Tuesday, November 14, 2017


Lioness gives birth to stillborn cub in Chennai’s Vandalur zoo

P Oppili| TNN | Nov 13, 2017, 20:09 IST

(

CHENNAI: Mala, a six-year-old lioness in Arignar Anna Zoological Park (Vandalur zoo) in Chennai, gave birth to a stillborn male cub on Monday.

This is the first incident of a lioness giving birth to a stillborn cub in the Vandalur zoo, an official said.

The cub was buried after a postmortem.

According to zoo authorities, the lioness mated with a nine-year-old lion, Siva, 104 days ago. The gestation period of a lioness ranges between 105 and 110 days.

The zoo houses a total of 15 lions, including an eight-month-old male cub. Tamil Nadu chief minister Edappadi K Palaniswami named the cub Vishnu a month ago.

Generally, big cats that give births to cubs for the first time will not be able to provide proper parental care to the newborns. In an attempt to protect the cubs, they keep shifting them from one place to another. In this process, the mother sometimes kills the young ones.

A week ago, a tigress in the zoo killed four of her newborn cubs. Postmortem revealed that the tigress, which was a first-time mother, was unable to carry the cubs without inflicting injuries on them. The cubs suffered deep injuries and died.

Wildlife researchers say such incidents do happen in the wild too.

ஒரு நிமிடக் கட்டுரை: மைதா எனும் விபரீத ருசி!

Published : 13 Nov 2017 09:28 IST

ஜூரி





மைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம். உணவகங்களிலும், சாலையோரக் கடைகளிலும் இரவு நேரங்களில் அதிகம் விற்பனையாவது மைதா பரோட்டாதான். ‘மைதா மாவு உடல் நலனுக்கு ஏற்றதல்ல; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா போன்ற நாடுகளில் மைதா மாவை உணவுப் பொருளாகப் பயன்படுத் தத் தடை’ என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால், மத்திய உணவுப் பொருள் தர நிர்ணயக் கழகமோ, இந்திய மருத்துவர்கள் சங்கமோ அப்படி எந்த எச்சரிக்கையையும் அதிகாரபூர்வமாக விடுக்கவில்லை.

கோதுமையைப் பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊறவைத்து, பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் இட்டு மைதா வைப் பிரிப்பார்கள். கோதுமையை மாவாக அரைத்தால் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். அந்த மஞ்சள் நிறம் மாறி தூய வெண்மையாக அத்துடன் பென்சாயில் பெராக்சைடு என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள். இந்த ரசாயனம் தலைக்குப் பூசும் சாயத்திலும் கலந்திருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அளவுக்கு அதிகமாக உடலில் சேர்ந்தால் நீரிழிவு ஏற்படும். மாவு மிருதுவாக இருக்க அலாக்சன் என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள்.

மைதாவில் குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைடு, அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரைட் ஆகியவை கலக்கப்படுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களிலும் இந்த ரசாயனங்கள் சிறிதளவில் இருக்கக்கூடும். ஆனால், நிறம், சுவை, நெகிழ்வுத்தன்மை, மிருது போன்ற பயன்பாட்டுக்காகவும் வாசனையூட்டவும் நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கவும்தான் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மைதாவில் கார்போஹைட்ரேட் 78% என்பதும் வைட்டமின் அறவே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோதுமையை அரைக்கும்போது உடைசலாகக் கிடைப்பது ரவை. ரவையை சூஜி என்பார்கள். இந்தியில் ‘ஆட்டா’ என்றால் மாவு என்று அர்த்தம். கோதுமையின் தோல் மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கப்படும் அதை இலைத் தவிடு என்பார்கள். அதுவும் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. மைதா என்பது முளை நீக்கப்பட்ட, நார்ச்சத்தும் இல்லாத மிருதுவான பொருள் என்பதால் சத்துக்குறைவாகிறது. மைதாவைப் பசை காய்ச்சவும் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம். மளிகைக் கடைகளுக்குள் இரவில் பிற பொருட்களை ருசி பார்க்கும் பெருச்சாளிகள் மைதா மாவைத் தொடவே தொடாதாம். ஆனால், நாம்?

சென்னைக்கு மித மழையா? கனமழையா?- தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

