Tuesday, December 11, 2018

Low pressure may bring rain to city by Friday

TIMES NEWS NETWORK

Chennai:11.12.2018

After evading Chennai for most part of this monsoon, rain clouds appear to be headed this way.

A low pressure intensifying in the Bay of Bengal is expected to bring a moderate spell of rain to the city and its neighbouring districts by this weekend, say weathermen. The weather system is likely to intensify into a depression in the next three days, leaving moderate to heavy rain in the coastal districts of south Andhra Pradesh and north Tamil Nadu.

While independent weather bloggers said there were chances of the system turning into a cyclone, IMD officials said it was too early to predict its intensity when it hits the coast.

IMD’s regional weather inference said the low pressure area over equatorial Indian Ocean and adjoining central parts of south Bay of Bengal with associated cyclonic circulation persists. The system is likely to become more marked during the next 48 hours. It is likely to concentrate into a depression in the subsequent 24 hours. “It is likely to move northwestwards towards north Tamil Nadu and south Andhra Pradesh coast,” an IMD official said.

“We are continuously monitoring the system. There may not be rain for the next three days. Whether the system will intensify after it becomes a depression, we will have to wait and watch,” said IMD deputy director general S Balachandran.

Independent weather bloggers said the system may intensify into a cyclone by this weekend. “The system most likely will become a cyclone by December 14. While it is too early to identify the location of its landfall, we will get more clarity in a couple of days,” said weather blogger Pradeep John.

Skymet Weather’s forecast shows that chances of the system intensifying into a cyclone are low. “At the most, it will become a deep depression. There’s very little time for it to become a cyclone. Whether it intensifies into a cyclone or not, coastal districts in north Tamil Nadu, including Chennai, will get moderate to heavy rain starting Friday,” said Skymet Weather chief meteorologist Mahesh Palawat.

Till last week, weather models indicated that the system would dissipate after turning into a well-marked low pressure. Experts said the models are now showing the system to be gathering more steam with favourable conditions in the sea and the atmosphere. Parameters like low vertical wind shear, low atmospheric pressure and high sea surface temperature are adding strength to the system that is now lying over south Bay of Bengal. “In December, weather systems usually form in south Bay of Bengal region due to high sea surface temperature,” said Palawat.

For the next 48 hours, IMD has forecast the Chennai skies to be generally cloudy. The maximum temperature will be 31 degrees Celsius and the minimum 24 degrees Celsius. Dry weather would prevail over the rest of Tamil Nadu.


DRAWING CLOSE: A low pressure area is intensifying over the Bay of Bengal

Monday, December 10, 2018

ஆட்டம்காணும் மருத்துவக் கல்வியின் அச்சாணி!

Published : 27 Nov 2018 10:13 IST

ம.சுசித்ரா





கடந்த மூன்று ஆண்டுகால நீட் தேர்வு அனுபவம் நம் மாணவர்களைச் சூறாவளியாகச் சுழற்றி அடித்துள்ளது. நீட் தேர்வை ஏற்பதா எதிர்ப்பதா என்ற நிலையிலிருந்து நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது என்ற கட்டத்துக்கு ஒட்டுமொத்த மாணவ சமூகமும் நகர்த்தப்பட்டிருக்கிறது. பாடத்திட்ட மாற்றம், நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்… எனத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையும் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவருகிறது.

இந்நிலையில் மருத்துவராகும் கனவைச் சுமந்து நிற்கும் இந்திய மாணவர்களின் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சவால் ‘நீட்’ மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவின் மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை. சுகாதாரத்துக்கு அச்சாணியாக விளங்கும் இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது அபாயகரமான நிலைக்குள் அமிழ்த்தப்பட்டிருக்கிறது. இவற்றைப் பல கோணங்களில் அலசி ஆராய்கிறது, பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் ‘மறுக்கப்படும் மருத்துவம்’ நூல்.

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை பொதுச் செயலாளராக இருந்த காலம்தொட்டு தொடர்ந்து மருத்துவ உரிமைக்காகப் போராடிவரும் மருத்துவர் சீ.ச. ரெக்ஸ் சற்குணம், மாணவர் உரிமைக்காகப் போராடிவரும் மருத்துவர் S. காசி, டெல்லி எய்ம்ஸில் மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் போராடிவரும் மருத்துவர் G.K. கலைச்செல்வம் உள்ளிட்ட மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இருக்கிறார் கல்விச் செயற்பாட்டாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ஏன் கலைக்க வேண்டும்?

இந்தியா முழுவதும் சீரான மருத்துவ வசதிகளை உருவாக்கத் தவறிவிட்ட காரணத்தாலும், ஊழல் மலிந்த துறையாக மருத்துவத் துறை மாறக் காரணமாகிவிட்டதாலும் இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டுத் தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்துவதற்கான மசோதா (NMC Bill, 2017) நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் 2014 ஜூலையிலேயே தொடங்கிவிட்டன. இது தொடர்பான நடவடிக்கைகளில் ஒன்றுதான் அனைவருக்குமான பொது நுழைவுத் தேர்வான ‘நீட்’.

இதன் விளைவாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, பட்டப்படிப்பு மருத்துவக் கல்விக்கான தரத்தை நிர்ணயித்துப் பராமரிப்பது, மேற்படிப்பு மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவது, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அனுமதியை வழங்குவது உள்படப் பலவற்றைச் செய்துவந்த இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாகத்தான் தேசிய மருத்துவ ஆணையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவ கவுன்சிலை மறுசீரமைக்க வேண்டும், ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அவற்றைச் செய்வதற்குப் பதிலாக இந்தப் பரிந்துரைகளைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதனால் மருத்துவக் கல்வி கற்க எத்தனிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கனவு எட்டாக் கனியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முயல்கிறது ‘மறுக்கப்படும் மருத்துவம்’ புத்தகம்.

வசூல் ராஜாவாகும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்

‘மருத்துவத்தைச் சந்தையாக்கும் மசோதா’ என்ற கட்டுரையில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் மருத்துவ ஆணையத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில புள்ளிகள் இந்திய மருத்துவக் கல்வி எதிர்கொள்ளவிருக்கும் அபாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மருத்துவத் துறைக்குள் நிகழும் விவகாரங்கள் மாணவர்களுக்கு எதற்கு என்று கடந்துபோக முடியாதபடி அவை அச்சுறுத்துகின்றன.



