Showing posts with label News clippings 2. Show all posts
Showing posts with label News clippings 2. Show all posts

Tuesday, October 20, 2015

பெண் எனும் பகடைக்காய்: சிறகடிக்கும் ஒற்றைப் பறவைகள்! ..........பா.ஜீவசுந்தரி

Return to frontpage

தனது இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளத்தின் மீது ஆச்சி மனோரமா மிதந்து சென்ற காட்சி நம் வாழ்நாள் முழுவதும் மறக்காது. அநேகமாக அண்மைக் காலங்களில் பெண் ஆளுமை ஒருவரின் இழப்புக்காக இவ்வளவு மக்கள் வெள்ளம் திரண்டதில்லை.

பொதுவாகத் தங்கள் அபிமான ஆண் நடிகர்கள் அல்லது அரசியல் தலைவர்களுக்கே இது போன்ற பெரும் வெள்ளம் திரளும். ஆனால், ஆச்சிக்குத் திரண்ட கூட்டம் சிந்திக்க வைக்கிறது. அவர் ஆயிரம் படங்களுக்கு மேல் நகைச்சுவை நாயகியாக நடித்தவர் என்பதாலா அல்லது ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புரிந்தவர் என்பதாலா, அல்லது பழக மிகவும் இனியவராக, யார் மீதும் தவறாக ஒரு சொல் கூறாதவராக, யாரிடமிருந்தும் ஒரு சொல் கேளாதவராக வாழ்ந்து அனைவரிடமும் நட்பு பேணியதாலா?

அவரது இழப்பிலிருந்து மீள முடியாமல் அவரை அறிந்தவர்கள் கூறிய அஞ்சலிக் குறிப்புகள் அனைத்திலும் ஓர் உண்மை இருந்தது. அவர் ஒற்றைப் பறவையாக வாழ்ந்தவர். அவர் ஏற்ற பாத்திரங்கள் இனித்ததைப் போல அவரது சொந்த வாழ்க்கை இனிப்பானதல்ல. சோகங்கள், துயரங்கள், துரோகங்கள் இவற்றைச் சந்தித்துக்கொண்டேதான் அவர் மக்களுக்கு மகிழ்வூட்டிக்கொண்டிருந்தார்.

தோல்வியை எதிர்கொள்வதன் சவால்கள்

ஒரு பெண் தன் மண வாழ்க்கை தோல்வியுறும்போது எதிர்கொள்ளும் துன்பங்கள் அவ்வளவு எளிதான வையல்ல. அதிலும் குழந்தைகளுடன் தனித்து விடப்படும்போது அவர்களுக்கு அன்பும் ஆதரவும் தந்து அரவணைக்கக்கூடிய பெற்றோர், உடன் பிறந்தவர்களின் அண்மை மிக அவசியம். தன் கையே தனக்குதவி என வாழ நேரும்போதும் பொருளாதார பலம் பெற்றால்தான் பாதிக் கிணறு தாண்டியவர்களாவார்கள். அது துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் அவர்களுக்கு அளிக்கும். அவர்களின் பெரும் பலமும் அதுவே.

உற்றவர்களின் ஆதரவு இல்லாதபோது அக்கறை என்ற பெயரில் உள்ளே புகும் நபர்கள், சாய்ந்துகொள்ளத் தமக்குத் தோள் கொடுப்பதாக நினைத்து மயங்கி மீண்டும் சரிவை நோக்கித் தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம். உண்மையிலேயேயே மாறாத அன்பும் அக்கறையும் கொண்டவர்களும் இல்லாமல் இல்லை. ஆனால், இவர்கள் அக்கறையானவர்கள்தானா என்பதைக் கண்டுகொள்வதற்குள் காலம் குப்புறத் தள்ளிவிட்டுக் குழியும் பறித்துவிடுகிறது. ஆச்சிக்கு தாயாரின் உற்ற துணை, அசலான நண்பர்கள் பலரின் ஆதரவு இருந்தது.

பல ஆண்டுகளின் முன் சென்னைப் புறநகரில் 25 கி.மீ தாண்டிக் குடியிருந்தபோது, அன்றாடம் மின்சார ரயிலில் பயணித்து அலுவலகம் வர வேண்டும். அதில் பெண்கள் பெட்டி என்பது பலவிதமான கூட்டுக் கலவைகளும், உணர்வுகளும், வண்ணங்களும் நிறைந்த அனுபவத்தைக் கொடுக்கும். தலைவிரி கோலமாக, இடுப்பில் குழந்தை, குழந்தைக்கான உணவு, உடை அடங்கிய பை, ஹேண்ட்பேக் சகிதம் ஓடி வந்து ரயிலைப் பிடிக்கும் ஒரு பெண்ணை தினமும் நாங்கள் சந்திப்போம்.

அந்த ஒரு மணி நேர ரயில் பயணத்தில் ஒவ்வொரு பெண்ணும் மற்றவருக்கு உற்ற தோழியாய், தாயாய் உருமாறி பரஸ்பரம் உதவிக்கொள்வோம். குழந்தைக்கு ஒரு பெண் சோறூட்டுவதற்குள், தலைவிரி கோலமாய் வந்தவள் கூந்தலைச் சீவி முடித்து சிங்காரித்திருப்பாள். மற்றொரு பெண் அந்தக் குழந்தைக்கு உடையுடுத்தி, அலங்காரம் செய்வாள். அதிகாலை முதல் வீட்டு வேலைகள், சமையலை முடித்துவிட்டுச் சாப்பிட நேரமில்லாமல் வரும் பெண்கள் தங்கள் சாப்பாட்டுக் கடையை அங்குதான் முடிப்பார்கள். வாய்க்குப் பிடித்ததை சமைத்துச் சாப்பிட முடியாத, வயிற்றுப் பிள்ளையுடன் வரும் ஒரு கர்ப்பிணிக்காக, அவள் விருப்பம் அறிந்து சமைத்து எடுத்து வந்து கொடுக்கும் அன்பு அதன் உச்சம்.

சென்ட்ரல் ஸ்டேஷன் வருவதற்குள் இத்தனையும் நடந்து முடிந்திருக்கும். பின் அவரவர் வழி, அவரவர் பாடு.

மாலை வீடு திரும்பும் போதும் இதே காட்சி. உதிரியாக வாங்கி வரும் பூ தொடுத்து முடிக்கப்பட்டிருக்கும்; அடுத்த நாள் சமையலுக்கான கீரைக்கட்டுகள் பல கைகளின் உதவியோடு ஆய்ந்து முடிக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சிகள் எப்போதும் காணக்கூடியவை. மின்சார ரயிலில் அன்றாடம் பயணிக்கும் அத்தனை பெண்களுக்கும் இது அத்துப்படி. அதே அன்பு, பிரியம், வாத்ஸல்யத்துடன் இப்போதும் அம்மாதிரி நட்பும் பயணமும் தொடர்கின்றன. ஒரு மணி நேரப் பயணத்தில் கிடைக்கும் இந்த மாதிரியான அன்பும், ஆதரவும் வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவளுக்கு எல்லா இடங்களிலும் கிடைத்துவிட்டால் ஒற்றைப் பெண் எதையும் சாதிப்பாள்.

குழந்தைகளை வளர்க்கும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறு மாதிரியானவை. ஒருவருக்கொருவர் அவர்களே எதிரிகள், அவர்களே நண்பர்கள் என இரட்டை அவதாரம் எடுக்க வேண்டும். அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப கொஞ்சம் தாமதமானாலும் பயம் அடிவயிற்றில் உருக்கொள்ளும். குழந்தை என்ன செய்கிறானோ / செய்கிறாளோ என்ற கவலை வேலைகளின்போது கவனத்தைச் சிதறடிக்கும். பள்ளிப் பருவம் தாண்டும்போது வேறு மாதிரியான பயங்கள். வளரிளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளைக் கையாள்வதில் மிகுந்த பொறுமையையும் எச்சரிக்கை உணர்வையும் கைக்கொள்ள வேண்டும். பின் கல்லூரிப் படிப்பு தாண்டும் வரை பயம், பயம், பயம்தான்.

ஒரு குழந்தை மட்டும் கொண்டுள்ள பெற்றோர் எதிர்கொள்ளும் அச்ச உணர்வு மிக நியாயமானது. தன் வாழ்க்கைதான் இப்படியானது, தன் குழந்தைகள் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என நினைக்காத பெற்றோர்கள் யார் இங்கு? ஒற்றைப் பெண் எப்போது இங்கு சாதனையாளராகிறாள்? அவள் பொருளாதார ரீதியாகத் தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்து, குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்து, அவர்களுக்கான எதிர்கால வாழ்க்கையை நல்ல விதமாக அமைத்துக் கொடுக்கும்போதுதான் அவளுக்கான சவால் நிறைவு பெறுகிறது.

இதில் எது ஒன்றில் சறுக்கினாலும் அவள் தோல்வி கண்டவளாகவே சமூகத்தால் புறம் தள்ளப்படுவாள். ஆனால், பொருளாதாரம் எனும் கடிவாளம் அவர்கள் கையிலேயே இருக்க வேண்டும், அப்போதுதான் மரணத்தின்போதும் அவள் வாழ்க்கையை வென்றவளாகிறாள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

ஆங்கிலம் அறிவோமே - 80: கொலைகளின் ஆங்கிலம் .............ஜி.எஸ்.சுப்ரமணியன்

Return to frontpage

What is your good name?