Published : 13 Nov 2017 20:31 IST

சென்னை

 மேகக்கூட்டங்கள் போக்கு காட்டுவதால் காற்றின் திசையை வைத்து தான் சென்னைக்கு மித மழையா? கனமழையா? என்பதை அறிய முடியும். இது குறித்து தற்போதைய நிலவரத்தை தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது முக நூல் பதிவு:
“வடகிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பு
கனமழையா? அல்லது நின்று ‘விளையாடும்’ மழையா?
சென்னை நகர்புறப்பகுதி முழுவதையும் மேகக்கூட்டங்கள் பரவி நிதானமான மழையை பெய்ய இருக்கிறது. மிகவும் அடர்த்தியான, பெரிய மேகக்கூட்டம் சென்னைக்கு அருகே வருகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்பது அவசியம். ஒருவேளை வராவிட்டால், இந்த மிதமான மழை மட்டும் நமக்கு கிடைக்கும்.
சென்னைக்கு அருகே மிகவும் அடர்த்தியான, தீவிரமான மேகக்கூட்டங்கள் வந்துவிட்டன. காற்று இல்லாத, மிதமாகப் பெய்யும் மழை பெய்யும். இதற்கிடையே மழைக்கு சாதகமான வெப்பநிலை சென்னைக்கு அருகே உருவானால், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதிக்குள் சுழன்று கொண்டு இருந்த மேகக்கூட்டங்கள் சென்னைக்கு மேலே பரவி கனமழையை கொடுக்கும்.
ஒருவேளை அந்த மேகக்கூட்டம் சென்னையைவிட்டு விலகினால், நமக்கு மிதமான, மிதமான மழை மட்டுமே கிடைக்கும். என்னுடைய அடுத்த பதிவு என்பது மழை எப்படி பெய்யும்? என்பதைக் குறிப்பிட்டு இருக்கும்.
அதாவது, நமக்கு மிதமான மழை கிடைக்குமா?அல்லது, கனமழை இருக்குமா? என்பதை அடுத்த பதிவில் உறுதியாகக் கூறிவிடுவேன்”.
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சற்றுமுன் பதிவிட்டுள்ளார்.

மானாமதுரையில் குப்பையில் தீ வைப்பதால்அபாயம்: தொடரும் சுகாதாரக்கேட்டால் மக்கள் பாதிப்பு

 நவ 14, 2017 02:00

மானாமதுரை;சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை வளர்ந்து வரும் நகரமாகும்.மானாமதுரை பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைதாயமங்கலம் ரோட்டில் மாங்குளம் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.அதற்கு முன்பு மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குப்பை கிடங்கிலும்,அரசுகுளி மயானம் அருகே வைகை ஆற்றிலும் கொட்டப்பட்டன.இந்நிலையில் மாங்குளத்தில் குப்பைக்கிடங்கு செயல்பட துவங்கியதிலிருந்து மேற்கண்ட இடங்களில் குப்பையைகொட்டக்கூடாது என செயல் அலுவலர் ஜான்முகமது துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் ஒரு சில ஊழியர்கள் டிராக்டர்களில் அள்ளப்படும் குப்பையை மாங்குளத்திற்குகொண்டு செல்லாமல் மதுரை ரோட்டிலும்,வைகை ஆற்றிலும் கொட்டி விடுகின்றனர்.குப்பையில் கிடக்கும் பொருட்களை சேகரிப்பவர்கள் அதில் கிடக்கும் ஒயர்கள்,டயர்களில் இருக்கும் கம்பிகளைஎடுப்பதற்காக குப்பையில் அடிக்கடி தீ வைத்து விடுவதால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டுதுர்நாற்றம் ஏற்படுகிறது.மேலும் அந்த வழியாகச் செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
இது குறித்து பா.ஜ., நகர பொறுப்பாளர் சங்கரசுப்பிரமணியன் கூறியதாவது:மானாமதுரை பேரூராட்சிபகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் சிலர் மாங்குளத்தில் உள்ள குப்பைக்கிடங்கிற்குகொண்டு செல்லாமல் மதுரை ரோட்டிலும்,வைகை ஆற்றிலும் கொட்டி விடுகின்றனர்,இதில்குப்பையை பொறுக்குபவர்கள் அடிக்டி தீ வைத்து விடுவதால் அந்த பகுதி முழுவதும் புகை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது,மேலும் மழை காலங்களில் துர்நாற்றமும் ஏற்படுகிறது,என்றார்.
இது குறித்து பேரூராட்சி அதிகாரியிடம் கேட்ட போது:மேற்கண்ட இடங்களில்குப்பையை கொட்டக்கூடாது என பணியாளர்களுக்கு எச்சாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இனிமேலும் கொட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.




கவர்னர் மாளிகை தோட்ட அதிகாரி இடமாற்றம் : 'தினமலர்' செய்தியால் நடவடிக்கை

நவ 13, 2017 21:54

கவர்னர் மாளிகையில் நடைபெறும், முறைகேடுகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக, அங்கு பணியிலிருந்த, தோட்டக்கலை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக கவர்னர் மாளிகையில், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, புகார்கள் எழுந்தன.

