Friday, July 17, 2015

SC: MCI erred in denying permission to college in Mahabs


CHENNAI: Chances of one more private medical college coming up in Kancheepuram might be a reality with the Supreme Court saying that the Centre and Medical Council of India (MCI) had acted in a biased manner while rejecting the case of Ponnaiyah Ramajayam Institute of Science and Technology Trust.

The trust applied for permission to establish 'Ponnaiyah Ramajayam Institute of Medical Sciences' (PRIMS) at Manamai-Nallur (ECR), near Mamallapuram for the academic year 2015-2016.

The trust submitted the application according to the provisions of the Medical Council of India (MCI) Act, 1956 for establishment of the institute on August 25, 2014. The trust received the Essentiality Certificate (EC) onAugust 28 and the Consent of Affiliation (COA) on August 30. The trust submitted the certificates to the central government on September 10, 2014.

The Centre rejected the application and asked it to file a fresh submission for the academic year 2016-2017. It said the certificates were not submitted before the cut-off date of August 31, 2014. The trust then moved the Delhi high court, which on April 8, 2015, directed MCI to consider its application. Assailing the verdict, MCI filed an appeal. A division bench of the high court said the verdict was "impracticable" and set aside the earlier order on May 5, 2015. PRIST Trust moved the apex court.

A bench of Justice M Y Eqbal and Justice C Nagappan said it did not find any fault on the part of the trust. "...the application was rejected by the central government merely on the ground that it was not submitted before the cut-off date.

Underlining the Union government and the MCI did not "discharge their duties in accordance with the provisions of the MCI Act and rules," the bench directed MCI to consider the application and make its recommendation within three weeks. The matter was posted after four weeks to enable MCI to submit its suggestions in a sealed cover.

படித்தவன் பாவம் செய்தால்...

பிகாரில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம் அந்த மாநிலத்தை மட்டுமன்றி இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. அதாவது, போலிச் சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த 1,400 பேர் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பயந்து ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்திருப்பதுதான் அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம்.
கல்வியில் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாநிலம் பிகார். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பிளஸ் 2 தேர்வின்போது, தேர்வு மையத்துக்குள் இருந்த மாணவர்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர்களும், உறவினர்களுமே "பிட்' கொடுத்து உதவிய சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதும், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் நடவடிக்கைக்குப் பயந்து ராஜிநாமா செய்திருப்பதும் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
நடந்தது இதுதான்... பிகார் மாநிலத்தில் 2006 - 2011 காலகட்டத்தில் நிதீஷ் குமார் முதல்வராக இருந்தபோது, தொகுப்பூதிய அடிப்படையில் (அதாவது ரூ.3,000 சம்பளத்தில்) 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் தொடர்பான விவரங்களைச் சேகரித்து அவர்களைப் பணிநீக்கம் செய்யும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு 2014 ஜூலை 7-ஆம் தேதி அப்போதைய முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக 2014 ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அந்த மாநிலக் கல்வி அமைச்சர் பிரிஷன் படேல், போலிச் சான்றிதழ்கள் கொடுத்துப் பணியில் சேர்ந்ததாக 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், இதேபோல ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களும் விரைவில் கண்டறியப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களைக் கண்டறிந்து பணிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் பணிபுரியும் 4.50 லட்சம் ஆசிரியர்களின் பட்டப் படிப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்து ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாங்களாகவே முன்வந்து ராஜிநாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுவதுடன், இதுவரை அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத் தொகையும் அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதன் தொடர்ச்சியாக, போலிச் சான்றிதழ்கள் கொடுத்துப் பணியில் சேர்ந்த 1,400 ஆசிரியர்கள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி ராஜிநாமா செய்தனர். எனினும், இன்னும் 20,000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், மேலும் பலர் ராஜிநாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லலித் மோடி, வியாபம் மர்ம மரணங்கள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிய விஷயமாக விவாதிக்கப்படவில்லை.
இது ஒருபுறமிருக்க, இந்தியா முழுவதிலும் 21 போலிப் பல்கலைக்கழகங்கள் உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அண்மையில் ஒரு பட்டியலை வெளியிட்டு அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது.
இந்தப் பட்டியலில், தலைநகர் தில்லி தொடங்கி கேரளம், தமிழகம் வரை பல்வேறு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், பிகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே போலிச் சான்றிதழ் கொடுத்து பல்வேறு துறைகளிலும் ஏராளமானோர் பணியில் சேர்ந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மற்றொருபுறம், போலிச் சான்றிதழ் விவகாரத்தில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் அண்மையில் தனது பதவியை இழந்தார். அவர் பிகாரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்ததாகத் தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தார்.
போலி மருத்துவர்கள், போலி வழக்குரைஞர்கள் என பல்வேறு துறைகளில் போலிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கல்வித் துறையிலும் போலிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், பிற துறைகளில் உள்ள போலிகளால் குறிப்பட்ட அந்தத் துறைகளுக்கு மட்டுமே இழப்பு. ஆனால், ஆசிரியர் பணி என்பது அப்படியல்ல. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள்.
இளைஞர்களை நல்வழிப்படுத்தி, திறமைசாலிகளாக உருவாக்கி, நாளைய சமுதாயத்தை வலுவான சமுதாயமாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது. அதனால்தான், மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய், தந்தைக்கு அடுத்தபடியாக குருவை வைத்துள்ளனர்.
அப்படிப்பட்ட ஆசிரியர் பணியில் போலியான தகுதிச் சான்றிதழ்களைக் கொடுத்து பணிபுரியும் கொடுமையை என்னவென்று சொல்வது...

Wednesday, July 15, 2015

பணியிலிருந்து நீக்க முடிவு செய்தால் 3 மாதம் முன்பு நோட்டீஸ் வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

‘ஒருவரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்தால், 3 மாதத்துக்கு முன் அவருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சியைச் சேர்ந்தவர் முனைவர் ஏ.தண்டீஸ்வரன். திருச்சி நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன இணை ஆராய்ச்சியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். இவரை 12.6.2015ல் பணியில் இருந்து நீக்கியும், குடியிருப்பை காலி செய்யவும் நீர்ப்பாசன மேலாண்மைப் பயிற்சி நிறுவன இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தண்டீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிறுவனத்தின் ஆட்சிக் குழு ஒப்புதலின்பேரில் பணி நியமனம் செய்யப்பட்டேன். ஆனால், ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறாமல், என்னை பணிநீக்கம் செய்து இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். சமூகப் பொருளாதாரப் பிரிவு ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறேன். என்னை வேலையில் இருந்து நீக்கினால், அப்பிரிவு இல்லாமல் போய்விடும். என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந் தது. இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ். வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு:

ஆட்சிக் குழு ஒப்புதலுடன் மனுதாரர் இணை ஆராய்ச்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விதிப்படி ஒருவரை நியமனம் செய்யவும், பணிநீக்கம் செய்யவும் இயக்குநருக்கு அதிகாரம் உள்ளது. ஒருவரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்தால், 3 மாதத்துக்கு முன்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால், மனுதாரருக்கு 3 மாதத்துக்குரிய ஊதியத்தைக் கொடுத்து உடனடியாக வெளியேற்றி உள்ளனர். இது தவறு. ஒப்பந்தப்படி மனுதாரருக்கு 3 மாதத்துக்கு முன் நோட்டீஸ் வழங்கி சட்டப்படி பணி நீக்கம் செய்யலாம். நோட்டீஸ் வழங்காமல், உடனடியாக பணிநீக்கம் செய்வதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர் 3 மாதம் வரை அதாவது 11.9.2015 வரை பணிபுரிய அனுமதிக்கவும், குடியிருப்பில் தங்கவும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

Kerala HC declines to stay emigration clearance for nurses


KOCHI: The high court on Tuesday declined to stay central government's decision to make emigration clearance mandatory for overseas employment of nursing graduates.

Justice K Vinod Chandran declined to grant a stay on the orders issued by ministry of overseas Indian affairs (MOIA) on March 12 this year after the government contended that clearance was introduced for the welfare of the nurses themselves and to prevent their exploitation.

The petition filed by Jeeson P Antony of Kodenchery in Kozhikode and four others, had alleged that the government's orders were discriminatory as only nurses were being singled out while the clearance was not required for less-qualified persons. All of them had obtained jobs abroad and their visas were stamped but they had been asked to undergo emigration clearance now, the petitioners complained. It was also alleged that the government's orders wee only administrative in nature.

During the hearing on Tuesday, central government informed the court that MOIA had been receiving complaints regarding malpractices by recruitment agencies and harassment by foreign employers. The decision to enforce emigration clearance as per provisions of Emigration Act of 1983 was taken after examining the matter in detail and with a view to prevent the exploitation and harassment of nurses, the court was told.
Following this submission, the court issued an interim order stating that the petitioners could approach NORKA or ODEPC for their recruitment.

How can you deny job to a diabetic when India is world diabetes capital, Madras HC asks railways

CHENNAI: How can the railways deny job to a woman on the ground that she is a diabetic, asked the Madras high court, pointing out that with 40.9 million diabetics, India is world diabetes capital.

The diabetes position might be "probably due to the concerted efforts taken in the past five decades by food, fertilizer, pharmaceutical and beverage industries," remarked a division bench of Justice V Ramasubramanian and Justice Mathivanan in its order a few days ago.

The bench thereby came to the rescue of P Pushpam whose appointment in a group D post in the railways was stalled as medical examination revealed she was a chronic diabetic.

The judges said: "Diabetes is more of a disorder than a disease... In the absence of any scientific evidence to show that a diabetic will not be able to discharge the duties of his office, it is not possible to accept the stand taken by the authorities. This is especially in view of the fact that today, India has become the diabetic capital of the world, probably due to the concerted efforts taken in the past five decades by the food, fertilizer, pharmaceutical and beverage industries. According to a global report submitted by the Indian Diabetes Research Foundation, 40.9 million Indians are diabetic. Therefore, it is not possible to accept that they are unemployable or that if employed, they would become a liability on the employer."

In 2007, Pushpam participated in selection for 3,698 group D posts in the railways. Though she was selected, medical examination went against her, as she was ruled unfit for the job in view of her diabetes condition.

After her appeals also failed, she moved the Central Administrative Tribunal for relief. The present appeal was filed by the railways, after the tribal ruled in her favour.