இந்திய மருத்துவ கவுன்சில்தான் முறைப்படி ஆய்வு நடத்தி, பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான அங்கீகாரத்தைத் தரும். ஆனால், இதே விவகாரத்தில் அந்தந்தக் கல்லூரிகளே முதுநிலைப் படிப்புகளைத் தொடங்கி நடத்தலாம் என்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.

இந்திய மருத்துவ கவுன்சிலின்படி கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் கவுன்சிலுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ளது. ஆனால், மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை 40 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயம் செய்யும். ஏனைய 60 சதவீத மாணவர்களிடம் தன் விருப்பம்போல கல்லூரி நிர்வாகமே கட்டணம் வசூல் செய்யலாம்.

இந்தப் பின்னணியில்தான் நீட் தேர்வைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பிளஸ் டூ மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து மருத்துவப் படிப்புக்கான சீட்டு வழங்கிய நிலைமையை மாற்றி எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு நடத்துவது என்பது தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான திறவுகோல் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 119 அதாவது வெறும் 16.53 சதவீதம் மட்டுமே மதிப்பெண் பெற்றவர்கள் பணமிருந்தால் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆனால், 250 அல்லது 300 மதிப்பெண் வாங்கும் மாணவர் பணம் செலுத்த முடியாத பட்சத்தில் எம்.பி.பி.எஸ். படிக்க முடியாது.

அடுத்த பிரச்சினை ‘நெக்ஸ்ட்’

எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வைக் கட்டாயமாக்கி ஒரு புறம் கதவை மூடியது மட்டுமல்லாமல் எம்.பி.பி.எஸ். முடித்துப் பதிவு செய்து மருத்துவப் பணி செய்ய வேண்டுமானால் ‘நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய வெளித்தேர்வையும் (National Exit Exam - NEXT) கட்டாயம் எழுத வேண்டும் என்று இந்த ஆணையம் அறிவித்திருப்பதுதான் அடுத்த அதிர்ச்சி. இதனால் பல குழப்பங்கள் ஏற்படும்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் இறுதியாண்டில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சைகள், மகளிர் நோய் ஆகியவற்றைப் பிரதானமாகப் படிப்பார்கள். அதிலும் தற்போது நடைமுறையில் உள்ள இறுதியாண்டுத் தேர்வு என்பது எழுத்துத் தேர்வு, நோயாளிகளைப் பரிசோதிக்கும் திறன் உட்படச் செய்முறைத் தேர்வும் இணைந்த ஒன்றாகும்.

இத்தகைய விஷயங்களை Multiple Choice Questions என்ற அடிப்படையில் நடத்தப்படும் தேர்வில் மாணவரின் நோயறிதிறனை, நோய் தீர்க்கும் அறிவை முழுமையாகச் சோதிக்க இயலாது. அதேபோல, ‘காலா அஸார்’, இதயத்தின் தமனிகளில் அடைப்பு, ஜப்பானிய யானைக்கால் போன்ற நோய்கள் வட இந்தியாவில் பரவலாக உள்ளன.

இத்தகைய நோய்கள் தென் இந்தியாவில் குறைவு. இப்படி இருக்க மருத்துவக் கல்வியில் பொதுவான பாடத்திட்டம் என்பது உயிரைக் காக்கும் தொழிலான மருத்துவத்தை வெறும் ஏட்டுக் கல்வியாக மாற்றும் விபரீதமாகும் என்பது ‘தேசிய மருத்துவ கமிஷனும் அதன் விளைவுகளும்’ கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது


மறுக்கப்படும் மருத்துவம் தொகுப்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018 தொலைபேசி: 044-24332924 | ரூ.30/-

முரண்களின் மூட்டையா?

இதைவிடவும் சிக்கலானது, இந்திய முறை மருத்துவப் பட்டதாரிகள், ஹோமியோபதி பட்டதாரிகள் இணைப்புப் படிப்பாக (Bridge Course) ஆறு மாதம் அலோபதி மருத்துவத்தைப் படித்துவிட்டுக் கிராமப்புறச் சுகாதாரச் சேவைகளில் ஈடுபடலாம் என்கிறது இந்த ஆணைய மசோதா. ஒரு புறம் ஐந்தரை ஆண்டுகள் படித்துப் பயிற்சி பெற்ற எம்.பி.பி.எஸ். மருத்துவரைத் தரப்படுத்துகிறோம் என்று கூறி மீண்டும் ‘நெக்ஸ்ட்’ எழுதச் சொல்கிறது. மறுபுறம் ஆறு வருடப் படிப்பை ஆறு மாதங்களிலேயே கற்றுக்கொள்ளலாம் என்கிறது. இப்படிப் பல முரண்களின் மூட்டையாக இந்த மசோதா காணப்படுவதை ‘மறுக்கப்படும் மருத்துவம்’ பக்கத்துக்குப் பக்கம் அலசுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் பெற்ற கல்விக்கு அப்பால் தனியாகச் சிறப்புப் பயிற்சி எடுத்து ‘நீட்’ தேர்வை எதிர்கொள்வதுபோலவே நான்கரை ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டுக் கடைசியில் தனியாகச் சிறப்புப் பயிற்சி எடுத்து ‘நெக்ஸ்ட்’ தேர்வை எழுத வேண்டிய சூழல் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதன் வழியாக நம்முடைய பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அத்தனையும் பயனற்றவை என்ற பொதுப்புத்தியைத்தான் இந்தத் திட்டம் ஏற்படுத்திவருகிறது. மறுபுறம் மீண்டும் மீண்டும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத, அதிகச் செலவு செய்து சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்ளத் திராணி அற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு முற்றிலுமாக மருத்துவக் கல்வி மறுக்கப்படும் அபாயம் சூழ்ந்துள்ளது.

ஆட்டம்காணும் மருத்துவக் கல்வியின் அச்சாணி!

