Wednesday, November 11, 2015

மனசு போல வாழ்க்கை 33: உங்களை உண்ணும் உணவு ......................டாக்டர். ஆர். கார்த்திகேயன்

Return to frontpage



நீ எதை உண்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்கிறது கடோபநிஷத்.

மனதைப் பக்குவப்படுத்த உடலைப் பக்குவப்படுத்த வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மதமும் முதலில் உணவுக்கட்டுப்பாட்டை விதிக்கிறது. எல்லா மதங்களும் உண்ணாவிரதத்தைப் பரிந்துரைக்கின்றன. எந்த நாளில், எந்த நேரத்தில் , எப்படிப்பட்ட முறையில் என்பதில்தான் வேறுபாடுகள். பிரார்த்தனை செய்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்பதும் எல்லாச் சமயங்களும் பரிந்துரைப்பதே. பிறரோடு பகிர்ந்து உண்பதும் பொதுவாக மதங்கள் வலியுறுத்தும் கருத்து.

உணவின் தேர்வு

உண்ணுதல் புனிதமான செயல். உடல் வளர்ப்பது உயிர் வளர்ப்பது. அது இறைமையைப் போற்றும் செயல். கடவுள் வாழும் ஆலயமே உடல். உணவு சமைப்பதும், பரிமாறுவதும், உண்பதும், பகிர்வதும் தெய்வீகச் செயல்கள். அதனால்தான் சிந்தையை முழுவதுமாக இந்தச் செயல்களில் செலுத்துவது அவசியம்.

அறம் சார்ந்த வாழ்க்கையை மேம்படுத்துவதே சமய நம்பிக்கை. பிற சமய அன்பர்களின் உணவுப் பழக்கத்தில் அத்து மீறல் செய்வது அராஜகம். யார் உணவையும் பறிப்பதோ தடுப்பதோ மிருகச்செயல். உணவு என்பது தனி நபர் உரிமை. தங்கள் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் வசதிக்கும் ஏற்ப உண்ணுதல் அவரவர் தேர்வு.

இது மட்டும்தான் சிறந்த உணவு என்று எண்ணுதல் பேதமை. காரணம் உணவுகள் தட்ப வெப்ப நிலை, வேலை, உடல் உழைப்பு, கலாச்சாரம் சார்ந்தவை. அதனால்தான் ஒரு உணவைச் சிறந்த உணவு என்று யார் மீதும் திணிப்பது அறியாமை.

ஒரே உணவு சரியா?

எஸ்கிமோக்கள் பூமியின் வடதுருவத்தில் உறைந்த பனி மண்டலத்தில் வாழும் பழங்குடி மக்கள். அங்குள்ள மிருகங்களை அவர்கள் உண்டாலும், அவற்றின் கொழுப்பு மாரடைப்பை வரவழைக்காது. ஆனால் நாம் இங்கு எதைத் தொட்டாலும் கொலஸ்ட்ராலுக்குப் பயப்படுகிறோம். அதற்கான காரணம், நாம் இப்போது உண்ணும் பல உணவுகள் நம் பாரம்பரியத்தில் இல்லாதவை. நம் வாழ்வு முறைக்கு ஒவ்வாதவை. அவற்றை ஜீரணிக்க நாம் சிரமப்படுகிறோம்.

அவரவருக்கான உணவு எது என்பதைத் தீர்மானிப்பது அவரவர் கடமை. ஒரு அலுவலகத்திலோ ஒரு குடும்பத்திலோ அனைவருக்கும் ஒரே உணவு என்பதே அடிப்படையில் ஒரு குறைபாடுதான். எல்லோருக்கும் ஒரே உணவு என்பது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் ஒரு நிர்வாகக் கண்ணோட்டத்தில் எளிதானது. அதனால் நிறைய நேரமும் மனித உழைப்பும் மிச்சமாகிறது. ஆனால், தனி நபர் ஆரோக்கியத்துக்கு இது நன்மை பயக்காது.

உடலின் உணவுமொழி

உணவு விடுதிகளில் புதுப் புது உணவுகள் படையெடுப்பது சந்தையின் அசுர வளர்ச்சியால். மெனு கார்டு முன்பு ஒரு அட்டையாக இருந்தது. இன்று அது டெலிபோன் டைரக்டரி போல வீங்கி வருகிறது. உலக நாடுகளில் உள்ள அனைத்து உணவுகளையும் இங்கேயே உட்கார்ந்துகொண்டு ருசி பார்க்கத் தயாராகிவிட்டோம்.

ஆனால் ஒவ்வொரு உணவின் தன்மை பற்றியும் அது நம் உடலையும் மனதையும் என்ன செய்யும் என்பதைப் பற்றியும் யோசிக்கிறோமா? ஒரு உணவின் தயாரிப்பில் என்னவெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்து கொள்கிறோமா? இதற்குப் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் உடலோடு சற்று உறவாடினால் போதும்.

ஒவ்வொரு உணவுக்கும் பிறகு ஏற்படும் உணர்வு, எண்ணம், உடல் மாறுதல்கள் என்று கூர்ந்து கவனியுங்கள். உடல் உங்களோடு பேசத் தயாராக இருக்கிறது. நீங்கள் தயாரா?

தேவாமிர்த ருசி

நட்சத்திர விடுதியில் தட்டை ஏந்தி ஒரு 50 அயிட்டங்களை அரையும் குறையுமாக அள்ளித் தின்றுவிட்டு வீடு வந்திருப்பீர்கள். சாப்பிடும் போது நன்றாக இருக்கும். வீடு வந்து படுக்கும்போது கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றும். இது உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? அப்படி என்றால் ஏன் என்று யோசியுங்கள்.

வேலை செய்யும்போது அலுவலகத்தின் சமாச்சாரங்களைப் பேசியே என்ன உண்கிறோம் என்று உணராமலே மதிய உணவு எடுத்துக் கொள்வோம். எல்லா உணவுகளும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் பெரிய திருப்தி இருக்காது. ஆனால், ஒரு நாள் சுற்றுலாவின் போது, அருவியில் நீண்ட நேரம் குளித்துவிட்டு உண்ணும் ஒரு சாதாரணக் கடையின் உணவு தேவாமிர்தமாக ருசிக்கும். ருசியைக்கூட விடுங்கள். பசித்துக் காத்திருக்கும்போது வரும் சமையல் நறுமணம் எவ்வளவு தூண்டுதலாக இருக்கும்! இதை எத்தனை நாட்கள் நாம் முகர்ந்திருக்கிறோம்?

நீங்கள் உண்ணும் உணவால் ஏற்படும் உடல் மாற்றங்களையும் மன மாற்றங்களையும் ஒரு வாரத்துக்கு கூர்ந்து நோக்குங்கள். உங்கள் உடல் பற்றிய அறிவும், உணவு பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

உணவே மருந்து

நம் கலாச்சாரம், மரபணுக்கள், கற்றல் மூலமாக நம்மிடம் உள்ள சில ஆதார உணவுகள் உண்டபின் வயிற்றுக்கும் மனதுக்கும் பெரிய திருப்தி தருபவை. அவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்தி உண்பதுதான் புத்திசாலித்தனம். உங்களுக்கான உணவை உங்கள் உடலே தேர்வு செய்யும். அதன் மொழி கேட்டு நடப்பதுதான் உத்தமம்.

நம் பாட்டி, தாத்தாக்களின் தெம்பு நம் பெற்றோர்களுக்கு இல்லை. நம் பெற்றோர்களின் தெம்பு நமக்கு இல்லை. நம் தெம்பாவது நம் பிள்ளைகளுக்கு இருக்குமா? மருத்துவம் வளர்ந்த அளவு ஆரோக்கியம் வளர்ந்துள்ளதா? யோசியுங்கள். நாம் கோட்டை விடும் இடம் உணவு என்று புரியவரும். உணவில் எல்லா அத்துமீறல்களையும் செய்கிறோம். சந்தை, அரசியல், சமூகம் அவற்றை செய்ய வைக்கிறது. ஆனால் நோய்வாய்ப்படுகையில் அவதிப்படுபவர் நீங்கள் மட்டும் தானே!

உலகின் எல்லா மனப்பயிற்சி மையங்களும், சமயங்களும், சோதனைகளும் உணவில்தான் தொடங்குகின்றன. உடல் பயிற்சிகூட அடுத்ததுதான்.

பேசாமல், பிற செயல்களில் ஈடுபடாமல் சாப்பிட்டுப் பாருங்கள். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். டி.வியும் செல்போனும் சாப்பிடும் இடத்திலேயே இருக்க வேண்டாம். கிடைக்கின்ற உணவில் உங்களுக்கு ஏற்றதாய், அளவாய் உண்ணுங்கள். உண்ணும் அளவுக்கு உடல் உழைப்பு உள்ளதா என்று பாருங்கள். பாரம்பரிய உணவுகள், வீட்டில் சமைத்த உணவுகளுக்கு முன்னுரிமை தாருங்கள். வெளி உணவு என்றால் லேபிள் பாருங்கள். டப்பாவில் அடைத்த உணவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் எந்த உணவின் மீதும் வெறுப்பும் விரோதமும் வேண்டாம்.

இந்த உணவை உண்ணும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் உணவு உடல் திடமும் மன நிறைவும் அளிக்கும் மாமருந்து என்பதை மறந்துவிட வேண்டாம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Monday, November 9, 2015

பள்ளி மாணவர்களுக்கு புதிய மொபைல் அப்ளிகேஷன்: ஸ்மிருதி இரானி அறிமுகம்.....பிடிஐ

Return to frontpage

பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில், ஆன்- லைன் மூலம் மாணவ-மாணவியர் கள் கல்வி சார்ந்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கும், புதிதாக கற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக நேற்று மத்திய அரசு மொபைல் அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய தள வசதிகளை அறிமுகம் செய்து வைத்தது.

டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதனை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஆன்-லைன் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி சார்ந்த விஷயங்களை தேடி எடுத்துக் கொள்ளும் வகையில், ‘இ-பாடசாலா’ என்ற இணையதளமும், மொபைல் அப்ளிகேஷனயும் அறிமுகம் செய்து வைத்துள்ளோம். பள்ளி கல்வி திட்டத்தில் வெளிப்படைதன்மையை கொண்டு வருவதற்காக மட்டுமின்றி, குழந்தைகள் புதிதாக கற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்கவுமே, இத்தகைய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முயற்சித்து வருகிறோம். மேலும், மாணவர்கள் மீதான தேர்வு சுமையை குறைப்பது குறித்து சில மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தவிர பள்ளிகளில் மதிய உணவு மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து அளிப்பது தொடர்பான திட்டத்தை வகுக்க கமிட்டி அமைத்துள்ளோம். அந்த கமிட்டி வகுத்து கொடுக்கும் ஊட்டச்சத்து திட்டத்தின்படி, அந்தந்த மாநில அரசுகள் சொந்தமாக மதிய உணவுகளை தயாரிக்கும்படியும் வலியுறுத்தப் போகிறோம்’’ என்றார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான ‘சரண்ஷ்’ என்ற மற்றொரு அப்ளி கேஷனும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அப்ளி கேஷன் மூலம் பிற மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில், பாடவாரியாக குழந்தைகளின் கல்வி திறனை பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும். இதே போல் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘சாலா சித்தி’ என்ற மற்றொரு டிஜிட்டல் தொழில்நுட்பமும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம்: பஸ், ரயில் நிலையங்களில் குவிந்த மக்கள் - தாம்பரம்- கோயம்பேடு இடையே கடும் போக்குவரத்து நெரிசல்

Return to frontpage

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந் தனர். பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களுக்கு 1,146 சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக நேற்று 1,146 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று 825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறும் போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேட்டில் இருந்து பயணம் செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் குறித்து பயணிகளுக்கு தகவல் அளிக்க உதவி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன” என்றார்.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் தாம்பரம்- கோயம்பேடு இடையே நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியை கடக்க 2 மணிநேரத்துக்கும் மேல் ஆனதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இது தொடர்பாக போக்கு வரத்து போலீஸார் கூறும்போது, “சென்னையின் முக்கிய சாலை களான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர் லால் நேரு சாலை ஆகியவை 10 ஆண்டுகளுக்கு முந்தைய போக்குவரத்தை தாங்கும் வகை யில் அமைக்கப்பட்டது. இப்போது அதைவிட 3 மடங்கு போக்குவரத்து அதிகரித்து விட்டது. மெட்ரோ ரயில் பணிகளால் பல இடங்களில் சாலைகள் சுருங்கி விட்டன. இந்நிலையில் வழக்கமான போக்குவரத்தோடு தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் வாகனங்களும் சேர்ந்துகொண்டதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது” என்றனர்.

தனியார் ஆம்னி பஸ் ஓட்டு நர் ஆர்.ஸ்டீபன் அருள்ராஜ் கூறும் போது, “கிண்டி- கோயம்பேடு இடையே போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தாம்பரத்திலேயே எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் நான் கிண்டியிலிருந்து தி.நகர் வழியாக போக்குவரத்தில் சிக்காமல் கோயம்பேட்டை அடைந் தேன். மற்ற ஆம்னி பஸ்கள் போக்குவரத்தில் சிக்கி 2 மணிநேரம் அவதிப்பட்டன” என்றார்.

பெருங்களத்தூரில் நெரிசல்

பெருங்களத்தூரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான ஆர்.சர வணன் கூறும்போது, “பெருங் களத்தூரில் கடந்த 3 நாட்களாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஒரு சில ஆம்னி பஸ்கள் மட்டுமே பெருங்களத்தூர் வழியாக வருவதை தவிர்க்கின்றன. மற் றவை வந்து கொண்டு தான் இருக் கின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார்.

எஸ்.மாலிக் கூறும்போது, “வெளியூர் செல்லும் தனியார் வாகன ஓட்டிகள் பெருங்களத்தூர் பாதையை தேர்வு செய்ய வேண்டாம் என்று போக்கு வரத்து காவல்துறை அறிவுறுத்தி யிருந்தது. ஆனால், பெரும் பாலான தனியார் வாகன ஓட்டிகள் காவல் துறையின் வேண்டுகோளை ஏற்கவில்லை. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார்.

அதிகாரி விளக்கம்

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்கவேண் டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதுபற்றி போக்கு வரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “புறநகர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான திடல் இல்லாததால், தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்க முடியவில்லை” என்றார்.

பெண் எனும் பகடைக்காய்: பண்டிகை நாட்களிலும் குறையாத பெண் உழைப்பு ..............பா.ஜீவசுந்தரி

Return to frontpage



அநேகமாக குழந்தைகளின் காலண்டர் பார்க்கும் பழக்கத்துக்கு தீபாவளிப் பண்டிகையே ஒரு காலத்தில் காரணமாக இருந்திருக்கிறது. ‘எப்போதான் இந்தத் தீவாளி வரும்’ என்று புதிய காலண்டரின் பின் அட்டையை ஜனவரியிலேயே திருப்பிப் பார்ப்பதில் இருந்து, இன்னும் தீபாவளிக்கு எத்தனை நாள் இருக்கிறது என்று மாதத்தையும் தேதியையும் தலைகீழாகப் போட்டுக் கழித்துப் பார்ப்பதுவரை தீபாவளி குழந்தைகளுக்கான செயல்முறைக் கல்வியாக எப்போதோ அறிமுகமாகிவிட்டது. அடுத்தது தீபாவளிக்கான கவுன்ட்-டவுன் 100 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிடுகிறது. நம் நாட்டைப் பொறுத்தவரை தீபாவளி ஏழைகளின் திருவிழா!

வானம் கருகருத்துக் கிடக்க மழை எப்போது நிற்கும் என்று காத்திருந்து மத்தாப்புகளையும் வெடிகளையும் கொளுத்தி அந்தக் கரி மருந்துப் புகையை சுவாசிக்காத குழந்தைகள் இருக்க முடியாது. அதனால்தான் தீபாவளி குழந்தைகளின் திருவிழாவாகவும் இருக்கிறது. அதோடு புத்தாடைகள், பரிசுகள். இப்போதெல்லாம் மொபைல், ஸ்மார்ட்போன், டேப், டேப்லட் போன்றவைகளும் குழந்தைகளுக்கான தீபாவளி லிஸ்டில் சேர்ந்து விட்டன. ஆனால் அவையெல்லாம் வசதி படைத்த வீட்டுக் குழந்தைகளுக்கு.

சென்ற தலைமுறை ஆராதித்துக் கொண்டாடிய தீபாவளி பற்றிய சின்னச் சின்ன சந்தோஷங்களும் எதிர்பார்ப்புகளும் இன்றைய தலைமுறையிலும் நீடிக்கிறதா என்றால் அதற்கான பதில் என்னிடம் இல்லை.

புத்தாடைகள் அப்போது ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ மட்டுமே கிடைக்கும். அதிலும் ரெடிமேட் என்ற உடனடி ஜீபூம்பா எல்லாம் மிக மிக அபூர்வம். ஜவுளிக் கடைக்குப் போய், அளந்து வாங்கி வரும் துணி, நம் உடுப்பாக மாறி கைக்குக் கிடைப்பதற்குள் அந்தச் சின்னஞ்சிறு மனசு படும் பாடு இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாளாது. பள்ளிக்கூடம் விட்டு வந்த நேரமெல்லாம் தையற்கடை வாசலில் தவமாய்த் தவமிருந்த காலமெல்லாம் மனதை விட்டு அகலாதவை. வீட்டிலிருக்கும் நாலைந்து உருப்படிகளுக்கும் ஒரே கலரில் எடுத்துத் தைக்கப்படும் உடைகளை இப்போதைய குழந்தைகள் பார்த்தால் அந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு தனி யூனிஃபார்ம் இருந்திருக்குமோ என்றுதான் நினைப்பார்கள். அதை இப்போது நினைத்தாலும் ரத்தக் கண்ணீர் வருகிறது.

யூனிஃபார்ம் என்றதும் நினைவு வந்துவிட்டது. பள்ளிக்கூடத்து அசல் யூனிஃபார்மேகூடச் சில ஆண்டுகளில் தீபாவளி புத்தாடையாய் வாய்த்து, சக பள்ளி மாணவிகள் மத்தியில் நம் மானத்தை வாங்கியிருக்கிறதே.

படபடபடபடபடபடவெனச் சில நிமிடங்களுக்குச் சத்தக்காடாய் அலறும் இன்றைய1000 வாலாக்களெல்லாம் நினைத்தே பார்க்க முடியாதவை. டப் டப் என வெடிக்கும் ஒற்றை வெடிகள் மட்டுமே அப்போது மகிழ்ச்சியைத் தந்தவை. முக்கோண வடிவில் ஒற்றை ஒற்றையாய், பாக்கெட்டுகளில் உதிரிகளாய்க் கிடைத்த ஓலை வெடியை மறந்துவிட முடியுமா?

சில தொலைக்காட்சி விளம்பரங் களில் பள்ளிக் குழந்தைகள் ‘பட்டாசு வெடிக்காதீர்கள், அவையெல்லாம் நம்மைப் போன்ற குழந்தைகளின் உழைப்பில் தயாராகின்றன. அதனால் பட்டாசுகளைப் புறக்கணிப்பீர்’ என்று ‘பெரிய மனுஷ’ தோரணையுடன் பேசுவதைப் பார்க்க முடிந்தது. அதோடு அதைச் சொல்லி முடித்ததும் அந்தக் குழந்தை யாரையோ திரும்பிப் பார்க்கிறது. ‘சொல்லிக் கொடுத்தத சரியா ஒப்பிச்சிட்டனா’ என பார்ப்பது போல இருக்கிறது. குழந்தை உழைப்பு, சுற்றுச்சூழல் மாசு எல்லாம் சரிதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் நமக்கில்லை. ஆனால், குழந்தை உள்ளங்கள் இதையெல்லாம் மனதார ஏற்குமா? நாமும் குழந்தைகளாய் இருந்து அந்த நிலையைக் கடந்து வந்தவர்கள்தானே… நமக்கிருந்த மனநிலையும் ஏக்கமும் அவர்களுக்கும் இருக்காதா? எதிர்ப்பையும் பிரச்சாரத்தையும் நாம் மேற்கொள்வோம். குழந்தைகள் பாவம்… அவர்களை விட்டுவிடுவோம். அவர்கள் குழந்தைகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

குழந்தைகளுக்குத் தெரியுமா, பண்டிகை வந்தால் பருப்பு, எண்ணெய் வகையறாக்கள் விலை ராக்கெட் இல்லாமலே விண்ணில் பறக்கும் அதிசயம்! கடனோ, உடனோ ஏதாவதொன்று பட்டுத் தீர்க்கும் பெற்றோருக்குத்தான் தெரியும் அத்தனை குத்தல் குடைச்சல்களும்.

