Sunday, September 16, 2018

மாநில செய்திகள்

பிளஸ்-2 மார்க் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு அறிவிப்பு





பிளஸ்-2 பொதுத்தேர்வு 600 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என்றும், அந்த மதிப்பெண்களின் அடிப்படையில்தான் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2018 05:30 AM

சென்னை,

தமிழக கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு செய்து வருகிறது. இதுவரை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று இருந்தது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து பிளஸ்-1 வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு அதற்கான பாடத்தை நடத்தாமல், அப்போதே பிளஸ்-2 வகுப்புக்கான பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்த தொடங்கிவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வை அறிமுகம் செய்ய பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டது. கடந்த கல்வியாண்டு முதல் அந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டது.

அதாவது, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200 மதிப்பெண்கள் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு, பிளஸ்-1-க்கு 600 மதிப்பெண்களும், பிளஸ்-2-க்கு 600 மதிப்பெண்களும் என்று பிரிக்கப்பட்டது.

பிளஸ்-2 முடித்து மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களை சேர்த்து கணக்கில் கொள்ளப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. ஆனால் தற்போது அந்த முடிவை அரசு மாற்றிக்கொண்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு எடுக்கும் மார்க்கின் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், பிளஸ்-1 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களுக்கு தனித்தனியே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அரசாணை திருத்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.

திருத்தப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு 600 மதிப்பெண்கள் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு 600 மதிப்பெண்கள் என பதிவு செய்து தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பிளஸ்-1 அல்லது பிளஸ்-2 பொதுத்தேர்விலோ அல்லது 2 பொதுத்தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் நேரத்தில், அவ்விரு பொதுத்தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

மாணவர்களின் நலன் கருதி, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் உயர்கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-

10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 3 பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டி இருக்கிறது. இதற்கு முன்பு பிளஸ்-1 பொதுத்தேர்வு இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அதுவும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டு இருக்கிறது.

இப்படியாக தொடர்ந்து தேர்வு என்பதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200 மதிப்பெண்கள் என்றிருப்பதை 600 மதிப்பெண்களாக குறைத்திருக்கிறோம். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் தங்களுக்குரிய 600 மதிப்பெண்களிலேயே உயர்கல்விக்கு செல்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எனவே இனி பிளஸ்-2 மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல 1,200 மதிப்பெண்கள் தேவையில்லை, 600 மதிப்பெண்கள் போதுமானது. இதனால் மாணவர்களும் உற்சாகம் அடைவார்கள். கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும். அதேபோல், கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு எழுதியவர்களுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் எந்த தடையும் இல்லை. பிளஸ்-1 தேர்வு தொடர்ந்து நீடிக்கும். மேலும் பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தால் அந்த பாடங்களை எழுதிக்கொண்டே பிளஸ்-2 வகுப்பில் தொடர்ந்து படிக்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் 413 மையங்களில் ‘ஸ்பீடு’ நிறுவனம் மூலம் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி தொடங்கி உள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சிக்கு 23 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா? இல்லையா? என்ற குழப்பம் நிலவி வந்ததால் குறைந்த அளவு மாணவர்களே சேர்ந்தனர். இதனால் இதில் 1,475 மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். அதில் 27 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து உள்ளனர்.

சென்ற ஆண்டு தமிழ் மொழியாக்கத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் நீட் தேர்வு கேள்விகளில் குழப்பம் ஏற்பட்டது. இந்த ஆண்டு அதுபோன்ற குறைபாடுகள் இல்லாத வகையில் மாநில அரசு இணைந்து செயல்படும்.

நீட் தேர்வுக்கான மையங்களுக்கு மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதியில்லாத காரணத்தை காட்டி சென்ற ஆண்டு வேறு மாநிலங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இருக்காது. மாநிலத்தில் நீட் தேர்வு எழுத எத்தனை மையங்கள் வேண்டுமானாலும் அமைத்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெண்களிடம் கொள்ளை தொடரும் சம்பவங்களால் பயணிகள் அச்சம்




ஆந்திராவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெண்களிடம் கொள்ளை அரங்கேறியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2018 04:45 AM

சென்னை,

ஆந்திராவை சேர்ந்தவர் சுதீஷ் என்பவரின் மனைவி கீதா(வயது 22). இவர் நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் புறப்பட்டார். ரெயில் ஓங்கோல் நிலையத்தில் நேற்று அதிகாலை நின்றபோது, தூங்கிக்கொண்டிருந்த கீதாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை மர்ம ஆசாமி ஒருவர் ஜன்னல் வழியாக பறிக்க முயற்சித்தார்.