Citing the lack of proof of Pushpam's poor health, the judges said: "It has nowhere been contended by railway administration that complications have arisen as a result of the patient's diabetes. It is only contended that her condition is likely to give rise to certain complications. However, in the present case, none of the complications, as averred by her (end-stage renal disease, non-traumatic lower amputations, adult blindness etc.), have manifested in the patient which would render Pushpam unfit for service."

Ruling that a mere speculation of complications cannot be made a reasonable ground to deny Pushpam employment, the judges said the disease was, at this stage, "manageable with regular treatment such that the status quo is maintained."

It then directed the railway administration to issue appointment order to Pushpam within eight weeks.

உம் இசை என்றும் எம்மோடு இருக்கும்!



தமிழில் திரை இசை தொடக்கத்தில் மிகுதியும் செவ்வியல் இசையாகவே இருந்துவந்தது. பிறகு, அதன் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாக மாறியது. எனினும் அது முழுமையாக மக்கள் இசையாக மாறி விடவில்லை. பள்ளிக் கல்வியைத் தொடர முடியாத, திரைத் துறையில் எடுபிடி வேலைகளைச் செய்துவந்த விசு என்கிற எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்கத் தொடங்கிய பிறகே அது சாத்தியமாயிற்று. மெல்லிசை மன்னர் என்று பொருத்தமாகவே பெயர்பெற்ற, எம்.எஸ்.வி. என அன்போடு அழைக்கப்பட்ட இந்தச் சாதனையாளர், தமிழில் மெல்லிசை என்பதற்கான இலக்கணத்தை வகுத்து, அதைத் தவிர்க்க முடியாத இசை வகையாக மாற்றிக்காட்டினார்.

தமிழ் வணிகத் திரையுலகம்குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், தமிழ்த் திரையில் எந்தக் காலத்திலும் அதன் பெருமைக்குரிய மிகச் சில அம்சங்களில் ஒன்றாக இருந்துவருவது அதன் இசை. இந்த வளமான மரபின் மிக முக்கியமான கண்ணி எம்.எஸ்.வி. இந்திய மரபிசையையும் மேற்கத்திய இசையையும் வசீகரமாகக் கலந்து தந்த இவரது மெட்டுக்கள் மிக எளிமையானவை. கேட்பவர்களைச் சட்டென்று கவரக் கூடியவை. கேட்கக் கேட்க மன அரங்கின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவி அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடக்கூடியவை.

அன்றைய பாடலுக்கான காட்சிகளில் இயக்குநர்களும் நட்சத்திர நடிகர்களும் எப்போதும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அறுபதுகள், எழுபதுகளில் உச்சத்தில் இருந்த இந்தப் போக்கினை முழுமையாகப் பயன் படுத்திக்கொண்டவர் எம்.எஸ்.வி. இன்னொரு மகத்தான சாதனையா ளரான கண்ணதாசனுடன் இணைந்து, அவர் பாடல் காட்சிகளைச் சாகாவரம் கொண்ட தருணங்களாக மாற்றினார். மனித உணர்ச்சிகளின் அத்தனை சாயைகளையும் பிரதிபலிக்கும் மெட்டுக்களைச் சரளமாக உருவாக்கித் தந்தார். வாழ்வின் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் பொருத்தமான, அற்புதமான மெட்டுக்களை உருவாக்கித்தந்த எம்.எஸ்.வி., தமிழர்களின் உளவியலில் ஆழ்ந்த இசைச் சலனங்களை ஏற்படுத்தி யவர்களில் முதன்மையானவர்.

பல்லவி என்பது ஒரு பாடலுக்கு முக்கியமானது. மறதி என்னும் இயற்கை நியதியை மறுக்கும் பல பல்லவிகளைத் தந்த எம்.எஸ்.வி-யின் மெட்டுக் களில் இடையில் வரும் வரிகளின் அசைவுகூட ரம்யமாக இருக்கும். ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்னும் பல்லவிக்கு இணையாக, ‘வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்’ என்னும் வரியின் இசையும் மனதில் தங்கியிருக்கும். அந்த மெட்டில் ‘நீரில்’ என்னும் சொல்லுக்குக் கிடைக்கும் கவுரவம் மெல்லிசை மன்னரின் சிறப்பு முத்திரை. ஆயிரக் கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த ஒரு மாபெரும் கலைஞனின் ஓரிரு பாடல்களை நினைவுகூர்வதன் மூலம் அவரது மேதைமையையும் பங்களிப்பையும் உணர்ந்துவிட முடியாது. பல விதமான உணர்ச்சிகளுக்கான இலக்கணம்போல அமைந்த எம்.எஸ்.வி-யின் மெட்டுக்கள் தலைமுறைகள் தாண்டித் தன் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு இசைப் போட்டிகளில் அவரது பாடல்கள் இளையவர்களால் பாடப்படும்போது பெரியவர்கள் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். காலமும் அவர்களுடன் உறைந்து நிற்கிறது.

அற்புதமான தன் மெல்லிசையால் மனங்களைப் பண்படுத்திய அந்த மன்னர் மறைந்துவிட்டார். பெரிய அங்கீகாரமோ விருதுகளோ பெறாமல் மறைந்த அந்த மேதை மக்களின் ஆராதனையே தனக்குப் பெரிய விருது எனத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார். யாருடைய தயவும் இன்றிக் கிடைத்த அந்த மகத்தான விருதுடனும் இசையில் ஊறிய இவ்வுலக வாழ்வை வாழ்ந்து முடித்துவிட்டார் எம்.எஸ்.வி!

விஸ்வ* நாதம்!



தலைமுறைகளைத் தாண்டி நினைவில் நிற்கும் பாடல்களைத் தந்த மாபெரும் இசைக்கலைஞர் எம்.எஸ்.வி.

தமிழ்த் திரையிசையின் பொற்காலத்தைக் கண்ணதா சனுடன் இணைந்து ஆட்சிசெய்த மாமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் காலமானார் என்ற தகவல் வந்தததும், சமூக வலைதளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவியத் தொடங்கின. தங்களுக்குப் பிடித்தமான எம்.எஸ்.வி-யின் பாடல்களைப் பலரும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். தலைமுறைகளையும் காலத்தின் வீச்சையும் கடந்து அவரது படைப்புகள் நிலைபெற்றிருப்பதை உணர முடிந்தது. 1950-களின் தொடக்கத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்தியத் திரையிசையில் கோலோச்சியவர் எம்.எஸ்.வி. உண்மையில், பழைய பாடல்கள் என்ற பொதுப் பெயரில் அடங்கியிருப்பவற்றில் பெரும்பாலானவை அவரது ஆயிரக் கணக்கான பாடல்கள்தானே!

தொடக்கத்தில் நாடகங்களின் திரைவடிவமாக இருந்த தமிழ்த் திரைப்படங்களில் நிரம்பித் ததும்பிய பாடல்கள், சாஸ்திரிய இசையின் அடிப்படையில் அமைந்தவையாகவே இருந்தன. 1950-களில்தான் ஜனரஞ்சகமான இசையில் அமைந்த பாடல்களுக்கு தமிழ்த் திரையிசையில் இடம் கிடைக்கத் தொடங்கியது. காலம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள புதுப்புது திறமைசாலிகளைத் தன் பிரதிநிதிகளாக அறிமுகப்படுத்துவது உண்டு. அப்படி, 1950-களில் தமிழ்த் திரையிசையின் போக்கை மாற்றியமைத்த இசைக் கலைஞராகக் காலத்தால் முன்னிறுத்தப்பட்டவர் எம்.எஸ்.வி. 1950-ல் வெளியான ‘மந்திரிகுமாரி’ படத்தின் மூலம் திருப்புமுனையைக் கண்ட எம்.ஜி.ஆர்., 1952-ல் வெளியான பராசக்தி படத்தில் அறிமுகமான சிவாஜி கணேசன் ஆகியோர் தமிழ்த் திரையின் வணிக வளர்ச்சிக்கும் தரத்துக்கும் தந்த பங்களிப்பைப் போல், தமிழ்த் திரையிசையின் வளர்ச்சியில் எம்.எஸ்.வி-யின் பங்கு அளவீடுகளுக்கு அப்பாற்பட்டது. அதே காலகட்டத்தில்தான், அவரது ஆஸ்தான பாடகர்களான டி.எம். சவுந்தரராஜன், பி.சுசீலாவின் சகாப்தமும் தொடங்குகிறது.

அறுபதுகளின் அரசன்!

சக இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் வழங்கத் தொடங்கிய பாடல்கள் பல தலைமுறைகளின் வாழ்வுடன் கலந்துவிட்டவை. 1950-களில் ‘பணம்’, ‘ஜெனோவா’, ‘குலேபகாவலி’, ‘மாலையிட்ட மங்கை’ போன்ற படங்களின் மூலம் சாம்ராஜ்ஜியத்தை விரிக்கத் தொடங்கிய ‘விஸ்வநாதன் - ராமமூர்த்தி’ ஜோடியின் இசை, 1960-களில் தனது படைப்பாற்றலின் உச்சத்தை அடைந்தது. பின்னாட்களில் டி.கே. ராமமூர்த்தியைப் பிரியும் சூழல் ஏற்பட்டாலும் அவரது பாடல்களின் வெற்றி பாதிக்கப்படவில்லை. டி.எம்.எஸ். பாடிய ‘யார் அந்த நிலவு’ (சாந்தி-1965), பி. சுசீலா பாடிய ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’(புதிய பறவை) என்று மேற்கத்திய இசையின் அடிப்படையிலான பாடல்கள், ‘ஆறோடும் மண்ணில் எங்கும்’(பழனி-1965) என்று கிராமியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல்கள், ‘கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே’ (கர்ணன்), ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ (தவப்புதல்வன்) போன்ற சாஸ்திரிய இசை அடிப்படையிலான பாடல்கள் என்று அத்தனை வகைப் பாடல்களையும் தந்தவர் எம்.எஸ்.வி. காதல், சோகம், நகைச்சுவை, கிண்டல், சவால் என்று எத்தனையோ வகையான சூழல்களுக்கும் இசையமைக்கும் அளவுக்கு இசை வளமும், படைப்பாற்றலும், வேகமும் அவருக்குள் சுரந்துகொண்டே இருந்தன.

