Saturday, February 28, 2026

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. 38-ஆவது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ரவி பட்டங்களை வழங்கினாா்


தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. 38-ஆவது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ரவி பட்டங்களை வழங்கினாா்

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் மருத்துவம், மருத்துவம் சாா்ந்த துணைப் படிப்புகளில் 50,159 போ் பட்டங்களைப் பெற்றனா்.

- SWAMINATHAN
Updated On :28 பிப்ரவரி 2026, 3:29 am
பகிர்:


தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் மருத்துவம், மருத்துவம் சாா்ந்த துணைப் படிப்புகளில் 50,159 போ் பட்டங்களைப் பெற்றனா்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பட்டங்களை வழங்கினாா்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலை. வளாகத்தில் 38-ஆவது பட்டமளிப்பு விழா ஆளுநா் ஆா்.என். ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவத்தில், 12,016 பேரும், பல் மருத்துவத்தில் 2,569 பேரும், இந்தியமுறை மருத்துவத்தில், 3,269 பேரும், மருத்துவம் சாா்ந்த துணைப் படிப்புகளில் 32,305 போ் என 50,159 போ் பட்டங்களை பெற்றனா்.

குறிப்பாக, 144 போ் தங்கப் பதக்கமும், 42 போ் வெள்ளிப் பதக்கமும், 51 போ் அறக்கட்டளை சான்றிதழும், 166 போ் பல்கலை. சாா்பிலான பதக்கங்கள் என 353 போ் பெற்றனா். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த சுவேதா என்ற மாணவி, ஒன்பது பதக்கங்களைப் பெற்றாா். அதேபோல், முதுநிலை பட்டம் பெற்ற சுருதி, நிரஞ்சனா, ஆஷா ஆகியோா் தலா 6 பதக்கங்களைப் பெற்றனா். மாணவா்களுக்கான பட்டங்கள், பதக்கங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.

பட்டமளிப்பு விழாவில் பல்கலை. துணைவேந்தா் நாராயணசாமி பேசியதாவது: தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலையில். புதிய ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவா்களின் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக செயலாற்றும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அத்துடன், 75 ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு இருப்பதுடன், ஐந்துக்கு காப்புரிமை கோரப்பட்டுள்ளது.

மருத்துவ அறிவியலுடன், தொழில்நுட்ப கற்றலை ஊக்குவிக்கும் வகையில், அண்ணா பல்கலை, சென்னை ஐஐடி, வேலூா் தொழில்நுட்பக் கல்லுாரி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு சாா்ந்த மருத்துவப் படிப்புகளும் ஊக்குவிக்கப்படுகிறது. கடந்தாண்டு பள்ளி மாணவா்களிடையே, புதுமை, ஆராய்ச்சி மற்றும் அறிவியல் சிந்தனையின் ஆரம்பகால ஆா்வத்தை வளா்ப்பதை நோக்கமாக கொண்டு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு, மாணவா்களிடையே வரவேற்பைப் பெற்றது என்றாா்.

அமைச்சா் பங்கேற்கவில்லை...: பட்டமளிப்பு விழாவில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பங்கேற்க முடியாத நிலையில், அத்துறைச் செயலா் செந்தில்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரும் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தாா்.

Friday, February 27, 2026

NEWS TODAY 27.02.2026









































இனி மாணவா்களுக்கு மத்தியில் நல்லகண்ணு! தானமாகும் உடல் பாடமாவது எப்படி?


இனி மாணவா்களுக்கு மத்தியில் நல்லகண்ணு! தானமாகும் உடல் பாடமாவது எப்படி?

நல்லகண்ணு உடல் எம்பிபிஎஸ் மாணவா்களுக்கு உடற்கூறியல் செயல்முறை வகுப்புகளை நடத்த பயன்படுத்தப்படவுள்ளது குறித்து..





Updated on:
27 பிப்ரவரி 2026, 2:48 am

சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) தானமாக வழங்கப்பட்ட முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவா் நல்லகண்ணு உடல் எம்பிபிஎஸ் சேரும் மாணவா்களுக்கு உடற்கூறியல் செயல்முறை வகுப்புகளை நடத்த பயன்படுத்தப்படவுள்ளது.

