையை கட்டி எழுப்பிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாட மறந்து விட்டு ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் இந்த புனிதர்களை என்னவென்று சொல்வது.


புரட்சி தலைவர் வழி வந்த ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வீதி எங்கும் விழாக் கோலம் பூண்டிருக்கும். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை, கொடியை, சின்னத்தை கைப்பற்ற நினைக்கும் எவரும் அவரது கொள்கையையும், நூற்றாண்டு விழாவையும் கொண்டாட முன்வராதது ஏன் என்று, தன் இல்லங்களிலும் உள்ளங்களிலும் வைத்து எம்.ஜி.ஆரை பூஜிக்கும் அபிமானிகள், அடிமட்ட தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 
எம்.ஜி.ஆர். தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், கோடிட்டுக் காட்டினார்.  அதுபோல் ஜெயலலிதாவும் தனது அரசியல் வாரிசு குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிட வில்லை என்றாலும் ஓ. பன்னீர் செல்வத்தை இரண்டு முறை முதல்வராக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

என்னதான் ஒருவரை இன்னொருவர் தன் அரசியல் வாரிசாகவோ கலையுலக வாரிசாகவோ அறிவித்தாலும் அவர் தன் சுய திறமையால் மட்டுமே மக்களின் அபிமானத்தை பெறமுடியும். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் ஆதரவு என்பது கடந்த அரை நூற்றாண்டுகளாக கலையுலக பிரபலங்களுக்கே கிடைத்து வந்திருப்பதை நாம் அறிவோம். அந்த வகையில்தான் விஜயகாந்த் சரத்குமார், அரசியலுக்கு வந்தனர், ரஜினிகாத்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. 
தற்போது நடிகர் விஜய், அஜித் போன்றோர்களும் அரசியலுக்கு வருவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அஜித் அடுத்த முதல்வாரா என்று சமூக ஊடகங்களிலும் கேரளா, மற்றும் பஞ்சாப் செய்தி ஊடகங்களிலிலும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திரைப்பட பிரபலங்கள் மீது மக்கள் கொண்டுள்ள தீராத மோகம்தான் இதற்கு காரணம்.
அதே சமயத்தில் திரையுலகில் இருந்து வந்தாலும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எந்த ஒரு ஜாதிக்கும் மதத்திற்குமான கட்சியாக, தலைவராக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருந்ததுவே அவர்களின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.  இனிவரும் காலங்களில் ஜாதி மத பாகுபாடு இன்றி பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைவரை அதிமுகவில் காண முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு வேளை சோ இப்போது இருந்திருந்தால் அப்படி ஒரு தலைவரை அதிமுகவிற்கு அடையாளம் காட்டியிருக்க கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதேசமயத்தில் அண்ணாவின் கொள்கைளிலிருந்து திமுக தவறியதை ஏற்க முடியாமல்தான் எம்.ஜி.ஆர்.  திமுகவை விட்டு விலகி, நான் அண்ணா வழிவந்தவன், அண்ணாவின் கொள்கையை பின்பற்றுகிறவன் என்ற பிகடனத்தோடு அண்ணாதிமுகவை தொடங்கினார். அதுபோலவே கட்சியை, ஆட்சியை நடத்தியும் காட்டினார். இப்போது அந்த அண்ணா திமுகவுவில் அண்ணாவின் கொள்கையும், எம்.ஜிஆரின் கோட்பாடுகளும் இருக்கிறதா.. அல்லது காலமாற்றத்தினால் அவையெல்லாம் அவசியமற்றதாகிவிட்டதா. எம்.ஜி.ஆரை மறந்து விட்டு அவரின் இரட்டை இலை சின்னத்தை மட்டும் கையில் எடுத்துக் கொண்டால் வெற்றி பெற்றுவிட முடியுமா  என்ற கேள்வியும் அடிமட்ட தொண்டர்களிடம் எழுந்துள்ளது. 

ஒரு தேர்தல் வெற்றிக்கு சின்னமும், கட்சிப் பெயரும், பணப்பட்டுவாடா மட்டுமே காரணமாக இருந்துவிடமுடியாது. ஒரு பலம் பொருந்திய, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தலைவரும், அவரது கொள்கை கோட்பாடுகளும் மிக மிக அவசியமாகிறது. அதிமுகவிற்கு இன்றைய சூழலில் அப்படி ஒரு தலைவரைத்தான் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.  
 