‘பருப்பில்லாமல் கல்யாணமா?’ என்பது போல பலகார, பட்சணங்கள் இல்லாத பண்டிகையா? நாம் ரசித்து ருசித்துச் சாப்பிடும் பலகாரங்களுக்காக மாவு இடிபடும் உரல் உலக்கை சத்தமும், திரிகைகள் அரைபடும் ஓசையும் இப்போது இல்லாமல் போய்விட்டன. கைப்பக்குவத்துடன் அம்மாக்களும் ஆத்தாக்களும் தயாரித்துக் கொடுத்த கெட்டி உருண்டை என்ற பொருள்விளங்கா உருண்டையின் பொருள்கூட இந்தத் தலைமுறையினருக்குத் தெரியாதே. பயற்ற மாவு உருண்டை, ரவா லட்டு, பூக்கப் பூக்க அரைத்த உளுந்த மாவில் முக்கியெடுத்து, எண்ணெயில் பொரித்த சுகியன் என்ற ‘சீயம்’ நினைவிலாவது இருக்கிறதா? அதிரசத்தின் பெயரே சொல்லுமே அதன் அற்புதச் சுவையை. இவையெல்லாம் நம் இளமைக் காலத்து அதிசயங்கள்! அற்புதங்கள்! ஆனால், இப்போது அதையெல்லாம் எதிர்பார்ப்பதும் நம் அறியாமை அல்லாமல் வேறென்ன?

வீடு ஒன்றே உலகமாக, அடுப்பங்கரையே தங்கள் ராஜாங்கமாக இருந்த நம் ஆத்தாக்களின் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. அதற்காக இப்போதும் பெண்கள் வீட்டில் சமைக்காமலோ, பண்டிகைகள், பட்சணங்களை முழுமையாகப் புறக்கணித்தோ விடவில்லை. அது ஒரு பக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பழைய ருசி வேண்டுமானால் இல்லாமல் போகலாம். என்னதான் படித்தாலும் பட்டம் பெற்றாலும், வேலைக்குப் போனாலும் வீட்டு வேலைகளின் வீரியம் மட்டும் குறைந்துவிடுவதில்லை. சாதனங்கள் மாறியிருக்கலாம். உழைப்பு?

பண்டிகை என்பது பெண்களைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் அனைத்துப் பொறுப்புகளையும் அவள் மீது ஏற்றும் பெரும் சுமை. கலாச்சாரம், பண்பாடு கெடாமல் பாதுகாக்கும் பொறுப்பும் அவளுக்கே. ஆண்கள் இதிலிருந்தெல்லாம் எளிதாகக் கழன்று கொண்டு விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை ‘அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்’ ஆகிவிடும் அதிசய வித்தைகள்.

இதில் அன்றாட வீட்டு வேலை அல்லது பொறுப்புகள் எதனையும் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாத நிலையில், அப்படி யாராவது தனது பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்களா என ஒரு பெண் எதிர்பார்ப்பாளேயானால், ‘நல்ல இல்லத்தரசி’ என்ற மகுடம் அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும். இத்தனைக்கும் அவளுக்குக் கிடைப்பது என்ன? வீட்டில் வேலை பார்க்கும் உதவியாளருக்கு 200 ரூபாய்க்குச் சேலை என்றால் எஜமானிக்கு 2000 ரூபாய் சேலை.

இப்போதெல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்கள்கூட பண்டிகை அன்று விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வீட்டு வேலையைப் பார்க்க வேண்டுமே. சொந்த வீட்டில் எந்த நாளும் எந்தப் பெண்ணுக்கும் விடுமுறை என்பது இல்லை. எங்கு சமையலறை ஒழிகிறதோ அங்குதான் உண்மையான பெண் விடுதலை இருக்கும் என்பது எத்தனை உண்மை!

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: asixjeeko@gmail.com

இனிப்பு, பட்டாசு ஆர்டரை ரத்து செய்த பாஜக ....................ஐஏஎன்எஸ்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இனிப்பு வகைகள், பட்டாசுகளுக்கு பாஜக மாநிலத் தலைமை சார்பில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக பாஜக தோல்வியைத் தழுவியதால் அனைத்து ஆர்டர்களும் காலை ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியபோது, லட்டுகள், பட்டாசுகளுக்கு ஆர்டர் அளித்திருந்தோம், ஆனால் தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக இருந்ததால் அவற்றை ரத்து செய்துவிட்டோம் என்று தெரிவித்தன.

பாஜகவை நம்பி முதலீடு செய்திருந்த வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதுகுறித்து பாட்னாவைச் சேர்ந்த வியாபாரி ரஷான் ஷா கூறியபோது, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பாஜக கொடிகளை வாங்கி வைத்திருந்தேன், ஆனால் அந்த கட்சி தோல்வியை தழுவியிருப்பதால் யாரும் கொடிகளை வாங்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

பாஜக கட்சி அலுவலகங்கள் முன்பு ஏராளமான பட்டாசு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. தேர்தல் முடிவுகள் மாறியதால் அந்த வியாபாரிகள் தங்கள் இடத்தை உடனடியாக மாற்றி ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் அலுவலகங்களுக்கு முன்பு கடை விரித்தனர்.

குறள் இனிது: ....வாய்ப்பை விட்டுடாதீங்க, தூள் கிளப்புங்க! ......சோம.வீரப்பன்


இன்று காலையில் எழுந்ததும் நீங்கள் குடித்தது காபியா, டீயா? கும்பகோணமோ, பெங்களுரோ காபிக்குத் தனிமவுசு தான்! பில்டர் காபி, காப்பிசினோ, பிளாக் காபி என வேறுபட்டாலும், கொட்டும் மழையில் பால்கனியிலோ, சாலையோரக் கடையிலோ அமர்ந்து கொண்டு ஆவி பறக்கும் காபியை மெல்ல மெல்ல ரசித்துக்குடிப்பது அலாதி மகிழ்ச்சிதான்! இந்தக் காபியை வைத்தே பெரிய கலக்குகலக்கி பணத்தைக் கொட்ட வைத்துள்ளனர் காபிடே நிறுவனத்தினர்.

20 வருடங்களில் சுமார் 1400-க்கும் மேல் கிளைகள்! விற்பனை ரூ.2,500 கோடியாம்!! அரட்டை அடிப்பதற்காகவே மக்கள் காபி குடிக்க வருவார்கள் எனும் மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்து அதையே பெரும் வியாபாரமாக்கி விட்டார்கள்!!!

நீங்கள் தங்க நகையை அடகுவைத்துக் கடன் வாங்கியிருக்கிறீர்களோ இல்லையோ, நிச்சயம் முத்தூட் பைனான்ஸ் பற்றித் தெரியாமல் இருக்காது. 128 வருட பழமையான நிறுவனம் என்றாலும், அவர்கள் விசுவரூபம் எடுத்தது 2011-12ல் தான். தங்கம் விலை தாறுமாறாக ஏறியதும், முன்னமே அடகு வைத்த நகையின் மேலேயே அதிகப்பணம் பெற்றுக் கொள்ளுங்கள் எனும் தனித்துவம் காட்டினார்கள்; தங்கத்திற்குக் கதவைத் திறந்து கொண்டார்கள்! இன்று அவர்களுக்கு 4000-க்கும் மேலே கிளைகள்.

நம்ம ஊர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸையே எடுத்துக் கொள் ளுங்கள். மைசூர்பாக்கு எனும் நமது பாரம்பரிய இனிப்பை மைசூர்பா என்று பெயர்சுருக்கி, பெயர்சூட்டி இன்று உலகம் முழுவதும் கொண்டு சென்று விட்டார்கள்.

நாம் நம் வாழ்வில் பலமுறை தற்பொழுது சூழ்நிலை சரியில்லை என வருத்தப்படுகின்றோம். அச்சந்தர்ப்பங்களில் அடக்கி வாசிப்பது சரிதான். ஆனால் சில சமயங்களில் நாமே எதிர்பார்க்காத அளவில் சாதகமான சூழ்நிலையும் அமைவது உண்டா இல்லையா? கிடைப்பதற்கு அரிய வாய்ப்பு வரும் பொழுது உடனே அதைப் பயன்படுத்திக் கொண்டு செயற்கரிய சாதனைகளையும் செய்யுங்கள் என்கிறார் வள்ளுவர்.

வாய்ப்புக் கிடைக்கும் பொழுது தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் வெற்றி பெற்றவர்கள் பலரிடமும் காணப்படும் ஓர் ஒற்றுமை. அதிகாரம் கொடுக்கப்படுவதில்லை; அது எடுத்துக் கொள்ளப்படுவது என்பார்கள்! வாய்ப்புகளும் அப்படித்தானே!! பிஎஸ்என்எல் பல ஆண்டுகளாக இருந்துவரும் நிறுவனம். வீட்டுத் தொலைபேசியின் உபயோகம் குறைந்து, கைபேசியின் ஆதிக்கம் தொடங்கிய பொழுது மகத்தான வாய்ப்புகள் உருவாகின. ஆனால் அந்நிறுவனம் கோட்டை விட்டது. அக்கோட்டையை ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பிடித்துக் கொண்டன.