What is your respectable name?

இரண்டில் எது மேலும் பவ்யமானது என்று கேட்டுள்ளார். Good அல்லது respectable தேவையில்லை! What is your name? என்பதே போதுமானது. மரியாதை பொங்க வேண்டுமென்றால் May I know your name என்றோ Can you please tell your name என்றோ கேட்கலாமே!

எனக்கென்னவோ நமது இந்தி மொழி பேசும் மக்கள் மூலமாகத்தான் ‘good name’ வந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இந்தியில் ‘ஆப் கா ஷுப் நாம் கியா ஹை? (Aap kaa shub naam kya hai?) என்று கேட்பது வழக்கம். அந்த ஷுப் (சுபம்) தான் (shub) ஆங்கிலத்தில் good ஆக எதிரொலித்திருக்க வேண்டும்.

The என்பதை ‘தி’ என்று உச்சரிக்க வேண்டுமா? அல்லது ‘த’ என்று உச்சரிக்க வேண்டுமா? என்று ஒரு வாசகர் கேட்டிருக்கும் கேள்வி வேறு சிலரது மனங்களிலும் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு.

அதாவது The என்பதை ‘தில்’ என்பதில் உள்ள ‘தி’ என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா அல்லது தர்மம் என்பதில் உள்ள ‘த’ என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா? அதாவது THIS என்பதில் உள்ள THI என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா? அல்லது THAT என்பதில் உள்ள THA என்பதுபோல உச்சரிக்க வேண்டுமா? அதாவது (‘ஐயகோ, விளக்கம் புரியுது. விடையைச் சொல்லுங்க’ என்று குரல்கள் கேட்கின்றன). சரி சரி

A,E,I,O,U ஆகியவற்றை vowels என்றும் பிற ஆங்கில எழுத்துக்களை consonants என்றும் குறிப்பிடுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

Vowelsக்கு முன்னால் உள்ள the என்றால் அதை ‘தி’ என்று உச்சரிக்க வேண்டும். The orange தி ஆரஞ்ச். The Umbrella தி அம்ரெல்லா.

Consonantsக்கு முன்னால் உள்ள the என்றால் அதை ‘த’ என்று உச்சரிக்க வேண்டும். The basket த பாஸ்கெட். The purse த பர்ஸ்.

வெகு நாட்கள் கழித்து மொட்டை மாடியில் படுத்துக்கொண்டபோது வானத்தில் தெரிந்த நட்சத்திரங்கள் வெகு ரம்யமாக இருந்தன.

“Never I have seen such a sight’’ என்றான் இளைய மகன். அவனது ஆங்கிலத்தைத் திருத்தி அவன் பரவசத்தை நான் அப்போது குலைக்கவில்லை.

ஆனாலும் ஒரு சிறு விளக்கம். Never என்ற வார்த்தையோடு ஒரு வாக்கியம் தொடங்கினால் அதைத் தொடர்ந்து auxiliary verb இடம் பெறும்.

அதாவது “Never have I seen such a sight’’ என்றுதான் அந்த வாக்கியம் இருந்திருக்க வேண்டும்.

FETICIDE INFANTICIDE



ஒரு வாசகர்“ Suicide என்று அந்த வார்த்தைக்கு ஏன் பெயரிட்டார்கள்?” என்று கேட்டிருக்கிறார். இன்னொருவர் “Infanticide, Feticide ஆகிய இரண்டும் ஒன்றா” என்று கேட்டிருக்கிறார்.

பொதுவாக cide என்பது கொலையைக் குறிக்கிறது. Homicide என்பது மனிதரை மனிதர் செய்யும் கொலை. லத்தீன் மொழியில் sui என்றால் தன்னைத் தானே என்று அர்த்தம். எனவே suicide என்றால் தற்கொலை.

Genocide என்றால் இனப்படுகொலை. Insecticide என்றால் பூச்சிகளைக் கொல்வது. Biocide என்றாலும் நடைமுறையில் பூச்சிக் கொல்லிதான்.

Feticide என்பதும் Infanticide என்பதும் ஒன்றுதான் என்று சிலர் கருதினாலும் அப்படியல்ல. Feticide என்பது கருவில் இருக்கும்போது கொல்வது. அதாவது கருச்சிதைவு. கணிசமான நாடுகளில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு Feticide-ஐ சட்டங்கள் அனுமதிக்கின்றன.

Infanticide என்பது தன் குழந்தையை அதன் பெற்றோரே (முக்கியமாக அம்மாவே) கொல்வது. ஒருவயதுக்கு உட்பட்ட குழந்தையைக் கொல்வதைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். Infanticide-ஐ எந்த நாட்டின் சட்டமும் அனுமதிப்பதில்லை.

மன்னரைக் கொன்றால் அது Regicide. தந்தையைக் கொன்றால் Patricide. அன்னையைக் கொன்றால் Matricide.

அதற்காக cide-ல் முடியும் வார்த்தைகள் எல்லாம் கொலையைக் குறிப்பவை என்று ஒட்டுமொத்தமாக மனதில் ‘கொல்ல’ வேண்டாம்.

எடுத்துக்காட்டாக, coincide. ஒரே நேரத்தில் நடப்பது, ஒரே புள்ளியில் இணைவது போன்றவற்றைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். Our vacations coincided this year. The interest of employers and employees do not generally coincide. The centres of concentric circles coincide.

“That was a sheer coincidence’’ என்றால் அது திட்டமிட்டதல்ல. மிகவும் தற்செயலாக நடைபெற்றது என்று பொருள்.

“Personification குறித்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். Metaphor குறித்து நான் படித்ததும் இதுவும் ஒன்றாக இருக்கிறதே இரண்டும் ஒன்றுதானே?’’ என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். இந்த இரண்டோடு Simile என்பதையும் சேர்த்தே விளக்கி விடலாம் என்று தோன்றுகிறது.

Simile (ஸ்மைல் அல்ல ஸிமிலி) என்பது உவமை.

She was as busy as a bee.

It was as black as coal.

You were as brave as a lion.

Metaphor என்பதை உருவகம் எனலாம். அதாவது ஒன்றுக்குக் குறியீடாக மற்றொன்றைச் சொல்வது. மற்றபடி பொதுவான வாக்கியங்களில் அப்படிப் பயன்படுத்த மாட்டோம். Life is a roller coaster என்றால் வாழ்க்கையில் நாம் நிஜமாகவே (அதாவது நம் உடல்) உயரத்திலும், பள்ளத்திலும் சென்று வருகிறோம் என்பதில்லை. நிகழ்வுகள் மாறி மாறி வருகின்றன என்றுதான் அர்த்தம்.

Time is money என்பார்கள். அதற்காக ஒரு பொருளை கடையில் வாங்கிக் கொண்டு time-ஐ கொடுக்க முடியுமா என்ன? Time is money என்பது ஒரு Metaphor.

My neighbour is a fox என்றால் அவர் தந்திரமானவர் என்றுதானே அர்த்தம். அவருக்கு நான்கு கால்கள் இருக்குமா என்ன?

Personification என்பது Metaphor-லிருந்து மாறுபட்டது. உயிரற்ற பொருள் அல்லது தன்மைக்கு உருவம் கொடுப்பது. அதாவது மனிதத் தன்மையை உயிரற்ற ஒரு பொருளுக்கு அளிப்பது.

The trees sighed in the wind.

The moon winked at me.

The stars danced playfully.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

Sunday, October 18, 2015

பம்பையில் ஆடைகளை வீசினால் ஆறு ஆண்டு சிறை: கேரள ஐகோர்ட் உத்தரவு..dinamalar

சபரிமலை: பம்பையில் பக்தர்கள் ஆடைகளை வீசி எறிந்தால் அவர்களுக்கு ஆறு ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும், இல்லாத ஆச்சாரங்களை உருவாக்கும் குருசாமிக்கும் தண்டனை உண்டு என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சபரிமலை பயணத்தில் பக்தர்கள் பம்பையில் குளிக்க வேண்டும். பம்பையில் குளிப்பதன் மூலம் பாவங்கள் களையப்படுகிறது என்பது நம்பிக்கை. ஆனால் பக்தர்கள் இந்த நதியையும் அசுத்தப்படுத்துவதுதான் வேதனை. தரிசனம் முடிந்து வரும் போது தங்கள் உள்ளாடைகள் உள்ளிட்ட அனைத்து ஆடைகளையும் வீசி எறிவது, பம்பையில் உணவு சாப்பிட்டு விட்டு அதன் எச்சில் இலைகளை பம்பையில் கொண்டு போடுவது என இல்லாத ஆச்சாரங்கள் சமீப காலமாக வளர்ந்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்று தந்திரிகள், தேவசம்போர்டு என அனைத்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. மகரவிளக்கு காலத்தில் பம்பை நதி மிக மோசமாக அசுத்தமாகிறது.
இது தொடர்பாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு ஆணையர் அளித்த அறிக்கையின் பேரில் நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், அனு சிவராமன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
பம்பை நதி அசுத்தம் அடையாமல் இருக்க மாசு கட்டுப்பாடு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் அணிந்த ஆடைகளை பம்பையில் போட வேண்டும் என்ற ஆச்சாரம் சபரிமலையில் கிடையாது. ஆனாலும் பக்தர்கள் இவ்வாறு செய்கின்றனர். இவ்வாறு ஆடைகளை வீசுவது தடை செய்யப்படுகிறது. மீறி வீசுபவர்களுக்கு ஒன்றரை முதல் ஆறு ஆண்டு வரை சிறைத்தடைனையும், அபராதமும் விதிக்கலாம்.
பக்தர்களை அழைத்து வரும் குருசாமிகளின் உத்தரவு படிதான் பக்தர்கள் பம்பையில் ஆடைகளை வீசுகிறார்கள். இனி குருசாமிகள் அப்படி செய்தால், குற்றம் செய்ய துண்டியதாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஆடைகளை போடுவதற்கு இணையான தண்டனை வழங்கலாம். இந்த விஷயத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தேவசம்போர்டும், போலீசும் உறுதுணையாக இருக்க வேண்டும். பம்பை நதிக்கரையில் அந்தந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளும், பம்பையில் ஸ்பெஷல் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பம்பையில் ஆடைகளை வீசினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற விபரத்தை பக்தர்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்த தேவசம்போர்டும், மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Thursday, October 15, 2015