சுதாரித்து கொண்ட கீதா சங்கிலியை காப்பாற்ற மர்ம ஆசாமியிடம் போராடினார். இந்த போராட்டம் வலுக்கவே சங்கிலியை இனி பறிக்க வாய்ப்பில்லை என மர்ம ஆசாமி நினைத்தார். கிடைத்த வரை லாபம் என்ற வகையில் சங்கிலியை விட்டு, கீதா அருகே இருந்த கைப்பையை லபக்கென எடுத்துக்கொண்டு மர்ம ஆசாமி ஓட்டம் பிடித்தார். இந்த கைப்பைக்குள் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் சம்பவங்கள்

அதே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அதிகாலை நடந்த இன்னொரு சம்பவத்தில் தஞ்சாவூரை சேர்ந்த மைதிலி(35) என்பவரிடம் 7 பவுன் தங்க சங்கிலி மர்ம நபரால் பறிக்கப்பட்டது. இந்த சம்பவமும் ஓங்கோலில் ரெயில் நிலையத்திலேயே அரங்கேறியது. மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்குகள் ஓங்கோல் ரெயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டது.

சமீபகாலமாக ஓங்கோல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ரெயில் கொள்ளைகள் அதிகளவில் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட சிலர் தான் இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த 10 நாட்களில் சென்னை வந்த 2 பயணிகளிடம் பல லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணங்களை இந்த பகுதியில் மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இந்த நிலையில் 3-வது முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால் ரெயில் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்னர் அந்த ரெயில் திருட்டில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை பிடித்து தண்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்கக்கூடாது குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி எதிர்ப்பு





ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்கக்கூடாது குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி எதிர்ப்பு

பதிவு: செப்டம்பர் 16, 2018 05:30 AM

தாம்பரம்,

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்க ராஜீவ் கொலையின்போது கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி பாலசரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், ராஜீவ் கொலையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுரு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இவரது மனைவி பாலசரஸ்வதி சென்னை பல்லாவரத்தில் வசித்துவருகிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் களை விடுவிக்கக்கூடாது என அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ நிருபருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய கணவர் ராஜகுரு பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசார கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்றார். அங்கு விடுதலை புலிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எனது கணவர் ராஜகுருவும் கொல்லப்பட்டார்.

எனது கணவர் உடலை பொட்டலமாக எங்களிடம் கொடுத்தார்கள். என் வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்த என் கணவரை இழந்து தவித்தேன். என் 2 பிள்ளைகள் தந்தையின் உடலை கூட பார்க்கவில்லை. அந்த அளவிற்கு பொட்டலமாக என் கணவர் உடலை கொடுத்தார்கள். என் குழந்தைகள் அழுது கதறினர். அதன்பிறகு என் குடும்பம் எத்தகைய கஷ்டத்தை அனுபவித்தது என்பது சொல்லிமாளாது.

என் குடும்பத்தின் நிலை யாருக்கும் வரக்கூடாது. அந்த அளவிற்கு நாங்கள் என் கணவரை இழந்த பிறகு கஷ்டப்பட்டோம். நாங்களும் தமிழர்கள் தான். எந்த தலைவரும் எங்கள் வீட்டிற்கு வந்து கேட்டதில்லை. என்னைப்போல தான் அந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அத்தனை குடும்பங்களும் வேதனைகளை அனுபவித்தது.

