Saturday, April 1, 2017


ரிலாக்ஸ், தமிழகத்துக்கு இந்த வருசம் கடும் கோடை இல்லை!




காலை 7 மணிக்கே அனலடிக்கத் தொடங்கி விட்ட நம்ம ஊர் வெயில் பற்றிச் சொல்ல நம்மிடம் நிறையப் புகார்கள் இருக்கலாம். ஆனால் நிஜத்தில் இந்தக் கோடையில் வெயில் அப்படி ஒன்றும் வெளுத்து வாங்கவில்லை என்கிறது தமிழ்நாட்டு வானிலை அறிக்கை. இந்தியாவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இருக்கும் மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு இப்போதைக்கு மிக நல்ல வானிலையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறதாம். பிற மாநிலங்களில் 43 டிகிரி செல்சியஸில் வெயில் உச்சந்தலையை உருக வைத்துக் கொண்டிருக்க தமிழ்நாட்டில் விரும்பத்தக்க வானிலையே நிலவுவதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

வீட்டில் AC , மருத்துவமனைகளில் AC, அலுவலகம் சென்றால் அங்கும் AC, ஸ்டோர்களுக்குச் சென்றால் அங்கும் AC என்று குளுமையான வசதிகளுக்குப் பழக்கப் பட்டுப் போன மக்கள் இந்த வெயிலுக்கே இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இப்போது வரையிலும் சென்னையின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை இன்னும் தாண்டவில்லையாம். ஏன் தெரியுமா? கிழக்கிலிருந்து வீசும் காற்றிலிருக்கும் ஈரப்பதமும், தமிழகத்தைச் சூழ்ந்த கருமேகங்களில் பொதிந்துள்ள ஈரப்பதமும் சேர்ந்து தான் தமிழகத்தை கடுமையான வெப்ப அலைகளிலிருந்து இதுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறதாம்.

கிழக்கிலிருந்து வீசும் குளிர்காற்றின் ஈரப்பதம் மற்றும் மேகப்பொதிகள் இரண்டும் தான் இதுவரையில் தமிழகம் மற்று இந்தியாவின் தென்பகுதி மாநிலங்கள் சிலவற்றை கடுமையான வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து தடுத்து காத்து வருவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின், காலநிலை ஆய்வு ஆராய்ச்சிப் பிரிவின் தலைமை அதிகாரி டி எஸ் பாய் தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால் தமிழ்நாட்டில் இது வரை வானிலை ஆய்வு மையங்களில் பதிவான அதிக பட்ச வெப்ப நிலையே சுமார் 40 டிகிரி செல்சியஸ் தான். பதிவான இடம் கரூர். கரூரை அடுத்து அதிக வெப்பநிலை நிலவக் கூடிய இடமாகப் பதிவானது சென்னை. வியாழன் அன்று நுங்கம்பாக்கத்திலிருக்கும் வானிலை ஆராய்ச்சி மையத்தில் பதிவான அதிக பட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தால் ஒப்பு நோக்கப்படும் இன்சாட்- 3டி செயற்கைக்கோள்கள் எடுத்தனுப்பும் OLR (அவுட்கோயிங் லாங் வேவ்) புகைப்படங்களின் அடிப்படையில் கணித்தால் தற்போது, இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடும் அனல் அலை பரவக் காரணம் அங்கு நிலவும் வலுவான அதிகபட்ச காற்றழுத்த தாழ்வு நிலையே ஆகும். இந்த உயர் காற்றழுத்த தாழ்வு நிலை தென்னிந்தியாவை குறிப்பாக தமிழகத்தை இந்த முறை புறக்கணித்து விட்டதால் மட்டுமே இப்போது வரை தமிழகத்தில் இனிமையான வானிலையே இப்போது வரை நிலவி வருவதாக வானிலை ஆய்வு மைய அறிக்கைகள் கூறுகின்றன.

இதைக் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப் படும் பிரதீப் ஜான் என்ன சொல்கிறார் என்று பார்த்தால், உயர் வளிமண்டல அழுத்தத்தில் உருவாகும் இத்தகைய கடுமையான வெப்ப அலைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தை கடக்கும் போது அங்கே வளிமண்டல மேற்பரப்பில் இருக்கும் காற்றானது, தரையை நோக்கி இழுக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வெப்ப நிலை அதிகரிக்கிறது என்கிறார்.

மேற்குறிப்பிட்ட அதே காற்றழுத்த தாழ்வுநிலையால் தான் குறிப்பிட்ட இடங்களில் மேகங்கள் நகரமுடியாமல் ஒரே இடத்தில் பூமியின் மேற்புறத்தைச் சுற்றி ஒரு உரை போல தேங்குவதால், சூரிய ஒளி உட்புக முடியாமல், உள்ளிருக்கும் காற்றும் வெளியேற வகையின்றி இந்திய வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு அது வெப்பமாக உணரப் படுகிறது. அதைத் தான் வானிலை ஆய்வாளர்கள் வெப்ப அலைகள் என்கிறார்கள்.