வாய்ப்புகளை நாம் தவறவிடுவதற்குக் காரணம் அவை கடினமான சவால்களைப் போலத் தோற்றமளிப்பதுதான் என்றார் தாமஸ் ஆல்வா எடிசன். எனவே அரிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். தப்பிவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். வெற்றிக் கொடி நாட்டுங்கள்!

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல் (குறள் 489)

தொடர்புக்கு: somaiah.veerappan@gmail.com

வாழ்த்துகள் நிதிஷ்!

Return to frontpage

இன்னொரு மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்ததுபோல் இருக்கிறது. அந்த அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்படுத்தியிருந்தது. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக இந்தத் தேர்தலில் காட்டிய அதீதமான ஈடுபாடுதான் காரணம். முக்கியமாக பிரதமர் மோடி. தொடர்ந்து, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்ற சூழலில், மிக முக்கியமான தேர்தலாகிவிட்டது பிஹார் தேர்தல்.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் விஸ்வரூபம் எடுத்த பாஜகவின் எழுச்சி பிஹாரின் பிரதான அரசியல் எதிரிகளான முதல்வர் நிதிஷ்குமாரையும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவையும் ஒன்றிணைய வைத்தது. காங்கிரஸும் இதன் பின்னணியில் நின்று அவர்களோடு கை கோத்தது. ஒட்டுமொத்த இந்தியாவும் உன்னிப்பாக எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் எல்லாக் கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மகா கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மையைக் கொடுத்திருக்கின்றன.

கூட்டணிக் கணக்குகள், சாதி - இன ஓட்டுக் கணக்குகள், அரசியல் சாதுரியங்கள் எல்லாவற்றையும் தாண்டி நிதிஷ் எனும் நல்லாட்சியாளருக்கு மக்கள் கொடுத்திருக்கும் தொடர் பரிசு என்றுதான் இந்தத் தேர்தல் முடிவைப் பார்க்க வேண்டும். நிதிஷுக்குக் கிடைத்த வெற்றி என்பது ஒருபுறம் இருக்க, பாஜகவுக்குக் கிடைத்த தோல்வி என்றும் சொல்லலாம். மக்களவைத் தேர்தலுக்குப் பின், குறிப்பாக டெல்லி தேர்தல் தோல்விக்குப் பின் பாஜகவின் தேர்தல் வியூகம் மாறியது இங்கே கவனிக்க வேண்டியது. மக்களவைத் தேர்தலின்போது பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி எல்லாத் தரப்பு மக்களையும் ஈர்த்த பாஜக, ஆட்சிக்கு வந்த பின் மதஅடிப்படைவாதப் பிரச்சினைகளைக் கையில் எடுத்தது. சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்களின் வாழ்வில் அச்சுறுத்தல்களை உருவாக்கியது. அரசினரும் சங்கப் பரிவாரங்களும் சென்ற இடங்கள் எல்லாம் வெறுப்பூட்டும் பேச்சுகள் உதிர்ந்தன. பொறுப்பற்ற வெறுப்புப் பேச்சுகளுக்கு மூன்று உதாரணங்கள் இவை. “ஒருவேளை பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கும்” என்றார் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா. “இடஒதுக்கீடு மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்” என்றார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். ஃபரிதாபாதில் இரு தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வி.கே. சிங், “எங்கோ நாய்கள் மீது சிலர் கல்லெறிகிறார்கள் என்பதற்கெல்லாம் மத்திய அரசு பொறுப்பாக முடியுமா?” என்றார். கூடவே, தேர்தல் பின்னணியில், மாட்டிறைச்சி விவகாரம் பெரிதாக்கப்பட மனிதர்களின் உயிர்களை வகுப்புவாதம் சூறையாடியது. பிஹார் மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தனர்.

மக்களவைத் தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கும் 6 இடங்கள்தான் கிடைத்தன. பாஜக கூட்டணி 31 இடங்களை வென்றது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளில் சூழல் தலைகீழாக மாறியிருக்கிறது என்றால், மக்கள் எதை எதிர்பார்த்து பாஜகவுக்கும் மோடிக்கும் வாக்களித்தார்கள், இந்த அரசாங்கம் எதை அவர்களுக்குத் திரும்ப அளித்திருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும்.

மூன்றாவது முறையாக முதல்வராகும் நிதிஷ் முன் சவால்கள் ஏராளமாக உள்ளன. ஊழல் - வன்முறைகளுக்குப் பேர் போன கூட்டணிக் கட்சியை அடக்கி ஆள்வதுதான் முதல் சவால். 10 ஆண்டுகள் ஆட்சிக்குப் பின்னரும் பிஹார் மக்களின் தலையெழுத்து அப்படியே மாறிவிடவில்லை. மத்தியில் நேர் எதிரான அரசு ஆட்சியில் இருக்கும் சூழலில், கிடைக்கும் உதவிகள் சொற்பமாகவே இருக்கும். முன்பைவிடவும் அவர் நிறையப் போராட வேண்டியிருக்கும். ஆனால், மக்களைத் தன் பக்கம் வைத்திருக்கும் வரை நிதிஷால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது!

15,000 medicos with Russian degree yet to clear test...... R. SUJATHA

Return to frontpage
‘Though it is an online test, the results are declared only 45 days later’

Ashutosh Kumar Singh should have established his medical practice by now, but five years after graduation he is still waiting to clear the screening test in India.

Ashutosh graduated from a Russian university. He has taken the test several times in vain. “We have no idea about the exam pattern and there is no transparency. The test is supposed to check if we went to medical school but they ask questions that require extensive clinical experience which a UG doesn’t get anywhere,” he says.

In 2002, India launched a paper-based two-hour screening test for foreign graduates and declared the test results a few hours later. But now, though it is an online test, the results are declared only 45 days later. The tests are also of longer duration now, students say.

“In the early years of the test, the pass percentage was around 40 to 50. It has now fallen to three or four per cent,” says Dr. Ameen, who graduated from a Russian medical college in the 1990s. Each time, the students pay Rs. 5,500 as test fee.

There are around 15,000 candidates waiting to clear the screening test. They claim that they are being asked PG-level questions that require wider clinical experience. Some students who had made several attempts claim they have been awarded the same marks in every attempt. “We have graduated but still depend on our parents. It appears that our crime is we did not study MBBS in this country,” Mr. Singh lamented.

For decades, friendship between India and erstwhile Union of Soviet Socialist Republic had encouraged students to pursue higher studies there. According to A. Najeerul Ameen, president of the All India Foreign Medical Graduates Association, over 50,000 doctors who had graduated in that country since 1961 were practising or working in government and private sector in India.

A few months ago, the Union Health Ministry instituted a committee under Ranjit Roy Choudhary to look into the functioning of the National Board of Examinations that conducts the test. It is expected to submit its report next week.

On Sunday, the association jointly with the Russian Centre of Science and Culture organised the forum of Russian and erstwhile USSR medical graduates of India.



In the early years of the test, the pass percentage was around 40 to 50. It has now fallen to three or four per cent, says a candidate

இலவசங்கள் என்கிற மனநோய்!

Dinamani

By பூ. சேஷாத்ரி

First Published : 07 November 2015 01:24 AM IST


நலிந்த, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைய, அரசு பல திட்டங்கள் தீட்டி, அவற்றைச் செயல்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் சில சரிவர மக்களைச் சென்றடைவதில்லை.
அப்படிச் சென்றடைந்தாலும் மக்கள் அவற்றைச் சரிவரப் பயன்படுத்துவதும் இல்லை. சில நேரங்களில் அரசு பொதுமக்களுக்காக தீட்டப்படும் திட்டங்கள் குறித்து சரியான புரிதலும் மக்களிடையே இல்லை என்பது வேதனையைத் தரும் செய்தி.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியை எத்தனை குடும்பங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி.
இந்த இலவச அரிசியானது ஏழைகளுக்குப் பயன்படுவதைவிட, தெருவோரச் சிற்றுண்டிக் கடைகள், சிறு உணவு விடுதிகளில் சிற்றுண்டி தயாரிக்கத் தான் பயன்படுகிறது.
தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் உள்ள வெளிமாநில பகுதிகளுக்கு ரயில், பேருந்து மூலம் அரிசி கடத்தப்பட்டு விற்கப்படுகிறது.
முந்தைய ஆட்சியில், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், இலவச எரிவாயு இணைப்பு - அடுப்பு போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் கணிசமான எண்ணிக்கையில் சரியாக இயங்கவில்லை. பலர் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளை விலைக்கும் விற்றுவிட்டார்கள்.
எரிவாயு இணைப்பு இல்லாத வீடு இன்று உண்டா? அங்கிங்கெனாதபடி எல்லா இல்லங்களிலும், கிராமங்களில் உள்ள வீடுகள் உள்பட எரிவாயு இணைப்பு இருக்கிறது.
அரசு இலவசமாகக் கொடுக்கிறதே என்று வீட்டில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எரிவாயு இணைப்பை வாங்கி, மாதாமாதம் கிடைக்கும் நிரப்பப்பட்ட எரிவாயு உருளைகளை தேநீர்க் கடை, உணவு விடுதிகளுக்கு அதிகப்படியான விலைக்கு விற்கத்தான் பெரும்பாலும் இது பயன்படுகிறது.
பல குடும்பங்களில் எரிவாயு இணைப்பு இருக்கிறது. ஆனால், எரிவாயு உருளை கிடையாது. அதையும் விற்றாகி விட்டது.
சமீபத்தில் தொலைக்காட்சி செய்தி சேனலில் ஒளிபரப்பட்ட ஒரு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பண்டிகைக் காலங்களையொட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை துணியானது கேரள மாநிலத்தின் பல துணிக் கடைகளில் ரூ.200-க்கு விற்கப்படுவதை ஆதாரத்துடன் (மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம்) செய்தி ஒளிபரப்பியது.
உண்மையிலேயே பரம ஏழைகளைத் தவிர இந்த வேட்டி, சேலையை யாருமே உடுத்துவது கிடையாது.
சில தினங்களுக்கு முன்பு அரக்கோணம் நகர, கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் முதியோர் ஓய்வூதியம் வாங்குபவர்கள் கூட்டம் அலைமோதியது. காரணம் கேட்டால், அரசின் இலவச வேட்டி, சேலையை வாங்குவதற்காக அந்த வரிசை.
அரசுப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா (இலவசம் என்று சொல்லக்கூடாதாம்) மடிக் கணினியை அரசு வழங்கிவருகிறது.
விலையில்லா மடிக்கணினி பெற்ற மாணவர்களில் எத்தனை சதவீதம் பேர் அதை தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
கிராமப்புற மாணவர்களில் பலர், வீட்டில் இருக்கும்போதும், விடுமுறைக் காலங்களில் மாடு மேய்ச்சலுக்குப் போகும்போதும், படம் பார்க்கவும், விளையாட்டுக்கும் தான் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஏழை, எளிய மக்கள் வாழ்வில் மேம்பாடு அடைய அரசால் வழங்கப்படும் விலையில்லா அரிசி, வேட்டி, சேலை, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மடிக் கணினி, வண்ணத் தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு போன்ற பொருள்கள் வெளிமாநிலக் கடைகளில் விற்கப்படுகின்றன என்பது மோசமான நிலை அல்லவா?
இதுகுறித்து ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
பொதுமக்கள் மத்தியில் அரசுகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படாத வரை, பொதுமக்களுக்கான திட்டங்கள் அவர்களின் பெயரால் அதிகாரிகளின் பையை நிரப்புவதற்கு உதவிடுமே தவிர, இலவசங்களின் முழுப் பயனும் அவர்களுக்குக் கிடைக்காது.
வாக்கு வங்கிக்காக அரசுகள் வழங்கும் விலையில்லாப் பொருள்களால் விரயமாகும் மக்கள் வரிப் பணம் ஒருபுறம்; இலவசங்களை அறிவிக்கச் செய்து மக்கள் மனங்களைக் கெடுத்து, இலவசங்களை எதிர்நோக்கிக் கையேந்திக் காத்திருக்கும் அவல மனநிலையை ஏற்படுத்திய ஆட்சியாளர்கள் ஒருபுறம் என நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது?
இலவசங்கள் என்கிற மனநோயிலிருந்து மக்கள் எப்போது விடுபடுவர்? இலவசங்கள் என்ற அரக்கனுக்கு கடைசி மணி கட்டுவது யார்?
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியானது ஏழைகளுக்குப் பயன்படுவதைவிட, தெருவோரச் சிற்றுண்டிக் கடைகள், சிறு உணவு விடுதிகளில் சிற்றுண்டி தயாரிக்கத் தான் பயன்படுகிறது.