3 years ago she was murder accused, now puffed up with pride of PG degree Padmini Sivarajah,TNN | Oct 15, 2015, 09.52 AM IST

MADURAI: A mother of four children, 43-year-old Usha Rani made use of a chance provided by the law to bounce back after a tragic event rocked her life three years ago.

On February 9, 2012, when Usha Rani came home from work, she saw her estranged husband trying to rape her teenage daughter. In an instinctive reaction, Usha grabbed a cricket bat and bludgeoned her drunk husband to death. She immediately called an ambulance to send her husband's body to mortuary and surrendered at the police station. Usha Rani told the police she had killed her husband in a desperate attempt to rescue her daughter from being raped by her own father.

She was arrested immediately. The following day, however, the then superintendent of police Asra Garg invoked section 100 of the Indian Penal Code and released her from the rarest of rare case. As per the section, if a death is caused in the process of private defence (to prevent or escape rape or murder), the person need not be tried for murder.

From then on, it was no turning back for Usha, who has completed post-graduation despite having three young daughters and a son to take care of. She went to her parents' house and brought up her children after the 'incident'.

She had completed only schooling when she got married in 1990. Her life became muddled after her husband became an alcoholic a few years after the marriage. But this did not hold her back from pursuing B.Sc (psychology) which she completed in 2011.

After the death of her husband, she went on to do her M.A in sociology through the Tamil Nadu Open University (TNOU) and received her certificate on October 10 this year at a grand function held in Chennai. Governor K Rosaiah was the chief gues at the function.

"We shifted our house soon after the 'incident' and not many neighbours here know of my past. I still do not know how they will react if they come to know about it. But today, I am able to look after my children with my job as a DTP operator in the TNOU," Usha said proudly.

"It is a temporary post and will be helpful if it is made a permanent one," she said. She canvasses and enrolls people who have completed Class 10 to take up courses with the TNOU's distance learning programme and exceeds the target given to her.

Usha said women should not continue to endure alcoholic abuses. They should come out and seek relief, she added.

"They should believe that there is a life beyond marriage, in which every woman can realise her dreams," she said. If she comes across any woman facing abuse, she teaches her meditation. Usha is also now part of a SHG and works there in the evenings.

While Usha's first daughter has completed her studies in aviation, her second daughter is doing her post-graduation, third daughter B.Com and her son will sit for the SSLC board examination next year.

Women should believe that there is a life beyond marriage, in which every one of them can realise their dreams. They shoud not endure alcoholic abuses

Man couriers cobras to electricity compay staffer as warning Arun Dev,TNN | Oct 14, 2015, 10.22 PM IST

BENGALURU: Hiss or her. That was the rather frightening message that a Bescom (Bengaluru Electricity Supply Company Limited) employee got when he opened a parcel that came for him in office. Out crawled a couple of cobras leaving him and other staffers panic-struck. Later, some letters in the courier package revealed the truth behind the bizarre gift. It was a warning to the employee to stay away from the sender's wife, or else more such dangerous surprises would be in store for him.

The entire drama played out on Tuesday afternoon at the Bescom's vigilance office near Shivananda Circle. The sender of the parcel is suspected to be a 48-year-old man from Tumakuru.

High Grounds police have taken up a complaint of criminal intimidation. They said the parcel came from a courier service for the Bescom employee (whose identity has been withheld). When he opened the parcel, two cobras popped out of the box.

Terrified, the employee quickly threw the box outside the office. After the snakes slithered out of the premises, he and other staffers checked the box and found some letters addressed to him. The letters stated that the employee was getting too close to the sender's wife and if he didn't keep himself under check, more dangerous things would come his way.

Sandeep Patil, DCP (central), said a complaint has been lodged by the Bescom employee and an investigation ordered into the case. "The employee has provided some leads which we are following. We are also in touch with the courier company that delivered the parcel. We will make an arrest in the case soon," he said. The employee had shifted to the Bengaluru office recently following a transfer from Tumakuru.

The parcel carrying the snakes had holes in it for ventilation, added sources in Bescom.

From October 20, most taxis to pay Rs 150 to enter Terminal 3 of Indira Gandhi International Airport Anvit Srivastava,TNN | Oct 15, 2015, 05.03 AM IST

NEW DELHI: Taking a taxi to or from the Indira Gandhi International Airport may now burn a hole in your pocket with the Delhi International Airport Limited (DIAL) planning to impose an entry fee of Rs 150 on every commercial vehicle, including taxis, entering the T3 arrival terminal from October 20. DIAL says the step has been taken to ensure passenger safety and to curb touts at the airport.

Besides paying the new fee, commercial vehicles are also likely to be towed away or have their tyres clamped if they exceed the time limit of eight minutes they will be allowed at the terminal, DIAL said.

Under the current conditions, he arrival area remains congested with all sorts of commercial vehicles driving in and causing raffic confusion, said DIAL. It added that the main objective in imposing the new fee was to curb he presence of touts who tarnish he image of the airport.

However, Mega Cabs, Meru Cabs and the black-yellow taxis have been exempted from paying he entry fee because, DIAL explained, these taxis occupied lane one and two at Terminal 3, while other commercial vehicles used the third lane. Congestion in the third lane caused traffic jams and slowed the movement at the airport. This then turned into a security concern, officials said.

"DIAL has proposed to regu late and decongest the forecourt area to prevent unauthorized parking for long periods which is causing inconvenience to passengers and users at large. The said charge is not a parking charge but deterrence for unauthorised parking. Such practice is prevalent in many airports across India and globally . This step is will also prevent touting activities around the passenger area and will thus enhance the passenger's safety ," said a DIAL spokesperson.

Vehicles entering the 1D domestic terminal have also been exempted for the time being but may soon have to pay the entry fee. According to DIAL, there is construction going on in a large area there for the expansion of the Delhi Metro station.Since this may lead to clogging at the terminal, vehicles at 1D are presently exempted from the new rule.

The airport company also clarified that no charge will be levied on private vehicles for entering the airport.

Sunday, October 11, 2015

விருதுநகரில் 100-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய முதியவர்

Dinamani





விருதுநகரில் 4 தலைமுறையை கண்ட முதியவர் 100-வது பிறந்த நாளை தனது குடும்பத்தினர், பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் ஆகியவைகளால் வாழ்நாள் 50 வயது முதல், 60 வயதாக சுருங்கி வருகிறது. மேலும், 40 வயது தொடக்கத்திலேயே சர்க்கரை உள்பட பல்வேறு நோயால் அவதிப்படும் நிலையுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடான உணவு பழக்கம், நடைபயிற்சி ஆகியவைகளால் 100-வயது தொடக்க விழாவை மகிழ்ச்சியுடன் முதியவர் பேரன், பேத்திகளுடன் கொண்டாடியுள்ளார்.

விருதுநகரில் உள்ள இளங்கோவன் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.எ.நடராஜன்(100). வியாபார சங்கத்தின் நிர்வாகியாகவும், பருப்பு வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு பன்னீர்ராஜன்(68), ஜெயக்கர்(66), ராமநாதன்(64), தயானந்தம்(62) என 4 மகன்களும், தனலட்சுமி(60) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து சென்னை, விருதுநகர், ஈரோடு, அமெரிக்கா, கலிபோர்னியா போன்ற இடங்களில் தனித்தனியாக வசித்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.எ.நடராஜனும், அவரது மனைவி பரமேஸ்வரி(88) ஆகிய 2 பேர் மட்டும் மேற்குறிப்பிட்ட இடத்தில் வசித்து வருகின்றனர். தற்போது, இவருக்கு 100-வது வயது தொடங்கியுள்ளது. இதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அவரது மகன்கள் தனியார் அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு முன்னதாக தங்களது குடும்பத்தினர், சம்பந்திகள், மாமனார் மற்றும் மைத்துனர், பங்காளி நிர்வாகிகள் ஆகியோருக்கு மட்டும் அழைப்பிதல் அனுப்பியிருந்தனர். இதையடுத்து 4 தலைமுறையை கண்ட உறவினர்கள் மற்றும் பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் என 69 பேருடன் தனது 100-வது வயது தொடக்க விழாவை முதியவர் சிறப்பாக கொண்டாடினார்.