புயல் எச்சரிக்கை மையத் தலைவரான எஸ். பாலசந்திரன் பேசுகையில், இது போன்ற வெப்ப அலைகள் உருவாக காரணம் ஒன்று மட்டுமே இருப்பதாகக் கருத முடியாது. இது போன்ற பல்வேறு காரணங்கள் இணைந்து தான் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, வெப்பநிலை, கூடுதல், குறைதல், மழை, புயல் போன்றவை நிகழ்கின்றன என்கிறார்.

மேலும் அவர்; 'காற்றின் திசை, தெளிவான வானம், ஈரப்பதம், புவியியல் இயக்கவியல் இவை ஒவ்வொன்றுமே காலநிலையைத் தீர்மாணிப்பதில் தத்தமது பங்கை செவ்வனே ஆற்றி வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும். மற்றபடி இங்கு எப்போதும் சமரசமான வானிலையே நிலவும். கடந்த காலங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் தமிழகத்தில் அதிகம் இருந்திருக்கலாம், ஆனால் இந்த ஆண்டில் இது வரை அப்படி எந்த அறிகுறியும் தெரியவில்லை. மே முதல் வாரம் வரை வானிலை இதே விதத்தில் தான் நீடிக்கும்' என்றார்.


Article Concept Courtsy: New indian express.
Dailyhunt
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்




புது தில்லி: ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணம், குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் என எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ள மிக முக்கிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம்.

குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?
எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

மாநகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

நகர, சிறு நகர, கிராமபுறப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.

டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.

எஸ்பிஐயுடன் இணையும் 5 வங்கிகள்
இந்த கட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
Dailyhunt

'சாதனை திருநங்கை'... இந்தியாவின் முதல் எஸ்ஐ பிரித்திகா யாஷினி




இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதும், அதன் மூலம் பலர் உயர் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக திருநங்கை ஒருவர், எஸ்ஐயாக பொறுப்பேற்கிறார். அதிலும், தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்ற இருக்கிறார்.

தமிழக காவல்துறைக்கான உயர் பயிற்சியகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒரு பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை உள்பட 1,031 பேர் எஸ்ஐ பதவிக்கான பயிற்சியில் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு ஆண்டு நடைபெற்ற பயிற்சி நேற்று நிறைவுபெற்றது. இதையொட்டி, சிலம்பாட்டம், கராத்தே, நெருப்பு விளையாட்டு உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதில், எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்டவர்கள், சாகசங்களை செய்து, அசத்தினர்.

இதில், இந்தியாவிலேயே முதல் எஸ்ஐயாக செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினிக்கு, பயிற்சி அளித்த உயர் அதிகாரிகள் உள்பட சக பயிற்சியாளர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். போராடி பெற்ற பதவியை அவர் முழுமையான மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் இன்று, பிரித்திகா யாஷினிக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. அதையொட்டி அவர், அதே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt

எப்பொழுதும் மக்கள் எதிர்ப்பார்ப்பில் ஜியோ ஜியோ தான் ...! காரணம் உள்ளே .

.


ஜியோ பெயரிலும் சரி, செயலிலும் சரி மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்துள்ளது என்பதற்கு பல சான்றுகள் இருக்கிறது .

ஜியோவின் சலுகைகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றதற்கான காரணம் முதலில் முந்திக் கொண்டதே. அதாவது ஜியோ என்ற ஒன்று வருவதற்கு முன்பாக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு ஜி பி ரூ. 250 வரைக்கும் விலை நிர்ணயம் செய்திருந்தது.

ஆனால் ஜியோ வந்த பிறகு , அதாவது இலவச டேட்டா வழங்கிய பிறகு மற்ற நிருவனங்களும் போட்டியை சமாளிக்க வெகுவாக ஆபரை வழங்கியது. இருந்தாலும் ஜியோ வழங்கிய அளவிற்கு முற்றிலும் இலவச சேவையை இதுவரை எந்த நிறுவனமும் வழங்க வில்லை .

மேலும் , தற்போது ஜியோவின் இலவச சேவை பெறுவதற்கான கால அவகாசம் முடியும் தருவாயில் மீண்டும் 1 5 நாட்களுக்கு சலுகையை நீடித்தது.இதற்கு ஏற்றார் போல், பி எஸ் என் எல் நிறுவனம் , ஐடியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் சலுகையை அறிவித்தாலும் ஜியோ விற்கு உண்டான வரவேற்பு , மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இல்லை என்றே கூறலாம் .
Dailyhunt
"இப்படி எல்லாம் பஸ் ஓடினா எதுக்கு டீசல், பெட்ரோல்." : 17 கிமீக்கு வெறும் ஒரு ரூபாய்தான் செலவாம்.