"பிளாஸ்டிக்' வாழ்க்கை!

Dinamani


By ப. இசக்கி

First Published : 09 November 2015 01:06 AM IST


இன்றைய நவீன யுகத்தில் "பிளாஸ்டிக்' இல்லாமல் ஒரு நாள் பொழுதைக் கூட நகர்த்த முடியாது போலிருக்கிறது. காலையில் படுக்கையிலிருந்து எழுந்தது முதல் மீண்டும் இரவு படுக்கைக்கு செல்லும் வரையில் மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளம்.
"பிளாஸ்டிக் இயற்கைக்கு கேடு விளைவிப்பவை. சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவை. மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை உண்டாக்கும். எளிதில் அழியாது. எனவே, பயன்படுத்தாதீர்' என என்னதான் கோஷம் போட்டாலும், பிளாஸ்டிக் அரக்கன் அழிந்தபாடில்லை. குறைந்திருக்கிறதா என்றால் கண்ணுக்குத் தெரிந்த வரையில் அப்படியும் தென்படவில்லை.
ஒருபுறம் குறைத்தால், மறுபுறம் புதிய அவதாரத்தில் வந்து நிற்கிறது. தேநீர் கடைகளில் பிளாஸ்டிக் "கப்'க்குப் பதிலாக காகித "கப்' தென்பட்டது. இப்போது, அந்தக் குறையை ஈடு செய்வதுபோல, உணவகங்களில் கொதிக்கும் சாம்பாரையும், குருமாவையும் பிளாஸ்டிக் பையில் கட்டிக் கொடுக்கிறார்கள். கைதாங்க முடியாத சூட்டுடன் காபியையும், டீயையும் கூட பிளாஸ்டிக் பைகளில் கட்டிக் கொண்டு செல்கிறார்கள்.
சாலையோர தேநீர் கடைகளில் ஓர் ஓரத்தில் வடை, பஜ்ஜி, போண்டா சுட்டு விற்பவர்கள், சட்டியில் கொதிக்கும் எண்ணெய்யின் அளவு குறைந்துவிட்டால், இடது கையால் புதிய எண்ணெய்ப் பொட்டலத்தை எடுத்து அதன் ஒரு முனையைக் கொதிக்கும் எண்ணெய்யில் முக்குகிறார்கள்.
அந்த சூட்டில் எண்ணெய் பொட்டலத்தின் முனை கருகி சட்டியில் எண்ணெய் கொட்டுகிறது. இவர்களுக்கு யாரைப் பற்றியும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
உணவகங்களில் வாழை இலைகளுக்குப் பதில் வெள்ளை நிற பிளாஸ்டிதான் தட்டுக்குமேலே இலையாக இருக்கிறது. அதிலும், பச்சை நிறத்தில், வாழை இலையைப் போன்றே மடக்கி எடுத்துச் செல்லும் வகையில். என்ன ஒரு சாதுரியம்?
சரி, பொட்டலமாக வாங்கிக் கொண்டுபோய் இருப்பிடத்தில் வைத்து சாப்பிடலாம் என்றால் சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அவியல் அனைத்தும் பிளாஸ்டிக் பையில்தான்.
முன்பெல்லாம், மளிகை கடைக்குச் செல்வோர் துணிப் பையைக் கொண்டு செல்வர். இப்போது அதை எல்லாம் எடுத்துச் சென்றால் கேவலம் என்ற நினைப்பு. பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருகிறோம். கூடவே தீராத வியாதிகளையும் என்பதை மறந்து போகிறோம்.
பிளாஸ்டிக் பையில் சூடான காபி, டீ போன்ற திரவத்தைப் பொட்டலமிடும்போதோ அல்லது கொதிக்கும் எண்ணெய்யில் பிளாஸ்டிக் மேல் உறைகளை முக்கும்போதோ, சூடான உணவுப் பொருள்களை அதில் வைக்கும்போதோ அதிலிருந்து "பிஸ்பினால்-ஏ' (BisphenolA) என்ற வேதிப்பொருள் இயல்பான அளவைவிட சுமார் 55 மடங்கு அதிகமாக வெளியேற்றப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அந்த வேதிப்பொருள் கலந்த உணவுப் பொருள்களை மனிதர்கள் உட்கொள்ளும்போது அவை ரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் உள்ள நாளமில்லாத சுரப்பிகளின் செயல்பாட்டை மாற்றி அமைக்கின்றன.
அதனால், மூளை கட்டமைப்பில் சேதம், பதற்றம், படிக்கும் குழந்தைகளுக்குப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, நோய் எதிர்ப்புத் தன்மை குறைதல், பெண் குழந்தைகள் முன்னமே பூப்பெய்தல், இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு, மலட்டுத்தன்மை, முறையற்ற பாலின நடவடிக்கை, விந்து திரவ சுரப்பு குறைதல் என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது இந்த பிளாஸ்டிக். கடந்த 1862-இல் லண்டன் மாநகரில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் முதல் முறையாக மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கை காட்சிக்கு வைத்தார் அலெக்ஸாண்டர் பார்க்ஸ் என்பவர்.
அன்றுமுதல், குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகள் தொடங்கி பெரிய கார் பாகங்கள் வரையில் இன்று பிளாஸ்டிக் இல்லாத பொருள்களே இல்லை என்றாகி விட்டது.
விலை குறைவு, எடை குறைவு, உலோகத்துக்கு இணையான வலிமை போன்ற காரணங்களால் ஆரம்ப காலங்களில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது இந்த பிளாஸ்டிக். இன்று புலி வாலைப் பிடித்த கதையாக மாறிவிட்டது.
சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் இந்த பிளாஸ்டிக் அழிய சுமார் 400 முதல் 1,000 ஆண்டுகள் வரை ஆகுமாம்.
ஆதலால்தான் எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான, பழுதற்ற உலகை விட்டுச் செல்வோம் என்ற எண்ணத்துடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம் என அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வீதி, வீதியாக கோஷத்துடன் வலம் வருகின்றன. என்ன பயன்? பாத்திரத்தையும், பையையும் கையில் எடுக்கத் தயக்கம்காட்டும் வரையில் பிளாஸ்டிக்குக்கு மரணமில்லை.

தங்கத்திலே குறையிருந்தாலும்...


