Sunday, April 22, 2018

Airtel has highest 4G download speeds in India: Report
19 Apr 2018 | By Bhavika Bhuwalka


According to a report by London-based wireless coverage mapping agency OpenSignal, Bharti Airtel has the maximum 3G and 4G download speeds in India. 


The telecom company bagged the top spot in all three speed categories: 4G, 3G, and overall.

Airtel clocked in an average download speed of 6 Mbps, with rival Reliance Jio coming a close second at 5.1 Mbps.
ஒரு போர்டு... ஆயிரத்தெட்டு தகவல்கள்! இளைஞர்களுக்கு வழிகாட்டும் கிராமத்து பெட்டிக்கடைக்காரர்
 
விகடன் 17 hrs ago

 


பணம் ஒன்றே பிரதானம் என்றாகிவிட்ட இந்த லௌகீக வாழ்வில், மனிதநேயம், உதவி மனப்பான்மை என்பவை மிகவும் அருகிவிட்டன. `அடுத்தவர்கள் என்ன கதியானால் என்ன' என்றுதான் பலரும், சுயநலத்தோடு துரிதமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும், உதவி மனப்பான்மை கொண்ட மனிதர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகை மனிதர்தான் கரூர் மாவட்டம், கடவூர் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.

கடவூரில் சிறு அளவில் ஒரு மளிகைக் கடையை நடத்தி வருகிறார். கிராமத்து அளவில் இருக்கும் சிறு கடைகளிலேயே கார்ப்பரேட் கம்பெனிகளின் விளம்பர தட்டிகளும் மளிகைப் பொருள்களின் விலைப்பட்டியல் மட்டுமே இடம் பெயரும். ஆனால், இவரது மளிகைக் கடையில் உள்ள சுவற்றில் கறும்பலகை அமைத்து, தினமும் அப்துல்கலாம் உள்ளிட்ட உயர்ந்த மனிதர்கள் இளைஞர்களுக்கு வழங்கி சென்ற நல்ல கருத்துகள் ஒன்றை எழுதிப் போடுகிறார். அனைத்து தினசரிகளையும் வாங்கிப்போட்டு, அந்த ஊர் இளைஞர்களைப் படிக்கச் சொல்கிறார். அதோடு, கடைக்கு முன்பு போர்டு ஒன்றை மாட்டி, மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அந்த ஊர் இளைஞர்கள் பார்வையில் படும்படி செய்கிறார். இதனால், அந்த ஊர் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்யும் ஆர்வத்தை வளர்த்து வருகிறார்கள். அதோடு, அரசு வேலைக்கு தயாராக க நினைக்கும் ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்களுக்குத் தகுந்த புத்தகங்களை வாங்கவும் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க ஆகும் செலவையும் தனது பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறார். இதனால், அந்த ஊர் இளைஞர்கள் அரசு வேலை குறித்த போதிய விழிப்பு உணர்வைப் பெற்றிருக்கிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினால், "நான் அதிகம் படிக்கலை. `படிக்கிறதைவிட, குடும்பத்துக்கு சோறு போடுற இந்தக் கடை தொழிலை கவனின்னு எங்கப்பா என்னை இந்தக் கடையிலேயே பழக்கிட்டார். நல்லா படிச்சு, பெரிய அரசு அதிகாரியா ஆவனும்ன்னு நினைச்சேன். முடியலை. எங்க கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமம். இங்கு வசிப்பவர்கள் அனைவரும் அன்றாடங்காய்ச்சிகள். அதனால், அவர்கள் வீட்டு இளைஞர்களாச்சும் என்னைப்போல் இல்லாமல் படித்து, அரசு வேலைகளுக்குப் போகணும்னு நினைச்சேன். அதனால், என்னால முடிஞ்ச சின்ன ஒத்தாசையை பண்ணிகிட்டு இருக்கேன். அடுத்து, முடிஞ்சா எங்க கிராமத்துலேயே இலவசமா டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்பை தொடங்கலாம்னு இருக்கேன்" என்றார்.
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல்
 
  தினகரன் 13 hrs ago

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்காக சென்னையில் இருந்து பலர் தென்மாவட்டங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு, பரனூர், மகேந்திரசிட்டி உள்பட 3 கீ. மீ. தூரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
என் ‘இனிய’ மக்களுக்கு..!

