Thursday, April 23, 2015

No NAAC stamp, many West Bengal colleges face deaffiliation...TOI

KOLKATA: At least 172 colleges in West Bengal may lose affiliation and fund support from UGC because they have never applied for NAAC certification, which will be mandatory from 2017.

"The UGC has said that any college or university that does not have NAAC accreditation in the current five-year cycle will be de-affiliated. Several colleges in Bengal have not bothered to renew their accreditation. Of the 460 state-aided colleges, only 288 were accredited at some point of time but several of them did not renew their accreditation. Some colleges have received 'C' grade and are not eligible for government aid," said a source in the state secretariat at Nabanna.

Desperate to catch up with other states, the Bengal government is offering financial help of up to Rs 2 crore to colleges that have NAAC A-grade or B-grade rating, hoping that it will encourage other colleges to apply for the certification. But only 59 of these 288 colleges were found eligible to receive funds. Among them are St Xavier's College, Midnapore College, Lady Brabourne College and Bethune College. "Midnapore College received A+ grade in 2004 and A grade in 2012. Bethune College was accredited 'A' in 2006 and 2015," said a source.

"Accreditation ensures quality and we want all the colleges and universities to get graded by NAAC. The state incentive may help colleges to strengthen infrastructure," said an official at Nabanna. The government also needs to fill up teaching vacancies in colleges. In Krishnanagar's Dwijendralal College, for instance, there are only six full-time teachers for 669 students.

But why does a college need the NAAC tag when it is affiliated to a state university? The purpose is to ensure quality in education and standardisation of performance levels of colleges across the country, said an official.

Many states like Maharashtra, Karnataka, Gujarat, Tamil Nadu and Uttar Pradesh are way ahead of Bengal on NAAC accreditation, putting a question mark on the future of Bengal colleges. Private colleges are mushrooming in the state and even state-aided colleges are introducing self financing courses, with licence to seek funds from the industry. "Such diversity calls for parity in curriculum, infrastructure, teaching and research. UGC has set parameters of standard performance and also provided for grading of colleges and universities to make the process transparent," pointed out a UGC official.

The state's financial incentive is likely to set the ball rolling. At present, colleges that have NAAC grade do not see how it differentiates them from those that didn't bother to apply for it. Asutosh College, for instance, was rated C++ in 2002 but didn't feel it necessary to re-apply when the rating expired in 2007. The reason, as former principal Dipak Kar puts it, is that a NAAC rating hardly makes a difference. "Funds were released to our college irregularly, on ad hoc basis. We had to wait for prolonged periods to get them. It defeats the purpose of development," Kar said.

State higher education officials now want NAAC-rated colleges to submit detailed project reports (DPR) for availing incentives. "We need to know how they will spend the amount," an official said.

Only Jadavpur University and Vidyasagar University have got graded in the current cycle. The 17 other varsities — including Calcutta University — have applied for gradation. "The rules say that a university can apply for NAAC accreditation only if two batches have graduated or it has completed six years. Hence, newly formed universities like Presidency, Diamond Harbour Women's University, Cooch Behar Panchanan Barma University and Kazi Nazrul University, will fail to meet the criteria," an official said.

States ahead of Bengal in NAAC accreditation

1. Maharashtra: 1106 colleges

2. Karnataka: 584 colleges

3. Gujarat: 429 colleges

4. Tamil Nadu: 600 colleges

5. Uttar Pradesh: 479 colleges

6. West Bengal: 288 colleges

STATE ANNOUNCES 6% DA HIKE FOR STAFF


RMO’s suicide attempt: report sent to DME

K.A.P. Viswanatham Medical College, which controls Mahatma Gandhi Memorial Government Hospital, has sent a report to the State government on the suicide attempt made by Resident Medical Officer (in-charge) N. Nehru recently.

The report has been sent to the Directorate of Medical Education (DME) for further action.

Sources told The Hindu that information relating to his duties and responsibilities, his response to them, attempt made by him to end life, admission to hospital for treatment, the reasons cited by him for attempting suicide, and the stand of management on the issue were all covered in the report.

Sources said soon after the suicide attempt, Mr. Nehru had been relieved from the post of the RMO. He was on medical leave for a month, and a new RMO had been appointed. Mr. Nehru took a heavy dose of sleeping pills at his house at Sangilandapuram on April 6. He had also alleged that he got “repeated calls” from personal assistants of various Ministers asking him to take steps for providing special treatment to some patients.

New PG course in Theni medical college soon

A special team from Tamil Nadu Dr. MGR Medical University, comprising convenor A. Jayabhaskaran, Professor of Anaesthesiology, Coimbatore Medical College, and member A. Paramasivan, Professor of Anaesthesiology, Madurai Medical College, visited Theni Government Medical College at Gandamanur pass and assessed the facilities as the college has proposed to start a postgraduate course in the Department of Anaesthesiology with six seats.

College Dean R.M. Raja Muthiah said that the PG course in Anaesthesiology would be started soon. With commencement of this course, students as well as the public would benefit. With sharp increase in the number of surgeries performed here, PG courses would be helpful in conducting surgeries and for the smooth functioning of the hospital.

Efforts were also on to start new PG courses in the Departments of Medicine, Surgery and Orthopaedics. A PG course had already been started in the Departments of Paediatrics and Obstetrics and Gynaecology in the hospital, he added.

6 பேருக்கு பார்வை பறிபோன வழக்கில் டாக்டர்களுக்கு ஓராண்டு சிறை

திருச்சி: இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்று, பார்வை இழந்த, 66 பேர் தொடர்பான வழக்கில், இரண்டு டாக்டர்கள் உட்பட, மூன்று பேருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த, 2008ம் ஆண்டு, ஜூலை, 28ம் தேதி, பெரம்பலூர், ஜோசப் கண் மருத்துவ மனை மற்றும் விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு சங்கம் ஆகியவை இணைந்து, விழுப்புரம் மாவட்டம், கடுவனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. கடுவனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள், முகாமில் சிகிச்சை பெற்றனர்.

66 பேர் பார்வையிழப்பு:


இதில், தேர்வு செய்யப்பட்ட, 66 பேருக்கு, ஜோசப் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் பார்வை கிடைக்காமல், 66 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம், மாநில அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வை இழந்தவர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ., வழக்கு:

இதையடுத்து, ஜோசப் மருத்துவமனை இயக்குனர், டாக்டர் நெல்சன் ஜேசுதாசன், 55, டாக்டர்கள், அவ்வை, 40, அசோக், 45, சவுஜன்யா, 43, தென்றல், 42 மற்றும் மருத்துவமனை நிர்வாகி கிறிஸ்டோபர் தாமஸ், 55, ஆன்ரோஸ், 45, ஆகிய ஏழு பேர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. கடந்த, 2011, மார்ச், 3ம் தேதி, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டு, தொடர்ந்து நடந்து வந்தது. வழக்கில், நேற்று, பகல், 3:30 மணிக்கு, தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி ஸ்ரீதர், கண் மருத்துவ மனை இயக்குனர், டாக்டர் நெல்சன் ஜேசுதாசன், மருத்துவமனை நிர்வாகி, கிறிஸ்டோபர் தாமஸ், டாக்டர் அசோக் ஆகியோருக்கு, தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடு தர உத்தரவு: இலவச கண் அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட, 66 பேருக்கு, உயர் நீதிமன்றம் அறிவித்த, 1 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை, 7.5 சதவீத வட்டியுடன், ஜோசப் மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும், நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். இழப்பீட்டு தொகை போதாது என கூறி, நீதிமன்றம் முன், பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை:

அரசு தரப்பில், போதிய ஆதாரம் காட்டப்படாததால், டாக்டர்கள், சவுஜன்யா, தென்றல், அவ்வை மற்றும் ஆன்ரோஸ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், டாக்டர்கள், சவுஜன்யா, தென்றல் ஆகியோர் மீது, இந்திய மருத்துவ கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த இருவர்

இந்திய மக்களுக்கு, அதிலும் குறிப்பாக, தமிழக மக்களுக்கு தங்களில் ஒருவருக்கு கிடைக்கும் பெருமையால், நாட்டுக்கு புகழ் சேர்ந்தால், அதை தங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பெருமையாக கருதி மகிழ்வார்கள். அந்த வகையில், கடந்தவாரம் அமெரிக்காவில் இந்தியர்கள் இருவருக்கு, பெரிய பெருமை கிடைத்துள்ளது. இதில் முதல்வர். இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத் மாநில முதல்–மந்திரியாக அசைக்கமுடியாத தலைவராக திகழ்ந்த மோடி பிரதமராக பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடைவதற்குள், உலக நாடுகள் அனைத்தையும் அவரை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துவிட்டார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் என்று விமர்சனங்கள் வந்தாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் சுற்றுப்பயணம் செய்யும்போது, நாட்டுக்கு நல்ல பலன்களைக் கொண்டு வந்துவிடுகிறார். கடந்தவாரம் அவர் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். உலக பிரசித்திபெற்ற டைம் இதழ் உலகில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற 100 மாமனிதர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், அதில் மோடியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. மோடியைப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதியுள்ள முன்னுரை, அவருக்கு மோடியிடம் உள்ள நட்பையும், மோடிக்கு உலக தலைவர்களிடம் உள்ள செல்வாக்கையும் பறைசாற்றியுள்ளது.

இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி என்ற தலைப்பிட்டு அவர் எழுதிய முன்னுரையில், இன்று மோடி உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக இருந்தாலும், ஏழ்மையில் இருந்து பிரதமரான அவரது வாழ்க்கை வரலாறு இந்தியாவின் வளர்ச்சிக்கான உத்வேகத்தையும், ஆற்றலையும் பிரதிபலிக்கிறது என்று தொடங்கி, தன் வழியை நிறைய இந்தியர்கள் பின்பற்ற உதவவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் அவர் ஏழ்மையை போக்கவும், கல்வியை மேம்படுத்தவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் முன்னேறவும், பருவமாற்றத்தை எதிர்கொண்டு இந்தியாவின் உண்மையான பொருளாதார ஆற்றலை கட்டவிழ்த்துவிடும் வகையில், ஒரு தொலைநோக்கு பார்வையை வகுத்துள்ளார். 100 கோடிக்கும் மேலான இந்தியர்கள் ஒன்றிணைந்து வெற்றிபெற்று, உலகில் மற்ற நாடுகளை ஊக்கப்படுத்தும் எடுத்துக்காட்டாக திகழ முயன்றுவருகிறார் என புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர், இந்திய பிரதமருக்கு சூட்டிய இந்த புகழ் மாலை, ஒவ்வொரு இந்தியனின் கழுத்திலும் விழுந்த புகழ் மாலையாகும்.

