Tuesday, September 24, 2019

மலேசியா சுற்றுலா செல்ல இலவச விசா வழங்குவது குறித்து பரிசீலனை: தூதரக அதிகாரி சரவணன் தகவல்

சென்னை

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலேசியாவுக்கு சுற்றுலா செல்ல இலவச விசா வழங்குவது குறித்து அந்நாட்டு அரசு பரி சீலனை செய்து வருவதாக மலேசிய தூதரக அதிகாரி கே.சரவணன் தெரி வித்துள்ளார்.

மலேசியா நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ‘மலேசியா 2020’ என்ற திட்டத்தை தென் இந்தியாவில் ஊக்கப்படுத்தும் வகையில் சென்னையில் நேற்று கண்காட்சி தொடங்கியது. இதில், மலேசியாவில் இருந்து வந்து பங்கேற்ற 27 பேர் அங்குள்ள சுற்றுலா திட்டங்கள், சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

இதேபோல், மதுரை, கோயம் புத்தூர் மற்றும் கொச்சியிலும் கண்காட்சி நடக்கவுள்ளது. மலே சியா 2020 சுற்றுலாவுக்கான பிரத் யேக ‘லோகோ’ வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக மலேசிய தூதரக அதிகாரி கே.சரவணன் பேசும்போது, ‘‘அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ‘மலேசியா 2020’ என்ற திட்டத்தை ஊக்கப்படுத்தம் வகையில் நேற்று முதல் 26-ம் தேதி வரையில் தென்இந்தியாவில் 4 நகரங்களில் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்தியாவில் இருந்து மலேசி யாவுக்கு சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 311 பேர் மலேசியாவுக்கு வந்து சென்றுள்ள னர். கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் மட்டுமே 3 லட்சத்து 54 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் 7 லட்சத்து 28 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலேசியாவுக்கு சுற்றுலா செல்ல ‘இலவச விசா’ வழங்குவது குறித்து மலேசியா அரசு ஆலோசித்து வருகிறது’’ என்றார்.

மலேசியா சுற்றுலா வாரியத் தின் மூத்த இயக்குநர் முகமது தையிப் இப்ராஹிம் பேசும்போது, ‘‘சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளைக் கவர்வதில் மலேசியா முக்கிய பங்கு வகிக் கிறது. தற்போது, புதிய, புதிய சுற்றுலாத் தலங்கள், இயற்கை எழிலுடன் கூடிய இடங்களும் மேம் படுத்தப்பட்டு சுற்றுலா இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் முதல் காலாண் டில் மலேசியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 33 லட்சத்து 54 ஆயிரத்து 575 ஆகும். சிங்கப்பூர், இந்தோனேஷியா, சீனா, தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அடுத்த ஆண்டில் மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3 கோடி யாக உயரும் என எதிர்பார்க் கிறோம்’’ என்றார்.

நிகழ்ச்சியில் மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் (மாட்டா) டத்தோ டான் கோக் லியாங், மலேசியா சுற்றுலாத் துறையின் துணை இயக்குநர் லோகி தாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மருத்துவம் தெளிவோம் 01: அன்புக்கு அடங்கும் ஆட்டிசம்




டாக்டர் கு. கணேசன்

கு. கணேசன்

பத்து மாதக் குழந்தையைக் கூப்பிடுகிறீர்கள். அது திரும்பிப் பார்க்கவில்லை. அந்தக் குழந்தையைக் கொஞ்சுகிறீர்கள். அது முகம் பார்த்துச் சிரிக்கவில்லை; மழலையில் பேசவில்லை அல்லது சொன்ன வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருக்கிறது. குழந்தை பேசுவது உங்களுக்குப் புரியவில்லை. அப்படியென்றால், அந்தக் குழந்தைக்கு ‘ஆட்டிசம்’ இருக்கச் சாத்தியமிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் மட்டும் ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டுகிறது; இந்தியாவில் ஒரு கோடிப் பேர். இன்னும் 10 ஆண்டுகளில் இது 5 மடங்கு அதிகரிக்கும் என்று அச்சுறுத்துகிறது ஒரு புள்ளிவிவரம்.