இது குறித்து அவரது 3-வது மகனும், கூட்டுறவு துறையில் ஓய்வு பெற்ற அதிகாரியுமான ராமநாதன்(66) கூறுகையில், தந்தையும், தாயாரும் பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழவும், எவ்வித தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக தனியாக வசித்து வருகின்றனர். அவர்களது தேவைகளையும் அவர்களாகவே பூர்த்தி செய்து கொள்வார்கள். நாள்தோறும் காலையில் 2 கி.மீ தூரம் நடைபயிற்சி செய்து, ஊருக்கு வெளியே சென்று குளியலை முடித்து வருவார். எப்போதும் போல் கட்டுப்பாடன சைவ உணவும், இதுவரையில் மழை நீரையே பருகியும் வருகிறார். கால்பந்து விளையாட்டு வீரர். எவ்விதமான கெட்ட பழக்கம் இல்லாத நிலையில் கதராடையை மட்டும் அணிவார். அதோடு, காந்தி, காமராஜர், இந்திராகாந்தி ஆகியோருடன் நெருங்கி பழகியவர். எனது தந்தை கட்டிய வீட்டையும் காமராஜர் முதல்வராக இருந்த போது திறந்து வைத்துள்ளார். மேலும், அப்போது இருந்த வண்ணக்கலர் வாக்கு பெட்டிகள் வைத்த தேர்தல் முதல், வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்திய ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Friday, October 9, 2015

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு


கோப்புப் படம்


தமிழகத்தில் வரும் 12-ம் தேதி முதல் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் கன மழை பெய்ய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை மட்டுமே பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 12-ம் தேதி முதல் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Thursday, October 1, 2015

பணியின்போது உயிரிழக்கும் அரசு அலுவலர் குடும்பத்துக்கு முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்வு



பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர் குடும்பத்தின் உடனடி தேவைக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை, பொதுத்துறை, ஓய் வூதியங்கள் உள்ளிட்ட துறை களின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகள்:

பணியின்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளர் குடும்பத்துக்கு உடனடி தேவைக்காக வழங்கப் படும் முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த் தப்படும். முன்னாள் படைவீரர் களுக்கு தொழில் சார்ந்த செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ரூ.1 கோடி வழங்கப்படும்.

முப்படைகளில் பரம்வீர்சக்ரா, அசோக சக்ரா, மகாவீர் சக்ரா உள்ளிட்ட விருதுகள் மற்றும் பதக்கங்கள் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசு மற்றும் ஆண்டு உதவித்தொகைகள் உயர்த்தி வழங்கப்படும். இரண்டாம் உலகப்போரின்போது பணிபுரிந்த தமிழக முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படும்.

டேராடூன் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளாவில் இருந்த பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 1956-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின் பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் 23 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திருச்சி மாவட்டம், திருச்சி பெரும்பிடுகு முத்தரையர், கரூர் தீரன் சின்னமலை, பெரம்பலூர் திருவள்ளுவர் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதே ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் செயல்படத் தொடங்கின. இதனால் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. 1997-ம் ஆண்டு முதல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களின் பெயரிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படத் தொடங்கியபோது இவை திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களாயின. கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது முதலில் மணப்பாறையும், அதன்பின் முசிறியும் கரூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. அதன்பின் அவை மீண்டும் திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கரூர் மாவட்டம் 2895.57 ச.கி.மீட்டர் கொண்டது. மக்கள் தொகை 10,76,588 (2011). மாவட்ட பிரிவினையின்போது எட்டரை லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு பிறகு மீண்டும் 2002-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2007-ம் ஆண்டு மீண்டும் அரியலூர் மாவட்டம் செயல்படத் தொடங்கியது. தமிழகத்தில் மத்திய மண்டலத்தில்தான் அதிக மாவட்டங்களும், குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களும் அதிகளவில் உள்ளன. குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடத்திலும், அரியலூர் 3-வது இடத்திலும் அதனைத் தொடர்ந்து கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களும் உள்ளன.

Return to frontpage
க.ராதாகிருஷ்ணன்

கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளாவில் இருந்த பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டு 1956-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின் பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழகத்தில் 23 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திருச்சி மாவட்டம், திருச்சி பெரும்பிடுகு முத்தரையர், கரூர் தீரன் சின்னமலை, பெரம்பலூர் திருவள்ளுவர் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 30) 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அதே ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் செயல்படத் தொடங்கின. இதனால் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. 1997-ம் ஆண்டு முதல் அந்தந்த மாவட்ட தலைநகரங்களின் பெயரிலேயே மாவட்டங்கள் அழைக்கப்படத் தொடங்கியபோது இவை திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களாயின.

கரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது முதலில் மணப்பாறையும், அதன்பின் முசிறியும் கரூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. அதன்பின் அவை மீண்டும் திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. கரூர் மாவட்டம் 2895.57 ச.கி.மீட்டர் கொண்டது. மக்கள் தொகை 10,76,588 (2011). மாவட்ட பிரிவினையின்போது எட்டரை லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு பிறகு மீண்டும் 2002-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் 2007-ம் ஆண்டு மீண்டும் அரியலூர் மாவட்டம் செயல்படத் தொடங்கியது. தமிழகத்தில் மத்திய மண்டலத்தில்தான் அதிக மாவட்டங்களும், குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களும் அதிகளவில் உள்ளன.

குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடத்திலும், அரியலூர் 3-வது இடத்திலும் அதனைத் தொடர்ந்து கரூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களும் உள்ளன.

பதுக்கியவர்கள் தானாகவே செலுத்தினர்: ரூ.3 ஆயிரத்து 777 கோடி கறுப்புப் பணம் வசூல்!

vikatan.com
பதுக்கியவர்கள் தானாகவே செலுத்தினர்: ரூ.3 ஆயிரத்து 777 கோடி கறுப்புப் பணம் வசூல்!

புதுடெல்லி: 
கறுப்புப் பணம் குறித்து அதை பதுக்கியவர்கள் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் ரூ.3,770 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஜூலை மாதம், கறுப்புப் பண சட்டத்தை மத்திய அரசு வெளியிட்டது. மேலும் வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை எப்படி மதிப்பீடு என்பது குறித்த விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. அசையா சொத்துகள், நகைகள், மதிப்பு மிக்க கற்கள், ஓவியங்கள், பங்குகள் ஆகியவற்றை தற்போதைய சந்தை விலையில் அதற்கான மதிப்பு கணக்கிடப்படும் என்று மத்திய வரி ஆணையம் (சிபிடிடீ)  கூறிஇருந்தது.  
வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை தாமாக முன்வந்து ஒப்படைப்பதற்காக 90 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் தெரிவிக்கும்போது, வரி மற்றும் அபராதம் என 60 சதவீதம் மட்டுமே செலுத்தி பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்துவிடலாம். மேலும், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிப்பவரிடம் எவ்வித விசாரணையும் நடத்தப்பட மாட்டாது. அவர்கள் அளிக்கும் தகவல் அப்படியே ஏற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், கடந்த 3 மாதங்களாக 638 பேர் தாமாக முன்வந்து தாக்கல் செய்துள்ளதன் அடிப்படையில், அரசு ரூ.3,770 கோடி வசூலித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரையில் தாமாக முன்வந்து கறுப்புப் பண விவரங்களை அளித்தவர்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை.

இதுவரை ரூ.3770 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாலும், இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கழிவறையில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய்க்கு ரிசார்ஜ்!

vikatan.com
பொது  இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் சென்னையில் கழிவறையில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் ரிசார்ஜ் செய்வோம் என்று அறிவிப்பு வைத்து இருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பைப் பார்த்தால் வித்தியாசமாக இருக்கத்தான் செய்கிறது..... இது உண்மை தாங்க. அதுவும் நம்ம சென்னையில் தான் இதை அறிமுகப்படுத்தி இருக்காங்க... பிரதமர் மோடியின் 'க்ளீன் இந்தியா' என்ற இயக்கத்துக்கு போட்டியா என்று கூட நீங்கள் நினைக்க கூடும்.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 214 இடுகாடுகள் உள்ளன. இங்கு இறந்தவர்களை இலவசமாக எரிக்கும் வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனாலும் சில இடங்களில் பணம் வசூலிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும், சென்னையில் உள்ள பெரும்பாலான இடுகாடுகள் பராமரிப்பு இன்றி பாழடைந்து காணப்படுகின்றன. இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம், சில இடுகாடுகளை என்.ஜி.ஓக்களிடம் ஒப்படைத்து அவற்றை செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி முதல் அண்ணாநகர் வேலங்காடு நியூ ஆவடி சாலையில் உள்ள மாநகராட்சி இடுகாடு,  ஐ.சி.டபுள்யூ.ஓ என்ற என்.ஜி.ஓ.விடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக புதர்மண்டி கிடந்த இந்த இடுகாட்டுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. அதோடு இடுகாடு பணிகளில் பெண்களையும் பணிக்கு அமர்த்தி புரட்சியை ஏற்படுத்தியது ஐ.சி.டபுள்யூ.ஓ.