அதே நாளில் சென்னையைச் சேர்ந்த அமெரிக்காவில் வாழும் ஒரு பெண் சட்டநிபுணர் ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நகரின் கிரிமினல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை அளிக்கிறது. 43 வயதான ராஜ ராஜேஸ்வரி கடந்த 16 ஆண்டுகளாக அரசாங்க வக்கீலாக குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு ராஜ ராஜேஸ்வரி என்றால் தெரியாதவர்களே இல்லை. ஏனெனில், எந்த இந்திய விழா எங்கு நடந்தாலும், அங்குள்ள எந்த இந்து கோவிலில் ஏதாவது விழாக்கள் நடந்தாலும் அவரது தாயார் பத்மா ராமநாதனின் பெயரில் இயங்கும் பத்மாலயா நடனப்பள்ளி மாணவிகளைச் சேர்த்துக்கொண்டு அவர் ஆடும் பரதநாட்டியம், குச்சுப்புடி நடனத்தைப் பார்க்கவென்றே பெரிய கூட்டம் வரும். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, சிங்களம் என்று ஒவ்வொருவரிடமும் அவரவர் மொழியில் பேசும் திறனே பலரையும் வியக்கவைக்கும். ஒரேவாரத்தில் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் புகழ்சேர்த்த இந்த இருவரையும் நினைத்து இந்திய மக்கள் மட்டுமல்ல, பாரத தாயே பெருமையால் பூரிக்கிறாள்.

Wednesday, April 22, 2015

High Court ruling on claim for quota

Candidates who had pursued their schooling as well as graduation through Tamil medium of instruction but had completed postgraduation alone through English medium are not entitled to preference in government jobs to Tamil medium candidates if the minimum qualification required for those jobs happened to be a Master’s degree, the Madras High Court Bench here has ruled.

A Division Bench of Justices S. Manikumar and G. Chockalingam passed the order while dismissing a writ appeal filed by J. Stephen Raja, an aspirant to the post of Postgraduate Assistant in economics being filled up by the Teachers Recruitment Board at the behest of the School Education Department and in pursuance of a recruitment notification issued on November 7, 2014 calling for applications.

The judges pointed out that the recruitment notification categorically stated that those applying for the PG Assistant post must possess a postgraduation degree in the relevant subject apart from a Bachelor of Education (B.Ed.) degree and that the candidates should have studied the same subject, for which they had applied, in their graduation as well as postgraduation courses.

“Though the appellant had studied the same subject (economics) in graduation as well as postgraduation and had obtained B.Ed., degree in Tamil medium, he had not obtained M.A. in economics through Tamil medium. Thus, he cannot be said to be a person eligible to seek appointment under the preferential category of persons who had studied in Tamil medium,” the Bench observed.

It recorded the submission of Special Government Pleader V.R. Shanmuganathan that the government provided for 20 per cent concession in public recruitment for Tamil medium candidates and a G.O. issued on September 30, 2010 defined the term ‘persons studied in Tamil medium’ as those who had obtained the qualification required for direct recruitment through Tamil medium of instruction.

Subsequently, a Government Letter was sent to the TRB, Tamil Nadu Public Services Commission and the Tamil Nadu Uniformed Services Recruitment Board clarifying that the definition in the G.O. should be understood to mean that those applying for posts requiring a postgraduation degree should have pursued their Master’s degree through Tamil medium to claim the concession.

Doctors recruitment drive for Saudi

Saudi Arabia’s Health Ministry has proposed to recruit allopathic consultants, specialists and resident doctors in all specialities.

A delegation from the ministry is visiting Delhi, Bengaluru and Mumbai between April 21 and 29 for the purpose.

Candidates aged below 55 years are eligible for the post of consultants/specialists and those below the age of 45 years with two years’ experience are eligible to apply for the post of resident doctors, according to a release from Overseas Manpower Corporation.

Interested candidates may send a detailed resume by email toovemcldr@gmail.com. Contact: 08220634389.

THE TN Dr. M.G.R. MEDICAL UNIVERSITY CONVOCATION 2015 NOTIFICATION


The TN Dr. M.G.R. Medical University Notification


மனசு போல வாழ்க்கை- 5: எதை நினைத்தோமோ அதுவே நடந்தது...by டாக்டர். ஆர். கார்த்திகேயன்

எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அது அப்படியே நடந்தது!” என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது? காரணம் அது நடக்கக் கூடாதுன்னு அதையே நினைத்ததால் அதுவே நடந்தது!
பெரிய கண்ணாடி டம்ளரில் வழிய வழிய தண்ணீரைக் குழந்தை கொண்டு சென்றால், “கீழே போடப் போறே...ஜாக்கிரதை!” என்று அலறியவுடன் அது கை நழுவிப் போட, அங்கிருந்து அம்மா சொல்வாள்: “எனக்குத் தெரியும். நீ கீழே போடுவேன்னு. அதனாலதான் கத்தினேன்!” அவருக்குத் தெரியாதது, அவர் குழந்தை கீழே போடுவதை எண்ணிப் பயத்தில் கத்தியதால்தான் குழந்தை மிரண்டு போய்க் கீழே போட்டது என்று.
நம்பிக்கையும் நிகழ்வும்
இதுதான் self fulfilling prophecy எனும் உளவியல் கோட்பாட்டின் சாரம். நம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப நிகழ்வுகள் நடந்து அவை நம் நம்பிக்கைகளை வலுப்படுத்தும்.
“அவன் ஒரு ஆள் போதும் சார். அத்தனையும் தானா முடிப்பான்!” என்று பாஸ் நம்பிக்கை வைக்கும் போது அந்தப் பணியாளரின் வேலைத்திறன் தானாகவே உயர்கிறது. தன்னம்பிக்கை, திறமை, முயற்சி, பெருமை என அனைத்தும் இசைந்து ஒரு அற்புதம் நிகழும். பின் பாஸ் சொல்வார்: “நான் சொல்லலை? அவன் கிட்ட விட்டால். பிரமாதப்படுத்துவான்னு!”
நிர்வாகம் முழு மனதாகத் தொழிலாளர்களை மதித்து, நம்பிக்கை வைத்துப் பொறுப்புகள் கொடுக்கும் போது நல்லுறவு மட்டுமல்ல, உற்பத்தித் திறனும் பன்மடங்கு பெருகும் என்பது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ஆவணப் படுத்தியுள்ள உண்மை. இருந்தும், “இவனுங்க பேச்சை எல்லா விஷயங்களிலும் கேட்டா எதிர்பார்ப்பு அதிகமாயிடும். உடனே சரின்னு எதையும் சொல்லக் கூடாது.
எப்பவும் கொஞ்சம் இழுத்துப் பிடிக்கணும். இல்லேன்னா, பிரச்சினை பண்ணுவாங்க!” என்று நினைக்கும் நிர்வாகங்கள் அனைத்தும் தொழிலாளர் பிரச்சினைகளைக் கண்டிப்பாகச் சந்திக்கும். நிர்வாகத்திடம் உள்ள தொழிலாளர் பற்றிய ஆதார நம்பிக்கைகள்தான் தொழிலாளர்களை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது என்பதைப் பெரும்பாலும் நிர்வாகத்தினர் அறிவதில்லை.
நடக்காது என்பார் நடந்துவிடும்
“நடக்கக் கூடாது” என்று நினைக்கும் போது அந்த எதிர்மறை எண்ணம் வலுப்படும். அச்சமும் பதற்றமும் ஏற்படும். தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்போமே தவிர இயல்பான முயற்சியை மகிழ்ச்சியான முறையில் எடுக்க முடியாது. அது தவறுகளுக்கும் அபிப்பிராயப் பேதங்களுக்கும் வழி வகுக்கும். எதிராளி இருந்தாலும் அவரிடமும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையை வளர்க்கும். பின் பயந்தது போலவே தோல்வி நிகழும்.
‘சின்ன தம்பி’ படத்தில் யாரையும் தங்கை காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் மூன்று சகோதரர்களும் படு தீவிரமாக இருக்க, கடைசியில் அதுவே நிகழும். அவர்கள் தங்கையைத் தனிமைப்படுத்தி, ஆண்கள் சகவாசம் கிடைக்காமல் செய்ய, கிடைத்த முதல் தொடர்பிலேயே காதல் கொள்வாள் நாயகி. இது பல வீடுகளில் நடக்கும் உண்மைச் சம்பவம்.
இதிகாசங்களும் இதை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன. தன் மகன் இடிபஸ் தன்னைக் கொல்வான் என்பதால் அவனுடைய அப்பா அவனைக் குழந்தையிலேயே தள்ளி வைக்கிறார். வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்வான் மகன். தன் அப்பா என்று தெரியாமலேயே அவரை வென்று கொல்வான். இதுதான் கிரேக்க இதிகாசத்தில் உள்ள இடிபஸின் கதை. மகன் பற்றிய அப்பாவின் எண்ணம் தான் இதன் ஆரம்பம்.
ஊத்திக்கொள்பவர்கள்
தொடர்ந்து வியாபாரத்தில் தோற்பவர்கள் எனக்குப் பல பேரைத் தெரியும். ஒவ்வொரு முறை ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். அடிப்படையில் அவர்கள் தோல்வியை எதிர்பார்த்தே வியாபாரத்தில் இறங்குவார்கள். “இந்த வாட்டியும் நஷ்டம் ஆகக் கூடாதுன்னு எல்லாம் பாத்து பாத்து செஞ்சேன். நம்ம ராசி இதுவும் ஊத்திக்கிச்சு!” என்பார்கள்.
அதே போலச் சிலர் திருமண வாழ்வில் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார்கள். ஆள் மாறினாலும் பிரச்சினை மாறாது. காரணம் பிரச்சினை துணையிடம் இல்லை. தங்களிடம்தான் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
எந்த வேலையிலும் நிலையாகத் தங்காதவர்கள், எல்லாரிடமும் சீர்குலைந்த உறவு கொண்டிருப்போர், தொடர்ந்து நோய்வாய்ப்பட்டுக்கொண்டே இருப்பவர்கள், எப்போதும் பணத் தட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என அனைவருமே ஏதோ சில ஆதார எண்ணங்களில் குறைபட்டவர்கள். அந்த எண்ணம் தரும் உணர்வும் செயல்பாடும் அவர்களுக்கு அவர்கள் வெறுக்கும் அதே முடிவுகளைத்தான் தருகின்றன.
பட்டியலிடுங்கள்
நமக்குப் பிரச்சினை என்று நாம் நினைக்கும் விஷயங்களில் நம் ஆதார எண்ணங்கள் என்னென்ன என்று பட்டியல் போடுங்கள். அது பிடிபடவில்லை என்றால் உங்களிடம் அதிகம் பழகும் நண்பரிடமோ, வாழ்க்கைத் துணையிடமோ, சக பணியாளர்களிடமோ கேளுங்கள். உங்கள் பேச்சு, உங்கள் எண்ணங்களை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்திருக்கும். அவர்கள் மிக எளிமையாக உங்கள் எண்ணங்களைச் சொல்லுவார்கள்.
உங்கள் நம்பிக்கைகளை நேர்மறையாக மாற்றுவது எப்படி என்று மிக விரிவாக, நவீன உத்திகளுடன் சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்கு முன் உங்களிடமுள்ள எண்ணங்களை முழுவதும் ஆராயுங்கள்.
வெறும் எண்ணத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடுமா? வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளை என்ன செய்வது?
முதலில் உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். வெளியிலிருந்து வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான அளவு பலமான எண்ணங்கள் தானாகத் தோன்றும்.
ஒரு நாளில் 35 ஆயிரம்
“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்’’ என்றார் புத்தர். நீங்கள் ஒரு நாளில் அதிக நேரம் சிந்திப்பவை என்று கணக்கிடுங்கள். அவற்றில் எவையெல்லாம் நேர்மறை, எவையெல்லாம் எதிர்மறை என்று கணக்கிடுங்கள்.
ஒரு அதிர்ச்சிகரமான உளவியல் உண்மை சொல்லட்டுமா?
சமீபத்திய ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 35 ஆயிரம் எண்ணங்கள் நமக்கு வருகின்றனவாம். இது உங்கள் மனோபாவத்துக்கும் வேலைக்கும் ஏற்ப, கூடும், குறையும். அது முக்கியமில்லை. ஆனால் அவற்றில் 80 சதவீதம் எதிர்மறையானவை. அதுவும் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் முழு நேரமும் யோசிக்கிறோமாம்!
ஆக, நாள் முழுவதும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்துக் கவலையோ, பயமோ, கோபமோ கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகளை நம் உடலில், வேலையில், வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.
உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த விஷயத்துக்காக, என்ன என்ன எண்ணங்களைத் தற்போது வைத்துள்ளீர்கள் என்று பாருங்கள்.
இந்த ஆய்வின் முடிவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் இந்தத் தொடரைத் தொடர்ந்து படிக்காவிட்டலும் பரவாயில்லை. ஆய்வின் முடிவு அதிருப்தியைக் கொடுத்தால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்புவது போல மாற்ற இந்தத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள்!