இன்றைக்கு ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என அனைத்து தலைவர்களும் பேசி வருகிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் அப்பாவிகளா. ராஜீவ் காந்தி கொலையின்போது அங்கு செயல்பட்ட விடுதலை புலிகள் ஒற்றைகண் சிவராசன், தாணு ஆகியோருடன் இப்போது சிறையில் உள்ளவர்கள் அந்த பொதுக்கூட்ட இடத்தில் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது. அவர்கள் ராஜீவ் கொலையாளிகளுக்கு துணையாக இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்போது பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்கள், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்பதுபோல பேசிவருவது இந்த படுகொலையில் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நாட்கள் சிறையில் இருந்தால் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்றால், யார் வேண்டுமானாலும் கொலை செய்ய தயங்க மாட்டார்கள். இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்த கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் கவர்னர் மாளிகை அறிவிப்பு





ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் விவகாரம் சிக்கலான பிரச்சினை என்பதால், அரசியல் சட்டப்படி ஆய்வு செய்து நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் மாளிகை அறிவித்து உள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2018 05:59 AM

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த 6-ந் தேதி அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து 9-ந் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. மேலும் 7 பேர் தொடர்பான கோப்புகளையும் கவர்னருக்கு அனுப்பியது.

தமிழக அரசின் இந்த பரிந்துரை குறித்து கருத்து கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அறிக்கை அனுப்பி இருப்பதாக கடந்த வியாழக்கிழமை தகவல் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து கவர்னர் மாளிகையின் சார்பில் நேற்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த அனுமானத்தின் அடிப்படையில் சில தனியார் தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த பிரச்சினை (7 பேரின் விடுதலை) சிக்கலான ஒன்றாகும். இதில் சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் சாசன அடிப்படையிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் உள்ளன. பல்வேறு கோர்ட்டு தீர்ப்புகள் அடங்கிய அந்த ஆவணங்களை 14-ந் தேதியன்றுதான் மாநில அரசு ஒப்படைத்தது. மேலும் பல ஆவணங்களை தந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஆவணங்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து மேல்நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த பணியில் தேவைப்படும் போது ஆலோசனைகள் பெறப்படும். இந்த விஷயத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நியாயமான முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Thursday, September 13, 2018

``நாய் கூட திங்காது இந்த முந்திரியை”-- விமானத்தில் கடுகடுத்த இலங்கை அதிபர் சிறிசேனா

ஞா. சக்திவேல் முருகன்

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பயணம் செய்த போது, அவருகு வழங்கப்பட்ட முந்திரி தரமில்லாததைக் கண்டு, ‘நாய் கூட திங்காது இந்த முந்திரியை, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இருக்கிறார்.



கடந்த வாரம், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில், `வங்கக்கடலை ஒட்டி அமைந்துள்ள நாடுகளிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பு குறித்த நான்காவது உச்சிமாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பின்பு, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் நாடு திரும்பினார்.



விமானப் பயணத்தின்போது, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவுக்கு வழங்கப்பட்ட முந்திரி தரமில்லாமல் இருந்திருக்கிறது. இதனால் கோபம் அடைந்த சிறிசேனா, 'இதை நாய் சாப்பிடுமா? உடனே இந்த முந்திரியை வழங்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு இருக்கிறார். இதனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு முந்திரி விநியோகம் செய்துவந்த துபாய் நிறுவனத்தின் சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணம் செய்பவர்களுக்கு முந்திரி வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.


Chennai doctor honoured by Pakistan 

DECCAN CHRONICLE.


Published Sep 13, 2018, 1:31 am IST


Over the last several years, scores of poor, young Pakistani children have immensely benefited from this endeavour. 



 

Chennai based craniomaxillofacial surgeon, Prof. Dr. S. M. Balaji being honoured with the Pakistan Dental Association’s Humanitarian Award.

Chennai: In a rare gesture in these times of India-Pakistan tension, Chennai based craniomaxillofacial surgeon, Prof. Dr. S. M. Balaji has been honoured with the Pakistan Dental Association's Humanitarian Award. Years ago, in an international meeting organised by Asia Pacific Dental Federation, the PDA, with a membership of over 1,000 dentists, had invited Prof. Balaji to lecture in Pakistan. Since 2010, PDA has been regularly referring patients with complex craniofacial developmental abnormalities to the doctor in Chennai.

The children are usually from low socio-economic category and the association would pool in resources for arranging the treatment and travel to Chennai. Prof. Balaji has been providing free surgical treatment to such needy patients from overseas. Over the last several years, scores of poor, young Pakistani children have immensely benefited from this endeavour.

