Monday, April 30, 2018


வெளிநாட்டு நன்கொடைக்கு கணக்கு எங்கே?
தொண்டு நிறுவனங்களுக்கு அரசு கிடுக்கிப்பிடி 


dinamalar 30.04.2018

புதுடில்லி:'நாட்டில் உள்ள, 3,292 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடைகளுக்கு, இன்னும், வரவு - செலவு கணக்கை சமர்ப்பிக்கவில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.




வரவு - செலவு

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தொண்டு நிறு வனங்கள் மற்றும் கல்வி நிறுவனங் களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. சமூகப் பணி களில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங் கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங் களுக்கு, ஆண்டு தோறும்,வெளிநாடுகளில் இருந்து, கோடிக்கணக்கில் நன்கொடை

குவிகிறது. இது தொடர்பான வரவு - செலவு கணக் குகளை, ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி.

கணக்கு தாக்கல் செய்யாதவர்கள்மீது, வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள, 3,292 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், 2011 - 12 முதல், 2016 - 17 வரையி லான நிதி ஆண்டில் வசூல் செய்த, வெளிநாட்டு நன்கொடைக்கு, இதுவரை கணக்கு காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 'இந்த நோட்டீஸ் பெறப்பட்ட, 15 நாட்களுக்குள், தங்கள்கணக்குகளை இணையம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்' என, அதில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

இன்போசிஸ் பவுண்டேஷன், சென்னை கிறிஸ்தவ

கல்லுாரி, ஐ.ஐ.டி., - சென்னை மற்றும் டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை, டில்லி பல்கலை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிகழகம், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் பல்கலைக் கழகங்கள் உட்பட, ஏராளமான முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு, உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஐ.ஐ.டி., மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் ஆகியவை, வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வராது என்ப தால், தங்கள் நிறுவனம், வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என, பதில் அளித்துள்ளன.
  • ஏப்ரல் 30 (தி) கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல்
  • மே 01 (செ) மே தினம்
  • மே 04 (வெ) அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
  • மே 28 (தி) அக்னி நட்சத்திரம் முடிவு
  • மே 28 (தி) வைகாசி விசாகம்
  • மே 29 (செ) காஞ்சி பெரியவர் பிறந்த தினம்

ரூ.2200 மதிப்புடைய சலுகையை அறிவித்த ஜியோ!!


இந்தியாவில் பழைய டாங்கிள்களை வழங்கி புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் பெறுவோருக்கு ரிலையன்ஸ் புதிய சலுகைகளை வழங்குகிறது.

 அந்த வகையில் பழைய டாங்கிள்களை கொடுத்து புதிய ஜியோஃபை போர்டபிள் ஹாட்ஸ்பாட் வாங்குவோருக்கு புதிய வைபை ரவுட்டர் மற்றும் ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

ஜியோஃபை எக்ஸ்சேஞ்ச் குறுகிய கால சலுகையை பெற என்ன செய்ய வேண்டும்?

- ஜியோஃபை போர்டபிள் வைபை ரவுட்டரை ரூ.999 செலுத்தி வாங்க வேண்டும்

- ஜியோ பிரைம் ரூ.99 மற்றும் ரூ.198 அல்லது ரூ.299 செலுத்தி சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய வேண்டும்

- உங்களின் பழைய ஜியோ அல்லாத டாங்கிளை ஏதேனும் ஜியோஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் வழங்க வேண்டும்

- பழைய ஜியோ அல்லாத டாங்கிள் அல்லது மோடெமின் சீரியல் நம்பரை வழங்கி, புதிய ஜியோஃபை MSISDN நம்பரை பெற வேண்டும்

- உங்களுக்கான கேஷ்பேக் உடனடியாக மைஜியோ கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்

ரூ.2200 மதிப்புடைய கேஷ்பேக் ரூ.50 மதிப்புடைய மொத்தம் 44 வவுச்சர்களாக வழங்கப்படும், இவற்றை ரூ.198 மற்றும் ரூ.299 ரீசார்ஜ் செய்ய மட்டும் பயன்படுத்தலாம்.

கடந்த ஆண்டு அறிமுகமான ஜியோஃபை ரவுட்டர் அதிக வரவேற்பை பெற்றது. கடந்த ஆணஅடு செப்டம்பரில் வெளியான தகவல்களில் டேட்டா கார்டு சந்தையில் ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஜியோஃபை மட்டும் 91% பங்குகளை பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இலவச டேட்டா வழங்கியதன் மூலம் அதிக பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.