Train info.

ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர், காகிதமற்ற பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தும் வகையில், செல்லிடப்பேசி செயலி ஒன்றை ரயில்வே, புதன்கிழமை (ஏப்.22) அறிமுகப்படுத்தவுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர், புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

தற்போதைய திட்டத்தின்படி, ஆண்ட்ராய்ட் செல்லிடப்பேசி பயன்படுத்துபவர்கள் கூகுள் செயலி தளம் மூலமாக இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதிய செயலி மூலமாக பயணச்சீட்டுகளை பெறுவோர், அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளை வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. பயணச்சீட்டு பரிசோதகரிடம் செல்லிடபேசி தகவலைக் காண்பித்தாலே போதும்.

இந்தச் செயலி மூலம் காகிதப் பயன்பாடு குறைவதோடு, பயணச்சீட்டு மையங்களின் முன் பயணிகள் நிற்க வேண்டிய சிரமமும் தவிர்க்கப்படும்.

இந்தச் செயலியைப் பயன்படுத்துவதற்கு, ரயில் நிலையத்திலோ அல்லது இணைய வழியிலோ, மின் பணப்பை (இ-வாலட்) முறை மூலமாக இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ப்ளாக்பெர்ரி செல்லிடப்பேசியிலும் விரைவில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்படும்.

இந்தப் புதிய வசதியை சென்னை-எழும்பூர் இடையேயான வழித் தடத்தில், மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புது தில்லியிலிருந்து புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைக்கிறார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Tuesday, April 21, 2015

இப்படியும் ஒரு கலெக்டர்!

cinema.vikatan.com

சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் ஆட்சியர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, தங்கள் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்திருக்கும் பெருமைக்காக பெரம்பலூர் மாவட்டமே வாழ்த்துப்பா பாடுகிறார்கள்.
பெண் குழந்தைகளை காப்பாற்றும் திட்டங்களை செயல்படுத்திய சிறந்த மாவட்ட ஆட்சியர் என பிரதமர் விருதுக்கு தேர்வாகியுள்ள  ஆட்சியர் தாரேஸ் அகமதுவின் அணுகுமுறையும், திட்டங்களை செயல்படுத்தும் முறையும் ரொம்ப வித்தியாசமானது. பொதுவாக ஆட்சியர் வருகையென்றால் அதிகாரிகளும், மக்களும் பரபரப்பாகி விடுவார்கள். ஆனால், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது வருகிறார் என்றால் பள்ளி குழந்தைகள் முதல் பாமர மக்கள் வரை எல்லோரும் அவருக்காக காத்து கிடப்பார்கள்.

மக்களின் மனதில் இடம்பிடித்து, விருதுக்கும் தேர்வாகியுள்ள தாரேஸ் அகமது அப்படி என்னதான் செய்தார் என அவரது பணிகளை அலசினோம்.
 
பெண் குழந்தைகளின் கல்வி

கடந்த நான்கு வருடத்திற்கு முன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதிலிருந்து, இன்று வரை துளியளவும் ஆர்வம் குறையாமல், எளிமையான அணுகுமுறையால் மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ள இவர், கிராமங்களிலும் சர்வசாதாரணமாக வலம் வருகின்றார்.
இவர் தலைமையிலான சமூக நலத்துறை அலுவலர் குழு, இதுவரை 450க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களை தடுத்துள்ளது. இதில் ஒரு மதத்தைச் சேர்ந்த திருமணத்தை தடுத்ததற்காக தாரேஸ் அகமதுக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தினர். அப்போதும் கூட, பெண் குழந்தை என்றால் எல்லா குழந்தைகளும் ஒன்றுதான். திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு மட்டுமே திருமணம் செய்ய அனுமதி என மிக கடுமையாக நடந்து கொண்டார்.

குழந்தை திருமணங்களை தடுத்த கையோடு பெண் பிள்ளைகளை அழைத்து, அவர்களுக்காக சிறப்பு தங்கும் இடங்களை ஏற்படுத்தி, படிக்க ஏற்பாடுகள் செய்தார். இதில் சில பெண் குழந்தைகள் இப்போது பொறியியல் உள்ளிட்ட கல்லூரியில் சேர்ந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலேயே முதன் முதலில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் எனும் வாசகங்களை ஓங்கி ஒலித்தபடி பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் ஓட்டத்தை நடத்தியதோடு அந்த போட்டிகளில் இவரும் கலந்துகொண்டு ஓடியதை பெருமையாக சொல்கிறாரகள்  இளைஞர்கள்.
அரசு பள்ளிகளின் வளர்ச்சி
 
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை வளர்த்தெடுக்க திட்டமிட்ட தாரேஸ் அகமது, சூப்பர் 30 எனும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மிகசிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சியில் படித்த மாணவர்கள், தற்போது மருத்துவக்கல்லூரி, அண்ணா பல்கலைகழகங்களில் படித்து வருகிறார்கள்.

இந்த சாதனைக்கு மக்களிடம் உண்டான வரவேற்பை அடுத்து சூப்பர் 30 திட்டத்தில், தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறாரகள். அலட்சியமாக வேலை செய்யும் அரசு ஆசிரியர்களை அலர்ட் செய்ய வைத்திருக்கிறார் ஆட்சியர் தாரேஸ் அகமது. இதனால் பெரம்பலூரின் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம், ஒவ்வொரு வருடமும் 26 சதம் வரை அதிகரித்துள்ளது என்கிறார்கள் கல்வி அதிகாரிகள்,
 
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்க சிகரம் எனும் திட்டத்தையும் அரசு பள்ளிகளில் செயல்படுத்தும் இவர், பெரம்பலூர் மாவட்டத்தில் எங்கே சென்றாலும் ஒரு பள்ளியின் ஒட்டு மொத்தச் செயல்பாட்டை தெரியப்படுத்த பச்சை, மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட ஆறு நிறங்களில் பள்ளியின் செயல்பாட்டை வேறுபடுத்தி காட்டுகிறார். சில பள்ளிகளில் ஆய்வு செய்யுபோது இவரே பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி சோதனை செய்யும் சம்பவங்களும், குழந்தைகளை அங்கன்வாடிகளில் சேர்க்க வேண்டும், அப்போதுதான் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளரும் என தான் சந்திப்பவர்களுக்கு பாடம் எடுக்கும் சம்பவமும் பாராட்டை பெற்று வருகிறது.
இதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் முறையாக நடத்தி, மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கும் வரை கண்காணிக்க ஒரு குழு அமைத்திருக்கிறார். இந்த சீரிய முயற்சியில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பலனடைந்துள்ளார்கள் என புள்ளி விபரங்களை அடுக்குகிறார்கள்.

மாவட்டத்தில் போடப்பட்ட சத்துணவு பணியாளர்கள் தேர்வில் பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என முறையாக தேர்வு நடத்திய மாவட்ட ஆட்சியர்களில் தாரேஸ் அகமதுவும் ஒருவர்.
 
விவசாயிகளின் தோழன்
 
பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் போராட்டம் அறிவிக்க, கொஞ்சம் பொறுங்க என போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தி, கோயமுத்தூர் பருத்தி ஆராய்ச்சி மையத்திலிருந்து அதிகாரிகளை அழைத்து வந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் உரிய விலை கிடைக்க வைத்ததாக சந்தோசமாக பகிர்ந்து கொள்கிறார்கள் விவசாயிகள். இதுமட்டுமல்லாமல், விவசாய பிரச்னைகள் என தகவல் வந்தால் அதை தீர்த்தபிறகுதான் அடுத்த வேலை செய்வார். விசுவக்குடி நீர்தேக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை சம்பந்தப்பட்ட திட்டங்கள் தமிழக அரசிடம் இவர் பெற்றுக்கொடுத்த திட்டங்களே.
மக்களின் உணர்வுகளை முழுமையாக உணர்ந்தவராகவும், மக்களோடு மக்களாக பேருந்து மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்து அவர்களின் தேவைகளை உணர்ந்து, அதற்கான தீர்வை உருவாக்கி வருகின்றார். ரேசன் கார்டு கிடைக்காமல் பலர் தடுமாறிக் கொண்டிருந்ததை கேள்விப்பட்டு மாதாமாதம் ரேசன் கார்டுகள் பெற முகாம் நடத்தி, அந்த பிரச்னைகளை தீர்க்க வழிவகை செய்தவர்.
மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு சொந்த பணத்தில் பஞ்சு மெத்தை வழங்கியதும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ததும் மாவட்டம் முழுக்க எதிரொலிக்கிறது.
ஆண்டுதோறும்  பெரம்பலூரில் புத்தக கண்காட்சி நடத்த திட்டமிட்டு அதில் மக்கள் ஆர்வமாக பங்கேற்க இவர் செயல்பட்ட விதத்தை வாசகர்கள் சொல்லி சிலாகித்து போகிறார்கள்.
 
தொடரும் விருதுகள்
 
தமிழகத்தின் சிறந்த ஆட்சியர்களுக்கான தகுதியை, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தக்கவைத்த தாரேஸ் அகமது,  கடந்த ஆண்டும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் மின் ஆளுமை திறனுக்கான விருதும், மாற்றுத்திறனாளிகளை சிறப்பாக ஊக்கப்படுத்தியதற்காக 10 கிராம் தங்க நாணயமும், ஆட்சியரின் விருப்ப நிதியாக ரூ.25 ஆயிரம் பரிசும் முன்னாள் முதல்வரிடம் பெற்றார்.
கடந்த டிசம்பர் இறுதியில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.களுக்கான மாநாடு நடந்திருந்தால் இந்த வருடமும் விருது கிடைத்திருக்கும். ஆனால், மாநாடு நடத்தப்படவில்லை. இந்நிலையில்தான் பெண் குழந்தைகளை பாதுகாத்த மாவட்ட ஆட்சியர் எனும் பிரதமர்  விருதை டெல்லியில் இன்று பெறுகிறார் தாரேஸ் அகமது.

'இது தனிப்பட்ட நபரின் சாதனையல்ல, என்னோட உத்தரவை மதித்து பல அதிகாரிகளின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்' என மிக அடக்கமாக சொல்லிவிட்டு டெல்லி சென்றிருக்கிறார் தாரேஸ் அகமது.

நாமும் வாழ்த்துக்கள் சொல்வோம்!