இதுகுறித்து ஐ.சி.டபுள்யூஓ என்ற என்.ஜி.ஓ.வின் நிறுவன செயலாளர் ஹரிகரன் கூறுகையில், "அண்ணாநகர் வேலங்காடு இடுகாடு நான்கரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை எங்களிடம் மாநகராட்சி ஒப்படைத்தவுடன் புனரமைப்பு பணிகளை செய்தோம். இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 4 முதல் 5 பிணங்கள் வரும். மொத்தம் 12 பேர் பணியில் உள்ளனர். அதில் 4 பெண்கள். இவர்களுக்கு அலுவல் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக இடுகாட்டில் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. கழிவறைகள் இருந்தாலும் கூட அதை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும். அனைவரும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மூலம் அங்கு இருந்த இரண்டு கழிவறைகளை சீரமைத்தோம். அதில் ஆண்களுக்கு ஒன்றும், பெண்களுக்கு ஒன்றும் என பயன்பாட்டுக்கு விட்டோம். தினமும் கழிவறையை பராமரித்து சுத்தமாக வைத்திருந்தாலும் அவற்றை இடுகாட்டுக்கு வருபவர்கள் பயன்படுத்தாமல் பொது இடங்களிலேயே சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் கழிவறையை பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு பரிசு திட்டத்தை அறிவித்தோம்.

கழிவறைக்கு செல்லும் வழி என்று குறிப்பிட்டு 'தயவு செய்து கழிவறையை பயன்படுத்துங்கள். பயன்படுத்தினால் மாபெரும் பரிசு உங்களுக்கு காத்திருக்கிறது' என்ற அறிவிப்பு பலகையை வைத்தோம். அதன்பிறகு மக்கள் கழிவறையை பயன்படுத்தத் தொடங்கினார்கள். சிலர் கழிவறையைப் பயன்படுத்தி விட்டு எங்களிடம் பரிசையும் மறக்காமல் கேட்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு எல்லாம் பேனாவை பரிசாக கொடுத்தோம். மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பரிசு வாங்குபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தது. இதன்பிறகு குலுக்கல் முறையில் தேர்வு செய்து பேனாவை வழங்கி வந்தோம்.
அடுத்தப்படியாக அக்டோபர் 1ஆம் தேதி (இன்று) முதல் பரிசு வழங்குவதில் சில மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்தோம். ரோட்டரி கிளப் ஆப் மீனம்பாக்கமும், ஐ.சி.டபுள்யூ.ஓ ஆகியவை இணைந்து மொபைல் போனுக்கு ரிசார்ஜ் செய்யலாம் என்று முடிவு செய்தோம். வேலங்காடு இடுகாட்டில் உள்ள கழிவறையை பயன்படுத்துபவர்களின் செல்போன் நம்பர்கள் பெறப்பட்டு அதில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 ரூபாய்க்காக ரிசார்ஜ் செய்ய உள்ளோம். இது இன்று தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும்" என்றார்.

நல்லதொரு முயற்சி!

-எஸ்.மகேஷ்

Monday, September 28, 2015

'டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தைப் பற்றி ‘ஒரு வரி’ யில் பேசி அசத்திய நரேந்திர மோடி

Return to frontpage

சிலிகான் வேலியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ஒரு வரியில் எல்லோரும் கவரும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி பல கருத்துகளை தெரிவித்தார். அதைக் கேட்டு பிரபல நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் (சிஇஓ) ஆச்சரியம் அடைந்தனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிலிக்கான் வேலியில் நேற்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் பேசினார். கூகுள், மைக்ரோசாப்ட், சிஸ்கோ உட்பட பல முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் மோடி பேசுகையில், டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் பல கருத்துகளை ஒரு ஒரு வரியாக எல்லோரையும் கவரும் வகையில் குறிப்பிட்டார். அதன் விவரம் வருமாறு:

* உலகில் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையையும் மாற்றியுள்ளது சிலிகான் வேலி.

* உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் சந்தித்துள்ளேன்.

* முகநூல் உட்பட இவைதான் நமது உலகின் அண்டை வீட்டாராக உள்ளன.

* முகநூல் மட்டும் ஒரு நாடாக இருந்திருந்தால், அதுதான் மக்கள் தொகை அதிகம் கொண்ட 3-வது நாடாக இருந்திருக்கும்.

* கூகுள் ஆசிரியர்களை குறைத்துவிட்டது. மிகவும் விரும்பப்படுவதாக உள்ளது.

* ட்விட்டர் எல்லோரையும் நிருபர்களாக்கி உள்ளது.

* போக்குவரத்து விளக்குகள் வேலை செய்ய சிஸ்கோவின் ரவுட்டர்கள்தான் சிறந்தவை.

* நீங்கள் விழித்திருக்கிறீர்களா, தூங்குகிறீர்களா என்பது இப்போது முக்கியமில்லை.

* நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்களா ஆப் லைனில் இருக்கிறீர்களா என்பது முக்கியம்.

* நமது இளைஞர்களின் விவாதம் எல்லாம் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் அல்லது விண்டோஸ் பற்றியதாகவே உள்ளது.

* இவை எல்லாம் சிலிகான் வேலியில் உள்ள உங்களால்தான் சாத்தியமாகி இருக்கின்றன.

இவ்வாறு மோடி பேசினார்.

அவர் ஒவ்வொரு வரிகளாக சொல்லச் சொல்ல, பிரபல நிறுவனங்களின் அதிகாரிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தன்னுடைய சொந்த வாழ்க்கையை உதாரணமாகக் கூறி, இந்தியாவில் உள்ள கிராம பெண்கள்கூட இப்போது தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து வைத்துள்ளனர் என்று மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

மோடி மேலும் பேசுகையில் கூறியதாவது:

நீண்ட பயணம் செய்யாமல், சாகசம் செய்யாமல், சிறிய தீவில் உள்ளவர்களைக் கூட தொடர்பு கொள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவி உள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்போன் மூலம் பணத்தை வேறு ஒருவர் கணக்குக்கு மாற்ற முடிகிறது.

இந்தியாவில் குக்கிராமத்தில் உள்ள ஒரு தாய், தனக்கு பிறந்த குழந்தையை எளிதில் காப்பாற்ற முடிகிறது. குக்கிராமத்தில் உள்ள குழந்தை நல்ல கல்வியை பெற முடிகிறது. இவை எல்லாமே டிஜிட்டல் புரட்சியால்தான்.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒருவர், இந்தியாவில் உடல்நலம் இல்லாமல் உள்ள தனது பாட்டியுடன் தினமும் ஸ்கைப் மூலம் பேசி ஆறுதல் சொல்கிறார். விவசாயிகள் தங்கள் நிலத்தின் மதிப்பை அறிந்துகொள்ள முடிகிறது, மீனவர்கள் அதிக மீன்களைப் பிடிக்க முடிகிறது. ‘செல்பி வித் டாட்டர்’ என்ற தலைப்பில் தனது மகளுடன் புகைப்படம் எடுத்து ஹரியாணாவைச் சேர்ந்த தந்தை வெளியிடுகிறார். அதன் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிகிறது.

இவை எல்லாமே சிலிகான் வேலியில் இருந்து கொண்டு நீங்கள் செய்யும் டிஜிட்டல் புரட்சியால்தான்.

இவ்வாறு மோடி பேசினார்.மோடியின் பேச்சைக் கேட்ட பிரபல நிறுவன அதிகாரிகள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

செல்போன் கொடுத்து உதவியவரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி: திருப்பதியில் தமிழக பக்தருக்கு நேர்ந்த கொடுமை

Return to frontpage


ப.முரளிதரன்


செல்போனை கொடுத்து உதவிய வரை ஏமாற்றியது மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி ரூ.40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தமிழக பக்தருக்கு நிகழ்ந்த கொடுமை அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது உறவினர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் திருப்பதிக்குச் சென்றார். திருமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது, அவர் அருகில் வந்த நபர் ஒருவர், “எனது பர்ஸ், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால், பணம் இன்றி தவிக்கிறேன். எனவே, எனது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூற வேண்டும். எனவே, உங்களது செல்போனைக் கொடுங்கள். வீட்டுக்கு ஒரே ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்” எனக் கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட குமார் மனிதாபிமான அடிப்படையில் உடனே தன்னுடைய செல்போனை அந்த நபரிடம் கொடுத்தார். அவர் அதில் போன் செய்வது போல நடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கூட்டத்தில் மறைந்தார். குமார் உடனே அப்பகுதி முழுவதும் தேடி அலைந்தார். ஆனால், அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்குள் அந்த மர்ம நபர் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த குமாரின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து அவரது மனைவியிடம் “உங்கள் கணவர் திருமலையில் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க கீழ் திருப்பதிக்கு கொண்டு செல்கின்றோம். மருத்துவமனையில் பணம் கட்ட அவசரமாக ரூ.40 ஆயிரம் தேவைப்படுகிறது. உடனே பணத்தை ஏற்பாடு செய்யுங்கள். நான் மீண்டும் அரைமணி நேரத்தில் தொடர்புகொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஓட்டல் கேஷியரிடம்..