Dinamani

By ஆசிரியர்

First Published : 07 November 2015 01:21 AM IST


தங்கத்தின் விற்பனையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள மூன்று திட்டங்களும், இதுவரை அவர் தொடங்கி வைத்த திட்டங்களுக்குக் கிடைத்த அதே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கப் பத்திரம், தங்க வைப்பு நிதி, அசோக சக்கர முத்திரை பதித்த தங்க நாணயம் ஆகிய மூன்று திட்டங்களிலும், முதல் இரண்டு திட்டங்கள் தங்க விற்பனையைத் தவிர்க்கச் செய்பவை. மூன்றாவது திட்டம் தங்கத்தை வாங்கும்படி செய்பவை. இதில் பெண்கள் எதில் ஆர்வம் காட்டப் போகிறார்கள் என்பது விரைவில் வெளிப்படும்.
அரசு எதிர்பார்க்கும் வரவேற்பை இந்தத் திட்டங்கள் பெறாது என்று சொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம்: இந்தத் தங்கப் பத்திரம் மற்றும் வைப்புத் தங்கம் இரண்டுக்கும் கிடைக்கும் வட்டியைவிட, வங்கியில் வழக்கமான வைப்பு நிதிக்குக் கிடைக்கும் 8% வட்டி வருவாய் அதிகமாக இருக்கும். ஆகவே, இதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
இரண்டாவதாக, வைப்புத் தங்கம் திட்டத்தில் கொடுக்கப்படும் தங்கத்துக்கான வட்டி, முதல் அனைத்துக்கும் வருமான வரி கிடையாது என்றாலும், இவ்வளவு தங்கம் ஏது என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. அரசைப் பொருத்தவரை, அரை கிலோ கிராம் தங்கம் வரை, எந்தக் கேள்வியும் கேட்கப்படாது என்று உறுதி கூறியிருந்தபோதிலும், மக்களிடம் இயல்பான தயக்கம் இருக்கும். ஆகவே, இத்திட்டங்களுக்கு வரவேற்பு குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தனது உரையில் குறிப்பிட்டதைப் போல, இந்தியாவில் 20,000 டன் தங்கம் ஆபரணங்களாக உள்ளன. இவை பயனுறு நிதியாக மாறும் எனில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் சுழல்நிதி கிடைக்கும்.
தங்கம் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் நிலைமைதான் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் இறக்குமதி வழக்கத்தைவிட 46% குறைந்தது என்று மகிழ்வதற்கு ஏதுமில்லை. ஏனெனில், அதற்கு முந்தைய செப்டம்பர் மாதம் தங்கத்தின் இறக்குமதி கூடுதலாக இருந்தது.
இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்கள், மின்னணு சாதனங்களுக்கு அடுத்தபடி, மூன்றாவதாக மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யப்படுவது தங்கம் மட்டுமே. இதனால், நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் மிகப்பெரும் இடைவெளியை தங்கம் உண்டாக்குகிறது. இதன் விளைவு பல்வேறு பொருளாதாரத் திட்டங்களிலும் தொடர் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே, தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மிகப்பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தங்கம் இறக்குமதி செய்யப்படுவது வெளிப்படையாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், கடத்தல் தங்கத்தின் வரத்து மிகமிக அதிகரித்துள்ளதே இதன் எதிர்மறையான பின்விளைவு. விமான நிலையங்களில் அன்றாடம் குறைந்தபட்சம் ஒரு கிலோ தங்கம் சிக்குகிறது. புதுப்புது முறைகளில், பெட்டிகளின் ரகசிய அறைகளிலும், தங்கத்தையே சாதாரண பொருள்கள் போல உருமாற்றியும், சிலர் தங்கமணிகளை சாப்பிட்டு வயிற்றில் சுமந்துகொண்டும் வரும் நிலைமைதான் இருக்கிறது. இறக்குமதி குறைந்ததாக நாம் திருப்தி அடைந்தாலும், கடத்தல் மூலமாக இந்தியாவுக்கு வரும் தங்கத்தின் அளவு முன்பைவிட பல மடங்கு அதிகமாகியுள்ளது என்பதே உண்மை.
இந்த மூன்று திட்டங்களும் வெற்றியடைந்து, உள்நாட்டில் வெளிப்படாமல் பெட்டிக்குள் உறங்கும் தங்கம் வெளியே வருவதற்கு உதவக் கூடியவர்கள் பெண்கள் மட்டுமே. ஆகவே, பெண்கள்தான் இந்தத் திட்டத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கப் போகிறவர்கள்.
பெண்கள் தங்கள் பொருளாதார வலிமையை உணர்த்தும் அடையாளமாகவே தங்க ஆபரணங்களைக் கருதுகின்றனர். அழகுப் பொருளாக, ஆபரணங்களாகத் தங்கத்தைப் பெண்கள் பயன்படுத்தும் அளவு இத்திட்டத்தால் குறையாது. தங்க நகை விற்பனையும் அளவில் குறையாது. ஆனால், தங்கள் பொருளாதார வலிமையை பிறருக்கு உணர்த்துவதற்குச் சேர்த்து வைத்திருக்கிற தங்கத்தை பாதுகாப்பான இடத்தில் வைக்க இத்திட்டம் வகை செய்யும்.
தங்க நகைகளை, தங்கக் காசுகளை வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகத்தில் மக்கள் வைக்கிறார்கள். திருட்டு பயம் கருதி வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கும் இவர்களது தங்கம் திருடுபோனால், வங்கி அதற்குப் பொறுப்பேற்காது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? காரணம், பாதுகாப்புப் பெட்டகத்தில் எவ்வளவு தங்கம் வைக்கப்பட்டது என்பது வங்கிக்குத் தெரியாது என்பதால் வங்கி அதற்குப் பொறுப்பேற்பதில்லை.
ஆனால், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகள் திருடுபோனால், அடமானம் வைத்த ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவரது ரசீதைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அடகு வைத்த தங்கத்தின் எடைக்கு, இன்றைய தங்க மதிப்புக்கு ஏற்ப விலை நிர்ணயித்து இழப்பீடு தருகிறார்கள்.
இந்த ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொண்டால் போதும். வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள அனைத்து சேமிப்பு தங்க நகைகளையும் தற்போது அரசு அறிவித்துள்ள வைப்புத் தங்கம் திட்டத்துக்கு மாற்றிவிடுவார்கள். வட்டி குறைவாக இருப்பினும், பாதுகாப்புப் பெட்டகத்தைவிட பாதுகாப்பானது இந்தத் திட்டம்.
தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்யப்படுவதற்குப் பெண்களுக்கு நகை மீதான மோகம் மட்டுமே காரணமல்ல. ஊழல் பணம் தங்கமாக பத்திரப்படுத்தப்படுவது, மக்களுக்கு ரூபாய் மதிப்பிலும், வங்கி வைப்பு நிதியிலும், பங்குச் சந்தையிலும் நம்பிக்கை இல்லாதது ஆகியவையும் காரணங்கள். இந்தக் காரணிகள் அகற்றப்பட்டாலே போதும், தங்கத்தின் மீதான நாட்டம் கணிசமாகக் குறைந்துவிடும்!

இனிமேல்தான் தலைவலியே...!

Dinamani


By ஆசிரியர்

First Published : 09 November 2015 01:03 AM IST


தில்லியைத் தொடர்ந்து பிகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. எதிர்பார்த்தது போலவே, பிகாரில் அரிச்சுவடி வாக்கு வங்கிக் கணக்கு மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிகாரில் வரலாறு காணாத வெற்றி அடைந்ததற்கு, முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தனித்தனியாகப் போட்டியிட்டதுதான் காரணம். அதற்கு முன்பும்கூட, பா.ஜ.க.வுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. கூட்டணி பலத்தின் வெற்றி பிகாரில் மறுபடியும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க.வையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பொருத்தவரை, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமே இல்லை. பிகாரில் வெற்றி பெறுவதை ஒரு கெüரவப் பிரச்னையாகவே எடுத்துக் கொண்டு பிரதமர் மோடி பிரசாரத்தில் இறங்கியபோது, இதை விபரீத முயற்சி என்று விமர்சித்தவர்களின் எச்சரிக்கைகள் உண்மையாகி இருக்கின்றன. ஏற்கெனவே அத்தனை எதிர்க்கட்சிகளும் நரேந்திர மோடி அரசை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்படாமல் தடுப்பதில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் நிலையில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பின்னடைவு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலும் பிரச்னைகளையும், தலைவலிகளையும் அதிகரிக்கக்கூடும். அதுமட்டுமல்ல, மத்திய அரசு எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்படும் சூழல்கூட ஏற்படலாம்.
பிகார் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு ஒரு மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி செய்த அதே தவறை பா.ஜ.க.வும் செய்ததால் வந்த விளைவுதான் இந்தத் தோல்வி என்பதை பா.ஜ.க. தலைமை புரிந்து கொள்ள வேண்டும். இந்திரா காந்தி காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி எப்படி பலமான மாநிலத் தலைமை வளராமல் பார்த்துக் கொண்டதோ, அதே பாணியை பா.ஜ.க.வும் கையாள முற்பட்டதன் விளைவுதான் இந்தத் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணம்.
கடந்த 15 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் நிதின் கட்கரி (மகாராஷ்டிரம்), நரேந்திர மோடி (குஜராத்), வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்), சிவராஜ் சிங் செüஹான் (மத்தியப் பிரதேசம்), ரமண் சிங் (சத்தீஸ்கர்), ஹர்ஷவர்தன் (தில்லி), எடியூரப்பா (கர்நாடகம்), சுசில்குமார் மோடி (பிகார்) உள்ளிட்ட பல மாநிலத் தலைவர்களின் வளர்ச்சி. நரேந்திர மோடி பிரதமரானது முதல், அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத்தியத் தலைமை முன்னிலைப்படுத்தப்படுவதுதான் பா.ஜ.க.வின் மிகப்பெரிய பலவீனம் என்பதை தில்லியும், பிகாரும் உணர்த்தி இருக்கின்றன.
ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்கிற அளவில், தாற்காலிகமாக மகிழ்ச்சி அடையலாமே தவிர, முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பிரச்னைகளை முதல்வர் நிதீஷ் குமார் எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் யதார்த்த உண்மை. 2005-இல் இருந்து பத்து ஆண்டுகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி நடத்தியபோது, அந்தக் கூட்டணியில் அதிக இடங்களைக் கொண்டிருந்தது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்தான். இப்போது நிலைமை அதுவல்ல. கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்றிருப்பது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம். கடந்த 10 ஆண்டுகளாகப் பதவி சுகத்திலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றி நிறுத்தப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவின் கட்சியினர் தங்களுக்கு மீண்டும் கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி கொள்ளவே விரும்புவார்கள்.
அமைச்சரவை அமைப்பதிலிருந்து முதல்வர் நிதீஷ் குமாருக்குப் பிரச்னைகள் தொடங்கிவிடும். அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இடமாற்றத்தில் தொடங்கி அரசின் எல்லா வளர்ச்சிப் பணிகளிலும் பங்கு கேட்பது வரை, லாலு பிரசாத் யாதவ் கட்சியினரின் கோரிக்கைகளுக்குத் தலைவணங்காமல் முதல்வர் நிதீஷ் குமாரால் பதவியில் தொடர முடியாது. முன்பு, சுசில்குமார் மோடி தலைமையிலான பா.ஜ.க.வினர்போல ராஷ்ட்ரீய ஜனதா தளத்தினர் நிதீஷ் குமாரின் கட்டுப்பாட்டில் இருக்கப் போவதில்லை.
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகியபோது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கைகோத்துக் கொள்ள முதல்வர் நிதீஷ் குமாரால் முடிந்தது. ஆனால், இந்தக் கூட்டணியிலிருந்து விலகினால், 2014 மக்களவைத் தேர்தல் முடிவைத்தான் சந்தித்தாக வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். லாலு பிரசாத் யாதவும் சரி, நிதீஷ் குமாரை முதல்வராகத் தொடரவைத்துத் தனது கட்சியை பலப்படுத்திக் கொள்வதில்தான் முனைப்பாக இருப்பார் என்பதையும மறந்துவிடக் கூடாது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி நிதீஷ் குமார் தலைமையில் பிகார் எதிர்க்கட்சி மாநிலமாகத்தான் தொடரப் போகிறது. இந்த நிலையில் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எந்த அளவுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும், நிதியுதவியும் கிடைக்கும், வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட முடியும், நல்ல நிர்வாகத்தைத் தந்துவிட முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி அடைந்திருப்பது லாலு பிரசாத் யாதவ்; பிரச்னைகளை சந்திக்கப் போவது பிரதமர் மோடியும், முதல்வர் நிதீஷ் குமாரும்!