-சி.ஆனந்தகுமார்

61-year-old man finally passes taxi licence test after failing it for 79 times

  

SINGAPORE - A 61-year-old man has finally fulfilled his dream of becoming a taxi driver - after passing a required test on his 80th attempt.

The man, identified as Mr Shi Zhao Lin by evening daily Lianhe Wanbao, finally scored a pass on April 9 after failing the test 79 times. He scored 43 points, exceeding the minimum passing score of 40.

Mr Shi said he had struggled with the written test because of his poor command of English.

After his story was reported by Wanbao earlier this month, help came his way. A tutor offered to give him English lessons.

He was quoted as saying: "The tutor went through with me sample test questions, and highlighted the keywords I should pay attention to. Because of that, I had a better grasp of what I would be tested on and that helped me perform better in the test."

The Employment and Employability Institute (e2i) also approached him with training and employment opportunities. Mr Shi said he plans to take up a course at the institute to further improve his command of English.

He said he is expected to get his taxi driver's licence in about three week's time.

Mr Shi, who is now working as an aircon repairman, said he is hoping to raise the $1,000 deposit needed for renting a taxi.

There is no minimum educational qualification for those who wish to become a taxi driver. The Land Transport Authority, however, requires cabbies to be able to speak and write basic English.

Applicants must also pass a taxi driving course conducted by the National Trades Union Congress-linked Singapore Taxi Academy. The course covers topics like using the street directory, road safety and customer service exercises such as practising how to help passengers in wheelchairs.

After the classes, trainees have to pass a series of tests comprising multiple-choice questions, and show that they can handle wheelchairs properly.

கோபமா..? அப்படின்னா..? -எம்.என்.நம்பியார்....விகடன் பொக்கிஷம்

 1964, 1969, 1974-ல் வெளியான பேட்டிகளில் இருந்து தொகுத்தது.

முப்பது வருடங்களுக்கு முன் நவாப் ராஜ மாணிக்கத்தின் நாடகக் கம்பெனி நீலகிரிக்குப் போயிராவிட்டால், சினிமா உலகிற்கு மஞ்சேரி நாராயணன் நம்பியார் கிடைத்திருக்கமாட்டார். கம்பெனியிலிருந்த சிறுவர்களைப் பார்த்துத் தானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்படவே, திடீரென்று ஒரு நாள் போய்ச் சேர்ந்து விட்டார்.
''நாடகத்தில் என்ன வேஷம் போடுவீர்கள்?''
''குடி... தடி... தாடி முதலிய வேஷங்கள்...''
''அப்படின்னா?''
''குடிமக்களில் ஒருவன், தடியைப் பிடித்துக் கொண்டு அரச சபையில் நிற்கும் சேவகன், ரிஷிகள், முனிவர்கள்...''
1935-ம் வருஷம் மைசூரில் கம்பெனி 'காம்ப்' இருந்தபோதுதான், பம்பாய் ரஞ்சித் ஸ்டுடியோவில் 'பக்த ராமதாஸ்' படமாக்கப்பட்டது. நம்பியார் நடித்த முதல் தமிழ்ப் படம் அதுதான். அதில் அவர் தெலுங்கில் வசனம் பேசியிருக்கிறார். அவருக்குக் கொடுக்கப்பட்ட பணம் 40 ரூபாய்!
நம்பியார் நடித்த இரண்டாவது படம் வெளி வரவேயில்லை. 1938-ம் வருடம் ஜி.பட்டு ஐயர் டைரக்ட் செய்த 'இன்ப சாகரன்' என்ற அந்தப் படம், ஸ்டுடியோவில் தீப்பிடித்துக்கொண்டபோது எரிந்துபோய்விட்டது.
இந்த இருபது ஆண்டுகளாக நம்பியார் என்கிற நட்சத்திரம் ஒளி குன்றாமல் சினிமா வானில் சுடர் விட்டுப் பிரகாசித்துக்கொண்டு வருகிறது. இதுவரை 105 படங்களில் நடித்திருக்கிறார் அவர்.
ஒவ்வொரு வருடமும் இரண்டு மலைகளுக்குப் போக அவர் தவறுவதில்லை. ஒன்று, நீலகிரி மலை; மற்றொன்று சபரிமலை.
நம்பியார் சைவ உணவுதான் சாப்பிடுகிறார். ''நான் ஓவல்டின், கேக், ஐஸ்கிரீம் இதெல்லாம் கூட சாப்பிட மாட்டேன். ஏன்... பிஸ்கோத்துகளைக் கூட கொஞ்சம் யோசித்துதான் தின்பேன். ஏன்னா, அதுலே கூட சில சமயம் முட்டையைக் கலந்துடறாங்க'' என்று சொல்லிச் சிரிக்கிறார்.
பொதுவாக நம்பியார் என்றதும், உருட்டும் விழி களும் மிரட்டும் தொனியும்தான் நமது ஞாபகத்துக்கு வரும். வீட்டிலோ அவர் சாது; பரம சாது!
''அவருக்குக் கோபமே வராதுங்க. சாதாரணமா ஒருத்தருக்குக் கோபம் வரக்கூடிய நிகழ்ச்சி நடந் தால் கூட இவருக்குக் கோபம் வர்றதில்லை. அப்படி ஒரு குணம். பொறுமையா இருப்பார். நிதானமாக நடந்துப்பார். சமீபத்திலே ஒரு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நகைகள் காணாமல் போனபோதுகூட துளிக்கூடப் பதற்றப்படாமல், 'நாம நியாயமா உழைச்சு சம்பாதிச்ச பணம்னா அது திரும்பி வந்துடும்'னு சொல்லிட்டே இருந்தார். அவர் சொன்ன மாதிரியே எல்லா நகைகளும் திரும்பக் கிடைச்சிட்டுது'' என்றார் திருமதி ருக்மணி நம்பியார்.
''படப்பிடிப்புக்குப் போயிட்டு வந்ததும் வீட்டில் எப்படி இருப்பார்?''
''படப்பிடிப்பிலே என்னென்ன நடந்தது, யார் யார்கிட்டே என்னென்ன பேசினார்ங்கிறதையெல் லாம் ஒண்ணுவிடாமல் சொல்வார். என்கிட்டே மட்டுமில்லை, யார்கிட்டேயும் எதையும் மறைக் காமல் சொல்வார். எதையாவது தமாஷா பேசி சிரிக்க வெச்சுடுவாரு. இவர் வீட்டிலே இருந்தால் போதும்... எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாயிடும். நான் யாரையாவது கொஞ்சம் கோபமா கண்டிச்சேன்னா, அவங்க எதிரிலேயே என்னிடம் 'கோபப்படாம நிதானமா பேசு'ன்னு சொல்வாரு. அதனாலே மத்தவங்க என்ன சொல்றாங்க தெரி யுங்களா... 'அய்யா ரொம்ப நல்லவரு. அம்மாதான் ஒரு மாதிரி'ன்னு சொல் றாங்க'' என்று கூறிவிட்டுச் சிரித்தார் ருக்மணி.
''உங்கள் கணவர் சிகரெட் குடிக் கிறாரே, அதற்கு நீங்கள் எதுவும் ஆட்சேபனை சொன்னதில்லையா?''
''இல்லீங்க. வருஷத்துக்கு ரெண்டே மாசம்தான் சிகரெட் குடிப்பார். மீதி மாசங்களிலே குடிக்கமாட்டார்.''
''அதென்ன கணக்கு?''
''என்னவோ அப்படி ஒரு பழக்கம்.''
''உங்களுக்கு எத்தனைக் குழந் தைகள்?''
''இரண்டு பையன்கள்; ஒரு பெண். அந்தக் காலத்திலேயே நாங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை மேற்கொண்டு விட்டோம்!''
''பொதுவா எத்தனை மணிக்குத் தூங்குவார்?''
''அவராலே நினைச்சவுடனே தூங்கமுடியுங்க. காரணம், கவ லையே இல்லாத மனசு. நாமும் சந்தோஷமா இருக்கணும், நம் மோட இருக்கிற மத்தவங்களும் சந்தோஷமா இருக்கணும்னு நினைப்பார். இவ்வளவு நல்லவ ருக்கு எப்போதும் வில்லன் வேஷமே தர்றாங்களேனு நான் கவலைப்படறது உண்டு. ஆனா, அந்தக் கவலை கூட அவருக்குக் கிடையாது. வேஷம்... அது எதுவானாத்தான் என்னங்கிறது அவர் நினைப்பு!''
''குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிப்பாரா?''
''முந்திதான் அது. இப்ப பொண்ணுக்குக் கல்யாணமாகிவிட்டது. பையன்கள் காலேஜுக்குப் போனதுக்கு அப்புறம், நண்பர்கள் யாரும் வராவிட்டால் நான் சமையல் வேலைகளை முடித்துக் கொண்ட பிறகு ரெண்டு பேரும் ஏதாவது கதை பேசிக்கிட்டு இருப்போம். 'பாட்மின்ட்டன்' ஆடுவோம். அவருக்கு பூகோளத்திலே ஆர்வம் உண்டு. ருசிகரமான விஷயங்கள் சொல்வார். ராத்திரியிலே பசங்களோடு சேர்ந்து சாப்பிட்டால்தான் அவருக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்.''
''வருஷா வருஷம் சபரிமலைக்குப் போகிறாரே... இங்கே கோயில்களுக்குப் போவது உண்டா?''
''இல்லீங்க. வீட்டிலேயே பூஜை அறை இருக்கு. நான் பூஜை செய்துகொண்டிருக்கும் போது அவர் வந்து கொஞ்ச நேரம் சாமி கும்பிட்டுட்டுப் போவார். அவ்வளவுதான்!''
''என் மனைவியைக் கேட்காமல் நான் எதையுமே செய்வதில்லை. எனக்கு ஷர்ட் தேர்ந்தெடுப்பதிலிருந்து எனக்கு வேண்டிய எல்லாக் காரியங்களையும் என் மனைவி தான் செய்வது வழக்கம். வீட்டு நிர்வாகத்திலிருந்து என்னை நிர்வகிப்பது வரை எல்லாமே என் மனைவிதான். மனைவிக்கு அடங்கிய கணவன் நான்!'' என்கிறார் நம்பியார்.
''நல்லவர்கள் எல்லோரும் தம் மனைவியை இப்படித்தான் புகழ்வார்கள். புகழவேண்டி இருக்கும். காரணம், அவர்களுடைய வாழ்வில் மனைவி ஒரு 'அஸெட்'! எனக்கு மனைவி தான் எல்லாமே என்று சொல்லிக்கொள்ள நான் வெட்கப்படுவதில்லை. சிவனே உமையைத் தன் உடலில்தானே வைத்துக்கொண்டு இருக்கிறார். கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவுதான் (mutual understanding) வாழ்க்கையை அழகாக அமைக்க முடியும்! என் மனைவி எனக்குக் கண்கண்ட தெய்வம்!'' என்கிறார் நம்பியார்.
''இப்போதெல்லாம் வெளிப்புறப் படப் பிடிப்புக்குக்கூட நான் என் மனைவியை அழைத்துச் செல்கிறேன். அவள் நன்கு சமைப்பாள். நான்தான் மற்றவர்கள் தயாரிக்கும் உணவை விரும்பி ஏற்பதில்லையே!'' என்று நம்பியார் கூற, கலகலவெனச் சிரிக்கிறார் ருக்மணி.