ஆட்டிசம் என்றால் என்ன?

ஆட்டிசம் ஒரு நோயல்ல; குறைபாடு. ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் மொழித் திறன், பேச்சுத் திறன், மற்றவர்களோடு கலந்து பழகும் திறன், நடத்தைத் திறன், ஒருங்கிணைப்புத் திறன் போன்றவற்றில் பின்தங்கி இருப்பார்கள். Autistic disorder, PDD, `Asperger’ என இதில் பல வகை உண்டு. எனவே, இதை `ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’ (Autism Spectrum Disorder - ASD) என்கிறது மருத்துவ உலகம். இந்தக் குறைபாட்டின் தீவிரத்தன்மை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். எனவே, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் திறமையும் சரி, சிக்கல்களும் சரி தனித்துவமானவை.

ஆட்டிசம் ஏன் வருகிறது? தடுப்பூசி போடுவதால் இது வருமா?


குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை ஆட்டிசத்துக்கு அடிப்படைக் காரணம். அதனால்தான் இது பரம்பரையாக வருகிறது. நெருங்கிய உறவுத் திருமணமும் மிகவும் தாமதமான திருமணமும் தாமதமான குழந்தைப் பேறும் ஆட்டிசத்துக்குக் காரணங்களாகின்றன. கர்ப்பிணிக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு பிரச்சினை இருந்தால் அல்லது ஃபோலிக் அமிலம் குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம்.

கர்ப்பிணியிடம் காணப்படும் மன அழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைப்பிடித்தல், வலிப்பு நோய் மாத்திரைகள் சாப்பிடுவது, மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுவது போன்ற காரணிகள் குழந்தைக்கு இந்தக் குறைபாடு ஏற்படுவதைத் தூண்டுகின்றன. தடுப்பூசி போடுவதால் ஆட்டிசம் வருகிறது என்பதற்கு அறிவியல் ஆதாரமில்லை.




ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்னென்ன? அவற்றை எப்போது அறியலாம்?

# குழந்தைக்குப் பாலூட்டும் போது தாயின் கண்களைக் குழந்தை பார்க்காது;
# ஆறு மாதம் ஆனால்கூடத் தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது;
# ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது.
# கண்ணில் படும் பொருள்களை ஆர்வமாகப் பார்க்காது; அவற்றை விளையாடத் தரும்படி கேட்காது;
# ‘டாட்டா’ காட்டுதல் போன்ற கை அசைப்பு இருக்காது;
# மற்ற குழந்தைகளுடன் விளையாட விரும்பாது;
# தனக்குத் தேவையானதை விரலால் சுட்டிக் காட்டாது;
# அடுத்தவரின் கைபிடித்துச் சென்றுதான் காட்டும்.
# குழந்தையின் வளர்ச்சிப் படிகளில் தாமதம் ஏற்படும்……

இப்படி இதன் அறிகுறிப் பட்டியல் நீள்கிறது. இந்த அறிகுறிகள் குழந்தையிடம் தெரிந்தால் போகப்போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர் எண்ணிவிடக் கூடாது. அதேவேளையில் இவற்றில் சில அறிகுறிகளை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைக்கு, ஆட்டிசம் உள்ளது என்றும் கணித்துவிடக் கூடாது. பல அறிகுறிகள் இருந்து, குழந்தையின் இயல்பான திறமைகள் பாதிக்கப்படுகின்றன என்றால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் இருக்க வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்து 18 மாதங்களுக்குள் இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்துகொள்ளலாம். குழந்தைக்கு 3 வயதுக்கு முன்னரே மனநல மருத்துவரிடம் இது குறித்து ஆலோசித்துக்கொண்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

என்ன சிகிச்சை உள்ளது?