Sunday, November 8, 2015

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்...hindu tamil





Published: November 8, 2015 09:45 ISTUpdated: November 8, 2015 13:31 IST

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

ஆர்.ஷபிமுன்னா
COMMENT (17)   ·   PRINT   ·   T+  
நிதிஷ் குமார் | கோப்புப் படம்: பிடிஐ
நிதிஷ் குமார் | கோப்புப் படம்: பிடிஐ

பிஹாரில் மெகா கூட்டணிக்கு மகத்தான வெற்றி; நிதிஷுக்கு மோடி வாழ்த்து

*
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் - லாலு - காங். மெகா கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மெகா கூட்டணியின் இந்த வெற்றியால், அதன் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார் முதல்வர் பதவியேற்பதும் உறுதியாகியுள்ளது. அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
கூட்டணி வாரியாக நிலவரம்
முடிவுகள் / முன்னிலை
பாஜக கூட்டணி
64
நிதிஷ் - லாலு - காங். கூட்டணி
169
இதர கட்சிகள்
7
ஆதாரம்: தேர்தல் ஆணையம் வலைதளம்
மொத்த இடங்கள்: 243 | ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 122
பிஹார் தேர்தல் செய்தி அப்டேட்ஸ்:
12:50 PM: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணி வெற்றி பெரும் நிலை தெரிவதால், முதல்வர் பதவியேற்கவுள்ள நிதிஷ் குமாரின் பாட்னா வீட்டின் முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் கூடி கொண்டாடி வருகின்றனர். | விவரம் - பிஹார் வெற்றி: பாட்னாவில் நிதிஷ் வீட்டின் முன்பு கோலாகலம்
12.32 PM: பிஹார் மாநில தேர்தல் முடிவுகளால் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் புகழுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஷானாஸ் உசைன் கருத்து கூறியுள்ளார். | விவரம் - பிஹார் முடிவுகளால் பிரதமரின் புகழுக்கு பாதிப்பு ஏற்படாது: ஷானாவாஸ் உசைன் கருத்து
12.01 PM: முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாரை தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பிஹார் தேர்தல் முடிந்த பிறகான கருத்துக் கணிப்புக் குழப்பங்களிலிருந்து இன்னமும் டிவி சேனல்கள் விடுபடவில்லை என்பதற்கிணங்க, பிஹார் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படத் தொடங்கி சிறிது நேரத்துக்கெல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை என்று சில தொலைக்காட்சி செய்திகள் அறிவித்தன. | விவரம்: டிவி சேனல்கள் சொதப்பலால் 'முன்னிலை' வகித்த பாஜக
11.55 AM: "மதவாத சக்திகளை வீழ்த்தி முதலமைச்சராக வெற்றி பெற இருக்கும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள்!' என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். | விவரம் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாருக்கு கேஜ்ரிவால் வாழ்த்து
11.25 AM: பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ், சமீப காலமாக இல்லாத அளவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் நிலை தெரிகிறது. | விவரம்: பிஹாரில் காங்கிரஸுக்கு மீண்டும் முன்னேற்றம்
10.40 AM: பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் நிலவும் தொகுதிகள் நிலவரம் ஏமாற்றத்தை அளிப்பதாக பாரதிய ஜனதாவின் டெல்லி எம்பியான மனோஜ் திவாரி கூறியுள்ளார். | விரிவான செய்தி - பிஹாரில் ஆரம்பகட்ட முடிவுகள் ஏமாற்றம் தருகிறது: பாஜக எம்.பி. மனோஜ் திவாரி
9.30 AM: பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட லாலுவின் இரு மகன்களும் பின்தங்கி உள்ளனர். | முழு செய்திக்கு - பிஹார் தேர்தலில் லாலுவின் இரு மகன்களுக்கும் பின்னடைவு
பின்னணி தகவல்கள்:
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. அக்டோபர் 12, 16, 28, நவம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடந்தது. பிஹார் வரலாற்றில் இல்லாத வகையில், இந்தத் தேர்தலில் 56.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 6.68 கோடி வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியாக களம் இறங்கின. எதிர் தரப்பில் பாஜக தலைமையில் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. இவ்விரு அணிகள் இடையில் மட்டுமே நேரடிப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் காரசாரமாக பேசினர். ஒருவர் மீது ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டுகளை எழுப்பியதால் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. பாஜக கூட்டணியை ஆதரித்து 30 பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் செய்தார். அதேபோல் பாஜக தலைவர் அமித் ஷா, 85 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காரசாரமாக பேசினார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறியதாக 2 கூட்டணிகளின் முக்கிய தலைவர்கள் மீதும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் பாஜக தலைவர் அமித் ஷா, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ஐஜத தலைவர் சரத் யாதவ் ஆகியோரும் அடங்குவர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் ஆளும் ஐஜத கூட்டணியும் பாஜக கூட்டணியும் சம அளவில் தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. ஆனால், ‘டுடேஸ் சாணக்கியா’, என்டிடிவி.க்காக ஹன்சா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது.
இந்த தேர்தலில் ஆளும் ஐஜத.வில் இருந்த பிரிந்து பாஜக கூட்டணியில் சேர்ந்த ஜிதன்ராம் மாஞ்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். லாலு பிரசாத் தனது 2 மகன்களை களம் இறக்கி உள்ளார்.
பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், சகிப்பின்மை தொடர்பாக நாடாளு மன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகளின் தாக்குதல்களை அடக்க சரியாக இருக்கும் என்று பாஜக.வினர் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதேநேரத்தில் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், எதிர்க்கட்சிகளின் தாக்குதல் மேலும் பலமாக இருக்கும் என்று தெரிகிறது.
அதேபோல் தேர்தலில் ஐஜத தலைமையிலான மெகா கூட்டணி தோல்வி அடைந்தால், முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத்துக்கு பலத்த அடியாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

Naidu imparts lesson on hard work

Return to frontpage

Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu giving away certificates at the 11th convocation which was held at SRM University in Chennai- Photo: G. Krishnaswamy

Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu on Saturday said that he would build his State and its new Capital through hard work and strategic thinking.

Addressing the students of SRM University at its 11th convocation here, Mr. Naidu recalled the challenges faced by Andhra Pradesh after a painful process of bifurcation. “We are left with a huge Rs 16,000 crore revenue deficit. We don’t have a capital city. We do not have infrastructure, nor do we have institutions. We do not have enough office space to work from,” he noted.

The tech-savvy Chief Minister said he had begun five campaigns focussing on poverty, farmers, schools, water and Swachch Andhra Pradesh.

“History has placed a great task on our shoulders. The people have given me a mandate to lead them from the front to build a new State. Andhra Pradesh is in the process of creating history. We are conscious that the entire world is watching how we are building our state brick by brick.

And how are we meeting the challenges that history has placed before us? Hard work, strategic thinking, and good wishes from all of you will make us succeed in our task,” he said.

Stating that India has underperformed as a country over the last six decades, Mr. Naidu said that this century would be India’s century despite the huge challenges facing the country’s leadership.

“It is an exciting time for India. India is the most happening place on the globe today. People are saying that this is Asia’s century. I would like to say that this is India’s century. It should rather be India’s century. We need to make it India’s century,” he said.

“I feel if we drive our economy with deftness, we could be the number one economy in the world,” he added.

Urging the students to play a role in nation building, the Andhra Pradesh Chief Minister said, “India’s future is on your shoulders. If you grow, India grows. If you innovate, India innovates. If you shine, India shines. If you build entrepreneurial culture, India becomes an enterprising nation.”

Trichy feasts on turkey biryani this Diwali Gokul Rajendran,TNN | Nov 8, 2015, 12.47 AM IST

TRICHY: Like every year, this time too the foodies in town are lapping up their favourite Diwali delicacy — turkey biryani.

This specialty dish is trending in Trichy now with several restaurants offering the tasty festive treat to customers for the next few days till Diwali.

Unlike other cities in Tamil Nadu, Trichy restaurants have been following the trend for nearly two decades now after a restaurant in Palakkarai introduced turkey biryani, people say. "It has been nearly 20 years since turkey biryani has become famous among the food lovers in Trichy city. A paratha stall in Palakkarai was the pioneer. Since then, there is a craze among people to have the mouthwatering dish," says B Kamal, a restaurant owner on Vayaloor road who sells a plate of turkey biryani for Rs150.

Turkey biryani is usually served at few high-end restaurants in normal days, that too in limited quantities, for a much price higher than for mutton and chicken biryanis. It is different during Diwali because several restaurants serve the dish. This time they are inviting customers with mouth-watering offers like — one tandori chicken free with one plate of turkey biryani for Rs 200.