Published : 14 Apr 2018 10:37 IST

மருத்துவர் கு. சிவராமன்



இனிப்பு, கொஞ்ச நாளாகவே அநேகம் பேருக்கு கசக்க ஆரம்பித்துவிட்டது. நம் ஊரில் மட்டுமல்ல, உலகெங்கும்! ‘இனிது இனிது காதல் இனிது’ என பாலகுமாரன் இன்னொரு முறை எழுத மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. ‘கசப்பு கசப்பு காதல் கசப்பு’ என்று எழுதினால்தான், பலருக்கும் சுவைக்கக்கூடும்.

ஆம்! இனிப்பைக் கண்டு பயப்படவும் வெறுக்கவும் கூடிய சூழல் எல்லாப் பக்கமும் வலுவாக வளர்ந்து வருகிறது. மூளைக்குள் இத்தனை நாள் மணியடித்து, எண்டார்பின்களைத் தெளித்துப் பரவசமூட்டிய இனிப்பு, இப்போது அபாய மணியாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. சர்க்கரை வியாதிக்காரர்கள் மட்டும் சற்று சங்கோஜத்துடன் நகர்த்தி ஒதுக்கிய இனிப்புகள், இன்று குழந்தை முதல் அத்தனை வயோதிகரும் சற்றுக் கலவரத்துடன் ஒதுக்கும் வஸ்துகளாகி வருகின்றன.

காபிக்கு சர்க்கரை போடலாமா?

இன்றைக்கு உலகில் மிக அதிகமாக இனிப்பை (வெள்ளைச் சர்க்கரையை) இறக்குமதி செய்யும் நாடு, இந்தியா. கூடவே இன்று உலகில் மிக அதிக அளவில் சர்க்கரை வியாதிக்காரர்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடும், இந்தியாதான். உலகில் மிக அதிக அளவில் நீரிழிவு மருந்து, மருத்துவமனை வியாபாரம் கொடிகட்டிப் பறப்பதும் இங்கேதான்.

முன்பெல்லாம் பசியெடுக்கையில் முந்திரிப் பருப்பை வறுத்துச் சாப்பிடும் பணக்கார மிட்டாமிராசுகளுக்கு வரும் வியாதியாக சர்க்கரை வியாதியை நவீன மருத்துவம் சொல்லியிருந்தது. பாரம்பரிய மருத்துவ முறைகள் எல்லாம், ‘கோதையர் கலவி போதை, கொழுத்த மீனிறைச்சி போதை, ஓதுவாய் நெய்யும் பாலும் பரிவுடன் உண்போருக்கு வந்து சேரும் வியாதி’ என்று எச்சரித்திருந்தன. இவை எல்லாவற்றையும் கடந்து வயது, சாதி, இன, பண, புவியியல் பாரபட்சமும் இல்லாத ஒரே விஷயமாய் சர்க்கரை இந்த நாட்டில் உருவெடுத்து வருகிறது.



‘காபி, டீக்கு சர்க்கரை போடலாமா?’ எனும் கேள்வி ‘ஆதார் கார்டை இணைச்சிட்டீங்களா?’ என்கிற மாதிரி தவிர்க்க முடியாததாகி வருகிறது. சுயம்வர வேட்டையில் பி.சி.ஓ.டி. (சினைப்பை நீர்க்கட்டி) இல்லாத பொண்ணும், ஐ.ஜி.டி. (ஆரம்பக்கட்ட சர்க்கரை நிலை) இல்லாத பையனும் கிடைப்பது அநேகமாக இனி சாத்தியமில்லை என்கின்றன தொடர்ச்சியாக வெளிவரும் நோய்த்தொற்று அறிவியல் ஆய்வு முடிவுகள்.