ஆட்டிசத்துக்குக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை. அன்பும் அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான் அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; பூங்கா, கோயில், கடற்கரை, பொருட்காட்சி போன்ற வெளி இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்.

முதலில் பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல், தூக்கம் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சிகள் தர வேண்டும். குழந்தைக்குப் புரியும் விதமாக நிறையப் பேச வேண்டும், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங், யோகா போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இந்தப் பயிற்சிகள் அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்து வதுடன், தத்தம் வேலை களைத் தாமே சுயமாகச் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை யையும் தரும்.

இந்தக் குறைபாட்டின் ஆரம்ப கட்டத்திலேயே மொழிப் பயிற்சிக்கும் பேச்சுப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். உளவியல் சார்ந்த பயிற்சிகள், கல்விக்கான பயிற்சிகள், அறிவுத் திறன் பயிற்சிகள் போன்றவற்றையும் முறைப்படி தர வேண்டும். பேச வேண்டும், பழக வேண்டும் என்பது போன்ற எண்ணங் களைக் குழந்தையிடம் ஏற்படுத்துவதற்குத் தாயின் பங்கு மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படும்.

எங்கெல்லாம் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம்?

இதற்கெனத் தனியார் பயிற்சி மையங்கள் பெருநகரங்களில் இருக்கின்றன. அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் இந்தப் பயிற்சிகளை இலவசமாகப் பெறலாம். தொடர்ந்து பயிற்சிகள் அளித்தால் இவர்களும் மற்ற குழந்தைகளுக்கு நிகராக வாழ முடியும். மேலைநாடுகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஐம்பது வயதைத் தாண்டியும் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். சர் ஐசக் நியூட்டன், பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சில பிரபலங்கள்; அரிய சாதனைகளால் உலக வரலாற்றில் இடம் பிடித்தவர்களும்கூட!
இந்தியாவில் மாணவர்கள் மத்தியில் இ- சிகரெட்டுகள் புழக்கம் 77% அதிகரித் துள்ள நிலையில், நாடு முழுவதும் இ-சிகரெட்டு களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இ-சிகரெட்டினால் ஏற்பட் டுள்ள திடீர் மரணங்கள் அதன் உற்பத்தியை உலகம் முழுக்க மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com
மருத்துவ உலகில் மகத்தான சாதனை: 5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை!

By ENS | Published on : 23rd September 2019 11:00 AM


மும்பை: 5 கிலோக்கும் குறைவான உடல் எடையுடன் இருந்த 5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மும்பையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த உயிர் காக்கும் அறுவை சிகிச்சை கடந்த ஜூன் மாதம் நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் குழந்தை பூரண குணம் அடைந்து உடல் நலம் தேறி வரும் நிலையில், அதுபற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சூரத்தைச் சேர்ந்த சுசித்ரா - க்ருனல் வால்வியின் செல்ல மகள் இப்ஸா. குழந்தை பிறக்கும் போதே மஞ்சள் காமாலையுடன் பிறந்தது. வழக்கமான சிகிச்சைகளால் மஞ்சள் காமாலை குணம் அடையாததால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு பிலியரி அட்ரெஸியா எனப்படும் குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

20 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த குறைபாடு இருக்கும். அதாவது, கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடையாத நிலை. இதற்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், தாமதித்தால் பிரச்னை மோசமாகிவிடும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

5 மாதக் குழந்தையாக இருக்கும் போது இந்த நோய் கண்டறியப்பட்டதால் கல்லீரல் மாற்று மட்டுமே ஒரே தீர்வு என்று குளோபல் மருத்துவமனை மருத்துவர் அனுராக் ஷ்ரிமால் தெரிவித்தார்.

சுசித்ராவின் தங்கை க்ருபாலியின் கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து இப்ஸாவுக்கு பொறுத்தியுள்ளனர். பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய இப்ஸாவுக்கு மஞ்சள் காமாலையும் குணமடைந்து வருவதாகவும், தற்போது அவர் நன்கு விளையாடி மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இப்ஸாவின் தாய் சுசித்ரா தெரிவித்தார்.