அவரது சமகாலத்தில் ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், வி. குமார் என்று புகழ்பெற்ற இசையமைப் பாளர்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் பெருவாரியான படங்கள் எம்.எஸ்.வி-யிடமே குவிந்தன. ‘மன்னாதி மன்னன்’, ‘பாசமலர்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ராமு’, ‘தெய்வ மகன்’ என்று அந்தக் காலகட்டத்தில் அவர் இசையமைத்த வெற்றிப்படங் களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. தனது வாழ்நாளில் 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் அவர். சிவாஜி படங்களுக்கு உணர்ச்சிகரமான இசை, எம்.ஜி.ஆர். படங்களுக்கு உற்சாகமான சவால் இசை, பீம்சிங், தர், பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் படங்களுக்குப் பரீட்சார்த்த மான இசை என்று அவர் தொடாத இசை வகைமையே இல்லை. பாலியல் பலாத்காரக் காட்சிக்குக் கூடத் தன்னிடம் பாடல் கேட்ட கே. பாலசந்தரின் சவாலையும் ஏற்றுப் பாடல் தந்தவர் அவர்.

தாக்கம் தந்த இசை

எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடக்கும் இடங்கள், திருவிழாக்கள் முதல் துக்க வீடுகள் வரை என்று பல்வேறு இடங்களிலும் ஒலிக்கும் பாடல்கள் எம்.எஸ்.வி-யினுடையவைதான். அந்த அளவுக்கு அவரது பாடல்களின் தாக்கம், தலைமுறைகளையும் தாண்டி இன்றும் வியாபித்திருக்கிறது. அதேபோல், இசையமைப்பின்போது தனக்கு யோசனை சொல்பவர் யாராக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அபூர்வ குணம் அவரிடம் இருந்தது. திரையிசையில் ஜனரஞ்சக ரசனையைப் புரிந்துகொள்ளவும் அதை வளர்த்தெடுக்கவும் அது அவருக்கு உதவியது. அவரது இசையால் தாக்கம் பெற்ற கலைஞர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவரது ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடல் தனக்குள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இளையராஜா பல முறை குறிப்பிட்டிருக்கிறார். ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ என்ற பாடலின் தாக்கத்திலேயே ‘புது மாப்பிள்ளைக்கு’ பாடலை உருவாக்கியதாகவும் இளையராஜா குறிப்பிட்டிருக்கிறார். பாடகர் வாய்ப்புக்கான குரல் தேர்வின்போது எஸ்.பி.பி. பாடிக்காட்டியது எம்.எஸ்.வி-யின் ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடலைத்தான். எம்.எஸ்.வி-யின் ‘யார் அந்த நிலவு’ பாடல், இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் ‘யாத் ஆ ரஹி ஹை’ பாடலின் மூலம். இன்றும் பாடகர் களுக்கான போட்டிகளில் அதிகம் பாடப் படுபவை அவருடைய பாடல்கள்தான்.

1970-களின் மத்தியில் காலமாற்றத்தின் தாக்கத்தில் அவரது இசையும் வேறு பரிமாணம் எடுத்தது. 1960-களில் டி.எம்.எஸ்., பி. சுசீலா போன்ற கலைஞர் களின் கூட்டணியுடன் பாடல்களைத் தந்துவந்த எம்.எஸ்.வி., 70-களில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து அளித்த பாடல்கள் தனிரகம். ‘அவர்கள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பட்டினப் பிரவேசம்’ போன்ற படங்களில் இந்த ஜோடியின் பாடல்கள் ரசிகர்களின் சேமிப்புகளில் உயர்ந்த இடத்தை வகிப்பவை. ‘முத்தான முத்தல்லவோ’(1976) படத்தில் எஸ்.பி.பி-யுடன் இணைந்து எம்.எஸ்.வி. பாடும் ‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ பாடல் இசை மீதான அவரது காதலைச் சொல்லிவிடும். ‘தேன் சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள்’ எனும் வரியில் எம்.எஸ்.வி. குறிப்பிடும் ‘அவள்’ யாருமல்ல, இசை தேவதை தான்!

தனது ஆன்மாவை இசையின் மூலமாகக் காற்றில் கலக்கவிட்டிருக்கும் எம்.எஸ்.வி-க்கு மரணம் என்பது உடல்ரீதியான ஒன்றுதான். அவரது இசைக்கு வயதும் இல்லை, மரணமும் இல்லை!

வெ.சந்திரமோகன்

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

சொன்னது நீதானா.. என் விசுவே’


மகாபாரத கர்ணன் தொடங்கி, நட்புக்கு பலரை உதாரணம் சொல்வார்கள். தமிழ்த் திரையுலகில் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், கவிஞர் கண்ணதாசனும்.

இவர்களது கூட்டணியில் உரு வான பல பாடல்களின் பின்னணியில் சுவாரஸ்யங்கள் உண்டு. பாடல் கம்போஸிங் செய்யும்போது, யார் முதலில் வருகிறாரோ, அவர் லேட்டாக வருபவர் மீது செல்லமாக கோபப்படுவார். அந்தக் கோபத்தின் விளைவு, அருமையான பாடல் பிறக்கும்.

இப்படித்தான், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கான பாடல் கம்போஸிங் நடந்தபோது, எம்எஸ்வி, இயக்குநர் ஸ்ரீதர், பாடகி சுசீலா எல்லோரும் ஆஜராகி இருக்க, கண்ணதாசன் வரவில்லை. நேரம் ஆக ஆக எம்எஸ்வி-க்கு கோபம். கவிஞரைப் பற்றி கடிந்துகொண்டார். லேட்டாக வந்த கவிஞரிடம் பாடலுக்கான சூழலை ஸ்ரீதர் சொல்ல, நான்கைந்து பல்லவிகளை எழுதிக் கொடுத்தார். இயக்குநருக்கு திருப்தி இல்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர், கவிஞரை எம்எஸ்வி கடிந்துகொண் டது பற்றி அவரது காதில் போட்டு விட்டார். அதைக் கேட்டு கவிஞர் கோபப்படவில்லை. ‘விசு, நீயா அப்படி பேசினாய்’ என்று சிரித்த படியே கேட்டுவிட்டு, தனக்கே உரிய பாணியில் ‘சொன்னது நீதானா சொல்.. சொல். என் விசுவே..’ என்று ராகமாக பாட, டக்கென்று பிடித் துக் கொண்டார் ஸ்ரீதர். ‘இதுதான் நான் எதிர்பார்த்தது’ என ஸ்ரீதர் சொல்ல, அந்த வரிகளையே பல்லவியாக்கி பாட்டை எழுதினார் கண்ணதாசன்.

‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. என் உயிரே.’

என்ற அந்தப் பாடல் பெண்களின் கண்களில் நீரை வரவழைத்தது.

அதேபோல, ‘பெரிய இடத்துப் பெண்’ படத்துக்கான பாடல் கம் போஸிங்.. இந்த முறை கண்ண தாசன் முன்னதாக வந்துவிட, எம்எஸ்வி வீட்டில் அயர்ந்து தூங்கிவிட்டார். லேட்டாக எழுந்த எம்எஸ்வி, அவசரம் அவசரமாக கிளம்பி செட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அங்கே கவிஞர் இல்லை. ஒரு பேப்பரில் 2 வரிகளை மட்டும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார்.

‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டவன் நானல்லவா’

தன்னை குறித்துதான் கவிஞர் இவ்வாறு எழுதி வைத்துவிட் டுப் போயிருக்கிறார் என்பது எம்எஸ்வி-க்கு புரிந்தது. ஆனாலும், அந்த வரிகளை கொஞ்சமும் மாற்றாமல் அதையே பல்லவியாக போட்டு பாட்டெழுதித் தருமாறு கேட்க, கவிஞரும் கோபத்தை மறந்து பாட்டை எழுதித் தந்தார்.

இப்படி, கண்ணதாசனுக்கும் தனக்குமான நட்பைப் பற்றியும் தங்களது கூட்டணியில் உருவான பாடல்களின் பின்னணி குறித்தும் பல மேடைகளில் எம்எஸ்வி-யே சொல்லி கண்கலங்கியுள்ளார்.

காமராஜர் காலம் ஏன் பொற்காலம்?

காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் வரலாறு தெரிந்தவர்கள் இன்றைக்கும் அதைப் பொற்கால ஆட்சி என்று கூறுகின்றனர்? முக்கியமான சில பதிவுகளை மட்டும் தருகிறேன்.

இன்றைக்கு தமிழக அரசின் 2014-15-ம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை ரூ. 1.27 லட்சம் கோடி. ஆனால், காமராஜர் முதல்வராகப் பொறுப்பேற்ற 1954-55-ல் மொத்த பட்ஜெட் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.47.18 கோடி. அவர் பதவி விலகியபோது 1962-63-ல் ரூ.121.81 கோடி. அன்றைக்கெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவுமே ஏழை தேசம்தான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் மகத்தான காரியங்களை காமராஜர் தன் ஆட்சியில் மேற்கொண்டார். அவருடைய சாதனைகளைப் படிக்கும் முன், அன்றைய தமிழகத்தின் இந்த மொத்த நிதியாதாரப் பின்னணியை நாம் கருத்தில் கொள்வது முக்கியம்.

முதல் திருத்தத்தின் மூலவர்
தமிழகத்தில் நீண்டகாலமாக அமலில் இருந்த, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் ‘கம்யூனல் ஜி.ஓ.’ செல்லாது என சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பு கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலைமையை நன்கு உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர வித்திட்டார். அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே 1951-ல் அதில் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்து, பின்தங்கிய சமுதாய மாணவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெற்றுவந்த இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் காமராஜர். இதனால் அவரை ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்று தமிழகம் போற்றிப் பாராட்டி அழைத்துப் பெருமிதம் கொண்டது.

சமூக நீதிக்கான ஆட்சி
தமிழகத்தின் முதலமைச்சராக ஏப்ரல் 13, 1954-ல் பொறுப்பேற்ற காமராஜர், அக்டோபர் 2, 1963 வரை ஒன்பதரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார். முதலில் எட்டு, பிறகு ஒன்பது அமைச்சர்களோடும் எளிமையான, நேர்மை யான ஆட்சி நடத்தினார். தமது முதல் அமைச்சரவையை உருவாக்கும்போது, ஹரிஜனத் தலைவரான பி.பரமேசு வரனுக்கு இந்து அறநிலையத் துறையை அளித்தார். உழைப்பாளர் கட்சித் தலைவரான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியைக் காங்கிரஸில் இணைத்து, அமைச்சர் பொறுப்பு வழங்கி, பின்தங்கிய மக்களை முன்னேற்றப் பாதையில் பயணம் செய்ய வழிவகுத்தார்.