பின்னர், அந்த மர்ம நபர் திருமலையில் இருந்து கீழ் திருப்பதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்று கேஷியரிடம், “எனது மணிபர்சை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். எனவே, நான் வீட்டுக்கு போன் செய்து பணம் அனுப்புமாறு கூறியுள்ளேன். அவர்கள் பணம் அனுப்புவதற்கு வசதியாக உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கூறுங்கள். அவர்கள் அக்கணக்கில் பணம் செலுத்தியதும் வங்கி ஏடிஎம் மூலம் அந்த பணத்தை எடுத்துக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அந்த ஓட்டல் கேஷியரும் தன்னுடைய வங்கிக் கணக்கை அளித்துள்ளார். அதை வாங்கிய அந்த மர்ம நபர் மீண்டும் குமாரின் வீட்டுக்கு போன் செய்து ரூ.40 ஆயிரத்தை வங்கியில் செலுத்தும்படி கூறி, ஓட்டல் கேஷியரின் வங்கிக் கணக்கை கொடுத்துள்ளார். குமாரின் குடும்பத்தாரும் அந்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினர். பணம் வந்து சேர்ந்ததும் ஓட்டல் கேஷியர் தன்னுடைய ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை எடுத்து அந்த மர்ம நபரிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட நபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

உறவினர்கள் பதற்றம்

இதற்கிடையே, குமார் விபத்தில் சிக்கியதாக கூறியதை நம்பி அவரது உறவினர்கள் அவசர அவசரமாக புறப்பட்டு திருப்பதிக்குச் சென்றனர். அங்கு மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்தில் சென்று விசாரித்துள் ளனர். அப்போது, குமார் என்ற பெயரில் யாரும் சிகிச்சைக்காக சேர்க்கப்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

உடனே, திருமலைக்குச் சென்று அங்குள்ள தேவஸ்தான தகவல் அறிவிப்பு மையம் மூலம் குமார் குறித்து அறிவிப்பு செய்தனர். செல்போனை பறிகொடுத்துவிட்டு சுற்றித் திரிந்த குமார் இத்தகவல் கேட்டு தகவல் மையத்துக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உறவினர்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் போன் மூலம் தொடர்பு கொண்டு ஏமாற்றி பணம் பறித்த தகவல்களை உறவினர்கள் அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு குமார் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, அவர்கள் கீழ் திருப்பதிக்குச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து வங்கிக் கணக்கை வைத்து அந்த ஓட்டல் கேஷியரை பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், அவருக்கும் தான் ஒரு மோசடி நபருக்கு உதவி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, குமாரின் உறவி னர் ரமேஷ் ‘தி இந்து’விடம் கூறுகையில், “உதவி செய்யப் போய் ரூ.40 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டதோடு செல்போனும் பறிபோனது. அத்துடன், உறவினர்கள் அனைவருக்கும் தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியது. குமாருக்கு ஏற்பட்ட சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே, பிறருக்கு உதவி செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

வாட்ஸ்ஆப் வழி சேவை: மீதமான உங்கள் உணவால் ஏழை பசி தீரட்டுமே! ... சேவியர் லோபஸ் சுனிதா சேகர்

Return to frontpage

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக தயாராகி வரும் மூன்று இளைஞர்ள் இணைந்து, பட்டினியில் இருப்பவர்களுக்கு உணவளிக்க செயலி ஒன்றை தயார் செய்து வருகிறார்கள். செயலி தயாராக இன்னும் சில நாட்கள் இருந்தாலும், வாட்ஸ்ஆப் மூலமாக ஏற்கனவே தன்னார்வலர்கள் சிலர் இவர்களோடு இணைந்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த முகமது ஆசிஃப், நரேஷ்வர் சிவனேசன், ஃபஹத் கலீல் என்ற மூன்று இளைஞர்கள் இந்த சேவையை தொடங்கியுள்ளனர். இவர்கள் மூவருமே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக படித்து வருகின்றனர். மூவருமே மென்பொருள் துறையில் வேலை செய்தவர்கள்.

விழாக்களிலோ, வீட்டு விசேஷங்களிலோ உணவு வீணாகும் என்ற நிலையில், வாட்ஸ்ஆப் மூலம் இவர்களைத் தொடர்பு கொண்டால் போதும். தங்கள் தன்னார்வலர்கள் உதவியோடு அந்த உணவை பெற்றுக் கொண்டு, அதை வீணாக்காமல், பட்டினியால் தவிப்பவர்களுக்கு அளிக்கின்றனர். இதன் மூலம் தற்போது தினமும் ஆயிரக்கணக்கான ஆதரவற்றவர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

மாநகராட்சியில் போடப்படும் 5000 டன் குப்பையில், 10 சதவீதம் உணவுக் கழிவுகளாக இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் பட்டியலிடுகிறது.

இது குறித்து ஆசிஃப் கூறும்போது, "உணவு மனிதர்களின் அடிப்படை தேவை. நம் தேசத்தில் பலர் உணவுக்காக பிச்சையெடுத்து வரும் வேளையில், வீடுகளிலும், உணவகங்களிலும், அங்காடிகளிலும், அலுவலகங்களிலும் நாம் நிறைய உணவை வீணடிக்கிறோம் என்பது வருந்தத்தக்கது.

எனவே, உணவை வீணாக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது 99625 18992 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டாலோ, வாட்ஸ்ஆப்பில் தகவல் தந்தாலோ போதும். நாங்கள் வருவோம். உரியவர்களின் பசி போக்க உங்கள் உணவைப் பகிர்வோம்" என்றார்.

Thursday, September 24, 2015

கல்விக் கடன் செலுத்தாதவரை பணியிலிருந்து நீக்க முடியுமா? - பயனாளி - வங்கிக்கிளை மோதல்

Return to frontpage

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின் ஊழியரான குப்புசாமி, தன் மகளுக்கு வாங்கிய கல்விக் கடனை செலுத்தாததால், மகளை வேலையைவிட்டு நீக்க வங்கி அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

புகார் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், “என் மகள் மீராவின் பல் மருத்துவப் படிப்புக்காக மன்னார்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் 2006-ல் கல்விக் கடன் பெற்றேன். 2 தவணைகளில் ரூ.1.98 லட்சம் வழங்கினர். என் பெயரில் தனிச் செலவுக் கடன் (Personal Loan) இருப்பதாகச் சொல்லி 3-வது தவணையை தர மறுத்துவிட்டனர். அந்த பாக்கியைச் செலுத்தியதும், 26.05.2010-ல் ரூ.2.47 லட்சத்தை ஒரே தவணையாக வழங்கினர்.

இந்நிலையில், 09.10.2014-ல் ரூ.9,98,850 கல்விக் கடன் பாக்கி இருப்பதாக தகவல் வந்தது. ரூ.4.45 லட்சம் வாங்கியதற்கு இவ்வளவு பெரிய தொகையை சொல்கிறீர்களே? என்று கேட்டதும் முரண்பட்ட கணக்குகளைச் சொல்லி, பின்னர் ரூ.7,59,467 பாக்கி இருப்பதாக 24.08.2015-ல் ஒரு கடிதம் அனுப்பினர்.

இதற்கிடையில், அதே வங்கி யில் எனக்கிருந்த நகைக் கடன் பாக்கியைச் செலுத்திவிட்டு நகையைத் திருப்ப முயன்றபோது, கல்விக் கடன் நிலுவையில் இருப்பதால், தவணையை வரவு வைக்க உள்ளதாகக் கூறி நகையை ஏலம் விட்டனர்.

இதுவரை, 4-5 தவணைகளாக ரூ.39,000 வரை கட்டியுள்ளேன். ஆனால், மாதம் ரூ.30,000, ரூ.40,000 கட்டுங்கள் என்கின்றனர். மின்வாரியத்தில் காசாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாலும், என் மகள் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராகப் பணிபுரிவதாலும், வங்கி கூறும் தொகையைக் கட்ட இயலவில்லை. எனினும், இருதய நோயாளியான எனக்கு வங்கி அதிகாரிகள் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்ததால் நியாயம் கேட்டு, ரிசர்வ் வங்கி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பி னேன். அதற்கும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இப்போது முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியில் இருக்கும் என் மகளை வேலையை விட்டு நீக்கும்படி மருத்துவத் துறையினரை வங்கி அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர்” என்றார்.

கொடுத்தது ரூ.5,49,600

இதுகுறித்து மன்னார்குடி பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளை மேலாளர் ஆர்.தியாகராஜனிடம் கேட்டபோது, “நான், 2013-ல் இங்கு மேலாளராகப் பொறுப்பேற்றேன். வங்கியில் உள்ள பதிவேடுகளின்படி மீராவுக்காக, அவர் படித்த கல்லூரி பெயருக்கு, குப்புசாமியிடம் மொத் தம் ரூ.5,49,600 கல்விக் கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்று, 10 ஆண்டுகளாகியும், அவர் மாதத் தவணையை கட்டாததால், வட்டி சேர்ந்து விட்டது. முறையாக கடன் தவணை செலுத்தியிருந்தால் இந்த அளவுக்கு வட்டி உயர்ந்திருக்காது.

அரசு அளித்த வட்டி தள்ளு படியும் கிடைத்திருக்கும். அதனால் தான், கூடுதலாக கட்டும்படி கூறினோம். மாதாந்திர கடன் தொகை, அதற்கான பட்டியல் அனைத்தையும் குப்புசாமி பெற்றுக் கொண்டு, கையெழுத்திட்ட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எங்கள் தரப்பில், அவருக்கு எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் கடன் தொகையை கட்டக் கூடாது என்பதற்காக, பல் வேறு குறுக்கு வழிகளை கையாள் கிறார்.