எதற்கெடுத்தாலும் சர்க்கரையா..?

இத்தனைக்கும் கணையம்தான் பிரச்சினை. அதன் பீட்டா செல்களில் நடந்த புழுக்கமும் கலக்கமும் குழப்பமும்தான் அத்தனைக்கும் காரணம் என்றார்கள் முதலில். வைரஸோ, நோய் எதிர்ப்பாற்றலில் நடந்த பிழையாலோ கணையம் கசங்கிப் போனது என்றும் சொன்னார்கள். இல்லை, பிரச்சினை அதையும் தாண்டியது… ஹார்மோன் சிக்கல்… இல்லை, இல்லை, புரதப் பிரச்சினை… அதெல்லாம் இல்லப்பா… மரபணுதான் சிக்கல்… அதெல்லாம் கிடையாது, ரத்ததில் பேசோபிலில் உள்ள பிளாஸ்டிசைசர் துணுக்குகள் என வரிசை வரிசையாய்ப் பல காரணங்கள் சர்க்கரை நோய்க்கான காரணமாக ஆராயப்பட்டு வருகின்றன.

என்ன காரணம் எனத் தெரியாமல், ‘மாதவிடாயைக் காணோம் என்றால் சர்க்கரையைப் பார்’; ‘காய்ச்சல் குறையலையா? சர்க்கரையைப் பார்!’; மெலிந்து விட்டாயா? குண்டாகி விட்டாயா? குழந்தை இல்லையா? பணக்காரக் கவலைகளா? பணம் இல்லை என்ற கவலையா? தூக்கம் வரவில்லையா? தூக்கமா வருதா? எல்லாவற்றுக்கும் சர்க்கரையைப் பார்… சர்க்கரையைப் பார்!’ என்ற அறைகூவல் மட்டும் இப்போது மருத்துவ உலகில் ஓங்கி ஒலிக்கிறது.

இனிப்பு பாதி… கசப்பு மீதி…

கூடவே ‘ஐயோ இன்சுலினா போட்டுக்கறீங்க..? இவ்ளோ மாத்திரையா?’ என சிலரது நக்கல்கள் ஒரு பக்கம். ‘நீங்க படிச்சவங்க தானா? இப்படி கசாயம் பட்டை, கொட்டைன்னு…. அப்புறம் கிட்னி போயிருச்சுன்னு இங்கு வந்தீங்க... அவ்ளோதான்’ என நுனி நாக்கு ஆங்கிலத்தில் கோட் சூட் போட்ட குதர்க்கங்கள் இன்னொரு பக்கம். ‘டேய்! சுகர்னே ஒண்ணு கிடையாதுடா. எல்லாம் பொய். எல்லா மாத்திரையையும் ஊசியையும் எடுத்துத் தூரப் போடு. நான் சொல்றபடி அகாசுகா பட்டையை அர்த்த ராத்திரில எடுத்துவந்து...’ என நீளும் ‘வாட்ஸ் அப்’ வாந்தி என இனிப்பர்களின் வாழ்வு மிக மிகக் கசப்பாகி வருகிறது. இதற்கிடையில் ‘எதனாச்சும் ஒரு உண்மையான வழியைக் காட்டுங்க!’ எனும் பாதிக்கப்பட்டோரின் கூக்குரலுக்குப் பின்னே கோடானு கோடி வர்த்தகம் இனிப்பாய் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் காய்ப்பு உவர்ப்பு இல்லாமல் ஒரு சுற்று அறிவதுதான், இனிப்பு உருவாக்கும் அத்தனை கசப்பிலிருந்தும் காத்துக்கொள்வற்கான முதல்படி. ‘ஸ்டெம் செல்லை கணையத்தில் படியவிடலாம். மாசம் ஒரு ஊசி போதும். மாத்திரை சாப்பிட்டா அத்தனை சர்க்கரையையும் சிறுநீரில் தள்ளிவிடலாம். மூலிகை கஷாயத்தின் நுண்தாவர மருத்துவக் கூறுகள் மூலம் ரத்த சர்க்கரையை செல்களுக்குள் தள்ளிவிடலாம். வர்மம், அக்குபிரஷர் மூலம் நிணநீர் ஓட்டத்தைத் துரிதப்படுத்தி, ரத்தத்தில் தேங்கி நிற்கும் சர்க்கரையை செல்லுக்குள் தள்ளி, கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம்’ என்றெல்லாம் ஆங்காங்கே ஆக்கப்பூர்வ ஆய்வுகள் உலகெங்கும் வந்துகொண்டே இருப்பது, இனிப்பான செய்திதான். ஆனால் என்ன நடக்கிறது, என்ன நடக்க வேண்டும்? இனிப்பின் பக்கம் ஒரு சின்ன நடை போய் வரலாமா?