PHARMACY COURSES GET GOVT APPROVAL...Deccan Chronicle


காஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் நுகர்வோருக்கு ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்: மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் பேர் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள். தேசிய குற்றப்பதிவகம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி குஜராத் மாநிலத்துக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகளவு காஸ் சிலிண்டர் விபத்துகள் நடைபெறுகின்றன.

இந்த விபத்தினால் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.

காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி வருகின்றன. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள் வார்கள். இந்த ஆய்வின்போது விபத்து நடைபெற்றதற்கான காரணங்கள் கண்டறியப்படும். விபத்தின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.

இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் காஸ் ஏஜென்சியையோ, சம்பந்தப் பட்ட எண்ணெய் நிறுவனத்தையோ அணுகலாம்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காஸ் சிலிண்டர் விபத்து சம்பந்தப்பட்ட நுகர்வோரின் வீட்டில் நடந்திருக்க வேண்டும். வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் வணிக ரீதியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. அதேபோல் கோயில் திருவிழா மற்றும் சுற்றுலா செல்லும் இடங்களுக்கு சிலிண்டர் கொண்டு செல்லப்பட்டு விபத்து ஏற்பட்டிருந்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காது. கூரை வீடுகளில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டாலும் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியாது. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் குறைந்தது ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் தொகை பெறுவது குறித்து கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் வெடி விபத்துகளை தவிர்க்க செய்ய வேண்டியவை:

* டெலிவரி செய்யப்படும் சிலிண்டர் முறையாக சீல் செய்யப் பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

* சிலிண்டரையும் அடுப்பையும் இணைக்கும் ரப்பர் டியூப்பை 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் வரை உழைக்கும் கடினமான டியூப்பை பயன்படுத்த வேண்டும்.

* தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ரெகுலேட்டரை 'ஆஃப்' செய்ய வேண்டும்.

* மின்சார சுவிட்சை போடும் போது ஏற்படும் சிறிய தீப்பொறியே காஸ் தீப்பிடிக்க போதுமானது. எனவே காஸ் கசிவு ஏற்பட்டிருப்பதை அறிந்தால் மின் சுவிட்சை போடவோ, அணைக்கவோ கூடாது.

* கசிந்த காஸ் வெளியேற கதவு, ஜன்னல் ஆகியவற்றை திறக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜன்னல் கொக்கியை நீக்கும்போது ஏற்படும் சிறு உராய்வுகூட தீப்பொறியை உண்டாக்க போதுமானது.

* கசிவு ஏற்பட்டு இருப்பதை அறிந்தால் உராய்வு ஏற்படும் எந்த செயலையும் செய்யாமல் மெதுவாக வீட்டிலிருந்து வெளி யேறி, உடனடியாக தீயணைப்பு துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும்.

இந்த முறைகளை பின்பற்றி னாலே 95 சதவீத விபத்துகளை தவிர்க்க முடியும்.

Court ruling on grant of monetary benefits to part-time staff

Part-time employees in government institutions are entitled to monetary benefits only from the date when they are regularised in service and not from the day when they complete10 years of service, the Madras High Court Bench here has ruled.

Allowing a writ appeal preferred by the State, a Division Bench of Justices S. Manikumar and G. Chockalingam held that a single judge of the court was not right in ordering regularisation as well as grant of monetary benefits immediately after completion of 10 years of service.

The Division Bench agreed with Additional Advocate General K. Chellapandian that last year, the Supreme Court had categorically held that part-time employees in government institutions could not seek even regularisation of service as a matter of right. Nevertheless, the government had been considering the pleas for regularisation sympathetically. R. Paulian, a part-time sweeper in a government school in Kanyakumari, was one such beneficiary. A Government Order passed in his favour stated that he would be entitled to monetary benefits only from the date of passing of the G.O.

He challenged the legal validity of the G.O. and a single judge of the High Court on January 29, 2014 ordered grant of monetary benefits also from the date of completion of 10 years in service.

MCI team inspects medical college

A three-member team of the Medical Council of India on Monday inspected the Government Mohan Kumaramangalam Medical College Hospital to ascertain if the compliance report submitted earlier for granting permanent affiliation for the increased 100 seats for the first year MBBS are fulfilled.

Two years ago, the medical college was given temporary approval for increasing the intake for first year MBBS from 75 to 100 seats.

Hence, the college was asked to fulfil statutory infrastructure for giving permanent affiliation.

A team led by coordinator Dr. Biraj Kumar Das, Professor, Department of ENT, Jorhat Medical College and Hospital, Assam, and members Dr. Sachidananda Mohanty, Professor, Department of Forensic Medicine, MKCG Medical College, Orissa, and Dr. S. Aruna, Professor, Department of Anatomy, Indira Gandhi Medical College and Research Institute, Puducherry, visited various departments to ascertain whether the norms are fulfilled.

Discussion

The team also held discussions with Dr. N. Mohan, Dean of the hospital, Dr, Swaminathan, Dr. P.V. Dhanapal, Deputy Medical Superintendent, Dr. Geetha David, Resident Medical Officer, and Dr. Sundaravel, Nodal Officer. The team would in turn submit report to MCI and based on it permanent affiliation would be granted, doctors said.

The team had earlier visited the medical college on Steel Plant Road and ascertained the infrastructure present there.

பரீட்சையில் தோல்வியா? கவலையை விடுங்கள்.. வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!

பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் மன நெருக்கடிக்கு உள்ளாகி, நிம்மதியை இழக்கிற காலகட்டம் இது! விதைத்து பயிர் வளர்த்த விவசாயிகள் அறுவடைக்கு காத்திருப்பது போன்று, பரீட்சை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்கு காத்திருக்கிறார்கள்.

‘நிறைய மதிப்பெண் கிடைக்கும். டாக்டர், என்ஜினீயரிங் படிப்பில் வெற்றிகரமாக சேர்ந்து அதிக செலவில்லாமல் படித்து முடித்து விடலாம்’ என்று எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் ஒருவகை. இந்த வகை மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள் என்று பெயரெடுத்திருப்பார்கள். அதனால் அவர்களது பெற்றோரும், நண்பர்களும், உறவினர்களும் கூட அந்த மாணவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு சுமையினை ஏற்றி வைத்திருப்பார்கள். தேர்வு முடிவு அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் அமையாவிட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகுவார்கள்.

இன்னொரு வகை மாணவர்கள் மதில்மேல் பூனை போல் வெற்றியா, தோல்வியா என்ற கேள்விக்குறியோடு காத்திருப்பவர்கள். தேர்வு முடிவு வரத் தொடங்கும்போது இவர்கள் தன்னை அறியாமலே பயப்படத் தொடங்குவார்கள். கவலையும், மன உளைச்சலும் இவர்களை உலுக்கும்.

தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதபோதும், தோல்வி அடைந்துவிட்டோம் என்ற நிலையை அடையும்போதும் எதிர்காலத்தை பற்றிய அச்சமும், சமூகத்தை-உறவினர்களை எதிர்கொள்வதை நினைத்து ஏற்படும் கவலையும், அவர்களுக்கு கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

மன உளைச்சல் எல்லை மீறும் போது ஒரு சிலர் தற்கொலை என்கிற மிக தவறான முடிவினை எடுத்துவிடுகிறார்கள். இந்தியாவில் தற்கொலை அதிகரிக்கிறது. உலக சுகாதார நிறுவனம், 'தற்கொலைகளின் உலக தலை நகரம்' என்று இந்தியாவை குறிப்பிடுகிறது. 2013-ல் 1,34,799 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். இந்தியாவில் இரண்டாம் இடத்தை தமிழ்நாடு பிடிக்கிறது. தற்கொலை செய்துகொள்கிறவர்களில் 10 சதவீதம்பேர் மாணவர்கள் என்பது அதிர்ச்சியான உண்மை! அதனால் தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் ஒவ்வொரு மாணவரும் ‘வாழ்க்கையில் நிறைய தேர்வுகள் வரும். அதில் தோல்வியும், வெற்றியும் மாறிமாறி வருவது இயற்கை. ஆனால் ஒரே ஒரு உயிர்தான்.

போனால் அது திரும்பி வராது' என்ற உண்மையை உணர வேண்டும். 'தோல்வியை நாளையே வெற்றியாக மாற்ற முடியும்' என்ற தெளிவோடு தேர்வு முடிவை எதிர்கொள்ளவேண்டும்.

மாணவர்கள் மனநெருக்கடியை அனுபவிக்கும் இந்த கால கட்டத்தில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது.

பெற்றோருக்கு:

தேர்வு எழுதிய காலத்தில் கொடுத்ததைவிட அதிக முக்கியத்துவத்தை உணர்வு ரீதியாகவும், உணவுரீதியாகவும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுங் கள்.
அவர்களது மனக்குழப்பத்தை அதிகரிக்கும் எந்த செயலிலும் ஈடுபடவேண்டாம்.

எப்போதும் பாசிடிவ்வாக பேசுங்கள். தோல்வியில் வென்று சாதனை படைத்தவர்களின் வாழ்க்கையை சொல்லுங்கள்.

தேர்வு முடிவு எப்படியிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவர்களை மனோரீதியாக தயார்ப்படுத்துங்கள்.

மனதுக்கு அமைதியை கொடுத்து நன்றாக தூங்கச் செய்யுங்கள்.

ரிசல்ட் வருவதற்கு முந்தையநாள்:

உங்கள் இதர வேலைகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு கூடுமானவரை அவர்களை உங்கள் கண்காணிப்பிலே வைத்திருங்கள்.

பயத்தை விலக்கிவிட்டு பாட்டு கேட்கட்டும். வழிபாட்டிற்கு சென்றால் அனுமதியுங்கள். மனக் குழப்பத்தையோ, பயத்தையோ ஏற்படுத்தும் உறவினர்கள்- நண்பர்களை சந்திக்காமல் இருக்கட்டும்.

‘எதுவந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. நாங்கள் எப்போதும் உனக்கு துணையாக இருப்போம்’ என்று நம்பிக்கையூட்டுங்கள்.

தற்கொலை பற்றி சிந்திப்பவர்களிடம் தென்படும் அறிகுறிகள்:

* நிறைய சாப்பிடுவார்கள் அல்லது சாப்பாட்டிலே ஆர்வமில்லாதவர்களாக இருப்பார்கள்.

* காரணமின்றி அதிக கோபம் கொள்வார்கள்.
* தனிமையில் எந்நேரமும் சூழன்று கொண்டிருப்பார்கள்.

* தான் அதிகம் விரும்பும், அதிகம் நேசிக்கும் பொருளை திடீரென்று
அடுத்தவர்களுக்கு இனாமாக கொடுக்க முன்வருவார்கள்.
* அதிகமாக தூங்குவது அல்லது தூக்கமே இல்லாமல் தவிப்பது.

* முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்துவது!

இப்படிப்பட்ட அறிகுறிகளில் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்டவைகளோ தேர்வு முடிவு தெரியும் காலக்கட்டத்தில் உங்கள் பிள்ளைகளிடம் இருந்தால் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துங்கள்.

கீழ்கண்டவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.
* ஏற்கனவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள்.

* எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பவர்கள். (impulsive dicision)
* பலகீனமான மனநிலை கொண்டவர்கள்.
* போதைப் பழக்கம் உள்ளவர்கள்.