கடந்த மூன்று ஆண்டுகால நீட் தேர்வு அனுபவம் நம் மாணவர்களைச் சூறாவளியாகச் சுழற்றி அடித்துள்ளது. நீட் தேர்வை ஏற்பதா எதிர்ப்பதா என்ற நிலையிலிருந்து நீட் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது என்ற கட்டத்துக்கு ஒட்டுமொத்த மாணவ சமூகமும் நகர்த்தப்பட்டிருக்கிறது. பாடத்திட்ட மாற்றம், நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்… எனத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையும் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவருகிறது.
இந்நிலையில் மருத்துவராகும் கனவைச் சுமந்து நிற்கும் இந்திய மாணவர்களின் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் சவால் ‘நீட்’ மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவின் மருத்துவக் கல்வி, மருத்துவ சேவை. சுகாதாரத்துக்கு அச்சாணியாக விளங்கும் இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது அபாயகரமான நிலைக்குள் அமிழ்த்தப்பட்டிருக்கிறது. இவற்றைப் பல கோணங்களில் அலசி ஆராய்கிறது, பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் ‘மறுக்கப்படும் மருத்துவம்’ நூல்.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை பொதுச் செயலாளராக இருந்த காலம்தொட்டு தொடர்ந்து மருத்துவ உரிமைக்காகப் போராடிவரும் மருத்துவர் சீ.ச. ரெக்ஸ் சற்குணம், மாணவர் உரிமைக்காகப் போராடிவரும் மருத்துவர் S. காசி, டெல்லி எய்ம்ஸில் மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்று ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் போராடிவரும் மருத்துவர் G.K. கலைச்செல்வம் உள்ளிட்ட மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இருக்கிறார் கல்விச் செயற்பாட்டாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு.
ஏன் கலைக்க வேண்டும்?
இந்தியா முழுவதும் சீரான மருத்துவ வசதிகளை உருவாக்கத் தவறிவிட்ட காரணத்தாலும், ஊழல் மலிந்த துறையாக மருத்துவத் துறை மாறக் காரணமாகிவிட்டதாலும் இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டுத் தேசிய மருத்துவ ஆணையத்தை ஏற்படுத்துவதற்கான மசோதா (NMC Bill, 2017) நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் 2014 ஜூலையிலேயே தொடங்கிவிட்டன. இது தொடர்பான நடவடிக்கைகளில் ஒன்றுதான் அனைவருக்குமான பொது நுழைவுத் தேர்வான ‘நீட்’.
இதன் விளைவாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது, பட்டப்படிப்பு மருத்துவக் கல்விக்கான தரத்தை நிர்ணயித்துப் பராமரிப்பது, மேற்படிப்பு மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவது, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அனுமதியை வழங்குவது உள்படப் பலவற்றைச் செய்துவந்த இந்திய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்குப் பதிலாகத்தான் தேசிய மருத்துவ ஆணையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ கவுன்சிலை மறுசீரமைக்க வேண்டும், ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அவற்றைச் செய்வதற்குப் பதிலாக இந்தப் பரிந்துரைகளைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதனால் மருத்துவக் கல்வி கற்க எத்தனிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கனவு எட்டாக் கனியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முயல்கிறது ‘மறுக்கப்படும் மருத்துவம்’ புத்தகம்.
வசூல் ராஜாவாகும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்
‘மருத்துவத்தைச் சந்தையாக்கும் மசோதா’ என்ற கட்டுரையில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் மருத்துவ ஆணையத்துக்கும் உள்ள வேறுபாடுகள் விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில புள்ளிகள் இந்திய மருத்துவக் கல்வி எதிர்கொள்ளவிருக்கும் அபாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மருத்துவத் துறைக்குள் நிகழும் விவகாரங்கள் மாணவர்களுக்கு எதற்கு என்று கடந்துபோக முடியாதபடி அவை அச்சுறுத்துகின்றன.
 