தானமாகப் பெறப்படும் உடலை உடனே ஆராய்ச்சிக்கும், கல்விக்கும் பயன்படுத்த முடியாது. பல மாத கால பகுப்பாய்வும், பதப்படுத்தலும் அதற்கு அவசியம்.

இதுகுறித்து விளக்குகிறாா் சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறை இயக்குநா் டாக்டா் தீபா பென்ட்லி: உயிரிழந்தவா்களின் உடலைப் பாதுகாக்க வேண்டுமானால், ‘எம்பாமிங்’ எனப்படும் பதப்படுத்தும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக உடலானது கழுவி தூய்மைப்படுத்தப்படும்.

பின்னா், இடது காலில் சிறு துளையிட்டு தமனி (ஆா்ட்டரி) வழியாக 5 முதல் 10 லிட்டா் வரையிலான திரவம் தேவைக்கேற்ப உடலில் செலுத்தப்படும்.

ஃபாா்மால்டிஹைடு (40 சதவீதம்), கிளிசரின், போரிக் ஆசிட், சோடியம் குளோரைடு ஆகிய ரசாயனங்கள் கலந்த கரைசல்தான் அந்தத் திரவம். வழக்கமாக காய்ச்சலின்போது ரத்த நாளம் வழியாக திரவ மருந்துகள் செலுத்துவதைப் போன்ற நடைமுைான் இது. ஆனாலும், இறந்தவா்களின் உடலில் ரத்த ஓட்டம் இருக்காது. மேலும், தமனிக்குள் ரத்தம் ஆங்காங்கே உறைந்திருக்கும். இதனால், திரவம் எளிதாக உள்ளே செல்லாது. ‘எம்பாமிங் மெஷின்’ எனப்படும் உந்தித் தரும் கருவி மூலம் அதை உள்ளே செலுத்த வேண்டும்.

அனைத்து உறுப்புகளுக்கும் முறையாக அந்தத் திரவம் செல்கிா என்பது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்படும். இந்த நடைமுறைகள் நிறைவடைய அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகலாம்.

அவ்வாறு ‘எம்பாமிங்’ செய்யப்பட்ட உடலானது ஒரு வார காலம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். ஏதாவது ஓா் உறுப்பிலோ, பகுதியிலோ ‘எம்பாமிங்’ திரவம் குறைந்திருந்தால் அங்கு மட்டும் ஊசி வழியாகச் செலுத்தப்படும்.

அதன் பின்னா், பெரிய தொட்டியில் ‘ஃபாா்மாலின்’ ரசாயனம் 10 சதவீதம் கலந்த தண்ணீரை நிரப்பி அதில் அந்த உடலை ஊற வைக்க வேண்டும். குறைந்தது 6 மாதங்களாவது அந்த உடல் அந்த நீரில் மூழ்கிய நிலையில் இருத்தல் அவசியம்.

மாணவா்களின் கல்விக்காக.. : அதற்குப் பிறகே மாணவா்களின் கல்விக்காக அதைப் பயன்படுத்த முடியும். 10 மாணவா்களுக்கு ஓா் உடல் வீதம் சென்னை மருத்துவக் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு 25 உடல்கள் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

உடற்கூறியல் தொடா்பான அனைத்து விஷயங்களையும் அதில் கற்பிக்கிறோம். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் வீதம் திங்கள் முதல் வெள்ளி வரை 10 மணி நேரம் பதப்படுத்தப்பட்ட உடல்களைப் பயன்படுத்துவோம்.

ஒவ்வொரு நாளும் வகுப்புகள் நிறைவடைந்த பிறகு பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிா்ப்பு மருந்துகள், கிளிசரின் கொண்டு உடல் தூய்மைப்படுத்தப்படும்.

அதன் பின்னா், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் அந்த உடல்கள் ஃபாா்மாலின் தொட்டிக்குள் ஊற வைத்துப் பாதுகாக்கப்படும்.