* பெற்றோர் பிரிவு அல்லது அமைதியற்ற குடும்பத்தில் வசிப்பவர்கள்.
* அதிரவைக்கும் செயல்பாட்டை கற்பனை செய்துகொண்டு, அதை நாம் நிஜமாக்கினால் என்ன? அதை அனுபவித்து பார்த்தால் என்ன? என்ற கோணத்தில் சிந்திப்பவர்கள்.

* தற்கொலை மனோபாவத்தில் இருப்பவர்கள், அதற்கான சூழ்நிலைகளோ, பொருட்களோ கிடைத்தால் உடனே அந்த முயற்சியில் இறங்கிவிடுவார்கள்.

அதனால் அறிகுறி தென்படுபவர்கள் கண்களில் தற்கொலைக்கு பயன்படுத்தும் கயறு, கத்தி, துப்பாக்கி, தூக்க மாத்திரைகள், விஷம், ஆசிட் போன்ற பொருட்கள் படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அனைவருமே ஏதாவது ஒருமுறை தேர்வில் தோற்றவர்கள்தான். அதனால் தோல்வியை நினைத்து துவண்டுவிடாமல், ‘நாளை தானும் ஒரு உயர்ந்த மனிதன் ஆவதற்கு வாய்ப்பு உருவாகி இருக்கிறது’ என்று நம்பிக்கை கொள்ளுங்கள்!

ரிசல்ட் அன்று:

கடவுள் நம்பிக்கை இருந்தால் வழிபாட்டு மையத்திற்கு அழைத்து செல்லுங்கள்.

முடிந்தவரை உங்கள் கண்காணிப்பிலே தேர்வு முடிவை பார்க்கட்டும்.

முடிவு எப்படி இருந்தாலும் அதை விமர்சிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

எதிர்பார்த்ததைவிட மதிப்பெண் குறைந்திருந்தாலோ, ஒருவேளை தோல்வி அடைந்திருந்தாலோ உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள்.

மகிழ்ச்சியான ரிசல்ட் என்றால் எல்லோரிடமும் கூறி சந்தோஷப்படுங்கள்.

எதிர்மறையான ரிசல்ட் என்றால் யாரிடமும் கூறவேண்டாம். முடிந்த அளவு நண்பர்கள், உறவினர்கள் போன்களை புறக்கணித்துவிட்டு முழு கவனத்தையும் மகன் மீது செலுத்துங்கள்.

தோல்வியை திரும்பிப்பார்க்க வேண்டாம். அதை பற்றி விசாரிக்கவும் வேண்டாம். அடுத்து என்ன செய்வது? என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
எந்த தோல்விக்கு பின்னாலும் மிகப்பெரிய வெற்றி ஒன்று ஒளிந்திருக்கும் என்பதை உணர்த்துங்கள்.

அந்த தோல்வியால் எழும் மன அழுத்தம்தான் தவறான முடிவுகள் எடுக்க தூண்டும். பெற்றோர், உறவினர்கள், நண்பர்களை எதிர்கொள்ள தயங்குபவர்களே தற்கொலை போன்ற முடிவுக்கு செல்வார்கள். அந்த தயக்கத்தை போக்கிவிட்டால், மன அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்.

தேர்வு முடிவு எதிர்மறையாக இருந்தால் அவர்களை தனியாக இருக்க அனுமதிக்க வேண்டாம். நல்ல நண்பர்களை சந்திக்கட்டும். அதே நேரத்தில் பிரச்சினைக்

குரிய நண்பர்களின் சந்திப்பு அவசியம் இல்லை. தனியாக எங்கேயும் அனுப்ப வேண்டாம்.

தோல்வி அடைந்தவர்களுக்கு நம்பிக்கைதான் நல்ல மருந்து. அந்த நம்பிக்கை மருந்தை வாய்ப்பேச்சாக மட்டும் வழங்காமல் திட்டமாக தயாரித்து வழங்குங்கள். அடுத்து எழுதவேண்டிய பரீட்சை பற்றியும், அதற்கான தயாரெடுப்பு பற்றியும், பின்பு சேரவேண்டிய கோர்ஸ் பற்றியும் நம்பிக்கையூட்டும் விதத்தில் அந்த திட்டத்தை தயார் செய்து கொடுங்கள்.
தேர்வில் தோற்றவர்கள் யாரும் வாழ்க்கையில் தோற்றதில்லை. தேர்வில் வென்றவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வென்றதும் இல்லை.

‘வாழ்க்கையில் நிறைய தேர்வுகள் வரும். அதில் தோல்வியும், வெற்றியும் மாறிமாறி வருவது இயற்கை. ஆனால் ஒரே ஒரு உயிர்தான். போனால் அது திரும்பி வராது' என்ற உண்மையை உணர வேண்டும்.

கட்டுரை: பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி, DSc., F.R.C.S.
தலைவர்: தமிழ்நாடு மருத்துவர் சங்கம், சென்னை.

மருந்துக்கு விலை உயர்வா?

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அதையும் மீறி நோய்வரும் நேரத்தில், அந்த நோயின் கொடுமையைக் கட்டுப்படுத்த மருந்துகள் உட்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த நிலையில், நீரிழிவு, புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை 3.84 சதவீதம் உயர்த்திக்கொள்ள மருந்து கம்பெனிகளுக்கு, மத்திய அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த மருந்துகளெல்லாம் தினமும் நோயாளிகள் நோயின் தன்மைக்கேற்ப ஒருமுறைக்கு மேல் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் மருந்துகளாகும். தேசிய மருந்து விலை ஆணையம் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில், இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிவிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த 509 மருந்து பட்டியலில் மஞ்சக்காமாலை, புற்றுநோய், மூட்டுவலி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தும் ஊசி மருந்துகளும் அடங்கும். ஒருபக்கம் குடும்பக்கட்டுப்பாடு திட்டங்களில் தீவிரம் காட்டும் அரசாங்கம், கருத்தடை சாதனங்களுக்கும் விலையை உயர்த்தியுள்ளது. அரசாங்கத்தின் விலை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற மருந்துகளை மருந்து கம்பெனிகள் 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 108 மருந்துகளை இப்படி அத்தியாவசிய மருந்துகள் மீதான விலைக்கட்டுப்பாட்டில் இருந்து நீக்கியதால், அதன் விலைகளும் இப்படி 10 சதவீதம் வரை நிச்சயமாக உயர்ந்து விடும்.

ஏற்கனவே இந்த அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ள பாரசிட்டமால், மெட்டோபார்மின், அமாக்சிலின், ஆம்பிசிலின் உள்பட 12 மருந்துகள் வெளிநாடுகளில் இருந்து அதில் முக்கியமாக 80 முதல் 90 சதவீதம் வரை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சீனாவில் இருந்து ரூ.38 ஆயிரத்து 186 கோடி செலவிலான இந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறையால் அநேகமாக பெரும்பான்மையினருக்கு 40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. முன்பெல்லாம் காலையில் நடை பயிற்சி செல்லும் நேரத்தில் ஒருவரையொருவர் நலமா என்று விசாரித்த காலம்போய், இப்போது சர்க்கரை அளவு எவ்வளவு என்று விசாரிக்கும் காலம் வந்துவிட்டது. இந்த சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக்கொதிப்பு, சிறுநீரக கோளாறு, ஆஸ்துமா, அல்சர் போன்ற பல நோய்களுக்கு தினமும் மருந்து சாப்பிடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த மருந்து செலவுக்கெல்லாம் இன்சூரன்சும் இல்லை, வருமானவரி விலக்கும் இல்லை. வயதான காலத்தில் இந்த மருந்து செலவே மாதசெலவில் பெரும் பங்கை விழுங்கிவிடு கிறது.

இந்த நிலையில், மருந்துவிலை உயர்வு என்பது சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் பெரிதும் பாதிக்கும். எனவே, இதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே மத்திய அரசாங்கம் திட்டமிட்டு அறிவித்த ‘ஜன் அவுஷாதி’ என்ற பெயரிலான அத்தியாவசிய மருந்துகளை ஜெனரிக் மருந்துகள் என்ற அடிப்படையில், ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும். ஜெனரிக் மருந்துகள் என்றால் வணிக முத்திரையுடன் கூடிய மூலக்கூறுகளாலான மருந்துகளாகும். மருந்து ஒன்றுதான், ஆனால், கம்பெனி பெயர்தான் இருக்காது, பளபளக்கும் பேக்கிங்களிலும் இருக்காது. இந்த வகையில் 504 ஜெனரிக் மருந்துகள் விற்கப்படும். முதல்கட்டமாக 800 கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஜெனரிக் மருந்துகளை அனைத்து மருந்து கடைகள், அரசு மருந்து கடைகள், கூட்டுறவு மருந்துகடைகளிலும் கிடைக்கவும், டாக்டர்களையும் இந்த ஜெனரிக் மருந்துகளை எழுதிக்கொடுக்க ஆலோசனை கூறவும் மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Monday, April 20, 2015

HC refuses to waive doctors’ absenteeism in post graduate course

CHENNAI: The Madras high court's Madurai Bench has quashed the petitions of two post graduate medical students who had moved court seeking permission to write the final year exam despite lacking requisite attendance.

Assistant surgeons Dr V Rajasekar and Dr Y Lydia got study leave from the state government for pursuing their post graduate studies in the academic year 2012-2013. Rajasekar got admission in MD community medicine and Lydia in MD biochemistry at Sree Mookambika Institute of Medical studies, Kanyakumari district. While Rajasekar was relieved from duty on October 3, 2012, Lydia got leave from November 30, 2011. As the academic course had started in April 2012, both were late in joining the course. So the institution did not allow them to write the exams.

Counsel for the students argued that the decision of the institute was illegal and arbitrary. The college had collected the entire fee for three years and not disclosed the rules pertaining to attendance, he argued. Also, the college had allowed one Dr V S Deepa—who did not have sufficient attendance—to write the same exam, he claimed. The MCI regulations also said that only 80% attendance was required for being eligible to write the exam.

In its counter, Mookambika Institute said that according to the regulations of the Tamil Nadu Dr MGR Medical University, 85% attendance was required for writing the exam. Also, Dr V S Deepa was allowed to write the exam only because she had requisite attendance.

In his verdict, Justice S Vaidyanathan said, "once a regulation has been set down...it is incumbent upon students to follow the same. According to the rules, 85% attendance was mandatory. Also, the stipulations "did not condone leave for any reason including pregnancy, child birth and medical conditions." As Dr MGR University did not want human life to be compromised because of incomplete training, it had established strict rules.

Both students were "trying to fish in troubled waters" by giving the example of Dr Deepa. She was not before the court, and according to records, she had the required attendance. If there was any discrepancy, it was for the state government to inspect the records. The students were not within the ambit of MCI regulations as the rules were specifically for those who had undergone a two-year recognized diploma course in the same subject.

If the court allowed them to write the exam, it would "amount to injustice and discrimination, thereby setting a wrong precedent," said the court adding. The insistence on 85% attendance was needed to help students become experts in the medical profession, the judge ruled.

‘Students leaving varsity midway won’t get refund’

CHENNAI: The Madurai bench of the Madras high court has ruled that a direction to a university to make a fee refund to students who leave courses midway is tantamount to "abuse of the process of law", setting aside an order of a district forum to SASTRA University to refund the fees of three students who left the institution to secure admission elsewhere.

The bench heard that SASTRA University admitted V Srinivasa Rao, S Venkataraman and K Ramesh to the BTech course in electronics and communication engineering (ECE) stream in June 2010 and July 2010 and they paid Rs 52,000 each as initial fee. When they reached the second year of the course, they wanted to join another institution and asked for transfer certificates.