போலி 'பில்' : பூந்தொட்டிகள் வாங்காமலே, வாங்கியதாக போலி, 'பில்' கொடுத்து, பணம் பெறப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகைக்கு வாங்கியதாகக் கூறி, செம்மண் உட்பட, தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டு, அங்குள்ள அதிகாரிகள் வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகின்றன என, ஊழியர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து, சமீபத்தில், நமது நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், கவர்னர் விசாரணை மேற்கொண்டுள்ளார். புகாரை தொடர்ந்து, தோட்டக்கலை அதிகாரியை இடமாற்றம் செய்தால், உயர் அதிகாரிகளும் சிக்க வேண்டும் என்பதால், தோட்டக்கலை அதிகாரி, பாலசுப்ரமணியம், இடமாறுதல் கேட்டு தோட்டக்கலைத் துறை இயக்குனருக்கு விண்ணப்பித்தார்.
அதன் அடிப்படையில், சிட்லபாக்கம் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனராக, அவர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

பெண் நியமனம் : எனினும், அவர் கவர்னர் மாளிகையிலேயே தங்க, அதிகாரிகள் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தோட்டக்கலை அதிகாரியாக, யோகநாதன் நியமிக்கப்பட்டுஉள்ளார். அதேபோல, ராஜ்பவன் உதவி கணக்கு அலுவலர் சிவக்குமாரை இடமாற்றம் செய்து, பெண் ஒருவரை அப்பதவிக்கு நியமித்து, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை இயக்குனர் உத்தரவிட்டார். ஆனால், கவர்னர் மாளிகை உயர் அதிகாரிகளின் சிபாரிசால், அந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இது, ராஜ்பவன் ஊழியர்களிடம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இங்கு நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, பல ஆண்டுகளாக, தொடர்ந்து கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என, கவர்னர் மாளிகை ஊழியர்கள், கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -

80 லட்சம் பேருக்கு அரசு வேலை வேணுமாம்!

 நவ 13, 2017 22:05

சென்னை: தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 57 வயதுக்கு மேலான, 5,685 பேர் உட்பட, 79.69 லட்சம் பேர், அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

இந்தாண்டு, அக்., 31 வரையிலான, பதிவு விபரங்களை அரசு, வெளியிட்டுள்ளது. இவர்களில், 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், 22.35 லட்சம்; கல்லுாரி மாணவர்கள், 30.60 லட்சம் பேரும் உள்ளனர். 35 முதல், 56 வயதிற்கு உட்பட்டோர், 11.57 லட்சம்; 57 வயதிற்கு மேற்பட்ட, 5,685 பேரும் உள்ளனர். கலைப் பிரிவில், இளங்கலை பட்டம் பெற்றவர்கள், 4.56 லட்சம்; அறிவியலில் பட்டம் பெற்றவர்கள், 6.06 லட்சம்; வணிகவியலில் பட்டம் பெற்றவர்கள், 3.27 லட்சம்; இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், 3.90 லட்சம்; பொறியியல் பட்டம் பெற்றவர்கள், 2.44 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர். மருத்துவம் படித்தோர், 3,680 பேர்; முதுகலை பட்டதாரிகள், 798; வேளாண்மை இளங்கலை பட்டதாரிகள், 5,683; முதுகலை பட்டதாரிகள், 595; இளங்கலை சட்டம் படித்தவர்கள், 1,287; முதுகலை சட்டம் படித்தவர்கள், 219; இளங்கலை கால்நடை மருத்துவம் படித்தோர், 1,287; முதுகலை முடித்தோர், 181 பேர், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

'மொபைல்' செயலிழக்க கல்லூரிகளில் 'ஜாமர்'

 நவ 13, 2017 21:52

மதுரை: 'கல்லுாரி வளாகத்திற்குள், மொபைல் போனை செயலிழக்கச் செய்ய, 'ஜாமர்' கருவியை பொருத்தலாம்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறி உள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, ஒரு மாணவர் தாக்கல் செய்த மனு: கரூர் கருடம்பாளையம், வி.எஸ்.பி., பொறியியல் கல்லுாரியில், 2016ல், பி.இ., - மெக்கானிக்கல் சேர்ந்தேன். விடுதியில் மொபைல் போன் பயன்படுத்தியதாகக் கூறி, என் மீது, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
என் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழை, கல்லுாரி நிர்வாகம் வழங்கவில்லை. சான்றிதழ்களை வழங்க, அண்ணா பல்கலை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர், மகேஸ்வரன் தாக்கல் செய்த பதில் மனு: மனுதாரர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். மொபைல் போனை, விடுதி வார்டன் கைப்பற்றினார். அதில், ஆபாச படங்கள் இருந்தன. கல்லுாரியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்களை, 'வாட்ஸ் ஆப்' மூலம் பரப்பினார். மனுதாரர், கல்விச் சான்றிதழ்களை கோரவில்லை; நாங்கள் தர மறுக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் பின், நீதிபதி ஆர்.மகாதேவன் கூறியதாவது: கல்லுாரிகளில், மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த அனுமதிப்பதால், பல்வேறு தவறுகள் நடக்கின்றன. கல்லுாரி வளாகத்திற்குள் மொபைல் போனை செயலிழக்க, ஜாமர் கருவியை பொருத்தலாம்.
இது போன்ற விவகாரங்களில், மாணவர்கள், கல்லுாரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பற்றி, ஏதேனும் அரசாணைகள் உள்ளவனா என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நவ., 20ல், தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

NEWS TODAY 06.07.2026