கட்டுரையாளர், சித்த மருத்துவர்

தொடர்புக்கு: herbsiddha@gmail.com

மருத்துவர் கு. சிவராமன், சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர். சித்த மருத்துவம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வருகிறார். சித்த மருத்துவம் தவிர,

நாம் இழந்து வரும் மரபுகள், பாரம்பரிய

உணவு ஆகியவற்றை மீட்பது தொடர்பாகவும் செயலாற்றி வருகிறார்.
நலம் தரும் நான்கெழுத்து 30: பயணத்தை அனுபவிப்போம்!

Published : 14 Apr 2018 10:46 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்



வாழ்க்கை என்பது புல்லின் கூர்நுனியில் விழாமல் சமநிலையில் இருக்கும் பனித் துளியன்றி வேறில்லை

- புத்தர்

வாழ்க்கையில் மிக முக்கியமான வார்த்தை எது எனப் பிரபலங்களை ஓர் இதழில் பேட்டி கண்டிருந்தார்கள். ‘நம்பிக்கை’, ‘ஊக்கம்’, ‘மகிழ்ச்சி’ எனப் பலரும் பல்வேறு விதமாக பதிலளித்திருந்தனர். இதுபோல் என்னைக் கேட்டால் என்ன சொல்வது என எண்ணிப் பார்த்ததன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.

மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த குரங்கு, பரிணாம வளர்ச்சியில் முன்னோக்கிச் சென்று கவிதையெல்லாம் எழுதும் அளவுக்கு வளர்ந்ததற்கு, மனிதனின் மூளையிலும் மனத்திலும் தோன்றிய அளப்பரிய மாறுதல்களே காரணம். குறிப்பாகக் கடந்த கால அனுபவங்களை ஆராய்ந்து தற்கால நிலையை உணர்ந்து எதிர்காலத்துக்குத் திட்டமிடும் பண்பு. இதுவே அறிவின் சாராம்சம்.

இந்த அறிவின் மூலமாக மனித இனம் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. வாழ்க்கையை மட்டுமல்ல சூழ்நிலையையும். ஆக, மனித இனம் தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தன்னைத் தானே செதுக்கும் சிற்பியாக உள்ளது.

முக்காலமும் வருந்துவது ஏன்?

எல்லா விஷயங்களையும் போன்றே அறிவே மனித இனத்தின் சாதனைகளுக்கு மட்டுமன்றிச் சோதனைகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு, பாதை, அடையும் வேகம் என எல்லாவற்றுக்கும் மனித இனமே முழுப் பொறுப்பு. அதுவும் பொருள்மயமான வாழ்க்கையே வழியாகிவிட்ட இக்காலகட்டத்தில் கடந்த காலத் தவறுகளை நினைத்துக் குற்ற உணர்வு அடைவது, நிகழ்கால நிலையை நினைத்து வருந்துவது, எதிர்காலத்தை நினைத்துப் பதற்றப்படுவது என முக்காலத்துக்கும் சேர்த்து மனித இனம் வருந்துகிறது. மன அழுத்தம் கூடுகிறது. மனம் பாதிக்கப்பட்டால் உடலும் பாதிப்படைகிறது.