According to the admission rules, the university issued the students transfer certificates and returned to them their original documents after they each paid around Rs 1.77 lakh as balance fee for the entire course. The students then approached the Consumer Protection Council to seek a fee refund, and the council moved the district consumer disputes redressal forum, Thanjavur.

In its order, the forum directed the university to refund each student Rs 1.77 lakh.

SASTRA moved the Madras high court against the order. The students' counsel said collection of the entire fee amount was illegal and against rulings by the Supreme Court, National Consumer Disputes Redressal Commission as well as stipulations of the University Grant Commission. In its counter, the university said the forum did not have the jurisdiction to try the case.

Citing verdicts by various high courts, Justice K B K Vasuki said if a student withdraws admission after commencement of classes and the seat remained vacant, the terms agreed at the time of admission would be binding. The SASTRA prospectus said it would not refund fees paid, so the university committed no illegality in refusing to refund the fees. The terms of agreement at the time of admission would prevail over any guidelines of the UGC or the All India Council of Technical Education, the judge said.

In a public notice dated April 23, 2007, UGC said a student who leaves a course midway is entitled to a fee refund only if another candidate fills the seat.

Rulings of high courts and the apex court also said institutes could collect the entire fee for a course in advance.

The students submitted verdicts of consumer commissions to bolster their case, but the judge said they could not cite the verdicts because only high court and Supreme Court orders are binding precedents.

"The grievance raised by students does not make a prima facie case to subject the university to the ordeal of trial," the judge said, adding that if a court allowed legally and factually unsustainable complaints it would cause "serious prejudice" to the university.

அரண்மனைக் காசு படுத்தும் பாடு

அரசு வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றினார் என்ற தலைப்பில் அடிக்கடி செய்திகள் உலா வருவதைப் பார்த்திருக்கிறோம்.

எத்தனையோ ஊழல் முறைகேடுகள் குறித்த செய்திகளைப் போன்று இதையும் காலப்போக்கில் மறந்தும் இருக்கிறோம்.ஆனால், சமீபத்தில் படித்த, கேட்ட ஒரு செய்தி மனதைப் பிசைவதாக இருக்கிறது.

அரசு வேலை வாங்கித் தருவதாக மாற்றுத் திறனாளிகளை நம்ப வைத்து அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் சிலர் பணம் வசூலித்து ஏமாற்றிப் பின்னர் சிக்கிக் கொண்டதே அந்தச் செய்தி.

சிக்கிய கும்பலில் ஒருவர் தன்னை ஒரு மாவட்ட ஆட்சியர் என்று கூறிக் கொண்டு, வேலை வாய்ப்பு முகாம் நடத்துவதுபோல் நாடகமாடி அந்த மாற்றுத் திறனாளிகளை நம்ப வைத்திருக்கிறார்.

பொதுவாக, ஒருவர் எவ்வளவு கொடியவராக இருந்தாலும், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் போன்றவர்களிடம் சற்று இரக்கம் காட்டுபவர்களாகவே இருப்பார்கள்.

இன்னும் சொல்லப் போனால் திரைப்படக் கதாநாயகர்கள்கூட கொள்ளையர்களாகவே இருந்தாலும், ஏழைகளுக்கும், இயலாதவர்களுக்கும் உதவி செய்பவர்களாகவே சித்திரிக்கப்படுகிறார்கள்.

ஆனால், அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி மாற்றுத் திறனாளி இளைஞர்களிடம் மோசடி செய்தவர்களை இரக்கமற்ற பாவிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இச்செய்திக்கு மறுபக்கம் ஒன்று உள்ளது. அதையும் நாம் ஆராய வேண்டியிருக்கிறது.

முழு உடல்திறன் உள்ளவர்களானாலும் சரி, மாற்றுத் திறனாளிகளானாலும் சரி, எதற்கு ஓர் அரசு வேலைக்காக இப்படி ஏங்க வேண்டும்? லஞ்சம் கொடுத்து, முறையற்ற வழியிலாவது ஏன் அரசு வேலையில் அமர்ந்துவிடத் துடிக்க வேண்டும்?

தனியார் துறைப் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு, நேர்காணல் போன்றவற்றில் காட்டும் திறமையே போதுமானதாக இருக்கிறது. அப்பணிகளுக்கு முயலுபவர்கள் எவரும் பெரிய அளவில் பணம் கொடுப்பதாகவோ, ஏமாறுவதாகவோ நாம் கேள்விப்படுவதேயில்லை.

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கொடுப்பது பழைய சொலவடையாகும். அரைக் காசானாலும் அரண்மனைக் காசு என்பதே அந்தச் சொலவடை.

அரசாங்க வேலையில் சம்பளம் குறைவானாலும்கூட, அதனால் கிடைக்கும் கெளரவமும் மதிப்பும் அதிகம் என்பதே அதன் உள்பொருள்.

தற்காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இரண்டிலும் வேலை செய்பவர்களுக்குக் குறைவான சம்பளம் என்று கூறிவிட முடியாது. வேலையின் நிரந்தரத்தன்மை, சமூக மதிப்பு ஆகிய இரண்டுமே அரசு வேலையின் கவர்ச்சி அம்சங்கள் என்று எளிதாகக் கூறி விடலாம்.

நீண்ட காலத்துக்கு முன்பு, சிறப்பாக இயங்கிவந்த பி அன்ட் சி மில் போன்ற பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.

சமீபத்தில் ஒரு பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தன்னுடைய ஆயிரக்கணக்கான மூத்தப் பணியாளர்களை திடீரென்று வெளியேற்ற முயற்சித்ததை அறிவோம். அவர்களைவிடக் குறைந்த சம்பளத்தில் புதிய பணியாளர்களை அமர்த்தித் தனது லாபத்தை உயர்த்திக் கொள்ள அந்நிறுவனம் விரும்பியது.

அதேபோன்று, ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனமும், அதற்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனமும் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டார்கள்.

தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தால் மூடப்படும்போது பெருமளவில் பணியாளர்கள் வேலை இழந்து திகைத்து நிற்கின்றனர். அவர்களது குடும்பம் சொல்லொணாத் துயருக்கு ஆளாகிறது. பிள்ளைகளைப் படிக்கவைக்கவும், திருமணம் செய்துவைப்பதற்கும் அவர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது.

அரசுத் துறைப் பணிகளில் இது போன்ற ஆபத்துகள் இல்லை. சட்டப்பூர்வமாக ஓய்வு பெறும் வயது வரும் வரை பணிப் பாதுகாப்பும், அதன் பிறகு ஓய்வூதியப் பயன்களும் இருக்கின்றன. பெரும் முறைகேடுகளில் சிக்காத எந்த ஓர் அரசு ஊழியரும் இந்த விஷயத்தில் தைரியமாக இருக்கலாம். சம்பளமும் முன்பை விடப் பரவாயில்லை.

இதையெல்லாம் மீறி, அரசு வேலையில் இருக்கின்ற இன்னொரு கவர்ச்சி அம்சம் "கிம்பளம்' என்று சொல்லப்படுகிறது.

அரசாங்கம் தரும் எந்தவொரு சலுகையையும் மக்கள் பெறுவதற்கு, ஜாதிச் சான்றிதழ் தொடங்கிப் பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. அரசு முத்திரையுடன் கூடிய ஓர் அரசு அலுவலரின் கையெழுத்து பொது மக்களின் தலையெழுத்தையே நிர்ணயிக்கவல்லது.

அரசு சலுகைகளை அதற்கான தகுதியின்றிப் பெற முயல்வோர் அதற்காகப் பணம் செலவழிக்கத் தயார் என்ற நிலையில், தகுதியுள்ளவர்களும் செலவழித்தால்தான் காரியம் ஆகும் என்ற நிலை பரவலாக உள்ளது. ஆனால், "கிம்பளம்' எதிர்பார்க்காத நேர்மையான ஊழியர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

பணம் செலவழித்தாலும் வேலை உடனடியாக நடைபெற வேண்டும் என்ற பொது மக்களின் பொறுமையின்மைதான், அரசு வேலைக்கு அதிக ஆர்வத்தைத் தூண்டுகிறது. அரசு வேலை கிடைப்பதற்கு முதலில் செலவழித்துவிட்டுப் பிறகு சம்பாதித்துவிடலாம் என்ற மனோபாவமே இவ்வாறு ஏமாறுகிறவர்களையும், ஏமாற்றுபவர்களையும் உருவாக்குகிறது.

சொந்தக் காசை முதலாகப் போட்டு, அந்தச் செலவை அரண்மனைக் காசால் ஈடுகட்டிவிடலாம் என்ற எண்ணத்தை மக்களின் மனத்திலிருந்து அடியோடு ஒழித்துக் கட்டினால் ஒழிய, இத்தகைய முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறவே செய்யும்.

பணம் கொடுத்து அரசுப் பணியில் சேர முடியாது என்ற தெளிவையும், பணியில் சேர்ந்த பின் "கிம்பளம்' பெறவே முடியாது என்ற சூழலையும் உருவாக்குவது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட.

Sunday, April 19, 2015

BSNL OFFER WEF 01,05. 2015

Logo




PLUSTWO RESULTS,,MALAIMALAR


Meet the mathematics professor behind 'Cheryl's birthday' puzzle -




SINGAPORE - The man behind the "Cheryl's birthday" viral poser is a mathematics professor from the National Institute of Education (NIE).

Dr Joseph Yeo Boon Wooi, who is in his 40s, is part of the panel for the Singapore and Asian Schools Math Olympiads (SASMO), the largest math competition here.

He helps set the questions each year for student "mathletes".

This year's competition took place on April 8. The puzzle in question was leaked, and subsequently posted on Facebook on April 11 by local TV presenter Kenneth Kong, who initially mistook it for a Primary 5 question.

Dr Yeo, a recipient of the prestigious Nanyang Excellence in Teaching Award in 2013 and first author of the New Syllabus Mathematics used in secondary schools, said he first chanced upon a Facebook post discussing the birthday logic problem on April 12.

But it did not ring a bell until he saw the photo of the question.

It has since been featured on international media such as The New York Times, The Guardian and the BBC, and was a top-trending story on US site Buzzfeed. On April 16, "Cheryl" even got her own cartoon on The New Yorker.

The Straits Times caught up with the media-shy math whiz and persuaded him to answer some questions about himself and how he came up with the viral hit that has confounded the world.

Dr Yeo's birthday, coincidentally (or not), falls on July 16 - the answer to the puzzle.

How did you come up with the question "Cheryl's birthday"?

I set the question based on guidelines given by SASMO.

This question, like all other questions we set, was vetted and approved by a panel of local and overseas experts from the SASMO Partners' League, which organises SASMO contests in their own countries.

"Cheryl's birthday" is not a new logic problem. There are various versions which others have modified. I am not aware of the original source. I modified it by changing the names, dates and context or storyline.

What do you think of the buzz it has generated?

I first saw someone on Facebook talking about the Cheryl's birthday logic problem on Sunday (April 12). It didn't ring a bell.

Then I saw a photo of the question. I was like, "Heh! This looks familiar!" I still cannot believe that the question has gone viral.

Which aspect of math do you specialise in?

I am a lecturer with the National Institute of Education. I specialise in training student teachers how to teach secondary school maths.

How did you develop your interest in maths?