எனவே அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மறந்து விட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அத்தனை எளிதாக வெற்றிப் பாதைக்கு இழுத்துச் செல்ல முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
                                                                                    - திருமலை சோமு
 கடினமானது கணிதம்: பிளஸ் 2 சென்டம் சரியும்!

பிளஸ் 2 கணிதத் தேர்வில், கட்டாய வினா மிகவும் சிக்கலானதாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால், இருநுாறுக்கு இருநுாறு சென்டம் சரியும் என, தெரிய வந்துள்ளது. பிளஸ் 2வில், நேற்று கணிதத் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் கணிதத் தேர்வு, மாணவர்களை அதிர வைத்தது. பெரும்பாலான மாணவர்கள், 6 மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண் வினாக்களுக்கு, விடையளிக்க திணறினர்

.ஆறு மதிப்பெண் வினாக்களில், கட்டாய வினாக்கள் எளிதாக கேட்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான மாணவர்கள், படிக்காமல் தவிர்க்கும், பகுமுறை வடிவியல் என்ற பாடத்திலிருந்து, 55ம் எண் கேள்வி, இடம் பெற்றிருந்தது. அதேபோல், 10 மதிப்பெண் வினாவில், 70வது எண் கட்டாய வினாவில், ஐந்தாவது மற்றும் எட்டாவது பாடத்திலிருந்து கேட்கப்பட்டிருந்தது. இந்த பாடங்களுக்கும், மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால், பல மாணவர்கள் கட்டாய வினாக்களில், பதில் அளிக்க திணறினர்.

வினாத்தாள் குறித்து, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் ராஜ் கூறியதாவது: மாணவர்களின் தேர்ச்சி பாதிக்காத வகையில், வினாத்தாள் இருந்தது. ஆனால், சராசரி மாணவர்களையும், நன்றாக படிக்கும் மாணவர்களையும், மதிப்பீடு செய்யும் வகையில், வினாத்தாள் கடினமாக அமைந்துள்ளது. குறிப்பாக, 6 மற்றும், 10 மதிப்பெண்களுக்கான, கட்டாய வினாவில், பதில் எழுத அதிக நேரம் தேவைப்பட்டுள்ளது. அதனால், சென்டம் பெருமளவு குறையும். இவ்வாறு அவர் கூறினார். நேற்றைய தேர்வில், ஆறு மாணவர்கள் காப்பியடித்து பிடிபட்டனர்.

10 ஆண்டுகளில் இல்லாத கடினம்! : தமிழக அரசின், 'ப்ளூ பிரின்ட்' அடிப்படையில், 6 மதிப்பெண் வினாக்களில், ஒரு வினாவிற்குள், மூன்று சிறிய வினாக்களை வைத்து, தொகுப்பாக கேட்கலாம். இதன்படி, 10 ஆண்டுகளில், 2012ல் மட்டும், மூன்று சிறிய வினாக்களை கொண்ட தொகுப்பு வினாக்கள், 6 மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றன. அப்போது, வினாத்தாள் முழுவதும் எளிமையாக இருந்துள்ளது. இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், நேற்றைய கணிதத் தேர்வில், 6 மதிப்பெண் பகுதியில், ஒரு வினாவில், மூன்று சிறிய வினாக்கள் அடங்கிய தொகுப்பு வினாக்கள், மூன்று இடங்களில் இடம்பெற்றன. இந்த வினாக்களும் கடினமாக இருந்ததால், 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக, ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
- நமது நிருபர் -
 'நீட்' தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்

பிளஸ் 2வுக்கு பின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்த ஆண்டு, மே, 7ல் நடக்க உள்ள, நீட் தேர்வில் பங்கேற்க, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, ௮.௦௫ லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டு, 80 நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு, 23 புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டு, 2,200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, நாமக்கல், வேலுார் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
- நமது நிருபர் -
செல்லாத ரூபாய் நோட்டு 'டிபாசிட்':
தமிழகத்தில் 1 லட்சம் பேரிடம் விசாரணை


வங்கிகளில் அதிகளவில், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்தது பற்றி தகவல் தெரிவிக்காததால், தமிழகத்தைச் சேர்ந்த, ஒரு லட்சம் பேரிடம், வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.