இந்தப் பயணத்தின் இலக்கு என்ன? அதாவது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதற்கு மதரீதியாக, ஆன்மிகரீதியாக, அறிவியல்பூர்வமாக, தத்துவார்த்தமாக என எப்படிப் பதில் சொன்னாலும் எல்லாவற்றுக்கும் பொதுவானது மகிழ்ச்சியாக இருப்பதுதானே. அதாவது பயணத்தை அனுபவிப்பது. அப்படி மன அழுத்தத்துக்கு ஆளாகாமல், கீழே விழுந்துவிடாமல் பயணிக்க நாம் கைக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், சமநிலை.

சமநிலை என்பது மனரீதியான, உடல்ரீதியான, சமூகரீதியான காரணிகளின் சரியான சேர்க்கையே. ஆங்கிலத்தில் ‘பயோ சைக்கோ சோஷியல் மாடல்’ என இதை அழைப்பார்கள். அது சார்ந்த பல அம்சங்களைப் பற்றி இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளில் கண்டோம். அவற்றின் சாரம்சத்தை பார்ப்போம்.

ஓட்டமும் ஓய்வும்

முதலில் நமது இலக்கு என்ன என்பதைப் பார்ப்போம். வீடு, வாகனம், பதவி, அங்கீகாரம் போன்ற பொருள்ரீதியான இலக்குகள் வாழ்வில் முக்கியம். அதைவிட முக்கியம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பது. அவற்றைத் தொலைத்துவிட்டு இலக்கை நோக்கி ஓடுவது கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போன்றதே. இலக்கு நோக்கிய ஓட்டத்துக்கும் ஓய்வுக்கும் இடையே ஒரு சமநிலை தேவை.

அதேபோல் அந்த இலக்கை நோக்கிச் செல்ல முன்கூட்டியே திட்டமிட்டுத் துல்லியத்தை எதிர்பாத்து, அதன்படியே செயல்படுவதும் அவசியம். அதேநேரம் அத்திட்டத்தில் இல்லாதபடி நிகழ்வுகள் நடக்கும்போது குறைகளைச் சமாளித்துப் பயணிப்பது அதைவிட முக்கியம்.

காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் புதுமையை விரும்பும் பண்பு அவசியம். ஆனால், அது அதீதமாக மாறிக்கொண்டே இருக்கும் பொறுமையின்மையாக மாறிவிடாத சமநிலையும் தேவை. அளவான வேகமும் சோம்பலாகி விடாத பொறுமையும் தேவை.

நம்பிக்கையுடன் அணுகுவோம்

விதிமுறைகளையும் ஒழுங்கையும் பின்பற்றுவதில் கண்டிப்பு அவசியம். ஆனால், அதுவே மழை பெய்யும்போது செடிகளுக்கு நீருற்றுவதுபோல் அர்த்தமற்றதாகாமல் வளைந்து கொடுப்பதும் அவசியம்.

நம்பிக்கையுடன் எதையும் அணுகுவது இன்றியமையாதது. அதேநேரம் எல்லோரையும் அப்படியே நம்பிவிடாமல் எதிர்மறையாக நடந்தால் என்னாவது என சில நேரம் குறைந்தபட்ச சந்தேகிப்பும் தேவைப்படுகிறது.

கோபம் நம்மைக் குப்புறத் தள்ளிக் குழிபறிக்கும் எதிரி என்பதை உணரும் அதேநேரம், தேவையான இடங்களில் ‘ரவுத்திரம் பழ’கவும் தெரிந்திருக்க வேண்டும். மிகையான அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம், தீயனவற்றைக் கண்டு தீயினும் மேலாக அஞ்சும் பண்பும் வேண்டும்.

வாழ்க்கையின் முக்கியமான சொல்

உடல்ரீதியான சமநிலை எனப் பார்த்தால் உடலைப் பேணுதல் இன்றியமையாதது . அதுவே உடலைப் பற்றிய மிகையான கற்பனையானால் அதுவே தனி நோயாக மாறிவிடுகிறது. உணவு, தூக்கம் என உடல்ரீதியான பல கூறுகள் மிகினும் குறையினும் நோய் செய்யும்.