இந்திய மருத்துவ கவுன்சில்தான் முறைப்படி ஆய்வு நடத்தி, பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான அங்கீகாரத்தைத் தரும். ஆனால், இதே விவகாரத்தில் அந்தந்தக் கல்லூரிகளே முதுநிலைப் படிப்புகளைத் தொடங்கி நடத்தலாம் என்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.
இந்திய மருத்துவ கவுன்சிலின்படி கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் கவுன்சிலுக்கும் மாநில அரசுகளுக்கும் உள்ளது. ஆனால், மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை 40 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயம் செய்யும். ஏனைய 60 சதவீத மாணவர்களிடம் தன் விருப்பம்போல கல்லூரி நிர்வாகமே கட்டணம் வசூல் செய்யலாம்.
இந்தப் பின்னணியில்தான் நீட் தேர்வைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பிளஸ் டூ மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாக வைத்து மருத்துவப் படிப்புக்கான சீட்டு வழங்கிய நிலைமையை மாற்றி எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு நடத்துவது என்பது தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான திறவுகோல் எனச் சொல்லப்படுகிறது.
ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 119 அதாவது வெறும் 16.53 சதவீதம் மட்டுமே மதிப்பெண் பெற்றவர்கள் பணமிருந்தால் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆனால், 250 அல்லது 300 மதிப்பெண் வாங்கும் மாணவர் பணம் செலுத்த முடியாத பட்சத்தில் எம்.பி.பி.எஸ். படிக்க முடியாது.
அடுத்த பிரச்சினை ‘நெக்ஸ்ட்’
எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வைக் கட்டாயமாக்கி ஒரு புறம் கதவை மூடியது மட்டுமல்லாமல் எம்.பி.பி.எஸ். முடித்துப் பதிவு செய்து மருத்துவப் பணி செய்ய வேண்டுமானால் ‘நெக்ஸ்ட்’ எனப்படும் தேசிய வெளித்தேர்வையும் (National Exit Exam - NEXT) கட்டாயம் எழுத வேண்டும் என்று இந்த ஆணையம் அறிவித்திருப்பதுதான் அடுத்த அதிர்ச்சி. இதனால் பல குழப்பங்கள் ஏற்படும்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் இறுதியாண்டில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சைகள், மகளிர் நோய் ஆகியவற்றைப் பிரதானமாகப் படிப்பார்கள். அதிலும் தற்போது நடைமுறையில் உள்ள இறுதியாண்டுத் தேர்வு என்பது எழுத்துத் தேர்வு, நோயாளிகளைப் பரிசோதிக்கும் திறன் உட்படச் செய்முறைத் தேர்வும் இணைந்த ஒன்றாகும்.
இத்தகைய விஷயங்களை Multiple Choice Questions என்ற அடிப்படையில் நடத்தப்படும் தேர்வில் மாணவரின் நோயறிதிறனை, நோய் தீர்க்கும் அறிவை முழுமையாகச் சோதிக்க இயலாது. அதேபோல, ‘காலா அஸார்’, இதயத்தின் தமனிகளில் அடைப்பு, ஜப்பானிய யானைக்கால் போன்ற நோய்கள் வட இந்தியாவில் பரவலாக உள்ளன.
இத்தகைய நோய்கள் தென் இந்தியாவில் குறைவு. இப்படி இருக்க மருத்துவக் கல்வியில் பொதுவான பாடத்திட்டம் என்பது உயிரைக் காக்கும் தொழிலான மருத்துவத்தை வெறும் ஏட்டுக் கல்வியாக மாற்றும் விபரீதமாகும் என்பது ‘தேசிய மருத்துவ கமிஷனும் அதன் விளைவுகளும்’ கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது
மறுக்கப்படும் மருத்துவம் தொகுப்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018 தொலைபேசி: 044-24332924 | ரூ.30/-
முரண்களின் மூட்டையா?
இதைவிடவும் சிக்கலானது, இந்திய முறை மருத்துவப் பட்டதாரிகள், ஹோமியோபதி பட்டதாரிகள் இணைப்புப் படிப்பாக (Bridge Course) ஆறு மாதம் அலோபதி மருத்துவத்தைப் படித்துவிட்டுக் கிராமப்புறச் சுகாதாரச் சேவைகளில் ஈடுபடலாம் என்கிறது இந்த ஆணைய மசோதா. ஒரு புறம் ஐந்தரை ஆண்டுகள் படித்துப் பயிற்சி பெற்ற எம்.பி.பி.எஸ். மருத்துவரைத் தரப்படுத்துகிறோம் என்று கூறி மீண்டும் ‘நெக்ஸ்ட்’ எழுதச் சொல்கிறது. மறுபுறம் ஆறு வருடப் படிப்பை ஆறு மாதங்களிலேயே கற்றுக்கொள்ளலாம் என்கிறது. இப்படிப் பல முரண்களின் மூட்டையாக இந்த மசோதா காணப்படுவதை ‘மறுக்கப்படும் மருத்துவம்’ பக்கத்துக்குப் பக்கம் அலசுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் பெற்ற கல்விக்கு அப்பால் தனியாகச் சிறப்புப் பயிற்சி எடுத்து ‘நீட்’ தேர்வை எதிர்கொள்வதுபோலவே நான்கரை ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டுக் கடைசியில் தனியாகச் சிறப்புப் பயிற்சி எடுத்து ‘நெக்ஸ்ட்’ தேர்வை எழுத வேண்டிய சூழல் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதன் வழியாக நம்முடைய பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அத்தனையும் பயனற்றவை என்ற பொதுப்புத்தியைத்தான் இந்தத் திட்டம் ஏற்படுத்திவருகிறது. மறுபுறம் மீண்டும் மீண்டும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத, அதிகச் செலவு செய்து சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்ளத் திராணி அற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு முற்றிலுமாக மருத்துவக் கல்வி மறுக்கப்படும் அபாயம் சூழ்ந்துள்ளது.

ஐந்து மாநிலத் தேர்தல்கள்: ஒரு குறுக்குவெட்டுப் பார்வை!

Published : 10 Dec 2018 09:19 IST





‘அரையிறுதித் தேர்தல்’ என்று வர்ணிக்கப்பட்ட ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தல்களின் முடிவுகள் நாளை வெளியாகின்றன. மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்திருக்கும் தேர்தல்களின் முடிவுகள் 2019 மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலைச் சந்தித்த மாநிலங்களைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுப் பார்வை இது:

மிசோரம்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலம். காங்கிரஸும் மிசோ தேசிய முன்னணியும் பிரதான சக்திகள். மாநிலக் கட்சிகள்: மிசோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி, சோரம் தேசியவாதக் கட்சி. பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் உண்டு. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்ட மன்றத்தில், காங்கிரஸ் 34, தேசிய ஜனநாயகக் கூட்டணி 5, மிசோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி 1 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.

மாநிலத்தின் பின்னணி : பரப்பளவு 21,081 ச.கி.மீ. மக்கள்தொகை 10.97 லட்சம். எட்டு மாவட்டங்கள். 91% வனப்பரப்பைக் கொண்ட மாநிலம். பரப்பளவில் 25-வது இடம். மக்கள்தொகையில் 28-வது இடம். கிழக்கு, தெற்கில் மியான்மரும், மேற்கில் வங்கதேசமும், வட மேற்கில் திரிபுராவும், வடக்கில் அசாமும், வட கிழக்கில் மணிப்பூரும் இதன் எல்லைகள். எழுத்தறிவு 91.5%. மாநில உற்பத்தி மதிப்பு ரூ.6,991 கோடி. ஆட்சி மொழிகள்: மிசோ, ஆங்கிலம், இந்தி. மியான்மர், இஸ்ரேலிலிருந்து வந்த பெனேய் மெனாஸே உள்ளிட்ட பழங்குடிகள் நிரம்பிய பாரம்பரியப் பிரதேசம். கிறிஸ்தவர்கள் 87%. தேரவாத பெளத்தர்கள் 8.5%. இந்துக்கள் 2.7%. பழங்குடிகளில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள்.