கடந்த, 2016 நவ., ௮ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த அறிவிப்புக்குப் பின், பதுக்கி வைத்திருந்த பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, மாற்ற வேண்டிய நிலைக்கு பலர் தள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர், வருமான வரித்துறைக்கு பயந்து, வேறு நபர்களின் கணக்குகளில் செலுத்தியது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டனர்.

18 லட்சம் வங்கிக் கணக்குகள் ஆய்வு

இதையறிந்த மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை

எடுத்தது. வங்கிகளில் அதிக தொகையை, டிபாசிட் செய்தவர்கள், அதுபற்றி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தால், அபராதத்துடன் தப்பிக்கும் சிறப்புதிட்டத்தை அறிவித்தது.

இதற்கிடையில், நாடு முழுவதும், இணையதளம் மூலமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்த, 18 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகள் ஆராயப்பட்டன. அவற்றில், அபரிமிதமான தொகை டிபாசிட் ஆகியிருந்ததை, மத்திய அரசு கண்டுபிடித்து, 'நோட்டீஸ்' அனுப்பியது. இது தொடர்பாக, தமிழகத்தில், ஒரு லட்சம் பேரிடம் விசாரணை துவங்கியுள்ளது.

'ஆன்லைன்' மூலமாக, நோட்டீஸ்

தமிழக வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய, 18 லட்சம் பேரில், ஒரு லட்சத்து, எட்டாயிரம் பேர், தமிழகத்தைச்சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, 'ஆன்லைன்' மூலமாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பலர், அதை பார்க்கவில்லை.
அதனால், அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு வருகிறோம்.
இதுவரை, 30 ஆயிரம் பேர், மிக அதிகளவில் டிபாசிட் செய்தது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் அபராதம்

வசூலிக்கப்படுகிறது. சிறப்பு திட்டம் நிறைவடைய, இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால், மொத்த விபரங்கள் பின் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நவம்பரில் சிக்கிய ரூ.246 கோடி!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள, ஒரு பொதுத் துறை வங்கியில், ஒருவரின் இரு கணக்குகளில், தலா, 123 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டிருந்தது. இது, 2016 நவம்பரில் தெரிய வந்தது. அவரை, வருமான வரி அதிகாரிகள் அணுகியதும், சிறப்புத் திட்டத்தின் கீழ், 74.9 சதவீத அபராதத்தை, அவர் செலுத்தி விட்டார்.

- நமது சிறப்பு நிருபர் -
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் திருச்செங்கோட்டில் ஒருவர் ரூ.246 கோடி வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அவர் 45 சதவீதம் வரி செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளார். 
 
சென்னை,

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை ஒழித்து, பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, கருப்பு பண பதுக்கல் பேர்வழிகளின் தலையில் இடியாக இறங்கியது.

ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை வைத்திருந்தவர்கள், வங்கியில் செலுத்தி, மாற்றிக்கொள்வதற்கு அவகாசம் தரப்பட்டது. பொதுமக்களும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினர்.

வருமான வரித்துறை நடவடிக்கை

வங்கிகளில் ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பற்றிய தகவல்களை வருமான வரித்துறை திரட்டி, நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் கணக்கில் காட்டாத பணம் ரூ.600 கோடி அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் இப்படி கணக்கில் காட்டாத பணம் வங்கிகளில் பெருமளவு டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

ரூ.246 கோடி டெபாசிட்

குறிப்பாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ஒரு தனிநபர் ரூ.246 கோடி டெபாசிட் செய்திருப்பது கண்டு வருமான வரித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அந்த நபரை அவர்கள் பின்தொடர்ந்து வந்தனர்.