சமூகத்தைப் பற்றி அக்கறை இன்றி இருப்பது, அளவுக்கு அதிகமாகச் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுவது என்ற இந்த இரண்டுமே இல்லாத சமநிலை தேவை. அது போன்றே பிறரைக் கண்டிப்பதற்கும் மன்னிப்பதற்கும் இடையேயான சமநிலையும் அவசியம்.

முக்கியமாகப் பல விஷயங்களில் மாற்ற முடிந்ததை எப்படியாவது மாற்ற முயற்சிப்பதும், முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளவும் ‘சமநிலை’ என்னும் மந்திரச் சொல்லே என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முக்கியமான சொல். அதுவே நலம்தரும் நான்கெழுத்து. ரொம்பவும் சுருக்கமாக இல்லாமலும் நீட்டிக்கொண்டே போகாமலும் சமநிலையோடு இக்கட்டுரைத் தொடரை முடிக்கிறேன்.

(நிறைந்தது)

கட்டுரையாளர்,

மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com
டிஜிட்டல் போதை 30: அந்த மாத்திரை வேண்டுமா?

Published : 14 Apr 2018 10:52 IST

வினோத் ஆறுமுகம்

 





சென்ற வாரம், செல்ஃபி குறித்துப் பார்த்தோம். அது ஏற்படுத்தும் மனச்சோர்வு பற்றித் தெரியுமா? பதின் வயதினர் தம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில், அவர்களைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பார்கள். அதேபோல் தன் உடல், தோற்றம் போன்றவற்றில் அதிக அக்கறை செலுத்துவார்கள். தம் தோற்றத்தை மேம்படுத்திக் காட்ட எந்த எல்லைக்கும் செல்வார்கள். சமூகத்தின் மத்தியில் தன் தோற்றம் எவ்வாறு எடுத்துக்கொள்ளபடுகிறது என்பதைப் பொறுத்து அவர்களின் மனநிலையில் மாற்றம் இருக்கும்.

பதின் வயதினரின் இந்த வளர்ச்சி நிலையில்தான் செல்ஃபி பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஒரு செல்ஃபி எடுத்து, அதைப் பகிர்ந்துவிட்டபின் அதற்கு வரும் கருத்துகள் நேரடியாக அவர்கள் மனநிலையில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தன் பதிவுக்குத் தொடர்ந்து நேர்மறையான கருத்துகள் வந்தால், அவர்கள் மெல்ல நார்ஸிஸத்தை நோக்கி நகர்வார்கள். ‘நார்ஸிஸம்’ என்பது தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு வித மனநோய். அதிகப்படியான எதிர்மறை கருத்துகள் வந்தால், தன் உடல் மீதும், தன் சுயத்தின் மீதும் வெறுப்புக்கொள்வது, மனச்சோர்வடைவது, மன உளச்சலுக்கு ஆளாவது என மீண்டும் மனநோயின் வசம் சிக்கிக்கொள்கிறார்கள். செல்ஃபி மோகம் ஏற்படுத்தும் உளவியல் பிரச்சினைகளைப் பற்றி நடந்த பல ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. ஆம், எப்படிப் பார்த்தாலும் செல்ஃபி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான ஆயுதம்தான். ஆனால், எந்தப் பக்கத்தை நல்லபடியாகப் பயன்படுத்தினால், அது நல்ல ஆயுதமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

டிஜிட்டல் எனும் மாத்திரை

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ‘டிஜிட்டல் உலகம்’ என்பதுதான் எதிர்காலம். அதற்குப் பின்னால் பெரும் வணிகம் இருக்கிறது. அது தொடர்பான பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் சந்தையைக் கட்டுப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யும். அவர்களை எதிர்த்துப் போராட நமக்கு விழிப்புணர்வு தேவை. எனவே அதை முன்னிட்டு, கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் துறையைப் பற்றியும் அதனால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன்.