பொருளாதாரம்: 21 பெரிய மலைத்தொடர்கள் உள்ள மாநிலம். ஏராளமான பள்ளத்தாக்குகள். பெரிய ஆறுகள்: சிம்துய்புய், காலா டான். ஏராளமான ஓடைகளும் அருவிகளும் இரண்டு பெரிய நன்னீர் ஏரிகளும் உள்ளன. வேளாண்மை, தொழில்வளம் இரண்டிலும் பின்தங்கியது. நெல், வாழை, இஞ்சி, மஞ்சள், ஆரஞ்சு, செளசெள, மூங்கில் விளைகின்றன. நாட்டின் மூங்கில் சாகுபடியில் மிசோரத்தின் பங்கு 14%. ஆண்டுக்கு 5,200 டன் மீன் கிடைக்கிறது. தோட்டக்கலைப் பயிர்களுக்கும் காய்கறி சாகுபடிக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. பட்டு வளர்ப்பும் உண்டு. மின்சாரம், போக்குவரத்து கட்டமைப்பு, தகவல்தொடர்பு, மூலதனம் ஆகியவை இல்லாததால் தொழில் வளர்ச்சி இல்லை. காடுகளையும் புதர்களையும் எரித்து விவசாயம் செய்வதால் விவசாய உற்பத்தி, உற்பத்தித் திறன் இரண்டுமே குறைவு.

கிராமம் - நகரம்: தலைநகரம் அய்ஜோல். சம்பாய், கோலாசிப், சாய்துல் உள்ளிட்ட நகரங்கள் உண்டு. போக்குவரத்து வசதிக்கு உகந்த நிலப்பரப்பற்ற இயற்கைப் பிரதேசங்கள் அதிகம். எனினும், நகர்மயமாதலில் முன்னேற்றம் காட்டும் மாநிலம். 52% மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். தென்சால், ஙோப்பா, லுங்லேயி உள்ளிட்ட சிறு நகரங்களும் சுற்றுலாவுக்கு ஏற்றவை. இயற்கைப் பிரதேசங்கள் ஏராளம் என்றாலும் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை பெரிய முன்னேற்றம் இல்லை. முய்ஃபாங், ரெய்க் உள்ளிட்ட மலை வாழிடங்களும், பாலாக் தில், டாம் தில் போன்ற ஏரிகளும் இங்கே பிரசித்தம். மிசோ கவிஞர்கள் சதுக்கம், டம்பா புலிகள் காப்பகம், முர்லன் தேசியப் பூங்கா இங்கு உள்ளன.

பேசுபொருள்: தொடர்ந்து காங்கிரஸால் ஆளப்படும் மாநிலம். பின்தங்கிய நிலைக்கு அதுதான் காரணம் என்கின்றன எதிர்க்கட்சிகள். காங்கிரஸ் அல்லாத தேசியக் கட்சிகள் இங்கு வலுவாக இல்லை. காங்கிரஸிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். காங்கிரஸ் இங்கு தடுப்பாட்டம் ஆடுகிறது. இதுவரை செய்த வளர்ச்சிப் பணிகளைப் பேசுகிறது.

சத்தீஸ்கர்

மத்திய பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலம் சத்தீஸ்கர். காங்கிரஸ், பாஜக பிரதானக் கட்சிகள். பாஜகவின் கோட்டைகளில் இம்மாநிலமும் ஒன்று. பாஜக முதல்வர் ரமண் சிங் தொடர்ந்து மூன்று முறை வென்று ஆட்சியில் இருக்கிறார். மொத்தம் உள்ள 90 இடங்களில், பாஜக 49 இடங்கள், காங்கிரஸ் 39 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.

மாநிலப் பின்னணி: பரப்பளவு 1,35,192 ச.கி.மீ. மக்கள்தொகை 2.56 கோடி. பரப்பளவில் நாட்டில் 10-வது இடம். மக்கள்தொகையில் 17-வது இடம். வட மேற்கில் மத்திய பிரதேசமும், மேற்கில் மஹாராஷ்டிரமும், தெற்கில் ஆந்திரமும், கிழக்கில் ஒடிஷாவும், வட கிழக்கில் ஜார்க்கண்டும் இதன் எல்லைகள். ஜிடிபி ரூ.3.26 லட்சம் கோடி. வளர்ச்சிவீதம் 6.7%. எழுத்தறிவு 70%. ஆட்சிமொழி இந்தி. 27 மாவட்டங்கள். சட்ட மன்றத் தொகுதிகள் 90. மக்களவைத் தொகுதிகள் 10. இந்துக்கள் 97%. மக்கள்தொகையில் 34% பழங்குடிகள்.

பொருளாதாரம்: கனிம வளங்கள் நிறைந்த சத்தீஸ்கரில் சுரங்கத் தொழில் பிரதானம். பெரு நிறுவனங்களின் வேட்டைக்காடு என்ற பெயரும் உண்டு. நாட்டின் உருக்கு உற்பத்தியில் 15% இங்குதான். ஆண்டுக்கு 54 லட்சம் டன் உருக்கும், 6 லட்சம் டன் அலுமினியமும் உற்பத்தியாகின்றன. நாட்டின் சிமென்ட் உற்பத்தியில் 20% பங்களிப்பு இம்மாநிலத்துடையது. நிலக்கரி வளம் கணக்கிலடங்காதது. இரும்பு, சுண்ணாம்புக்கல், டோலமைட், பாக்ஸைட், வைரம் என்றெல்லாம் இங்கிருந்து கனிமங்கள் உலகம் முழுக்க அனுப்பப்பட்டாலும் ஏழ்மை பீடித்திருக்கும் மாநிலம். 57.88 லட்சம் ஹெக்டேரில் ஒருபோக சாகுபடிதான். சுமார் 70,000 ஹெக்டேரில் மட்டும் இருபோக சாகுபடி. நெல், சோளம், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், நிலக்கடலை, சோயாபீன்ஸ், சூரியகாந்தி முக்கிய சாகுபடி. விவசாயத்தையே 80% மக்கள் சார்ந்திருக்கிறார்கள்.