In recognition of the humanitarian service rendered, the PDA leadership felicitated Prof. Balaji in a special award ceremony held along the sidelines of the 40th Asia Pacific Dental Federation 2018 meeting in Manila. The PDA President, Dr. Mahmood Shah, Vice President, Dr. Asif Arain and Secretary General Dr. Nasir Ali Khan presented Prof. Balaji with the award.

Prof. Balaji is the first Indian to receive such an honour from the Pakistan Dental Association. He is an expert in the field of craniomaxillofacial surgeon through which he has changed the lives of many patients who have come in with problems like hare lip and other facial deformities. In fact, the award winning short film Smile Pinki portrays well the kind of service rendered to such people in terms of their gaining self-confidence by surgeons like Prof. Balaji.
Madambakkam fudges lake size for Chitlapakkam water supply project?

The locals, who have obtained a copy of the documents through an RTI application, say the boundaries of the lake were intentionally redrawn so that the panchayat can dig wells on the lakebed.
 
Published: 13th September 2018 05:52 AM |


 
The work of digging wells on the Agaram lake going on to implement the Chitlapakkam drinking water project | Ashwin Prasath 


By Samuel Merigala
Express News Service

CHENNAI: It’s not just encroachers. Even a town panchayat in southern suburbs of the city seems to have shrunk a lake in its limits so that it can dig five wells right in the lakebed and pump water. The Madambakkam lake, one of biggest lakes in the south of the city, is said to be spread across 250 acres. But apparently the map of the lake submitted by the Madambakkam town panchayat to the Public Works Department changed the shape of the lake and shrunk it to a mere 80 acres.

The locals, who have obtained a copy of the documents through an RTI application, say the boundaries of the lake were intentionally redrawn so that the panchayat can dig wells on the lakebed and draw water to supply for residents of Chitlapakkam town panchayat residents.

The wells are being dug by the panchayat under a `3-crore project to extract around 18 lakh litres of water every day from five wells and supply it through an underground pipeline system to Chitlapakkam and Madambakkam. One of the main conditions laid down by the Public Works Department was that wells should be at least 25 metres away from the lake. The residents, pointing the contradictions of the maps of the lake in revenue records and the one submitted by the panchayat, say the boundaries were redrawn so that the spot in the lakebed where the wells are dug appears to be 25 metres away from the lake.

Since it was announced, the project has met with strong local opposition. “The Madambakkam town panchayat has clearly fudged the lake sketch to ensure the project is given the green light, “ said Lt Colonel CR Sundar, a resident who has filed a PIL in the Madras High Court pointing out the irregularities.

“This project will completely drain ground water in Madambakkam and we’ll have to start buying water after our borewells go dry,” said G Radhakrishnan, a resident of Yeshwanth Nagar, alleging that political pressure is driving the project.A top former Tamil Nadu Water Supply and Drainage Board official said the project will have disastrous long-term effects on the ground water table. “In a matter of months the ground water levels will plummet and borewells have to be deepened. Soon Madambakkam will be as dry as Chitlapakkam,” he said, explaining how Madambakkam lake depends on only rain water for replenishment and cannot be used to fuel a big water supply scheme.

The Madambakkam town panchayat has denied any irregularities in seeking permission for the project and the sketch provided. “We have conducted a proper survey and have marked the wells as per the norms mandated,” said S Loganathan, executive officer.When Express contacted the PWD, they assured steps would be taken if irregularities were found in construction of wells and assured steps to maintain groundwater levels in Madambakkam.

“Seven wells were requested for the project but we have given permission for only five,” said a senior PWD official.Chitlapakkam, which is around 8 km away, has a lake of its own but it has been contaminated by decades of irresponsible disposal of garbage and sewage. Police intimidation
Initially, Madambakkam residents managed to stop panchayat from digging wells by blocking access to the lake. However, officials armed with around 150 cops began operations.Protestors were allegedly manhandled and threatened with dire consequences for pointing out irregularities and halting digging operations. Locals claim cops even hinted at the possibility of opening fire if protests persisted.“The police brought up the Thoothukudi firing incident to intimidate us. We just want to protect our water resources,” said a woman from New Kailash Nagar, adjacent to t

NEWS TODAY 01.07.2026