வீடியோ கேம்கள் முதல் ‘கூகுள் ஹோம்’ வரையிலான இதர டிஜிட்டல் சாதனங்கள் நம் வாழ்வை மேம்படுத்தவும் செய்கின்றன, கொஞ்சம் அசந்தால் நம் வாழ்க்கையைச் சூறையாடவும் செய்கின்றன. நாம்தான் அதன் சாதக பாதகங்களை நன்கு அறிந்து மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.

ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு ஒரு மாத்திரை கொடுக்கிறார்கள். அந்த மாத்திரயை உண்டால் உங்களுக்கு உற்சாகம் பொங்கும், நீங்கள் நினைத்த காரியத்தை எல்லாம் செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். ஆனால் ஒன்று, அந்த மாத்திரையின் பின்விளைவுகளை இதுவரை சோதித்துப் பார்க்கவில்லை என்கிறார்கள். அந்த மாத்திரையை உண்டால் அதன் உடனடிப் பலனை பட்டியலிடுபவர்கள், அதன் நீண்டகால பின்விளைவுகளைப் பற்றித் தெரியாதவர்கள். நீங்கள் அந்த மாத்திரையை உண்பீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கும் அந்த மாத்திரயைக் கொடுப்பீர்களா?அந்த மாத்திரைதான் டிஜிட்டல் கருவிகள்.

விவாதித்தபடி இருப்போம்

இன்றுவரை நடந்த எந்த ஆய்வுகளை எடுத்துக்கொண்டாலும், டிஜிட்டல் உலகம் மனிதர் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி ஆதரவாகவோ எதிராகவோ வாதாடப் போதுமான அறிவியல்பூர்வமான முடிவுகள் இல்லை. இருக்கும் அனைத்து ஆய்வுகளும் தொடக்க நிலையிலேயே உள்ளன. நாம் இப்போது கண்கூடாகப் பார்ப்பது இன்றைய நன்மை தீமைகள் மட்டும்தான். சில பத்து ஆண்டுகளில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடியாது.

நம்மிடம் இருப்பது பரிசோதனைகளுக்கு உட்படாத மாத்திரை. உடனடி பலன்களைக் கருத்தில் கொள்ளாமல், நீண்டகால நோக்கில் விழிப்புடன் இதை அணுகுவதே நலம்.

இந்தத் தொடர் முடிவுற்றதாக நான் கருதவில்லை. ஒரு விவாதத்தின் தொடக்கமாகக் கருதுகிறேன். வருங்காலத்தில் டிஜிட்டல் உலகத்தைப் பற்றிய விவாதங்கள் தொடரவே செய்யும். விவாதித்தபடி இருப்போம். தற்காலிகமாக ஒரு சிறு இடைவெளி.

(நிறைந்தது)

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்

தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com
படிப்போம் பகிர்வோம்: புத்தக வடிவில் குடும்ப மருத்துவர்!

Published : 21 Apr 2018 10:20 IST

வா. ரவிக்குமார்




நோய் குறித்த விழிப்புணர்வு, நோய் குறித்த உண்மை நிலவரம், நோய் வரும்முன் காக்கும் வழி – இந்த மூன்று புள்ளிகளையும் இணைக்கும் டாக்டர் கு. கணேசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘செகண்ட் ஒப்பினியன்’ புத்தகம்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராகத் தினம் தினம் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகள், தண்ணீருக்கான தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என எந்த விஷயத்தையும் ஒரு செய்தியாகக் கடந்துசென்றுவிடுபவர்கூட, தனக்கு வரும் ஒற்றைத் தலைவலிக்கு வீட்டையே இரண்டுபடுத்திவிடுவார். நரம்பு சம்பந்தமான பிரச்சினையாக இருக்குமா, ‘பிரைன் ட்யூமராக’ இருக்குமா என்றெல்லாம் பல சோதனைகளில் இறங்கிவிடுவார்.