கிராமம் - நகரம்: தலைநகரம் ராய்ப்பூர். பிலாய், கோர்பா, பிலாஸ்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உண்டு. மகாநதியின் படுகைப் பிரதேசம். சோன் நதியின் உபநதியான ரிஹந்த், இந்திராவதி, ஜோக், அர்பா, ஷிவ்நாத் ஆகிய ஆறுகள் பாய்கின்றன. மத்தியப் பகுதியில் உள்ள ராய்ப்பூர் – பிலாய் – துர்க் நகரங்கள் தொழில்மயமாகியிருக்கின்றன என்றாலும், தென்பகுதியில் வறுமை நிலவுகிறது. 45% மேற்பட்ட நிலப்பரப்பு வனப்பகுதி. நகர்மயமாதல் விஷயத்தில் பின்தங்கிய மாநிலம். வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் வசதிக் குறைவும் சேர்ந்து மாவோயிஸ்ட்டுகளை செல்வாக்கு பெற வைத்திருக்கின்றன. மாநிலத்தின் பல வனப்பகுதிகள் அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்கின்றன.

பேசுபொருள்: காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது மூன்றாவது சக்தியாகிறது. ரமண் சிங் ஆட்சியில் தொடர்ந்து தொடரும் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. மாநிலத்தில் ஜனநாயக சூழல் இல்லை. ஊழல் மலிந்த ஆட்சி ஆகியவற்றை காங்கிரஸ் பேசியது. பாஜகவோ மாநிலத்தில் ஆற்றியிருக்கும் பணிகளையும் மாவோயிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசியது. மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கும் அஜீத் ஜோகி ஜெயிக்கிறாரோ இல்லையோ காங்கிரஸை காலிசெய்யும் வகையில் பேசினார்.

தெலங்கானா

இந்தியாவின் தென்னிந்திய மாநிலம். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்), காங்கிரஸ் இரண்டும் பிரதானக் கட்சிகள். மொத்தம் உள்ள 119 தொதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 90, காங்கிரஸ் 13, அனைத்திந்திய மஜ்லீஸ்-ஈ-இத்திஹாதுல் முஸ்லிமீன் 7, பாஜக 5, தெலுங்கு தேசம் 3, மார்க்சிஸ்ட் கட்சி 1 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.

மாநிலப் பின்னணி: பரப்பளவு 1,12,077 ச.கி.மீ. மக்கள்தொகை 3,51,93,978. வடக்கில் மஹாராஷ்டிரம், மேற்கில் கர்நாடகம், கிழக்கு மற்றும் தெற்கில் ஆந்திரம் இதன் எல்லைகள். பரப்பளவு - மக்கள்தொகை இரண்டிலும் 12-வது இடம். ஆட்சி மொழி: தெலுங்கு, உருது, ஆங்கிலம். மாவட்டங்கள் 31. ஜிடிபி ரூ.8.43 லட்சம் கோடி. சட்ட மன்றத் தொகுதிகள் 119, மக்களவைத் தொகுதிகள் 17. இந்துக்கள் 85.1%, முஸ்லிம்கள் 12.7%, கிறிஸ்தவர்கள் 1.3%.

பொருளாதாரம்: நெல், கரும்பு, பருத்தி, புகையிலை, வாழை, நிலக்கடலை, சூரியகாந்தி, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் சாகுபடி அதிகம். கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தோட்டக்கலை பிற தொழில்கள். தொழில் துறையிலும் முன்னேறிவரும் மாநிலம். மோட்டார் வாகனங்கள் - உதிரிபாகங்கள் தயாரிப்பாலைகள், ஜவுளி ஆலைகள், ஆயத்த ஆடைத் தயாரிப்பகங்கள், மருந்து-மாத்திரைத் தொழில், வெளிநாட்டவர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கும் பெரிய மருத்துவமனைகள் ஆகியவை கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவில் உத்வேகம் அடைந்துவருகின்றன. கோல்கொண்டாவில் நவரத்தினக் கற்கள் கிடைக்கும் கனிமச் சுரங்கங்கள் உண்டு. விவசாயம், தொழில்வளம் மிக்க மாநிலம். சேவைத் துறையில் தகவல்தொழில்நுட்பம் முன்னிலை வகிக்கிறது.

நகரம் – கிராமம்: தலைநகரம் ஹைதராபாத். வாரங்கல், நிஜாமாபாத், கம்மம், கரீம்நகர் பெரிய நகரங்கள். ஐந்து மாநகராட்சிகள், ஆறு நகராட்சிகள் இங்கு உள்ளன. கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்ரா நதிகள் பாய்கின்றன. நாகார்ஜுனசாகர் என்கிற மிகப் பெரிய நில அணை திட்டத்தால் பாசன நீர் கிடைக்கிறது. பீமா, திண்டி, கின்னரசானி, மாஞ்சரா, மானேர், பிராணஹிதா, பெத்தவாகு, தலிபேரு என்ற சிறிய ஆறுகளும் உண்டு. கணிசமான நிலங்கள் வானம் பார்த்த பூமி. சார்மினார், கோல்கொண்டா கோட்டை, குதுப் ஷாஹி கல்லறை, போங்கிர் கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உண்டு. திரைப்படத் தயாரிப்புத் தொழிலுக்குப் புகழ்பெற்ற ராமோஜி ராவ் திரைப்பட நகரம் ஹைதராபாதில் உள்ளது.

பேசுபொருள்: தெலங்கானா போராட்டத்தில் முன்னின்றதாலேயே தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்குத் தனி செல்வாக்கு. வளர்ச்சித் திட்டங்களை சாதனைகளாகப் பேசுகிறது. பரம வைரியான தெலுங்கு தேசத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கிறது காங்கிரஸ். பாஜகவுக்கும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கும் மறைமுகக் கூட்டு என்று அது பேசுகிறது. பாஜகவும் தனித்துக் களமிறங்குகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போட்டியிடவில்லை.

ராஜஸ்தான்

இந்தியாவின் வட மேற்கில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்புற மாநிலம். பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதானக் கட்சிகள். மற்ற கட்சிகளுக்கு இங்கு செல்வாக்கு கிடையாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறுவது கேரளத்தைப் போல இங்கும் வழக்கம். மொத்தம் உள்ள 200 தொகுதிகளில், பாஜக 163, காங்கிரஸ் 21 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.