போர்டபிள் ஹாட்ஸ்பாட் சாதனம் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே சமயத்தில் வைபை வசதி கொண்டு பத்து சாதனங்களிலும், ஒரு சாதனத்திற்கு யுஎஸ்பி மூலம் இணைத்து பயன்படுத்தும் வசதியை ஜoியோஃபை ஹாட்ஸ்பாட் வழங்குகிறது.

இதில் உள்ள OLED டிஸ்ப்ளே நெட்வொர்க் சிக்னல், பவர், வைபை ஸ்டேட்டஸ் மற்றும் இதர தகவல்களை வழங்குகிறது. இந்த சாதனம் கொண்டு அதிவேக 4ஜி இன்டர்நெட் பயன்படுத்த முடியும். இத்துடன் வைபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்க முடியும். மேலும் ஹெச்டி வாய்ஸ் கால், வீடியோ கால், மெசேஜிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்குகிறது.
நலம் தரும் நான்கெழுத்து 30: பயணத்தை அனுபவிப்போம்!

Published : 14 Apr 2018 10:46 IST
 
டாக்டர் ஜி. ராமானுஜம்





வாழ்க்கை என்பது புல்லின் கூர்நுனியில் விழாமல் சமநிலையில் இருக்கும் பனித் துளியன்றி வேறில்லை

- புத்தர்

வாழ்க்கையில் மிக முக்கியமான வார்த்தை எது எனப் பிரபலங்களை ஓர் இதழில் பேட்டி கண்டிருந்தார்கள். ‘நம்பிக்கை’, ‘ஊக்கம்’, ‘மகிழ்ச்சி’ எனப் பலரும் பல்வேறு விதமாக பதிலளித்திருந்தனர். இதுபோல் என்னைக் கேட்டால் என்ன சொல்வது என எண்ணிப் பார்த்ததன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.

மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த குரங்கு, பரிணாம வளர்ச்சியில் முன்னோக்கிச் சென்று கவிதையெல்லாம் எழுதும் அளவுக்கு வளர்ந்ததற்கு, மனிதனின் மூளையிலும் மனத்திலும் தோன்றிய அளப்பரிய மாறுதல்களே காரணம். குறிப்பாகக் கடந்த கால அனுபவங்களை ஆராய்ந்து தற்கால நிலையை உணர்ந்து எதிர்காலத்துக்குத் திட்டமிடும் பண்பு. இதுவே அறிவின் சாராம்சம்.

இந்த அறிவின் மூலமாக மனித இனம் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. வாழ்க்கையை மட்டுமல்ல சூழ்நிலையையும். ஆக, மனித இனம் தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தன்னைத் தானே செதுக்கும் சிற்பியாக உள்ளது.

முக்காலமும் வருந்துவது ஏன்?

எல்லா விஷயங்களையும் போன்றே அறிவே மனித இனத்தின் சாதனைகளுக்கு மட்டுமன்றிச் சோதனைகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு, பாதை, அடையும் வேகம் என எல்லாவற்றுக்கும் மனித இனமே முழுப் பொறுப்பு. அதுவும் பொருள்மயமான வாழ்க்கையே வழியாகிவிட்ட இக்காலகட்டத்தில் கடந்த காலத் தவறுகளை நினைத்துக் குற்ற உணர்வு அடைவது, நிகழ்கால நிலையை நினைத்து வருந்துவது, எதிர்காலத்தை நினைத்துப் பதற்றப்படுவது என முக்காலத்துக்கும் சேர்த்து மனித இனம் வருந்துகிறது. மன அழுத்தம் கூடுகிறது. மனம் பாதிக்கப்பட்டால் உடலும் பாதிப்படைகிறது.

இந்தப் பயணத்தின் இலக்கு என்ன? அதாவது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதற்கு மதரீதியாக, ஆன்மிகரீதியாக, அறிவியல்பூர்வமாக, தத்துவார்த்தமாக என எப்படிப் பதில் சொன்னாலும் எல்லாவற்றுக்கும் பொதுவானது மகிழ்ச்சியாக இருப்பதுதானே. அதாவது பயணத்தை அனுபவிப்பது. அப்படி மன அழுத்தத்துக்கு ஆளாகாமல், கீழே விழுந்துவிடாமல் பயணிக்க நாம் கைக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், சமநிலை.

