Thursday, September 13, 2018

``நாய் கூட திங்காது இந்த முந்திரியை”-- விமானத்தில் கடுகடுத்த இலங்கை அதிபர் சிறிசேனா

ஞா. சக்திவேல் முருகன்

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பயணம் செய்த போது, அவருகு வழங்கப்பட்ட முந்திரி தரமில்லாததைக் கண்டு, ‘நாய் கூட திங்காது இந்த முந்திரியை, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இருக்கிறார்.



கடந்த வாரம், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில், `வங்கக்கடலை ஒட்டி அமைந்துள்ள நாடுகளிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பு குறித்த நான்காவது உச்சிமாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பின்பு, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் நாடு திரும்பினார்.



விமானப் பயணத்தின்போது, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவுக்கு வழங்கப்பட்ட முந்திரி தரமில்லாமல் இருந்திருக்கிறது. இதனால் கோபம் அடைந்த சிறிசேனா, 'இதை நாய் சாப்பிடுமா? உடனே இந்த முந்திரியை வழங்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு இருக்கிறார். இதனால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு முந்திரி விநியோகம் செய்துவந்த துபாய் நிறுவனத்தின் சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணம் செய்பவர்களுக்கு முந்திரி வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...