கல்விப் புரட்சி
காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையே குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம்.
காட்பாடி பள்ளிக்கூட ஏழைக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறுகிறார் காமராஜர்.
அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று நறுக்குத் தெறித்தார்போல் கூறினார்.

எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது.

தொழில் வளர்ச்சி
ஜவாஹர்லால் நேரு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் முழுப் பலனையும் தமிழகம் பெற்று முன்னேறும் வகையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக தமிழகத்தில் தொழில் புரட்சி நடந்தது. சென்னை - பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL) அமைய 750 ஏக்கர் பட்டா நிலமும், 2,400 ஏக்கர் புறம்போக்கு நிலமும் வழங்கப்பட்டன.

1958-ல் கிண்டி தொழிற்பேட்டையைப் பார்வையிட வந்த பிரதமர் நேருவுடன்...
இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்று, பொதுத் துறை நிறுவனங்களிலேயே அதிக லாபத்தைத் தருகிற ‘மகாநவரத்தினா’என்ற தகுதியை பெற்றுள்ளது பெல் நிறுவனம். பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆவடி டாங்க் ஃபேக்டரி தொழில் வளர்ச்சியில் அரசுத் துறையோடு, தனியார் துறையும் இணைந்து பல தொழில்கள் தொடங்கப்பட்டன. ‘மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, டி.ஐ. சைக்கிள் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம் அந்தக் காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான். 1951-ல் தமிழகத்தில் 71-ஆக இருந்த நெசவாலைகளின் எண்ணிக்கை, 1962 முடிவில் 134-ஆகப் பெருகியது. அதேபோன்று கூட்டுறவுத் துறையில் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டன. சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து எட்டாக உயர்ந்தது. இவற்றின் உற்பத்தி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 டன்.
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, கூடுதலாகப் பல சர்க்கரை ஆலைகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப் பட்டது. ஆண்டொன்றுக்கு 20 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை ஈரோடு அருகே பள்ளிபாளையத்தில் சேஷசாயி காகிதம் மற்றும் போர்டுகள் லிமிடெட் நிறுவனம் தொடங்கியது. அதே போன்று, மாநிலத்தில் கூடுதலாக காகிதக்கூழ் மற்றும் வைக்கோல் அட்டைகள் தயாரிக்க எட்டு ஆலைகள் தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மதுக்கரை, திருச்சி மாவட்டம் டால்மியாபுரம், ராமநாதபுர மாவட்டம் துலுக்கப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து என நான்கு சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகள் தொடங்கப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது. 1962-ல் சேலம், சங்கரிதுர்க்கம் என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டது. கரூரில் மற்றொரு ஆலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொழிற்பேட்டைகள்
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வழங்கவும் தொழிற்பேட்டைகள் சென்னை, கிண்டி, விருதுநகரில் தொடங்கப்பட்டன. இவற்றின் பயன்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கும்பகோணம், விருத்தாசலம், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், கோவில்பட்டி, ராஜ பாளையம், நாகார்கோவில், சென்னையை அடுத்த அம்பத்தூர் போன்ற இடங்களில் இத்தகைய தொழிற் பேட்டைகளை உருவாக்குதவற்காக ரூ.4.08 கோடி ஒதுக்கப் பட்டது. இவற்றைத் தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் மார்த்தாண்டம் (கன்னியா குமரி) ஆகிய இடங்களில் தொழிற்பேட்டைகள் தொடங்கப் பட்டன. சென்னை அம்பத்தூரில் தொழிற்பேட்டை தொடங்கி 1,200 ஏக்கர் நிலம் வழங்கி இடஒதுக்கீட்டுடன் 400 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன.

பாசனத் திட்டங்கள்
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் தனது நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றின் பயனாக கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் ஆகியவை உருவாகின.

கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறையில் இறவைப் பாசனத் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
இவை தவிர, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய திட்டம். இது கிட்டத்தட்ட ரூ. 30 கோடி செலவில் நீர்ப்பாசனத்தோடு மின்சாரம் வழங்கும் பல்நோக்குத் திட்டமாகும். கோவை மாவட்டத்தில் 2.4 லட்சம் ஏக்கர் நில பரப்புக்கும் நீர்ப்பாசன வசதி வழங்குவதோடு, 1.80 லட்சம் கிலோவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம். அம்மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டம் நீர்ப்பாசன வசதி செய்கிறது. அண்டை மாநிலங்களோடு நல்லுறவு இருந்தால் இத்தகைய நதிநீர்ப் பகிர்வுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பதற்கு இத்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு.
மின்உற்பத்தி
காமராஜர் ஆட்சிக்காலத்தில் மின்உற்பத்தியில் வியக்கத் தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது. காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்ந்தன. இன்று ரூ.1,500 கோடிக்கும்மேல் லாபம் ஈட்டித்தரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்துள்ளது.

மின் உற்பத்திக் கருவியைப் பார்வையிடும் காமராஜர்…
சென்னை மாகாணத்தின் மின்பற்றாக்குறையைச் சமாளிப் பதற்காக 5 லட்சம் கிலோவாட் மின்உற்பத்தித் திறன்கொண்ட அணுமின் நிலையத்தைக் கல்பாக்கத்தில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட காமராஜர், இந்திய அரசின் அணுமின் உற்பத்தித் துறையை அணுகி, இத்திட்டத்தைப் பெறுவதில் வெற்றிகண்டார். அதன் பயன்களைத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இன்று அனுபவித்துவருகின்றன.

நிலச் சீர்திருத்தம்
காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குத்தகைதாரர்களின் பாதுகாப்புக்காக, ‘குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் - 1955’ காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நிலச் சீர்திருத்தத்தை மேன்மைப்படுத்தும் நடவடிக்கையாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும்மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்கும் நில உச்சவரம்புச் சட்டம் 1962-ல் கொண்டுவரப்பட்டது.

பஞ்சாயத்து ராஜ்
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாயத்து ஆட்சி செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் காமராஜர் ஆட்சியில் 373 பஞ்சாயத்து யூனியன்களும், 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களும் தொடங்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின.

தமிழ் வளர்ச்சி
சென்னை மாகாணத்தின் பட்ஜெட்டை 1957-58-ல் தமிழிலேயே சமர்ப்பித்தார் காமராஜர். 1956-ல் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் கொண்டுவந்ததும் காமராஜர் ஆட்சியே. 1959 ஜனவரியில், தமிழ் அறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராகக் கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டார். கல்லூரிப் பாடங்களைக் கற்பிக்கும் மொழியாக தமிழைக் கொண்டுவரவும் மலிவான விலையில் உயர் கல்விக்கான பாடநூல்களைத் தமிழில் வெளியிடவும் இந்த அமைப்பு செயல்பட்டது. இத்துடன் ‘தமிழ்ப்பாடநூல் வெளியீட்டுக் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத்தொகையும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்பட்டன. பாடங்கள் தொடர்பான ஆங்கில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன.

காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி 1960-ல் வெளியிடப்பட்டது. 1956-ல் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டவுடன் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் 24.2.1961-ல் நடந்த விவாதத்தில் உரையாற்றிய சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று குறிப்பிடப்படும் இடத்தில் சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதில் தமிழ்நாடு என்று எழுதலாம் என பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’என்று தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

எளிமை நேர்மை - தூய்மை
எல்லாவற்றையும்விட முக்கியமானது இது. காமராஜரின் பொதுவாழ்க்கை எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல்வராக இருந்த காலத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தனது தாயைக்கூட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேலாகத் தங்க காமராஜர் அனுமதித்ததில்லை. தனது சம்பளத்திலிருந்து மாதம் ரூ.120 கொடுத்து விருதுநகரில்தான் தனது தாயைத் தங்கவைத்திருந்தார். தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.

பெரியாரின் வார்த்தைகள்
காமராஜர் ஆட்சியைப் பிரதமர் நேரு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் அனைவருமே மனதாரப் பாராட்டியுள்ளனர். முக்கியமான பாராட்டு, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியாருடையது. சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியைத் தம் தோள்மீது சுமந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்செய்து பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டினார் பெரியார்.
1961-ல் தேவகோட்டையில் பேசும்போது, மரண வாக்குமூலம்போலத் தமது உள்ளக்கிடக்கையை தந்தை பெரியார் வெளியிட்டார். அதில், ‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது முவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும், எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.

தோழர்களே நீங்கள் என் சொல்லை நம்புங்கள். இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”
காமராஜரின் ஆட்சிக் காலம் ஏன் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ?
- ஆ.கோபண்ணா, பத்திரிகையாளர், தலைவர், காங்கிரஸ் ஊடகத்துறை.

Can't Intervene in Tasmac Liquor Sale : Madras HC

CHENNAI: The Madras High Court on Tuesday refused to prohibit TASMAC from selling liquor, holding that it cannot intervene in policy matters.

“Unfortunately this is a decision on which court’s opinion cannot be called for,” said the first bench comprising Chief Justice SK Kaul and Justice TS Sivagnanam while closing the public interest litigation moved by a journalist. “It is a policy decision taken by the State government and the State legislature,” the bench pointed out.

Citing Article 47 of the Constitution which speaks about the duty of the State to raise the level of nutrition and the standard of living and to improve public health, the petitioner argued that under the article, “it is the duty of the State to bring about prohibition.” But contravening the constitutional mandate, the Tamil Nadu government came up with TN Liquor Retail Vending (in shops and bars) Rules, 2003, enabling TASMAC to sell liquor through its retail outlets, the petitioner said, seeking the court to strike down the rule as against the Constitution of India, particularly against Article 47.

Responding to the petition, government pleader submitted that the State is continuously discouraging consumption of alcohol. “The tax on liquor in TN is highest in the country. The number of retail outlets which were 7,800 in 2003 has been reduced to 6,800 in 2015. That apart, working hours of the shops which was earlier from 8 am to 12 pm has been reduced to 10 am to 10 pm,” he added.

Recording the submissions, the bench said, “We are of the view that the court cannot really issue any direction in the matter,” and closed the writ petition.

Medical Students to Lose A Year

BHAWANIPATNA:The Sardar Rajas Medical College at Jaring in Kalahandi district has run into fresh trouble. This time, first year students of second batch of the medical college, who took admission in 2014-15 academic year on Supreme Court order, cannot appear at the first medical professional examination scheduled to be held in August. Because, the college has failed to get provisional affiliation of Sambalpur University for the session.