இப்படிப்பட்டவர்களுக்கு நேர் எதிரானவர்களும் இருக்கிறார்கள். நாற்பது, ஐம்பது வயதுவரை சாதாரண கண் பரிசோதனையைக் கூடச் செய்துகொள்ளாமல் இருப்பார்கள். தொடக்கத்தில் எளிமையான சிகிச்சையில் சரியாகிவிடும் கண் பிரச்சினையைக் கவனிக்காமல், கண் பார்வையையே போக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடுவார்கள்.

புத்தக மருத்துவர்

மேற்சொன்ன இரண்டு நிலையில் இருப்பவர்களுக்கு இடைப்பட்ட சிலர் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ச்சியாகத் தங்களின் குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறுபவர்கள். ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் குடும்ப மருத்துவர், அந்தக் குடும்பத்தினருக்கு இருக்கும் பிரச்சினைகளைத் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்ற சிறப்பு மருத்துவர்களை அணுகுவதற்கு வழி ஏற்படுத்தித் தருவார்.

இந்த அணுகுமுறையால், குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெறும் நோயாளிக்கு நோய் குறித்த தெளிவான புரிதலும், அதற்கான சிகிச்சை முறைகளும், சிகிச்சை அளிக்கும் நிபுணர் குறித்த விவரங்களும் தெரியவரும். குடும்ப மருத்துவர் என்னும் முறையே தேய்ந்துவிட்ட இன்றைய சூழலில், நோயாளிகளின் தடுமாற்றத்தைப் போக்குவதற்கு இந்த ‘செகண்ட் ஒப்பினியன்’ நூல் பெரிதும் உதவும். ஆம், இதை புத்தக வடிவில் உள்ள குடும்ப மருத்துவர் என்று சொல்லலாம்.

நோய்களைப் புரிந்துகொள்ள

இன்றைக்குப் பெரிதும் ஆபத்தான நோயாகக் கருதப்படும் இதய நோய் குறித்த பல தகவல்களும் அதற்கான சிகிச்சை முறைகளையும் பற்றி இந்நூலின் பல கட்டுரைகளில் விரிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. உயர் ரத்தஅழுத்தத்தை எளிதாக எப்படிச் சமாளிக்கலாம், கணையத்தைக் காப்பதன் மூலம் முழு உடல் ஆரோக்கியத்தையும் எப்படிப் பெறலாம், நெஞ்சுவலி வருவதற்கு நிமோனியாவும் எப்படிக் காரணமாகிறது, அலட்சியமாகக் கருதப்படும் சிறுநீர்த் தொற்று சிறுநீரகத்தை எப்படிப் பாதிக்கும் என்பது போன்ற கட்டுரைகளைப் படித்தால் நிச்சயம் நோய் குறித்த சரியான புரிதலும், சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பதன்மூலம் நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் தைரியமும் வரும். புற்று நோய், நீரிழிவு நோய், ஹெர்னியா, மூல நோய் உள்ளிட்ட பல நோய்களின் தன்மைகளை விளக்கும் 42 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

தனக்குத் தெரிந்ததை எல்லாம் எழுதிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இடையில், வாசகருக்கு எது தேவையோ அதை எழுதுபவர் டாக்டர் கு. கணேசன். மருத்துவத் துறையோடு எழுத்துத் துறையிலும் தனக்கிருக்கும் நெடிய அனுபவத்தால் ஒவ்வொரு கட்டுரையையும் படிப்பவருக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டு சேர்த்து, இந்த நூலிலும் தமது நோக்கத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். வாசிப்பு அனுபவத்தில் இந்த ‘செகண்ட் ஒபினியன்’ நோயைக் குறித்த ‘ஃபர்ஸ்ட் ஒபினியனை’ தெளிவாக அளித்துவிடுகிறது என்பது நூலின் சிறப்பு.

செகண்ட் ஒப்பினியன்

டாக்டர் கு. கணேசன்

சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை – 600 004. தொடர்புக்கு: 044-42209191

NEWS TODAY 25.12.2025