சமநிலை என்பது மனரீதியான, உடல்ரீதியான, சமூகரீதியான காரணிகளின் சரியான சேர்க்கையே. ஆங்கிலத்தில் ‘பயோ சைக்கோ சோஷியல் மாடல்’ என இதை அழைப்பார்கள். அது சார்ந்த பல அம்சங்களைப் பற்றி இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளில் கண்டோம். அவற்றின் சாரம்சத்தை பார்ப்போம்.

ஓட்டமும் ஓய்வும்

முதலில் நமது இலக்கு என்ன என்பதைப் பார்ப்போம். வீடு, வாகனம், பதவி, அங்கீகாரம் போன்ற பொருள்ரீதியான இலக்குகள் வாழ்வில் முக்கியம். அதைவிட முக்கியம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பது. அவற்றைத் தொலைத்துவிட்டு இலக்கை நோக்கி ஓடுவது கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போன்றதே. இலக்கு நோக்கிய ஓட்டத்துக்கும் ஓய்வுக்கும் இடையே ஒரு சமநிலை தேவை.

அதேபோல் அந்த இலக்கை நோக்கிச் செல்ல முன்கூட்டியே திட்டமிட்டுத் துல்லியத்தை எதிர்பாத்து, அதன்படியே செயல்படுவதும் அவசியம். அதேநேரம் அத்திட்டத்தில் இல்லாதபடி நிகழ்வுகள் நடக்கும்போது குறைகளைச் சமாளித்துப் பயணிப்பது அதைவிட முக்கியம்.

காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் புதுமையை விரும்பும் பண்பு அவசியம். ஆனால், அது அதீதமாக மாறிக்கொண்டே இருக்கும் பொறுமையின்மையாக மாறிவிடாத சமநிலையும் தேவை. அளவான வேகமும் சோம்பலாகி விடாத பொறுமையும் தேவை.

நம்பிக்கையுடன் அணுகுவோம்

விதிமுறைகளையும் ஒழுங்கையும் பின்பற்றுவதில் கண்டிப்பு அவசியம். ஆனால், அதுவே மழை பெய்யும்போது செடிகளுக்கு நீருற்றுவதுபோல் அர்த்தமற்றதாகாமல் வளைந்து கொடுப்பதும் அவசியம்.

நம்பிக்கையுடன் எதையும் அணுகுவது இன்றியமையாதது. அதேநேரம் எல்லோரையும் அப்படியே நம்பிவிடாமல் எதிர்மறையாக நடந்தால் என்னாவது என சில நேரம் குறைந்தபட்ச சந்தேகிப்பும் தேவைப்படுகிறது.

கோபம் நம்மைக் குப்புறத் தள்ளிக் குழிபறிக்கும் எதிரி என்பதை உணரும் அதேநேரம், தேவையான இடங்களில் ‘ரவுத்திரம் பழ’கவும் தெரிந்திருக்க வேண்டும். மிகையான அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம், தீயனவற்றைக் கண்டு தீயினும் மேலாக அஞ்சும் பண்பும் வேண்டும்.

வாழ்க்கையின் முக்கியமான சொல்

உடல்ரீதியான சமநிலை எனப் பார்த்தால் உடலைப் பேணுதல் இன்றியமையாதது . அதுவே உடலைப் பற்றிய மிகையான கற்பனையானால் அதுவே தனி நோயாக மாறிவிடுகிறது. உணவு, தூக்கம் என உடல்ரீதியான பல கூறுகள் மிகினும் குறையினும் நோய் செய்யும்.

சமூகத்தைப் பற்றி அக்கறை இன்றி இருப்பது, அளவுக்கு அதிகமாகச் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுவது என்ற இந்த இரண்டுமே இல்லாத சமநிலை தேவை. அது போன்றே பிறரைக் கண்டிப்பதற்கும் மன்னிப்பதற்கும் இடையேயான சமநிலையும் அவசியம்.

முக்கியமாகப் பல விஷயங்களில் மாற்ற முடிந்ததை எப்படியாவது மாற்ற முயற்சிப்பதும், முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளவும் ‘சமநிலை’ என்னும் மந்திரச் சொல்லே என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முக்கியமான சொல். அதுவே நலம்தரும் நான்கெழுத்து. ரொம்பவும் சுருக்கமாக இல்லாமலும் நீட்டிக்கொண்டே போகாமலும் சமநிலையோடு இக்கட்டுரைத் தொடரை முடிக்கிறேன்.