Speaking to media persons, the 24 affected students and their guardians alleged that the college could not get the provisional affiliation because of negligence on part of Department of Health and Family Welfare. The department has issued the recognition letter for the college for 2015-16 instead of 2014-15.

About the problems faced by them, the students said while part-time faculty has been conducting classes, the arrangement is inadequate to ensure quality education. The college also lacks infrastructure facilities, sufficient number of doctors and administrative staff.

The students and parents sought immediate intervention of the Government in the matter. They demanded that the Department should rectify its mistake at the earliest and Sambalpur University should allow students to appear at the ensuing examination so that they would not lose one year.

An administrative official of the medical college Saif Saiffuddin said, “We are pursuing the matter with the Department and after getting recognition year corrected, we will approach Sambalpur University and make all efforts to ensure that students write their examination in August.”

It may be mentioned that the Medical Council of India (MCI) had allowed admission to 100 seats in the medical college in 2013-14. But the Medical Council cancelled admission for 2014-15 session citing lack of adequate infrastructure. Challenging the MCI order, the college authorities had filed a writ petition in the Supreme Court.

In 2014, the apex court allowed admission in the medical college with immediate effect. While directing the MCI to visit the medical college within three months, the court told the college authorities to fulfil necessary infrastructure requirements as per the suggestions of the MCI.

Accordingly, MCI’s fact-finding team visited the college in February this year for verification of facts and document submitted earlier. The team submitted its report to the MCI but did not reveal anything about their findings. Meanwhile, CBI took over the investigation on February 23.

Expenses at president Pranab Mukherjee's secretariat up: RTI

A Right to Information (RTI) query to president's office by applicant Mansoor Umer Darvesh revealed that in 2012-13 the expenditure on president's secretariat under Major Head, Appropriation-Staff, Household and Allowances of the president was Rs30.96 crore. The following year, it increased to Rs38.70 crore. During the last fiscal — 2014-15 — it shot up to Rs41.96 crore.

President Mukherjee had taken charge in July 2012 as the 13th President of India. There are a total of 754 people working in the president's secretariat, of which 9 are private secretaries, and 27 are drivers.

The salaries of the staff at the secretariat come to a sum of over Rs1.5 crore. "Total salary of all employees of the president's secretariat for the month of May 2015 is Rs1,51,48,958," read the RTI reply.

Whereas monthly telephone bills are over five lakhs rupees. In May 2015 the telephone bill was Rs5,06,531.

"I had even sought details about the total number of security staff deployed as well as expenditures incurred on electricity. But details on the same has not been provided with by Central Public Information Officer Shakil Alam at the secretariat," said Darvesh.

Staff, students hold sign campaign against institution

COIMBATORE: Teaching, non-teaching staff and students of Avinashilingam deemed university for women intensified their protest against the institution, conducting a signature campaign at Gandhipuram, asking the Ministry of Human Resource Development (MHRD) to take over the university under the control of University Grants Commission (UGC).

B Nalini, general secretary, Avinashilingam deemed university unit of Association of University Teachers said that the Avinashilingam Educational Trust is not willing to leave the administrative power to the UGC and is attempting to suppress the facts and mislead the general public. The university management has failed to submit the memorandum of agreement to the UGC for the last five years. So, UGC may stop funding to the university.

"UGC is not giving any assurance that funds would be released if the university does not comply with the UGC regulations. On one hand, the university claims that they do not have any proposal to convert the university into a self-financing institution. But on other hand they are reluctant to comply with UGC regulations regarding the governance structure," said Nalini.

The teaching and non-teaching staff has decided to conduct a general body meeting on Friday and would take a decision on further course of action against the management.

Meanwhile, a group of students of the university, conducted a signature campaign at Gandhipuram on Thursday. Thanthai Periyar Dravidar Kazhagam general secretary K Ramakrishnan inaugurated the signature campaign.

The chancellor of the university, T S K Meenakshisundaram, had issued a public notice in the media stating that the Memorandum of Agreement has been submitted, and is awaiting MHRD's concurrence. But, the university has only submitted the governing structure of the university, and only after the MHRD concurs the governing structure, will the university have to submit the MoA complying with the UGC Code of Regulations, 2010 for deemed universities.

Staff of the university began the protest two weeks ago, demanding the institution submit the Memorandum of Agreement (MOA) to the Ministry of Human Resources Development immediately to facilitate its smooth functioning. They also requested the university administration to follow University Grants Commission (UGC) norms which mandate that a member of the trust, involved in the institution's management, could not be the chancellor.

MUHS invites applications for exchange program with University of Sydney

NASHIK: The Maharashtra University of Health Science (MUHS) has invited applications for PhD-level studies scholarships under a bilateral collaboration with the University of Sydney for the student clinical placement exchange programme.

Arun Jamkar, vice-chancellor of MUHS, said: "Candidates from the state having a minimum qualification of MBBS may apply for the programme. Two candidates will be selected through an examination and they will get a scholarship of $8,000. They will be sent to the University of Sydney for a period of four months."

The university had entered into an agreement with Sydney Medical School, Australia last year to boost education, training and research collaboratively. The agreement encourages exchange of faculties and students from both the universities. It will also conduct joint research on HIV, head and spondylitis cancer, carcinoma cervix and other subjects.

Jamkar said, "Chances like these help students develop new perspectives in the field of research and explore new avenues in medicine. The qualification earned will also open new prospects in countries like US, where the demand is huge."

The vice chancellor added that the students will attempt to understand global health issues, conduct research and find solutions for them. The scholarship is entirely sponsored by the University of Sydney and all the academic expenses of the students will be borne by it.

Detailed information about the process has been displayed on the MUHS website and students may apply through the website.

2-year bond for MBBS students in govt hospitals

JAIPUR: Students passing out after completing MBBS from government medical colleges will have to work for at least two years in government hospitals.

The medical education department issued letter to all the medical colleges of the state, undergraduate (UG) counselling board of directorate of medical education, Central Board of Secondary Education and Rajasthan University of Health Sciences (RUHS) college informing about the decision.

The letter issued has apprised the medical colleges that state government has made a bond for UG courses compulsory in government state medical colleges for all India and state quota students.

"It has been decided by the state government that the students selected for the UG course in MBBS will have to fill a bond for commitment to service the state government for 2 years. If they break the bond, they will have to pay Rs 5 lakh as penalty," wrote S P Singh, joint director medical education department, in the letter.

As per the directions, the new decision would be effective from the session 2015 and onwards.

According to health department sources, the government-run hospitals are facing shortage of doctors. Now, the government has decided to make it mandatory for doctors to work for at least a stipulated time for joining government services and for studying in medical colleges. Similar bond of Rs 25 lakh is mandatory for in-service doctors taking admission in one-year certificate course.

Through bonds, the health department is making efforts to retain doctors for longer period in government services so that the patients coming to government hospitals will be benefitted.

இனியும் தாமதம் தகாது!

மாணவர்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்பது அண்மைக் காலமாகப் பல்வேறு நகரங்களிலும் நாம் கண்ணெதிரே காணுகின்ற பிரச்னை. இதற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்பதும், மதுவின் தீமை குறித்து இளையோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதும்தான் எல்லாருடைய விருப்பமும்.
மாணவர்கள், சிறார்கள், பெண்கள் மது அருந்துவதை முகநூல், கட்செவி அஞ்சலில் பதிவேற்றம் செய்வதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கருதிக் கொண்டு, அவர்களைப் படம் பிடித்து பகிர்வது இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாகத் தீர்வு ஆகாது.
கோவை மாநகரில் ஒரு பள்ளி மாணவி மது மயக்கத்தில் பொது இடத்தில் கடந்த வாரம் தகராறு செய்த விடியோ காட்சி, கட்செவி அஞ்சல், முகநூலில் பகிரப்பட்டன. அச்சு, ஒளி ஊடகங்கள் இந்த மாணவியின் முகத்தை தெளிவற்றதாக்கி வெளியிட்டன. ஆனால், அந்த மாணவியின் சீருடையை வைத்து அவரது பள்ளியையும், பிறகு அந்த மாணவியையும் கண்டுபிடித்தல் மிக எளிது.
இதே முகநூலில் ஒருவர் இந்த மாணவிக்காக வேதனைப்படவும், இந்த மாணவியை இவ்வாறு பொதுவெளிக்கு கொண்டுவந்த மக்களின் பொறுப்பின்மை, அடுத்தவரின் அந்தரங்கத்துள் ஊடுருவும் அநாகரிகத்தையும் (பீப்பிங் டாம் சின்ட்ரோம்) சாடியிருந்தார். உங்களது சகோதரி அல்லது மகள் என்றால் முகநூலில், கட்செவி அஞ்சலில் இந்த அலங்கோலத்தைப் பதிவேற்றம் செய்வீர்களா என்ற கேள்வியும் எழுப்பியிருந்தார்.
சென்னையில் 2 மாணவர்கள் வகுப்பறைக்குள் மதுபோதையுடன் வந்து ஆசிரியையிடம் தகராறு செய்ததாகவும் மற்ற ஆசிரியர்கள் வந்து அவர்களைப் பள்ளியிலிருந்து வெளியேற்றியதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியானது. பதினெட்டு வயது நிரம்பாதவர்கள் சிறார்கள் என்பதால் இத்தகைய சம்பவங்களை ஊடகங்கள், அவர்களது பெயர் அடையாளம் தெரியாதபடி செய்தி வெளியிட வேண்டிய கடப்பாடு உள்ளது. முகநூல், கட்செவி அஞ்சலுக்கு அந்தக் கட்டாயம் இல்லை.
இதே காலகட்டத்தில் மூன்று வயதுச் சிறுவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துக் குடிக்கச் செய்ததற்காக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்தச் சிறுவன் மது அருந்துவது போன்ற படம் பதிவேற்றம் செய்தவர்களைக் காவல் துறை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அதேபோன்று, 18 வயது நிரம்பாத ஒரு பள்ளி மாணவியின் மது மயக்க அடாவடியை கட்செவி அஞ்சல், முகநூல் மூலம் பதிவேற்றம் செய்து அசிங்கப்படுத்தியதற்காகவும் யாரும் கைது செய்யப்படவில்லை.
அண்மைக்காலமாக இளையோர் மது அருந்தும் காட்சிகள் முகநூல், கட்செவி அஞ்சலில் பரிமாறப்படுவது அதிகமாக உள்ளது. குறிப்பாக, இளம் பெண்கள் மது அருந்தும் அல்லது மதுக் கடையில் மது வாங்கும் காட்சிகளையே மேலதிகமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். திரைப்படங்களிலும்கூட, நட்சத்திர மதுக் கூடங்களில் (பப்) இளம் பெண்கள் குடிப்பதாகவும், வீட்டில் அப்பாவிப் பெண்ணாக அசத்துவதாகவும் (ராஜா ராணி) காட்சி அமைக்கிறார்கள். மது எப்படி இருக்கும் என்று அனுபவ அறிவு பெற, சகோதரிகள் இருவர் வீட்டுக்குள்ளேயே குடிக்கிற காட்சி (ஜீவா) இடம்பெறச் செய்கிறார்கள். திரைப்படத்தில் நாயகர்கள் குடித்துவிட்டு ஆடிப் பாடுவது அன்றைய "தேவதாஸ்' முதல் இன்றைய "வேலையில்லா பட்டதாரி' வரை நிற்கவே இல்லை.
18 வயது நிரம்பாதவர்களுக்கு மது விற்பனையைத் தடுப்பதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை என்பதைத்தான் நடைமுறையில் காண்கிறோம். நண்பர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்கும்போது மதுபானம் கிடைப்பதில் எந்தத் தடையும் இருப்பதில்லை.
18 வயது நிரம்பாமல் மது அருந்தியவர்களை பொது இட ஒழுங்குக்கு ஊறு செய்ததாகக் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப முடியும். அப்படிச் செய்தால், அல்லது அவர்களைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்தால் என்ன ஆகும்? அது அவர்களது படிப்புக்கும், எதிர்கால வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடக் கூடும்.
முழுமையான மது விலக்கு அமலுக்கு வராதவரை இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது கடினம். அது உடனடி சாத்தியமாவதாகத் தெரியவில்லை.
இந்தப் பிரச்னையில் அரசைவிடப் பள்ளிகளுக்கும், பெற்றோருக்குமே மிக அதிகமான பொறுப்பு இருக்கிறது. இவர்கள் இணைந்து செயல்பட்டால் 90 விழுக்காடு மாணவர்களை மதுவிலிருந்து காப்பாற்றிவிட முடியும். ஏனெனில், இந்த 90 விழுக்காடு மாணவர்களும் பள்ளி நேரத்தில் வெளியே சென்று மதுவை சுவை பார்க்கிறார்கள். வகுப்பில் மாணவர் இல்லை என்று தெரிந்தவுடன் அவரது பெற்றோருக்கு செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பும் வழக்கத்தை அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவர்கள், மாணவிகளுக்கு மது, போதை மாத்திரைகள் கிடைக்கக் காரணம் அரசும், சமூக விரோதிகளும் மட்டுமே அல்ல. கணக்கு கேட்காமலேயே கைச் செலவுக்குப் பணத்தை வாரி வழங்கும் பெற்றோரும் காரணம். கணக்கில் தேவைக்கு அதிகமாகப் பணம் போட்டு, ஏடிஎம் அட்டையையும் கொடுக்கும் பெற்றோர் தங்கள் குழந்தை எவ்வளவு பணத்தை எதற்காக செலவழிக்கிறார் என்பதைக் கண்காணிப்பதும் கேள்வி கேட்பதும் பிரச்னையைப் பெருமளவு குறைக்கும்.
சந்தைப் பொருளாதாரத்தின் நிலையை சந்தை நிர்ணயித்துக் கொள்வது போல, ஜனநாயகத்தில் அவரவர் செய்கையை எந்தவித அரசு அல்லது சமூகக் கட்டுப்பாடும் இல்லாமல் அவரவரே தீர்மானித்துக் கொள்வது என்கிற போக்கு சரிதானா? நாம் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