டீசல் விலை ஏறிப்போச்சு, பெட்ரோல் விலை கூடிப்போச்சு என்றெல்லாம் இனிமேல் புலம்பத் தேவையில்லை. மேற்குவங்காள மாநிலத்தில் வித்தியாசமான முறையில் ஒரு நிறுவனம் பஸ்ஸை இயக்கியுள்ளது. 
ஒரு ரூபாய் செலவு
மாட்டு சானத்தின் மூலம் எடுக்கப்பட்ட ‘பயோகியாஸ்’சைப் பயன்படுத்தி  தனியார் நிறுவனம் ஒன்று கொல்கத்தாவில் பஸ்ஸை இயக்கி சாதனை படைத்துள்ளது. இந்த எரிவாயு மூலம் பஸ்ஸை  17 கி.மீ.க்கு இயக்க வெறும்  ஒரு ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது. 
பிரத்யேக பஸ்
கொல்கத்தாவைச் சேர்ந்த ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு’ நிறுவனம் சார்பில் இந்த பஸ் இயக்கப்பட்டது. இதற்காக இந்த நிறுவனம் ‘அசோக் லேலாண்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, சாண எரிவாயுவில் ஓடுவதற்காக பிரத்யேக பஸ்ஸை தயாரித்தது.
இந்நிலையில், கொல்கத்தாவின் உல்டாடங்கா பகுதியில் இருந்து காரியா பகுதி வரை நேற்று முன் தினம் முதல்முறையாக சான எரிவாயுவினால் பஸ் இயக்கப்பட்டது. 

சமையல், மின்சாரம்
இந்த பஸ் இயக்கியது குறித்து ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு’ நிறுவனத்தின் தலைவர் ஜோதி பிரகாஷ் தாஸ் கூறுகையில், “ மேற்குவங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் இருந்து சான எரிவாயுவை தயாரிக்கிறோம். மாட்டுசானத்தில் மட்டுமல்லாது, காய்கறிக்கழிவு ஆகியவற்றில் இருந்து மீத்தேன் வாயுவைத் தயாரிக்கலாம். இந்த வாயு மாசு இல்லாதது, இந்த வாயுவைப் பயன்படுத்தி, வாகனங்களை இயக்கலாம், சமையல் செய்யலாம், மின்சாரமும் உற்பத்தி செய்யமுடியும். 
ரூ.20 உற்பத்தி செலவு
இந்த வாயு ஒரு கிலோ தயாரிக்க எங்களுக்கு ரூ. 20 செலவாகிறது. ஒரு கிலோ எரிவாயு மூல் 5 கி.மீ. வரை பஸ்ஸை இயக்கலாம். கொல்கத்தாவில் டீசலில் 17 கி.மீ.க்கு பஸ்ஸை இயக்க ரூ.12 செலவாகிறது. நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயு மூலம் பஸ்ஸை 17 கி.மீக்கு இயக்க வெறும்  ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும்.
நாங்கள் தயாரிக்கும் இந்த எரிவாயுவை வர்த்தக ரீதியாக விற்பனை செய்ய 100 விற்பனை நிலையங்கள் அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்கும் 15-க்கும் மேல்பஸ்களை சான எரிவாயு மூலம் இயக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 
டீசலைத் தவிர்க்கலாம்
15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை சாலையில் ஓட்டத் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வாகனங்களை வைத்து இருக்கும் உரிமையாளர்கள் டீசல் எஞ்சினை மாற்றிவிட்டு பயோ-கியாஸ் மூலம் இயங்கும் எஞ்சினை பொருத்தலாம்’’ என்று தெரிவித்தார். 
பசுக்களை எதற்காக காக்கிறோம்?
பசுக்களைக் காக்கவும், பசு கடத்தலை தடுக்கவும், மாட்டிறைச்சியை தடை செய்தும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாரதிய ஜனதா அரசுகள் சட்டம் இயற்றி வருகின்றன. அந்த மாடுகளின் சானத்தை பயன்படுத்தி, இது போல் பயோ-கியாஸ் உற்பத்தி செய்தால், மாடுகளை பாதுகாப்பதில் ஒரு அர்த்தம் இருக்கும்.
Dailyhunt
70 மாணவிகளை நிர்வாணமாக்கி மாதவிடாய் சோதனை... கொடூர குணம் கொண்ட 'வார்டன்' மீது வழக்குப் பதிவு!