இதுபற்றி வருமான வரித்துறையினர் கூறும்போது, “அவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற கிளையில் இத்தனை பெரிய தொகை டெபாசிட் செய்திருப்பதை அறிந்து, நாங்கள் அவரை 15 நாட்களுக்கு மேலாக பின்தொடர்ந்து வந்தோம். முதலில் இதை அவர் மறைக்க முயற்சி செய்தார். ஆனால் சில தினங்களுக்கு பின்னர் பிரதம மந்திரியின் பி.எம்.ஜி.கே.ஒய். திட்டத்தின்கீழ், தான் செலுத்திய டெபாசிட் தொகையில் 45 சதவீதத்தை வரியாக செலுத்த ஒப்புக்கொண்டார்” என கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் கணக்கில் காட்டாத பணத்தில் 25 சதவீதம், மத்திய அரசிடம் 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லாத டெபாசிட்டாகவும் வைத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1000 கோடி?

மேலும் அவர் கூறும்போது, “கணக்கில் காட்டாத பணம் டெபாசிட் செய்தவர்களில் பெரும்பாலோர் இந்த திட்டத்தின்கீழ் இணைய ஒப்புக்கொண்டு விட்டனர். இந்த திட்டம் 31-ந் தேதி முடிவுக்கு வருகிறது. அதற்குள் இங்கு கணக்கில் காட்டாத கருப்பு பணம் ரூ.1000 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் சுமார் ரூ.85 லட்சம் வரையில் எல்லாம் வங்கி கணக்குகளில் கருப்பு பணம் டெபாசிட் ஆகி உள்ளது. 28 ஆயிரம் வங்கி கணக்குகள் சந்தேகத்துக்கு உரியவைகளாக வருமான வரித்துறையால் அடை யாளம் காணப்பட்டுள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அடிமட்டத்திற்கு போய்விட்டதால், கோடைமழை வராவிட்டால் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாது என்று அதிகாரிகள் வருத்தத்துடன் கூறினார்கள். 
 
சென்னை,
பருவமழை பொய்த்துப்போனதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் மட்டம் உயரவில்லை. இருக்கும் தண்ணீரை முடிந்த அளவு மோட்டார் பம்புகள் மூலம் இரைத்து குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. 
 குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–

நெய்வேலி சுரங்கத் தண்ணீர் 
 சென்னை மாநகரில் நாளொன்றுக்கு தற்போது 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான குடிநீர் குறிப்பிட்ட அளவு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து பெறப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இதுதவிர குன்றத்தூர் அருகில் உள்ள சித்தராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து தினசரி 30 மில்லியன் லிட்டர், போரூர் ஏரியில் இருந்து தினசரி 4 மில்லியன் லிட்டர், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 45 முதல் 60 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது.

இதுதவிர திருவள்ளூரில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து 70 மில்லியன் லிட்டரும், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களான நெம்மேலியில் இருந்து 100 மில்லியன் லிட்டரும், மீஞ்சூரில் இருந்து 100 மில்லியன் லிட்டரும் குடிநீர் பெறப்படுகிறது.

வீராணம் குழாய் மூலம்... 
 நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வினாடிக்கு 100 முதல் 380 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இவை வாலாஜா ஏரியில் இருந்து பரவனாற்றுக்கு திருப்பிவிடப்படுகிறது. அங்கிருந்து கரைமேடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய தொட்டியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, ராட்சத மோட்டார்கள் மூலம் அவை வீராணம் குடிநீர் திட்ட குழாயுடன் இணைத்து வடக்குத்து நீரேற்று நிலையத்திற்கு கொண்டுசென்று சுத்திகரிக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து சென்னை போரூரில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர் சேமிப்பு நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறது. சோதனை ஓட்டமாக நடந்த இந்தப்பணி தற்போது முழுவீச்சில் நடந்துவருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கிருஷ்ணா நீர் நிறுத்தம் 
 கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநில அரசு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். ஆனால் பருவமழை பொய்த்துப்போனதால் 68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இங்கு குறைந்தபட்சம் 8 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் தான் தண்ணீர் திறந்துவிட முடியும். இதனால் கிருஷ்ணா நீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு, பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது.
இதுவரை ஆந்திர மாநில அரசு 2.2 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கி உள்ளது. போதிய கோடை மழை பெய்தால், எஞ்சிய தண்ணீரை திறந்துவிடுவதாக ஆந்திர அரசு தெரிவித்து உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் அடிமட்டத்திற்கு போய்விட்டது. குறைந்த அளவு இருக்கும் தண்ணீரும் வெயில் காரணமாக ஆவியாகிவருகிறது. கோடைமழை போதிய அளவு பெய்யவில்லையென்றால் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் தான் கூறவேண்டியுள்ளது.  இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டை உடைத்து ஆஸ்திரேலிய நாட்டு அரிய வகை கிளியை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
 