எம்.எஸ். விஸ்வநாதன் (1928– 2015) - மரணமில்லா மகா கலைஞன் By சாரு நிவேதிதா


தமிழர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள். அதிலும் கலைத் துறைகளில் அவர்களுடைய ரசனை கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு வெறித்தனமானது. உயிரையும் துச்சமாக மதித்து அறுபது அடி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களை இந்தப் பூமிப் பந்தில் வேறு எங்கே காண முடியும்?




எம்.கே.தியாகராஜ பாகவதர் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதுவதற்காக அந்நாளைய பத்திரிகைகளை ஆய்வு செய்யும்போது படித்திருக்கிறேன். பாகவதரைப் பார்க்க மரங்களில் இலைகளே தெரியாத அளவுக்குத் தொற்றிக் கொண்டிருப்பார்களாம் மக்கள். மொட்டை மாடிகளிலும் மக்கள் கூட்டம் பிதுங்கித் தள்ளும். அப்படி ஒரு கூட்டத்தில் மின்கம்பம் ஒன்றில் நின்று அவர் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் மின் அதிர்ச்சியால் தாக்குண்டு இறந்துபோன செய்தியைப் படித்தேன். இசையை வெறித்தனமாக இப்படி ரசிப்பது உலகம் முழுக்கவும் காணக்கூடியதே எனினும், தமிழனின் விசேஷ குணம் என்னவெனில் வரலாற்றை மறப்பது.

மனிதனை முழுமையாகத் தன் வசப்படுத்தக்கூடிய திறன் கொண்ட ஒரே கலை என்று இசையைப் பற்றிச் சொல்லலாம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்ஸனை பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நான் கண்ணீர் விட்டுக் கதறிவிட்டேன். சில நெருக்கமான உறவுகளின் மரணத்தின்போதுகூட கலங்காத சித்தம் கொண்ட நான், மற்ற மனிதர்களின் முன்னால் கண்ணீர்விட்டது அதுவே முதலும் கடைசியும். காரணம், இசை. மனிதன் கருவறையில் உருவாகும் தருணத்திலிருந்து கல்லறைக்குள் சென்ற பின்னரும்கூட அவனுடன் பயணிக்கும் ஒரே துணை இசையாகத்தான் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இசைக்கு மனிதன் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தவனாக இருக்கிறான்.

பாப் மார்லி பற்றி இசைகேடாக ஒரு இசையமைப்பாளர் பேட்டி அளித்தபோது அந்த இசையமைப்பாளரை நான் விமர்சித்து எழுதினேன். அதன் விளைவு படுபயங்கரமாக இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், தேன்கூட்டில் கல் எறிந்தவனின் நிலைக்கு ஆளானேன். அந்த அளவுக்கு நான் செல்லும் இடங்களிலெல்லாம் அது ஒன்றையே கேட்டுக் கேட்டு என்னைத் துளைத்து எடுத்துவிட்டார்கள். வாசகர் சந்திப்புகளில் பல மணி நேரங்களை அந்த ஒரு விஷயமே எடுத்துக்கொண்டதுண்டு. அந்த அளவுக்கு இசை ஒரு மனிதனை, ஒரு சமூகத்தை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதிலும் தமிழ்ச் சமூகம் வாசிக்கும் பழக்கத்துக்கு இன்னும் வந்தடையாமல் இருப்பதால், தமிழர்களின் ஒரே பொழுதுபோக்கு சினிமாவாக இருக்கிறது. சினிமாவிலும் இசைக்குத்தான் பிரதான இடம்.

தொலைக்காட்சி வருவதற்கு முன்பு ஒட்டுமொத்தத் தமிழ் இனமே, ரேடியோ சிலோனில் கே.வி.மகாதேவனையும் அவரைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதனையும்தான் கேட்டுக்கொண்டிருந்தது. இரவு நேரத்தில் பத்து மணிக்கு மேல் வீட்டுத் திண்ணையில் பாயைப் போட்டு “அமைதியான நதியினிலே ஓடம்” (ஆண்டவன் கட்டளை) என்ற பாடலைக் கேட்காத ஒரு தமிழன் அந்நாளில் இருந்திருக்க முடியுமா? சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன், வாழ்க்கைப் படகு, பஞ்சவர்ணக் கிளி (தமிழுக்கும் அமுதென்று பேர்), எங்க வீட்டுப் பிள்ளை, பணத்தோட்டம், பாகப்பிரிவினை, கை கொடுத்த தெய்வம், பணம் படைத்தவன், பார்த்தால் பசி தீரும், பாவ மன்னிப்பு, பாலும் பழமும், புதிய பறவை என்று இப்படி நூற்றுக்கணக்கான படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்தால் அழியாத காவியப் பாடல்களை உருவாக்கினார். (வண்ணதாசன் “சில பழைய பாடல்கள்” என்று ஒரு சிறுகதையே எழுதியிருக்கிறார்).

எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி ஏற்கெனவே ஏராளமாக எழுதியிருக்கிறேன். முக்கியமாக, தமிழர்கள் வரலாற்று உணர்வு இல்லாமல் எப்போதும் தற்காலத்திலேயே வாழ்ந்து தற்காலமே முக்காலமும் என்று நிரூபிக்க முயலும்போதெல்லாம் எம்.எஸ்.வி. பற்றி எழுதியிருக்கிறேன். கிட்டப்பா, பாபநாசம் சிவன், எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா தொடங்கி தமிழ் வெகுஜன இசையில் பெரும் மேதைகளும் கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் ஜி.ராமநாதனுக்குப் பிறகு வந்த இரண்டு மேதைகள் கே.வி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஆவர். மற்ற இசை அமைப்பாளர்களிடம் இருந்து எம்.எஸ்.வி. வேறுபடும் இடம் எதுவென்றால், தொடர்ச்சி அறுபடாமலே பல ஆண்டுகள் மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்தபடியே இருந்தார். ஆண்டுக்குப் பதினைந்திலிருந்து இருபது படங்கள் வீதம் (சில ஆண்டுகளில் இருபதுக்கும் மேல்) சுமார் இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவின் சிகரத்தில் இருந்தவர் எம்.எஸ்.வி.

ஒரு படத்துக்காக இசை அமைப்பதற்கு இப்போதெல்லாம் எத்தனை எத்தனையோ வசதிகள் இருக்கின்றன. பாங்காக், லண்டன் என்றெல்லாம் போய் மாதக்கணக்கில் தங்கி இசை அமைக்கிறார்கள். ஆனாலும் ஒரு படத்தில் ஒரு பாடல் ஹிட் ஆவதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் ஒரே படத்தில் ஐந்தாறு பாடல்கள் சூப்பர் ஹிட் ஆவதெல்லாம் அந்நாளில் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டிருந்தது. ஆனந்த ஜோதி, கர்ணன் என்ற இரண்டு படங்களை மட்டும் இங்கே உதாரணமாகச் சொல்லலாம். அவற்றில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் காலத்தால் அழியாதவை.