(நிறைந்தது)

கட்டுரையாளர்,

மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com

NBE issues notice of Revised cut off of NEET PG 2018

by Admin | Apr 27, 2018 | NBE, NEET PG

National board of examinations released revised cut off of the NEET-PG 2018 today after health Minister JP Nadda tweeted about the reduction of cut off in the morning. Medical reporters reported this story today (Click here). The notification reads as under

Subject: Revised Cut-Off scores for NEET-PG 2018 • The result of NEET-PG 2018 has been declared by NBE on 23rd January 2018. • In accordance with Ministry of Health & Family Welfare, Government of India notification no. V.11025/05/2017-MEP dated 27th April, 2018, the minimum qualifying percentile has been revised for NEET-PG 2018 as follows:


There is no change in NEET-PG 2018 Rank of all the appeared candidates which has  already been indicated to the candidates through their score cards. MEDICAL REPORTERS
MCI Amends MD/MS Pass Formula

by Manish Chaturvedi | Apr 15, 2018 



An amendment by the Medical Council of India (MCI) in the Postgraduate Medical Education Regulations has left over 1,000 doctors, pursuing their postgraduate medical courses (MD/MS, MCh and PG Diplomas) in different medical colleges in the state a bit worried.

Though the MCI sought to settle a three-year-old controversy regarding the pass marks in PG courses with this amendment, PG students said the amendment would make clearing the PG exams more difficult for them. Earlier, obtaining a minimum of 50 percent marks in theory as well as practical separately were mandatory for passing the PG exams. Exams for MS, MD, MCh are held at the end of three academic years (six academic terms) and for the diploma at the end of two academic years.

Now, in its amended regulations (Postgraduate Medical Education Regulations, 2018), the MCI with the sanction of the Central Government has announced that besides getting minimum 50 per cent marks cumulatively in all four papers for degree examinations and three papers in diploma examinations, a student has to obtain no less than 40 per cent marks in each theory paper. Obtaining of 50 percent marks in practical examinations will be mandatory for clearing the examinations as a whole in the said degree or diploma examination, read the amended regulation.

Three years ago, two letters of the MCI regarding the pass marks in PG courses had stirred a controversy in Punjab. On January 28, 2015, and February 11, 2015, the MCI had written two letters to all medical universities and colleges in the country. According to these letters, every PG candidate had to get minimum 50 percent marks cumulatively in all four theory papers and not less than 40 percent marks in each paper to clear the exams. On the basis of these letters, Baba Farid University of Health Sciences (BFUHS) in Punjab introduced this formula in May/June 2016-PG exams. As many as 126 out of the total 480 MD/MS and post-graduate diploma courses’ medical students in the six medical colleges in the state flunked the exam that time. Forty-three of these students had approached the Punjab and Haryana High Court, challenging the new “pass formula”.

Students claimed that the university had violated the Postgraduate Medical Education Regulations by declaring all students as failed that acquired 50 per cent marks in aggregate but could not achieve 40 per cent marks in each paper.While the BFUHS relied upon the MCI’s January and February 2015, letters, the students claimed that these letters were not made part of the Regulation. So many of these students get the benefit of this lacuna and they were declared as pass on the basis of their aggregate 50 percent marks.Now filling this lacuna, the MCI has amended the regulations on April 5 and informed all universities to stick to the newly amended regulation. Now besides getting 50 percent aggregate marks in all four papers in MD/MS, acquiring minimum 40 per cent marks in each paper are mandatory to make a specialist in the medical profession.
High Court directs man to pay maintenance 

Staff Reporter 
 
Madurai, April 30, 2018 00:00 IST


The Madurai Bench of Madras High Court has directed a father of two daughters to pay monthly maintenance to his family as directed by a lower court.

Justice S.Vimala directed the petitioner, who had filed a revision petition, to pay a monthly maintenance of Rs. 7,000 to his wife and Rs. 5,000 each to his two daughters, one of whom is suffering from cancer. The court took cognisance of the fact that the petitioner’s mother had also sought maintenance from her son and a lower court had directed him to pay Rs. 3,000.

The court directed the Managing Director of TNSTC (Coimbatore), where the petitioner, M.Velusamy, is employed, to deduct Rs. 17,000 from his salary and deposit Rs. 7,000 to his wife and Rs. 5,000 each to his daughters in their respective savings bank accounts.

If he was to seek a voluntary retirement, then a notice be sent to his family before his retirement benefits were disbursed.

The petitioner should not decline the maintenance to be paid towards his wife and daughters on the ground that he had to look after his mother also.

The court observed that the petitioner had produced a made-up salary slip to evade payment of maintenance to his family.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...