மாநிலப் பின்னணி: பரப்பளவு 3,42,239 ச.கி.மீ. நாட்டின் பரப்பளவில் 10.4%. பரப்பளவில் நாட்டின் முதல் மாநிலம். மக்கள்தொகை 6.86 கோடி. மக்கள்தொகையில் ஏழாவது மாநிலம். வட மேற்கில் பாகிஸ்தானின் பஞ்சாபும், மேற்கில் சிந்துவும் இதன் எல்லைகள். கல்வியறிவு 67.06%. ஆட்சிமொழி: இந்தி, ஆங்கிலம். ஜிடிபி ரூ.8.40 லட்சம் கோடி. மாவட்டங்கள் 33. சட்ட மன்றத் தொகுதிகள் 200. மக்களவைத் தொகுதிகள் 25. இந்துக்கள் 88.49%. முஸ்லிம்கள் 9%. கிறிஸ்தவர்கள் 0.14%.

பொருளாதாரம்: கனிம அகழ்வு, கச்சா எண்ணெய் தயாரிப்பு, கால்நடை வளர்ப்பு, வேளாண்மை முக்கியத் தொழில்கள். அன்றாடம் 3 லட்சம் பீப்பாய் கச்சா பெட்ரோலிய எண்ணெய் எடுக்கப்படுகிறது. சலவைக்கல் என்று அழைக்கப்படும் பளிங்குக் கல் வெட்டியெடுப்பு முக்கியக் கனிமத் தொழில். உப்பு, செம்பு, துத்தநாகம் வெட்டியெடுக்கப்படுகின்றன. நாட்டின் உரோம உற்பத்தியில் 40% முதல் 50% வரை ராஜஸ்தானுடையது. பாலியெஸ்டர் இழை தயாரிப்பில் நாட்டின் இரண்டாவது மாநிலம். மேற்கு பணஸ், லூனி, கக்கர் உள்ளிட்ட ஆறுகள் உண்டு.

கிராமம் – நகரம்: தலைநகரம் ஜெய்ப்பூர். பெரிய நகரங்கள் ஜோத்பூர், கோட்டா, பிகானீர், உதய்ப்பூர், அஜ்மீர். ஆரவல்லி மலைகள் அழகு செய்யும் மாநிலம் இது. சாம்பர், குச்சமான், தித்துவானா, பச்பத்ரா, ஃபலோதி ஆகிய உப்புநீர் ஏரிகள் உள்ளன. ராஜஸ்தானின் நிலைமையைக் கருதி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் உபரிநீரைக் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தருகின்றன. சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளின் உபரிநீர் நிலத்திலிருந்து உயர்த்திக் கட்டப்பட்ட கான்கிரீட் கால்வாய்கள் மூலம் எடுத்துவரப்படுகிறது. இது விவசாயத்துக்கும் கால்நடை வளர்ப்புக்கும் பெரிதும் உதவுகிறது. ராஜஸ்தானில் வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருது, ஒட்டகம் வளர்ப்பு அதிகம்.

பேசுபொருள்: முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் மீதான அதிருப்தி மக்களிடம் மட்டுமல்லாது கட்சிக்குள்ளும் எதிரொலித்தது. வேலைவாய்ப்பின்மையை காங்கிரஸ் பிரச்சினையாகப் பேசியது. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார், கோஷ்டிப் பூசல் ஆகியவற்றை பாஜக பேசியது.

மத்திய பிரதேசம்

இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மாநிலம். பாஜக, காங்கிரஸ் இரண்டும் பிரதானக் கட்சிகள். பாஜகவின் கோட்டை. 15 ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான். மொத்தம் உள்ள 231 தொதிகளில், பாஜக 166, காங்கிரஸ் 57, பகுஜன் சமாஜ் 4 இடங்களைக் கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.

மாநிலத்தின் பின்னணி: பரப்பளவு 3,08,252 ச.கி.மீ. பரப்பளவில் இரண்டாவது மாநிலம். மக்கள்தொகை 7.27 கோடி. மக்கள்தொகையில் ஐந்தாவது இடம். சட்ட மன்றத் தொகுதிகள் 230. மக்களவைத் தொகுதிகள் 29. ஜிடிபி ரூ.2.86 லட்சம் கோடி. வளர்ச்சியடைந்துவரும் மாநிலம். வட மேற்கில் ராஜஸ்தான், வடக்கில் உத்தர பிரதேசம், கிழக்கில் சத்தீஸ்கர், தெற்கில் மஹாராஷ்டிரம், மேற்கில் குஜராத் இதன் எல்லைகள். மொத்தம் 52 மாவட்டங்கள். ஆட்சிமொழி இந்தி. கல்வியறிவு 72.6%. இந்துக்கள் 91%. முஸ்லிம்கள் 6.6%. பழங்குடிகள் 21%.

பொருளாதாரம்: நிலக்கரி, சுண்ணாம்புக்கல், எண்ணெய் வித்துக்கள், இரும்புத் தாது, தாமிரம், மாங்கனீஸ், வைரம் என்று இயற்கை வளங்கள் ஏராளம். ஜவுளித் துறை, சிமென்ட், உருக்கு, உணவுப் பதப்படுத்துதல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் துறைகள் வளர்ச்சி கண்டிருக்கின்றன. வேளாண்மை சார்ந்த மாநிலம். நர்மதை, தபதி நதிகள் பாயும் பிரதேசம். பஞ்சார், தவா, மச்னா, ஷக்கர், டென்வா, சோன்பத்ரா ஆகிய சிறு ஆறுகளும் பாய்கின்றன. கோதுமை, சோயாபீன்ஸ், உளுந்து, கரும்பு, நெல், சோளம், பருத்தி, கடுகு அதிகம் விளையும் மாநிலம். நிலப்பரப்பில் 30% காடுகள். நாட்டின் 12% காடுகள் இங்கு உள்ளன. வேளாண் துறையைப் பெரிய அளவில் வளர்த்தெடுத்திருக்கிறார் சவுஹான். அதேசமயம், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காததும் பெரிய பிரச்சினையாகியிருக்கிறது.