ஒருமுறை என்னிடம் ஒரு இயக்குனர் சொன்னார், நினைக்கத் தெரிந்த மனமே (ஆனந்த ஜோதி) என்ற ஒரே ஒரு பாடலுக்குத் தமிழ் சினிமாவில் வந்த அத்தனை பாடல்களையும் ஒன்று சேர்த்தாலும் ஈடாகாது என்று. உண்மைதான் என்றே எனக்கும் தோன்றுகிறது.

தமிழர்களின் காதலை, பாசத்தை, துக்கத்தை, துயரத்தை, கொண்டாட்டத்தை, வீரத்தை, வேதனையை, மகிழ்ச்சியை, தனிமையை, பக்தியை, கேலியை, கிண்டலை இசையாக மாற்றிக்கொடுத்த மேதையான எம்.எஸ்.வி.யின் பூத உடல் இன்று மறைந்துபோனாலும் அவரது இசை, தமிழ் உள்ளளவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வகையில். எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற மகா கலைஞனுக்கு மரணமே இல்லை.

Tuesday, July 14, 2015

Make public RTI replies to stop repeated queries: Centre

New Delhi, Jul 12 (PTI) To check wasteful duplication of effort while responding to RTI queries, the Centre has asked all departments to do an analysis of information sought often by applicants and suo-motu make such details public.

The move comes following a recommendation by a Parliamentary Standing Committee in this regard.

"The Committee feels that all ministries, departments or organisations themselves must encourage suo-motu disclosure of relevant information. The Committee suggests the publishing of RTI requests and their replies on the websites of the departments so that duplicity of requests is avoided.

"All departments must make an analysis of information which is sought most often from applicants and provide it on their website as suo-motu disclosure," Parliamentary Standing Committee on Personnel, Public Grievances, Law and Justice had said in its report.

The Department of Personnel and Training (DoPT) on Thursday wrote to all ministries seeking "strict compliance" of the Committee's recommendations.

The DoPT has been asking all central government departments to suo-motu make public governance-related information being held by them.

"Despite directions, not all ministries have followed it.

Some ministries have started putting RTI queries and their response on their websites. Action will be taken if they do not start doing it," a senior DoPT official said.

The DoPT had earlier this month asked all departments to put information related to employees' transfer and posting in public domain promptly to reduce the number of RTI applications.

"Access to information should be made user-friendly for which appropriate information technology infrastructure should be suitably designed, developed and operationalised," it had said.

The Right to Information (RTI) Act guarantees time-bound response to citizens' queries on matters of governance

UGC notification on retired profs may prove a problem for Barkatullah University research guides

Superannuated professors at universities cannot act as guides or supervisors in awarding M Phil or PhD degrees, according to a University Grants Commission (UGC) circular.

The circular says that "Universities shall allocate supervisors from amongst the regular faculty members in a department or its affiliated PG colleges/institutions depending on the number of students per faculty member." Any degree awarded otherwise would be in violation of the UGC Regulations, 2009.

This UGC notification can prove to be a problem for the Barkatullah University as about 500 out of 1800 registered guides are retired professors.

Retired English professor, Zamiruddin said, “I have already resigned due to the non-academic environment in the university. It looks like that they are living in a fool's paradise. Retired professors don't ask for students. It's the university that asks us to guide the students because of experience and knowledge. They are mistaken. There is a shortage of guides and retired professors for a few subjects and this decision will affect the students adversely.”

Urdu poet and retired professor Anees Sultana said, “This is not a good decision keeping in mind research. The decision makers are ignoring the talent and competence of retired professors. It will definitely affect the working of the university.”

Barkatullah University vice chancellor MD Tiwari didn't find the decision very thoughtful. He said, “In research work, experience plays a very important role. A young guide also needs the guidance of an experienced guide for research. After retirement, the competency of professors can't be questioned because they will always be well aware of topics, books and research work.”

Meanwhile, some retired professors have welcomed the decision.

Retired professor HS Yadav said, “In the central universities, retired professors can't supervise in awarding MPhil and PhD degrees. This is a good decision.”

Animals in Labs: UGC Asks Colleges to go Online

BENGALURU: The University Grants Commission (UGC) has asked all universities across the nation to register themselves on a website developed by the Union Ministry of Environment, Forests and Climate Change to monitor the usage of animals in science laboratories.

In an official circular, the UGC said, “The universities are requested to register with the CPCSEA (Committee for the purpose of control and supervision of experiments on animals) http://cpcsea.nic.in/ website. Necessary instructions may also be issued to all the colleges/institutions affiliated to your university in this regard.”

And UGC has asked the universities to treat this circular as most urgent. The action taken report should be sent to UGC by July 30.

This is a follow-up to the communication issued by UGC in August 2014. The UGC had issued a notification banning animal dissection at under-graduate and post- graduate levels at all universities and higher education institutions in science labs.

UGC had directed the universities, “There has been enormous degradation of bio- diversity resulting in massive ecological imbalance as also natural calamities, though there are a number of factors. One of the most significant reasons is the brutal use of animal species for dissection purposes at post-secondary levels of education and that too at a time when there are alternative mechanisms available for providing hands-on experience to students.”

The procedure to apply online for registration with CPCSEA has been explained along with the circular issued recently.

BDS students told to get patients for final year practical exam

AURANGABAD: Already under fire for not fulfilling certain norms, the Saraswati-Dhanwantari Dental College and Hospital in Parbhani has landed in yet another controversy by asking its final year students to bring their own patients for the practical examinations.

Barely a week back, the college was in the news for not fulfilling norms of the Dental Council of India, New Delhi, Maharashtra University of Health Science and University Grants Commission.

Some of the students who could not find patients for their practicals said they stand to lose a year. And those who did manage to find people with dental problems said they had to spend at least Rs 300-500 on each patient.

The first batch of 15 final-year BDS students of the college appeared for the practical exams on Monday. "The college told us to get our own patients. Those who could not find patients were turned away by the examiner," a student said on condition of anonymity.

"Earlier, the college had said that the students would require patients suffering from caries in the initial stage for the practical exams in the Community Dentistry subject. But it changed the topic on exam day and said students needed to get patients with multiple teeth affected. It is very difficult to find patients with a particular disease at the last minute," said another student.

For the practicals, the final year students need to do a tooth extraction, which carries 50 out of the total 100 marks. For the process, colleges are supposed to get patients from hospitals attached.

"However, even after paying our fees, we were asked to arrange for patients for the extraction. It has put us in a tight spot," said a student, adding that the college never stressed on hands-on experience.

Another student said, "We have to check patients free of charge and even pay them for coming to us. We often have to negotiate with them. Realising that we need them, these patients even bill us the travel cost of coming to the college."

College dean Sanjay Nilawar said the students may not have got patients from the hospital's OPD. "Sometimes, patients relating to some specific topics are not available in the OPD. Otherwise, it is regular practice that students take patients from the hospital's OPD for their practicals," he said.

According to the DCI norms for the BDS final year practical exams, it is mandatory for colleges to provide patients for each student (3rd and 4th year). "The college needs to have 350-400 patients every day in its OPD to cater to the 100-seat BDS and MDS courses," an executive member of the DCI said.

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் - எம்.எஸ்.வி. பதில் - பொக்கிஷ பகிர்வு

விகடன் மேடையில் மறைந்த எம்.எஸ்.வி. அவர்கள் பதில் அளித்து இருந்தார். இதோ பொக்கிஷ பகிர்வாக இங்கே..
வாசகர் கேள்விகள்...
 
கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.
 ''இந்தக் காலத்தில் சில திரைப்படப் பாடல் களில் 'காப்பி’ நெடி தூக்கலாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆர். உங்களிடம் சில ரெக்கார்டுகளைக் கொடுத்து, 'இது மாதிரி இசையமைத்துக் கொடுங்க’னு சொன்னாராமே... உண்மையா?''
'' 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக லொகேஷன் பார்க்க வெளிநாடுகளுக்குப் போன எம்.ஜி.ஆர்., ஒரு மூட்டை நிறைய ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் கொண்டுவந்து கொடுத்து, 'விசு... இதை எல்லாம் கேட்டுப்பார். ஒரு ஐடியா கிடைக்கும்’னார். நான் அதை எல்லாம் ஒரு ஓரத்தில் ஒதுக்கிவெச்சுட்டு, 'அண்ணே... நான் மெட்டுப் போட்டுத் தர்றேன். அதைக் கேட்டுட்டு அப்புறம் சொல்லுங்க’னு சொல்லி, கடகடனு நிறைய மெட்டு போட்டுக் கொடுத்தேன். அதையெல்லாம் கேட்டதுமே எம்.ஜி.ஆர். என்னைக் கட்டிப்புடிச்சுக்கிட்டார். அது எல்லாமே சூப்பர் ஹிட் மெட்டு ஆனதுதான் உங்களுக்கே தெரியுமே!''
பா.கீர்த்தனா, சென்னை-63.
''ஜெயலலிதா உங்களுக்கு ஜனாதிபதி விருதுக்கு சிபாரிசு செய்ய முன்வந்தும் நீங்கள் மறுத்தது ஏன்?''
''முதல்வர் அம்மா என்கிட்டேயே, 'உங்களுக்கு ஜனாதிபதி விருது கொடுக்க சிபாரிசு செய்யப்போறேன்’னு சொன்னாங்க. என் இசை மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பின் காரணமா அப்படிச் சொன்னாங்க. 'இல்லம்மா... உங்களுக்கு வேற நிறைய வேலை இருக்கும். என்னால எதுக்கு உங்களுக்குச் சங்கடம்? வேண்டாம்மா. ஒவ்வொரு ரசிகரும் தன் மனசுல எனக்குக் கொடுத்துருக்கிற இடத்தைவிடவா விருதுகளும் பட்டங்களும் எனக்குச் சந்தோஷம் கொடுத்துடப் போகுது... நீங்க சொன்னதே போதும்மா’னு சொல்லிட் டேன். அது உண்மைதானே!''
க.சந்திரன், திருவண்ணாமலை.  
'' 'அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள் வெளிவந்தப்ப, அதைக் கேட்டதும் உங்க மனசுல என்ன நினைப்பு ஓடுச்சு?''
'' சிவகுமார் நடிச்ச பல படங்களுக்கு நான் மியூஸிக் போட்டிருக்கேன். 'அன்னக்கிளி’ பட வேலைகள் ஆரம்பிச்சப்பவே புது மியூஸிக் டைரக்டரை அறிமுகப்படுத்துறாங்கனு பேசிக்கிட்டாங்க. படத்தின் பாடல்களைக் கேட்டுட்டு, 'ரொம்பப் பிரமாதமா... இருக்கே’னு நினைச்சேன். அப்போ எங்கே போனாலும் இதே பேச்சாதான் இருந்துச்சு. தம்பி இளையராஜாவைப் பாராட்டினேன். 'அன்னக்கிளி’ வர்றதுக்கு முன்னயே அவரை எனக்குத் தெரியும். என் ட்ரூப்புல கீபோர்டு வாசிச்சிருக்கார். அற்புதமான மேதை. இன்னொரு விஷயம், யாரையும் நான் பொறாமை யோட பார்த்தது இல்லை. ஆனா, போட்டி இருக்கும்.''
தீன் முகம்மது, பூதமங்கலம்.
''நீங்கள் வாய்விட்டு அழுத சம்பவம் என்ன?''
''நான் கோல்டன் ஸ்டுடியோவுல ஒரு படத்துக்கு பாட்டு கம்போஸிங்ல இருந்தேன். அப்போ மெஜஸ்டிக் ஸ்டுடியோ ரெங்கசாமி கார்ல இருந்து இறங்கி வேக வேகமா வந்து, 'கண்ணதாசன் காலமாயிட்டார்’னு சொன்னார். அதைக் கேட்டதுமே எனக்கு ஈரக்குலையே நடுங்கிப்போச்சு. கண்ணீர் முட்டிக்கிட்டு வந்திருச்சு. என்ன செய்யிறதுன்னே தெரியலை. அழுது அழுது கண்ணு சிவந்துபோயிருச்சு. நெஞ்சு படபடப்பை அடக்கிட்டு கவிஞர் வீட்டுக்கு ஓடினேன். அங்கே போனா கண்ண தாசன் சோபாவுல ஜம்முனு உட்கார்ந்திருக் கார். 'டேய் விசு, நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேனு பார்க்க ஆசையா இருந்தது. அதான் அப்படி சொல்லச் சொன்னேன்’ னார். அதுதாங்க நான் என்னை மறந்து விம்மி வெடிச்சு அழுத தருணம்!''
அனுசுயா கோவிந்தராஜன், தஞ்சாவூர்.
''நீங்க புகழின் உச்சத்தில் இருந்த நேரத்தில் உங்களுக்கு நிகராக பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனைப் பற்றி உங்கள் நினைவுகள் என்ன?''
''ரொம்பப் பெரிய மேதைங்க அவர். நான் பெரிசா மதிக்கிற மியூஸிக் டைரக்டர்ல அவரும் ஒருத்தர். அப்போ நான் மியூஸிக் போட்ட ஒரு படத்தோட பாட்டெல்லாம் ஹிட் ஆச்சுன்னா... அடுத்ததா அவர் மியூஸிக் போட்ட பாடல்களும் ஹிட் ஆகும். ரெண்டு பேருமே பீக்ல இருந்தோம். முதன்முதலா கோரஸ் பாடுறதுக்கு நான் சான்ஸ் கேட்டுப் போனது கே.வி.மகாதேவன்கிட்டதான். என்னை அவர் சேர்த்துக்கலை. ஆனா, 'ஜூபிடர் பிக்சர்ஸுக்கே மறுபடியும் போய்ச் சேரு’ன்னு சொல்லி... எனக்கு வேட்டி, சட்டைலாம் எடுத்துக் கொடுத்து, கையில் ரெண்டு ரூபாயும் தந்து என்னை அனுப்பிவெச்சது அவர்தான். நான் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர் ஸுக்குப் போய், எஸ்.எம்.சுப்பையா நாயுடுகிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். பல பேர் என்னை வழிப்படுத்தி இருக்காங்க. அதில் கே.வி.மகா தேவன் அவர்களுக்கு முக்கியமான இடம் இருக்கு!''
ஆ.பிரணவ், முக்கூடல்.
''இப்போதும் நீங்கள் அடிக்கடி முணுமுணுக் கும் பாடல் எது... ஏன்?''
''ஏன்னு சொல்லத் தெரியலை. ஆனா, 'தேவனே என்னைப் பாருங்கள்...’ பாட்டைத்தான் இப்பெல்லாம் அடிக்கடி முணுமுணுத்துட்டு இருக்கேன்.''
கே.ஆர்.முத்தையா, திருச்சி-4.
''கமல், ரஜினி இருவரும் உங்களிடம் எப்படிப் பழகுவார்கள்?''
''எனக்கு எல்லா வயசுலயும் நண்பர்கள் இருக்காங்க. கமல் என் குட்டி நண்பன். என் குடும்பத்தில் பிறக்காத பிள்ளை. முன்னாடி அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். அப்பல்லாம், 'எனக்கு நல்லா பாட வரும். எனக்கு உங்க மியூஸிக்ல பாடுறதுக்கு சான்ஸ் கொடுங்களேன்’னு கேட்டுட்டே இருப்பார். என்னமோ தெரியலை என் மியூஸிக்ல அவரைப் பாட வைக்கணும்னு எனக்குத் தோணவே இல்லை.
ரஜினி என்னை எங்கே பார்த்தாலும், அவர் வீட்டுல உள்ள ஒரு பெரிய மனிதரை வணங்குற மாதிரி பணிவா வணங்குவார். 'நினைத்தாலே இனிக்கும்’, 'தில்லுமுல்லு’ படங்கள்ல அவருக்காக நான் போட்ட பாட்டைக் கேட்டுட்டு, ஓடி வந்து என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டாரு. இப்பவும் எங்கேயாச்சும் பார்த்தா, 'ராகங்கள் பதினாறு உருவான வரலாறு... நான் பாடும்போது அறிவாயம்மா...’ பாட்டை வாய்விட்டு முணுமுணுப்பார். அன்பான மனுஷன்!''
ப.ராணி, நாகர்கோவில்.
''திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தியில. நீங்க எப்படி 'அல்லா... அல்லா’னு பாட்டுப் பாடினீங்க?''
''அல்லா,  இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங்களுக்குப் பக்கத்துலேயே இருப்பாங்க. 'முகமது பின் துக்ளக்’ படத்துல 'அல்லா... அல்லா...’ பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன். ஆனா, சோ அந்தப் பாட்டை நான்தான் பாடணும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். 'சரி... யாரையெல்லாம் நீ பாட வைக்கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப்போம்’னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. 'சரி... ஆண்டவன் சித்தம் அதுதான்போல’னு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டி லாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண்மையைச் சொன்னார். அது... சீட்டு எழுதுனப்ப எல்லா சீட்டுலயுமே என் பேரைத்தான் எழுதிவெச்சிருக்கார் அந்த மனுஷன்!''
டி.ராகுல், தோப்பூர்.
''கவியரசு கண்ணதாசன் பயங்கர பிடிவாதக்காரராமே... அப்படியா?''
''பிடிவாதம்கிறது பெரிய வார்த்தை... கொண்ட கொள்கைல உறுதியா இருப்பார். அந்தக் கொள்கைக்குச் சரியான நியாயமும் வெச்சிருப்பார். 'யாரை நம்பி நான் பொறந்தேன்... போங்கடா போங்க; என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க...’ பாடல் பதிவு. பாடல் வரிகளைப் படிச்சுட்டு கவியரசுகிட்ட நான் சொன்னேன், 'என்ன கவிஞரே... வாடா போடானு மரியாதை இல்லாம எழுதியிருக்கீங்க. இதே மாதிரிதான், 'போனால் போகட்டும் போடா’ன்னும் எழுதிஇருந்தீங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு?’ உடனே கண்ணதாசன் பளிச்னு சொன்னாரு, 'டேய்... நீ விஜயவாடாங்கிற ஊரைக்கூட 'விஜயவாங்க’னு சொல்றவன். நான் எழுதறதுக்கு மெட்டு போடுறதுதான் உன் வேலை. அதை மட்டும் ஒழுங்கா பார்த்துக்க.. போதும்’னு பட்டுனு சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் நான் எதுவும் பேச முடியுமா என்ன? அவரோட பிடிவாதம்லாம் இப்படித்தான் இருக்கும்.''

லதா ராமகிருஷ்ணன், திருச்சி-9.
''சமீபத்தில் வெளியானதில் நீங்கள் மிகவும் ரசிச்ச தமிழ்ப் பாட்டு எது?''
''ஒரு பாட்டு இல்ல... சில பாடல்களைச் சொல்லலாம். தம்பி இளையராஜா இசையமைச்ச 'நீதானே பொன் வசந்தம்’, ஏ.ஆர்.ரஹ்மான் இசைஅமைச்ச 'விண்ணைத் தாண்டி வருவாயா’... படப் பாடல்கள் எல்லாம் கேட்குறதுக்கு ரொம்ப இனிமையா இருந்துச்சு. புதுசாவும் இருந்துச்சு!''
- ஆனந்த விகடன்

HC: no pick and choose of jobs on compassionate grounds

Those who seek public employment on compassionate grounds, following the death of government servants in harness, cannot pick and choose the post in which they want to be accommodated just because they consider it below their dignity to accept menial posts offered to them by the government, the Madras High Court Bench here has said.

Disposing of a writ petition, Justice S. Vaidyanthan said: “Nowadays, getting employment is very difficult more so in government service… If the petitioner feels that it is below her dignity to join the post of a sweeper, she cannot expect the government to keep one post of her choice reserved to provide employment to her or her children after obtaining necessary qualification.”

He pointed out that the petitioner, a widow, had applied for compassionate employment in 2004 following the death of her husband in 2003, when he was serving the Ottapidaram municipality. The municipality accepted her plea in 2007 and offered her the post of a sweeper. But she did not take up the job and instead made an application in 2011 seeking employment for her son.

“The petitioner has stated that there are vacancies of Junior Assistant in the local body and her son is qualified for the post,” the judge pointed out and held that her present plea could not be accepted since she herself had been offered compassionate employment way back in 2007. He gave the petitioner 30 days’ time to accept the post of sweeper or lose even that opportunity.

Dismissing another writ petition, the judge held that though a minor child can stake claim for compassionate employment after attaining majority, such a plea could not be entertained if the mother of the minor had made a representation for employment and her request had been rejected for not submitting the application within three years from the death of the government servant concerned.

Petitioner given 30 days to accept post of sweeper or lose even that opportunity


NEWS TODAY 20.09.2024