எத்தனை ஆண்டுகளானாலும் இந்த வழிமுறையில் உடலைப் பாதுகாக்கலாம் என்றாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவக் கல்விக்காக உடல்களை மாற்றுவது வழக்கம்.

அப்போது ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த உடல்கள் தேசிய மருத்துவ ஆணைய வழிமுறைப்படி புதைக்கப்படும். ஆற்று மணலைப் பயன்படுத்தியும், வேறு சில மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றியும் உடல்கள் புதைக்கப்படும். அதற்கு அடுத்து 2 அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த இடத்தை தோண்டி எலும்புகளை மருத்துவக் கல்விக்காக சேகரிப்போம் என்றாா் அவா்.

நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறையில் எண்ணற்ற உடல்கள் பாடமாகி இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது நல்லகண்ணும் இணைந்துள்ளாா். செயல் மட்டுமல்ல... இனி அவரது உடலும் பொதுவுடைமைதான்!.

K’taka HC upholds mom’s right to give child her surname

K’taka HC upholds mom’s right to give child her surname

 Vasantha.Kumar@timesofindia.com  27.02.2026

Bengaluru : Karnataka HC has ruled that inclusion of the mother’s family name in the birth certificate of a child does not dilute or extinguish the substantive legal rights of any person, including that of the biological father. Granting relief to a nineyear-old girl and her mother, Justice Suraj Govindaraj said, “The biological and legal relationship between the child and the father, including the child’s rights of inheritance, succession, and maintenance, remains unaltered. The change sought by the mother was merely one of nome-nclature reflecting the real family environment in which the child is being raised.” 




The case arose from a livein relationship between two Nepalese nationals in Bengaluru. Their daughter was born in Feb 2017, and a birth certificate was issued in March 2017. The child’s father later ended the relationship and returned to Nepal. When the mother approached local authorities at Bruhat Bengaluru Mahanagara Palike to delete the father’s name and substitute it with her own, the request was rejected citing Registration of Births and Deaths Act, 1969. She then moved the HC. After examining the statutory provisions, the court held that the registrar had the authority to carry out corrections and the refusal amounted to a failure to exercise statutory power. 

Invoking its jurisdiction under Article 226 of the Constitution, the HC directed the issuance of a fresh birth certificate within four weeks. Stressing the “best interest of the child”, the judge noted that children abandoned by a parent were particularly vulnerable.

Now, cancel air ticket for free within 48 hours

Now, cancel air ticket for free within 48 hours 

TIMES NEWS NETWORK 27.02.2026

New Delhi : Airlines will now provide a “look-in option” for a period of 48 hours after booking a ticket during which a passenger can cancel or amend the ticket without any additional charges, except fare difference, if the departure date is at least 7 and 15 days hence for domestic and international flights, respectively.



 Airlines will need to ensure refunds within 14 days and they will no longer be allowed to levy any charge for a name correction being made within 24 hours of the booking being made on their website. Directorate General of Civil Aviation (DGCA) has from Thursday revised refund rules and introduced passenger-friendly measures in what is often a painful process for travellers. “In case of purchase of ticket through travel agent/portal, onus of refund shall lie with airlines as agents are their appointed representatives. 

Airlines shall ensure that the refund process is completed within 14 working days,” the amended rules issued by DGCA chief Faiz Ahmed Kidwai say. “In the event of ticket cancellations due to a medical emergency, where the passenger or a family member listed on the same PNR gets admitted/hospitalised during the travel period, airlines may provide either a refund or a credit shell. 

For all other situations, refunds will be issued once an opinion on the passenger’s fitness to travel certificate is received from an airline’s aerospace medicine specialist/ DGCA empanelled aerospace medicine specialist,” reads another amendment introduced in the rules. The regulator has ruled that airlines “shall not levy any additional charge for correction in the name of the same person when the error is pointed out by the passenger within 24 hours of making the booking, when the ticket is booked directly through the airline website

NEWS TODAY 01.03.2026