கிராமம் - நகரம்: தலைநகரம் போபால். வேகமாக நகர்மயமாகிவரும் மாநிலங்களில் ஒன்று. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நகரங்கள் இந்தூர், போபால், ஜபல்பூர், குவாலியர். 14 மாநகராட்சிகள். 96 நகராட்சிகள். நகரப் பஞ்சாயத்துகள் 249. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களான கஜுராஹோ சிற்பங்கள், சாஞ்சி ஸ்தூபி, பீம்பேட்கா பாறை வாழிடங்கள் இங்கு உண்டு. மனிதவளத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலம். வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்று. ஊட்டச்சத்து குறைவால் வளர்ச்சி குன்றிய மாநிலம். பெண்களிடையே ரத்தசோகை அதிகம். பெண் சிசுக் கருக்கலைப்பும் அதிகம்.

பேசுபொருள்: வியாபம் ஊழல், விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூடு, 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரே கட்சியின் ஆட்சி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைப் பேசியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸுக்குள் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாஜக கேட்டது. இங்கும் காங்கிரஸின் கோஷ்டிப் பூசலை பாஜக விமர்சனமாக்கியது. பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் ஒருசில பகுதிகளில் மட்டும் செல்வாக்குடன் உள்ளன.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவு: லண்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Published : 10 Dec 2018 18:03 IST

லண்டன்




இந்திய வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று லண்டன் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப தடையில்லை என வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய வங்கிகளில் கிங்பிஷர் நிறுவன தொழிலதிபர் மல்லையா ரூ. 9,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றார். அமலாக்கத் துறையும், சிபிஐயும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய சொத்துக்களை முடக்கியது.

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதித் தீர்ப்பு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீ ரென்று தான் வாங்கிய கடனை 100 சதவீதம் வட்டியில்லாமல் திருப்பித் தருவதாகவும், அரசும் வங்கிகளும் தயவு செய்து இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிமன்றத்துக்கு வந்த விஜய் மல்லையா வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்திய வங்கிளுக்கு செலுத்த வேண்டிய தொகையை திருப்பித் தர தயாராக இருப்பதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க எந்த தடையும் இல்லை என வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவு விரைவில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு பிரிட்டன் அரசு முடிவெடுக்கும்.

இதையடுத்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. எனினும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே அவர் இந்தியா அழைத்து வரப்பட்டால் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அவரை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட உள்ளார். மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Indian-Origin Man Jailed For Molesting Woman On Bus In Singapore

The woman asked Kajayendran Krishnan to stop touching her but he persisted, calling her "sarakku", or "hot chick" in Tamil.

Indians Abroad | Press Trust of India | Updated: December 04, 2018 16:27 IST



The prosecutor had previous convictions for disorderly behaviour.

SINGAPORE:

An Indian-origin man in Singapore was sentenced on Tuesday to 10 weeks in prison for molesting a woman on a bus, a media report said.

Kajayendran Krishnan, a 50-year-old permanent resident from Malaysia, pleaded guilty to one charge of using criminal force intending to outrage the woman's modesty and another of insulting her modesty.

A third charge was taken into consideration for sentencing, the Channel News Asia reported.

The court heard that Mr Krishnan boarded shuttle bus service CW6 from Singapore's Boon Lay estate heading towards Tuas Checkpoint and onwards to the Southern Malaysian state of Johore on the evening of May 7.

The woman, a 44-year-old Malaysian, was sitting on the left-most seat in the last row with an empty seat beside her, the report said.

Mr Krishnan, who was drunk, sat beside her and used his hand to caress her right arm with the intention to molest her, it said.

The woman quickly moved away and shifted her body towards the window, Deputy Public Prosecutor Mark Yeo told the court.

She asked Mr Krishnan to stop touching her but he persisted, calling her "sarakku", or "hot chick" in Tamil. He also uttered expletives in Tamil and Hokkien (a Chinese dialect).

The woman tried to leave, standing up in order to cross to the accused's right. However, Mr Krishnan extended his legs, trapping the woman in the corner of the bus and grabbing her arm, caressing it, the report said.

The victim approached an Immigration and Checkpoints Authority officer to report the matter once the bus arrived at Tuas Checkpoint.

The prosecutor asked for a custodial sentence, leaving the exact term up to the judge.

He pointed out that the accused had previous convictions for disorderly behaviour and that the current incident occurred on public transport and with wrongful restraint.

Mr Krishnan, who was unrepresented, told the court at first that he was not sitting down on the bus, but standing up instead.

However, after the prosecutor said he had video footage, Mr Krishnan told District Judge Mathew Joseph that he intended to go ahead with his plea of guilt.

Telling the court about his problems of being unemployed, divorce and supporting elderly mother in Malaysia, Mr Krishnan said he was sorry and wished to apologise to the woman.

Asked by the judge if he had been drunk, he admitted that he had indeed drunk alcohol as he had "some personal problems".

District Judge Mathew Joseph said, "Far from showing remorse, you are trying to wriggle your way out of responsibility of this by saying that you were standing up, then later when the prosecutor said there was video footage, you said it was accidental. To me it shows you are not remorseful."

The Judge added that no woman passenger should have to look and see if she was about to be molested or harassed on public transport.

"Let me suggest to you that the next time you are drunk, you don't take the bus. You walk home. Lest you get into any mischief," the judge added.

The sentence was backdated to September 27 this year, when the accused was remanded.
Madras HC issues notice to Vijaya Bhaskar for riding motorcycle without helmet 

Source : Last Updated: Thu, Dec 06, 2018 17:47 hrs [India], Dec 6 (ANI): 

The Madras High Court on Thursday issued a notice to Tamil Nadu Health Minister Vijaya Bhaskar for riding a motorcycle without a helmet. The notice was in response to a petition filed by activist 'Traffic' Ramaswamy seeking action against the health minister. "As part of a health camp in Pudukottai, Vijaya Bhaskar and 100 others rode motorcycles without wearing helmets," the petition stated. (ANI)

Read more at: http://www.sify.com/news/madras-hc-issues-notice-to-vijaya-bhaskar-for-riding-motorcycle-without-helmet-news-national-smgrLxjhaichc.html

மறதியும் தேவைதான்!

மறதியும் தேவைதான்!  நிவாற்றல் மிகவும் தேவைதான்; ஆனால், நிம்மதியான வாழ்க்கைக்கு மறதியும் தேவைதான் என்பதைப் பற்றி... மறதியும் தேவைதான் முனைவர...