The foodies say turkey biryani, brings to this city, in some form, the traditional Thanksgiving dinner hosted in the US and Canada in which roasted turkey is the centerpiece of the ceremony.

The restaurant owners in Trichy district buy turkeys from a few farms in areas like Kavalkaranpatti and some farms in Villupuram district.

"Turkeys are available in large numbers in Villupuram district where farm owners rear the bird for a year till Diwali. We order for the turkeys weighing 8 kgs to 10 kgs a few weeks before Diwali. The response in increasing year by year because people want to taste a new dish during the festival season," says A Dharmaraj, a restaurant owner in the city.

For the people in Trichy, tasting turkey biryani is part of the festival celebrations. "The shopping trip usually also include a visit to a restaurant which offers turkey biryani. We feel like we are missing something if we don't have it," says a shopkeeper S Reeta in the city.

Smartphones, double salary, home appliances for Noida maids this Diwali TNN | Nov 7, 2015, 04.54 PM IST

NOIDA: Noidawallahs have moved beyond the usual sari and sweets as Diwali gifts for their domestic help - some by choice and some out of fear of losing their maids. This Diwali, Noida residents have decided to be a bit more generous than usual. And no, we're not talking about their shopping plans, which are usually grand and equally chaotic, anyway. This time, it's the domestic help who are enjoying their generosity, with big bonuses and costly gifts. While some have demanded particular things, others have received more than what they had asked for. Noidawallahs tell us how they've planned to make Diwali special for their maids. While some have given in to their maids' demands for the fear of losing them, others have readily decided to be bade dilwaale this festive season.

Induction stove and mixer-grinder for Diwali:

If you were thinking of giving your maid an old pressure cooker you no longer use this Diwali, drop the idea. She might leave you for another home where the owners are gifting home appliances. Shruti Mittal, founder member of NoidaMoms, says, "Now, you can't give just a box of sweets and a few hundred bucks as Diwali gifts. The maids don't settle for that much. So, I'm thinking of giving my maid a juicer and a mixer-grinder as her Diwali bonus. Of course, the demand will be of a more expensive gift next year. But does one really have a choice? We can't do without our maids and can't afford to lose them."

Vineeta, a senior manager at an MNC in Sector 58, adds, "I usually gift my maid some new clothes, such as a sari or a shawl. But I felt that I needed to do more in order to thank her. She has been working for us for almost a decade now. So, I decided to gift her an induction stove because she keeps saying she doesn't get the time to cook for her own family after working all day at our home."

Ritu Singh, a resident of Sector 26, says, "Both my husband and I are working, so we are almost entirely dependent on our maid. Naturally, I can't afford to lose her. So, this Diwali, all her demands for a bonus have to be met. She has asked for a gift and not cash. So, I'm going to gift her a dinner set along with some utensils."

Smartphones for the tech-savvy domestic help:

But it's not always the fear of losing the maid that is driving Noidawallahs to shower gifts on their maids. Ananya Sharma, a resident of Sector 50, says, "A few people in my building are pooling money and gifting our maid a smartphone this Diwali. Basically, we want her to have a WhatsApp-enabled phone so that we can reach her easily. It's a gift for her and a convenience for us as well."

Divyangana, a resident of Greater Noida, says, "In Noida, maids are your lifeline, particularly for working couples. So, giving just a little cash for Diwali doesn't seem very suitable. I plan to give our maid a month's salary as a bonus. In addition, whatever firecrackers I buy for my children, I will buy exactly the same amount for her kids. After all, everybody should have fun on Diwali."

Ekta Singh, a resident of Sector 120, says, "I'm giving my maid a cycle as a Diwali gift in addition to the usual bonus of cash and sweets. Our biggest issue with her is that she comes to our house late very often because she lives some place far from our home. To solve that problem, I guess a cycle would come in handy. Moreover, it's convenient for her as well. She won't have to walk all the way."

BU announces search for new vice-chancellor TNN | Nov 8, 2015, 01.04 AM IST

COIMBATORE: Almost two months after the retirement of the former vice-chancellor of Bharathiar University, the search panel has announced the search for the new vice-chancellor on Saturday. The first advertisement was released in the newspapers and the announcement was made on the university's website.

The three-member search panel, headed by the Anna University vice-chancellor M Rajaram, met in Chennai on November 5, and decided to begin the process of searching the new vice-chancellor, sources in the university said.

"During the meeting, it was decided that the newspaper advertisements shall be released and applications from candidates shall be called for. The last date for submitting the application is November 27," said the source.

The next meeting of the search committee will take place in November end or December first week. "The applicants can send the resume to all three members of the committee. And, after November 27 a meeting will again be held to scrutinize the applications," a university official said.

According to the university sources, the responsibility of releasing the advertisements is given to the registrar K G Senthil Vasan. "The advertisements will be released by the registrar through the department of information and public relations," the source said.

As per the advertisements, any candidate not more than 67years, with minimum 10 year experience as professor or associate professor is eligible to apply for the post. If university sources are to believed, the entire selection process should be completed by January, and the new vice-chancellor should be announced in January or February next year.

Perungalathur: A traffic bottleneck, than a gateway TNN | Nov 8, 2015, 12.55 AM IST

CHENNAI: Perungalathur, considered the southern gateway to the city, offers everything apart from a smooth access to Chennai.

The GST Road from Tambaram and the Chennai Bypass Road converge here and traffic during peak hours moves only by inches. Such is the congestion that omni bus operators from the city to the southern parts are planning to take a detour and avoid the stretch. If the traffic snarls were not enough, residents at Perungalthur have to put up with noise and dust thrown up by vehicles.

"Omni bus drivers park vehicles here for hours together. The situation is chaotic in weekends as vehicles pile up from Irumbuliyur Bridge. It takes commuters nearly an hour to cross Perungalathur," said M Sakthivel of nearby Peerkankaranai.

S Renugambal, who owns a building next to the bus terminus, said: "Many have to bear the incessant noise as the drivers keep on honking. A bus bay should be constructed as there are only steel barricades and some drivers who are in a hurry remove the barricade and jump queue causing traffic jams."

Mohamed Samad a shop owner in Perungalathur said the trouble starts from early evening and at nights the omnibus drivers park their vehicles for long periods of time waiting for commuters and this leads to slow movement of vehicles on the main road and the situation is worst during the weekend''.

Some SETC drivers said after starting from the Koyambedu terminus they are held up at the Perungalathur bus stand for more than an hour as not only is the traffic a bottleneck, even passengers who book advance tickets fail to turn up on time.

has to wait for their turn. There is another problem with passengers who make online booking but do not turn up on time and repeated announcements over the public address system is another problem.

Commuters to southern districts who use the Perungalathur bus stand said the government should plan an alternate bus terminus beyond Vandalur and if necessary acquire land to build a new terminus to accommodate the rush and volume of buses.

Plea seeks CBI probe into admission process of a Bengaluru based medical college.... P Vasanth Kumar,TNN | Nov 7, 2015, 07.16 PM IST


BENGALURU: The Karnataka high court has ordered for issuing emergent notice to the state government, RGUHS, the CBI, Ananda Social and Educational Trust, which manages Dr Ambedkar Medical College and others in response to a petition seeking CBI probe.

Both the petitioners are residents of Bengaluru and claim that there are serious irregularities in the admission process of the medical college.

"There has been huge misappropriation of funds by respondents by indulging in fraudulent process of admission. The respondents have very strong political clout and the local investigating authorities will not initiate any action.

In spite of the second complaint with all material documents to prove the commission of offences by the accused named in the complaint by the petitioner, the local police have not registered FIR. Therefore the CCB, will not be able to conduct a fair investigation" the petitioners have said while pressing for CBI probe.

11 Indians held in Kuwait for holding 'noisy' puja TNN | Nov 8, 2015, 05.42 AM IST

MANGALURU: Holding a Sathyanarayana puja in a hall in Kuwait, around a fortnight ago, has landed eleven Indians in police custody there. The Indians - most of whom are from the coastal region - are members of the Navachethana Welfare Association, Kuwait. Members of the association, reports say , have been organizing the event for the past decade.This time, it is learnt, they did not apply for permission.

Indian ambassador to Kuwait Sunil Jain told STOI over telephone on Saturday: "Eleven men who were conducting a puja were taken in for questioning by police after the neighbours complained. All... are still under detention."

Diplomatic sources said that loud noise during the puja had attracted the attention of neighbours, who in turn called police.

Udupi-Chikkamagaluru MP Shobha Karandlaje, who is in touch with ambassador Jain in Kuwait, told STOI that according to his information, Kuwaiti authorities are not forthcoming with details of the incident.

"Kuwaiti authorities are not cooperating with the Indian embassy's request for information on their detention," she said, adding they were reportedly arrested for organizing a religious event without permission.

Quoting her interaction with Jain, Karandlaje said as per Kuwaiti law, a person arrested for any offence has to be produced before a court within 10 days. "They have been detained for 13 or 14 days now." They have not been produced in court yet."Jain also has no word from local deportation authorities on the fate of those detained, and on whether they will be deported to India, as is the norm there."

The only question Kuwaiti authorities asked organizers of the event, led by association president Ashok Kumar, was if they had organized a puja, Shobha said.

Those detained with Ashok Kumar are Yadav Poojary, Anil Kumar, Kumar Vamanjoor, Sathish Beluvai, Umesh Shetty , Arun Shetty , Prashanth Shetty and Purushottam Kukyan. "Their families are worried about their fate," Karandlaje said.

Dakshina Kannada MP Nalin Kumar Kateel said in addition to raising the issue with minister for external affairs Sushma Swaraj, he and Karandlaje have kept Union minister for chemicals and fertilizers Ananth Kumar in the loop. A nanth Kumar is monitoring the situation with Sushma," Kateel told reporters on the sidelines of a meeting on railway issues on Saturday. "The arrest of Indians from this part of the state is a matter of concern."

Kateel recalled that Swaraj had recently managed to get seven Indians arrested in the Gulf released, and hoped the puja organizers, too, would be freed at the earliest.

NEWS TODAY 20.09.2024