வண்டலூர்
சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள் இருப்பிடங்களில் பல்வேறு வகையான பறவைகள் உள்ளன. இதில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த அரிய வகையான ‘‘மொலுகான்’’ கொண்டைக்கிளி ஒரு ஜோடியை தனியாக கூண்டில் அடைத்து வைத்து உள்ளனர்.

கடந்த 10–ந் தேதி வழக்கம் போல் ஊழியர்கள், பறவைகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாக கூண்டில் வைக்கப்பட்டு இருந்த ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ‘‘மொலுகான்’’ கொண்டைக்கிளி ஜோடியில் ஒரு கிளி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பூங்கா அதிகாரிகளிடம் தெரிவித்தனர். கடந்த 16 நாட்களாக பூங்காவில் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் மாயமான கிளியை காணவில்லை.

கூண்டை உடைத்து திருட்டு இதற்கிடையில் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் ரேவதிபுரம் அருகே ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது 24), ஓட்டேரியை சேர்ந்த நரேஷ் (25), மதிவாணன் (27) ஆகிய 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்தபோது தனியாக இருட்டு அறையில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு கிளியை அடைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரிடமும் அந்த கிளி எப்படி கிடைத்தது? என போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.
அப்போது அவர்கள், கடந்த 9–ந் தேதி இரவு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் அமைந்துள்ள ஓட்டேரி ஏரி வழியாக நுழைந்து பறவைகள் கூண்டை உடைத்து ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆண் ‘மொலுகான்’ கொண்டைக்கிளியை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

3 பேர் கைது இதுபற்றி வண்டலூர் பூங்கா அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ஆஸ்திரேலிய நாட்டு கிளி மாயமானதை ஒப்புக்கொண்டனர். அதன்பிறகுதான் வண்டலூர் உயிரியல் பூங்கா வனசரக அலுவலர் பிரசாத், ஓட்டேரி போலீசில் இதுபற்றி புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், வண்டலூர் பூங்காவில் கொண்டைக்கிளியை திருடியதாக கனகராஜ், நரேஷ், மதிவாணன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கொண்டைக்கிளியை பூங்கா அதிகாரிகளிடம் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் ஒப்படைத்தார்.

முதலுதவி சிகிச்சை திருடப்பட்ட ஆஸ்திரேலிய கொண்டைக்கிளிக்கு ஏற்கனவே இறக்கைகள் வெட்டப்பட்டு உள்ளதால் அதனால் இயல்பாக பறக்க முடியாது. திருடிச்சென்றவர்கள் கடந்த 16 நாட்களுக்கு மேலாக சரியான முறையில் கொண்டைக்கிளிக்கு தேவையான உணவு வழங்கவில்லை. இதனால் மிகவும் சோர்வாக காணப்பட்ட கொண்டைக்கிளிக்கு உடனடியாக பூங்காவில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் கொண்டைக்கிளியை வைத்து உள்ளனர். இதனுடன் ஜோடியாக இருந்த பெண் கிளி, திருடர்களை பார்த்த பயத்தில் சரியான முறையில் சாப்பிடவில்லை. அதற்கு தேவையான உதவிகளையும் மருத்துவர்கள் செய்து உள்ளனர்.

இந்த வகை கிளிகள், ஒரு ஜோடி சுமார் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரை விலை போகும். இது சுமார் 80 ஆண்டுகள் உயிர் வாழும் தன்மைகொண்டது. இது மிகவும் அரிய வகையை சேர்ந்ததாகும்.
கிளி திருட்டு தொடர்பாக பூங்காவில் பறவைகள் பராமரிப்பு பணியில் இருந்த ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...