இந்த அறுவை சிகிச்சைக்காக ரூ.16 லட்சம் செலவானதாகவும் அவர் கூறினார்.
ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி: இனி ஏசி ரயிலில் சுற்றுலா செல்லலாம்!

Published on : 23rd September 2019 02:18 PM



ஆன்மிக சுற்றுலா செல்லும் ஆன்மிக அன்பர்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவாக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) செயல்படுகிறது. இதன் சார்பில், பாரத தரிசன ஆன்மிக சுற்றுலா, ரயில் சுற்றுலா, எல்டிசி பேக்கேஜ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கல்வி சுற்றுலா என சிறப்பு சுற்றுலாக்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஆன்மிக சுற்றுலாத் தலங்களுக்கு முதன்முறையாக ஏசி ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.சி. செய்துள்ளது.

இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி. இணைப் பொதுமேலாளர் பி.ஷாம் ஜோசப்,, மேலாளர் எல்.சுப்பிரமணி ஆகியோர் கூறியது:

யாத்திரை செல்லும் பயணிகளுக்கு வசதிக்காக ஏசி ரயில் மூலமும் இந்தியாவின் பல இடங்களுக்கு சுற்றுலாக்கள், யாத்திரைகள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சியில் இருந்து அடுத்த மாதம் 19-ஆம் தேதி புறப்படும் ஏசி ரயில் பெங்களூரு, சென்னை வழியாக உத்தரப் பிரதேச மாநிலம் செல்கிறது. அங்குள்ள திவ்ய தேசத் தலங்களான நைமிசாரண்யம் ஸ்ரீ தேவராஜ பெருமாள், ஸ்ரீராமர் மற்றும் நேபாள நாட்டில் அமைந்துள்ள ஸ்ரீ கஜேந்திர மோட்ச சாளக்கிராம மூர்த்தி ஸ்தலம், முக்திநாத் ஸ்ரீ மூர்த்தி பெருமாள் திவ்ய தேசம், போக்ராவில் அமைந்துள்ள பிந்துபாஷினி ஆலயம், தவி அருவி, மகேந்திர குகைகள், உலக அமைதி நினைவாலயம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 13 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலா ஏசி ரயில் பயணம், ஏசி அறைகள், ஏசி வாகனம், விமான கட்டணம், உணவு உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கும். ஒருவருக்கான கட்டணம் ரூ.53,330 முதல் ரூ.63,400 வரை.

இதேபோல, "தி குளோரி கிங்டம்' என்னும் சுற்றுலாத் திட்டமும் உள்ளது. லக்னெள, புத்தர் பிறந்த லும்பினி, போக்ராவில் உள்ள பிந்து பாஷினி ஆலயம், பகவதி அம்மன், தர்பார் சதுக்கம், பசுபதி நகர், புத்த நீல்கண்ட ஆலயம் ஆகியவற்றை தரிசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கான கட்டணம் ரூ.50,600 முதல் ரூ.53,680 வரை ஆகும்.

மேலும் விவரங்களுக்கு, 9003140680, 9003140681 என்ற எண்களை தொடர்பு கொண்டு பெறலாம் என்றனர்.
இறைச்சி வியாபாரிகளை இழிவுபடுத்துவதாகப் புகார்: தொடங்கியது விஜய் படத்துக்கு எதிரான முதல் போராட்டம்!

By எழில் | Published on : 23rd September 2019 04:58 PM |



ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்நிலையில் பிகில் பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள காட்சி தங்களை இழிவுபடுத்துவதாகக் கூறி கோயம்புத்தூர் கறிக்கடை உரிமையாளர்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளார்கள். இறைச்சி வெட்டும் கட்டை மீது செருப்புக் காலை வைத்து விஜய் அமர்ந்திருக்கும் காட்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியானது. இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த கோபால், இந்த விவகாரம் குறித்துக் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உள்ள இறைச்சி வியாபாரிகள் அதிகாலையில் தொட்டு வணங்கி தொழில் செய்யும் கறி வெட்டும் கட்டை மீது செருப்புக்கால் வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளையும் அவமரியாதை செய்துவிட்டார்கள். அந்த போஸ்டர் வெளியான சில நாள்களில் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், இயக்குநர் அட்லி ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த போஸ்டரை நியாயப்படுத்தி ஏஜிஎஸ் நிறுவனம் மட்டும் பதில் அளித்தது என்று கூறியுள்ளார்.

விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த மெர்சல், சர்கார் ஆகிய படங்கள் சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் பிகில் படமும் தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

புதிய ஓய்வூதியம்: அரசாணை வெளியீடு

Added : செப் 24, 2019 06:36

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தால், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் மட்டுமே, அவருடைய குடும்பத்தாருக்கு, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும், அவருடைய குடும்பத்தாருக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய நடைமுறை, அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.
State Express Transport Corporation buses from CMBT diverted via Ashok Pillar, Pallavaram

A section of commuters rued that the move would increase travel time by 90 minutes for those boarding buses at the CMBT.

Published: 23rd September 2019 07:55 AM |

By Anbuselvan B


Express News Service

The State Express Transport Corporation (SETC) on Sunday diverted all buses bound for central and southern districts, which originate at CMBT, via Vadapalani, Guindy, Pallavaram and Tambaram. So far, except a few select ordinary services, all buses including the air-conditioned, have run via the Chennai bypass road.

While the SETC said the decision was aimed at ensuring ease for south suburban commuters who have to travel up to Perungalathur for boarding buses, a section of commuters rued that the move would increase travel time by 90 minutes for those boarding buses at the CMBT.

The higher travel time during festival season would force many to opt for private omnibuses, commuters said.

Official sources said that so far commuters from Guindy, Adyar, Taramani, St. Thomas Mount, Pallavaram, Madipakkam, Kovilambakkam, Thiruvanmiyur and Thuraipakkam faced hardships in boarding SETC buses at Perungalathur owing to shortage of MTC buses and heavy traffic during rush hour.

Similarly, during the return journey, commuters from Tiruchy and Madurai get down at Perungalathur and board MTC bus or take cab to reach their destinations in suburban areas.

V Baskaran, Managing Director, SETC, said, "From June, ordinary services are operated via inner ring road and GST road during non-rush hour. Henceforth, all buses will be diverted via Ashok Pillar and Tambaram. The southern suburban areas are densely populated and the decision was taken only for the benefit of commuters.

Given that the bridge construction works at Koyambedu, Pallavaram and Vandalur have been delayed for 12 months and are yet to be completed, regular travellers from northern parts of Chennai pointed out that the move would only increase the traffic congestion and thereby the travel time.

"Both GST and inner ring road witness huge vehicular pile-up during rush hour. Adding over 1,000 buses would only increase the vehicular traffic, forcing the commuters to opt for private omnibuses," said S Sankaran of Anna Nagar, a bus enthusiast.

A few SETC drivers and conductors said though the move increased the ticket revenue, the travel time increased by two hours. "If the buses are diverted after completion of on-going bridge works, it will benefit both commuters and workers."

Factfile:

1. On June 20, SETC diverted select ordinary services via inner ring  road and GST instead of bypass road during non-rush hour

2. From Sunday onwards, all buses operated via Chennai-Tiruchy NH were  diverted via Vadapalani, Pallavaram and Tambaram

3. SETC operates AC sleeper, AC seater and non-AC sleeper buses

4. South suburban commuters travel upto Perungalathur to board buses

5. Flyovers being constructed at Koyambedu, Pallavaram and Vandalur

6. GST and inner ring road witness traffic snarls during rush hour

7. Travel time of SETC buses has increased by 90 to 120 minutes

8. A section commuters say the move is aimed to force the commuters to  opt for omnibuses

9. SETC operates 1,175 buses in 685 routes

NEWS TODAY 10.07.2026