தனிச் செலவுக் கடனுக்காக, கல்விக் கடன் தவணை 6 மாதங் கள் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. அடமானம் வைத்து மூன்றாண்டு களுக்கு மேலாகிவிட்டால் நகை களை ஏலம் விடுவதுதான் வங்கி நடைமுறை. கல்விக் கடன் தொடர் பாக மக்கள் நீதிமன்றத்துக்கு குப்புசாமியை அழைத்து, ‘அசலை மட்டுமாவது ஒரே தவணையில் செலுத்துங்கள்’என்றோம். ஆனால், அவர் அசலையும் குறைக்க வேண்டும் என்கிறார். இதெப்படி முடியும்? அவருடைய மகள் கல்விக் கடன் பெற்றிருப்பது குறித்து மருத்துவத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். வேலையை விட்டு நீக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கவில்லை” என்றார்.

வங்கிகள் செய்யும் 26 தவறுகள்

இப்பிரச்சினை தொடர்பாக பேசிய கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.ராஜ்குமார், “தனிச் செலவு கடன் பாக்கிக்காக கல்விக் கடன் தவணையை நிறுத்தி வைக்கவோ, கடன் வாங்கியவரின் மகளை வேலையைவிட்டு நீக்கச் சொல்லவோ வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை. கல்விக் கடன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் வங்கிகள் செய்யும் 26 வகையான தவறுகளைச் சரிசெய்யுங்கள் என்று மனிதவள மேம் பாட்டு அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு சில வங்கி களைக் குறிப்பிட்டு 27.05.2015-ல் கடிதம் எழுதியுள்ளது” என்றார்.

தவணை விவரத்தை தெரிவிக்கவில்லை

பல் மருத்துவர் கு.மீரா கூறியபோது, “கல்விக் கடன் வாங்கும்போது, படித்து முடித்த பின்னர், மாதம் ரூ.8,000 கட்ட வேண்டும் என்றனர். எத்தனை மாதம் கடன் கட்ட வேண்டும், அதற்கான மாதாந்திர கடன் நிலுவைப் பட்டியல், மாதத் தவணைத் தொகை எவ்வளவு என்பது போன்ற எந்த விவரத்தையும் வங்கி தெரிவிக்கவில்லை” என்றார்.

Monday, September 21, 2015

Misleading ads: Jet Airways (India) moves SC against Rs 25-lakh fine

The Financial Express


Misleading ads: Jet Airways (India) moves SC against Rs 25-lakh fine

Jet Airways (India) on Friday moved the Supreme Court against the National Consumer Disputes Redressal Commission’s (NCDRC) order that asked it to deposit R25 lakh as penalty in the Consumer Welfare Fund for indulging in “unfair trade practices” by way of alleged misleading advertisements.

A bench headed by Justice Madan B Lokur asked the airline to place before it legible copies of the contentious advertisements within two weeks.

Senior counsel Shyam Divan and counsel Ujwal Rana, appearing for Jet Airways, argued that there was no intention of deceiving or misleading passengers and the advertisements did say that taxes and surcharges would be extra. “It was mentioned that basic fare is starting from R500 onwards and the advertisement mentioned that conditions apply,” the counsel said.

The NCDRC judgement had come on a complaint filed by Gujarat-based consumer organisation Jagrut Nagrik, an NGO, and a private individual. The complaint had pointed that no mention was made in the ads of the fuel surcharge, congestion charge, transaction fees, and other heads under which the passenger had to pay a whole lot more. The complainants had sought R10 crore as “punitive charges” from Jet Airways and the the now defunct Kingfisher Airlines.

“An ‘asterisk’ was prominently placed in the advertisement to draw the consumers’ attention to the phrase: (*conditions apply) and the conditions included the other charges and taxes as applicable from time to time in addition to the sum of R500 which was advertised (with the asterisk).The conditions also included the requirement of booking of ticket well in advance to avail the offer. Advertisements issued by the airline did not in any manner deceive or mislead any consumer. Further conditions include the requirement of advance booking of the ticket to avail of a lower fare and certain amounts as fuel surcharge etc. In addition to the base fare, the prospective passengers were required to pay fuel surcharge and congestion charge, being the additional expenses incurred by the airline due to steep increase in the price of ‘aviation turbine fuel’ (ATF),” the appeal filed by Jet Airways stated.

The Commission had noted in its August judgment that the two airlines had advertised airfares at ‘throwaway prices’ ranging from R 0 to R999, while in actual the passengers were charged much more. This, the NCDRC said, amounted to unfair trade practices. It held that advertisement disclosing only the minimum basic fare to potential consumers is misleading in the light of the fact that the other charges payable by a passenger far exceeded the said minimum basic fare.
First Published on September 19, 2015 12:25 am

Sunday, September 20, 2015

விஷ்ணு பிரியா விவகாரம்: கதை கட்டுகிறதா காவல்துறை?

vikatan.com

சென்னை: தற்கொலை செய்து கொண்ட விஷ்ணு பிரியா, போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பதால் போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறது காவல்துறை வட்டாரம்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றியவர் விஷ்ணு பிரியா. திருமணமாகதவர். இவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் பல சந்தேக ரேகைகள் படிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முன்னதாக இவர் எழுதியதாக சொல்லப்படும்  கடிதத்தில்,  "போலீஸ் பணி எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதற்கு நான் தகுதியற்றவர்" என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் விஷ்ணுபிரியாவின் குடும்பமே போலீஸ் துறையுடன் நெருக்கமானதுதான் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 

இவரது தந்தை ரவி, ஏ.டி.எஸ்.பியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது தாய் கலைச்செல்வி வங்கி அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். சிறுவயதில் இருந்தே விஷ்ணு பிரியாவுக்கு போலீஸ் பணி என்பது லட்சியமாகவே இருந்துள்ளது. இதற்காக அவர் ஆரம்பக் காலக்கட்டத்திலிருந்தே தன்னை தயார் செய்து வந்துள்ளார். இதற்கு உறுதுணையாக அவரது தந்தையும் இருந்துள்ளார். பி.எஸ்சி கணிதம் முடித்து விட்டு அரசு தேர்வுகளை எழுதினார். தலைமை செயலகத்தில் வருவாய்துறையில் பணி கிடைத்தது. தொடர்ந்து அவர் தேர்வு எழுதி தன்னுடைய லட்சியமான டி.எஸ்.பி பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று திருப்பத்தூரில் பயிற்சி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். 7 மாதத்துக்குப் பிறகு திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பிப்ரவரி மாதத்தில் பணியமர்த்தப்பட்டார். விஷ்ணு பிரியாவின் இன்னொரு சகோதரியும் டி.எஸ்.பியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பமே போலீஸ் குடும்பம் என்பதால் அங்கு நிலவும் அனைத்தும் விஷ்ணு பிரியாவுக்கு சிறுவயது முதலே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
போலீஸ் உயரதிகாரிகளின் டார்ச்சரால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். அவரது சாவுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டியது காவல்துறையின் கடமை.

-எஸ்.மகேஷ்

Tuesday, September 15, 2015

குவைத் நாட்டில் ஓட்டுநர் வேலைக்காக சென்று ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தமிழக இளைஞரை மீட்க நடவடிக்கை


    Return to frontpage


    ஆர்.செளந்தர்
    அ.சாதிக் பாட்சா
    ஆர்.சிவா

குவைத் நாட்டில் ஓட்டுநர் வேலைக் குச் சென்று ஒட்டகம் மேய்க்க விடப்பட்ட தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த சதாம் உசேனை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சதாம் உசேனின் தந்தை இமாம் ஷா, சதாம் உசேன் மனைவி ஜாஸ் மின்பானு, அவரது இரண்டரை வயது மகன் ஷர்கான் ஆகியோரு டன் தேனிக்கு வந்து மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடாசலம், எஸ்.பி. ஜெ.மகேஷ் ஆகியோரி டம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது:

எனது மகன் சதாம் உசேனை கும்பகோணம் அருகே உள்ள சோலைபுரத்தை சேர்ந்த காஜா மைதீன் என்பவர் குவைத் நாட்டில் ஓட்டுநர் பணிக்கு அனுப்புவதாக சொல்லி விசா எடுக்க ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் குவைத் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் சென்று 40 நாட்கள் முடிந்து விட்டது. ஓட்டுநர் வேலைக்கு சென்ற அவரை ஓட்டுநர் பணி தராமல் கொத்தடிமையாக ஒட்டகம் மேய்க்க விட்டுள்ளனர். தகுந்த உணவோ, தங்க இடமோ கொடுக்காமல் அனாதையாக உள்ளார். அவர் அங்கு படும் கஷ்டங்களை வாட்ஸ் அப் மூலம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித் துள்ளார். அந்த ஆதாரங்களை இந்த கடிதத்துடன் (சிடி) இணைத் துள்ளேன். அவரது பாஸ்போர்ட் டையும் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுக்கின்றனர். அவரை உடலள விலும், மனதளவிலும் கடுமை யாக துன்புறுத்துகின்றனர். இதனால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். எனவே தக்க நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டுதர வேண்டும் என கூறியிருந்தார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் சதாம் உசேன் மனைவி ஜாஸ்மின் பானு கூறுகையில், வாட்ஸ்அப்பில் எனது கணவர் உதவி வேண்டி வீடியோ அனுப்பிய பின்னர் மறுநாள் (3நாட்கள் முன்பு) இன்டர்நெட் மூலம் எனது மாமனார் மற்றும் என்னிடம் பேசினார். அப்போது மிக வும் கஷ்டமாக உள்ளது என வேத னையுடன் கூறினார். இரண்டு நாட் கள் அரசு விடுமுறை என்பதால் இன்று(நேற்று) வந்து புகார் மனு கொடுத்துள்ளோம் என்றார்.

இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது இன்னும் ஓரிரூ நாட்களில் சதாம் உசேன் தமிழகம் வந்து விடுவார் என்றார்.

மேலும் பாதிக்கப்பட்டோர் பேட்டி

கம்பத்தைச் சேர்ந்த ஷேக் மைதீன் (இட்லி வியாபாரி) கூறிய தாவது: எனது மகன் காஜா மைதீன் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருச்சி மற்றும் கம்பத்தைச் சேர்ந்த 2 பேர் ரூ. 80 ஆயிரம் வாங்கினர். ஆனால், கூறியபடி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. பலமுறை கேட்டும் பணத்தையும் திருப்பித் தரவில்லை. மேலும், இவர்கள் தாதப்பன்குளம் பகுதி யில் உள்ள 7 பேரிடம் ரூ. 12 லட் சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின்பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், நாங் கள் கொடுத்த பணம் மற்றும் பாஸ்போர்ட் இதுவரை கிடைக்க வில்லை என்றார்.

கம்பத்தைச் சேர்ந்த அரசமணி (லாரி ஓட்டுநர்) என்பவர் கூறியது: கம்பம் மெட்டு காலனி நந்த கோபால் கோயில் அருகே, ஒரு நபரை ஓட்டுநர் வேலைக்கு அழைத் துச் சென்றனர். ஆனால், அவரை ஒட்டகம் மேய்க்க வைத்துள்ளனர். பின்னர், அவர் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். 4 மாதங்களுக்கு முன் வேறு ஒரு ஏஜென்சி மூலம், கத்தாரில் அவர் ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார்.

கம்பத்தை சேர்ந்த மணி (டெய்லர்) என்பவர் கூறியது: எனது மகனுக்கு சிங்கப்பூரில் பிட்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால், கம்பத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் ரூ. 2 லட்சம் கொடுத் தேன். தொழில் கற்றுக் கொடுத்து நல்ல வேலையும், நல்ல சம்பளமும் வாங்கித் தருவதாக அவர் கூறி னார். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு கூறியபடி வேலை வாங்கி தரவில்லை என்றார்.

கம்பத்தைச் சேர்ந்த வியாபாரி சம்சுதீன் கூறியது: எங்கள் பகுதி யைச் சேர்ந்த கேட்டரிங் முடித்த ஒரு இளைஞரை, குவைத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமை யல் வேலைக்காக அழைத்துச் சென்றனர். சமையல் சரியில்லை எனக் கூறி, அவரை பாத்திரம் கழுவ வைத்துள்ளனர்.

பேசியபடி சம்பளம் கொடுத்ததால், அங்கேயே பணிபுரிந்து வருகிறார். வெளி நாடு செல்லும் முன் நம்பகமான நிறுவனங்கள்தானா என தீவிர விசாரணை செய்ய வேண்டும். நிறு வனங்கள் குறித்து காவல்துறை யினரிடம் ஆலோசனை கேட்டு, அதன்பின் வேலைக்குச் செல்வதே சிறந்தது. இதேபோல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளியே சொல்லத் தயங்கி வருகின்றனர் என்றார்.

முறையாக வெளிநாடு செல்வது எப்படி?

வெளிநாடுகளில் வேலை செய்யும் மற்றும் வேலை தேடும் நபர்களுக்காக ‘தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்' செயல்பட்டு வருகிறது. ‘தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், முதல் மாடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வணிக வளாகம், எண் - 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை - 600 020' என்ற முகவரியில் இது இயங்கி வருகிறது. தொலைபேசி எண்கள் 044 - 24464267, 24464268.

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்களது விவரங்களை இங்கு பதிவு செய்து கொண்டால் அவர்களின் பாதுகாப்பை குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்நிறுவனம் ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ளும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களும் இதேபோல பதிவு செய்து கொண்டால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு தகவல் கொடுக்கப்படும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்து கொள்வதற்கான வழிமுறைகள்:

தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்களின் விலை ரூ.600 முதல் ரூ.1000 வரை மாறுபடும். விண்ணப்பங்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

அவசர உதவிகளுக்கான தொடர்பு எண்கள்:

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் அவசர உதவிகளுக்கு 1800 11 3090, (+91) 011 40 503090 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களின் பிரச்சினைகளை தெரிவித்தால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரச்சினையில் சிக்கினால்..?

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் தமிழர்கள் அங்கு சரியான வேலை மற்றும் சம்பளம் வழங்கப்படாமல் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் அதுகுறித்து அவரது உறவினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த புகாரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பார். மறுவாழ்வுத்துறை அலுவலக அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கியிருக்கும் நாட்டிலுள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு இந்த புகாரை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார்கள்.

தூதரக அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தி பிரச்சினையில் சிக்கியுள்ள நபரை மீட்டு அவர் வேலை பார்த்த நாட்களுக்குரிய சம்பளம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொடுத்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.

நேரடியாக மறுவாழ்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். தவிர, மத்திய அரசு நிறுவனமான புரொடெக்டர் ஆஃப் எமிக்ரண்ட்ஸ் (குடியேறியவர்களின் பாதுகாப்பு அலுவலர் சென்னையில் அசோக் நகரில் உள்ளது) எனும் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். இந்த அலுவலருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களை கவனிப்பதுடன் தனியார் ஏஜண்டுகளை கண்காணிக்கும் அதிகாரமும் உண்டு.

ஏழை இளைஞர்களை பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி வேலைக்கு அழைத்துச் செல்லும் தனியார் ஏஜண்டுகள் மீதும் இந்த துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், வெளிநாட்டில் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்திய பிரஜைகளையும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்க உதவி செய்வார்கள்.

ஏஜென்ஸி உண்மையானதா?

தாங்கள் அணுகும் ஏஜென்சி உண்மையானதா என்று அறிய அந்த ஏஜென்ஸியின் பெயர் www.moia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி பெயர் இருந்தால் அந்த ஏஜென்ஸி மூலம் வேலைக்கு செல்லலாம். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் செயல் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்துகொள்ள www.owrc.in என்ற இணையதளத்தை காணலாம். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

கூடுதலாக செலுத்திய வரி 10 நாளில் திருப்பி வழங்கப்படும்: வருமான வரித்துறை நடவடிக்கை



கூடுதலாக செலுத்திய வரியை 7 முதல் 10 நாட்களுக்கு திருப்பி கொடுக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆதார் அட்டை அல்லது இதர வங்கி தகவல்கள் மூலம் சரிபார்க்கும் முறை அமல்படுத்தப்பட்டிருப்பதால் எளிதாக திருப்பி கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

முன்பெல்லாம் அதிகம் செலுத்திய வரியை திரும்ப வாங்குவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. அதற்கு நீண்ட காலம் ஆனது. சிலருக்கு சில மாதங்களில் திரும்ப கிடைத்தது. பலருக்கு சில வருடங்களுக்கு பிறகே கிடைத்தது.

எலெக்ட்ரானிக் முறையில் சரிபார்க்கும் முறை கொண்டுவரப்பட்டிருப்பதால் திருப்பி கொடுப்பது எளிதாகி இருக்கிறது. கூடுதலாக பெறப்பட்ட வரி, குறைந்தபட்சம் ஒரு வாரமும், அதிகபட்சம் 10 நாட்களுக்குள்ளும் திருப்பிக்கொடுக்கப்படும். இந்திய வரி நிர்வாகத்தில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

சமீபத்திய தகவல்களின் படி 2.06 கோடி வருமான வரித்தாக்கல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வந்திருக்கின்றன கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ஆன்லைன் மூலம் வரிதாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 26 சதவிதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 1.63 கோடி வருமான வரி தாக்கல் மனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டன.

செப்டம்பர் 7 வரை 45.18 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 22.14 லட்சம் விண்ணப்பங்களுக்கு பணம் திருப்பி அனுப்பப்பட்டது.

பெரும் பாலான வரி செலுத்தியவர்களிடம் விசாரித்த போது 11 முதல் 13 நாட்களில் கூடுதலாக செலுத்தப்பட்ட வரி திரும்ப கிடைத்தது என்று தெரிவித்தனர்.

புதிய தொழில்நுட்பம் மூலம் வரிசெலுத்துபவர்களுக்கான சேவையில் மனித தலையீடு இல்லாமல் நேரடியாக நடக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இதன் மூலம் விண்ணப் பங்களை வேகமாக பரிசீலனை செய்யலாம்.

பணத்தையும் வேகமாக திருப்பி கொடுக்க முடியும் என்று வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்தார்.

NEWS TODAY 2.5.2024