கழிவறையில் ரத்தக்கறை இருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்த அரசு மகளிர் விடுதி காப்பாளர் 70 மாணவிகளின் உடைகளை களைந்து, நிர்வாணமாக்கி, மாதவிடாய் சோதனை நடத்திய கொடூர சம்பவம் உத்தரப்பிரதேசம், முசாபர் நகரில் அரங்கேறியுள்ளது.
மனிதநேயமற்ற முறையில் இந்த சோதனை நடத்திய பெண் வார்டனை இடைநீக்கம் செய்த உத்தரப்பிரதேச அரசு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
அரசு விடுதி
முசாபர்நகர் மாவட்டம், கதாவுளி நகரில் கஸ்தூரிபாய் காந்தி உண்டு உறைவிட அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் செயல்பட்டுவரும் அரசு விடுதியில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஏறக்குறைய 90-க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி விடுதியில், சுரேகா தோமர் என்ற பெண் வார்டனாக பணியாற்றி வருகிறார்.

ரத்தக்கறை
இந்நிலையில், கடந்த மாதம் 26-ந்தேதி விடுதியின் கழிப்பறையில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதைப் பார்த்த வார்டன் சுரேகா தோமர் விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகளிடம் யாருக்கு மாதவிடாய் வந்தது என்று நாகரீகமற்ற கேள்வி கேட்டுள்ளார்.
70 பேரிடம் சோதனை
ஆனால், மாணவிகள் சொல்வதற்கு நாணப்பட்டு மறுத்துள்ளனர். இதையடுத்து, ஆத்திரமடைந்த சுரேகா தோமர், வயதுவந்த மாணவிகள் 70 பேரை தனியாகப் பிரித்து, தனித்தனியாக ஆடைகளைக் களைந்து மாதவிடாய் சோதனை நடத்தியுள்ளார்.
அழுகை, எதிர்ப்பு
இந்த சோதனை நடக்கும் போது பல மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், சில மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தை உடனடியாக யாரும் பெற்றோர்களிடம் கூறவில்லை, வெள்ளிக்கிழமைதான் வெளியே கசிந்தது.
சஸ்பெண்டு
இதையடுத்து, மாணவிகளின் பெற்றோர்கள்  பள்ளிக்கு படையெடுத்து வந்து பள்ளிநிர்வாகம், தலைமை ஆசிரியரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த சம்பவம் மாவட்ட கல்வி அதிகாரி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, சுரேகா தோமரை ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டார்.
நடவடிக்கை
அதுமட்டுமல்லாமல், இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது குறித்து மாநில மின்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில், “ஊடகங்கள் மூலம் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சோதனை குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, அந்த வார்டன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
எப்.ஐ.ஆர்.
இதற்கிடையே மாணவிகளுக்கு இதுபோன்ற கொடூர சோதனை நடத்திய வார்டன் சுரேகா தோமர் மீது முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பாக்ஸ் மேட்டர்......
நான் செய்தது சரிதான்...
வார்டன் சுரேகா தோமர் தனது செயலை நியாயப்படுத்தி கூறுகையில், “ நான் செய்தது இப்போது வரை சரிதான். ஏனென்றால், எனக்கு சுத்தம், ஒழுக்கம் ஆகியவற்றில் அதிக நம்பிக்கை உண்டு. இந்த மாணவிகளும், பள்ளி நிர்வாகமும் எனக்கு எதிராக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் போல் கண்டிப்பான விடுதி காப்பாளர் தேவையில்லை’’ எனத் தெரிவித்தார்.
பாக்ஸ் மேட்டர்...
விசாரணை நடத்தப்படும்...
தொடக்க கல்வி அதிகாரி சந்திர கேஷ் யாதவ் கூறுகையில், “வார்டன் சுரேகா தோமர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 3 துறைகள் அடங்கிய குழு அவரிடம் விசாரணை நடத்தும், புதிய வார்டனும் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இப்போது,மாணவிகளின் பெற்றோரை சமாதானப்படுத்தி, மீண்டும் மாணவிகளை திரும்ப அழைக்கப்போகிறோம்’’ எனத் தெரிவித்தார்.
Dailyhunt

தமிழக அரசு ஊழியர்களுக்கான மார்ச் மாத சம்பளம் | ஏப்ரல் 4-ந்தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாத ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.


தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4-ந்தேதி தான் கிடைக்கும் | தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும். ஆனால் நேற்று நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் யாருக்கும் சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை தினங்கள் என்பதால் அந்த 2 நாட்களும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாது. 3-ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அலுவலகங்களும் சம்பள பணம் வங்கிகளில் செலுத்தப்படும். அந்தவகையில் 4-ந்தேதி தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள பணம் கிடைக்க உள்ளது.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...