It just comes naturally to me. I enjoy solving maths and logic problems.

chuimin@sph.com.sg

- See more at: http://www.straitstimes.com/news/singapore/more-singapore-stories/story/meet-the-mathematics-professor-behind-cheryls-birthday-p#sthash.PPYKWKjl.dpuf

SRI RAMACHANDRA UNIVERSITY POST GRADUATE ADMISSION NOTIFICATION 2015-16


SRM UNIVERSITY ADMISSION NOTIFICATION 2015


Government Introduces Digital Certificates for Pensioners in UT

PUDUCHERRY:The territorial administration has decided to implement Digital Life certificate - Jeevan Pramaan - for pensioners of the government of Puducherry.

According to a government order issued on April 15, the digital certification would do away with the requirement of a pensioner having to submit a physical Life Certificate in November each year in order to ensure continuity of pension getting credited into his account. The Department of Electronics and IT has developed a software application which enables recording of the pensioner’s Aadhaar and bio-metric details from his mobile device or computer. Key details of the pensioner including bio-metric information will be uploaded to a central database on a real-time basis. The details are stored in the life certificate repository, ultimately enabling the Pension Disbursing Agency to access a Digital Life Certificate. This will conclusively establish that the pensioner was alive at the time of authentication.

All that a pensioner has to do is get himself registered in Jeevan Pramaan website (www.jeevanpramaan.gov.in) by providing his Pension Payment order, Bank Account number and Aadhaar Number. This can be done by visiting the nearest Jeevan Pramaan centre located in National Informatics Centre (NIC), PSU banks, Directorate of Accounts and Treasuries or even from his home if he has a computer and a bio-metric reader.

Once the data provided is authenticated, he will receive a one time password (OTP) on his registered mobile number. With this, he can log in and generate a digital life certificate by providing his bio-metrics, either a finger print or Iris through a bio-metric reader and authenticate himself. The bio-metric reader of both thumb or iris will authenticate the bio-metric data online in the UIDAI database. Once the authentication is successful, his digital life certificate will be generated (PDF format) and stored in the repository. The pensioner can download and use it anytime.

Set Up Police Station on Univ Campus to Curb Crimes: UGC

CHENNAI: In a bid to ensure on and off campus safety of students, University Grants Commission (UGC) has instructed Higher Education Institutions (HEIs) in the country to set up police stations on campus to keep away anti-social elements.

UGC Secretary Dr Jaspal S Sandhu, in a letter to vice Chancellors of all universities, has made it clear that ensuring students’ safety from attacks, threats and accidents should be prime concern of educational administrators. “Safe, secure and cohesive learning climate is an ineluctable precondition to quality education and research in HEIs,” it said.

Prime among the safety guidelines the UGC has formulated, is a suggestion to set up police stations on campus to allay security concerns besides commissioning of a student body of Community Service Officers. “With students stud ying late night, these officers can provide short distance escort service to the nearest taxi or bus stand besides helping with night patrol,” says the guideline document.

Installing emergency notification system on the lines of the successful University of California’s ‘WarnMe’ model was another suggestion. “HEIs can take all necessary steps to install an emergency notification system which will send an emergency message via email, telephone, cell phone and text messaging within minutes of occurrence of an incident that poses immediate threat to health and safety of campus community members,” the guideline document said.

Self-defence training for women studying and working on campus should be made a mandatory component of extra-curricular activities undertaken in HEIs, the document noted. Calling on institutions to set up support and education mechanisms to educate students on sexual violence, colleges were instructed to confront oppressive stereotypes which cause interpersonal violence.

UGC also mandated institutions to set up ‘Students Counselling system’ for managing problems and challenges faced by them. “It should be a unique, interactive and target-oriented system involving teachers and parents, resolving to address concerns ranging from anxiety, stress, fear of change and failure, to homesickness and a slew of academic worries.” Teacher-counsellors trained to act as guardians of students are to submit growth report and feedback to parents and help in initiating corrective action upon discovering anomaly in behaviour patterns.

வில்லங்கமற்ற வீட்டை வாங்குங்கள்



அமைதியான சூழலில் ஒரு இடம் வாங்கி அங்கே நமக்குப் பிடித்த மாதிரி வீடு கட்டிக் குடியேறினால் போதும், வேறென்ன வேண்டும் வாழ்வில் என்பது பலரது நினைப்பு.

ஆனால் சாதாரண மத்தியதர வாழ்வு நடத்துபறவர்களுக்கு யதார்த்தத்தில் தனி வீடு என்பது அருகில் தெரியும் கைக்கெட்டாத கனவு. ஆகவே கனவை அடைய முடியாவிட்டாலும் அதற்கு நெருக்கமான இடத்தையாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

ஏதாவது ஒரு அபார்ட்மெண்டில் ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டாலே ஓரளவுக்கு திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. வாடகை கொடுத்து மாளவில்லை, சம்பாத்தியத்தில் பாதி வாடகைக்கே போய்விட்டால் மீது செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பதே பெரும் கவலை. இந்நிலையில் அபார்ட்மெண்ட் வாங்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீடு வாங்கத் தயாராகும்போது பல கட்டுமான நிறுவனங்கள் கண்ணில் படும். பலவகையான தரப்புகளிலிருந்தும் வீடு தொடர்பான தகவல்கள் வந்து மூழ்கடிக்கும். இதிலிருந்து ஒரு சரியான கட்டுமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து நமக்கான வீட்டை வாங்கியாக வேண்டும்.

ஏனெனில் இந்தியாவில் எந்த அளவுக்கு ரியல் எஸ்டேட் துறை வளர்ந்துவருகிறதோ அந்த அளவுக்கு அதில் ஏமாற்றும் ஊழலும் அதிகரித்துள்ளது என்பது கசப்பான உண்மை. பணம் அதிக அளவில் புரளும் ஒரு துறையில் இது சாதாரணமே. நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நுகர்வோரான நமக்கு அதிக விவரங்கள் தெரிந்தபோதும் இன்னும் ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்பது கேலிக்குரியதுதான். எனினும் அதுதான் உண்மை.

பொய்யான வாக்குறுதிகள்

கட்டுமான நிறுவனங்கள் தரும் பொய்யான வாக்குறுதிகளை நம்பிவிடுகிறோம். ஒரு கட்டுமான நிறுவனம் வீட்டுத் திட்டத்துக்கான பணத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டு வீடு தயாராகும் வரை உங்களுக்கு வட்டி தருகிறோம் என்று சொல்லக்கூடும். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டால் நம் கதி அதோ கதிதான். அவர்கள் தரும் செக் வங்கியிலிருந்து அசுர வேகத்தில் திரும்பி வந்துவிடலாம். எனவே இது போன்ற விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி நகரிலிருந்து சிறிது தொலைவில் தான் உள்ளது. ஆகவே வீடு தயாரான உடன் நீங்கள் குடியிருக்க விரும்பாவிட்டாலும் பரவாயில்லை, அதை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கலாம். அதை வைத்தே நீங்கள் வீட்டுக் கடனை அடைத்துவிடலாம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் வீடு தயாரன பின்னர் வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்னர் நமது தொண்டைத் தண்ணி வற்றிவிடும். ஒரு ஈ காக்கா கூட வராது என்பதைப் பின்னர் அறிவதைவிட முன்னர் உணர்ந்துகொள்வது நல்லது.

போலி ஆவணங்கள்

போலி ஆவணங்கள் உதவியுடன் பிரச்சினைக்குரிய இடங்களை உங்களிடம் விற்றுவிடலாம். வில்லங்கமான இடங்களில் வீட்டைக் கட்டிவிட்டு அதை உங்கள் தலையில் கட்டிவிட முயல்வார்கள். சுதாரிப்பாக இல்லை என்றால் நமது பணம் அவ்வளவுதான். கடலில் கரைத்த பெருங்காயமாகப் போய்விடும். வீட்டை வாங்கிய பின்னர் ஆவணங்கள் பொய்யானவை என்று தெரியும்போது வீட்டைக் கட்டித் தந்தவர் காணாமல் போய்விடுவார். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தகுந்த சட்ட உதவி பெற்று ஆவணங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் காலதாமதம் என்பதும் ரியல் எஸ்டேட் துறையைச் சீரழிக்கும் மற்றொரு சிக்கல். ஆனாலும் இந்தச் சீரழிவும் நிலவிவருகிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பிட்ட காலத்தில் முடித்துத் தந்துவிடுவோம் என்று தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் போட்ட நிலையிலும் சொன்னபடி வீட்டை முடித்துத் தராமல் இழுத்தடிப்பார்கள். இந்த மாதிரி எல்லாம் நடந்துகொள்ளாத கட்டுமான நிறுவனங்களையும் தேடிக் கண்டுபிடித்தால் தப்பித்துவிடலாம்.

அதே போல் வீட்டின் வரைபடத்தில் இருக்கும் வசதிகளில் சிலவற்றைச் செய்யாமலே விட்டுவிடுவார்கள். உதாரணமாகச் சமையலறையில் பொருள்களை வைக்கத் தேவையான அலமாரிகளைச் செய்துதருவதாக உறுதியளித்திருப்பார்கள்.

ஆனால் வீடு முடிவடைந்த பின்னர் இந்த வேலை முடிக்கப்படாமல் இருக்கும். கேட்டால் கண்டிப்பாக முடித்துத் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் வேலை நடக்கவே நடக்காது. மேலும் நல்ல தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு போன்றவற்றுக்கான அனுமதி பெறும் விஷயமும் கவனத்தில்கொள்ள வேண்டியவை.

இவற்றை எல்லாம் நன்கு செய்து தரும் நிறுவனமாகப் பார்த்து, வீடு அமைய உள்ள இடத்தையும் நேரிடையாகச் சென்று பார்த்து, நமக்கு முழு திருப்தி ஏற்பட்ட பின்னரே வீடு தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வது நல்லது. வீடு முக்கியம் தான் ஆனால் அதைவிட முக்கியம் குடியேறும்போது அது குடைச்சல் தராமல் இருக்க வேண்டும் என்பதும்.

DECCAN CHRONICLE CHENNAI EDITION


இரவு முழுவதும் இலவச 'டாக் டைம்' தினமலர்

புதுடில்லி: மொபைல் புரட்சி காரணமாக, பி.எஸ்.என்.எல்., தரைவழி தொலைபேசியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. நாடு முழுவதும், 2.80 கோடி பேர், பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்பு வைத்துள்ளனர். உயர்வேக இணையதள இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள், தொலைபேசியை பயன்படுத்தாமல், இணையதளத்தை மட்டும் பயன்படுத்துகின்றனர். இன்னும், ஆறு கோடி இணைப்புகள் காலியாக உள்ளன. எனவே, தரைவழி தொலைபேசியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க, இரவு முழுவதும் இலவசமாக பேசும் திட்டத்தை (ப்ரீ டாக் டைம்) பி.எஸ்.என்.எல்., அறிவிக்க உள்ளது. இதன்படி, இரவு, 9:00 மணி முதல், காலை, 7:00 மணி வரை தரைவழி தொலைபேசியில் இருந்து, பி.எஸ்.என்.எல்., அல்லது வேறு நிறுவனங்களைச் சேர்ந்த, தரைவழி தொலைபேசி அல்லது மொபைல் எண்ணுக்கு இலவசமாக பேசலாம். இத்திட்டத்தை மே, 1ம் தேதி முதல் அமல்படுத்த, பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது...

NEWS TODAY 20.09.2024